Tuesday, October 16, 2018

சட்டம்

1,  ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4)

2,  நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை.  IPC-217

3,  நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம்.  CRPC 404

4,  அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166

5,  எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம்.

6,  சட்டம் படித்த பாமரன் எவரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம்.  Article 19(1) , CRPC 303,302(2)

7,  வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். CRPC 309(2) 312.

8,  இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74,76-ன் கீழ்
எவர் ஒருவரும் பார்வையிடலாம்.

9,  இந்திய குடிமகன் எவரையும் எவர் தாக்கினாலும் (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம். CRPC-43

10,   ஒரு குற்றம் நடைபெறும் முன்பு நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் உயர்நிலை அலுவலர்களுக்கும் கீழ்நிலை அலுவலர்களுக்கும் கட்டுப்பாடு உண்டு. CRPC 36, 149.

11,  காவல்நிலையம் மற்றும் நீதிமன்றம் இவற்றிலிரிந்து யாருடைய தயவும் இல்லாமல் சொந்த ஜாமினில் வெளியே வரலாம்.  செலவு ஐந்து ரூபாய் மட்டுமே. Article 21(2)

12,  கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு எத்தனை வருடம் நடந்தாலும் செலவுத்தொகை ரூபாய் 50 லிருந்து 100 வரை மட்டுமே பெறலாம். அதீதமான சூழ்நிலையில்தான் வழக்குச் செலவு கூடும். பொய்வழக்கு தாக்கல் செய்தால் IPC-211-ன்படி 2 வருடம் சிறை தண்டனை உண்டு சிவில் வழக்கில் மனுதாரர் பக்கம் நியாயமிருந்தால் Mount தொகை திரும்ப வந்துவிடும்.  மனுதாரர் பொய் வழக்கு தாக்கல் செய்திருந்தால் 50,000 நஷ்ட ஈடு பிரதிவாதிக்கு தரவேண்டும்.

13,  தாலுக்கா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற செலவு ரூபாய் 25 மட்டுமே. அதற்காக RIOffice-லும் VAO ஆபீசிலும் தவம்கிடந்து காத்திருக்க வேண்டியதில்லை.

14,  காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றால் படித் தொகையும், செலவும் சம்பளத்தொகையும் கேட்டுப்பெறலாம். CRPC.160(2)

15,  அதீதமான சூழ்நிலையில் மட்டும் கைவிலங்கிட முடியும் மற்றப்படி அன்று Article 21(14)

16. புகார்மனுவில் பொய்யான வாதம் வைத்திருந்தால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் Article 32(8)

17,  பொய் வழக்கில் சிறைதண்டனை பெற்றிருந்தால் ரத்து செய்து விடலாம். 

18,  பொய் என்றும், புனையப்பட்டது என்று தெரிந்திருந்தும் அறிந்திருந்தும் உண்மையைப்போல நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதல் 7 வருடம் அல்லது 3 வருடம் சிறை தண்டனை உண்டு. IPC 193,196,200.

19,  முத்திரையே இல்லாத தராசை கைவசம் வைத்திருந்தாலே ஒரு வருடம் சிறை தண்டனை உண்டு. IPC.267

20,  அடுத்தவருடைய அசையும் சொத்தை பொருளை நேர்மையற்ற முறையில் அபகரித்தால் 2 வருடம் சிறை தண்டனை உண்டு..IPC-403

21, குழந்தை உயிருடன் பிறப்பதை தடுத்தல் மற்றும் பிறந்தபின் இறக்கச்செய்தல் பத்து வருட சிறை தண்டனை உண்டு.IPC-315.

22,  தற்காப்புக்காக செய்யப்படும் எந்தவொரு செயலும் குற்றமில்லை. IPC-96

23,  பிற மதம் நிந்தித்தல் ஆச்சாரம் கெடுதல் 2 ஆண்டு சிறை.  IPC-295

24,  மத உணர்வுகளை புண்படுத்துதல் ஒரு வருடம் சிறை IPC-295

25,  ஆள்மாராட்டம் செய்து ஏமாற்றுதல்.  3 ஆண்டு சிறை IPC-419

26,  ஏமாற்றும் பொருட்டு போலியாக பத்திரம் தயார் செய்தல் 7வருடம் சிறை. IPC-468.

27,  சொத்து அடையாள குறியை மாற்றுதல் 3ஆண்டு சிறை IPC-484

28,  கணவன் மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்தல் 7 ஆண்டுகள் சிறை. IPC-494

29,  முந்தைய திருமணம் மறைத்தல் 10 வருடம் சிறை.  IPC-495

30,  IPC-499 ல் 3 முதல் 9 வரை உள்ள விதிவிலக்கு விதியின்படி யாரையும் விமர்சனம் செய்யலாம். நீதிபதியையும் கூட

இதில்
IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்)ஆகும்.
CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம் ஆகும்.1,  ஜனாதிபதி தவறு செய்தால்கூட 60 நாள் நோட்டீஸ் கொடுத்து சிவில் வழக்கு தொடரலாம். Article 361(4)

2,  நீதிபதி தவறு செய்தால் 7 வருடம் சிறை.  IPC-217

3,  நீதிபதியை எதிர்மனுதாரராக சேர்த்து அப்பீல் செய்யலாம்.  CRPC 404

4,  அரசு அலுவலர், அரசு மருத்துவர், காவல் அலுவலர், பணியின் போது கடமையிலிருந்து தவறுதல் 1 வருடம் சிறை. IPC-166

5,  எழுத்துக்கூட்டி வாசிக்கத்தெரிந்த எந்த பாமரனும் இந்தியக் குடிமகன் எவரும் தாய்மொழியில் சட்டம் படிக்கலாம்.

6,  சட்டம் படித்த பாமரன் எவரும் வழக்கறிஞரின் உதவி இல்லாமல் தங்கள் வழக்கில் தாங்களே வாதாடலாம்.  Article 19(1) , CRPC 303,302(2)

7,  வழக்கை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கலாம். CRPC 309(2) 312.

8,  இந்தியாவில் எந்தவொரு அலுவலகத்திலும் ஆவணம் மற்றும் சான்றிதழ் தாய்மொழியில் கேட்டு பெறலாம். அதற்கான சட்டப்படியான செலவுத்தொகை செலுத்த வேண்டும். IEA-74,76-ன் கீழ்
எவர் ஒருவரும் பார்வையிடலாம்.

9,  இந்திய குடிமகன் எவரையும் எவர் தாக்கினாலும் (CRPC -4 படியிலான சங்கதிகள் தவிர) 3-ம் நபர் கைது செய்து சிறையில் வைக்கலாம். சட்டையை கழற்றி விடலாம். CRPC-43

10,   ஒரு குற்றம் நடைபெறும் முன்பு நடைபெறாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு காவல் உயர்நிலை அலுவலர்களுக்கும் கீழ்நிலை அலுவலர்களுக்கும் கட்டுப்பாடு உண்டு. CRPC 36, 149.

11,  காவல்நிலையம் மற்றும் நீதிமன்றம் இவற்றிலிரிந்து யாருடைய தயவும் இல்லாமல் சொந்த ஜாமினில் வெளியே வரலாம்.  செலவு ஐந்து ரூபாய் மட்டுமே. Article 21(2)

12,  கிரிமினல் மற்றும் சிவில் வழக்கு எத்தனை வருடம் நடந்தாலும் செலவுத்தொகை ரூபாய் 50 லிருந்து 100 வரை மட்டுமே பெறலாம். அதீதமான சூழ்நிலையில்தான் வழக்குச் செலவு கூடும். பொய்வழக்கு தாக்கல் செய்தால் IPC-211-ன்படி 2 வருடம் சிறை தண்டனை உண்டு சிவில் வழக்கில் மனுதாரர் பக்கம் நியாயமிருந்தால் Mount தொகை திரும்ப வந்துவிடும்.  மனுதாரர் பொய் வழக்கு தாக்கல் செய்திருந்தால் 50,000 நஷ்ட ஈடு பிரதிவாதிக்கு தரவேண்டும்.

13,  தாலுக்கா அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் பெற செலவு ரூபாய் 25 மட்டுமே. அதற்காக RIOffice-லும் VAO ஆபீசிலும் தவம்கிடந்து காத்திருக்க வேண்டியதில்லை.

14,  காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றால் படித் தொகையும், செலவும் சம்பளத்தொகையும் கேட்டுப்பெறலாம். CRPC.160(2)

15,  அதீதமான சூழ்நிலையில் மட்டும் கைவிலங்கிட முடியும் மற்றப்படி அன்று Article 21(14)

16. புகார்மனுவில் பொய்யான வாதம் வைத்திருந்தால் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் Article 32(8)

17,  பொய் வழக்கில் சிறைதண்டனை பெற்றிருந்தால் ரத்து செய்து விடலாம். 

18,  பொய் என்றும், புனையப்பட்டது என்று தெரிந்திருந்தும் அறிந்திருந்தும் உண்மையைப்போல நேர்மையற்ற முறையில் பயன்படுத்துதல் 7 வருடம் அல்லது 3 வருடம் சிறை தண்டனை உண்டு. IPC 193,196,200.

19,  முத்திரையே இல்லாத தராசை கைவசம் வைத்திருந்தாலே ஒரு வருடம் சிறை தண்டனை உண்டு. IPC.267

20,  அடுத்தவருடைய அசையும் சொத்தை பொருளை நேர்மையற்ற முறையில் அபகரித்தால் 2 வருடம் சிறை தண்டனை உண்டு..IPC-403

21, குழந்தை உயிருடன் பிறப்பதை தடுத்தல் மற்றும் பிறந்தபின் இறக்கச்செய்தல் பத்து வருட சிறை தண்டனை உண்டு.IPC-315.

22,  தற்காப்புக்காக செய்யப்படும் எந்தவொரு செயலும் குற்றமில்லை. IPC-96

23,  பிற மதம் நிந்தித்தல் ஆச்சாரம் கெடுதல் 2 ஆண்டு சிறை.  IPC-295

24,  மத உணர்வுகளை புண்படுத்துதல் ஒரு வருடம் சிறை IPC-295

25,  ஆள்மாராட்டம் செய்து ஏமாற்றுதல்.  3 ஆண்டு சிறை IPC-419

26,  ஏமாற்றும் பொருட்டு போலியாக பத்திரம் தயார் செய்தல் 7வருடம் சிறை. IPC-468.

27,  சொத்து அடையாள குறியை மாற்றுதல் 3ஆண்டு சிறை IPC-484

28,  கணவன் மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்தல் 7 ஆண்டுகள் சிறை. IPC-494

29,  முந்தைய திருமணம் மறைத்தல் 10 வருடம் சிறை.  IPC-495

30,  IPC-499 ல் 3 முதல் 9 வரை உள்ள விதிவிலக்கு விதியின்படி யாரையும் விமர்சனம் செய்யலாம். நீதிபதியையும் கூட

இதில்
IPC என்பது இந்தியன் பீனல் கோட் (இந்திய தண்டனைச்சட்டம்)ஆகும்.
CRPC என்பது குற்றவிசாரனை முறைச்சட்டம் ஆகும்.

பெரியார், கலைஞர்

Ganesh babu
2018-10-16

ஓ இருக்கே!

வெவ்வேறு காலக்கட்டத்தில் தங்களைப் பற்றி தாங்களே செய்துக்கொண்ட சுயமதிப்பீடுகளின் அடிப்படையில் அவர்கள் இருவரும் சொன்ன கருத்துக்களோடு நான் முரண்படுறேன்.

ஒருமுறை தந்தை பெரியார் பேசும்போது, "இன்னிக்கு என் மனசுக்கு முற்போக்குனு தோன்றுவதை நான் பேசுறேன். இன்னும் 100ஆண்டுகள் கழிச்சு ஒரு இளைஞன், 'ரொம்ப வருஷம் முன்னாடி ஈ.வே.ராமசாமினு ஒரு காட்டுமிராண்டி வாழ்ந்திருக்கான். நிறைய பிற்போக்குத்தனமா உளறியிருக்கான்' என்று என்னைப் பத்தி பேசுமளவுக்கு சமூகம் முன்னேறலாம். அப்படி முன்னேறிவிட்டால் அதைவிட எனக்கு அதிக மகிழ்ச்சி வேறொன்றும் இல்லை" என்றார்.

இன்னும் நூறு அல்ல, ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தந்தை பெரியாரைப் போன்ற ஒரு முற்போக்கு சிந்தனையாளரை மனித சமூகம் பார்க்கப்போவதில்லை என்று நான் தீர்க்கமாக நம்புகிறேன்.

அப்படி ஒருவேளை பெரியார் ஆசைப்பட்டதைப் போல மனித சமூகம் முற்போக்குச் சிந்தனையில் பெரியாரையே மிஞ்சி வளர்ந்தாலும், அப்போது வாழும் பகுத்தறிவுள்ள ஒரு இளைஞன் ஒருப்போதும் பெரியாரை காட்டுமிராண்டி  என்றுச் சொல்லமாட்டான்.

மாறாக "பெரியார் என்றொரு மாமனிதர் மட்டும் இந்த மண்ணில் பிறக்காமல் போயிருந்தால் நாமெல்லாம் இன்னும் சாதிவெறியர்களாகவும், மதவெறியர்களாகவும், பார்ப்பன அடிமைகளாகவும் காட்டுமிராண்டிகளைவிடக் கொடூரமாக வாழ்ந்துக்கொண்டிருப்போம். நல்வாய்ப்பாக பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தந்தை பிறந்துவிட்டதால், தனயன்கள் நாம் பிழைத்துக்கொண்டோம்!" என்று நன்றியுணர்ச்சியோடு தந்தையை நினைவுக்கூறுவான்.

அடுத்து தலைவர் கலைஞரின் சுயமதிப்பீட்டின் அடிப்படையிலான கருத்து. 1995-1996ஆம் ஆண்டு அவருக்குப் பிரதமர் ஆகும் வாய்ப்பு கிடைத்தப்போது, அதை அவர் மறுக்கிறார். சரி, அது அவரது விருப்பம்/வியூகம். ஆனால் அதற்கு அவர் சொன்னக் காரணத்தை என்னால் இன்னும் ஏற்றுக்கொள்ளமுடியாது. "என் உயரம் எனக்குத் தெரியும்" என்று எதை நினைத்துச் சொன்னாரோ எனக்குத் தெரியாது. அது ஒருவேளை அவரது பெருந்தன்மையாகக்கூட இருக்கலாம். ஆனால் தன் தலைவரின் உயரம் அவருக்கே தெரியவில்லை என்பதுதான் உண்மை.

சமூகநீதிக்காகவும், பெண்விடுதலைக்காகவும், மாநில சுயாட்சிக்காகவும் வேறெந்தப் பிரதமரையும்விட, தேசியத் தலைவரையும்விட மிகமிகக் கூடுதலாக சாதித்துக்காட்டியவர் என் தலைவர் கலைஞர். அவர் கால் தூசிக்குக்கூட ஈடாகாத வெறும்பயல்களால் நிரம்பியுள்ள கூடாரம்தான் இந்திய தேசிய அரசியல். அதனால் "என் உயரம் எனக்குத் தெரியும்" என்ற கலைஞரின் வரிகளோடு நான் முற்றிலும் முரண்படுகிறேன்.

மற்றபடி தந்தையோடும், தலைவரோடும் முரண்படுமளவுக்கு அடியேனுக்கு அறிவுமில்லை, அனுபவமுமில்லை. அப்படி ஏதாவது ஒன்றிரண்டு சிறிய மாற்றுக்கருத்துகள் இருந்தாலும் அவற்றை பொதுவில் எழுதவேண்டியத் அவசியமுமில்லை.

-Ganesh Babu

கேட்க: askganesh.trickychat.com

Thursday, October 11, 2018

Meeto - வாசுகி பாஸ்கர்

Metoo

#வாசுகிபாஸ்கர்

Spot Light படத்தில், அதே பெயருடைய ஒரு investigative journalism நிறுவனம், தேவாலயத்தில் பாதிரியார்கள் மூலம் நிகழந்த பாலியல் வன்புணர்வு நிகழ்வுகளை குறித்து விசாரிக்க ஆரம்பிக்கும். சில வழக்குகளை தீர விசாரித்து அதை பிரசுரம் செய்து நாடே அந்த செய்தியால் பற்றிக்கொண்டு ஸ்பாட் லைட் நிறுவனத்துக்கு ஆயிரக்கணக்கான தொலைபேசி அழைப்புகளும் கடிதங்களும் வந்தவண்ணம் இருக்கும். அந்த நிறுவனமே தலைச்சுற்றி போகுமளவு நாடு முழுக்க இருக்கும் தேவாயலங்களின் sexual abuse குற்றசாட்டுகள் வெளிவரும். அதில் பெரும்பான்மையானோர் இளைஞர்கள், தனது சிறு வயதில் நடந்த அனுபவத்தை பகிர்வார்கள்.

இதை இன்று நாடே பற்றிக்கொண்ட இருக்கும் #metoo வோடு தொடர்பு படுத்தலாம். இத்தனை வருடம் இல்லாமல் இப்போது ஏன் இதை சொல்கிறார்கள் என்பதற்கான பதில் ஒன்று தான். இதை யாரேனும் ஒருவர் தொடக்கி வைக்க வேண்டும், தனது அனுபவத்தை பகிர்வதற்கான நெஞ்சுரமும் சூழலும் உருவாகும் போது, அது கொடுக்கும் மன தைரியமும் ஊக்கமும் மௌனித்து இருக்கும் பல பேரை பேச வைக்கும்.

யார் மீது குற்றம் சாட்டுகிறோமோ, அவரோடு குற்றம் சாட்டப்பட்டவருக்கு இருந்த கடந்த கால பழக்கத்தை மேற்கோள் காட்டி, அந்த குற்றசாட்டை நீர்த்து போகச்செய்யும் பலரது விமர்சனங்களுக்கும் அதே படத்தில் பதில் இருக்கிறது.

பாதரியாரால் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன் சொல்வான் "பாதிரியார் என்பவர் கடவுளுக்கு இணையானவர் என்று எனக்கு கற்பிக்கப்பட்டது, பாதிரியாரின் பார்வை நம் மீது படுவதே புண்ணியம் என்கிற சூழலில், அந்த பாதிரியார் நம்மை ஒன்றை செய்ய சொல்கிறார் என்றால், நீங்கள் அதை எப்படி மறுக்க முடியும்? அது கிட்டத்தட்ட கடவுளை மறுப்பது போல"

பாதரியாராகட்டும், ஆண்களாகட்டும், இந்த சமூகத்தில் அவர்கள் தனி நபர்கள் அல்ல, அது ஒரு அதிகாரம். சமூக அமைப்பில் இங்கே ஆண்களே அதிகாரமாக இருக்கும் போது, அதிகாரத்தோடு தொடர்பில் இருக்கும் ஆண்களை குறித்து சொல்லவே தேவையில்லை. இந்த விவகாரத்தை நாம் இந்த அடிப்படையில் நோக்குவது தான் அறமாக இருக்க முடியும்.

ஆண் என்னும் இந்த அதிகார அமைப்பில், ஆண்களுக்கு இணங்கினால் தான் எதுவும் சாத்தியமென்னும் கடந்த கால சூழலியலை, கடந்த கால அநீதிகளை வெளிப்படையாக சொல்லும் மற்றுமொரு சூழலை கொண்டு ஒப்பீட்டு, ஒரு பெண் எதை பேச வேண்டும், எதை பேசக்கூடாது என்று நாம் யாரும் தீர்மானிக்க முடியாது, அதை அந்த பெண் தான் தீர்மானிக்க வேண்டும்.

ஒரு பெண் தன் மொத்த அனுபவத்தில், நூறு பாலியல் சீண்டல்களை அனுபவித்து இருக்கலாம், அதில் சிலவற்றை சில காரணங்களுக்காக இன்றும் கூட மறைக்கலாம், அது அந்த பெண்ணுக்கு சாதகமாகவும் பாதகமாகவும் இந்த சமூகம் கொடுத்திருக்கும் நிர்பந்தம். அதில் சிலவற்றை அவள் மறைக்கிறாள் என்கிற அனுமானத்தினாலேயே, அவள் சொல்லத்துணிந்த குற்றச்சாட்டையும், குற்றம் சுமத்தப்பட்ட நபரையும் புனிதப்படுத்தி விட முடியாது. ஒப்பீட்டளவில் இன்னாரை குறித்து பேசத்தேவையில்லை என்கிற முடிவுக்கும் வர முடியாது.

தன் கடந்த கால கசப்புணர்வுகளையும் அனுபவங்களையும் ஒருவர் சொல்லத்துணிந்து விட்டால், அவர் இரண்டு விதமான மனநிலைக்கு தயாராகி விட்டாரென்று அர்த்தம்,

1 . வெற்றி அடைந்த பிறகு தனது வாழ்க்கை அனுபவத்தினை பகிர்தல் ( படைப்பாளிகள், எழுத்தாளர்கள் என்று பல்வேறு துறையில் வெற்றி பெற்றவர்கள் தங்களது சுயசரிதையில் ஒளிவு மறைவின்றி பதிவு செய்வதை நாம் பார்க்கலாம் )

2 ஒன்றை பகிர்வதின் மூலம், அதனால் உருவாகும் பாதகங்களை சந்திக்கும் அளவு மனரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒருவர் தயாaldராகிற போது.

இந்த இரண்டு மனநிலையில் இருந்து தான் ஒருவர் தனது கடந்த காலத்தை குறித்து ஒளிவு மறைவின்றி பேச முடியும்.

தலித் ஒருவன் தன் அடையாளத்தை மறைத்து இந்த பொது சமூகத்தின் அங்கீகாரம் பெற்று வளர்வதும், பின்னாளில் "தலித் என்பதை மறைத்தால் தான் இவை எனக்கு கிடைக்குமென்றால், அது எனக்கு தேவையில்லை" என்கிற மனநிலைக்கு முன்னேறும் மனப்பான்மையை உதாரணமாக சொல்லலாம்.

பெண் மீதான ஒடுக்குமுறை என்பது சித்தாந்தங்களை கடந்தது, தேசத்தை கடந்தது. "கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலைனா இங்க எதுவும் நடக்காது" என்பது சினிமாத்துறையில் எழுதப்படாத சட்டம், கோடம்பாக்கம் தெருவெங்கும் வழக்கத்தில் இருக்கும் வசனம். சினிமா தாண்டி பல்வேறு துறைகளில் இது தான் நிலை. ஒரு பெண்ணை எதை சொல்லி இந்த சமூகம் ஒடுக்குகிறதோ, அந்த பெண் அதையே தனது ஆயுதமாக்குவது அந்த பெண் பணிபுரிகிற இடங்களில் இருந்து குடும்ப அமைப்பு வரை தொடர்கிறது. சீரியல் பார்க்கும் பெண்களை கூட கேலி செய்வதை நான் தவிர்த்துக் கொண்டதின் காரணம் அதுவே. மாலை வேளைகளில் டாஸ்மாக்கிலும், ரோட்டோர டீ கடைகளிலும், இருண்ட மைதானத்தின் நடுவிலும் அமர்ந்து நண்பர்களோடு அரட்டை அடிக்கும் கொடுப்பினை பெண்களுக்கு கிடைத்தால் அந்த எழவெடுத்த சீரியலை பார்க்கவா போகிறார்கள்? நிச்சயமில்லை. இந்த சுதந்திரத்தை மீட்ட பெண்கள், சமூகத்தில் எங்கும் எப்போதும் போய் வரலாம் என்கிற பெண்கள் சீரியலை பார்த்துக்கொண்டா இருக்கிறார்கள்? இலக்கிய, அரசியல், சமூக கூட்டங்களில் பங்கேற்கிறார்கள், தேர்ந்தெடுத்த சினிமாக்களை பார்க்கிறார்கள், தனக்கான நேரத்தை எப்படி செலவிடுவது என்பதை அவர்களே தீர்மானிக்கிறார்கள், எந்த புற அழுத்தமும் இல்லாமல்.

பெண்களுக்காக வகுக்கப்பட்ட கற்பிதங்களோடு வாழ்வது எந்த பெண்ணுக்கும் உளமார உகந்ததாக இருப்பதில்லை, சுய மரியாதையான வாழ்க்கை தான் ஒவ்வொருவரின் ஆசை. யாரை கெஞ்சியும் இறைஞ்சியும் வாழும் வாழ்க்கை நமக்கு பொதுவிலேயே உவப்பானதாக இருப்பதில்லை. காலம் தான் அதை தீர்மானிக்கிறது, அதே காலம் தான் அதிலிருந்து விடுபடவும் வழி வகுக்கிறது.

#metoo ஹாஸ்டக் போடாத பெண்கள் தான் இங்கே கோடான கோடி, அந்த கோடான கோடி பெண்கள் சொல்லத்துணியவே மாட்டார்கள் என்பது சம்மந்தப்பட்ட ஆண்களுக்கு சர்வ நிச்சயமாக தெரியும், அந்த அவர்கள் மேலுள்ள பயத்தினால் மாத்திரமல்ல, அதை அந்த பெண் சொல்லத்துணிந்தால் அவனை விட அவளுக்கு தான் அதில் சிக்கல் என்பது ஆணுக்கு தீர்க்கமாய் தெரியும், அந்த அசாத்திய நம்பிக்கையில் தான் இன்று பல பேர் உலா வருகிறார்கள். என்ன தர்க்கம் பேசினாலும் ஆண் / பெண் பார்வை இங்கே முழுமையாக மாற இன்னும் எத்தனை ஆண்டுகள் பிடிக்கும் என்பதனை உறுதியாய் சொல்வதற்கில்லை.

சமகாலத்தில் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்த கலைஞரையும் ஜெயலலிதாவையும் எடுத்துக்கொள்ளுங்கள், பெண் என்பதை victim கார்டாக வைத்து விளையாடியவர் ஜெயா என்கிற குற்றசாட்டு உண்டு. ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் கதைக்கப்படும் ஏராளமான சம்பவங்களை இங்கே பல பேர் நக்கலாக குறிப்பிடுவதும் உண்டு. ஒரு வாதத்துக்கு அதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டாலும், தனது தனிப்பட்ட வாழ்க்கையை மறைத்து தன்னை வேறு ஒருவராக முன்னிறுத்தி கொள்ள ஜெயாவை நிர்பந்திப்பது எது? கலைஞருக்கு மூன்று மனைவிகள், அவரின் ஒரு நாள் schedule ல் கோபாலபுரத்தில் எப்போது இருப்பர், சிஐடி காலனியில் எப்போது இருப்பர், சட்டமன்றத்துக்கு எத்தனை மணிக்கு போவார் என்பது ஊரறிந்த விஷயம்.

உள்ளது உள்ளபடி  மனசாட்சியோடு ஒரு பெண் முதலமைச்சர் காலையில் ஒரு கணவன் வீட்டிலும் மாலையில் ஒரு கணவன் வீட்டிலும் இருப்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அது சாத்தியமாகும் சூழல் நம் சமூகத்தில் இருக்கிறதா?

ஆணுக்கு சமூகம் கொடுக்கும் transparency அவனை ஒளிவுமறைவற்றவனாகவும், பெண்ணுக்கு அதுவே நெருக்கடியாகவும் இருப்பதை எல்லாம் கணக்கில் கொண்டால் இதை நம்மால் புரிந்துக் கொள்ள முடியும். இதையெல்லாம் மீறி "எவனிடம் பணிந்தும் நானில்லை" என்பது தான் சமத்துவத்தின் இலக்கு, அது இன்னும் சாத்தியப்படாமல் ஒரே தராசில் வைத்து நீதி சொல்வதென்பது அயோக்கியத்தனம்.

யூதர்களுக்கு எதிராக கடுமையான பிரச்சாரங்கள் ஜெர்மனியில் உருவாகி கொண்டிருந்த காலத்தில் ஜெர்மனி பள்ளிக்கூடங்களில் ஜெர்மன் பெண் பெண்களுக்கு ஒரு வாக்கியம் போதிக்கப்பட்டது, "பெண்களே, நீங்களெல்லாம் ஒரு ஜெர்மானியனை சுமக்கப்போகிறீர்கள்" என்பது அந்த முழக்கம்.

உலகத்தில் எத்தனை பெரிய ராஜ்ஜியம்  / இனம்  / மொழி என்று எதை காப்பாற்றும் சமூகத்திலும் பாசிசத்தின் முன் பெண்கள் வாரிசை சுமக்கப்போகும் ஒரு உறுப்பாக தான் பார்க்கப்படுகிறார்கள், தனது சொந்த சமூகத்தாலேயே அளவில்லாத கொடுமைகளை அனுபவித்தவர்கள் பார்ப்பனிய வீட்டுப்     பெண்கள்.

ஜெயமோகனின் வெள்ளையானை நாவலில் தலித்தான காத்தவராயனிடம் பிரிட்டிஷ் அதிகாரி ஒரு பார்ப்பன தெருவில் நின்று கேட்பான் "இந்த வீட்டிலிருந்து பெண்கள் வெளியே வர மாட்டார்களா?"

அதற்கு காத்தவராயன் சொல்வான் "இல்ல துரை, அவர்களும் எங்களை போலத்தான்"

எந்த சித்தாந்தத்தின் படி சமூகம் அமைந்தாலும் அங்கே பெண்களுக்கு எதிரான மனநிலை முழுமையாக ஒழியுமா என ஊர்ஜிதமாக சொல்வதற்கில்லை, அதனால் தான் ஆண் / பெண் சமத்துவம் என்பது சித்தாந்தங்களுக்கு அப்பாற்ப்பட்ட அடிப்படை என்று சொல்கிறேன்.

அதன் விளிம்பில் இருந்து ஒரு பெண் தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்களை சொல்வதற்கான சூழல் ஏற்பட்டால், நாடு முழுக்க ஒரு அலை உருவானால், அதை தொடக்கமாக கொண்டு இங்கே பேசத்துணியாத பெண்கள் பேசுவதற்கும், இப்படி விவாதிப்பதனால் அச்சத்தை காரணமாக கொண்டாவது திருந்தப் போகும் ஆதிக்கவாதிகளுக்கு பாடமாக இருக்க இந்த உரையாடல்கள் அவசியம்.

அதை முளையிலேயே நம் சாதக  / பாதக காரணங்களை கொண்டு நீருக்கடியில் அழுத்துவதின் மூலம், அல்லது ஊரறிந்த ஒரு பொறுக்கிக்கு வக்காலத்து வாங்குவதின் மூலம், அல்லது இதை ஏன் பேசுவானேன் என்று கடப்பதின் மூலம் நாம் பெறப்போவது ஏதுமில்லை.

காரணம் எதுவாயினும், இந்த ஹாஸ்ட்டாக்கில் நக்கலடித்து கொண்டிருப்பவர்கள், இதை நகைப்பவர்கள் மனநோயாளிகள். பேசத்துணிந்தவர் பேசினால், இங்கே இது தான் நிலை, இது வரலாற்றில் புதிதாய் நடப்பவையல்ல..

https://m.facebook.com/story.php?story_fbid=1484305105005214&id=100002772164687

Friday, October 5, 2018

20 ரூபாய் டாக்டர் - ravishankar ayyakannu

Ravishankar Ayyakkannu
2018-10-05

"20 ரூபாய் மருத்துவர் ஜெகன்மோகன் என்று ஒருவர் காலம் ஆகிவிட்டார். மக்கள் அவரது மறைவு குறித்து வருந்துகிறார்கள். இது போன்ற சேவை உள்ளம் கொண்ட மருத்துவர்களைக் காண்பது அரிது" - செய்தி.

ஒரு நாளைக்கு 300 பேருக்கு 20 ரூபாய் என்ற கணக்கில் சனி ஞாயிறு தவிர்த்து மாதம் 22 நாள் வேலை பார்த்தால் கூட 1,32,000 ரூபாய் சம்பாதிக்கலாம். அவரது மருத்துவமனை வாடகை, ஊழியர் செலவு எல்லாம் கழித்தால் கூட குறைந்தது 1,00,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.

எனக்குத் தெரிந்த மருத்துவர் ஒருவர் இருக்கிறார். இவர் அந்த 20 ரூபாய் கூட வாங்குவதில்லை. ஊசி, மருந்து மட்டும் இல்லை அறுவை சிகிச்சை கூட இலவசம்.

மாதம் சம்பளமாக அவர் ஈட்டுவது 60,000 ரூபாய் மட்டுமே.

அவருக்குப் பெயர் அரசு மருத்துவர்.

மருத்துவர் ஜெகன் மோகன்கள் போன்றோர் ஆற்றும் சேவை நன்று. ஆனால், மிகக் குறைந்த ஊதியத்தில் வேலை பார்க்கும் ஆயிரக்கணக்கான அரசு மருத்துவர்கள் ஆற்றும் சேவை அதனை விட அரிது. பாராட்டிற்குரியது.

அவர்களை மறந்து விடுகிறோம். எவ்வளவோ துயரைத் தாங்கி வேலை செய்யும் அவர்கள், ஒரு கட்டத்தில் "இந்த நன்றி கெட்ட சமூகத்துக்கு உழைக்கத் தான் வேண்டுமா" என்று ஓய்ந்து விடுகிறார்கள்.

அதே போல் ஜெகன் மோகன் 20 ரூபாய் வாங்கும் நல்லவர் என்று கட்டமைக்கும் பொதுப்புத்தி, 200 ரூபாய் கேட்கும் ஒரு சிறப்பு மருத்துவரை வில்லன் ஆக்குகிறது.

சிறப்பு மருத்துவர்கள் படிப்புக்கும் உழைப்புக்கும் 200 ரூபாய் எல்லாம் ஒரு தொகையே இல்லை. நம்மிடம் காசு இல்லை என்றால் அரசு மருத்துவமனையை நாடுவதே நேர்மை. உழைத்துப் பொருள் ஈட்டும் எந்தத் தொழில் துறையினரையும் வில்லனாக்கத் தேவை இல்லை.

இந்தக் காலத்தில் எந்த மருத்துவர் சேவை செய்கிறார் என்று அசால்டாக கேட்கிறோம். நானெல்லலாம் எவ்வளவு சம்பாதித்தாலும் வாழ்நாள் முழுக்க படித்துக் கொண்டும் உழைத்துக் கொண்டும் இருக்க முடியாது என்று மருத்துவர் படிப்புக்கு விண்ணப்பிக்காமலேயே விட்டவன்!

நோயாளி இறந்தால் மருத்துவரை அடித்துக் கொல்லும் இந்த நாட்டில் ஒருவர் மருத்துவர் ஆகத் துணிவதே சேவை தான்!

அரசு மருத்துவர்கள் குறைந்த ஊதியத்துக்கும் தனியார் மருத்துவர்கள் நியாயமான விலைக்கும் மருத்துவம் பார்ப்பதே ஒரு சேவை தான்!

நீட் சுழலில் சிக்கி, மருத்துவம் முற்றிலும் தனியார் மயமாகும் ஒரு நாள் இதை நாம் உணர்வோம்.

#நீட் #மருத்துவம் #சேவை #பொதுப்புத்தி

https://m.facebook.com/story.php?story_fbid=10157957054708569&id=576438568