Wednesday, September 21, 2016

ராமன் ஏகப்பட்ட பத்தினிகள் விரதன்

ராமன் ஏக பத்தினி விரதன் அல்லன் ஏகப்பட்ட பத்தினிகள் விரதன்
- தோழர் வே. மதிமாறன்

வே. மதிமாறன் எழுதிய "நான் யாருக்கும் அடிமையில்லை எனக்கடிமை யாருமில்லை" நூலில் இருந்து (பக்கம் 52 to 58)

ராமன் கடவுளா? மனிதனா?
"கடவுளுக்கு பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை. ராமன் கடவுளாக இருந்தால் பிறந்திருக்க முடியாது. பிறந்திருந்தால் அவன் கடவுள் கிடையாது. அயோத்தியில் அவன் பிறந்திருந்தால், அவன் மனிதன். மனிதனுக்கு எதற்கு கோயில்? இல்லை அவன் கடவுள் என்றால், அப்புறம் அவன் எப்படி அயோத்தியில் பிறந்-திருக்க முடியும்? ஆக, ராமனுக்கு அயோத்தியில் கோயில் தேவையில்லை" 

Thursday, September 8, 2016

புத்தக அறிமுகம்76/100

*புத்தக அறிமுகம்76/100*

*"சரயு"*

அருணன் எழுதிய புத்தகம் இது.

உலகமே மெச்சும் ராமராச்சியம் எவ்வளவு கேவலமானது என சொல்லும்.

வருணாசிரம கொள்கைகளுக்காக பல அவச்செயல்கள் செய்த ராமராச்சியத்தை தானா நாம் விரும்புகிறோம்? படித்துவிட்டு முடிவு செய்யுங்கள்.

தசரதனுக்கு வாரிசில்லை என்று தானே படித்திருக்கிறோம்.

தசரதனுக்கு ஒரு மகள் இருந்ததையும் அவளின் கணவனின் தயவினாலேயே(?) தசரதன் மனைவிகள் கர்ப்பம் தரித்தனர் என்கிற விடயம் அறிந்திருக்கிறீர்களா?

இந்த ரகசியத்தை அறிந்த
சம்பூகன் என்ற தாழ்த்தப்பட்டவரை, சூத்திரன் தவம் செய்யக்கூடாது என வெட்டி கொன்றதையும்,

எந்த லெட்சுமணன் தன் மனைவியை கூட விட்டுவிட்டு அண்ணா அண்ணா என்று வந்தானோ அவனை சரயு நதிக்கரையில் ராமனே தலையை வெட்டி வீசியதையும் இவர்கள் சொல்லும் ராமாயணம் மறைத்ததை சொல்லும் நூல்.

பரதனின் மனைவியின் அதிகார வெறியினாலே, பிறப்பறியாத சீதை நாடாள கூடாது என்ற சதியை மறைத்து வேலைக்காரி கூனியை பலியாக்கிய பாவிகளின் கதை ராமாயணம்.

ராமாயணத்தில் பரதனின் மனைவியின் பாத்திரத்தை மையமாக வைத்து ஆய்வு செய்யப்பட்டிருக்கும் அற்புத நூல் இந்த புத்தகம்.

கார்னிவல் தியேன்டரில் ஒரு பாப்கான் விலையில் புத்தகம்.

வாங்குங்க, வாசிங்க.
அட ஏற்கனவே படிச்சாச்சா!
விடுங்க
உங்க நண்பருக்கு சொல்லுங்க.

வாசித்ததைப் பகிர்வோம்,
பகிர்வதற்காக வாசிப்போம்.

*மு.வீரகடம்ப கோபு*
திண்டுக்கல்.
*#8489277070*