சரவணன் சந்திரன்
Via Facebook
2018-03-29
இன்னமும் கூட சில ஈத்தரைகள், ராகுல்காந்தியிடம் பேசி கர்நாடக அரசை தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தவேண்டும் என்கிறார்கள். அதாவது, பிஜேபிக்கு விழுற அடியில பாதி காங்கிரஸ்க்கு போகனுமாம்!
இப்போது பிரச்சினை கர்நாடகா தண்ணீர் திறந்துவிடனுமா இல்லையா என்பதல்ல!
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தன்னிச்சையாக செயல்படும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும். அப்படி அமைந்தால் பிறகு யாரும் யார் காலையும் பிடித்து தொங்க வேண்டியதில்லை! இது ஒன்றும் பிச்சை கேட்கிற விஷயமில்லை! அதற்குத்தான் நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க சொன்னது உச்சநீதிமன்றம்!
சரி இந்த ஆணையத்தை யார் அமைப்பது?
பாகிஸ்தான் அரசா, பங்களாதேஷ் அரசா? இந்திய அரசு தானே ஐயா அமைக்கவேண்டும்! இந்தியாவில் ஆட்சியில் இருப்பது யார்? பாஜக அரசு! ஒருவேளை காங்கிரஸ் ஆட்சி என்றால் அந்த அரசை கேட்கலாம்! பிறகு மத்திய பாஜக அரசை கேள்வி கேட்பதை விட்டுவிட்டு ராகுலை கேள், சித்தராமையாவை கேள் என்பதெல்லாம் கடைந்தெடுத்த தெள்ளவாரித்தனம்!
https://www.facebook.com/Sivasankaran.Saravanan86/posts/2023022754393377