Saturday, March 16, 2019

கையறு நிலையில் தவித்து மீண்டவளின் பாதத்தில் இந்த சொற்களை வைக்கிறேன் - கார்ல்

கார்ல் மார்க்ஸ் கணபதி
2019-03-12

ஒரு பண்பட்ட நாகரீக சமூகம், மிக மோசமான குற்றங்களை எவ்வாறு எதிர்கொள்ளும் என்பதற்கு உலகளாவிய உதாரணங்கள் உண்டு. இன்று அவையெல்லாம் நம் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கின்றன. கொஞ்சம் திறந்த மனதோடு நாம் புரிந்துகொள்ள, எதிர்வினையாற்ற முயலவேண்டும். மேலும் எல்லாவகையிலும் நாம் இன்று சமூக ஊடகங்களோடு பிணைக்கப்பட்டிருக்கிறோம். இத்தகைய குற்றங்களின் தோற்றுவாயாகவும் சமூக ஊடகங்கள் இருக்கிறபோது, அதில் செயல்படுகிறவர்களின் பொறுப்பும் கூடுகிறது.

எனது சில புரிதல்கள் நண்பர்களது பார்வைக்கு!

ஒரு சக உயிராக, (ஆண் அல்லது பெண் எனும் தன்னிலையை சில வினாடிகள் தள்ளிவைத்துவிட்டு) நிகழ்ந்திருக்கும் துயரத்தை நமது இதயத்திற்குள் அனுமதிப்போம். அது அங்கேயே சற்று நேரம் இருக்க விடுவோம். அது வினைபடட்டும். என்ன செய்யவேண்டும் என்பது நமக்குள் செரிக்கட்டும். பொங்கி வரும் வார்த்தைகளை சற்றாவது அடக்கிக்கொள்வோம்.

பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் எந்த நிபந்தனையும் அற்று நிற்போம். அவள் அந்தக் காரில் ஏறியது, ஒரு சமூகமாக நானும் நீங்களும் அவளுக்குப் பாதுகாப்பாக இருப்போம் என்ற நம்பிக்கையில்தான். நமது அறிவுரைகள் எதுவும் இப்போது அவளுக்குத் தேவையில்லை. நமது அறிவின் எல்லை நெருங்க முடியாத, நமது அறிவுரைக்குப் பொருளற்ற வன்முறையை அவள் எதிர்கொண்டிருக்கிறாள். நம் இதயத்தின் துடிப்பு அவளுடன் கலந்துவிட நாம் அவளைத் தழுவிக்கொள்வோம். அவளது கண்ணீரை நமது கண்ணீரால் மட்டுமே துடைக்க முடியும்.

நமக்கு கோபம் இருக்கிறது. ஆத்திரம் வருகிறது. தடுமாறுகிறோம். நம்மிடம் - பொது சமூகமாக – ஒரு ஊடகம் இருக்கிறது. அங்கு நமது கருத்தைப் பதிவு செய்கிறோம். அதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது. நமக்கு இந்த விவகாரத்தில் கருத்து சொல்ல தகுதி இருக்கிறதா என்பது முதலில். நமது பார்வைக்கு வரும் செய்தியில், உண்மையாவது இருக்கிறதா என்பதை ஆராயும் பொறுமை நமக்கு வேண்டும் எனும் சுயபரிசீலனை. அதுவே முக்கியம்.

உங்களுக்கு ஒரு அரசியல் பார்வை இருக்கிறது. தவறில்லை. அதே சமயம் கட்சி சார்ந்த அரசியல் பார்வைக்கும், பொதுவான அரசியல் பார்வைக்கும் வேறுபாடு இருக்கிறது. பிடிபட்ட குற்றவாளிகளில், எனது அபிமானக் கட்சியின் ஆட்கள் யாராவது இருக்கிறார்களா என்று மனது வேகமாக ஆராய்ந்தால், மிகவும் நோய்மையான மனநிலையில் இருக்கிறீர்கள் என்று பொருள். கருத்துதிர்க்கும் தகுதியை நீங்கள் இழக்கிறீர்கள். அமைதியாக இருங்கள்.

பீதியூட்டாதீர்கள். இனி பெண் சமூகம் ஆண்களை நம்பவே முடியாது என்று கோடு கிழிக்காதீர்கள். அவ்வாறு பொதுமைப்படுத்தும்போது நீங்கள் குற்றாவளிகளுக்கே உதவுகிறீர்கள். பாதிக்கப்பட்டவளிடம், உனக்கு யாருமே இல்லை என்று சொல்வது எந்த வகையில் பொருத்தமானது? ஒரு குற்றத்தை அதன் பிரத்யேக தன்மையை ஒட்டி, பொதுவான குற்றங்களில் இருந்து பிரித்து புரிந்துகொள்ள முயலுங்கள். உங்கள் வீட்டு முற்றத்தில், பால் பேதம் இல்லாமல் இந்த விவகாரம் குறித்து விவாதித்து விட்டு, மாற்றி மாற்றி தோள்களில் சாய்ந்து ஆறுதல் தேடிவிட்டு, சமூக ஊடகத்திற்கு வந்தவுடன் மிகவும் போலியாக ஆண் X பெண் எனும் கணக்கீடாக மாற்றி எழுதாதீர்கள். முதலில் உங்களுக்கு நேர்மையாக இருங்கள்.
உங்களது கட்சி அபிமானத்தை சற்று ஓரமாக வையுங்கள். இதன் பொருள் உங்களது அரசியல் பார்வையைக் கைவிட வேண்டும் என்பதல்ல. ஒரு துயரம், அற்ப அரசியல் யுக்தியாக மாறும் அபத்தத்திற்குத் துணை போகாதீர்கள். ஒரு துயரத்திற்குக் கண்ணீர் சிந்துவதாலேயே நமது மூடத்தனத்திற்கு நியாயம் வந்துவிடாது.

யார் சொல்வதை நம்புவது என்பதில் கவனமாக இருங்கள். அந்தரங்கமாக சில ஆளுமைகளின் மீது மரியாதை கொள்ளுங்கள். அவர்களது சொற்களைப் பின்தொடருங்கள். உணர்வுப்பூர்வமான நேரங்களில், உங்களது குரலை அப்படியே வெளிப்படுத்தாமல், கொஞ்ச நேரம் காத்திருக்க முயலுங்கள். உங்களுக்காக அவர்கள் பேசுவதை மனப்பூர்வமாக அனுமதியுங்கள். அதில் பிழை ஒன்றும் இல்லை. கும்பலுடன் இருப்பதை விட தனித்திருப்பது சில நேரங்களில் நேர்மறையானது.

சந்தேகப்படுவது நன்மையே. ஆனால் நம்பிக்கை இழப்பது ஆபத்தானது. எல்லாருமே அயோக்கியர்கள், எல்லா நிறுவனங்களுமே சுரண்டல் தன்மையைக் கொண்டவை, அரசியல் என்பதே ரேப்பிஸ்ட்களின் கூடாரம் போன்ற சொற்களை உதிர்க்கும் மன நோயாளிகளிடமிருந்து விலகியிருங்கள்.

இத்தகைய விவகாரத்தை மிகவும் provoking ஆக எழுதும் ஆட்களிடம் இருந்து தற்காலிகமாக விலகியிருங்கள். நிஜமாகவே இதில் பங்களிக்க விரும்பினால், இதற்காகத் தெருவில் இறங்கிப் போராடும் எந்த இயக்கத்துடனாவது உங்களை மனப்பூர்வமாக பிணைத்துக்கொள்ளுங்கள். அவர்களுடன் போய் நில்லுங்கள். அச்சமடைந்தால் விலகி வந்து அவர்களைப் பற்றி மதிப்புடன் எழுதுங்கள். வெற்று இரக்கம் கொள்ளாதீர்கள். நோய்மையை அல்லது தன்னிரக்கத்தை, பொது ஊடகங்களில் புலம்பி அப்படி ஒன்று உங்களிடம் இல்லை என்று உங்களையே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள்.

நீங்கள் பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் ஆணாதிக்கப் பண்பு எனும் வன்முறை அலகு உங்களிடம் இருந்தால், அதை மனப்பூர்வமாக மறுபரிசீலனை செய்யுங்கள். இதை நான் மாற்றிக்கொள்வேன் என்று உங்கள் தனியறையில் அதை வாய்விட்டு சொல்லுங்கள். அவள் பெண் என்பதால் என்னை விடத் தாழ்ந்தவள் என்று நம்புவதை நிறுத்துவேன், எனது குழந்தைகளுக்கு அங்ஙனம் பயிற்றுவிப்பதை நிறுத்துவேன், அவர்கள் தாமாகவே பயின்று வந்தால் அதில் குறுக்கிடுவேன் என்று சிறிய உறுதிமொழியை எடுத்துக்கொள்ளுங்கள்.

நாம் உயரிய பாரம்பரியம் உள்ளவர்கள், ஜனநாயகவாதிகள், எல்லாரையும் சமமாக மதிப்பவர்கள் போன்ற கற்பிதங்களைத் தயக்கமின்றி உதறுங்கள். அது அப்பட்டமான பொய். அளவுகள் வேண்டுமானால் சிறிதும் பெரிதுமாக இருக்கலாம். அடிப்படையில் இந்தியர்களாக நாம் ஒரு விதத்தில் சபிக்கப்பட்டவர்கள். முதலில் ஆண் அதிகார சிந்தனையின் தோலை உரிக்கவேண்டும். அதை விட இறுக்கமான இருக்கும் சாதியத் தோலையும் சேர்த்தே உரிக்கவேண்டும். இது ஒரு அரசியல் செயல்பாடு. இதற்கு ஒரே வழி சுயபரிசோதனை மட்டுமே.

இறுதியாக, ஒவ்வொருவரும் மற்றவர்களைப் பார்த்து கைகாட்டிக்கொண்டே இருந்தால் யார்தான் தொடங்குவது. காதலுக்கு குறைந்தது இரண்டு பேர் வேண்டும். என்னால் காதலிக்காமல் இருக்கமுடியாது. அதனால்தான் உங்களை சகித்துக்கொள்கிறேன். என்னை சகித்துக்கொள்ளும் உங்களுக்கும் சேர்த்தே இதைச் சொல்கிறேன். எனது குரலும் உங்களது குரலும் வேறு வேறல்ல என்கிறபோது அது கமறுவதை என்னால் தவிர்க்கவே முடியவில்லை.

கையறு நிலையில் தவித்து மீண்டவளின் பாதத்தில் இந்த சொற்களை வைக்கிறேன். பெரிய மனதோடு அவள் இதை ஏற்றுக்கொள்ளட்டும். என்னிடம் வேறொன்றும் இல்லை தருவதற்கு!

https://m.facebook.com/story.php?story_fbid=2384459658254210&id=100000705985759

நம்பிக்கையே வாழ்க்கை - பூவண்ணன்

பூவண்ணன் கணபதி
2019-03-12

நம்பிக்கையே வாழ்க்கை

  யாரையும் நம்பாதே என்று (உலகம் அழிய போகிறது,பாவிகளே பாவிகளே என்று கூவுவதை  போல) எந்த கொடூர நிகழ்வு நடந்தாலும் தூக்கி கொண்டு கலாச்சார சாதி,மத மொழி வெறி கூட்டம் ஓடி வரும்.இப்போது முற்போக்காளர்கள் சிலரும்  இதில் சேர்ந்து கொண்டு எவனும் ஒழுங்கில்,யாரையும் நம்பாதே என்று அடித்து ஆட துவங்கி இருக்கிறார்கள்.

நம் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் யாரையாவது நம்பி தான் வாழ்கிறோம்,மருத்துவமனையில் ஊசி போட போகும் செவிலியரோ ,மருத்துவரோ சரியான மருந்தை தான் போட போகிறார்கள் என்று நம்புகிறோம். வங்கியில் கொடுக்கும் பணம் சரியான பணம் என்று நம்புகிறோம்,வாகனம் ஓட்ட போகும் விமானி முதல்  பத்து பேரை அடைத்து அழைத்து செல்லும் ஷேர்  ஆட்டோ  ஓட்டுநர் வரை நம்பி  நம்மை பாதுகாப்பாக அழைத்து செல்வார்கள் என்று எண்ணி தான் அதில் பயணம் செய்கிறோம்..

இன்னும் சொல்ல போனால் வாழ்வின் முக்கிய தேவைகளில் ஒன்றான பாலியல் தேவைகள் மற்றும் குடும்பத்திற்கான துணை தேர்விலேயே கண்ணை மூடி கொண்டு செவ்வாய் தோஷம் ,நாள் பார்த்து ஆளை பார்க்காமல் திருமணம் செய்து கொள்ளும் கூட்டம் தான் அதிகம்.முன்பு எப்படி இருந்த தேசம்,மாநிலம் இப்படி ஆகி விட்டது என்று கொட்டப்படும் பொய்களுக்கு அளவே இல்லாமல் இருக்கிறது.குழந்தை திருமணமே அதிகம் நடந்து வந்த கலாச்சாரம் தான் இது.திருமணத்திற்கு பிறகான கலவி காரணமாக பிறப்புறுப்பு சார்ந்த காயங்கள் மற்றும் நோய்கள் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் பெண் குழந்தைகள் உயிரிழந்து வந்த மாநிலம் தான் இது.

  மஹாத்மா காந்தியின் மனைவிக்கும் ,புரட்சி பாரதியின் மனைவிக்கும் பதினாலு வயதில் குழந்தை பிறந்து விட்டது .வயதுக்கு வந்த பெண்ணை முதலில் ராஜ பிரசாதம் என்று ராஜாவுக்கு,ஜமீன்தாருக்கு ,ராஜகுருவுக்கு ,கோவில் குருக்களுக்கு அனுப்பி வந்த அற்புத கலாச்சாரத்தை தான் இங்கிருந்த மதம்,சாதி மொழி சார்ந்த கலாச்சாரங்கள் அடிப்படையாக கொண்டு இயங்கின .

மனைவியை வைத்து சூதாடி தோற்ற பிறகு அவர்கள் முன் மனைவியை நீ  சூத்திர பெண் போல(அதாவது விதுரர் தாய் போல substitute ஆக நியோக முறைக்கு போக வேண்டும் என்றால் மறுப்பில்லாமல் செல்ல வேண்டும் )  இரு என்று பங்காளி ஆடையை உருவும்  கதை தான் இங்கு பெரும் காவியம்.குழந்தை பேறு தர உயர்ந்த வர்ணத்தை கொண்டு முயற்சிப்பதை பெருமையாக என்னும் கலாச்சாரம் தான் இங்கு இன்றுவரை இருந்து வந்த கலாச்சாரம்.அப்படி வந்தவரை பார்த்து பயந்து மஹாராணி தனக்கு பதிலாக பணிப்பெண்ணாய் அனுப்ப அவளுக்கும் குழந்தை பாக்கியம் தந்ததை கண்ணில் ஒத்தி கொண்டு படிக்கும் கூட்டம் இங்கே கலாச்சாரம் கெட்டு விட்டது,அன்றாய்டு போன் ,பள்ளி,கல்லூரிகள்.முகநூல் ,நட்பு ,காதல்  தான் அனைத்துக்கும் காரணம் என்று குதிப்பதை விட அவலம் வேறு இருக்க முடியுமா ?

பெண்ணை இழிவாக,குறைவாக,போக பொருளாக நடத்துவதே இங்கு பல நூறு ஆண்டுகளாக கலாச்சாரம். பெண்ணுக்கு சொத்துரிமை என்பதை பெரும் தீங்காக பார்க்கும் ஆச்சாரியர்கள் முதல் நிலச்சுவான்தார்கள் வரை வாய்ப்பு கிடைக்கும் போது அல்லது வாய்ப்புகளை உருவாக்கி கொண்டு  பெண்களை இப்படி நடத்துவதில் ஆச்சரியம் என்ன ?

கான்சருக்கான மருத்துவமோ ,மகப்பேறு மருத்துவமோ,ஆகாய பயணங்களோ ,  பெண்களின் உரிமைகளோ முன் எப்போதையும் விட இன்று பல மடங்கு முன்னேறி தான் இருக்கிறோம்.அந்த காலம் பொற்காலம் என்று கூவும் யாருக்கும் துளி கூட அறிவும் கிடையாது ,சமத்துவத்தில் நம்பிக்கையும் கிடையாது.எதையும் பயன்படுத்தி தங்களின் பிற்போக்குத்தனத்துக்கு ஆள் சேர்க்கும் கூட்டம் பொள்ளாச்சியில் நடந்த குரூரமான குற்றங்களை பயன்படுத்தி தங்கள் மதம்,சாதி கலாச்சாரம் என்று பிதற்றுகிறது.

  ஆயிரம் மகப்பேறுகளில் ஓரிரண்டு பேர் மருத்துமனைக்கு சென்றாலும்  மருத்துவ நெகிலிஜென்ஸ் காரணமாக உயிரிழப்பு  நடப்பது போல நட்பு,காதல் என்பதில் ஒரு சில நம்பிக்கை துரோகங்கள் இருந்தாலும் அது தான் முன்னே செல்லும் வழி.இனி யாரும் குழந்தை திருமணத்துக்கோ அல்லது வயதுக்கு வந்த பெண்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் ,திருமணம் வரை யாருடனும் பேச விட மாட்டோம் என்றோ திரும்பி அந்த ?பொற்காலத்துக்கு அழைத்து செல்ல முடியாது.

https://www.facebook.com/100000054060235/posts/2340459229299190/

சந்தேகத்திற்கு இடமற்ற புரிதல் மற்றும் நம்பிக்கை

உன்னதமான லட்சியத்தில் அடிபடையில் கட்டியெழுப்பட்ட பெரிய இயக்கங்கள் சிதஞ்சு சின்னாபின்னமாகி கேவலப்பட்டு நிற்பதற்கு கீழ்கண்ட இரண்டு காரணங்களே மிக முக்கியமானது:

1) பொருளாதார குற்றங்கள் அல்லது வரவு/செலவு விவகாரங்களில் வெளிப்படைத்தன்மை இல்லாமை.

2) பாலியல் குற்றங்கள் (அது எந்த வடிவத்திலேயும் இருக்கலாம்)

என்னுடைய இந்த கருத்துக்களை ஒரு whistleblower-ன் எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டாலும் சரி. அல்லது ஒரு spoiler-ன்
அர்த்தமற்ற உளறல்களாக எடுத்துக்கொண்டாலும் சரியே.

-----

*எனது "சந்தேகத்திற்கு இடமற்ற புரிதல் மற்றும் நம்பிக்கை" #1:*

"மாணவ/மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள்/பாதுகாவளர்கள்" - ஆகியோர்களிடமிருந்து திரட்டப்படும் phone number, email போன்ற தகவல்களை "PAART நிர்வாகமோ, PAART நிர்வாகத்தால் நியமிக்கப்படும் ஊழியர்களோ, PAART உடன் இணைந்து பணியாற்றும் சகோதர அமைப்புகளோ" - தவறான வகையில் பயன்படுத்தாது.

*எனது "சந்தேகத்திற்கு இடமற்ற புரிதல் மற்றும் நம்பிக்கை" #2:*

பெண்கள் தங்களது கல்வி மற்றம் வேலை வாய்ப்பினை மூலம் அடையும் பொருளாதார தன்னிறைவினால் மட்டுமே சுயமரியாதையான அறிவார்ந்த வாரிசுகளை/சமூகத்தை உருவாக்க முடியும். PAART இதை ஆழமாக நம்புவதின் காரணமாக, தனது அனைத்து கல்வி/வேலைவாய்ப்பு தொடர்பான பயிற்சி/விழிப்புணர்வு முகாம்களில், பெண்களின் பிரநிதித்துவத்தை நிலைநாட்டும். இதிலுள்ள நடைமுறைச் சிக்கல்கள் காலப்போக்கில் முறையாக ஆய்வு செய்து படிப்படியாக களையப்படும்.

*எனது "சந்தேகத்திற்கு இடமற்ற புரிதல் மற்றும் நம்பிக்கை" #3:*

PAART - ன் ஒட்டுமொத்த பொருளாதாரமும் பொதுமக்கள் நிர்பந்தமின்றி வழங்கும் நன்கொடைகளைக் கொண்டே அமைந்துள்ளது. எனவே வரவு/செலவு பற்றிய விபரங்கள் 100% வெளிப்படையானதாகவே இருக்கும். ஒரு ரூபாய்க்கான வரவு/செலவு கணக்கை கூட சந்தேகத்திற்கு/சங்கோஷத்திற்கு இடமின்றி PAART உறுப்பினர்களோ/பொதுமக்களோ எப்போது வேண்டுமானாலும் தெரிந்து கொள்ளலாம். அதற்கான வசதிகள் படிப்படியாக செய்யப்படும்.

*எனது "சந்தேகத்திற்கு இடமற்ற புரிதல் மற்றும் நம்பிக்கை" #4:*

அரசு வேலை வாய்ப்புகளில் சேர்வதற்காக மாணவர்களுக்கும்/இளைஞர்களுக்கும் நம்மால் முடிந்த வழிகாட்டுதல்களையும்/பயிற்சிகளையும் வழங்கி உதவுவதே பிரதான நோக்கமாக கொண்ட PAART எந்தவிதமான சுயநலநோக்கமுமின்றி இறைவனின் பொருத்தத்தை நாடியே இச்சீரிய பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளது. எனவே, "PAART ஒழுக்க அல்லது பொருளாதார குற்றங்களில் ஈடுபடும்" - என்று நம்புவதற்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லை.

*எனது "சந்தேகத்திற்கு இடமற்ற புரிதல் மற்றும் நம்பிக்கை" #5:*

இங்கே யாரும் கேள்விகளுக்கும்/விசாரணைகளுக்கு அப்பாற்பட்ட "புனித பசுக்கள்" கிடையாது என்பதால், அவதூறுகளற்ற ஆக்கபூர்வமான விமர்சனங்களையும், ஆலோசனைகளையும் கலந்துரையாடல்களையும் தீவிரமாக நம்பும் PAART, அதை ஊக்கப்படுத்தவும் செய்கிறது. மேலும், நடப்பு மற்றும் எதிர்காலத் திட்டங்களையும் நிர்வாக நடைமுறைகளையும்  எவ்விதமான ஒளிவுமறைவுமின்றி அனைவருக்கும் தெரிவிக்கபடும்.

-----

மேற்கூறப்பட்ட நம்பிக்கைகளின் அடிப்படையிலேயே நான் சில நேரங்களில் (எனக்கு நேரம் கிடைக்கும் போது) எனது கருத்துக்களை தெரிவித்து வருகிறேன். இதுநாள் வரையிலும் மேற்கூறப்பட்ட எனது நம்பிக்கையில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.

ஏப்ரல் மாதத்திற்கான புதிய பயிற்சித் திட்டங்களைப் பற்றி பேசும் போது பெண்களின் போன்நம்பர், இமெயில் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டியதைப் பற்றிய கவலையும் விவாதமும் வந்ததால், "அப்படி ஒரு கஷ்டமும் ரிஸ்க்கும்" இருக்கும் பட்சத்தில் "கொஞ்ச காலத்திற்கு அதை தவிர்ந்து கொள்ளலாமா?" என்பதுதான் எனது கருத்தின் சாராம்சம். கட்டுமானத்தில் போது ஏற்பட்ட உயிரிழப்பில் நாம் நேரடியாக சம்பந்தப்படா விட்டாலும் நமது வளாகத்தினுள் நடந்ததால் உள்ளபடியே அது நமக்கு சிக்கலான விசயமாகத்தான் இருந்தது. அதனால் ரிஸ்க் குறைவான விசயங்களில் அதிகம் கவனம் செலுத்தலாம் என்பது தான் எனது ஆலோசனை.

"பொள்ளாச்சி மாதிரியான சம்பவம் தைக்காவிற்கு மேல் நடைபெற சாத்தியமிருக்கிறது" - என்று நான் சொல்ல வரவில்லை.

-----

Saturday, March 9, 2019

தினகரனும் +11 வைரங்களும் - முசெ

மு.செ.பாதுஷா
2019-02-09

பணமதிப்பிழப்பு நேரத்தில், உயர்தர +11 வகை வைரங்களை ஒரு லட்சம் காரட் அளவிற்கு ரூபாய் 3 லட்சம் கோடி ரூபாய்க்கு சூரத்திலிருந்து பார்பன பாசிஸ்ட் ஜெயா வாங்கியுள்ளார். கொடநாட்டிலிருந்தும் சூரத்திற்கு பணம் கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது.

தற்போது, தேர்தல் செலவுக்காக மீண்டும் விற்க முயல்கிறார்கள்.

இந்த பரிவர்த்தனையில் கீழ்கண்டவர்களுக்கு தொடர்பு இருப்பதாக நீங்கள் நம்பினால் நீங்கள் தேசவிரோதிகள்.

1) பார்பன பாசிஸ்ட் ஜெயா
2) மன்னார்குடி கும்பல் (சசிகலா, தினகரன்)
3) ஆர். எஸ். எஸ், மோடி, வெங்கையா நாயுடு

பின்னர், இவ்வளவு பெரிய ரகசிய பரிவர்த்தனையை முன்னின்று நடத்திய பங்காளிகளான தினகரனும் (அமமுக) வெங்கையா நாயுடுவும் (பிஜேபி) இனிமேல் ஒன்று சேரமாட்டார்கள் என்று நம்பி முஸ்லீ்ம்களும் தலித்துக்களும் தினகரனுக்கு (அமமுக) ஓட்டு போட வேண்டும் - என்பதை தெரிவித்து கொண்டு அமர்கின்றேன்.

என்னமோ போடா மாதவா.

https://m.facebook.com/story.php?story_fbid=2345155455496497&id=100000061950087

Thursday, March 7, 2019

சர்க்காரியா கமிசன், கச்சத்தீவு, எமர்ஜென்சி - கலைஞர்

Jaya Chan Dran
2018-12-23

#சர்க்காரியாகமிசன்_கலைஞரின்_ஆண்மைக்கு_கிடைத்த_பரிசு,,,

கச்சத்தீவு கைவிட்டு போனது MGR இன் கோழைத்தனத்தால் வந்த வினை.

1966 ஜனவரி முதல் மார்ச் 1977 வரை இந்திராதான் இந்தியாவின் பிரதம மந்திரி.

1967 இல் திமுக ஆட்சிக்கு வருகிறது.1969 இல் காங்கிரஸ் உடைகிறது. 1969முதல் 1971 வரை திமுக தயவில் இந்திரா ஆட்சி நடத்துகிறார்.

1971 ல் தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது MP தேர்தலும் நடக்கிறது.

இந்த இரு தேர்தல்களிலும் திமுக இந்திரா காங்கிரஸ் கூட்டு சேர்ந்து மிகப்பெரிய வெற்றிகளை பெறுகிறது.

ஆனால் இந்திரா- கலைஞர் மோதல் இங்கேதான் ஆரம்பம்.
காங்கிரஸ் 15 MP சீட்டும் 30 MLA சீட்டும் கேட்க திமுக 5 முதல் 7 MP தொகுதிகளும் 10 முதல் 15 MLA சீட்டுகள் மட்டுமே தரமுடியும் என தெரிவித்து விட்டது.

பத்து நாட்கள் பேச்சு வார்த்தை எதுவுமே நடக்கவில்லை. கடைசியில் புதுச்சேரி + தமிழ்நாடு க்கு 10 சீட்டை காங்கிரஸ் பெற்று
திமுக- காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றி பெற்றது.

ஆனால் அப்போதே திமுகவை ஒழிக்கும் எண்ணம் இந்திராவிற்கு வந்துவிட்டது.

1972 ஆம் ஆண்டு திமுக 184 தொகுதிகளில் வெற்றிபெற்று அசைக்கமுடியாத பலத்துடன் இருந்தது.

இது இந்திராவுக்கு பிடிக்கவில்லை. ஏனெனில், மாநிலத்துக்கு தனிக்கொடி, மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் என்று கலைஞர் பேசிவந்த நேரம்.

திமுகவின் பலத்தை சீர்குலைக்க எம்ஜியாரை இந்திரா அச்சுறுத்தி வந்த நேரம்.

திமுகவை ஒழிக்க இந்திரா எடுத்த ஆயுதம்தான் MGR. வருமானவரித் துறை மூலம் நடவடிக்கை வரும் என பயந்த MGR கலைஞர் மீது பழி போட்டு 1972 நவம்பரில் அதிமுகவை தொடங்கி ஒரு ஊழல் பட்டியல் என பெரிய பட்டியலை தயாரித்து அதை ஜனாதிபதியிடம் கொடுக்கிறார்.

அதாவது பட்டியலை தந்த MGR அதில் எந்த வித ஆதாரத்தையும் இணைக்கவில்லை.

21-5-1972 அன்று தமிழகத்திற்கு  இந்திரா காந்தி வருகிறார்,
அதன் பிறகு 29-5-72, 29-4-73, 9-10-73 ஆகிய நாட்களில் காவேரி பேச்சு வார்த்தை தொடங்குகிறது

அதாவது மே 1972 லேயே காவேரி வழக்கு தற்காலிக வாபஸ் ஆகிறது.

ஆனால் MGR ஊழல் புகார் தந்ததோ நவம்பர் 1972 .

ஊழல் புகாருக்கு பயந்து காவேரி வழக்கை கலைஞர் வாபஸ் பெற்றதாக கூறுகிறார்கள் அறிவிலிகள்😁

இந்திராவின் தீய எண்ணத்தை புரிந்துக் கொண்ட கலைஞர் 1972 க்கு பின்னர் இந்திராவின் நம்பர் 1 எதிரியாக மாறுகிறார்.

1974 இல் கச்சத்தீவை இந்திரா இலங்கைக்கு தாரை வார்த்தபோது அதை தமிழகத்தில் எதிர்த்த ஒரே ஆண்மகன் கலைஞர்தான்.
இந்திராவின் அடிமை MGR ஒரு வார்த்தை எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. காங்கிரஸ் நெடுமாறன் இருந்த இடம் தெரியவில்லை.

1974 கட்சத்தீவு ஒப்பந்தத்தில் தமிழகத்தின் எந்த உரிமையும் பறிபோகவில்லை என்பதும் அந்த ஒப்பந்தமே இன்றும் சட்டப்படி செல்லாது என்பதே உண்மை.

சர்க்காரியா கமிசன் ஒரு பழிவாங்கும் நடவடிக்கைதான்

1) 1974-ல் மாநில முதல்வர்களுக்கு தேசியக் கொடியை ஏற்றும் உரிமை பெற்றார் கலைஞர்

2)1974 ஏப்ரல் 20ல் தமிழக சட்டமன்றத்தில் திமுக மாநில சுயாட்சி தீர்மானத்தை நிறைவேற்றியது.

3)1975 ஜூன் 12-ஆம் தேதி இந்திராகாந்திக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்ப வழங்க கலைஞர் இந்திராகாந்தி பதவி விலக வேண்டும் என்று பேட்டி அளித்தார்.

4)1975 ஜூன் 27ம் தேதி திமுக செயற்குழுவில் எமர்ஜென்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

5) 1975 ஜூலை 21 தேதி மக்களவையிலும், மாநிலங்களவையிலும் திமுக எம்பிக்கள் எமர்ஜென்சிக்கு எதிராக கண்டன குரல்

6)1975 ஆகஸ்ட் 9,10 மற்றும் டிசம்பர் 28ல் நடைபெற்ற திமுக மாநாட்டில் எமர்ஜென்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

7) எமர்ஜென்சி விதிகளை கலைஞர் சரியாக கடை பிடிக்காதது இந்திராவிற்கு மிகப்பெரிய எரிச்சல்

மேற்கண்ட காரணங்களால் கொண்டுவரப்பட்டதுதான் சர்க்காரியா கமிசன்.

கலைஞரை ஒழிக்க வேண்டும் என்றே தமிழக ஆளுநரிடம் கட்டாயப்படுத்தி அறிக்கையில் ஒப்பம் பெற்றார் இந்திரா.

1976 பிப்ரவரி 15ம் நாள் சென்னை கடற்கரை கூட்டத்தில் பேசிய பிரதமர் இந்திராகாந்தி, இலங்கையுடனான இந்தியாவின் நட்புறவு கெடுவதற்கு கருணாநிதி தான் காரணமாக இருக்கிறார் என்றார்.

நமது கேள்விகள்

1) எமர்ஜென்ஸி போது எமர்ஜென்சியை ஆதரிக்கக் கோரி பலமுறைகள் கலைஞருக்கு தூது அனுப்பினார் இந்திரா.

கலைஞர் நினைத்திருந்தால் இந்திராவுடன் சமாதானமாக போயிருக்க முடியும். சமாதானமாக போயிருந்தால் ஆட்சிக்கலைப்பும் வந்திருக்காது
சர்க்காரியா கமிஷனே வந்திருக்காது என்பது உண்மையா இல்லையா?

2) தன் நலம் கருதியிருந்தால் இந்திராவிற்கு MGR போல ஜால்ரா போட்டு கலைஞர் சர்க்காரியா கமிசனே வரவிடாமல் தடுத்து இருக்க முடியுமே.

கலைஞர் ஆண்மகன் என்பது இப்போதாவது புரிகிறதா?

3) 1972 நவம்பரில் MGR கொடுத்த ஊழல் பட்டியலில் ஆதாரம் இருப்பின் இந்திரா 1972 லேயே சர்க்காரியா கமிசன் போட்டு நடவடிக்கை எடுத்திருக்கலாமே ஏன் எடுக்கவில்லை?

1976 ஜனவரி மாதம் 3 வருடம் கலைஞரின் எதிர்ப்பிற்கிடையே இந்திரா அமைதி காத்தது ஏன்?

4) உண்மையில் கலைஞர் ஊழல் செய்திருந்தால் நேரடியாக போலிஸ் நடவடிக்கை கலைஞர் மேல் 1976 லேயே எடுத்திருக்கலாமே , வழக்கும் போட்டிருக்கலாமே ஏன் போடவில்லை? ஜெ மீது கலைஞர் நேரடியாக வழக்கு போடவில்லையா? தண்டனை பெற்று தரவில்லையா?

5) சர்க்காரியா கமிசன் அறிக்கை முதல் பகுதி 1976 லேயே வெளியிடப்பட்டதே அப்போதே இந்திரா நடவடிக்கை எடுக்காதது ஏன்?

6) 1977 இல் ஆட்சிக்கு வந்த MGR சர்க்காரியா இறுதி அறிக்கையை வைத்து கலைஞர் மீது வழக்கு போடாதது ஏன்?

7) 1980 இல்தான் திமுக- இந்திரா கூட்டு வந்தது. அதன் பிறகு 1984 இல் ராஜீவ் அதிமுகவுடன் கூட்டு வைத்து பிரதமானார்.

இந்த நேரத்திலாவது ராஜீவ் காந்தியும் எம்ஜி ஆரும் சேர்ந்து சர்க்காரியா கமிசன் ரிப்போர்ட் மீது நடவடிக்கை எடுத்து கலைஞர் மீது வழக்கு போட்டு இருக்கலாமே. ஏன் வழக்கு போடவில்லை?

மேற்கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல யாராவது தயாரா?

8) எமர்ஜென்சியின் போது நடந்த சர்க்காரியா கமிசன் விசாரணை எப்படி ஒரு பக்க சார்பாக நடந்தது என்பதாவது தெரியுமா?

அரசு சாட்சிகளை விசாரிக்க  கலைஞர் தரப்பிற்கு  அனுமதி இல்லை என்பதாவது தெரியுமா?

பிறகு எப்படி விசாரணை நேர்மையாக இருந்திருக்கும்?

நடந்தது இதுதான்**

MGR 1977 இல் ஆட்சிக்கு வந்ததும் முதலில் அவர் சர்க்காரியா கமிசன் மீதுதான் மிகவும் அக்கறை கொண்டார்.

இதில் கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் சர்க்காரியா கமிசனே கலைஞர் மீதான வீராணம் திட்டம் உட்பட முக்கிய ஊழல் குற்றச்சாட்டுகளை ஒத்துக்கொள்ளவில்லை. அப்போதைய முதல்மந்திரி எம்ஜிஆர் 1977 நவம்பர் 15 இல் அப்போதைய அட்வகேட் ஜெனரல் V.P. ராமனிடம் சர்க்காரியா கமிசன் தொடர்பாக அவரது ஆலோசனையை கேட்கிறார். அதற்கு ராமன் வெறும் வழிமுறைகள் கடைபிடிக்கப்படாமை ( impropriety) என்ற ஒரு விசயத்தை வைத்து கலைஞர் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுப்பது என்பது சாத்தியமும் அல்ல எனவும் அதற்கு பரிந்துரை செய்வதும் இயலாது எனவும் பதிலாக தெரிவித்து விட்டார்.

ஆனால் ஹெலிகாப்டர் மூலம் பூச்சி மருந்து அடித்தது தொடர்பானஎம்ஜிஆரின் குற்றச்சாட்டு வ.எண் 11(B) க்கு மட்டும் நடவடிக்கைக்கு பரிந்துரைத்தார்.

ஆனால் சிபிஐ ஆல் கையாளப்பட்ட அந்த வழக்கும் பதிவு செய்யப்பட்டு போதிய ஆதாரம் இல்லாததால் பின்னர் மத்திய அரசாலேயே வாபஸ் பெறப்பட்டது.

இதுதான் சர்க்காரியா கமிசன் தொடர்பாக நடந்தது. ஆனால் கடந்த 40 வருடங்களாக இந்த நீர்த்து போன உப்பு சப்பில்லாத சர்க்காரியா கமிசன் கதையை வைத்தே கலைஞரை ஊழல்வாதியாக தொடர்ந்து பிரட்சாரம் செய்து வருகிறார்கள்.
ஒரே பொய்யை 2G மாதிரி தொடர்ந்து சொல்ல சொல்ல உண்மை போலவே மனதில் பதிந்து விடும்