Saturday, May 27, 2017

மாட்டிறைச்சியின் நன்மைகள்.

மாட்டிறைச்சியின் நன்மைகள்.
ஆய்வுகளும்
Posted in மருத்துவம்
Facebook Twitter Google+ Share

1. மாட்டிறைச்சியில் உள்ள கொழுப் பில் லினோலிக், பால்மிடோலிக் ஆசிடுகள் உள்ளன. கேன்சர் எதிர்ப்பு மிகுந்த இந்த ஆசிடுகள் வைரஸ்

உள் ளிட்ட கிருமி எதிர்ப்பு சக்திகளையும் உள்ளடக்கியுள்ளது.

2. மாட்டுக்கறியில் அனைத்து விதமான சத்துக்களும் அடர்த்தியாக நிறைந்துள்ளன. அதிக அளவு சத்துக் களை கொடுத்தாலும் குறைந்த அளவு கேலரிகள் தான் அளிக்கிறது. 85 கிராம் மாட்டுக்கறியில் 179 கேலரிகள் தான் உள்ளன. ஆனால் 85 கிராம் மாட்டுக் கறியில் உடலுக்கு தேவையான பத்து சதவிகிதத்திற்கு மேலான உயிர்சத்துகள் நிரம்பியுள்ளன. உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு தேவை யானது மாட்டுக்கறி தான்.

3. கொழுப்பற்ற மாட்டுக்கறியை சாப்பிட்டு வந்தால் இதயக் கோளாறுகள் நீங்கும், இதயம் வலிமை பெறும். ஆங்கிலத்தில் இதனை லீன் பீப் (Lean Beef) என்பார்கள். இதனை 2012இல் அமெரிக்க ஜர்னல் சத்துணவு ஆய்வு மய்யத்தின் (American Journal Clinical Nutrition) ஆய்வறிக்கையில் ஆதாரங்களு டன் நிறுவியுள்ளனர்.

கொழுப்பற்ற மாட்டுக்கறியை தினமும் சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும். மாட்டுக்கறியில் உள்ள ஸ்டீரிக் ஆசிடு நல்ல கொலஸ்ட்ராலை (HDL) அதிகரிக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பாதிக்கும் மேற்பட்ட மாட்டுக் கொழுப் புகளில் இதயத்திற்கு தேவையான ஓலிக் ஆசிடுகள் நிரம்பியுள்ளன.

இதயத்திற்கு வலு சேர்க்கும் சத்துக்கள் மாட்டுக் கறியில் கிடைப்பது போல வேறெந்த உணவிலும் இல்லை. உங்களால் முட்டை அல்லது மீன்களில் இருக்கும் கொழுப்பை அகற்ற முடியாது. ஆனால் மாட்டிறைச்சியில் எளிதாக கொழுப்பை அறுத்து நீக்கலாம். இதை தான் லீன் பீப் (Lean Beef) என்பார்கள். ((LDL என்பது கெட்ட கொலஸ்ட்ரால்.

இரத்த ஓட்டத்தை நாளடைவில் தடை படச் செய்கிறது. என்பது நல்ல கொலஸ்ட்ரால் இரத்தத்தில் படிகங்கள் உருவாவதைத் தடுக்கிறது. இதனுடைய அளவு ரத்தத்தில் கூடுவது மிகவும் நன்மையானதாக கருதப்படுகிறது.)

4. மனித இனம் மாட்டுக்கறியையும் உள்ளடக்கிய சிவப்பு இறைச்சிகளை உண்ணாமல் இருந்திருந்தால் மனித னின் மூளை இப்போதிருக்கும் அளவில் கால் பங்கு தான் இருந்திருக்கும் என அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. பரிணாம வளர்ச்சியில் மனித இனத்தின் மூளைக்கு கிடைத்த புத்திக் கூர்மைக்கு சிவப்பு இறைச்சிகளே பெரும் பங் காற்றியுள்ளன.

5. உலகில் நீண்ட ஆயுள் வாழும் பகுதிகளை பார்த்தால் இறைச்சி உணவே முதன்மையாக இருப்பது தெரியும்.

6. மாடு மற்றும் ஆட்டில் கிடைக்கும் புரத சத்தினால் தசைகள் வலுவாவது மட்டுமல்ல நமக்கு ஹார்மோன்களும் ஆரோக்கியமாக சுரக்கின்றன.

7. தானியங்களில் கிடைக்கும் ஸின்க், மெக்னீசியம், இரும்பு சத்துக்களை விட சிவப்பு இறைச்சிகளில் கிடைக்கும் சத்துக்களை நமது உடல் எளிதாக முழுமையாக உறிஞ்சிக் கொள்கிறது. வசதியற்றவர்களுக்கு ஏற்ற உணவு மாட்டிறைச்சி. குறைந்த அளவு சாப் பிட்டு வந்தாலும் சத்துக் குறைவினை குறைக்கலாம். குழந்தை சத்து குறைவில் முன்னிலையில் இருக்கும் நம் நாட் டிற்கு அவசியமானது மாட்டிறைச்சி.

8. ஆரோக்கியமான நரம்பு மண் டலத்திற்கும், இரத்தத்திற்கும் வைட்டமின் பி12 அவசியம். வைட்டமின் பி12 அசைவ உணவில் மட்டுமே உள்ளது. அதிலும் மாட்டுக்கறியில் வைட்டமின் பி12 37% நிரம்பியுள்ளது. மேலும் மனநோய்களை தவிர்க்கவும், கிழட்டுத் தன்மை மற்றும் மலட்டுத் தன்மையை குறைப்பதிற்கும் வைட்டமின் பி12 அவசியம். வைட்டமின் பி12 சிவப்பு இறைச்சிகளில் நிரம்பியுள்ளது.

நவீன உழைப்பு சுரண்டலில் அழுத்தம் நிறைந்த பணி சூழலில் வேலை செய்யும் கார்ப்பரேட் தொழிலாளர்களுக்கு அவசியமானது மாட்டிறைச்சி

9. அமெரிக்க விவசாயத் துறையின் 2002 ஆய்வறிக்கையின்படி, 1.1 கிலோ டுயுனா மீனில் கிடைக்கும் ஸின்க் சத்து 100 கிராம் மாட்டிறைச்சியில் கிடைக் கிறது. 750 கிராம் கோழியின் தோலற்ற நெஞ்சுக் கறியில் கிடைக்கும் வைட் டமின் பி12 100 கிராம் மாட்டிறைச்சி யில் கிடைக்கிறது. 300 கிராம் கோழி யின் தோலற்ற நெஞ்சுக் கறியில் கிடைக்கும் பி விட்டமினான ரைபோப்ஃலேவின் 100 கிராம் மாட்டிறைச்சியில் கிடைக்கிறது.

மூன்று கட்டு பாலக்(தரைப் பசலி) கீரையில் கிடைக்கும் இரும்புச் சத்து 100 கிராம் மாட்டிறைச்சியில் கிடைக்கிறது. மாட்டிறைச்சியில் சத்துக்கள் அடர்த்தியாக உள்ளன. 450 கிராம் டுயுனா மீனில் கிடைக்கும் பி விட்ட மினான ரைபோப்ஃலேவின் 100 கிராம் மாட்டிறைச்சியில் கிடைக்கிறது. ஆறரை கட்டு பாலக் (தரைப் பசலி) கீரை யில் கிடைக்கும் இரும்புச் சத்து 100 கிராம் மாட்டிறைச்சியில் கிடைக்கிறது.

மனிதஇனம் தொன்று தொட்டு மாட்டிறைச்சியை சாப்பிட்டு வருவ தால் பரிணாம வளர்ச்சிக்கு உதவியது என அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் தான் நமது உடலும் மாட்டுக்கறியின் சத்துக்களை எளிதாக ஏற்று கொள்கிறது. ‘அசைவ உணவு உடம்பிற்கு நல்லது மேலும் வலி மையான இந்தியாவிற்கு அசைவ உணவு அவசியம்’ என்றார் விவேகானந்தர். அமெரிக்கா சென்ற போது மாட்டுக் கறியை கேட்டு வாங்கி சாப்பிட்டுள் ளார் அசைவப் பிரியரான விவேகானந்தர்.

இந்தியாவில் மாட்டிறைச்சி

மாட்டிறைச்சி ஏற்றுமதியின் மூலம் இந்தியாவிற்கு ரூ.3500 கோடிக்கும் அதிகமான தொகை வருமானமாகக் கிடைக்கிறது.உலக அளவில் மிக அதிகம்பேர் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் மாட்டிறைச்சியை விரும்பி உண்ணுகிறார்கள். இந்தியா வின் தோல் தொழில் உலக அளவில் பிரசித்திபெற்றதாகும். 2.5 மில்லியன் தொழிலாளர்கள் இந்தத் துறையில் வேலை பார்க்கிறார்கள்.

இதில் 30 சதவீதம் பெண்களாகும். இந்திய மக்கள் தொகையில் 60 சதவீதத்தினர் மாமிசம் உண்பவர்களாவார்கள். மாமிசம் உண்ணாதவர்கள் 31 சதவீதத்தினர். மீதம் 9 சதவீதத்தினர் கோழி முட்டை உண்பவர்களாவார்கள்.

அய்க்கிய நாடுகள் உணவு தானியக் கழகம் நடத்திய ஆய்வில் அதிகம்பேர் மாட்டிறைச்சி உண்பவர் களே என்று அறிவித்துள்ளது. (இந்த ஆய்வில் கோழி இறைச்சி சேர்க்கப்பட வில்லை).ஆண்டிற்கு 24 லட்சம் டன் மாட்டிறைச்சி நுகரப்படுகிறது.

இந்தியாவில் மாமிச உணவு உண் பவர்களில் அதிகம் பேர் விரும்புவது மாட்டிறைச்சியையே என்பது இதன் மூலம் தெளிவாகும்.வயதான, உற்பத்தி சக்தியை இழந்த கால்நடைகள் விவ சாயிகளைப் பொறுத்தவரையில் பெரும் பாராமாகும்.இவற்றை இறைச்சிக்காக விற்பதற்கு பசுவதைத் தடைச் சட் டத்தை அமல்படுத்தியுள்ள மாநிலங் கள் அனுமதிப்பதில்லை.

அதனால் கால்நடைகளை வளர்ப்பவர்கள் அவற் றைத் தெருவில் விட்டுவிடுகிறார்கள். ஹரியானா முதலான மாநிலங்களில் தெருவில் அலைந்து திரியும் கால் நடைகள் உண்டாக்கும் பிரச்சினைகள் கொஞ்ச நஞ்சமல்ல. நாட்டின் ஆண் டுக்கு மக்கள் தொகை உயர்வு1.58 சதவீதமாகும்.

ஆனால் கால்நடைகளில் இது 4.48 சதவீதமாகும். பசுவதைத் தடை இந்த எண்ணிக்கையில் எவ்வித பின் விளைவுகளை உண்டாக்கும் என்பது நாம் உணரவேண்டிய ஒன்றாகும். கால்நடை வளர்ப்போரைப் பொறுத்த வரையில் ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து வளர்க்கும் பசு கறவை வற்றி உற்பத்தித்திறனை இழந்த பிறகு அதை விற்பது என்பது எதார்த்தம்.

அவ்வாறு விற்பதுவும் பசுவின் மூலம் விவசாயிக்குக் கிடைக்கும் ஒரு வருமானம் ஆகும்.இவை எல்லாவற்றை யும் விட மனிதன், சிங்கம், புலி, ஆடு, பன்றி, கோழி போன்று மாடுகளும் ஒரு உயிரினம்தான்.விலங்குதான். மாடுகள் தரும் பலன் அதிகம்தான் .ஆனால் அதை ஒரு உணவாக கொள் வோரை இதை சாப்பிடாதே,

அதை சாப்பிடாதே என்று தடை போட அவர்கள் அளித்த வாக்குகளையே பயன்படுத்துவது சரியாகுமா? பசுவதைத் தடைச் சட்டம் என்பது மக்களின் உணவுப் பழக்கத்தின் மீதான அத்துமீற லாகும். அது தனி மனித சுதந்திரத்தைக் கசாப்பு செய்வதாகும்.

உலக அளவில் மாட்டிறைச்சியை உணவிற்காக பயன்படுத்தும் 10 நாடுகள்

1. அமெரிக்க அய்க்கிய நாடுகள் 11,172,000

2. பிரேசில் 7,925,000

3. அய்ரோப்பிய கூட்டமைப்பு 7,720,000

4. சீனா 6,263,000

5. அர்ஜண்டினா 2,700,000

6. ரஷ்யா 2,388,000

7. இந்தியா 2,125,000

8. மெக்சிகோ 1,875,000

9. பாகிஸ்தான் 1,626,000

10. ஜப்பான் 1,285,000

குறிப்புகள்

உலகில் 63 விழுக்காடு மக்கள் தினசரி 2 கிலோ மாட்டிறைச்சியை உண்கின்றனர்.

1. பிரேசில், 2. இந்தியா 3. அர்ஜண் டினா 4. சீனா 5. அமெரிக்கா போன் றவை மாட்டிறைச்சி ஏற்றுமதி யில் இடம் பெற்றுள்ளன.

பன்றி மற்றும் கோழி இறைச்சியை விட மிக விரைவில் உடலில் சேர்ந்து கொள்ளும் புரதச்சத்து மாட்டி றைச்சியில் தான் உள்ளது.

"சாதீ வெறியர்கள்" சந்தேகமேயில்லாமல் பள்ளர், பறையர்தான்

" நமது சமத்துவ சிந்தனை சாக்கடைக்கு நிகரானது"

*என்னிடம் பலபேர் கேட்கும் அடிக்கடி கேட்கும் ஒரு கேள்வி " நீங்கள் பார்த்ததலியே யாருக்கு " சாதீ வெறி" அதிகம் என நினைக்கிறீர்கள்?,," என்பதுதான்..

அநேகமாக இந்த கேள்வியை கேட்கும்  ஒவ்வொருவரும் தங்கள் மனதில்  குறைந்தது  ஒரு குறிப்பிட்ட சாதியையாயவது தங்கள் எதிரிகளாக பாவித்து அவர்களை நான் சாதீவெறி பிடித்தவர்கள் என நான் சொல்வேன் என மிக ஆவலோடு எதிர்ப்பார்ப்பார்கள்...ஆனால் என்னுடைய பதிலில் அவர்கள் மிகுந்த ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைகிறார்கள்...

* எல்லா இடத்திலும் நான் சொல்லும் ஒரே பதில் " நான் தமிழகம் முழுவதும் பயணம் செய்கிறேன்..ஒவ்வொரு சாதியினரின் நடவடிக்கையும் சாதியை பொருத்தமட்டில் எப்படி இருக்கும் என நேரடியாக அனுபவ பட்டியிருக்கிறேன்..நான் பார்த்த அளவில் மிக பெரும் " சாதீ வெறியர்கள்"   சந்தேகமேயில்லாமல் பள்ளர், பறையர்தான்""   என்பதுதான் அது..இதை சொன்னவுடன் அவர்கள் மிகுந்த அதிர்ச்சி அடையும் அதேவேளையில் மிகவும் ஆச்சரியபடதக்க வகையில் யாரும் எதிர்த்து விவாதம் செய்ததில்லை..மாறாக மவுனமாகிவிடுகிறார்கள்..இந்த மவுனத்தில்தான் நண்பர்களே பல கசப்பான உண்மைகள் ஒழிந்திருக்கின்றன....

இதனை விளக்கமாக நான் பதிவு செய்ய விரும்புகிறைன்..

* முதலில் இந்த பள்ளர், பறையர் சாதி வெறியர்கள் என்பது குறித்து என்ன புரிதலை வைத்திருக்கிறார்கள் என்பதை பார்க்கலாம்..

*பள்ளரை பொறுத்தவரை தேவர் சமூகத்தினர் சாதி வெறியர்கள் காரணம் பள்ளர்கள் பெரும்பான்யையாக வாழும் தென்தமிழ்நாட்டில்தான் தேவர் சமூகத்தினர் வாழ்கின்றனர்..அதேபோல பறையர்களை பொறுத்தளவில் வன்னியர்கள் வாழும் பகுதியை ஒட்டி வாழுகிறார்கள்..கலந்து பழகும் சூழ்நிலை இயல்பாகவே உள்ள நிலையில் சாதீய வேறுபாடு காரணமாக பகைஉணர்வுடன் வாழ்கின்றனர்..இந்த சாதீய வேறு பாடு வீடுகளை சேதபடுத்துதல்..தாக்குதல்..கொலை உள்ளிட்ட எண்ணற்ற கொடுமைகளை நேரடியாக பள்ளரும்..பறையரும் அனுபவிக்கின்றனர்... இது உண்மையே ஆனால்...

* வழக்கமாக கொடிய தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகுந்த இன்னல்களுக்கு உள்ளாகிய ஒருவன்..அந்த நோயின் முழு கொடுரத்தை உணர்ந்த ஒருவன் மேல் மனிதத்தன்மை உள்ள அனைவருக்கும் இரக்கம் வரும்..ஆனால் அவனே தனக்கு தாளமுடியாத வேதனையை தரும் தொற்றுநோயை  தனது சகோதரர்களுக்கும் பரப்பி அவர்கள் வேதனை படுவதை பார்த்து மகிழ்ச்சியும்..தற்பெருமையும்  அடைவான் என்றால் அவன் எத்தகைய வெறிபிடித்தவனாக இருக்க வேண்டும்..

*அதேபோலத்தான் பள்ளரும் பறையரும்..எந்த சாதீய கொடுமைகளால் தங்கள் உரிமை..உடமை..உயிரை பறிகொடுக்கிறார்களோ..எந்த சாதீய கோடுமைகளை எதிர்த்து போராட்டங்களை நடத்துகிறார்களோ அதே சாதீய கொடுமைகளை " சாதீ வெறிகொண்டு" அருந்ததியர்கள் மீதும்..வண்ணார்கள் மீதும் சிறிதும் வெட்கமின்றி திணிக்கிறார்கள்..

* இவர்கள் எந்த அளவிற்கு மனிதநேயமற்றவர்களாக இருக்கிறார்கள் என்றால் " இளவரசனுக்கும்..சங்கருக்கும் " நடந்ததற்க்காக வெகுண்டு கிளம்பும் இவர்கள்தான் அதே இளவரசனையும்..சங்கரையும் அருந்ததியர்கள் மத்தியிலும்..வண்ணார்கள் மத்தியிலும் உருவாக்குகிறார்கள். பிற சாதியினரால் பாதிக்கப்பட்டால் பள்ளயருக்கும்..பறையருக்கும் வன்கொடுமை தடுப்புசட்ட பாதுகாப்பு கிடைக்கிறது..ஆனால் இதே பள்ளரும்..பறையரும் சாதீ வெறிகொண்டு அருந்ததியர்களுக்கும்..வண்ணார்களுக்கும் இழைக்கும் சாதீவெறி கொடுமைகளுக்கு எதிராக எந்த வித பாதுகாப்பும் கிடையாது...

* எந்த மனிதனும் தன்னுடைய கழிவுகளை திரும்பி பார்க்கசகூட விரும்புவதில்லை ஆனால் அதே மலத்தை ஒரு சமூகத்தையே சுமக்கவைத்திருக்கிறார்கள்.. அரசும் அதையே செய்கிறது ..அருந்ததியர் உள் ஒதுக்கீடூற்கு எதிராக " உரிமை பறிபோனது..உரிமைபறிபோனது" என ஒப்பாரி வைக்கும் பள்ளரும் பறையரும்...அரசாங்கமே அருந்ததியர்களுக்கு செய்யும் இந்த மனிததன்மைக்கு எதிராக வாயையை மட்டுமல்ல எல்லாவற்றையும் மூடிக்கொள்கிறார்கள்...இதுதான் இவர்களது வெட்கங்கெட்ட சமூகநீதி...

*இதில் பள்ளர்..பறையர் அரசு ஊழியர்கள் செய்யும் " ஆச்சார சேட்டைகள்" மலத்தை விட கீழானவை..

*சக மனிதனை மிக மிக கேவலாமாக திட்ட வேண்டும் என்றாலும் கூட பள்ளரும் பறையரும் மிக  சாராளமாக " ஏய் சக்கிலியபயலே..ஏய் வண்ணாபயலே"என திட்டுகிறார்கள்..

*பள்ளரும்..பறையரும்   அருந்ததியர்கள் மீதும் வண்ணார்கள் மீதும் வவன்முறையாக திணிக்கும் தீண்டாமை வக்கிரங்கள் சாதாரண மனிதனால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாதவைகளாக  உள்ளன..

இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்..

இதில் வேடிக்கை என்னவென்றால் சாதியகட்டமைப்பில் பள்ளரும்சரி..பறையரும் சரி "செருப்புக்கு  சமமானவர்களாக" த்தான் நடத்தபடுகிறார்கள்..இந்த செருப்ப்களுக்குள் நான் ரப்பர் செருப்பு..நான் தோல் செருப்பு..நான்தான் உயர்ந்தவன்..நான்தான்தான் உயர்ந்தவன் என சண்டைவேறு.. ரப்பர் செருப்பு என்பதற்காக காலாலும்..தோல் செருப்பு என்பததற்க்காக அதை தலையிலும் தூக்கி சுமப்பதில்லை..

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் சாதி ஒவ்வொரு மனிதனையும் மனநோயாளியாக்கி வைத்துள்ளது என்றார்..பள்ளரும்..பறையரும் அந்த மனநோய் முற்றியவர்களாக உள்ளனர்
... இதை ஒரு அருந்ததியரோ ..வண்ணாரோ சொன்னால் அப்படி இல்லை..அவதாறு என மறுக்கலாம்..ஆனால் நான் பள்ளர்..நான் நிஷத்தை சொல்கிறேன்..

இந்த மனநோயில் இருந்து மீண்டு. " சமத்துவத்தை" ஏற்றுக்கொள்ளாதவரை பள்ளரும் பறையரும் பேசும்  சமத்துவம் சாக்கடைக்கு நிகரானது..

முத்தூராம்  7904633683

ஆட்சிக்கட்டிலை பிடிக்க நாங்கள் கடந்து வந்த பாதை

முதல்வர் பதவிக்கு ஆசைப்படும் திடீர் போராளிகள் இதை படியுங்கள்...
ஆட்சிக்கட்டிலை பிடிக்க நாங்கள் கடந்து வந்த பாதை 👇👇👇

கட்சி ஆரம்பித்ததுமே இங்கே பலருக்கு முதலமைச்சர் கனவு வந்துவிடுகிறது. இன்றும் சிலருக்கு முதலமைச்சர் கனவு வந்த பிறகுதான் கட்சியே தொடங்க படுகிறது. மக்களை படித்தோம், மக்களுக்காக போராடினோம், மக்களுக்காக வாதாடினோம் என்பதே இல்லாமல் போய்விட்டது இன்று. ஆனால், திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்டதற்கும் ஆட்சியை பிடித்ததற்கும் இடைப்பட்ட 18 ஆண்டுகள் என்பது ஒவ்வொரு அரசியல்வாதியும் கற்றுக்கொள்ள வேண்டிய பாலபாடம். 18 ஆண்டு காலமும் பாரத யுத்தம் போல் நடத்தியதால் தான் அரியணையில் அண்ணாவால் உட்கார முடிந்தது.

➡️ 1949ம் ஆண்டு செப்டம்பர் 17ம் நாள் திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பபட்டது. அதற்கு மறுநாள் திருச்சி நீதிமன்றத்தில் அண்ணாவுக்கு ஆறுமாதம் சிறை என்று தீர்ப்பு வந்தது. ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் அவரால் எழுதப்பட்டு 15 ஆயிரம் பிரதிகள் விற்பனையாகிவிட்ட #ஆரிய_மாயை என்ற புகழ் பெற்ற புத்தகம் வகுப்பு வேறுபாட்டை விதைப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு தடை செய்யப்பட்டது. புத்தகத்தை எழுதிய அண்ணாவுக்கும் அதனை வெளியிட்ட திருச்சி திராவிட பண்ணை #கண்ணப்பனுக்கும் 500 ருபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதனை கட்ட இவர்கள் இருவரும் மறுத்ததால் நான்கு மாதம் சிறை தணடனையை ஏற்றார்கள்.

➡️ இதை தொடர்ந்து திமுக கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டது, நாடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தடைகளை பற்றி கவலைப்படாமல் கூட்டங்கள் நடத்துங்கள் என்று திமுக தலைமை அறிவித்தது.

➡️ குன்றத்தூரில் ஒரு கூட்டம், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றாலும் மீறி பேசுவதற்கு சென்றார் என்.வி.நடராசன்.
குன்றத்தூருகுள் அவர் வருவதற்கு முன்னால் கைது செய்யப்பட்டார். கூட்டம் கேட்க காத்திருந்தவர்களை கலைத்தது காவல்துறை. கலையவில்லை அவர்கள், துப்பாக்கியை எடுத்து ஏழு ரவுண்ட் சுட்டார்கள், இரண்டு பேர் படுகாயம் அடைந்தார்கள். திமுக தொடக்கத்திற்கான முதல் இரத்தம் குன்றத்தூரில் தான் சிந்தப்பட்டது.

➡️ அண்ணா எழுதிய "இலட்சிய வரலாறு" ஆசைதம்பி தீட்டிய "காந்தியார் சாந்தியடைய" புலவர் செல்வராஜ் எழுதிய "கருஞ்சட்டை ஒழியவேண்டுமா? " உள்ளிட்ட புத்தகங்கள் காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்டது. இந்த தடையை கண்டித்து மத்திய காங்கிரஸ் அமைச்சர்கள் அனைவருக்கும் கருப்பு கொடி காட்டும் போராட்டத்தை அறிவித்தார் அண்ணா.

➡️ பிரிவினை கேட்டவர்களை நான்சென்ஸ்கள் என்றும், காட்டுமிராண்டிகள் என்றும், தனி நாடு கேட்கும் ஈ.வே.ரா நாட்டை விட்டு வெளியேறட்டும் என்று பிரதமர் #நேரு சொன்னதை கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தை நடத்தியது திமுக.

➡️டால்மியாபுரம் என்று மாற்றப்பட்ட ஊரின் பெயரை பழைய கல்லக்குடி என்றே மாற்ற வேண்டும் என்று திமுக கேட்டது.

➡️ ராஜாஜி கொண்டு வந்த "குலக்கல்வி" திட்டத்தையும் எதிர்த்தது. இந்த மூன்று போராட்டங்கள் தான் திராவிட முன்னேற்ற கழகத்தை மக்கள் முன் கொண்டு சேர்த்தது. இதை மும்முனை போராட்டம் என்றார் அண்ணா.

➡️ திமுக வின் அன்றைய தலைமை நிலையமான அறிவகத்துக்கே வந்து அண்ணா, நெடுஞ்செழியன், ஈவேகி சம்பத், மதியழகன், என்.வி.நடராசன் ஆகிய ஐந்து பேரையும் கைது செய்து அழைத்து போனார் அன்றைய சென்னையின் துணை கமிஷனர் அருள். அது ராஜாஜியின் ஆட்சி.

➡️ தியாகராய நகரில் பசுல்லா சாலையில் இருத்த முதலமைச்சர் ராஜாஜி வீட்டின் முன்னால் தினமும் 30-40 திமுக தொண்டர்கள் மறியல் செய்து கைதானார்கள். இப்படி மறியல் செய்வதற்காகவே வெளியூரில் இருந்தும் ஏராளமானவர்கள் வந்தார்கள்.

➡️ டால்மியாபுரம் ரயில் தண்டவாளத்தில் கலைஞர் கருணாநிதி, முல்லை சக்தி, கஸ்தூரி, குமரவேல், குழந்தைவேல், ஆகிய ஐந்து பேர் தலைவைத்து படுத்தார்கள். காவலர்களின் சமாதானத்தை கருணாநிதி ஏற்கவில்லை. உங்கள் முடிவுதான் என்ன என்று கேட்ட காவலர்களிடம் "முடிவைத்தான் எதிர்பார்க்கிறோம்" என்று கலைஞர் சொல்ல இறுதியில் அவர் கைது செய்யப்பட்டார்.

➡️இவர்கள் கைதானதும் காரைக்குடி இராமசுப்பையா தலைமையில் ஒரு அணியும், அவர்கள் கைதான் பிறகு கவிஞர் கண்ணதாசன் தலைமையில் இன்னொரு அணியும் மறியல் செய்தது. ஆத்திரம் கொண்ட போலீஸ் துப்பாக்கி சூடு நடத்த 10 பேர் குண்டுக்காயம் பட்டு இரண்டு பேர் இறந்தார்கள். தொடர்ந்து தூத்துக்குடியிலும் துப்பாக்கி சூடு, நாடு முழுக்கவே திமுகவினர் ரயிலை மறித்தார்கள். திமுகவுக்கு இனி அறிமுகம் தேவையில்லை என்று அந்த ரயில் மறியல் போராட்டங்கள் தான் உணர்த்தியது.

➡️ அண்ணாவோடு கைதான 5 பேருக்கும் 500 ருபாய் அபராதம் விதித்த சென்னை மாஜிஸ்டிரேட் M .A வெங்கட்ரமண நாயுடு, எதிரிகளுக்கு ஏராளமான ஆதரவாளர்கள் உள்ளனர் என்பதில் சந்தேகமில்லை, பொதுமக்களில் பெரும் பகுதியினர் அவர்களிடம் பெருமதிப்பு கொண்டுள்ளனர் என்று தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
கட்சி தொடங்கிய 4 வது ஆண்டிலேயே நீதிமன்ற தீர்ப்பில் செல்வாக்கான கட்சி என்று திமுக பெயரெடுக்க அவர்கள் நடத்திய போராட்டமே காரணமானது.

➡️1957 ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்களின் 16லட்சம் பேரின் நம்பிக்கையை பெற்றது திமுக.
➡️ அண்ணா , கருனாநிதி,அன்பழகன், சத்தியவானி முத்து, ஏ.வி.பி ஆசைத்தம்பி, கடம்பூர் அண்ணாமலை, ஆனந்தன், இருசப்பன் , ஏ.கோவிந்த சாமி, பஉ சண்முகம், பி எஸ் சந்தானம், எம்.பி.சாரதி, எம் பி சுப்ரமணியம், எம்.செல்வராஜ், ஜி.நடராஜன் ஆகிய 15 பேர் சட்டமன்றத்திற்குள் போனார்கள்.

➡️ தமிழ்நாடு சட்டமன்றத்திற்குள் திமுக முதன் முதலாக உள்ளே சென்று உட்கார்ந்த நாள் 1957 ஏப்ரல் 29. நாங்கள் இந்த சபைக்கு வந்தது என்றைக்கும் எதிர் அங்கத்தினர்களாகவே இருப்பதற்கு நுழையவில்லை. இன்றைக்கு இல்லாவிட்டாலும் என்றைக்காவது ஒருநாள் ஆட்சிப்பொறுப்பை ஏற்கத்தான் போகிறோம் என்று 1957 ஜூலை 4 ம் நாள் நிதி நிலை அறிக்கை மீது நடந்த விவாதத்தில் அண்ணா பேசினார்.!

➡️ சென்னை வரும் பிரதமர் நேருவிற்கு கருப்பு கொடி காட்டப்படும் என்று அறிவித்த அண்ணா அவர் வருவதற்கு முன்னதாகவே கைது செய்யப்பட்டார். கருனாநிதியும் கைதானார்.

➡️ ஆனால் சென்னை விமான நிலையத்திற்கு பிரதமர் வந்து இறங்கிய போது கருப்பு கொடி காட்டப்பட்டது.
சி.பி.சிற்றரசுவும் நாஞ்சில் மனோகரனும், நாகூர் ஹனீபாவும் தென்னரசுவும் இதனை சாதித்தார்கள்.

➡️ சென்னையில் பல்வேறு இடங்களில் போலீஸ் தடியடி நடத்தியது.
சிந்தாதிரி பேட்டையில் நடந்த துப்பாக்கி சூட்டில் தி மொய்தீன் பிச்சை , கோவிந்த ராவ் ஆகிய இருவர் கொல்லப்பட்டார்கள்.

➡️ 1960 களின் தொடக்கத்தில் இந்திதிணிப்பு எதிர்ப்பு போரை கையில் எடுத்தது திமுக.
ஈ.வி.கே.சம்பத் தலைமையில் அமைக்கப்பட்ட போராட்டக்குழுவில் கருனாநிதி , அன்பழகன், மதியழகன், மதுரை முத்து, அன்பில் தர்மலிங்கம், எஸ்.ஏ.ராஜ மாணிக்கம், ஏ கோவிந்தசாமி, ப.உ சண்முகம், கண்ணதாசன் ஆகியோர் இடம் பெற்றார்கள்.

➡️ இந்தியை ஆட்சி மொழி ஆக்க வழி வகை செய்யும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 17 வது பிரிவை கொளுத்தும் போராட்டத்தை திமுக நடத்தியது.

➡️இதை தொடர்ந்து நடந்த விலைவாசி உயர்வு எதிர்ப்பு போராட்டம் திமுக வை தவிர்க்க இயலாத சக்தியாக மாற்றியது. அன்றைய காங்கிரஸ் அரசு போலீஸை வைத்து மிக கடுமையாக ஒடுக்கியது. அமைதியாக மறியல் செய்தவர்களையும் அடித்து நொறுக்கி விரட்டினார்கள்.
வலுக்கட்டாயமாக திமுக கொடிகள் பறிக்கப்பட்டன.கூட்டம் கூட்டமாக கைது செய்து கொண்டு போய் அடைத்தார்கள்.

➡️ 2000 பேர் மட்டுமே இருக்க முடிந்த சென்னை மத்திய சிறையில் இரு மடங்கி்ற்கு அதிகமானவர்கள் அடைக்கப்பட்டனர்.
சிறைகளுக்குள் அடி விழுந்தது..! தமிழ்நாடு முழுவதும் இந்த போராட்டத்தில் மட்டும் 18 ஆயிரம் திமுக தொண்டர்கள் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார்கள்..
நாடு முழுக்க எல்லா நீதி மன்றங்களிலும் இந்த வழக்கு நடந்தது.

➡️ சிறையில் சென்னையை சேர்ந்த கோசு மணியும் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த பொற்செழியனும் இறந்து போனார்கள்.

➡️ மீண்டும் இந்தி எதிர்ப்பு போர் தீக்குளித்த கீழப்பழுவூர் சின்னசாமியும் கோடம் பாக்கம் சிவ லிங்கமும் சத்திய மங்கலம் முத்துவும் திமுகவினர்தான். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுள் பெரம்பாலானவர்கள் திமுக மாணவர்கள்தான்.

➡️ போராட்டத்தை தூண்டியதாக கலைஞர் கருனாநிதியை முதலமைச்சர் பக்தவக்சலம் கைது செய்தார். மேலும் பாதுகாப்பு சட்டப்படி தமிழகத்தில் கைதான முதலாமவரும் கருனாநிதிதான்.

அன்றைய மாணவர்கள் அரசியல் தலைவர்களாக பரிணாமம் பெற ஆரம்பித்தார்கள்.

➡️திமுக.வே காங்கிரசுக்கு மாற்றுசக்தி என மக்களே நினைக்க தொடங்கிய போது,
காங்கிரஸ் திருந்தவே திருந்தாது என்று மக்கள் வெறுக்க துவங்கிய போது 1967 தேர்தல் வந்தது.

➡️ புதர் மண்டிக்கிடந்த அந்த விருகம் பாக்கத்தில் திமுக.வின் தேர்தல் மாநாட்டு இடத்தை பார்க்க வந்த கருணாநிதி பதினைந்தே நாளில் அதனை அரங்கமாக  மாற்றினார்.

➡️ காடாக இருந்த இந்த இடத்தை கருநாகங்கள் மலிந்த இந்த இடத்தை ,தொட்டால் கொட்டும் கருந்தேள்கள் குடியிருந்த இந்த இடத்தை இப்படிப்பட்ட எழில் மிக்க பூமியாக மாற்றினோம்..
காடாக இருக்கும் இந்த நாட்டை நாடாக மாற்றியமைக்க மாட்டோமா .? என்று கேட்டார் கருணாநிதி..

அண்ணா அயராத உழைப்பு அவரது நம்பிக்கை 10 ஆண்டுகள் கழித்து நிறைவேறியது. திமுக ஆட்சி பொருப்பேற்றது. அப்படி நிறைவேற காரணம் அவர் நடத்திய போராட்டங்கள் மட்டுமே.

இது தான் திமுக... போராடுவது எங்களின் இரத்தத்தில் கலந்தது.. மண்டியிடுவதை விட மாண்டுவிடுவதே மேல் என்று நினைப்பவன் தான் திமுக..