Wednesday, January 26, 2022

ராமனைப் போன்ற ஒரு துஷ்ட பிம்பம் எந்தக் கதைகளிலும் சொல்லப் படவுமில்லை .

ஆளுநரின் இராமர்

இராமாயணத்தின்  உருவகப்படி இராமன்
இராமனைச் சார்ந்தவர்கள் யாரும் நிம்மதியாக இருந்ததில்லை.

பெற்ற தசரதன், ராமனின் தாய், வளர்ப்புத் தாய் கூனி ,
கட்டிய மனைவி,
லட்சுமணன் முதல் கூடப் பிறந்த சகோதரர்கள் யாரும் மகிழ்வோடு இல்லை. 

நடந்த தேசத்திலெல்லாம் உறவுகளை மோத விட்டான். 
 
ஆண்ட நாட்டு மக்களையெல்லாம் அழுகையிலும் அவநம்பிக்கையிலும் வைத்தான்.

கூட்டுச் சேர்ந்த சுக்ரீவன் விபீஷ்ணன் 
அரசியல் செய்த அத்வானி 
கால் வைத்த இலங்கை
பிறந்த  உத்திரபிரதேசம் வரை 
ராமனைச் சார்ந்த எவரும் நிம்மதியாய் இருந்ததில்லை.

வாழ்நாள் எல்லாம் 
ராமனும் நிம்மதியாய் இருந்துவிடவில்லை.

பார்ப்பனியத்துக்கு பலியாளாக வாழ்நாள் எல்லாம் 
துக்கமும் துயரமும் இரத்தமும் மனச் சஞ்சலமாகவுமே. வாழ்ந்து இறந்தான் ராமன் 

கடைசி வரை கை பிடித்த சீதை நிம்மதியாய் வாழவிடவுமில்லை. துடிக்கத் துடிக்க தீக்கிறையானாள் .

தனக்காக எல்லாம் துறந்த தம்பி லட்சுமணனை 
பார்ப்பனர்களை மதிக்காமல் போனான் என்று கொலை செய்யும் படியானது.

வளர்ந்து பெரியவானனது முதல் பெற்ற தசரதன் நிம்மதியை இழந்தான் . அப்படியே இறந்தான். 

லவனும் குசனும் தந்தை பெயர் அறியாமலே காடுகளில் 
வாழவேண்டியதிருந்தது  

காதலித்த சூர்ப்பனகை அங்கம் அறுபட்டு அலையவிடப்பட்டாள் 

இராமன் பெயர் சொன்ன காந்தி ராமனின் பெயராலே இயக்கம் நடத்தியவர்களால் கொல்லப் பட்டார்

பார்ப்பனர்களைத்தவிர வேறெருவரின் நன்மைக்காக இராமன் உழைக்க அனுமதிக்கப் பட்டவனில்லை.

வேதம் படித்ததற்காக கொலை செய் என்ற போது ஓடோடி படுகொலை செய்த அடியாளாகவே இராமன் இருந்தான் .
 

ராமனைப் போன்ற ஒரு துஷ்ட பிம்பம் எந்தக் கதைகளிலும் சொல்லப் படவுமில்லை .

அதனால் தானோ என்னவோ தமிழர்கள் இராமனை விட்டு விலகியே இருந்தார்கள். இங்கே அனுமனுக்கு உள்ள மதிப்பு கூட ராமனுக்கு இல்லை. 

இராமனின் துன்பியல் நிகழ்வுகளின்  கடைசி உதாரணமாக ரஜினியாகவே  இருக்கட்டும்.

Monday, December 6, 2021

நேபாளத்தில் உள்ள அயோத்தி

Satheesh kumar

கோவிலை இடித்து கட்டப்பட்டதா பாபர் மசூதி..?

இராமரைப் பற்றி இந்துக்கள் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் சங்பரிவா ரத்தினரின் கூற்றுக்களின் அடிப்படையில் எடுக்கக் கூடாது. இந்து மதப் புராணங்களை மேற்கோள் காட்டியே முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் மனம் போக்கில் யாரேனும் இராமரைப் பற்றி முடிவு செய்தால் அது அவரது முடிவாகத்தான் இருக்குமே தவிர இந்து மதத்தின் முடிவாக இருக்க முடியாது.

இராமரைப் பற்றி முதன் முதலில் வால்மீகி என்பவர் சமஸ்கிருத மொழியில் இராமாயணத்தை எழுதினார். இராமரைப் பற்றி அதில் கூறப்பட்ட விஷயங்கள் தான் இராமரைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாகும்.
வால்மீகி இராமாயணத்தில் இராமர் பிறந்ததைப் பற்றிக் கூறும்போது, ‘அவர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று கூறப் பட்டுள்ளது.

இந்துக்களின் கால அளவை முறையில் யுகம் என்பது காலத்தை அளக்கும் பெரிய அலகுகளில் ஒன்று. யுகங்கள் நான்கு. அவை:

கிருத யுகம் 17,28,000 (பதினேழு இலட் சத்து இருபத்து எட்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது.

திரேதா யுகம் 12,96,000 (பன்னிரெண்டு இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரம்) ஆண்டுகள் கொண்டது.

துவாபர யுகம் 8,64,000 (எட்டு இலட்சத்து அறுபத்து நான்காயிரம்) ஆண் டுகள் கொண்டது.

கலியுகம் 4,32,000 (நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது) என்பனவாகும்.

அதாவது கிருத யுகத்தில் பாதி அளவு கொண்டது திரேதா யுகம். திரேதா யுகத்தில் பாதி அளவு கொண்டது துவாபர யுகம். துவாபர யுகத்தில் பாதி அளவு கொண்டது கலியுகம்.

இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் கலியுகம். கலியுகம் கிறிஸ்து பிறப்பதற்கு 3102 வருடங்களுக்கு முன் துவங்குகிறது. இயேசுவுக்குப் பின் 2021 ஆண்டுகள் ஆகின்றன. இதன்படி கலியுகம் துவங்கி 5123ஆண்டுகள் நடக்கிறது. இந்த யுகத்தில் இராமர் பிறக்கவில்லை.

கலியுகத்துக்கு முந்திய யுகம் தூவாபர யுகம். இந்த யுகத்திலும் இராமர் பிறக்க வில்லை.

இந்த யுகத்துக்கும் முந்திய யுகம்தான் திரேதா யுகம். இந்த யுகத்தின் கடைசி வருடத்தில் இராமர் பிறந்திருந்தார் என்று வைத்துக் கொண்டால் கூட 8,64,000 + 5,123 = 8,69,124 எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரத்தி நூற்றி இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தான் இராமர் பிறந்தார் என்பது வால்மீகி இராமாயணத்தின் தீர்ப்பு.

இராமர் பிறந்த காலம் பற்றி வால்மீகி இராமாயணம் கூறுவது போலவே அவர் பிறந்த ஊர் பற்றி கூறும்போது, ‘இராமர் அயோத்தி என்னும் பட்டணத்தில் பிறந் தார்’ எனக் கூறுகிறது.

அப்படியானால் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அயோத்திப் பட்டணம் இருந்தி ருக்க வேண்டும்.

ஆனால் உ.பி.யில் உள்ள அயோத்தி எப்போது தோன்றியது என்று பல விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், மத்திய அரசாங்கத்தின் தொல் பொருள்துறை சார்பில் அயோத்தியை ஆய்வு செய்து 1976, 77ல் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் 52, 53 ஆகிய பக்கங்களில் ‘அயோத்தி என்ற ஊர் உண்டானதும், அதில் மக்கள் வசிக்கத் தொடங்கியதும் கி.மு. 700ல்தான் இருக்க முடியும்’ எனக் குறிப்பிடுகின்றார்.

அதாவது 2708 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்திருக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று அவர்களின் அறிக்கை கூறுகிறது.

இதன் பின்னர், சி.பி.லால், கே.என். தீட்சித் ஆகிய வரலாற்று வல்லுனர்கள் 1979, 80ல் இதை மறு ஆய்வு செய்தனர். தொல்பொருள் துறையினரின் மேற்கொண்ட முடிவு சரியானதே என்று அவர்கள் கண்டுபிடித்தனர்.
அயோத்தியில் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இராமர் பிறந்தார் என்று வால்மீகி கூறுகிறார். ஆனால் ராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் அந்தக் காலத்தில் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்த தில்லை என்பது தெளிவாகிறது.

இராமாயணத்தையும் மறுக்காமல், தொல்பொருள் அறிஞர்களின் கண்டுபிடிப் புகளையும் மறுக்காமல் ஒரு முடிவுக்கு வருவதாக இருந்தால் என்ன முடிவுக்கு நாம் வர வேண்டும்?

இந்த அயோத்தியின் வயது 2708 ஆண்டுகளாக இருக்கலாம். ஆனால் ராமாயணத்தில் கூறப்பட்ட அயோத்தி இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அந்த அயோத்தி இருந்திருக்கலாம். ஒரு பெயரில் பல ஊர்கள் இருப்பது சாதாரண மானதுதான் என்ற முடிவுக்குத்தான் அவர்கள் வரவேண்டும். அப்போதுதான் நடைமுறை உண்மைக்கு முரணில்லாமலும், இராமாயணத்தை மறுக்காமலும் முடிவு எடுத்ததாக அமையும்.

‘இராமர் பிறந்தது இந்த அயோத்தி அல்ல; வேறு அயோத்திதான்’ என்பதற்கு இராமாயணத்திலேயே இன்னும் பல சான்றுகள் உள்ளன.

அயோத்தியைப் பற்றி பேசும் வால்மீகி இராமாயணம் சரயூ நதியைப் பற்றியும் கூறுகிறது. சரயூ நதி அயோத்தியில் இருந்து ஒன்றரை யோஜன் தூரத்தில் உள்ளது என்று கூறுகிறது. ஒன்றரை யோஜன் என்பது இன்றைய கணக்குப்படி 23 கிலோ மீட்டர் ஆகும்.

ஆனால் இப்போது நாம் அயோத்தி சென்று பார்த்தால் சரயூ என்ற பெயரில் ஒரு நதி அங்கே ஓடினாலும், அது அயோத்திலேயே ஓடுகிறது. அயோத்தியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் அது இல்லை.

அப்படியானால் இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியும் சரயூ நதியும் இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அயோத்தி என்ற பெயரில் ஒரு ஊரும், அதிலிருந்து 23 கி.மீ தொலைவில் சரயூ என்ற பெயரில் ஒரு நதியும் இருந்திருக்க வேண்டும் என்று நம்பினால்தான் இராமா யணம் கூறுவது மெய்யாகும்.

”இந்த அயோத்திதான் அந்த அயோத்தி” என்று கூறுவது இராமாயணத்தை மறுத்து இந்து மதத்தையே மறுப்பதாக ஆகிவிடும்.

அதுபோல் சரயூநதி கங்கை எனும் பெருநதியில் சங்கமம் ஆகிறது என்று வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது. ஆனால் உ.பி.யில் உள்ள சரயூ நதி கங்கையில் சங்கமம் ஆகவில்லை. மாறாக ராப்தி எனும் நதியில் சங்கமமாகிறது. இதிலிருந்து தெரிய வருவது என்ன? இராமாயணம் குறிப்பிடுவது இந்த அயோத்தியையோ, இந்த சரயூ நதியையோ அல்ல என்பதுதான்.

மேலும் சரயூ நதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்வதாக வால்மீகி ராமாயணம் வர்ணிக்கிறது. ஆனால் உ.பி. யில் உள்ள சரயூ நதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிறது.

அதை ஆய்வு செய்த ஷேர்சிங் என்ற ஆய்வாளர் ஒரு உண்மையைக் கண்ட றிந்து வெளிப்படுத்தியுள்ளார்.
நேபாளத்தில் ஒரு அயோத்தி உள்ளது. அதிலிருந்து 20 கி.மீ தொலைவில் ஒரு நதி ஓடுகிறது. அது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்கிறது. மேலும் அது கங்கையில் சங்கமம் ஆகிறது என்று அவர் கண்டுபிடித்துள்ளார்.

எனவே இராமர் பிறந்த அயோத்தி உ.பி.யில் உள்ள அயோத்தி என்று யாராவது நம்பினால் அவர்கள் இராமாயணத்தை மறுத்தவர்களாகின்றனர்.

இராமாயணத்தில் கூறப்படும் அடையாளங்களும், தன்மைகளும் எந்த அயோத்திக்குப் பொருந்துகிறதோ அந்த அயோத்திதான் இராமர் பிறந்த அயோத்தி என்று முடிவு செய்வதுதான் இந்துமதத்தின் ஆதாரத்தால் நிரூபிக்கப்பட்ட தாகும்.

https://m.facebook.com/story.php?story_fbid=1585126445170368&id=100010190820245

Sunday, November 14, 2021

ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால்.உடனடியாக நாம் என்ன செய்ய வேண்டும்..!

தெரிந்துக்கொள்வோம்!

ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால்.உடனடியாக நாம் என்ன செய்ய வேண்டும்..!

1.முதன் முதலில் computerised EC 1975 முதல் போட்டு பார்க்க வேண்டும் 1975 முதல் பின்னோக்கி 1908 அல்லது 1858 வரை manual EC கட்டாயம் போட்டு பார்க்க வேண்டும்.

Zero value நிலம் EC யில் நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூமிதான நிலம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம் எனவே zero value நிலம் வாங்காதீர்.

2.Double Document நிலம்.

Power of attorney(POA) double document

அதாவது power யில் வரும் நிலத்தை வாங்காதீர் இது double டாக்குமெண்ட் க்கு இட்டு செல்லும்.

POA நிலதை வாங்கியே தீர வேண்டும் என்றால் Power கொடுத்தவர் உயிரோட சுய நினைவோட இருக்கிறாரா என்று கண்டுபிடியுங்கள் POA agreement நகல் வாங்கி அதில் குறிப்பிடப்படுள்ள அட்ரஸ் இல் power கொடுத்தவரை நேரில் சந்தித்து விசாரியுங்கள்.

அடுத்து அந்த power பத்திரம் செல்ல கூடியாதா என்று கேளுங்கள் அதாவது power பத்திரம் எழுதி கொடுத்தவர் அதை ரத்து செய்து விட்டாரா என்றும் கேளுங்கள் முகவரும் (agent )விற்கலாம், principal (power எழுதி கொடுத்தவர்) ளும் விற்கலாம் விற்றால் அது double டாக்குமெண்ட்.

3.உயில் பத்திர நில double document.

உயில் மூலம் உரிமை மாறி இருக்கா

உயில் பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வரும் நிலமெனில்.
எது இறுதி/கடைசி உயில் என்று கவனமாக பார்க்க வேண்டும் பதிவு செய்யபட்ட உயில் மூலம் விற்பனை நடந்தால் அது ஒரு நில விற்பனை பத்திரம்.

பதிவு செய்யப்பட்ட உயிலுக்கு பிறகு ஏதாவது பதிவு செய்யாத உயில் இருக்கான்னு நிலம் விற்பவரின் உறவினர்களை கேட்க வேண்டும் இந்த பதிவு செய்யப்படாத உயில் மூலம் விற்பனை செய்யப்பட்டு இருந்தால் அது double டாக்குமெண்ட்.

4.Settlement பத்திர நிலம் double document .

Settlement பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வந்தால் செட்டில்மெண்ட் ரத்து செய்ய பட்டு இருக்கிறதா என்று கவனமாக பார்க்கவும் 1990 முதல் 2015 வரை ரெஜிஸ்டர் ஆபீசில் செட்டில்மெண்ட் ரத்து செய்து நிலத்தில் மேலும் சொத்தை சிக்கல் ஆக்கிவிட்டர்கள்.

செட்டில்மெண்ட் பத்திரத்தை civil கோர்ட் மூலியமாக தான் ரத்து பண்ண முடியும் பத்திர ஆபீசில் செய்யும் ரத்து பத்திரம் சொல்லாது.

EC யில் SRO=Sub register Office)மூலம் ரத்து ஆகி இருந்தால் அந்த நிலத்தை வாங்காதீர்.

உயில் பத்திரம் தாய் பத்திரம் ஆக இருந்தால் அந்த தாய் பத்திர உயில் மூலம் கிரயம் நடைபெற்று இருந்தால் அந்த கிரய பத்திரத்துக்கு லிங்க் கவனமாக இறங்கியதா என்று பார்க்க வேண்டும்.

5. Update ஆகாத பட்டா மூலம் கிரயம்-double document.

1987-UDR, 1995-நத்தம் நிலவரி திட்டம் முன்பு நிலம் பத்திரத்தின் மூலம் வாங்கியவர் அதை revenue record எனப்படும் பட்டாவில் தான் தான் தற்போதைய உரிமையாளர் அதாவது current owner என்பதை update செய்யாமல் இருந்தால் 1987முந்தைய owner & அவரின் வாரிசுகள் பழைய பட்டா மூலம் கிரயம் செய்தால்.

அடுத்து நிலம் வாங்கி பட்டாவில் update செய்யாமல் விட்டுவிட்ட அசல் (எ ) original owner றோ இல்லை அவரின் வாரிசுகள் விற்று கிரய பத்திரம் ஆகி இருந்தால் அதுவும் double document.

6.Layout frame, வடிவம், உருவாமாற்றம் மாற்றிய நிலமா?

அடுத்து அந்த நிலம் நத்தம் நிலமா, layout பிளாட் ஆஹ் என்று பாருங்கள்.

DTCP approved or CMDA approved என்றால் DTCP & CMDA website யில் approval நம்பர் போட்டு approval ஒரிஜினல் தானா என்று உறுதி படுத்தி கொள்ளலாம். Website லே கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நேரில் LPA(local planning authority என்னும் DTCP அல்லது CMDA அலுவலகத்திற்கு சென்று நிலத்தின் approval சரிதானா என்று கேளுங்கள்.

அது பழைய approved layout ஐ திருட்டுதனமாக redraw செய்து விற்பனைக்கு வந்திருக்கும் layout ஆஹ் என்றும் விசாரியுங்கள்.

Layout ப்ளூ பிரிண்ட் இருந்தால் கொண்டு சென்று park, ஸ்கூல் க்கு இடம் விட்டுட்டு layout போட்டு இருக்கிறார்களா என்றும் கேளுங்கள் நிறைய land ப்ரோமோட்டார்ஸ் park, ஸ்கூல் இடத்தை காட்டி approval வாங்கி விட்டு layout வரை படத்தை மறுபடியும் திருட்டுதனமாக வரைந்து(எ ) redraw செய்து park, ஸ்கூல் இடத்திலும் மனை போட்டு விடுவார்கள்.

எனவே ஜாக்கிரதை.

பஞ்சாயத்து approved இடங்கள் வாங்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் வாங்கிய பின்பு நீங்கள் தான் நிலத்தை frame work scheme இன் கீழ் வரையறை செய்ய அலைய வேண்டி இருக்கும்.

நத்தம் நிலம் என்றால் VAO வை பார்க்க வேண்டும் உங்கள் சர்வே நம்பர் இன் UDR காலத்து 1987 ஆம் ஆண்டின் சிட்டா அடங்கலை, FMB நேரில் சென்று கேளுங்கள்.

இனாம் கிராமம் ஆக இருந்து இனாம் ஒழிப்பின் மூலம் நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் பட்டா வழங்கபட்ட நிலமா என்றும் பார்க்க வேண்டும். அந்த பட்டா UDR காலத்து சிட்டா அடங்கல் ரெஜிஸ்டர் இல் ஏறி இருக்கா னும் பார்க்கணும்.

VAO நேரில் கேட்டும் கொடுக்கவில்லை என்றால்  RTI மனுவில் கேளுங்கள் RTI யில் கட்டாயம் கொடுக்க வேண்டும்.

4. EB, சொத்து வரி விற்பவர் பெயரில் இருக்கா என்று பாருங்கள்.இல்லை என்றால் மாற்றி, பின்னர் விற்க சொல்லுங்கள் .

5.பட்டா விற்பவர் பெயரில் இருக்கானு பார்க்கணும்.

கூட்டு பட்டா நிலம் எனில், நிலம் பங்குதாரர்கள்குள் யாருக்கு எவ்வளவு இடம் & எந்த இடம் என்று பிரித்திருக்க வேண்டும் இல்லை என்றால் வாங்கும் உங்களுக்கு சிக்கல். விற்பவருக்கு உரிமை இல்லாத நிலத்தை விற்க வாய்ப்பு இருக்கு

பட்டா வாங்குறது பெரிய process, நிறைய அலைச்சல் & கஷ்டம்.

அதனாலே விற்பவர் பெயரில் பட்டாவை மாற்ற சொல்லுங்கள் அதன் பின்பு நிலத்தை வாங்குங்கள்.

6. நிலத்தின் வகைப்பாடு கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

நஞ்சை, புஞ்சை, நத்தம், நத்தம் புறம்போக்கு, மேய்ச்சல், வாய்க்கால், ஓடை  புறம்போக்க்கா, நெல் போராடிக்கும் இடமா, park, விளையாட்டு திடல்,கோயில் க்கு ஒதுக்கப்பட்ட நிலமா,பொதுவில் மாடு கட்ட விடப்பட்ட இடமா, நிலவியல் பாதை(அரசு நிலம் ), நிலவியல் ஓடை etc.என்று பார்க்கிவேண்டும்.

7. பட்டாவின் பயனாளி யார்?.

முன்னோரு காலத்தில் அது ஜமீன் நிலமா அல்லது இனாம் நிலமா அல்லது ரயட்டுவாரி நிலமா ஆஹ்  என்று பார்க்க வேண்டும்

மேஜர் இனாம்

ராயட்டு வாரி
1802 காலத்தின் permanent settlement record காலத்தின் ஜாகிர் இனாம் , ஜமீன் நிலமாக இருந்து ராயட்டுவாரி யாக மாற்றம் பெற்றதா என்றும் பார்க்க வேண்டும்.

வெள்ளைக்காரன் காலத்துல இனாம் ஒழிப்பில் இருந்து ஜமீன் நிலமாக மாறியதா என்றும் ஆராய வேண்டும்.

இதற்கு VAO, தாலுகா & கலெக்டர் அலுவலகத்தில் record section இல் இருக்கும் B-record, OSR, RSR, SLR இன் நகல் தேவை உங்கள் நிலத்தின் சர்வே நம்பர் குறிப்பிட்டு ஒரு மனு கொடுத்து, 50 ரூபாய் கட்டி வாங்கி கொள்ளலாம்.

------------
Minor இனாம்
சுதந்திரத்திற்கு முன் பிரிட்டிஷ்காரர்கள் கொடுத்த   DC land (எ) (Depressed Class) நிலமா? என்று பார்க்க வேண்டும்

தொழில் முறை இனாம் நிலம்
----
தச்சர், கருமான், நாவிதர், காவக்காரன்,கர்ணம்,தலையாரி,
வெட்டியான், சக்கிலியர்,புதிரை வண்ணார்  இனாம் நிலமா? என்றும் பார்க்க வேண்டும்.

வெள்ளைக்காரன் காலத்தில் மணியமாக அங்கீகாரிக்க பட்ட ஊழிய மானியங்களான பூசாரி, தேவதாசி,பூ கட்டும் மானியம் நிலமா? என்று பார்க்க வேண்டும்.

சோஸ்திராம் மானியம் ஒழிக்கப்பட்ட நிலமா?என்றும் பார்க்க வேண்டும்.

ஹாஜி இனாம் ஒழிக்கப்பட்ட நிலமா? என்றும் பார்க்க வேண்டும்.

------------
DC அல்லாத பிற இனதவர்க்கு கொடுக்கப்பட்ட குறவர், கள்ளர்(குற்றபரம்பரை)
settlement etc யா என்று பார்க்க வேண்டும்.

மேற்சொன்ன வகை பாடு அனைத்தும் வெள்ளைக்காரன் காலத்தாவை.

---------
சுதந்திரத்திற்கு பின் கொடுக்கபட்ட Assigment land.

Assignment land (எ ) ஒப்படை பட்டா நிலங்கள் எனில் அதற்கு உண்டான (HSD பட்டா , D-பட்டா, நமுனா பட்டா, TKT பட்டா,F-பட்டா, B-memo பட்டா, அனுபந்த பட்டா, Assignment land என்னும் ஒப்படை நிலம் ) யா என்று பார்க்க வேண்டும்.

SC & ST பிரிவினற்கு கொடுத்த AD  assignment Land (Adi Dravidar )பட்டா உள்ள நிலமா என்றும் பார்க்க வேண்டும்.

F-பட்டா.
இது நிலசீர்திருத்த துறையால் வழங்க பட்டது.நிலசீர்திருத்த துறை வேறு revenue டிபார்ட்மென்ட் வேறு.

ஜமீன் ஒழிப்பில் இருந்த நிலங்களை பயனாளிக்கு கொடுத்தது என்பதை உறுதி படுத்தும் ஆவணமே F-பட்டா.

1970-B-Memo land =பீமா பட்டா.

B memo பட்டா நிலம் விற்பனை க்கு வந்தால் வாங்காதீர். ஏன் என்றால் B-memo என்பது நில உரிமை பட்டா அல்ல. அது நீ ஒரு அரசின் புறம்போக்கு நிலத்தின் ஆக்கிரமிப்பு செய்தவன் என்ற govt நோட்டீஸ் மட்டுமே. B-memo நிலத்தில் குடி இருப்பவர்களை எந்நேரமும் அரசு காலி செய்ய சொல்லும்.

Assignment பட்டாவில் உள்ள கண்டிஷன் பார்க்க வேண்டும். கண்டிஷன் பார்க்காமல் வாங்காதீர்.

ஒப்படை நிலங்களை அரசாங்கமே திருப்பி எடுத்து கொண்டு விட்டாதா என்றும் பார்க்க வேண்டும்.

--------

1956-பூமி தான நிலம்

Manual EC
கட்டாயம் 1950-1965 வரை manual EC போட்டு பார்க்க வேண்டும்.

manual EC யில் மட்டும் தான் பூமி தான போர்டுக்கு நிலங்களை பெரும் நில சுவாந்தார்கள் தான பத்திரம் (கிரயபத்திரம்) கொடுத்த அந்த entry  காட்டபட்டு இருக்கும்.

பூமி தான போர்டு பெயரில் பட்டா, சிட்டா ஆகியவை மாறிவிட்டு இருந்தால் VAO அலுவலகத்தின் A-Record இல் காட்டும்.

ஏர் உழவன் பட்டா=பூமி தான நிலத்திற்கு ஆன குத்தகை பட்டா.

Manual EC யில் கிடைக்காத பூமி தான நிலங்களை பற்றிய தகவல்கள் revenue record யில் தான் கண்டுபிடிக்க முடியும்.

பூமி தான நிலம் என்றால் மெட்ராஸ் சைதாப்பேட்டை யில் உள்ள பனகல் மாளிகையில் உள்ள பூமி தான board க்கு சென்று வாங்க விரும்பும் நிலத்தின் சர்வே நம்பர் பூமி தான வரையறைக்குள் வருகிறதா என்று பார்க்க வேண்டும். Master ரெஜிஸ்டர் பார்க்க வேண்டும்.

பூமி தான நிலம்  வாங்காதீர்.

பூமி தான நிலத்தை பயனாளி விற்கு அதிகாரம் இல்லை. பயனாளிக்கு குத்தகை உரிமை மட்டுமே உண்டு.

எனவே அது பூமி தான நிலம் என்று தெரியவந்தால் வாங்காதீர்.

-----------
Zero value நிலம்

-EC யில் நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூதிதானம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம்.

-----------
கோயில் நிலம் -HR&CE நிலமா

வாங்க விரும்பும் நிலம் கோயில் நிலம் ஆஹ்  என்று பார்க்க வேண்டும்.

கோயில் நிலம் என்றால் பயந்து விட கூடாது அது இறையிலி(100% கோயிலுக்கு சொந்தம்), தேவதானம், தர்மதாயம் ஆக  இருக்க கூடாது அவ்வளவே.

கோயில் நிலத்தில் கட்டளை என்று ஒரு பிரிவு உண்டு இதையும் வாங்க கூடாது. கட்டளை எப்படி உடைக்க வேண்டும் என்று தெரிந்தவர்கள் மட்டுமே வாங்கலாம்.

கோயில் மணியமாக இருந்து ரயத்துவாரி நிலமாக 1963 இல் மாறி இருந்தால் அது கண்டிஷன் பட்டாவா என்று பார்க்கனும்.

இந்த நிலம் வாங்கும் போது கவனம் தேவை. ஏன்னா HR&CE நிறைய நிலங்களை திருப்பி எடுத்து கொண்டு உள்ளது.

-----------

ஜமீன் & மானியம் முற்றாக ஒழித்தது 1950 to 1960 களில்.

land reforms act.
இதற்கு நில சீர்திருத்தம் என்று பெயர். ஜமீன் இடம் இருந்து அரசு எடுத்த உபரி நிலம் கிராம கணக்கில் B register லே இருந்து A-register க்கு மாறும் போது உபரி நிலம் , அனாதீனம், உரிமையாளர்கள் பெயர்கள் மாறி உள்ளது போன்ற சிக்கல் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.

-----

1963 minor இனாம் ஒழிப்பு சட்டம்

இனாம் ஒழிப்பு to ரயட்டுவாரி பட்டா. உழுபவனுக்கே நிலம் சொந்தம் scheme.

RSLR இல் "கிராமத்தார்" என்று பட்டா தாக்கல் செய்யப்பட்டு 1963 minor இனாம் ஒழிப்பு சட்டம்
மூலம் ரயட்டுவரி பட்டாவாக மாறி பின்பு 1987 UDR இல் மீண்டும் RSLR இல் உள்ளது போன்று "கிராமத்தார்"  என்று மாறி இருந்தால் அந்த நிலத்தை வாங்காதீர்.

அது தனி நபர் பட்டா என்று மாறி இருக்கா என்றும் பார்க்க வேண்டும்.

--------
1963 கோவில் நிலம் (இனாம் ஒழிப்பு சட்டம், ஒழிப்பு மற்றும் ரயட்டுவாரியாக மாற்றுதல்) சட்டம்

தேவதாசி மானியம் to நிபந்தனை பட்டாவாக உள்ள நிலத்தை பயன்படுத்தி கொள்ளலாமே தவிர சொந்தம் கொண்டாட முடியாது.

ஊழிய மானிய நிலங்கள் கண்டிஷன் பட்டா வா இல்லை normal ராயட்டுவாரி பட்டா நிலமா? ன்னு பார்க்கணும்.

இந்த நிலம் வாங்கும் போது மிகுந்த கவனம் தேவை. தமிழ் நாட்டின் நில நிர்வாக பற்றிய அறிவு உள்ள ஒரு சிவில் லாயர் தான் உங்களை காப்பாற்ற முடியும் m

--------
1961(center)to 1972(TN)Land ceiling act நிலம்

நில உச்சவரம்பு வரையறைகுள் மாட்டிக்கொண்ட நிலமா என்று பார்க்க வேண்டும்.

UDR லே celing இடம் என்று இருக்கானு பார்க்கணும்.

Section 37B இல் வந்த நிலாமா என்று பார்க்க வேண்டும்.

--------
1976 களின் Urban land seiling act

ULC ஆக்ட் இல் மாட்டி கொண்ட ULC நிலமா என்று பார்க்க வேண்டும். ULT என்று note இருந்தால் மெட்ராஸ் பரங்கிமலை ரயில் நிலையம் அருகில் உள்ள உச்சவரம்பு ஆபீசில் சர்வே நம்பர் கொடுத்து விசாரிக்கணும். Innocent buyer என்று சொல்லி land கமிசினர் க்கு மனு செய்யனும்.

ULC நிலம் தவறுதலாக நீங்கள் வாங்கினாலும் நிலத்திற்கு  revenue department(டாசில்தார், VAO )பட்டா மாற்றம் செய்து கொடுக்க மாட்டார்கள். எனவே ஜாக்கிரதை.

8. கோர்ட் attached property வாங்காதீர்.

9. டிவோர்சஸ் கேஸ் உள்ளவரிடம் நிலம் வாங்காதீர். அந்த நிலத்தை அவர் மனைவி maintenance (ஜீவனாம்சம்) வேண்டி மனு செய்து இருந்தால் நீங்கள் போட்ட பணம் காலி.

எனவே விற்பவர் இடம் இந்த விவரத்தை கேளுங்கள். ஒரிஜினல் பத்திரதை காட்டச்சொல்லி பத்திரத்தின் பின் புறம் கோர்ட் சீல் இருக்கா என்று பாருங்கள்.

---------------
10.அடுத்த step, அந்த நிலத்தின் சர்வே என்னை கொண்டுபோய் நிலம் அமைந்துள்ள கிராம VAO கிட்ட அந்த நிலத்தோட FMB, பட்டா, சிட்டா, A ரெகார்ட் வாங்குங்கள்.

11.அடுத்து VAO கிட்ட govt அந்த இடத்தில் ரோடு போட , டேங்க் அமைக்க .i e., பிற்காலத்தில் govt project க்கு எடுத்து கொள்ளுமான்னு கேளுங்கள்?.பாலுமாகேந்திரவின் "வீடு " படத்தை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

அவர்(VAO) டாக்குமெண்ட் தர வில்லை என்றால்,

12. மேற்கூறிய டாக்குமெண்ட் அனைத்தின் அட்டெஸ்ட் copy வேண்டும் என்று VAO office மற்றும் டாசில்தார் ஆபீஸில் RPD போஸ்ட் அல்லது நேரடி மனுவோ அல்லது RTI யில் கேட்டு டாக்குமெண்ட் நகல் வாங்கி கொள்ளுங்கள்.(கண்டிப்பாக attest copy வேண்டும் )

13..அடுத்து நிலத்தின் 1858 காலத்து OSR, RSR A-Record எடுக்க முடிந்தால் இன்னும் நல்லது.

1908,1936 ஆண்டின் SLR, RSLR A- Record, FMB ஒரு   80  to 100 வருடத்திற்கு வேண்டும்.

1987 ஆம் ஆண்டின் FMB, A-record, சிட்டா அடங்கல் கட்டாயம் எடுக்கணும்.

இதன்  நகல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேளுங்கள்.இது ஏன் கேட்க சொல்றோம் என்றால்

1.அது வெள்ளைக்காரன் காலத்தில் DC land @பஞ்சமி நிலம் ஆக இருந்தால் போட்ட பணம் எல்லாம் காலி. சுப்ரீம் கோர்ட் போனாலும் கேஸ் நிக்காது.

2. அடுத்து அது ஜமீன் ஒழிப்பு & கோயில் மானிய ஒழிப்பில் அரசால் எடுக்கப்பட்டு ஆனால் revenue record இல் அரசு நிலம் என்று பதிவேற்றம் செய்யப்படாமல் இருக்கும் நிலமா என்று பார்க்க வேண்டும்.

ஏன் என்றால் இவர்கள் revenue record இல் பதிவேற்றம் செய்யாத ஓட்டையை பயன்படுத்தி UDR சர்வே செய்ய வந்த தனியார் கம்பெனி அதிகாரிகளை கரெக்ட் செய்து UDR இல்  திரும்பவும் ஜமீன் பெயரே ரயத்துவாரி யாக மாற்றி கொண்டார்கள்.

14.அடுத்து ரெஜிஸ்டர் ஆபிசில் அந்த நிலத்தின் மீது யாராவது பத்திரம் பண்ண கூடாதுனு தடை மனு கொடுத்து இருக்காங்களா கேட்டு confirm(உறுதி )பண்ணிக்கணும்.

15..அடுத்து அந்த பத்திரம் முழுமையானா ஆவணமா அதாவது பத்திரம் முழுமையான ஸ்டாம்ப் டூட்டி கட்டி இருக்கிறதா என்று confirm பண்ணுங்க.

16.அடுத்து நிலம் இருக்கும் இடத்தை குறைந்தது 10தடவை பாருங்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் நிலத்தின் மீது ஏதாவது பிரச்சனை, வில்லங்கம், ஆக்கிரமிப்பு இருக்கிறதா என்று கேளுங்கள் இதை ஏற்கனவே யாராவது வாங்கி இருக்கிறார்களா தற்போதைய owner யார் என்றும் கேளுங்கள்

17.அடுத்துநிலம் விற்பவர் வீட்டுக்கு அருகில் இருப்பவர்களிடம் அவருக்கு எத்தனை உடன்பிறத்தோர்,மனைவி, குழந்தைகள், விற்பவருக்கு இந்த நிலம் எப்படி வந்தது . அந்த சொத்தில் விற்பவரின் உடன் பிறந்தோர் க்கு பங்கு இருக்கா?என்று கேளுங்கள்

18.அடுத்து நான் கூறிய டாக்குமெண்ட் எல்லாம் வாங்கி விட்டு உங்கள் நிலத்தின்  ரெஜிஸ்ட்டர் ஆபிஸ் ஏரியாவின் நல்ல சிவில் lawyer பாருங்கள்.

நல்ல லாயர் எப்படி கண்டு பிடிப்பது?.

உங்களுக்கு lawyer refer செய்கிறவரிடம்,

லாயர் எங்கு படித்தார் எந்த ஆண்டில் இருந்து practise செய்கிறார் எத்தனை பத்திரம் பதிந்து இருக்கிறார், எத்தனை லீகல் ஒப்பீனியன் கொடுத்து இருக்கிறார் போன்ற கேள்விகள் கேளுங்கள் புரோக்கர் சொல்லும் லாயர் இடம் செல்லாதீர்.

மேற்கூறிய கேள்விகளுக்கு உங்களால் பதில் கண்டுபிடிக்க முடியும் என்றால் நல்ல லாயாரை கண்டுபிடித்தீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம்.

கண்டுபிடிப்பது உங்கள் சமர்த்தியம்.

Lawyer க்கு பணம் கொடுக்க அழுக கூடாது. அந்த பணம் தான் நிலத்தின் முதலீடு நீங்கள் விற்பவருக்கு கொடுக்கும் பணம் அல்ல.

19. எல்லாம் சரியாக அமைந்து விட்டால் அடுத்து ஒரு govt registered surveyor பாருங்க. அவர் நிலத்தை அளந்து, encroachment, deviation எல்லாம் சொல்லுவார் பின்பு படத்தை வரைந்து தருவார்.

20. தயவு செய்து டாக்குமெண்ட் writer வைத்து பத்திரம் எழுதலாமா என்று நிதானமாக யோசிக்கவும்..பத்திரம் எழுதிற licens
e govt 1990களில் இருந்து தரவில்லை என்று கேள்வி . சந்தேகம் என்றால் லைசெஸ் நம்பர் கேளுங்கள்.

பாதி பேர் 10வது தாண்டதவர் . மீதி பேர் காலேஜ் ஹே போகாமல் 700KM தள்ளி இருக்கும் ஆந்திர, கருநாடகவில் பணம் கொடுத்து LLB டிகிரி வாங்கினவர் எல்லாம் பழைய டாக்குமென்டில் இருந்து copy paste செய்கிறார்கள் உங்களுக்கு என்று draft செய்வது குறைந்த நபர்களே.

========
காசு போனாலும் நல்ல சிவில் லாயர் வைத்து எழுதுங்கள்.சில ஆயிரம் advocate பீஸ் க்கு கஞ்ச படாதீர்கள். கொஞ்சம் மிஸ் ஆனாலும் பல லட்சம், கோடி நஷ்டம்.

திரும்பவும் சொல்றேன் நல்ல லாயர்  கண்டு பிடிப்பது உங்கள் சமர்த்தியம்.

========
நாம் டாக்குமெண்ட் வேண்டி govt ஆபிஸ் க்கு நடப்பது நமது வருங்கால நன்மைக்கே நான் சொன்ன ஆவணங்கள் இல்லாமல் நிலம் வாங்காதீர்.

அடுத்து லாயர், surveyor consulting, நிலம் விற்கும் நபரின் அண்டை வீட்டார், நிலம் இருக்கும் இடத்தின் jஅண்டை வீட்டார் இடம் பேசாமல் இல்லாமல் புதிய சொத்து வாங்காதீர்.
இதுதான் நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை...

தகவல்;

கன்சியூமர் கேர்கிளப் ஆப் இந்தியா....

Internet existed during the Mahabharata

Internet existed during the Mahabharata, says Tripura Chief Minister Biplab Kumar Deb ‘How could Dhritarashtra see through Sanjay’s eyes? This means technology was there, internet was there....😃😃😃

இந்து புராணங்களின் கால கணிப்பின்படி யுகங்கள் நான்கு வகைப்படும். அவை:கிரேதா யுகம், திரேதா யுகம், துவாபர யுகம்,கலியுகம்.இவற்றுள் சிறிய கடைசி யுகமான கலியுகம் 4,32,000 ஆண்டுகள் கொண்டதெனவும் துவாபர யுகம் கலியுகத்தைப்
போல் இரண்டு மடங்கு கால அளவு அதாவது 8,64,000 ஆண்டுகள் கொண்டதெனவும் புராணங்கள் தெரிவிக்கிறது. கலியுகத்தைப்போல் மூன்றுமடங்கு பெரியதான திரேதா யுகம் 12,96,000 ஆண்டுகள் கொண்டதாகவும். கலியுகத்தின் நான்கு மடங்கு கொண்ட கிருதா யுகம் 17,28,000 ஆண்டுகள் கொண்டதாகவும் தெரிவிக்கிறது

ராமாயணம் நடைபெற்றதென சொல்லப்படுவது இரண்டாவது யுகமான திரோதா யுகம். மகாபாரதம் நடைபெற்றதாக சொல்லப்படுவது மூன்றாவது யுகமான துவாபர யுகம்..புராணப்படி  நடந்ததாக சொல்லப்படும் இந்த இரண்டு கதைகளுக்கும் இடையே லட்சக்கணக்கான வருடங்கள் கொண்ட  மிகப்பெரிய கால இடைவெளி இருந்ததெனவும் சொல்லப்படுகிறது. இதன்படி நம் புராண அவதார புருஷர்கள் 39லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே நாகரீக மனிதர்களாக வாழ்ந்ததாகிறது...

பூமியின் வரலாறு...

சூரிய குடும்பம் தோன்றக் காரணமாக அமைந்த சோலார் நெபுலா எனும் அடர்ந்த வாயுப் படலத்திலிருந்து இயற்கையான திரள் வளர்ச்சி (acccretion) மூலம் சூரியனுடன் சேர்ந்து 4.54 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் அதாவது 454 கோடி வருடங்களுக்கு முன்னர் நம் பூமி தோன்றியதென அறிவியல் கூறுகிறது...

அதேபோல் நம் பூமியில் உயிர் வாழ்க்கை தொடங்கி 100 கோடி வருடங்களே ஆகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.அதில் மனித இனம் என்று எடுத்துக்கொண்டால் குரோமன்யான் மனிதனுக்குப் பின் தோன்றிய நியோ லித்திக் என்னும் புதிய கற்கால மனிதனே மனித நாகரிக இனத்தின் தொடக்கமாகக் கருதப்படுபவன். இன்றைக்கு சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்னரே முழுமையான
இந்த நியோலித்திக் நாகரிக மனிதன் தோன்றி வாழ்ந்தான் என்று புதைபொருள் வரலாற்றறிஞர்கள் உறுதிபடக் கூறுகின்றனர்...

40,000 ஆண்டுகளாக மனித சமூகம்,இன்றைய பண்பாட்டையும், நாகரீகத்தையும் தனது கூட்டுழைப்பு மற்றும் முயற்சியால் அடைந்திருந்த போதிலும், இங்கே மதங்கள் அறிவியலின் ஒளியை தடை செய்து கொண்டு தனக்கான ஆட்சியை தடங்கலின்றி நடத்திக்கொண்டுதான் இருக்கிறது...மதங்கள் அனைத்தும் அறியாமையையும், கேள்விக்கிடமற்ற அடிமைத்தனத்தையும் வைத்து மக்களின் அறிவுத் தேடலை காலம் காலமாய் தடை செய்துகொண்டே வருகின்றன. இதன் பொருட்டே இம்மதவாதிகள் பல நூறு குதர்க்கங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இணையம் வந்த பிறகு டார்வின் பொய், ஐன்ஸ்டீன் தோல்வி சிதம்பரம் நடராஜர் பாதம் பூமியின் மையப்பகுதியில் உள்ளதென்று தமது முட்டாள்தனங்களுக்கு தைரியமாக பெருமை கொள்கிறார்கள்.அதிலும் அரசியலில் மதம் கலக்கும்போது ஓட்டு வங்கி ஆதாயத்திற்காக அரசாங்கமே முன்னின்று மக்களை வடிகட்டிய முட்டாளாக்கும் வேலையை சிறிதும் கூச்சமற்று செய்கிறது...

டார்வின் தியரியின்படி உயிர்கள் பரிணாம வளர்ச்சி பெறப்பெற அவற்றின் மூளைவளர்ச்சியும் சிந்திக்கும் ஆற்றலும் வளர்ந்துகொண்டே வந்துள்ளது..கற்பனை வளம் கொண்ட மனிதன் அந்தந்த காலத்தில் தனக்குத் தோன்றிய கற்பனை வளத்தை மற்றவர்க்கு எடுத்தியம்பதில் தவறில்லை...ஆனால் அறிவியல் வளர்ச்சியில் புதிய புதிய உண்மைகள் புலப்படும்போது பழைய பஞ்சாங்க சிந்தனைகளை விடாமல் உண்மையென எடுத்தியம்புவதும் அறிவியலை வைத்துக் கொண்டு மதங்களின் முட்டாள்தனத்தை அகற்றுவதற்கு முயலாமல் ,மாறாக ஊக்குவிக்கும் வேலையை செய்வதும் அதற்கு அரசே துணை போவதும் அறிவியலாளர்களின் உழைப்பு மற்றும் அவர்தம் தியாத்தின்மீது காறி உமிழும்
செயல்....

Friday, August 27, 2021

பேச விரும்பும் பிரச்சனையைப்பற்றிய பின்னணியைச் சுருக்கமாகச் சொல்லுங்கள்

என். சொக்கன்

நண்பர் ஒருவருடைய தம்பி முதன்முறையாக ஒரு பெரிய நிறுவனத்தில் தொலைபேசி வழி நேர்காணலுக்குச் (Telephone Interview) செல்கிறார். ‘எனக்கு என்னோட துறையில ஓரளவு அனுபவம் இருக்கு, ஆனா, பெரிய நிறுவனங்கள் எதிர்பார்க்கறமாதிரி அதை ஒழுங்கா, சுருக்கமாத் தொகுத்துச் சொல்லத் தெரியலை. எனக்கு ஒரு Structure அமைச்சுக் கொடுங்களேன், அதுல என்னோட அனுபவங்களை அழகா மாட்டிவிட்டுப் பேசிடறேன்’ என்றார். அவருக்கு எழுதிக் கொடுத்த குறிப்புகள் இவை:

1. முதலில், நீங்கள் பேச விரும்பும் பிரச்சனையைப்பற்றிய பின்னணியைச் சுருக்கமாகச் சொல்லுங்கள். அதில் அவர்களுக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளனவா என்று கேளுங்கள். இது மிகவும் முக்கியம். ஒருவேளை நீங்கள் இப்படிக் கேட்காமல் தொடர்ந்து அடுத்தடுத்த விஷயங்களைப் பேசிக்கொண்டே சென்றால், பின்னால் சொல்லப்படுகிற எந்த விஷயமும் அவர்களுக்குப் புரியாது.

2. அடுத்து, அந்தப் பிரச்சனையைத் தெளிவாக விவரியுங்கள். அது ஏன் பிரச்சனை என்று புள்ளிவிவரங்களுடன் விளக்குங்கள். ‘என்னுடைய மேனேஜர் இந்தப் பிரச்சனையைத் தீர்க்கச் சொன்னார், அதனால் நான் தீர்த்தேன்’ என்று சொல்லாதீர்கள், மேனேஜர் ஏன் அந்தப் பிரச்சனையைத் தீர்க்க விரும்பினார் என்று உங்களுக்குத் தெரியவேண்டும், அதாவது, அந்தப் பிரச்சனையால் யார் அவதிப்பட்டார்களோ அவர்களுடைய வலியைச் சொல்லவேண்டும், இல்லாவிட்டால் ‘உங்கள் ப்ராஜெக்ட் உங்களுக்கு உசத்திதான். ஆனால், அதனால் யாருக்கு என்ன பயன்?’ என்கிற கேள்வி வரும்.

3. மூன்றாவதாக, அந்தப் பிரச்சனையை எப்படித் தீர்த்தீர்கள் என்று சொல்லுங்கள். அதில் உங்கள் குழுவின் பங்கைச் சுருக்கமாகவும், உங்கள் பங்கை விரிவாகவும் பேசுங்கள், ஆனால் நீங்கள் செய்யாத எதற்கும் Credit எடுத்துக்கொள்ளாதீர்கள். அதற்காக, ‘எல்லாம் அவர்கள் செயல்’ என்றும் விட்டத்தைப் பார்க்காதீர்கள். உங்கள் செயலும் அதில் உண்டு. அதை உரக்கச் சொல்லுங்கள்.

4. நான்காவதாக, அந்தப் பிரச்சனை தீர்ந்தபின் என்ன மாற்றம் வந்தது, என்ன பலன் விளைந்தது என்று புள்ளிவிவரங்களுடன் சொல்லுங்கள். ‘இந்தப் பணிக்காக என் மேனேஜர் என்னைப் பாராட்டினார், எனக்குப் பிரமோஷன் வந்தது, சம்பளம் உயர்ந்தது’ என்பவற்றைவிட, ‘இதனால் 28% வாடிக்கையாளர்களுக்குத் தலா 25 ரூபாய் மிச்சமானது’ என்பது உசத்தியான புள்ளிவிவரம்.

5. இதுபற்றி அவர்களுக்கு ஏதும் கேள்விகள் உள்ளனவா, எதையாவது இன்னும் விரிவாகப் பேசவேண்டுமா என்று கேளுங்கள், அவர்களுடைய குறுக்குக் கேள்விகளுக்குத் தெரிந்த பதில்களைச் சொல்லுங்கள், தெரியாததை ஒப்புக்கொள்ளுங்கள்.

6. அடுத்த எடுத்துக்காட்டுக்குச் செல்வதற்குமுன்னால், ‘முதல் எடுத்துக்காட்டை விளக்குவதற்கு நான் எடுத்துக்கொண்ட நேரம் சரிதானா? இன்னும் சுருக்கமாகச் சொல்லவேண்டுமா, இன்னும் விரிவாகப் பேசவேண்டுமா?’ என்று கேளுங்கள். அதன்படி அடுத்தடுத்த எடுத்துக்காட்டுகளை அமையுங்கள்.

7. எதையும் சரியாக வடிகட்டிச் சொல்லுங்கள். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியும் என்பதால் அனைத்தையும் கொட்டவேண்டியதில்லை, எதைச் சொன்னால் மறுமுனையில் உள்ளவருக்கு ஆர்வம் வரும் என்பதைத் தெரிந்துகொண்டு அதைமட்டும் சொல்லவேண்டும், அது ஒரு கலை, பயிற்சியால்தான் வரும்.

8. இவை அனைத்தையும் நினைவில் வைத்துக்கொள்ள இயலாது என்றால், குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள். நேர்காணலின் தொடக்கத்தில், ‘நான் குறிப்புகளைப் பார்த்துப் பேசலாமா?’ என்று கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் தாளில் உள்ளதை அப்படியே படிக்காதவரை யாரும் மறுக்கமாட்டார்கள். ஒருவேளை மறுத்தால் நினைவிலிருந்து பேசுங்கள். இது ஒன்றும் மெமரி ஒலிம்பிக்ஸ் இல்லை, தகவல்களைவிட நீங்கள் என்ன செய்தீர்கள் என்கிற (உண்மைக்) கதைதான் முக்கியம்.

9. நீங்கள் எந்த நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பம் செய்திருக்கிறீர்களோ அவர்களுடைய பணிப் பண்பாடு (Work Culture), கொள்கைகள் (Principles) போன்றவற்றைப்பற்றிப் படியுங்கள். அநேகமாகக் கேள்விகள் அதை ஒட்டிதான் இருக்கும். உங்கள் எடுத்துக்காட்டுகளை அதனுடன் பொருத்திப் பேசினால் உடனடி வரவேற்பைக் காணலாம். இதற்குக் கொஞ்சம் கூடுதல் உழைப்பு தேவைப்படும். ஆனால், உங்கள் பதிலை அவர்கள் அவர்களுடைய கொள்கைகளுக்குப் பொருத்துவதைவிட, நீங்களே அதைப் பொருத்திவிட்டால் அவர்களுக்கு வேலை மிச்சம், அவர்கள் மாற்றிப் பொருத்திவிடுகிற ஆபத்தையும் தவிர்க்கலாம்.

10. நிறைவாக, பொய் வேண்டாம். ஒரு பொய்யை மறைக்க நூறு பொய் சொல்கிற அவஸ்தை ஒருபுறமிருக்க, பலனைப்போல வழியும் தூய்மையாக இருக்கவேண்டும் என்கிறார் காந்தி. முறையற்ற வழியில் கிடைக்கும் பலன் எப்பேர்ப்பட்டதாக இருந்தாலும் நமக்கு வேண்டாத அசிங்கம்தான்.

Tuesday, June 15, 2021

புத்தகம் படிக்கும்போது மனம் அலைபாய்கிறது. ஊன்றிப் படிக்க இயலுவதில்லை. என்ன செய்யலாம்?’

என். சொக்கன்


‘புத்தகம் படிக்கும்போது மனம் அலைபாய்கிறது. ஊன்றிப் படிக்க இயலுவதில்லை. என்ன செய்யலாம்?’ என்று ஒரு நண்பர் ட்விட்டரில் கேட்டிருந்தார். அவருக்கு நான் வழங்கிய குறிப்புகள் இவை. உங்களுக்கும் பயன்படலாம்:

1. கலவையாக எல்லாத் தலைப்புகளிலும் படிக்காமல், அடுத்தடுத்து உங்களுக்குப் பிடித்த தலைப்புகளில்மட்டும் நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள். அந்த ஆர்வம் உங்களுடைய கவனத்தை மீட்டுத்தரலாம். படிக்கும் பழக்கத்தை ஒழுங்குபடுத்தியபின் மற்ற தலைப்புகளைப் படிக்கலாம்.

2. படிப்புக்கென்று இலக்குகள் வைத்துக்கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, நாள்தோறும் 10 பக்கம் என்பதுபோல் உங்களுக்குக் கட்டுப்படியாகும் ஓர் இலக்கில் தொடங்கலாம். அந்த இலக்கை நீங்கள் எட்டுகிறீர்களா, இல்லையா என்பதைக் குறித்துவையுங்கள். எட்டாவிட்டாலும் பரவாயில்லை, கணக்கெடுக்கிறோம் என்கிற உணர்வே நமக்கு ஓர் ஒழுங்கைக் கொண்டுவரும்.

3. உங்கள் படிப்புப் பழக்கத்தைக் கண்காணிக்கும் நண்பர் (Accountability Buddy) ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். ‘டேய், அந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பிச்சியே, என்ன ஆச்சு? எவ்ளோ படிச்சிருக்கே? எப்போ முடிப்பே? இன்னுமா முடிக்கலை?’ என்றெல்லாம் உங்களைத் தொடர்ந்து தொந்தரவு செய்வது அவருடைய வேலை. (பதிலுக்கு நீங்கள் அவருக்கு ஒரு சாக்லெட் கேக் வாங்கித் தரலாம்.)

4. Goodreads போன்ற வாசிப்போருக்கான இணையத் தளங்கள், ஃபேஸ்புக் குழுக்களில் சேர்ந்து உங்களுடைய படிக்கும் பழக்கத்தைப் பதிவு செய்யத் தொடங்குங்கள். அங்குள்ள மற்றவர்களுடைய படிப்பைப் பார்க்கும்போது இன்னும் ஊக்கம் வரும்.

5. ஒரு புத்தகம் ரொம்பப் போரடிக்கிறது என்றால், அதை விட்டுவிட்டு வேறு புத்தகம் படியுங்கள். காசு கொடுத்து வாங்கிவிட்டோமே என்பதற்காகக் கஷ்டப்பட்டுத் தொடர்ந்து படிக்காதீர்கள், அது உங்கள் ஒட்டுமொத்தப் படிப்பு வேகத்தைக் குறைக்கும், தன்னம்பிக்கையைப் பாதிக்கும்.

6. படிக்கும்போது வெளித் தொந்தரவுகளைக் குறைக்கப் பாருங்கள். எடுத்துக்காட்டாக, தனி அறையில், மொட்டை மாடியில், பக்கத்திலுள்ள பூங்காவில் படிக்கலாம். அப்போது அருகில் தொலைபேசி இல்லாவிட்டால் நல்லது, அது இயலாது என்றால், சைலன்ட் மோட் நல்லது.

7.படிக்கும் புத்தகங்களிலிருந்து குறிப்பெடுங்கள், முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடுங்கள், ஃபேஸ்புக், அமேசான், Goodreads போன்ற தளங்களில் சிறு விமர்சனம் எழுதுங்கள், இவை கூடுதல் ஊக்கத்தைத் தந்து படிக்கும் பழக்கத்தை வளர்க்கும்.

8. படுக்கையில் படிப்பது நல்ல பழக்கம்தான். ஆனால், சிலருக்கு அது தூக்கத்தைக் கொண்டுவரும். அப்படியென்றால், படுக்கையில் படிக்காதீர்கள். இன்னும் சரியாகச் சொல்வதென்றால், படுத்துக்கொண்டு படிக்காதீர்கள், உட்கார்ந்த நிலையில் படியுங்கள். (அதே நேரம், படிப்புக்காகத் தூக்கத்தைத் தியாகம் செய்யாதீர்கள். நாள்தோறும் உங்கள் உடலுக்குத் தேவையான தூக்கத்தைக் கண்டிப்பாகக் கொடுங்கள்.)

9. இவை அனைத்தையும் உண்மையுணர்வோடு செய்தபிறகும், ஒரு குறிப்பிட்ட நாளில் உங்களால் படிக்க இயலவில்லை என்றால், பரவாயில்லை, உலகம் இடிந்து விழுந்துவிடாது. ‘நாளைக்குப் படிப்பேன்’ என்று சொல்லிவிட்டு நிம்மதியாக இருங்கள், மன அழுத்தம் வேண்டாம்!

Sunday, June 13, 2021

I do this every weekend:

என். சொக்கன்

I do this every weekend:

1. Start with a manageable to-do list
2. Sort those items using their order of priority
3. Complete 90% of them
4. [Sunday Night] Look at the remaining 10% and question whether my original prioritization was right. Conclude that I am an idiot for not prioritizing THIS 10% which should've been on the top