Saturday, November 30, 2024

தகாத உடலுறவு, மாடு, குதிரைய செக்ஸ் பண்றது, ரேப் பண்றது, சின்னப் பிள்ளைகள பலாத்காரம் பண்றது - இதை தவிர இந்துமதத்துல என்ன கலைய வளர்க்க போறாங்க ?

சீனிவாசன் நாராயணன்

தகாத உடலுறவு, மாடு, குதிரைய செக்ஸ் பண்றது, ரேப் பண்றது, சின்னப் பிள்ளைகள பலாத்காரம் பண்றது - இதை தவிர இந்துமதத்துல என்ன கலைய வளர்க்க போறாங்க ?

இந்துக்கடவுள்களின் ஒழுக்கக்கேடான தகாத உடலுறவுகள் - இதன் மூலம் இந்துமக்களுக்கு இந்துமதம் என்ன சொல்ல வருது....?

1. குந்தி – ( திருமணத்திற்கு முன் கள்ளஉறவு)
குந்தி திருமணத்திற்கு முன்பே சூரியனிடம் கள்ளஉறவு கொண்டமையால் பெற்றெடுத்த கர்ணனை ஆற்றில் விட்ட கதை அனைவரும் அறிந்ததே. திருமனத்திற்கு பின்பு ஐந்து பிள்ளைகள் பெற்றாலும் எவையுமே அவள் கணவன் பாண்டுவுக்கு பிறந்ததில்லை மகாபாரதம் படித்தவர்களுக்கு நல்லாவே தெரியும்.

2. பத்மை - (தகப்பன் மகள் உறவு)
சிவன் பார்வதி திருமணத்தில் பிரம்மா புரோகிதனாக இருந்து விவாக ஓமம் செய்தான். பார்வதி ஓமகுண்டத்தை இடது கையால் முந்தானையை பிடித்து சுற்றிவருகையில் அவளுடைய தொடை பிரமனின் கண்ணில்பட்டது. அதை பார்த்தவுடன் பிரம்மா மோகத்தால் இந்திரியம் (விந்து) ஸ்கலிதமாயிற்று. அந்த இந்திரியத்தை குலத்திலுள்ள தாமரை பூவில் விட அதில் பத்மை என்ற புத்திரி பிறந்தாள்.
பத்மை அழகில் மயங்கி மோகம்கொண்டு அவள் சம்மதிக்க மறுக்கவே சமாதான வேத மந்திர வாக்கியத்தை சொல்லுகிறான்.

" மாதாமுபைத்ய கசாரமுபைய, புத்ரார்த்தீக சகாமார்த்தி நாபாத்திரலோகா நாஸ்தீத ஸ்ரவம்பரவோ விந்து ஹாம் தஸ்மாத் புத்தார்த்தம் மாதரம், ஸூரஞ்சதி,ரோஹதி"

இதன் விளக்கம் :-
புத்திராத்த நிமித்தம் தாய், தமக்கை, மகன், பிள்ளை யாருடனும் கூடலாம்.
" தாயிடமும் மகளிடமும் படுத்து படுத்து பிள்ள பெத்துக்கிலாம் இதுதாங்க இந்துமத யோக்கியதை"

3.  (தாய், மகன் உறவு) - திருவிளையாடல் புராணம்..
அவந்தி என்ற ஊரில் ஒரு பார்ப்பான் வாழ்ந்து வந்தான். அவனுடைய மனைவி ஒப்பில்லா அழகுடையவள். அவளது மகன் வளர்ந்து வாலிபன் ஆனதும், அவனது தாயின் மேலேயே ஆசை கொண்டான்.
அவளும், நாணம், வெட்கம் எல்லாவற்றையும் விட்டு, தன்னுடைய மகனிடம் உடலுறவு கொண்டாள். இதற்கு இடையூறாக இருந்த அவளுடைய கணவனை (தகப்பனை) கொன்றான். இந்த பாவத்தை கழிக்க சிவராத்திரி நாளில் சிவனடியார்களுக்கு பணி செய்து சூரியன் உதிக்கும் முன் அருகம்புல்லை பசுமாட்டிற்கு கொடுத்து மூன்று காலமும் நீராடி108 முறை கோவிலை வலம் வரவேண்டும் என்று திருவிளையாடல் புராணம் 26ஆவது திருவிளையாடல் மாபாதகம், தீர்த்தபடலம். கூறுகிறது.

4.  லட்சுமி - (சகோதரனிடம் காமம்)
சமுத்திர தேவனின் செல்வ புதல்வி லட்சுமிதேவி தன் ககோதரன் அசுவனைக் கண்டு காமம் கொண்டாள்.
 இதை கண்ட விஷ்ணு கோபம் கொண்டு "கவர்ச்சி மிக்க கண்களைக் கொண்டுள்ள காமகி! நீ யாரைப் பார்க்கிறாய்? நான் சொல்லும் வார்த்தைகள் கூட உன் காதில் விழவில்லையா? காமக் கடலில் நீயும் மூழ்கி விட்டாயா?" என்று கோபத்துடன் சீறினான். 

அவள் கணவன் கேட்டதற்கு பதிலளிக்காது பெண்குதிரை வேஷம் எடுத்த தன் சகோதரனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டாள். இந்த புணர்ச்சியில் பிறந்த வம்சமே 'ஹெய்ஹயகானாக்கள்' என்று அழைக்கப்ட்டனர்.
ஆதாரம் - தேவிபாகவாத புராணம் (6,17,53)

5.  (சொந்தங்களுடன் உடலுறவு) மனுசாஸ்திரம்..
ஆண் பிள்ளை இல்லாமல், ஒரு குலம் நசிந்து போனால், அப்போது அந்தப் பெண், தன்கணவர்,மாமனார் முதலியோரின் உத்தரவு பெற்றுக்கொண்டு, தன் மைத்துனர் அல்லது தன்கணவனுக்கு ஏழு தலைமுறைக்குட்பட்ட
பங்காளி களுடன் புணர்ந்து ஒரே ஒரு பிள்ளையைபெற்றுக் கொள்ள வேண்டும்.
(மனு அத்தியாயம் 9; சாஸ்திரம் 59)

6. (அண்ணியுடன் உறவு) பிரகஸ்பதி முனிவர்.
இந்து மதத்தில் தேவர்களிக்கெல்லாம் குருவான பிரகஸ்பதி தனது அண்ணன் மனைவி கர்ப்பமாக இருந்த போது, அண்ணன் இல்லாத வேளையில் முறைகேடாக உறவு கொண்டுடான். அதில் பிறந்த குழந்தைதான் (த்வஜாபுத்திரன்) பரத்வாஜா ஆவர். 
இந்த மகன் தந்தையை மிஞ்சிய காம வெறியன். இந்த பரத்வாஜா கிராதிஸி அப்ஸரா என்ற பெண்ணை நினைத்து விந்து வெளியேறிய போது உருவனவரே, வேதவிற்பன்னர் துரோணர். எப்படி இருக்கு இந்துமத ரிஷிகள், முனிவர்களின் யோகியதைகள்.
(ஆதாரம் - மகாபாரதம் ஆதிபர்வம் அத் 131, ஸ்கந்த 9 அத் 20 )

7.  சிவன், விஷ்னு -(ஓரினச்சேர்க்கை)
விஷ்னுவின் மோகினி அவதாரக் கதை ஏகம் இருந்தாலும், சிவன் மோகினியின் மேல் கொண்ட காமத்தால் உடலுறவு கொண்டு ஐயப்பன் பிறந்தாக கூறப்படுதல் ஆண் ஓரகினச் சேர்க்கை தானே!.

8. விஷ்ணு, நாரதர் - ( ஓரினச்சேர்க்கை)
மகா விஷ்ணுவும் நாரதரும் கலவி (homosex) செய்ததில்அவர் இரண்டு பேருக்கும் அறுபத்திரெண்டு குழந்தைகள் பிறந்தது. அந்தக் குழந்தைகள் ஒவ்வொன்றுக்கும் பெயர் வைத்தார்கள். அதுதான் 62 தமிழ் வருடங்கள்.

9. சூரியபகவான்,அருணன் - (ஓரினச்சேர்க்கை)
சூரியனின் ரத சாரதியின் பெயர்அருணன். இவன் இந்திரலோக வினோதங்களைக் காண்பதற்கு என்றுபெண் வேடம் பூண்டு அங்குச் சென்றான். இதைக் கண்ட இந்திரன் பெண் வேடத்திலிருந்த அருணனை மோகித்துப் புணர்ந்தான் இதனால் வாலி என்பவன் பிறந்தானாம்.

இந்நிகழ்ச்சியால் அருணன் வேலைக்குத் தாமதித்து வர, சூரியன் காரணம் கேட்டு,
நடந்ததையறிந்து, மீண்டும் அருணனைப் பெண் வேடத்தில் வரச் செய்ய, அவன் அப்படியே வர, அவனைச் சூரியன் புணர்ந்தான் அதனால் சுக்ரீவன் பிறந்தானாம்.

10. ராமன் பிறப்பு - Animal sex (மிருக்கங்களுடன் புணர்ச்சி)..
தசரதன் புத்ர காமேஷ்டி யாகம் செய்தான்.
அந்த யாகத்தில் குதிரையுடன் மூன்று பட்ட மகிஷிகளும் ஓர் இரவை கழித்துள்ளார். வெட்டுண்ட குதிரையுடன் ஒரு இரவு முழுவதும் மூன்று மனைவியரும் கட்டிப் புரண்டதாக வால்மீகி ராமாயணத்தில் எழுதப் பட்டுள்ளது. அதன் பிறகே நான்கு புதல்வர்கள் பிறந்துள்ளனர்.

11.  விஷ்னு - (மாற்றான் மனைவியுடன் உறவு). சலந்தரன் எனும் அசுரனின் மனைவி பிருந்தை. அவன் சிவனுடன் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்போது, விஷ்னு சலந்திரனாக வந்து பிருந்தையுடன் இருந்தாக கூறப்படுகிறது. அவள் இட்ட சாபமே ராம அவதாரத்தில் சீதையை ராவணன் கவர்ந்து செல்ல காரணம் என்கின்றார்

12.  பாஞ்சாலி – (அண்ணி கொழுந்தன் உறவு அல்லது ஐந்து பேருடன் உறவு)..
திரௌபதி என்பது உண்மையான பெயர் பாண்டவர்கள் ஐவருக்கும் மனைவியானதால் பாஞ்சாலியாக மாறிப்போனது. ஆனால் சிலர் தர்மனின் மனைவி என்று அறிவி்க்கப்பட்டாலும், ஐந்து பேருக்கும் மனைவியாக கலவி சுகம் கொடுத்திருக்கிறாள். ஆதாரம் - மகாபாரதம்.

13.  ருமை - (தம்பியின் மனைவியுடன் உறவு)
சுக்ரீவனின் மனைவி ருமை. ஆனால் சுக்ரீவனை வஞ்சித்துவிட்டு அண்ணன் வாலி ருமையுடன் வாழ்ந்ததாக ராமயணம் கூறுகிறது.

14.  விவச்சாரிகளிடம் உறவு - மனுசாஸ்திரம்
சுலோகம்-
வேஸ்யாதர்சனம் புண்யம்
ஸ்பர்சனம் பாவ நாசனம்
சும்பனம் சர்வ தீர்த்தானம்
மைதுனம் மோட்ச சாதனம்

விளக்கம் :-
வேசிகளை (விபசாரிகளை)ப் பார்ப்பது புண்ணியம். அவர்களைத் தொட்டால் நீங்கள் செய்த பாவமெல்லம் போய்விடும்.
கார்ப்பரேசன் குழாய் தண்ணீரை ஒரு செம்பில் வைத்துக் கொண்டு புரியாத மந்திரங்களை, கங்கா, யமுனா, சரஸ்வதி, கோதாவரி, காவேரி என்று சொல்லிக்கொண்டு மா இலையால் வீடு முழுவதும் தெளிக்கிறாரே புரோகிதர் அந்த சகல தீர்த்தங்களும், அந்த விபச்சாரிகளை முத்தமிடும் பொழுது வாயில் ஊறும் எச்சிலுக்கு சமமாகும். அதற்கும் மேல் விபச்சாரிகளை புணர்வது மோட்சத்திற்கு வழியாகும்.

15.  இது எந்தமாதிரி உறவுனே தெரியல.. படித்துவிட்டு நீங்களே ஒரு பேரு வைங்க நண்பர்களே..

கலைவாணி, சரஸ்வதி என்ற பெண் கடவுள்கள், தமது கன்னி வயதில் விஷ்ணுவின் காதலிகளாக இருந்தனர்.

இவர்களுக்கிடையில் யார் விஷ்ணுவின் காதலியாக தனித்து இருப்பது என்ற சண்டையின் போது, விஷ்ணுவின் மனைவி லட்சுமி தலையிட்டு, "ஒரு மனிதன் ஒரு மனைவியை வைத்துக்கொண்டு இன்பம் அனுபவிக்க முடியாதபோது அதிகமான மனைவிகளை வைத்திருத்தல் அவனைப்பற்றி என்னவென்று சொல்வது என்று கணவனை குற்றம் சாட்டி, தீர்வாக, கலைவாணியை சிவனிடம் படுக்கும் படியும், சரஸ்வதியை பிரமாவிடம் படுக்கும் படியும் கூறி சக்களத்தி சண்டைக்கு தீர்வு கண்டாள். ஆதாரம் - தேவிபாகவாத புராணம் 47,49,53.

இதுதான் உங்களோட இந்து மதத்தோட கலைகள். உன்காந்து புராணம் புராம் படிச்சி வர தலைமுறைகளையும் நாசமாக்குங்கள்.. இதுல மே 1 தொழிலர்கள் தினமில்ல னு ஒரு சவடால் வேற. 

மதம் என்பது மனிதனை ஒருபோதும் அறிவாக சிந்திக்க விடாது. மதம் மனிதனை மூடனாக்கும், முட்டாளக்கும், குருடர்களாக்கும் இந்த பாதிப்பில்தான் மனிதன் அறிவிழந்து மதவெறியோடு வன்முறையில் செயல்பட்டுக்கொண்டிருகிறார்கள்.

மதத்தின் வக்கிரங்களையும், மடத்தனத்தையும்  ஆதாரத்தோடுதான் பதிவிடுகிறேன். இது உண்மை என்று தெரிந்தும், அறிவாக சிந்திக்காமல் ஆபாசமான வார்த்தைகளால் என்னை திட்டியாவது உங்கள் ஆபாச மதத்தை காப்பாற்றிக்கொள்ள பார்க்கிறீர்கள்.

சிந்திப்பதனாலேயே மனிதன் விலங்குகளிடமிருந்து வித்தியாசப்படுகிறான். 
கொஞ்சமாவது மனிதனாக சிந்திக்க பழகுங்கள் நண்பர்களே...

கசப்பான உண்மைகள்

படித்ததில் பிடித்தது

😢"கசப்பான உண்மைகள்"😢

1. உடன் பிறந்த சகோதரனோ சகோதரியோ, இனிமேல் நம்மால் ஒரு நையா பைசாவிற்குப் பிரயோஜனம் இல்லையென்றால் தானாக விலகி விடுவார்கள் அல்லது நாம் விலக்கப்படுவோம்.

2, வீட்டிற்கு வந்த மருமகள் உ.யிரை கொடுத்து மாமியாரை பார்த்துக் கொண்டாலும், தன் மாமியார் பெற்ற மகளுக்கு என்றும் ஈடாகவே மாட்டாள் (மருமகளின் பெருமை தான் பெற்ற மகளின் ஒரு சிணுங்கலில் (அ) ஒரு சொட்டுக் கண்ணீரில் கரைந்து விடும்)

3. வயதான பெற்றோர் பெரும்பாலும் வசதியுடன் இருக்கும் மகனிடம் இருக்கவே விரும்புவார்கள்.

4. கொட்டி கொடுத்தாலும் அள்ளி அணைத்தாலும், நம் மனைவியோ குழந்தைகளோ ஒரு குறிப்பிட்ட வயதில் 'எனக்கு அப்படி என்ன செய்து கிழிச்சீங்க?.." என்று கேட்காமல் விட மாட்டார்கள்.

5. 70 வயதுக்கு மேல் வாழாமல் இருப்பது உத்தமம். நான் பார்த்தவரை பெரும்பாலான வயதானவர்கள் நாய்படாத பாடு படுகிறார்கள்.

6. உடன் பிறந்த அண்ணன் தம்பியை தவிர, வேறு எந்த நாயும் அடுத்த வீட்டுப் பெண்களைச் சகோதரிகளாக ஏற்றுக் கொள்வதில்லை. இந்த அக்கா மாதிரி, தங்கை மாதிரி எல்லாம் எப்பவுமே நம்பாதீங்க..

7. தோள் கொடுக்கும் உறவுகளை விட, காலை வாரும் உறவுகளே அதிகம். ஒன்று வார்த்தைகளால் அல்லது செயல்களால்.

8. ஒருமுறை பொருளாதாரத்தில் வீழ்ந்த குடும்பம் எவ்வளவு போராடி எழுந்தாலும், நம் உறவினர்கள் அதை முதன்மைப்படுத்திப் பேசாமல் இருக்க மாட்டார்கள். (எப்படியோ கடவுள் அருளால பிச்சை எடுத்துக்கிட்டு இருந்தவன் இன்னைக்கு நல்ல நிலைமை'ல இருக்கான்) என்று தான் பேசுவார்கள்.

9. வாழ்க்கையோட சூட்சுமம் புரியும் போது, நமக்கு நடக்க முடியாத அளவுக்கு வயசாகிடும்.. அந்த வயசுல எல்லாம் தெரிஞ்சு எந்தப் பிரயோஜனமும் இல்ல.

10. நாம நல்லா இருக்கணும்னு எந்தச் சொந்தக்காரனும் விரும்ப மாட்டான். (யோசிச்சு பார்த்தா, நாமளும் யாருக்காவது ஒரு சொந்தக்காரனா தான் இருக்கோம்)..

11. முக்கியமா நம்மள பத்தி அதிகமா தப்பா பேசுறது நம்ம அப்பா அம்மா, மேரேஜுக்கு அப்புறம் மனைவி.. வயசான காலத்துல நம்ம பிள்ளைங்க..

Saturday, October 19, 2024

இந்தியாவுக்கு தேசிய மொழி உண்டா?

எழுதியவர்:
ஷாஜகான் 

*வினா-0:* 
இந்தியாவுக்கு தேசிய மொழி உண்டா?

*விடை:* 
இல்லை. இந்தியாவுக்கென தேசிய கீதம் உண்டு, தேசிய விலங்கு உண்டு. தேசியப் பறவை உண்டு. ஆனால் தேசிய மொழி கிடையாது. ஏனென்றால், அரசமைப்புச் சட்ட விவாதம் துவங்கியபோதிலிருந்தே தேசிய மொழி என்ற விஷயத்தில் கருத்தொற்றுமை ஏற்படவில்லை. எனவே இதில் சமரசம்தான் செய்யப்பட்டது. எந்தவொரு மொழியும் இறுதி செய்யப்படவில்லை.

---

*வினா-1:* 
ஆட்சிமொழியா அலுவல் மொழியா?

*விடை:* 
ஆட்சி மொழி என்று சொல்வதானால் ruling language என்று இருந்திருக்க வேண்டும். அரசமைப்புச் சட்டத்தில் எங்கும் அப்படி இல்லை. official purposes, official langauge என்றுதான் குறிப்பிடப் படுகிறது. தமிழ்நாட்டில் ஆட்சிமொழி என்று யாரோ எப்போதோ மொழியாக்கம் செய்ய, அதுவே பரவலாகி நிலைபெற்று விட்டது. 

office - அலுவலகம்
officer - அலுவலர்
official - அலுவல்ரீதியான
official language - அலுவல் மொழி

ஆகவே, இந்தி ஆட்சி மொழி அல்ல. அலுவல் மொழிதான். 

ஒருகாலத்தில் parliament என்பதை பாராளுமன்றம் என்று மொழியாக்கம் செய்து அதுவே அண்மைக்காலம் வரை பயன்பாட்டில் இருந்து வந்தது. இப்போது நாடாளுமன்றம் என்று திருத்தினாலும் சிலர் பாராளுமன்றம் என்றுதான் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். அதேபோலத்தான் அலுவல் மொழி என்பதையும் ஆட்சி மொழி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

---

*வினா-2:* 
சரி, இந்தி மட்டுமே அலுவல் மொழியா? 

*விடை:* 
இல்லை. அரசமைப்புச் சட்டத்தின்படி, இந்தியும் ஆங்கிலமும் அலுவல் மொழிகள். 

---

*வினா-3*: 
இதைப்பற்றி அரசமைப்புச் சட்டம் என்ன சொல்கிறது?

*விடை:* 
மொழியைப் பற்றிய பிரிவு 343  
(1) The official language of the Union shall be Hindi in Devanagari script 

இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழி தேவநாகரி வரிவடிவில் எழுதப்படும் இந்தியாக இருக்கும்.

---

*வினா-4:* 
அப்படியென்றால், இந்திதான் ஒரே அலுவல் மொழியா?

*விடை:* 
இல்லை. அரசமைப்புச் சட்டத்தின் இப்பிரிவின் அடுத்த பத்தி இப்படி வருகிறது.

Notwithstanding anything in clause ( 1 ), for a period of fifteen years from the commencement of this Constitution, the English language shall continue to be used for all the official purposes of the Union 

மேலே குறிப்பிட்ட விதி (1)இல் கூறப்பட்டது தவிர, இந்த அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து பதினைந்து ஆண்டு காலம் ஒன்றியத்தின் அலுவல் நோக்கங்களுகாக ஆங்கிலமும் முன்பிருந்தது போலவே அலுவல் மொழியாக நீடிக்கும்.

---

*வினா-5:* 
அப்படியென்றால், 1950இல் அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. 1965உடன் பதினைந்து ஆண்டுகள் முடிந்து போயின. அப்படியானால், இப்போது ஆங்கிலம் அலுவல் மொழி இல்லையா?

*விடை:* 
ஆங்கிலமும் அலுவல் மொழிதான். எப்படியென்றால், மேலே குறிப்பிட்ட முந்தைய இரண்டு பிரிவுகளுக்கு அடுத்து மூன்றாவதாக இதுவும் வருகிறது.

Notwithstanding anything in this article, Parliament may by law provide for the use, after the said period of fifteen years, of
(a) the English language

இந்த சட்டப்பிரிவில் என்ன சொல்லப்பட்டிருந்தாலும், பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகும் நாடாளுமன்றம் சட்டத்தை இயற்றுவதன் மூலம் ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம். 

---

*வினா-6:* 
அப்படினால், 15 ஆண்டுகளுக்குப் பிறகும் ஆங்கிலத்தை அலுவல் மொழியாகத் தொடர நாடாளுமன்றம் அப்படி சட்டத்தை நிறைவேற்றியதா?

*விடை:* 
ஆம். ஆட்சிமொழிச் சட்டம் 1963ஐ நாடாளுமன்றம் இயற்றியது. அது 1965 ஜனவரி 26 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்தச் சட்டம், ஒன்றியத்துக்கும் மாநிலங்களுக்கும் இடையே, ஒன்றிய அமைச்சகங்களுக்கு இடையே எவ்வாறு செயல்பட வேண்டும் என்று சொல்கிறது. அது மிகவும் விரிவானது. சுருக்கமாகச் சொன்னால், 15 ஆண்டுகளுக்குப் பின்னரும், ஒன்றிய அலுவலகங்களுக்கும், நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளுக்கும், இந்தியுடன் ஆங்கிலமும் தொடர்ந்து அலுவல் மொழியாகப் பயன்படுத்தப்படும்.

ஒன்றியத்துக்கும் இந்திமொழி பேசாத மாநிலங்களுக்கும் இடையேயான தொடர்பு மொழியாக ஆங்கிலமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், இந்தி பேசும் மாநிலத்தில் இருந்து இந்தி பேசாத மாநிலங்களுக்கு இந்தி மூலம் தொடர்பு கொள்ளப்பட்டால், அவற்றுடன் ஆங்கில மொழிபெயர்ப்பு சேர்த்து அனுப்பப்பட வேண்டும் என்றும் ஆட்சிமொழிச் சட்டம் 1963-ல் கூறப்பட்டுள்ளது.

ஆக, இந்தி ஆங்கிலம் இரண்டுமே இந்திய ஒன்றியத்தின் அலுவல் மொழிகள்.

Thursday, April 18, 2024

தூய்மைவாதம் பாஸிசத்தின் மிக முக்கியமான கூறு.

Karl Max Ganapathy

தூய்மைவாதம் பாஸிசத்தின் மிக முக்கியமான கூறு. ஏனெனில் அது மனித இயல்பை ரத்து செய்கிறது.

*அது என்ன மனித இயல்பு?*

பிழைகள் புரிவது. மிக முக்கியமாக, பிழை என்று எதைச் சொல்கிறோமோ அதன் மீது சந்தேகம் கொள்வது. குழம்புவது. அதை மீறுவது. ஒழுங்கில் இருந்து பிறழ்வது. 

*இத்தகைய பிழைகள் எப்போது குற்றமாகின்றன?*

அவை இன்னொரு உயிரை வதைக்கிறபோது!

*தீர்வு என்ன?*

இங்குதான் அதிகாரம் வருகிறது. மதம் வருகிறது.

*எப்படி?*

மதம் அதன் தூய வடிவத்தில், எல்லா குற்றத்துக்கும் மன்னிப்பைப் பரிந்துரைக்கிறது.

*அதிகாரம்?*

அது தண்டனையை, ஒழுங்குபடுத்துதலைப் பரிந்துரைக்கிறது.

*அப்படியென்றால் மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால், நிர்வாகத்தை, தண்டனையைப் பரிந்துரைக்க முடியுமா?*

முடியாது. அப்படி நிகழ்கிறபோது மதம் என்பது ஒரு சாக்கு. வெறும் கருவி. வன்முறையின் மீது இருக்கிற ஜிகினா.

*இதிலிருந்து என்ன புரிந்து கொள்வது?*

மதம் என்பது ஒழுங்கைக் குலைப்பது. கத்தியோடு நிற்பவனைக் கட்டியணைப்பது. தன் உயிரை ஈவதன் வழியாக அவனது வன்முறையை இல்லாதாக்குவது.

*இதில் அரசியலைக் கலக்கும்போது என்ன ஆகும்?*

மதத்தின் பெயரால் அதிகாரத்தைப் பரிந்துரைக்கும் ஒரு சர்வாதிகாரியை உருவாக்கும்.

*அவர் மதவாதியா?*

இல்லை. மதத்தின் பெயரால் அதிகாரத்தைப் பரிந்துரைக்கும் மத விரோதி. அதன் தூய அர்த்தத்தில் மனித விரோதி. 

*ஒரு பெயரைச் சொன்னால் இன்னும் எளிதாகப் புரியும்.*

நரேந்திர மோடி!

Saturday, March 30, 2024

கொங்கு வெள்ளாள கவுண்டர்களும் இடஒதுக்கீடும்

A. Sivakumar

கொங்கு வெள்ளாள கவுண்டர்களும் இடஒதுக்கீடும்

♦ காகா கலேல்கர் கமிசன்

மத்திய அரசின் இந்த கமிசனின் அளவுகோளின்படி, "பொதுக்கல்வி அறிவு இல்லாத பெரும்பான்மை மக்களை கொண்ட, மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்முறை கல்லூரிகளில் இடம்பெறாத, அரசுத்துறையில் போதிய பிரதிநிதித்துவமில்லாத, பெருமான்மையாகவே விவசாயம் செய்பவர்களாகவோ, நிலமற்ற  விவசாய தொழிலாளர்களாகவோ, உடல் உழைப்பை நம்பிய ஆணும் பெண்ணும் நிறைந்திருக்கும் தாழ்த்தப்பட்டவர் அல்லாத சாதியினரே பிற்படுத்தப்பட்டவர்கள்."

இந்த அளவுகோளின்படி இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்ற சாதிகளின் மொத்த எண்ணிக்கை - 2399.

அதே சமயத்தில், இந்த கமிஷனின் அளவுகோலில் அப்படியே பொருந்தக்கூடிய கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் 1954லேயே பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும்.

ஆனால் இடம்பெறவில்லை.

♦ சட்டநாதன் கமிசன்

1969ல் அமைந்த இந்த கமிசன் ஏற்கனவே பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இருக்கும் சாதியினர் கல்வி & வேலை வாய்ப்பில் எந்தளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளனர் என்று கண்டறிய அமைக்கப்பட்ட கமிசன். எந்த சமூகத்தை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கலாம் என்று பரிந்துரைக்கும் அதிகாரம் இக்கமிசனுக்கு இல்லை. ஆனால் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் கொங்கு வெள்ளாள கவுண்டர்களை இணைக்க கூடாது என்று கூறியுள்ளது.

இதே சட்டநாதன் கமிசன் தன் அறிக்கையில் கொங்கு மண்டலத்தில் 8 தாலுகாக்கள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டிருப்பதையும், அங்குள்ள மக்கள் பொருளாதாரத்தில் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாகவும் கூறியுள்ளது. கொங்கு மண்டலத்தின் பெரும்பான்மை மக்கள் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் தான் என்பது நாம் யாருக்கும் தனியாக சொல்ல வேண்டியதில்லை.

♦ கொங்கு வெள்ளாள கவுண்டர்களை ஏன் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இணைக்க வேண்டும்?

1951ல் நாமக்கல் நகரத்திலிருந்து நான்கே நான்கு தொலைவிலிருந்த சேம்பரை புதூர் கிராமத்தில் வாசித்த 93 குடும்பங்களில் 90 குடும்பங்கள் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள். இந்த 90 குடும்பத்தாரும் எழுத படிக்க தெரியாதவர்களே!

ஒரு கிராமத்திலிருக்கும் 96 சதவிகித பெரும்பான்மையினரான  கொங்கு வெள்ளாள கவுண்டர்களில்  ஒருவர் கூட கல்வியறிவு பெற்றவர்கள் இல்லை, அதுவும் 1951ல். அப்படியானால் இதை அப்படியே ஒட்டுமொத்த கொங்கு மண்டலத்துக்கும் அப்படியே கூட பொறுத்த வேண்டாம்...இதில் பாதி பொருத்தி பார்த்தல் கூட போதும், இவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் தான் இணைக்கப்பட  வேண்டும் என்று எளிதில் புரியும்.

1947ல் பெற்ற சுதந்திரத்துக்கு பின் அடுத்த 27 ஆண்டுகளில் அரசின் எந்த ஒரு முதல் நிலை பதவிக்கும் ஒரே ஒரு கொங்கு வெள்ளாள கவுண்டர் கூட தேர்வாகவில்லை. 1974 வரை அரசு உயர் பதவிகளில், ஏன் அரசு அலுவலகங்களில் கூட கொங்கு வெள்ளாள கவுண்டர்களை காண்பது அரிது என்பது தான் யதார்த்த நிலை. 

1947 ஆண்டிலிருந்து 1974 வரை காவல்துறையிலும் வணிகவரித்துறையிலும் துறைக்கு ஒன்றாக மொத்தமே இருவர் தான் கொங்கு வெள்ளாள கவுண்டர் சாதியிலிருந்து Group 1 தேர்வில் வெற்றிப்பெற்று வேலையிலிருந்தனர்.

கொங்கு வெள்ளாள கவுண்டரான திரு.சுப்பராயன் முதல் அமைச்சராக இருந்த 1929ல் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு அரசு தேர்வாணைய குழுவில் கொங்கு வெள்ளாள கவுண்டர் பிரிவை சேர்ந்த ஒருவர் கூட 1973 வரை இடம்பெற்றதில்லை.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு தேர்வாணைய குழு உறுப்பினராக  இடம்பெறும் முதல் கொங்கு வெள்ளாள கவுண்டராக  பேராசிரியர் திரு.அ.பழனிச்சாமி அவர்களை 26.6.1974 அன்று நியமித்தார் தலைவர் கலைஞர்.

இந்த நிலையை உணர்ந்த கொங்குப்பகுதி மாணவர்கள், சங்கத்தினர், அரசு ஊழியர்கள் எல்லாம் இணைந்து 1972 ஆம் ஆண்டு தொடங்கி கொங்கு வெள்ளாள கவுண்டர்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இணைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர். 

1975ல் 20 சட்டமன்ற உறுப்பினர்கள், 1 சட்டமன்ற மேலவை உறுப்பினர், 2 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 23 பேர் இக்கோரிக்கையை அரசிடம் கொண்டு சேர்க்கின்றனர். 

♦ இந்த 20 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் இஸ்லாமியர் என்பது இங்கே  குறிப்பிடத்தக்கது. அவர் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. அப்துல் ஜப்பார்.

ஊர் கூடி தேரிழுத்த இந்த தொடர் முயற்சியால் 11-4-1975 நாள் கொங்கு வெள்ளாள கவுண்டர்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கும் அறிவிப்பை வெளியிட்டார் அந்நாள் முதல்வர் தலைவர் கலைஞர்.

1975 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் தேதி இந்த அறிவிப்பினை செய்தமைக்காக கொங்கு மாணவர்கள், கொங்கு வேளாள நற்பணி மன்ற நண்பர்கள் உள்ளிட்ட கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் இணைந்து தலைவர் கலைஞருக்கு ஒரு பாராட்டு விழா எடுத்தனர். 

விழாவில் கலைஞருக்கு கொங்கு வெள்ளாளர் சமூக மக்களின் படைக்கலனாக விளங்கும் வெள்ளியிலான ஏர்கலப்பை பரிசாக அளிக்கப்பட்டது. 

♦பிறப்பால் கொங்கு வெள்ளாள கவுண்டர்களான டாக்டர் சுப்பராயன் சாதிக்காததை, சி.சுப்பிரமணியம் சாதிக்காததை, எந்நாளும் செய்ய முடியாததை முதல்வர் கலைஞர் அவர்கள் செய்திருக்கிறார்.
- திரு. சர்க்கரை மன்றாடியார், முன்னாள் அமைச்சர்

♦கொங்கு வெள்ளாள கவுண்டர்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற பல ஆண்டு கால போராட்டம் முதல்வர் கலைஞர் கையால் முடிவுக்கு வந்திருக்கிறது. சந்தனத்திலே மணம் இருக்கின்ற வரை கொங்கு வெள்ளாள சமுதாயம் முதல்வர் கலைஞரை மறவாது.
- திரு. கே.என்.குமாரசாமி, சட்டமன்ற உறுப்பினர்

♦நான் வாக்களித்தபடி உங்களின் கோரிக்கையை நிறைவேற்றியிருக்கிறேன்.

கொங்கு வெள்ளாள கவுண்டர்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் இணைத்ததால், அவர்கள் பின் தங்கியவர்கள் ஆக்கிவிட்டார்கள் என்று சிலர் பேசுவதாக சொன்னார்கள். பின்வாங்குவதென்பது முன்னேறத்தான். ஊஞ்சலில் கூட முன்னுக்குப் போக பின்னுக்குச் சென்றால் தான் முடியும். பந்தை உதைப்பதனாலும் காலைப் பின்வாங்கி உதைத்தால் தான் பந்தை உதைத்து முன்னே செலுத்த முடியும். 

அக்கல்வி வேலைவாய்ப்பில் சமுதாயத்தில் பின்தங்கியோர் முன்னேற்றம் காண பொருளாதார உதவிகள் மட்டும் போதாது, அவர்களுக்கு சமுதாய அடிப்படையிலான உரிமைகளை வழங்க வேண்டும். அதுவே முன்னேற்றத்துக்கான திறவுகோல்.

ஆகவே இப்போது உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது சலுகை அல்ல என்றுணர்ந்து உரிமை என்று கொள்வீர்கள் என்று நம்புகிறேன். சலுகை என்று சொன்னால் அதில் உரிமைக்கு உத்திரவாதம் இருக்காது. உரிமை என்று சொன்னால் அதில் எப்போதும் சலுகைக்கு உத்திரவாதம் உண்டு.
- முதல்வர் கலைஞர்

வெள்ளாளக் கவுண்டர், நாட்டுக் கவுண்டர், திருமுடி வெள்ளாளர், தொண்டு வெள்ளாளர், பால கவுண்டர், பூசாரி கவுண்டர், அனுப்ப வேளாளக் கவுண்டர், குறும்ப கவுண்டர், நரம்புக்கட்டி கவுண்டர், படத்தலை கவுண்டர், செந்தலை கவுண்டர், பவளம்கட்டி வெள்ளாள கவுண்டர், பால வெள்ளாள கவுண்டர், சங்கு வெள்ளாள கவுண்டர், ரத்ன கவுண்டர் என்று மொத்தம் 15 உட்பிரிவுகளை உள்ளடக்கிய கொங்கு வெள்ளாள கவுண்டர்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கும் அரசாணை 16-5-1975ல் வெளியானது. 

1992 முதல் மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் (OBC) பட்டியலில் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் இணையவும் 1975ல் வெளியான பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியல் சேர்க்கை  காரணமாகியது.

சரி...இப்படியெல்லாம் கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்ந்ததால் என்ன ஆனது?

இதற்கான பதிலையும் அவர்களே சொல்லியிருக்கிறார்கள்,

1) திரு.E.R.ஈஸ்வரன், பொது ச் செயலாளர், கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி

நமது சமுதாயம் BC ஆனதால் தான் நான் பொறியியல் கல்வி படித்து பட்டதாரி ஆக முடிந்தது. இல்லையேல் நான் B.E படித்திருக்க முடியாது.

2) திரு.Dr.சித்தரஞ்சன், ஊத்தங்கரை 

விவசாயக் குடும்பத்தில் பிறந்து முதல் தலைமுறைக் கல்லூரி மாணவனாக அரசு மருத்துவக்கல்லூரியில் 2015 ஆம் ஆண்டு சேர்ந்தேன். நமது சமுதாயம் BC ஆக்கப்படாமல் போயிருந்தால் என்னால் மருத்துவம் படிக்க முடியாமல் போயிருக்கும்.

இது கொங்கு வெள்ளாள கவுண்டர்களின் கடந்தக் கால சரித்திரம்.

இப்போ நிகழ்காலத்துக்கு வருவோம். . .

சுதந்திரம் பெற்ற 1947ல் இருந்து மத்திய தேர்வாணையக் குழுவில் இதுவரை கொங்கு வெள்ளாள கவுண்டர் பிரிவை சேர்ந்த  ஒருவர் கூட இடம்பெறவில்லை.

மத்தியரசின் IAS, IPS, IRS, IFS பதவி நியமனங்களை செய்வது இந்த மத்திய தேர்வாணையக் குழு தான்.

1947ல் இருந்து 1992 வரை, அதாவது மண்டல் கமிசனின் OBC நடைமுறைகள் மத்திய அரசால் ஏற்கப்படும் வரை கொங்கு வெள்ளாள கவுண்டர் பிரிவை சேர்ந்த ஒரே ஒருவர் தான் IAS அதிகாரியாக இருந்துள்ளார்.

மருத்துவம் சார்ந்த UG, PG & Dental படிப்புகளில் 40,842 இடங்கள் ஒட்டுமொத்தமாக மத்திய அரசால் OBC மக்களிடமிருந்து பறிக்கப்பட்டு தவறான வழியில் முன்னேறிய சமுதாயத்துக்கு வழங்கப்பட்டுவிட்டது.

தமிழ்நாடு அளவில் என்று எடுத்துக் கொண்டால் கூட, அகில இந்திய ஒதுக்கீட்டில் மட்டும் 11,027 இடங்கள் மருத்துவம் சார்ந்த UG, PG & Dental படிப்புகளில் பறிக்கப்பட்டுவிட்டது.

இதை எல்லாம் களைந்து, பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்க என்ன செய்ய வேண்டும் என்று காராள வம்சம் தான் முடிவு செய்ய வேண்டும்.

#OBCReservation
#கொங்குநாடு

https://www.facebook.com/share/p/AZhtv8Pq8a3Fxqim/?mibextid=oFDknk

Monday, March 11, 2024

+12 முடிக்க 10 லட்சம் செலவு

*உஷாரய்யா உஷாரு!*

*வயிற்றுப் பஞ்சமில்லாமல் நல்ல சோறு சாப்பிட வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள். எதிர்காலத் தேவைகளுக்குப் பணம் சேமிக்க வேண்டுமென்றால் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேருங்கள்*.

*கடினமாக உழைத்து சம்பாதித்த பெரும் பணத்தை அறியாமையால் வீணடிப்பது சரி தானா?*

*CBSC பள்ளி அல்லது Matriculation பள்ளி போன்ற* 
*தனியார் பள்ளியில் இலட்சக்கணக்கில் பணம் கட்டி உங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கிறீர்களே அது எதற்கு?*

*நல்ல வேலைக்குப் போகவா?*

*ஆங்கிலம் சரளமாகப் பேசவா?*
*குடும்பக் கௌரவத்தைக் காக்கவா?*

*ஏன்?*
*எதற்கு?* *....என்று சிந்தித்ததுண்டா?*

*Pre kg 25,000 இல் தொடங்குகிறது*

*Lkg         40,000*
*Ukg         50,000*
*1st          60,000*
*2nd         70,000*
*3rd          80,000*
*4th          90,000*
*5th        1,00,000*
*6to8      1,20,000*
*9to10.   1,50,000*
*11to12  2,00,000 இலட்சம்....*

*ஆக மொத்தம்*
*9,85,000 ரூபாய்.*
 
*இது கிராமங்களில் உள்ள CBSE பள்ளிகளோட தோராய மதிப்பு தான்.*

*நகரத்தில் இருக்கின்ற பெரிய பள்ளிகளில் 20 இலட்சத்தில் இருந்து 40 இலட்சம் வரை வாங்குறாங்க.*

*சரி!*
*இதெல்லாம் இருக்கட்டும், இவ்வளவு செலவு செய்து படிக்க வைக்கும் உங்கள் பிள்ளைகள் +2க்கு அப்புறம் என்ன ஆகிறார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா?*

*உங்கள் பிள்ளை படிக்கும்  பள்ளியில் ஆயிரம்* *மாணவர்களுக்கு மேல் பொதுத்தேர்வு எழுதுவார்கள். அப்பள்ளியில் முதல் மூன்று இடங்கள் மட்டும்தான் பாராட்டப்படும்.*

*அந்த மூன்று இடங்களில் உங்கள் பிள்ளை வரவில்லை எனில் என்ன செய்ய முடியும் உங்களால்.?*

 *ஒன்றை நினைவில் வையுங்கள்.....  உங்கள் பிள்ளை 1000 மதிப்பெண்களுக்குக் கீழ் எடுக்கும் மாணவன் என்றால் ஏன் சேர்த்தீர்கள் இவ்வளவு பணம் செலவழித்து?*

*தமிழகத்தில் 9 இலட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். அத்தனை பேரும் மருத்துவராகவோ, பொறியாளராகவோ வர முடியுமா?*
*சரி!*
*இப்போது அவர்களால் மருத்துவராகவோ, பொறியாளராகவோ படிக்க இயவில்லை எனில் அடுத்த மேற்படிப்பிற்கு அவர்களை எங்கு சேர்ப்பீர்கள்?*

*CBSE கல்லூரியிலா?*
*அப்படி ஒரு கல்லூரி தமிழகத்தில் இல்லையே !?*

*அடுத்த உங்களின் தேர்வு ஏதேனும் ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகம் தான், இல்லையா?*

*இப்போது நீங்கள் சேர்க்கும் கல்லூரியில் CBSE,*
*மெட்ரிக் பள்ளியில் படித்த மாணவர்கள் மட்டும் தான் படிப்பார்களா?*

*இல்லை!*
*இல்லவேஇல்லை!*

*இப்போது உங்கள் பிள்ளைகளோடு, அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களும் சேர்ந்தே படிப்பார்கள் என்பதை உணருங்கள்.?*

*பத்து இலட்சத்திற்கு மேல் செலவளித்துப் படிக்க வைத்த உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியைப் பணமே செலவளிக்காமல் அரசுப்பள்ளி மாணவர்கள் படிக்கவில்லையா ?*

*இப்போது சொல்லுங்கள் காசு பணத்தைக் கொட்டி, கடைசியில் ஏமாளிகளாக மாறும் நீங்கள் சிறந்த தகப்பனா?*

*உங்கள் பிள்ளை சாதனையாளனா?*

*இல்லை.. பணமே இல்லாமல் உங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்லூரியில் படிக்கும் அரசுப்பள்ளி மாணவனும் அவனது தகப்பனும் சாதனையாளர்களா?*

*உங்களுக்குத் தெரியுமா.....*

 *TNPSC தேர்வில் தேர்வாகும் 99 விழுக்காட்டினர் அரசுப்பள்ளியில், தமிழில் படித்தவர்கள் என்று?*

*TET தேர்வில் வெற்றி பெற்று  அரசுப்பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றும் 50 ஆயிரம் ஆசிரியர்கள் அரசுப்பள்ளியில் படித்தவர்கள் என்று?*

 *இன்றைக்கு இருக்கும் அரசு ஊழியர்கள் பெரும்பான்மையோர் அரசுப்பள்ளியில் தான் படித்தவர்கள் என்று?*

*ஏன் நீங்கள் கூட அரசுப்பள்ளியில் படித்த அரசு ஊழியர்களாக இருக்கலாம்?*

*உங்களால் ஆணித்தரமாக எடுத்துக் கூற முடியுமா... CBSE , மெட்ரிக் பள்ளியில் படித்தவர்கள் எந்த அரசு வேலையில் உள்ளார்கள் என்று?*

*அந்தப் பள்ளிகளைப் பட்டியல் இடச் சொல்லுங்கள் பார்க்கலாம் ?*

*இனியேனும் விழித்துக் கொள்ளுங்கள்  அன்புப் பெற்றோர்களே?*

*அரசுப்பள்ளியை வெறுக்கும் நீங்கள், அரசு வேலையைத் தேடுவது எவ்வாறு சரியாகும்?*

**வாருங்கள் குரல் கொடுப்போம்* .....  

👍ஆங்கில வழியில் கல்வி என்ற மோகம் தற்போது *அரசு பள்ளியிலும் ஆங்கில வழி கல்வி உள்ளது* 

 👍 *வெட்டி கௌரவத்தை விடுவோம்* 

👍  *அரசு* 
 *பள்ளியில்* *படிப்போம்* 

👍 *ஆகச்சிறந்த அரசு பதவியில் அமர்வோம்* 

👍 *அரசின் அனைத்து சலுகைகளையும் பெறுவோம்* 

👍 *இதனால்* 
*நம் செலவுகள் குறைக்கப்பட்டு, நம் எதிர்காலத்திற்காகபணம் சேமிக்கப்படும்.*

*சிந்திப்போம்!*
*மற்றவரின் சிந்தனையைத் தூண்டுவோம்!*

Monday, February 26, 2024

ரஷ்யா - உக்ரைன் போர்

கார்ல மார்க்ஸ் கணபதி

ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கி இரண்டாண்டுகள் நிறைவடைகிறது. நான்கூட இந்த சண்டை உடனே முடிவுக்கு வந்துவிடும் என்றுதான் நினைத்தேன். ஆனால் ஏகாதிபத்தியங்களின் முடிவிலிப் போராக இது நீடிக்கிறது. மேற்கத்திய நாடுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அஜெண்டாக்கள் இருக்கின்றன. இந்தப் பக்கம் ரஷ்யாவின் ஆதரவு அணியும் பலம் பொருந்தியதாக இருக்கிறது.

வழக்கமானப் போர்களில் இருந்து இன்றைய நவீன யுத்தங்கள் முழுக்கவும் வேறு பரிமாணம் கொண்டிருக்கின்றன. தேசப்பற்று என்பதே போர்களுக்கான அடிப்படை. ஆனால் அது மறு வரையறை செய்யப்பட்டிருக்கிறது. யுத்தங்கள், ஒப்பந்த அடிப்படையில் நிறுவனங்கள் ஈடுபடும் தொழிலாக மாறியிருக்கிறது. இதைப்பற்றி போதுமான விவாதங்கள் நமது சூழலில் ஏற்படவில்லை.

ரஷ்யா - உக்ரைன் போரில், போர் வீரர்களுக்கு உதவி செய்யும் பணியாட்களாக உக்ரைனில் சில இந்தியர்கள் வேலை செய்கிறார்கள் எனும் செய்தி கடந்த சில மாதங்களாக கசிந்து கொண்டிருந்தது. உறுதியான தகவல் இல்லை, அல்லது என் பார்வையில் அது படவில்லை. ஆனால், ரஷ்யாவும் சில ஏஜெண்டுகளின் வழியாக, நூற்றுக்கணக்கான இந்தியப் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியிருக்கிறது எனும் கட்டுரைகள் மேற்கத்திய ஊடகங்களில் வந்தன. இப்போது அந்த செய்திகள் இந்திய மீடியாக்களிலும் வருகின்றன.

திடீரென்று என்ன கரிசனம்?

உதவியாளர் வேலைக்கு என்று அழைத்து செல்லப்பட்ட இந்தியர்கள், சில நாட்கள் போர்ப் பயிற்சியளிக்கப்பட்ட பிறகு கட்டாயமாக யுத்தக்களத்துக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு அனுப்பப்பட்ட ஒரு இருபத்து மூன்று வயது இந்தியர் போரில் கொல்லப்பட்டிருக்கிறார். மற்றவர்கள் எப்படியாவது எங்களை மீட்டுவிடுங்கள் என்று கண்ணீருடன் ஒளித்துணுக்குகளை அனுப்புகிறார்கள். 

"இந்தியத் தூதரகத்தைப் பலமுறை அணுகினோம் எங்களுக்கு சரியான பதில் இல்லை" என்கிறார்கள் போர் முனையில் மாட்டிக்கொண்டிருக்கும் இந்தியர்கள். "எத்தனை பேர் அங்கு இருக்கிறார்கள் என்கிற சரியான தகவல் எங்களிடம் இல்லை" என்கிறது ரஷ்யாவில் இருக்கும் இந்தியத் தூதரகம். ரஷ்யத்  தளபதிகளிடம் சென்று, "நாங்கள் வந்தது உதவியாளர் வேலைக்கு, போரில் ஈடுபடுவதற்கு அல்ல" என்று முறையிடுகையில், "நீங்கள் கையெழுத்திட்ட உங்களது ஒப்பந்தத்தைப் படித்துப் பாருங்கள்" என்று அவர்கள் நீட்டும் காகிதத்தில் தலை சுற்றும் வாக்கியங்கள் இருக்கின்றன. என்னால் அத்தகைய ஒப்பந்தங்கள் எப்படி வடிவமைக்கப்படும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. "எந்த வேலை கொடுத்தாலும் செய்யவேண்டும்" என்று ஒரு வரி ஜோடனையான மொழியில் இருக்கும். "இந்தா இதுதான் உன் வேலை" என்று கையில் துப்பாக்கியைக் கொடுத்தால் போர்முனைக்கு செல்லத்தான் வேண்டும், சாகத்தான் வேண்டும். முறையிடுவதற்கு அங்கு யாரிடம் போவது?

ஒப்பந்தப் போராளிகள் என்பது அமெரிக்கா, மத்தியக்  கிழக்கு நாடுகள் மீது நடத்திய  ஆக்கிரமிப்புப் போர்களின் போது வெளிச்சத்துக்கு வந்து இப்போது அது ஏகாதிபத்தியங்களின் வழக்கமான நடைமுறையாகிப் போயிருக்கிறது. ஈராக் யுத்தத்தின் போது இதை முழு வீச்சில் பயன்படுத்திய அமெரிக்கா, போர் என்பதை ஒப்பந்தக்காரர்கள் அரசின் முகவர்களாக நின்று ஈடுபடும் தொழில் என்று ஆக்கிவிட்டது. மேற்பார்வையும், ஆயுத விநியோகமும், அரசியல் கருத்துருவாக்கமுமே அரசின் வேலை என்று ஆகியிருக்கிறது. 

ராணுவ வீரர்களில், நிரந்தர வீரர்கள், ஒப்பந்த வீரர்கள் என்கிற இரண்டு வர்க்கங்கள் வந்திருக்கின்றன. ஓய்வூதியம், நீண்ட கால மருத்துவ உதவி, குடும்பப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு, போருக்குப் பின்பான  உளவியல் சிகிச்சைகள் போன்ற தார்மீக ரீதியான கடமைகளில் இருந்து அமெரிக்கா கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறுகிறது. 

ஆயுதம் உற்பத்தி செய்ய கார்ப்பரேட்டுகள், அதை விநியோகிக்க ஆயுதத் தரகர்கள், அவர்களது வாடிக்கையாளர்களாக மாறியிருக்கும் ஸ்திரத்தன்மை அற்ற அரசுகள் மற்றும் போராளிக் குழுக்கள், போரிட வீரர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பும் நிறுவனங்கள் என போரின் தன்மை நம்மால் கற்பனை செய்யமுடியாத அளவுக்கு விரிந்திருக்கிறது. 

போருக்கு ஆதரவான கருத்துருவாக்கம், எதிரான கருத்துருவாக்கம் இரண்டுக்கும் பில்லியன் கணக்கில் டாலர்கள் செலவிடப்படுகின்றன. சமூக ஊடகங்கள் லாபியிஸ்ட்டுகளின் வேலையை எளிதாக்குகின்றன. ஜனநாயக, சுதந்திர, அறம்சார் ஊடகங்கள் முடக்கப்படுகின்றன அல்லது அவையாகவே ஆவியாகிவிடுகின்றன. வெள்ளமாகப் பாயும் பணத்தின் முன்னால் அவற்றால் நிலைக்க முடிவதில்லை. நாம் எவ்வளவு நேரம் சமூக ஊடகங்களில் இருக்கிறோமோ அதற்கு ஏற்றாற்போல் நாம் மூளைச்சலவை செய்யப்படும் நேரம் கூடுகிறது. 

இந்த ரஷ்யா-உக்ரைன் போரிலும், ரஷ்யா ஒப்பந்த அடிப்படையிலான வீரர்களைப் பயன்படுத்துவது வெளிச்சத்துக்கு வந்தது. போர் முனையில் இருந்த ஒப்பந்த வீரர்களின் தலைவருக்கும் (Yevgeny Prigozhin), ரஷ்ய அதிபர் புதினுக்கும் பூசல் வந்தது. அவர் படைகளைத் திருப்பிக் கொண்டு ரஷ்யத் தலைநகரை நோக்கி வரத் தொடங்கினார். ரஷ்யாவின் சுதேசிப் படைகளுக்கும், ரஷ்யாவின் ஒப்பந்தப் படைகளுக்குமான போராக மாறும் சாத்தியங்களை அது கொண்டிருந்தது. பிறகு ஒரு மூன்றாம் நாட்டின் தலையீட்டில் இரண்டு தரப்புக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டு அந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்து அவர் துருப்புகளைத் திருப்பிக்கொண்டு மீண்டும் போர்முனைக்குப் போனார். 

அடுத்த சில மாதங்களில் Yevgeny Prigozhin ஐ ஏற்றிக்கொண்டு பறந்து சென்ற ஹெலிகாப்டர் நடு வானில் வெடித்துச் சிதறியது. அவரைக் கொன்றது ரஷ்யாதான் என்பது ஒன்றும் புரியாத ரகசியம் இல்லை. அவர் துருப்புகளைத் திருப்பிக்கொண்டு,  கிரெம்ளின் நோக்கி வரும்போதே, அவரது தேதி குறிக்கப்பட்டுவிட்டது என்று நினைத்தேன். ரஷ்யாவின் சுபாவம் குறித்து நம் ஊர் கம்யூனிஸ்ட்களுக்கு இருப்பது போன்ற மயக்கம் எதுவும் எனக்கில்லை.  ரஷ்யா-உக்ரைன் போரையொட்டி, அமெரிக்காகவுக்கும் ரஷ்யாவுக்கும் இருக்கும் ஆறு வித்தியாசங்களை யாராவது பட்டியலிட்டால், அது இந்தியாவில் வரப்போகிற புரட்சியை விட சுவாரஸ்யமாக இருக்கும். 

இப்போது நாம் போர் முனைகளில் மாட்டிக்கொண்டிருக்கும் இந்தியர்களைப் பற்றி இவ்வளவு விரிவாக ஏன் எழுதுகிறேன் என்கிற இடத்துக்கு வருகிறேன். அதாவது இரண்டாண்டுகளுக்கு முன்பு, அக்னீபாத் வீரர்கள் என்று இந்த வலதுசாரி அரசாங்கம் பீற்றிக்கொண்ட முன்னெடுப்பு பற்றி, மேற்கண்ட பின்புலத்தில் அதை ஆராய்வதே என் நோக்கம்.

அமெரிக்காவும், ரஷ்யாவும் மற்ற பிற நாடுகளும் நடைமுறைப்படுத்தியிருக்கிற ஒப்பந்த வீரர்களின் இந்திய வடிவமே அக்னீபாத் வீரர்கள். அதன் விபரீத பின்விளைவுகள் என்னவாக இருக்கக் கூடும் என்று யோசித்தாலே அச்சமாக இருக்கிறது. நான் கொஞ்சம் மிகைப்படுத்துகிறோனோ, என்று கூட எனக்குத் தயக்கமாக இருக்கிறது. இருந்தாலும் இந்த அச்சத்தை நான் பகிர்ந்துகொள்கிறேன். 

இரண்டு வருட காலம் நமது ராணுவத்தால் பயிற்சியளிக்கப்பட்டு, பிறகு விடுவிக்கப்படும் அக்னீபாத் வீரர்கள், (அதாவது நமது ராணுவத்தால் எடுத்துக்கொள்ளப்படும் சொற்ப வீரர்களைத் தவிர மீதமுள்ள வீரர்கள்) எங்கு போவார்கள்? சந்தையில், அவர்களை எடுத்துக் கொள்வதற்கு இதைப் போன்ற ஒப்பந்த நிறுவனங்கள் ஆர்வம் காட்டும்தானே? அதைத் தடுக்கும் வழிமுறைகள் எதுவும் அவர்களுக்குப் பயிற்சியளிக்கும்போதே உறுதி செய்யப்படுகிறதா? அல்லது அவர்கள் நமது ராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று இருக்கிறதா? அப்படித்தான் இருக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன்.

Russian Contract soldiers or american contract soldiers and disputes என்று கூகூகிள் தட்டித் தேடிப்பாருங்கள். நான் சொல்வதன் வீர்யம் புரியும். அவ்வாறு ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு எடுக்கப்படும் வீரர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாக போராடுவதெல்லாம் நடக்கிறது. அவர்களது ஒழுங்கு, தார்மீகம், அத்துமீறல்களை பொறுப்பு கூற வைப்பது போன்றவை எல்லாம் பிறகு.

ஏன் இத்தனை இந்திய இளைஞர்கள் உயிரைப் பணயம் வைத்து இத்தகைய வேலைக்குப் போகிறார்கள்? யுத்த முனையில் வேலையாள் பணி என்றாலும் கூட அது உயிருக்கு ஆபத்தான பணிதானே? இருந்தாலும் ஏன் போகிறார்கள்? இது மட்டுமல்ல, சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குக் குடியேற முயல்பவர்கள், கனடாவுக்குச் செல்பவர்கள் என்று இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கின்றது. இதை எப்படிப் புரிந்துகொள்வது? அப்படியானால் இந்த வலதுசாரி அரசு சொல்லும் வளர்ச்சி, முன்னேற்றம் போன்ற குறியீட்டு எண்களுக்கு என்னதான் பொருள் என்று ஆயாசமாக இருக்கிறது. 

இந்த விஷயத்தில் நான், நமது பொருளியல் அறிவு ஜீவிகள் சொல்வதை ஏற்கிறேன். இந்த அரசு நம்பர்களுடன் விளையாடி நமது சமூக, பொருளாதார யதார்த்தத்தை மறைக்கிறது. பணம் இருப்பவர்களுக்கும், இல்லாதவர்களுக்குமான வேறுபாடு நமது கற்பனைக்கு எட்டாத வகையில் அதிகரித்துக்கொண்டே போகிறது என்பதே நிஜம். இதை வெறும் மதத்திற்குள் வைத்து பொதிந்து விட முடியாது. நீண்ட, ஆழமான, பொறுப்பான அரசியல் விவாதங்கள் தேவை.