Saturday, January 12, 2019

பார்ப்பனர்கள் பல் வேறு சாதியப் பட்டப் பெயர்களால் அழைக்கப்படுகின்றனர்!

இர.பிரபு உவந்தான்
2019-01-12

இன்றைய இந்தியப் பார்ப்பனர்கள் பல் வேறு சாதியப் பட்டப் பெயர்களால் அழைக்கப்படுகின்றனர்!

கீழே காண்பீராக.

#தமிழ்நாடு:

ஐயர், ஐயங்கார் , ராவ் , குருக்கள், சாஷ்திரி

#கேரளா

நம்பூதிரி , நம்பூரித்திரி, நம்பீசன், மூசாத்து , உண்ணி, குருக்கள், போத்தி, வர்மா, வாரியர், பிஷாரடி, ப்ளாப்பள்ளி ,
இன்னும் சில

#கருநாடகம்:

கௌடா, ஹெக்டே , ஆல்வா , உர்ஸ் , ஷெட்டி , ராய் , காமத் , மூர்த்தி ,ஹோலா,
பய் , பலால் , சாலியன் , சவர்ணா, ராவ் , கரன்தா , சோமையா ஜி , இன்னும் சில

#மேற்கு #வங்காளம்

பானர்ஜி,சட்டர்ஜி,
கோஸ்வாமி,
சன்யால், முகர்ஜி , சக்ரபோர்த்தி ,
உபாத்யாயா , முகாபாத்யாயா ,
கங்கோபாத்யாயா , கங்கூலி பட்டாச்சார்யா , தாகூர் , சௌத்திரி
மஜூம்தார், ஜோர்தார், இன்னும் சில

பிற மாநிலங்கள்

#பாஜ்பய், #ராம்பால் , #ஆப்தே, #ஜேட்லி, வியாஸ், பட், தேசாய்,  கோகலே, ரானடே,  நானே(Nene), ராஜ்குரி, வைத்யா, மேத்தா, சதுர்வேதி, ஷெனாய் , ரெய்னா, ஷர்மா, துராணி , கண்ணா, மிர்சா(Mirza), மிஸ்ரா , அக்னிஹோத்ரி, சுக்லா, பதக்,  துபே , ஓஜா, கௌதம் , த்விவேதி, திரிபாதி , திவாரி , தவே , தியாகி , தீட்சித் , தேஷ்முக், தேஷ்பாண்டே , குல்கர்னி, ஜோஷி , பண்டிட் , பரத்வாஜ் , பஹுகுணா , பாண்டே புரோஹித், பூஜாரி, நந்தா,  நாயக் , படாநாயக் , நாத் , நியோகி , பாணிக்கிரஹி , சானிக்கிரஹி, ஹக்ஸர், பாட்டீல் , பட்நாவிஷ் , பர்த்வால் , கவுல் , பிரஷாரா ,வைதிஹி , கந்தூரி ,கார்கே, #வாஜ்பேயி ,#நிர்மல், #மல்லையா ,
போன்ற இன்னும் பல நூற்றுக் கணக்கான வெவ்வேறு சாதியப் பட்டப் பெயர்களுடன் வெவ்வேறு இந்திய மாநிலங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் ஆரியப் பார்ப்பன வந்தேறிகளே!

தமிழகத்தில் உள்ள பார்ப்பனர்களில் " ஐயர் "
சிவனிய வழிபாடு!
ஐயங்கார் மாலிய வழிபாடு.
அவ்வளவே!

இவர்கள் தமிழரின் கோயில்களை ஆக்கிரமித்துக் கொண்டவர்களே !

https://www.facebook.com/100021738280165/posts/381744902560116/

Thursday, January 10, 2019

பொருளாதார இடஒதுக்கீடு - செந்தில், கவுண்டமணி

*செந்தில்:*

என்ன அண்ணே பிராமணர்களுக்கான 10% இடஒதுக்கீட்டை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எல்லாம் ஆதரிக்கும் போது திமுக மட்டும் ஏன் எதிர்க்குது?

*கவுண்டமணி:*

அடங்கொன்னியா, அது பிராமணர்களுக்கான இடஒதுக்கீடு இல்லடா, இதுவரை இடஒதுக்கீடு வரைமுறைக்குள் வராத எல்லா உயர்சாதியினருக்குமான இடஒதுக்கீடு. அதாவது BC, MBC, SC & ST பட்டியலுக்குள் வராத Other Castes (OC).

நம்ம தமிழ்நாட்டை மட்டும் உதாரணமா எடுத்துக்கிட்டா, நாம பொதுவா பிராமணர் என்று அழைக்கும் ஐயர், ஐயங்கார் தவிர்த்து இங்குள்ள சைவ முதலியார், சைவ பிள்ளை, நாட்டுக்கோட்டை செட்டியார், ரெட்டி, நாயுடு எல்லாருமே உயர்சாதியினர் தான்.

அவங்க எல்லாருக்கும் தான் இடஒதுக்கீடு, அதுவும் பொருளாதார அடிப்படையில். அதனால தான் இதை திமுக எதிர்க்குது.

*செந்தில்:*

அது தான் ஏன் எதிர்க்கனும்? இதே தமிழ்நாட்டுல

BC = 26.5%
BC (Muslim) = 3.5%
MBC = 20%
SC = 15%
SC (Arunthathiyar)= 3%
ST = 1%

மொத்தம் 69% இடஒதுக்கீடு இருக்கும் போது FC-க்கு 10% இருக்க கூடாதா அண்ணே?

கவுண்டமணி:
எவன்டா சொன்னது அப்படி? முதலில் இந்த இடஒதுக்கீடு என்பதே ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் கல்வி மறுக்கப்பட்டவர்களுக்கு தரப்படும் உரிமை என்பதையும் அது ஒரு சலுகை அல்ல என்பதையும் நல்லா புரிஞ்சிக்கணும்

நம்ம தமிழ்நாட்டுல இந்த ஐயர், ஐயங்கார், சைவ முதலியார், சைவ பிள்ளை, நாட்டுக்கோட்டை செட்டியார், ரெட்டி, நாயுடு இவங்க எல்லார்கிட்டயும் தலைமுறை தலைமுறையா கல்வி கற்கும் உரிமை இருந்துச்சு, இருக்குது. நான் சொல்லுறது சரியா?

செந்தில்:
சரி தான் அண்ணே

கவுண்டமணி:
அதே உரிமை நம்மூரில் காலம் காலமாக வாழ்ந்துக்கொண்டிருக்கும்,
தேவர்களுக்கு இருந்துச்சா?
வன்னியர்களுக்கு இருந்துச்சா?
கவுண்டர்களுக்கு இருந்துச்சா?
நாடார்களுக்கு இருந்துச்சா?
பறையர்களுக்கும், பள்ளர்களுக்கும், சக்கிலியர்களுக்கு இருந்துச்சா?
இன்னும் உனக்கு தெரிஞ்ச வேற என்னென்ன சாதியிருக்கோ அவங்களுக்கெல்லாம் இருந்துச்சா?

செந்தில்:
இல்லை அண்ணே

கவுண்டமணி:
ஏன் ஒரு சிலருக்கு உரிமை இருந்துச்சு?
ஏன் ஒரு சிலருக்கு உரிமையில்லாம இருந்துச்சு?
காரணம் அவங்கவளோட சாதி.
பொருளாதாரம் இல்லை.

நாம இங்கே காலம் காலமா நில உடைமை சமுதாயங்கள் என்று சொல்லக்கூடிய தேவர்கள், வன்னியர்கள், கவுண்டர்கள் கூட பணமிருந்தும், சொத்திருந்தும் படிக்க உரிமை இல்லாம தான் இருந்தாங்க என்பதே உண்மை.

அதனால தான் அவங்களை BC, MBC என்று வகைப்படுத்தி அவங்களுக்கு முன்னுரிமை கொடுத்து படிக்க வைத்து டாக்டராகவும், இஞ்சினியராகவும், உருவாக்கி, அரசாங்கத்தில் பல வேலைகளில் உட்காரவைச்சிருக்கோம்.

செந்தில்:
சரி அண்ணே

கவுண்டமணி:
அதே சமயத்தில் OC என்று வகைப்படுத்தப்பட்டுள்ள ஐயர், ஐயங்கார், சைவ முதலியார், சைவ பிள்ளை, நாட்டுக்கோட்டை செட்டியார், ரெட்டி, நாயுடு சாதியில் பிறந்தவங்க எல்லாம் என்ன தான் வறுமையில் இருந்தாலும் சில சாதிக்கென்றே விதிக்கப்பட்டிருக்கும் வேலைகளை செய்யவே மாட்டாங்க

செந்தில்:
புரியல அண்ணே

கவுண்டமணி:
உனக்கு புரியுற மாதிரி சொல்லுறேன் கேளு.
என்னைக்காவது இந்த OC பிரிவை சேர்ந்த ஏழைகளை பிணம் எரிக்கும் வேலையில் நீ பார்த்திருக்கியா?

செந்தில்:
இல்லை அண்ணே

கவுண்டமணி:
முடிவெட்டும் வேலையை செய்வதை பார்த்திருக்கியா?

செந்தில்:
இல்லை அண்ணே

கவுண்டமணி:
அட அருந்ததியர் மாதிரி மலம் கூட அள்ள வேண்டாம், இந்த பஸ் ஸ்டாண்டில் இருக்குதே கக்கூசு அதில் டோக்கன் போடும் இடத்திலாவது பார்த்திருக்கியா?

செந்தில்:
இல்லை அண்ணே

கவுண்டமணி:
பானை செய்வதையோ, கொளுத்து வேலை செய்வதையோ, குப்பை அள்ளுறதையோ பார்த்திருக்கியா?

செந்தில்:
இல்லையே அண்ணே

கவுண்டமணி:
அதுல இருக்குடா இந்த சமூகத்தோட சூட்சமம்.

நல்ல கேட்டுக்கோ.

நீ பொறந்தப்புறம் தான்டா உனக்கு பேரு வைப்பாங்க...ஆனா இந்த சாதி...நீ உங்கம்மா வயித்துல கருவா உருவாகிடும் முதல் நாளே உறுதி செய்யப்பட்டு விடுகிறது.

உன் பேர் உனக்கு பிடிக்கலைன்னா நீ மாத்திக்கலாம், ஆனா உன் சாதி உனக்கு பிடிக்கலைன்னு நீ மாத்திக்க முடியாது.

செந்தில்:
ஆமாம் அண்ணே

கவுண்டமணி:
அப்போ நம்ம மாநிலத்துல பிறந்த ஒருவனுக்கு நிலையான இழிவு எது? அவன் பணமா? சாதியா?

செந்தில்:
சாதி தான் அண்ணே

கவுண்டமணி:
உண்மை நிலைமை இப்படியிருக்கும் போது, இதில் ஏன் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு கொண்டு வரனும்?

செந்தில்:
அப்போ உயர் சாதி ஏழைகளுக்கு வழியே இல்லையா அண்ணே?

கவுண்டமணி:
அடேய் இந்தியாவில் உள்ள சமூக ஏற்றத் தாழ்வுகளை நீக்குவதற்காகத்தான் இடஒதுக்கீடு, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கு இல்லை.

செந்தில்:
ஏன் அண்ணே?

கவுண்டமணி:
போன வருஷம் பணக்காரனாக இருந்தவன் இந்த வருஷம் ஏழையாவதும்
இந்த வருஷம் ஏழையா இருக்கிறவன் அடுத்த சில வருஷத்துல பெரும் பணக்காரன் ஆவதையும் நாம பார்த்திருக்கோமோ?

செந்தில்:
நிறைய பார்த்திருக்கோமே அண்ணே

கவுண்டமணி:
எங்க? போன வருஷம் SC ஆக இருந்து, இந்த வருஷம் FC ஆனவனையோ
இந்த வருஷம் FC ஆக இருந்து அடுத்த வருஷம் MBC ஆகப்போகும் ஒருவனையும் உன்னால் காட்டமுடியுமான்னு சொல்லு

செந்தில்:
அது எப்படி அண்ணே முடியும்?

கவுண்டமணி:
முடியாது இல்லே!
அது தான் வர்ணாஸ்ரமம்...
தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொருவனுக்கும்
சாதி நிலையானது (Constant Factor)
பொருளாதாரம் மாறிக்கொண்டே இருப்பது (Variable Factor)

அதனால இடஒதுக்கீடு என்பது Constant Factor ஆன சாதியை வைத்து மட்டுமே இருக்க முடியும், Variable Factor ஆன பொருளாதாரத்தை வைத்து அல்ல

செந்தில்:
எல்லாம் சரி அண்ணே, திரும்பவும் அதே கேள்வி தான்...அப்போ உயர் சாதி ஏழைகளுக்கு எப்படி தான் உதவுவது?

கவுண்டமணி:
ஏன் உதவ முடியாது?
எங்க தலைவர் கலைஞர் கொண்டு வந்தாரே...
முதல் தலைமுறை பட்டதாரிக்கு கூடுதலாக 5 மார்க்...
அதை கொண்டு வாங்க.
கலைஞராவது தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டும் சாதி வித்தியாமில்லாம 5 மார்க் தானே கொடுத்தார்...
உனக்கு தான் 56" இருக்கே!
நீ இந்தியா முழுக்க எல்லா மாணவர்களுக்கும் 10 மார்க் கொடு

இந்தியாவில் உள்ள அனைத்து சாதியை சேர்ந்த முதல் தலைமுறை பட்டதாரிக்கு அது BE, MBBS, Bsc, MSc, Mphil, MBA, MCAன்னு எந்த படிப்பாக இருந்தாலும் 25 வயது வரை முழுக்க முழுக்க அரசு செலவில் தான் என்று திட்டம் கொண்டு வாங்க

செந்தில்:
என்னண்ணே நீங்க என்னலாமோ சொல்லுறீங்க?
நீங்க தான் 69% வச்சுக்கிட்டு இருக்கீங்களே! ஒரு 10% போன என்ன குறைஞ்சிடப் போகுது?

கவுண்டமணி:
அடேய் எல்லா BC, MBC, SC & ST மாணவர்களும் அந்த 69 சதவிகிதத்தில் மட்டும் தேர்வாகி கல்லூரிகளுக்கு போவதில்லை.

General Category-ல FC, BC, MBC, SC & ST மாணவர்கள் எல்லாரும் தான் நல்ல மார்க் எடுத்தா தேர்வாகுறாங்க.
அந்தளவுக்கு அதிகமான Cut-Off எடுக்கவில்லைன்னாலும் அதை விட கொஞ்சம் கம்மியா மார்க் எடுத்தவங்க தான் இந்த 69 சதவிகிதத்தில், அதாவது Reserved Category-ல தேர்வாகுறாங்க.

இப்போ நேரடியா General Category-ல  10% FCக்குன்னு கொடுத்தா அது நல்ல மார்க் எடுத்திருக்கும் BC, MBC, SC & ST மாணவர்களை மறைமுகமாக BC, MBC, SC & ST-க்கான 69% Category-குள்ள தள்ளும். அதனால நேரடியாக பாதிக்கப்படப்போறது BC, MBC, SC & ST மாணவர்கள் தான்.

புரிஞ்சுதா?

செந்தில்:
புரியுது. ஆனா இன்னும் ஒரு சந்தேகம்

கவுண்டமணி:
நீ என்ன கேட்பேன்னு எனக்கு தெரியும், இருந்தாலும் பரவாயில்லை...அதை நீயே கேளு

செந்தில்:
ஏன்ணே...அது ஏன்? BC, MBC, SC & ST மாணவர்கள் மட்டும் General Category-லையும் உள்ள வரணும்? அவர்களுக்கான Reserved Category-லையும் உள்ள வரணும்? FCக்கு மட்டும் 10% கொடுத்தா அதை தப்புன்னு சொல்லுறீங்க?

கவுண்டமணி:
ஏன்னா...நம்ம தமிழ்நாட்டோட மக்கள் தொகையில் FC மட்டும் ஒரு 5-லிருந்து 6 சதவிகிதத்தை தாண்டாது. ரொம்பவே அதிகபட்சமா கணக்கு பண்ணாக்கூட 10 சதவிகிதத்தை தாண்டவே தாண்டாது. மீதம் 90 சதவிகித மக்கள் FC அல்லாத BC, MBC, SC & ST மக்கள் தான்.

ஒரு மாநிலத்தோட மக்கள் தொகையில்
90% இருக்கும் BC, MBC, SC & ST மக்களுக்கு 69 சதவிகித இடஒதுக்கீடு என்பதும்
10% இருக்கும் இதர FC மக்களுக்கு அதே 10% இட ஒதுக்கீடு என்பதும்
சரியா?

செந்தில்:
அப்போ இதுக்கு என்ன தான் அண்ணே வழி?

கவுண்டமணி:
ஏன் வழியில்லை?
அது தான் சாதியவாரியான கணக்கெடுப்பு நடத்தி எந்த சாதியில் எத்தனை பேர் இருக்காங்கன்னு Data வச்சிருக்காங்களே!

இந்த General Category என்பதையே மொத்தமா ஒழித்துவிட்டு இருக்கும் 100% கல்வியையும், வேலை வாய்ப்பையும் மக்கள் தொகை அடிப்படையில் FC, BC, MBC, SC & ST மக்களுக்கு சாதிய அடிப்படையில் பிரிக்கட்டுமே!

யார் வேண்டாம்ன்னு சொல்ல போறாங்க?

செந்தில்:
இவ்வளவு குழப்பம் இருக்கும் போது எதுக்குண்ணே இதை ராத்திரியோட ராத்திரியா கொண்டு வந்தாங்க?

கவுண்டமணி:
இந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய FC பிரிவுக்கு 10% இடஒதுக்கீடு என்பதே நம்ம 56 இன்ச் மோடு முட்டியின்  இன்னொரு ஃபிராடுத்தனம் தான்.

ஏன்னா இதே 10% சட்டத்தை 1991ல் நரசிம்மராவ் அரசு கொண்டு வர முயன்று, 1992ல் உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வில் அனுமதி மறுக்கப்பட்டது. அதுல ரொம்ப தெளிவா Reservation is for ONLY for Socially and Educationally Oppressed Communities and not to Economically Weaker Sections என்று சொல்லியிருக்காங்க.

இது மத்தியரசுக்கு தெரியாதா? நல்லா தெரியும். ஆனாலும் கொண்டு வந்திருக்காங்க.

செந்தில்:
அது தான் ஏன் அண்ணே?

கவுண்டமணி:
வேற என்ன? மே மாசம் வரப்போகும் மக்களவை தேர்தல் தான். 5 ஆண்டு முழு பலத்தோட ஆட்சியில் இருந்திருந்தாலும் மக்களிடம் ஒட்டு கேட்டு போகும் போது சொல்லுறதுக்கு ஒரு சாதனையும் செய்ய வக்கில்லை. இனி இதை பெருசா பேசுவாங்க.

இப்போ பாரு நேத்துல இருந்து ரஃபேல் பத்தி எல்லாரும் பேசுறதை விட்டுட்டு இதை பத்தி பேச ஆரம்பிச்சுட்டோமா? அது தான் அவங்களுக்கு தேவை. இனி எல்லாரும் இது சரியா? தவறா? என்பது பற்றிய ஆராய்ச்சியில் மூழ்கிவிடவே வாய்ப்பு அதிகம்.

செந்தில்:
எல்லாம் சரி தான் அண்ணே. ஆனா காங்கிரஸ் ஆதரிக்குறதை பத்தி நீங்க எதுவும் சொல்ல மாட்டுறீங்களே!

கவுண்டமணி:
அடேய்
திமுக தமிழ்நாட்டில் மட்டும் இருக்கும் மாநில கட்சி
காங்கிரஸோ எல்லா மாநிலத்திலும் இருக்கும் அகில இந்திய கட்சி

நாங்க எங்க மாநிலத்தையும், மக்களையும் முன் வைத்து தான் அரசியல் செய்ய முடியும்
காங்கிரஸ் ஒட்டுமொத்த இந்தியாவையும் முன் வைத்து தான் அரசியல் செய்ய முடியும்

தமிழகத்துக்கு சரியாக இருப்பது ஒட்டு மொத்த இந்தியாவுக்கே சரியாக இருக்கனும் என்று எந்த கட்டாயமும் கிடையாது.

நமக்கு எது வேண்டும்? எது வேண்டாம்? என்ற முடிவு எடுக்கும் அதிகாரம் இருந்தால் மட்டுமே நமக்கு போதும்.

இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு, அந்தந்த மாநில மக்களுக்கு என்ன வேண்டும்/வேண்டாம் என்று நாம முடிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

செந்தில்:
இப்போ என்ன தான் சொல்லுறீங்க?

கவுண்டமணி:
தமிழ்நாட்டை பொறுத்தவரை

எல்லா சாதியினருக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று சொல்லுபவனை நம்பு!
ஏன்னா அவன் உன் நண்பன்!

எவனுக்கும் இடஒதுக்கீடு வேண்டாம் என்று சொல்லுபவனையும் நம்பு!
ஏன்னா அவன் உன் நேரடி எதிரி, பேசிக்கலாம், போட்டி போட்டு ஜெயிக்கலாம்.

ஆனா....
இந்த பொருளாதார இட ஒதுக்கீடு வேண்டும் என்று சொல்பவனை மட்டும் நம்பாதே!

பூட்டக்கேசு ஆயிடுவ

முற்பட்ட வகுப்பினர்

மத்திய அரசு இயற்றவிருக்கும் புதிய இடஒதுக்கீடு சட்டத்தின்படி பயன் பெறுவோர் யார்? யார்??

1, உயர் ஜாதியில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்.

2, வருடாந்திர மொத்த வருமானம் 8 லட்சத்திற்கும் கீழ் உள்ளவர்கள்.

3,  5 ஏக்கருக்கும் குறைவான விவசாய நிலம் கொண்டவர்கள்.

4, 1000 சதுர அடிக்கும் குறைவான பரப்பில் வீடு உடையவர்கள்.

5,  நகராட்சி மற்றும் நகராட்சிக்கு அப்பாற்பட்ட பகுதிகளில் குடியிருப்பு மனை அளவும் கணக்கில் கொள்ளப்படும்.

கிருத்துவர், முஸ்லீம், இந்து என அனைவருமே!
மத்திய அரசின் (ஏழ்மை நிலையில் இருக்கும் உயர்சாதிமக்களுக்கு) 10% உயர்சாதி ஒதுக்கீடு பெறும் சாதிகளின் பட்டியல்!

#முற்பட்ட வகுப்பினர்

1985-ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இரண்டாவது கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் முற்பட்ட வகுப்பினர் என வகைப்படுத்தப்பட்ட சாதிகளின் பட்டியல் இது. இங்கு முற்பட்ட சாதி / கிளைச் சாதிக்கு அரசு வழங்கியுள்ள குறியீட்டு எண்கள் (அடைப்புக் குறிக்குள்) வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

1.ஆங்கிலோ இந்தியர் (511)
2.ஜனோலா சால்வேஷன் சர்ச் (512)
3.லண்டன் மிஷன் கிறிஸ்தவர் (513)
4.மலங்கரா சிரியன் கிறிஸ்தவர் (514)
5.ரோமன் கத்தோலிக்க மலங்கரா சிரியோ மலபார் ரைட்ஸ் (515)
6.முற்பட்ட வகுப்புகளிலிருந்து மதம் மாறிய கிறிஸ்தவர் (516)
7.தாவூத் (608)
8.கட்ஸு (சைத்)(609)
9.மீர் (610)
10.மைமன் (சைத்) (611)
11.நவாப் (612)
12.அன்சார், தெக்காணி, துதிகுலா, லெப்பை,ராவுத்தர், மரைக்காயர், மாப்ளா, ஷேக்,சையத் அல்லாத) பிற முஸ்லீம்கள் (613)
13.501 செட்டியார் (701)
14.அச்சு வெள்ளாளர் (702)
15.ஆதி சைவர் (703)
16.ஆற்காடு முதலியார் (704)
17.ஆரியர் (705)
18.அரியூர்ச் செட்டியார் (அரிவையூர்ச் செட்டியார், அரியூர் நகரத்தார்) (706)
19.ஆற்காட்டு வெள்ளாளர் (707)
20.அரும்புக்கூற்ற வெள்ளாளர் (708)
21.ஆரிய வைசியச் செட்டியார் (கோமுட்டிச் செட்டியார், ஆரிய வைசியர்,வைசியச் செட்டியார்) (709)
22.பலிஜாநாயுடு (#பலிஜாசெட்டியார்) (710)
23.பேரி செட்டியார் (711)
24.போகநாட்டுரெட்டியார் (712)
25.பிராமணர் (713)
26.சோழபுரம் செட்டியார் (714)
27.தேவதிகர் (715)
28.எழுத்தச்சர் (716)
29.ஞானியர் (717)
30.ஜைனர் (718)
31.கடையத்தார் (719)
32.கதுப்பத்தான் (720)
33.காக்கர் (மோப்பிள்ளா தவிர) (721)NR
34.கம்மவார்நாயுடு (#கம்மவார்நாயக்கர்___நாயுடு)(722)
35.கார்காத்தார் (கார்காத்த வெள்ளாளர்,காரைக்காட்டு வெள்ளாளர்,காரிக்காட்டுப் பிள்ளை) (723)
36.காசுக்கார ஆச்சாரி (724)
37.காயல் செட்டி (725)
38.கோணக் கொல்லர்கள் (சேலம் மாவட்டம்) (726)
39.கொண்டியர் (727)
40.கொங்குச் செட்டியார் (728)
41.கொங்குநாயக்கர் (729)
42.கொங்கு ரெட்டியார் (730)
43.கொந்தல வெள்ளாளர் (731)
44.கொட்டைக்கட்டி வீர சைவம் (732)
45.கோட்டைப்புரச் செட்டியார் (733)
46.கோட்டைப்புர வைசியச் செட்டியார் (734)
47.குக வாணியர் (735)
48.மலங்கரா சிரியன் கிறிஸ்தவர் (736)
49.மஞ்சுபுத்திரச் செட்டியார் (மஞ்சுபுத்தூர்ச் செட்டியார்) (737)
50.மொட்டை வெள்ளாளர் (738)
51.மூசிகபலிஜகுலம் (739)
52.நாடன் (நாட்டார்) (740)
53.நாயர் (மேனன், நம்பியார்) (741)
54.நாங்குடி வெள்ளாளர் (742)
55.நாட்டுக் கோட்டைச் செட்டியார் (நாட்டுக் கோட்டை நகரத்தார்) (743)
56.ஒருகுண்ட ரெட்டி (744)
57.இதர இந்துக்கள் (பிராமணர் தவிர) காஷ்மீரி, பஞ்சாபி, 58.குஜராத்தி, ஒரியா, அஸ்ஸாமி, மராத்தி (745)
பணிக்கர் (746)
59.பத்தான் (பட்டானி), கான் (747)
60.ராஜபீரி (748)
61.ரெட்டியார் (கஞ்சம ரெட்டி தவிர) தேசூர் #ரெட்டி__காப்பு / பண்ட காப்பு /பண்டா ரெட்டியார் (749)
62.ராவுத்தநாயுடு (750)
63.சைவச் செட்டியார் (751)
64.சைவ ஓதுவார் (752)
65.சைவப் பிள்ளைமார் (திருநெல்வேலி மாவட்டம்) (753)
66.சைவ சிவாச்சாரியார் (754)
67.சைவ வெள்ளாளர் (755)
68.சானியர் (756)
*69.க்ஷத்திரிய ராஜு (ராஜு, ராஜ பொந்திலி) (757)*
70.திருவெள்ளறைச் செட்டியார் (758)
71.திய்யர் (759)
72.தொண்டை மண்டல வெள்ளாள முதலியார் (760)
73.உலகமாபுரம் செட்டியார் (761)
74.வீர சைவர் (வீர சைவ வெள்ளாளர்) (762)
75.வெள்ளாளப் பிள்ளைமார் (763)
76.வெள்ளாளர் (கன்னியாகுமரி மாவட்டம் தவிர) (764)
77.வெள்ளாளர் (கன்னியாகுமரி மாவட்டம்) (765)
78.வாரியர் (மலையாளம்) (766)
79.சாதிக் குறியீட்டு எண் வழங்கப்படாதவர்கள் (999)

4 படுகொலைகள்

LR Jagatheesan
2019-01-10

சுதந்திர இந்தியாவின் முதல் அரசியல் படுகொலை மஹாத்மாகாந்தி. இரண்டாவதாக எமெர்ஜென்ஸி என்கிற பெயரில் நடந்த ஜனநாயகப் படுகொலை. மூன்றாவதாக கொல்லப்பட்டது மதசார்பின்மை (பாபர்மசூதி இடிப்பின் மூலம்). நான்காவதாக சமூகநீதியும் இன்று படுகொலை செய்யப்பட்டது. இந்திய நாடாளுமன்றத்தின் ஏகோபித்த ஆதரவோடு.

முதல் கொலையை ஆர் எஸ் எஸ் தனியாக செய்தது. இரண்டாவது கொலையை தன் பங்குக்கு காங்கிரஸ் செய்தது. கம்யூனிஸ்டுகளின் ஒரு பாதி அதை ஆதரித்தது. மூன்றாவது படுகொலையை செய்தது ஆர் எஸ் எஸ் என்றாலும் காங்கிரஸின் உள்கை அதில் ஒளிந்தே இருந்தது. நான்காவதாக இன்று நடந்து முடிந்திருக்கும் சமூகநீதி படுகொலையை ஆர்எஸ்எஸ்சோடு, காங்கிரஸும், கம்யூனிஸ்டுகளும், ஆனப்பெரிய அம்பேட்காரிய கட்சிகளும் சேர்ந்தே செய்து முடித்திருக்கின்றன.

இந்த நான்கு படுகொலைகளையும் தொடர்ந்து எதிர்த்தது/எதிர்ப்பது திராவிடர் இயக்கமும் அதன் வழியில் வந்த திமுக என்கிற கட்சியும் மட்டுமே. என்ன காரணம்?

ஆரியத்தின் அரசியல் வடிவம் ஆர் எஸ் எஸ். அதற்கான ஒரே எதிர்ப்பு ஒட்டுமொத்த இந்தியாவிலும் திராவிடம் மட்டுமே. அதுவே இங்கே நிறுவப்பட்ட வரலாறு.

ஹிந்து, ஹிந்தி, ஹிந்துஸ்தான் என்பதன் எதிர்ப்பதம் தமிழ், தமிழன், தமிழ்நாடு என்பதாக மட்டுமே இருந்தது. இருக்க முடியும். அதுவே இயல்பு. அதன் ஆனப்பெரிய அரசியல் சமூக எழுச்சியின் வடிவமே இங்கே திராவிட இயக்கமாக ஓங்கி உயர்ந்தது.

அந்த திராவிடத்தை எதிர்த்து ஹிந்தியத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் எந்த தத்துவமும் ஆர்எஸ்எஸ்சின் ஹிந்து, ஹிந்தி, ஹிந்துஸ்தான் என்கிற செயல்திட்டத்துக்கு தெரிந்தோ தெரியாமலோ நேரடியாகவோ மறைமுகமாகவோ எடுபிடியாக மட்டுமே இறுதியில் முடிவார்கள் என்பது இந்திய/தமிழக அரசியலில் மீண்டும் மீண்டும் தொடர்ந்து நிரூபிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. தமிழ்தேசியத்தில் இருந்து தலித் தேசியம் வரை அது தான் நடந்தது. இன்று மீண்டும் ஒருமுறை அது நடந்தேறியிருக்கிறது.

ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பயன் தரும் விதத்தில் சுதந்திர இந்தியாவில் இட ஒதுக்கீட்டுக்காக இந்திய அரசியல் சட்டத்தையே முதன்முதலில் திருத்தியது தமிழ்நாட்டில் மட்டுமே இருக்கும் இயங்கும் திராவிட இயக்கம். பெரியார்/அண்ணா என்கிற இரு பேரரக்கர்கள் அந்த சாதனையை செய்து காட்டினார்கள்.

அதன் நீட்சியாக அவர்கள் இருவருக்குமான ஒற்றை வாரிசான கலைஞர் மூலம் திராவிடர் இயக்கத்தின் சமூகநீதி செயற்திட்டம் மண்டல் கமிஷன் அறிக்கை அமுலாக்கமாக அகில இந்தியாவுக்கும் விரிவடைந்தது.

இன்று தமிழ்நாட்டின் திராவிடர் இயக்கம் வளர்த்தெடுத்த அந்த சமூகநீதியின் அடிப்படையை அசைத்துப்பார்க்கும் வேலைக்கான கால்கோள்விழா நடந்தேறியிருக்கிறது. கம்யூனிஸ்டுகளின் அம்பேட்காரிய கட்சிகளின் அமோக ஆதரவோடு.

நல்லது. வரலாற்றில் இது இதுவும் ஒரு நிகழ்வு. மண்டலை கமண்டலம் கொண்டு எதிர்த்தவர்கள் மோடி மூலம் தம் வன்மத்தை இன்று நிறைவேற்றிக் கொண்டிருக்கலாம். வரலாற்றுப்பகையை தீர்த்துக்கொண்டதாக கொண்டாடி மகிழலாம்.

ஆனால் வரலாறு என்பது உறைநிலையல்ல. தொடர்வது. இயங்குவது. தொடர்ந்து முன்னோக்கி நகர்வது. மண்டல் எதிர்ப்பாளர்களுக்கு இன்று ஒரு மோடி கிடைத்திருப்பதைப்போல சமூக நீதிக்காக பாடுபடுபவர்களுக்கு இன்னொரு வி பி சிங் இந்தியாவில் வராமலா போவார்?

அல்லது பெரியாரின் பேரன்களும் அண்ணாவின் தம்பிகளும் கலைஞரின் உடன்பிறப்புகளும் தமிழ்நாட்டில் உருவாகாமல் போய்விடுவார்களா? வருவார்கள். கண்டிப்பாக வருவார்கள். வரலாறு அவர்களை வரவைக்கும். உருவாக்கும்.

https://www.facebook.com/100005714313513/posts/948813538652448/