Thursday, August 31, 2017

கண்ணகி முருகேசன் கொலை

Vijay baskervijay
Via Facebook
2017-09-01

2003 ஆம் வருடம்

முருகேசனும் கண்ணகியும் ரகசியமாக திருமணம் செய்து ஜாதி வெறியர்களுக்கு பயந்து  ஊரை விட்டு போய்விடுகிறார்கள்.

காரணம்

முருகேசன் ஒரு தலித்
கண்ணகி வன்னியர்

முருகேசன் வயது 25. அவர் ஒரு Engineer ஆக வேலை பார்த்திருக்கிறார்.

கண்ணகி பி.காம் படித்திருக்கிறார்.

அவர்கள் ஊரை விட்டுச் சென்றதும் கண்ணகியின் உறவினர்கள் ஊரெல்லாம் அவர்களை தேடியிருக்கிறார்கள்.

கண்ணகியின் அண்ணன் முருகேசனின் மாமாவை மிரட்டி , முருகேசன் இருக்குமிடம் அறிந்து முருகேசனை தூக்கி வந்திருக்கின்றனர். வந்ததும் முருகேசனை கம்பத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்திருக்கின்றனர்.

வலி தாங்க முடியாமல் முருகேசன் தன் மனைவியான கண்ணகி இருக்குமிடத்தை சொல்கிறார்.

உடனே 12 பேர் அராஜகமாக கண்ணகியை தூக்கி வந்திருக்கின்றனர். வந்து இருவரையும் கம்பத்தில் கட்டி வைத்து அடித்திருக்கின்றனர்.

முருகேசனுக்கும் கண்ணகிக்கும் பலவந்தமாக விஷம் கொடுத்திருக்கின்றனர்.

விஷம் கொடுப்பட்ட முருகேசனும் கண்ணகியும் பிணமாகிப் போய்விட அவர்கள் உடலை தனிதனியாக ஊருக்குள்ளே எரித்திருக்கின்றனர்.

விடிவதற்கும் இதையெல்லாம் செய்து முடித்துவிட்டார்கள். இத்தனையும் நடக்கும் போது முருகேசனின் உறவினர்கள் அருகில் இருக்கும் போலீஸ் ஸ்டேசனுக்குச் சென்று முருகேசனையும் கண்ணகியையும் காப்பாற்றுமாறு கெஞ்சி இருக்கின்றனர்.

போலீஸ் கண்டுகொள்ளவில்லை.

அதன் பிறகு விடுதலைச் சிறுத்தை கட்சித்தலைவர் தொல்.திருமாவளவனின் தொடர்ச்சியான வற்புறுத்தலுக்கு பிறகு போலீஸ் கேஸ் ஃபைல் செய்திருக்கிறது.

அதுவும் எப்படி நான்கு வன்னியர்கள், நான்கு தலித்கள் என்று சரிக்கு சமமாக அரஸ்ட் செய்திருகிறது.

வன்னியரான கண்ணகிக்கு அவர் சொந்தங்கள் விஷம் கொடுத்ததாகவும்.

தலித்தான முருகேசனுக்கு அவருடைய அப்பாவும் மாமாவுமே விஷம் கொடுத்ததாக போலிஸ் கேஸ் ஃபைல்  செய்திருக்கிறது.

இதை எதிர்த்து முருகேசனின் மாமாவும் அப்பாவும் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சொல்ல, சி.பி.ஐ விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

1.முருகேசன் ஒரு Engineer கண்ணகி பட்டம் படித்துக் கொண்டிருக்கிறார். அவர்கள் இருவரும் காதல் செய்து திருமணம் செய்து கொண்டிருந்தால் இப்போது வீடு வசதி என்றிருந்து அவர்கள் குழந்தை பத்தாம்வகுப்பு தேர்வு எழுதி முடித்திருக்கும். இங்கே முருகேசன் பொருளாதாரத்தில் உயர்வாக இருந்தாலும் ஜாதி வெறியால் அவரை கண்ணகி வீட்டாரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அனைவரையும் வசதிப்படுத்திவிட்டால், பொருளாதார சமநிலை அடைய வைத்தால் ஜாதிவெறி அகன்று விடும் என்ற கூற்று மிகத்தவறான ஒன்று என்பதை இங்கே கண்டுகொள்ளலாம்.

2. கண்ணகியின் போட்டோவைப் பார்த்தால் ரெட்டை ஜடை போட்டு மென்மையாக அழகாகத் தெரிகிறார். நிச்சயம் கண்ணகியின் அப்பாவும் அண்ணனுக்கும் கண்ணகியின் மேல் பாசமாக இருந்திருப்பார்கள். கண்ணகிக்கு பிடித்தவற்றை வாங்கிக் கொடுத்திருப்பார்கள். ஆனால் ஒரு தலித்தை திருமணம் செய்து கொண்டாள் மகள் என்றதும் விஷம் கொடுக்கச் சொல்கிறது.  ஜாதி வெறி என்பது பாசம் பந்தம் அனைத்தையும் கடந்தது என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

3. திருமணம் ஆகிக் கொண்டிருக்கும் போது கண்ணகி வீட்டார் பிடித்தால் இருவரையும் கொன்றிருக்க மாட்டார்கள். ஆனால் முருகேசன் கண்ணகியை திருமணம் செய்து சில நாட்கள் ஆகிவிட்டன. அவர்களுக்குள் உறவு நடந்திருக்கும் என்று கண்ணகி வீட்டார் நினைக்கிறார்கள். அந்த தூய்மை கேடலை (
அவர்களைப் பொறுத்தவரை????) அவர்களால் ஒத்துக் கொள்ள முடியவியவில்லை. விஷம் கொடுத்து கொன்று விடுவார்கள்.

4. அதை 300 பேர் அமைதியாக வேடிக்கை பார்த்திருக்கிறார்கள். எது அவர்களை அமைதியாக வேடிக்கை பார்க்க வைத்தது
- தலித் எப்படி வன்னியரை திருமணம் செய்யலாம் என்ற கருத்து அவர்கள் மனதில் படிந்தமையால்.
- அவள் கெட்டுப் போய்விட்டாள். இனி யார் அவளை திருமணம் செய்வார்கள் என்ற பிற்போக்கு எண்ணத்தால்.
- ஆமா அப்பாவும் அண்ணனும் எவ்வளவு பாசமாக வளத்தாங்க. இவ இப்படி பண்ணினா கொல்லத்தான் செய்வாங்க என்ற் எண்ணம் இருந்ததால்.
அந்த அமைதியின் பின்னால் இருக்கும் அருவருப்பான பொதுப்புத்தி மனநிலையை இங்கே காணலாம்.

5.முருகேசன் உறவினர்கள் போலீஸ் ஸ்டேசனுக்கு சம்பவம் நடக்கும் போதே போய் கெஞ்சியிருக்கிறார்கள்.
போலீஸ் கண்டுகொள்ளவில்லை. போலீஸின் கண்டுகொள்ளாமைக்கு பின்னால் இருக்கும் மனநிலை என்ன?
- வன்னியர்களுக்கு சாதகமாக நடந்து கொண்டால் ஊரில் நிம்மதியாக இருக்கலாம். அவர்களை பகைத்துக் கொள்ள முடியாது என்ற பயமாய் இருக்கலாம்.
- தலித்கள் மீதுள்ள வெறுப்பும் எரிச்சலும் காரணமாய் இருக்கலாம்.
- துறை ரீதியாக கூட யாரும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். அரசாங்கமே ஆதிக்க சாதியினர் அட்டகாசத்தை கண்டுகொள்வதில்லை என்று நினைக்கிறார்கள்.
- தமிழ்நாட்டு மக்கள் கூட இதற்காக ஒன்று திரண்டு எந்த போராட்டத்தையும் செய்துவிட மாட்டார்கள் என்று நம்புகிறார்கள்.

6. குற்றம் சாட்டப்பட்டவர்கள் லிஸ்டில் முருகேசனுக்கு விஷம் கொடுத்ததாக முருகேசனின் அப்பாவையும் மாமாவையுமே சேர்த்திருக்கிறார்கள் பாருங்கள். இந்த இடத்தில் வாசிக்கும் நீங்கள் நின்று கொள்ளுங்கள். யோசியுங்கள். உண்மையிலேயே முருகேசனுக்கு அவர்  வீட்டார் விஷம் கொடுத்திருப்பார்களா? அப்படி கொடுத்திருந்தாலும் அது ஊராரின் கொலை மிரட்டல் காரணமாகவா? அல்லது வேறு ஏதாவது மிரட்டலா? 
கேட்க யாருமே இல்லை என்ற நிலை உள்ளவர்களைத்தான் இப்படியெல்லாம் கொடுமைப்படுத்த தோன்றும் அப்படித்தானே.

6. தலித் என்றால் போலீஸ், அரசியல்வாதிகள். ஊர்மக்கள், ஊடகங்கள் என்று அனைவரும் மிக மோசமாக நினைக்கிறார்கள் பாருங்கள்.

7 - தலித் என்றாலே குறைந்தவர்கள் என்ற மனநிலை
   - தலித்களோடு ஒன்றிணைவதே அவமானம் என்ற சமூக மனநிலை.
-  தலித்களோடு சேர்வதற்கு விஷம் குடிக்க வைக்கும் சமூக மனநிலை.
- தலித் கொடுக்கும் குற்றச்சாட்டுகளை எடுக்க மறுக்கும் மனநிலை
- கம்ப்ளைட் கொடுக்க வந்தவர்கள் மேலேயே குற்றம் சாட்டும் தலித் எதிர்ப்பு, தலிர் அலெட்சிய மனநிலை
- தலித்களுக்கு என்று பொது அரசியல் கட்சிகள் களத்தில் குதிக்காத காரணத்தின் பின்னால் உள்ள மனநிலை.
- மக்கள் மனதில் இவையெல்லாம் ஒரு பாதிப்பை உண்டு பண்ணாத மனநிலை. இது பற்றியெல்லாம் யோசியுங்கள்.

8. இந்த ஆதிக்க சாதி மக்களின் ஜாதி வெறியை எப்படி மாற்றலாம் என்று யோசியுங்கள். ஒரு வன்னிய ஜாதியைச் சேர்ந்த பையன் சென்னைக்கு வந்து டாக்டர் பட்டம் பெற்றாலும் கூட ஊருக்கு கோவில் திருவிழாவுக்கு போகும் போது அவன் மனதில் ஜாதி உணர்வு ஏற்றபடுகிறது என்பது பற்றி யோசியுங்கள்.

9.ஆதிக்க ஜாதியனருக்கு எப்படி அரசாங்கம், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என்று அனைவரும் வளைந்து கொடுக்கிறார்கள் என்று கவனியுங்கள். அவர்கள் அனைவரும் மனிதர்கள் இல்லையா? அவர்களுக்கு இயற்கையான மனித நேயம் உண்டுதானே. அப்படியானால் எதனால், எது அந்த மனித நேயத்தை மீறி ஜாதி வெறியர்களாகிறார்கள் என்று யோசியுங்கள்.

10. உங்கள் வீட்டில் இந்த ஜாதி வெறி எப்படியெல்லாம் மறைமுகமாக தலை விரித்திருக்கிறது என்பது பற்றி யோசியுங்கள். கவனியுங்கள்.

தலித் அல்லாதவர்கள் தலித் Empathy அதாவது ஒரு தலித் இடத்தில் இருந்து அவர் வலியை உணர்வது மிக மிக முக்கியம்.

நீங்கள் முருகேசனாய் இருந்து பாருங்கள்.
முருகேசனின் மாமாவாய் இருந்து பாருங்கள்.
முருகேசனின் அப்பாவாய் இருந்து பாருங்கள்.

முருகேசனின் வாயருகேவும் கண்ணகியின் வாயருகேவும் விஷத்தை கொண்டு போன அந்த ஆதிக்க ஜாதி கைகளை நினைத்துப் பாருங்கள்.

அந்த கைகளின் பின்னால் உள்ள ஜாதிவெறியை உணருங்கள்.

அதே ஜாதி வெறி மிருகம் வேறு வடிவத்தில் உங்கள் மனதுக்குள்ளே இருப்பதை ஒத்துக் கொள்ளுங்கள்.

ஒத்துக் கொண்டு அதை எப்படி மாற்ற முடியும். ஒழிக்க முடியும் என்றெல்லாம் யோசியுங்கள்.

ஒரு தலித் அதிகாரமிக்க அரசு மட்டுமே இதை ஒழிக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதன்படியே உங்கள் அரசியல் பார்வையை அமைத்துக் கொள்ளுங்கள்.

OBC மற்றும் FC யினர் ”தலித் அதிகார அரசை”

கொள்கை அளவில் முதலில் ஆதரிப்பது சமூகநீதியில் மிக மிக முக்கியமான திருப்புமுனையாக இருக்கும்.

இன்னமும் அது தமிழகத்தில் வரவில்லை.

வரவேண்டும். வரும்.

இன்றைய (31/08/2017) இந்தியன் எக்ஸ்பிரஸில் எடுக்கப்பட்ட செய்தி இது..

டீமானடைசேஷன் என்ற பெருந்தோல்வியிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்

டான் அசோக்
Via Facebook
2017-09-01

டீமானடைசேஷன் என்பது தோல்வி (failure) அல்ல,  பெருந்தோல்வி(fiasco). இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் சில உள்ளது. குறிப்பாக ஐடியில் வேலை செய்யும் இளைஞர்கள். 

1) அமர்த்தியா சென், மன்மோகன் சிங், ப.சிதம்பரம் ஆகியோர் தான் பொருளாதார நிபுணர்கள்.  ஆர்.ஜே.பாலாஜியும், ஜெயமோகனும், எஸ். வி. சேகரும், எச் ராஜாவும் மற்றும் அவர்களைப் போன்றவர்களும் வெறும் அரை வேக்காட்டு ஜால்ரா நிபுணர்கள்.

2) ஃபோட்டோஷாப்பில் எல்லாமே அழகாகத் தெரியும்.  ஆனால் அது குஜராத்தா, சைனாவா என ஒரு நொடி இணையத்தில் சரிபார்த்து நண்பர்களிடையே பரப்பினால் வீட்டுக்கும், நாட்டுக்கும் நல்லது.

3) வளர்ச்சி என்பதும், முன்னேற்றம் என்பதும் மந்திரத்தில் காய்க்கும் மாங்காய்கள் அல்ல. எல்லாம் இப்போதே, உடனே நடக்கவேண்டும் என்ற பேராசையில் ஆசைகாட்டி மயக்கும் மந்திரவாதிகளை ஆதரித்தால் வளர்ச்சி மைனஸில் போய் நிற்கும்.  இருப்பதும் பிடிங்கப்படும்.

4) மதம் என்பது வீட்டின் பூஜையறையில் இருக்கவேண்டியது.  அதை தூக்கி ஆட்சிக்கட்டிலில் வைத்தால் அது, “அருந்ததி தெரியுது பாருங்கோ..” என கல்யாண புரோகிதர்கள் ஏமாற்றுவதைப் போல இல்லாத ஒன்றைக் காட்டி ஏமாற்றுமே தவிர, அதற்கு நிர்வாகமும் தெரியாது ஒரு மயிரும் தெரியாது. மனசாட்சியே இல்லாமல் குழந்தைகளைக் கொன்றுவிட்டு, “அதுக்கு நாங்களா பொறுப்பு?” எனக் கேட்கும்.  

5) தேசபக்தி என்பது ஒரு நாட்டின் கொடியின் மீது, தேசியகீதத்தின் மீது வைப்பதல்ல.  தேசத்தின் மக்கள் மீதும், தேசத்தின் சீரான வளர்ச்சியின் மீதும் வைப்பது.  எவன் ஒருவன் மக்களை விட மண்ணின் மீது பற்றாக இருக்கிறானோ அவனே தேசதுரோகி என அறிக.

6) இதுதான் மிகவும் முக்கியம்.  வாட்சப் என்பது அரட்டை அடிக்கவும், கேர்ள்ஃப்ரண்ட் பாய்ஃப்ரண்டோடு கடலை போடவும் இருக்கும் ஒரு அழகான செயலி.  அது செய்தித்தாளோ, நூலகமோ அல்ல.  அதிலிருந்து செய்திகளை அறிந்துகொண்டு அரசியல் பேசினால் அறிவில் ஒட்டடை பிடித்துவிடும். எனவே படித்து டிகிரி வாங்கிவிட்டு, “நம்ம நாடு ஏன் இப்படியே இருக்கு?” என அங்கலாய்த்தால் மட்டும் பத்தாது.  வரலாற்றைப் படிக்கவேண்டும்.  உண்மைகளை, புள்ளிவிவரங்களை கொஞ்சம் சிரத்தை எடுத்து தெரிந்துகொண்டு கருத்துக்களை சுயமாக உருவாக்கிக் கொள்ளப் பழக வேண்டும்.

-டான் அசோக்

#demonetization

Wednesday, August 30, 2017

போ போயி ஒழுங்கா மாட்டு மூத்திரம் குடிச்சுட்டு சாணி அள்ளு போ... !

Tameem Tantra
Via Facebook
2017-08-56

ப்ரோ நீட் தேர்வைப்பத்தி எழுதுங்க எழுதுங்க நிறைய பேர் நச்சரிக்கிறார்கள்...

எனக்கு புரியல... நான் எதுக்குடா நீட் தேர்வை பற்றி எழுதணும்?

நீட் கண்டிப்பாக வேணும், நீட் எல்லாம் நல்ல விஷயம் தான்.  ஆமா தெரியாமத்தான் கேக்கறேன்? உங்களுக்கு எல்லாம் எதுக்குடா படிப்பு? நீங்க எல்லாம் படிச்சு என்ன பண்ண போறீங்க?

ஏன்டா... என்ன படிச்சாலும், வெளிநாட்டுக்கு போய் படிச்சாலும், அங்க ஜாலியா உக்காந்து:

- தமிழகம் வீழ்ந்தது / நாசமாகியது,
- இல்லுமினாட்டி / இயற்க்கை, 
- "இந்த சிறுவனிடம் புத்தகத்திற்கு பதில் மம்மூட்டி கொடுத்திருந்தால் விவசாயம் செழித்திருக்கும், தமிழகமும் வாழ்ந்து இருக்கும்",
- "என்ஜினீயர் படிப்பவர்களுக்கு தெரியாது உணவை டவுன்லோட் செய்ய முடியாது என்று",
- "ஆயிரம் இருந்தாலும் கிராமத்தில் வேலை செய்வதுபோல் வராது"னு

வாட்ஸாப்ல புரளி கிளப்புற நாய்க்கு எதுக்குடா படிப்பு?  அதாவது எப்படி எப்படி? புத்தகத்திற்கு பதில் மம்மூட்டி... ஹ்ம்ம்ம்... 

உங்களுக்கெல்லாம் குடியுரிமையே இருக்கக்கூடாதுனு நான் மோடி ஜி கிட்ட பேசிட்டு இருக்கேன். இதுல உங்களுக்கு படிப்பு? அதுலையும் டாக்டரு? ஹ்ம்ம்...

கேப்பீங்கடா கேப்பீங்க...

அப்போ நீ எங்க இருந்த, என்ன பண்ணிட்டு இருந்த... இப்போ நீ இருக்குற இடம் எங்கனு யோசிக்க மாட்ட...

படிச்சு வாட்சப்பில reservation-னால, இலவசமனால தமிழகம் வீழந்தது வாந்தி எடுக்கறதுக்காக?

போதும் போதும் நீ படிச்சு கிழிச்சதெல்லாம் போதும்... நீயெல்லம் படிக்கனும்னு யாரும் இங்க அழுகல...

எதோ பாவம், நாமளுனு உன்னையெல்லாம் கோவில்குள்ள உட்டா, கருவறைக்கு வரணும் பூஜா பண்ணனும் கேக்கறது...

வாயிலேயே மிதிக்கனும்...

போ போயி ஒழுங்கா மாட்டு மூத்திரம் குடிச்சுட்டு சாணி அள்ளு போ... !

கண் தானம் ஒரு மோசடிச்செயல் என்கிற புரளி

Sivasankaran Saravanan
Via Facebook
2017-08-30

*இறந்த பின் கண் தானம் பலரால் செய்யப்படுகிறது . அதனால் பலன் பெற்றவர்கள் ஒருவரையாவது நீங்கள் பார்த்ததுண்டா? *
- என கண் தானம் ஒரு மோசடிச்செயல் என்கிற ரீதியில் ஒரு அக்குபஞ்சரிஸ்ட் போஸ்ட் இட அதை நிறைய பேர் விருப்பமிட்டு மகிழ்கிறார்கள். 

ஒரு விஷயத்தை பற்றி தெரியாமல் இருப்பது தவறல்ல.  ஏனென்றால் எல்லாருக்கும் எல்லாம் தெரியாது.  ஆனால் தனக்கு தெரியாத ஒன்றை தெரிந்தது போல காட்டுவது மோசமான ஒரு குணம். 

கண் தானம் என்றால் கண்ணை எடுத்து வைப்பதல்ல.  கண்ணிலுள்ள கருவிழி எனப்படும் கார்னியா என்ற ஒரு பகுதியை மட்டும் எடுத்து வேறொருவருக்கு பொருத்துவது தான் கண் தானம்.  கார்னியா பார்ப்பதற்கு கிட்டதட்ட கான்டாக்ட் லென்ஸ் போல இருக்கும் .

இந்தியாவில் பார்வையற்றவர்கள் சுமார் 13 மில்லியன் பேர்.  அவர்களில் 1 சதவீதம் பேர் மட்டுமே கருவிழி பாதிப்பு காரணமாக பார்வை இழந்தவர்கள். அதாவது சுமார் 1.3 லட்சம் பேர். 

தானமாக பெறப்படுகிற அளவுக்கு கருவிழி மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறதா என்றால் நிச்சயமாக இல்லை.  ஏனென்றால் தானமாக பெறப்படுகிற கருவிழிகளில் நிறைய பயன்படுத்த இயலாதவை.  அதை ஆய்வுக்கு பிறகே கண்டறிய முடியும்.  தானமாக அளிக்க முன்வரும் குடும்பத்தினரிடம் அதுபற்றி முன்பே சொல்லப்பட்டுவிடும் : இந்த கருவிழிகளை நிச்சயம் இன்னொருத்தருக்கு பொருத்துவோம் என எந்த உறுதியும் தரவியலாது என்று. 

தானமாக அளிக்கிற குடும்பங்களால் ஏன் தானம் பெற்றோர் பற்றிய விபரங்கள் கிடைப்பதில்லை?

ஏனென்றால் உறுப்பு மாற்று மருத்துவ சட்டப்படி அது தவறு.  தானம் அளிப்பதோடு குடும்பத்தின் கடமை முடிந்துவிடுகிறது.  அந்த கருவிழிகளை யாருக்கு பொருத்துகிறோம் அல்லது பொருத்தாமலே விடுகிறோமா என்பதை மருத்துவமனை தெரிவிக்கமாட்டார்கள்.  அதேபோல தானம் பெறுபவருக்கும் யாரிடமிருந்து பெறப்பட்டது என்ற விபரம் தெரிவிக்கப்படமாட்டாது.  சினிமாவில் காட்டுவது போல எல்லாம் நடக்காது. 

கருவிழி மாற்று அறுவை சிகிச்சை உண்மையிலேயே சவாலான ஒன்று.  ஒரு மில்லிமீட்டர் தடிமன் உள்ள திசுவை வேறொருவர் கண்ணில் வைத்து தைப்பது மிகுந்த சவாலுக்குரியது.  நமது கண்ணானது மிக சென்சிடிவான உறுப்பு.  உங்கள் கை விரல்களை கண்ணில் வைத்தாலே எரிச்சல் ஏற்படும்.  வேறொரு கருவிழியை கண்ணில் பொருத்தும் போது கொஞ்ச நாட்கள் கழித்து பொருத்திய கருவிழி பாதிப்படையலாம். 

இவ்வளவு ரிஸ்க் இருந்தும் ஏன் கருவிழி தானம் பெறப்பட்டு கருவிழி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது?

நமது கண்ணின் மொத்த பவர் (திறன்)  +60 டயாப்டர்.  அதில் கருவிழி எனப்படும் Cornea மட்டும் 43 D திறனை கொண்டது.  அந்த கார்னியா பாதிக்கப்பட்டால் அவர் அறவே பார்வையற்றவராக மாறுகிறார்.  அவருக்கு வேறொரு கருவிழியை பொருத்தி பாதியளவு பார்வை வந்தால் கூட அவரை பொருத்தவரை அது பெரிய உதவி. 

அதைவிட முக்கியமானது : அறிவியலில் நிறைய செயற்கை மாற்று உறுப்புகள் வந்துவிட்டன.  இன்றுவரை செயற்கையான கருவிழியை உருவாக்கமுடியவில்லை.  ஒரு கருவிழிக்கு மாற்று இன்னொரு மனித கருவிழி மட்டுமே ஆகும். 

கண் வங்கிப் பணியாளராக நான்  பணியாற்றி நானே சிலமுறை இறந்தவரின் இல்லத்துக்கு சென்று கண்களை தானமாக பெறுகிற பணியில் ஈடுபட்டுள்ளேன். கண் வங்கிகளில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கிற பார்வையற்றவர்களை நான் நேரடியாக அறிவேன்.  தயவு செய்து கண் தானத்திற்கு எதிராக பதிவு செய்யவோ அதை பகிரவோ நினைக்காதீர்கள் . இந்த பதிவை உங்களால் படிக்க முடிகிறது.  ஆனால் உங்களைப்போன்றே உணர்வு நிரம்பிய இன்னொரு சக மனிதனால் பார்வை இல்லாமல் இதை படிக்கமுடியவில்லை என்பது எவ்வளவு கொடுமையான விஷயம்?  தயவு செய்து இதிலெல்லாம் சமூக விரோத கருத்துகளை பதிவுசெய்ய வேண்டாம்..! தானம் தருவது தராமல் இருப்பது அவரவர் விருப்பம்.  தருபவர்களை தடுப்பது சமூக விரோத செயலே ஆகும்.

Saturday, August 26, 2017

பெரியார்-மணியம்மை திருமணம் பற்றி

தமிழ் வாணன்
Via Facebook
2017-08-27

விளக்கம் சொல்லி சொல்லி...😲😲😲😲

****** நம்மில் பலருக்கு தெரியாத பெரியார்-மணியம்மை திருமணம் பற்றி *******

1948 ஆண்டு பெரும் செல்வந்தரான அந்த கிழவனுக்கு  வயது 70. முதுமைக்கே உண்டான நோய்கள் ஒருபுறம், தன் போராடி வரும் மக்களின் மேம்பாட்டு பற்றிய  சிந்தனை ஒருபுறம், அதற்காக உருவாக்க பட்ட கழகத்தின் எதிர்காலம் பற்றிய கவலை ஒருபுறம், தனது மரணத்திற்கு பின் சொத்துக்களை அனுபவிக்க காத்து கிடக்கும் கூட்டம் மறுபுறம் என அவரின் சிந்தனைகள் படபடத்து கொண்டிருக்கிறது. மருத்துவ வசதிகள் இல்லாத அந்த கால கட்டத்தில் மருத்துவரோ ஜாடையாக உடலை கவனித்து கொள்ள கூறுவதை அந்த கிழவனால் ஊகித்து கொள்ள முடிகிறது. முதலில் தன் சொத்துக்களை மக்களுக்கு அதாவது கழகத்திற்கு எழுதி வைத்து விட தீர்மானிக்கிறார். தனது சட்ட ஆலோசகர்கள் வந்துவிட்டார்கள். தீராத வயிற்று வலி, நிற்காத முத்திரம் என வேதனைகளை புறம்தள்ளி விட்டு தொடங்குகிறார்.

எனது சொத்துக்கள் பல கோடிகள் உள்ளது. அதை வைத்து என்னால் உயிரை நீட்டித்து கொல்லவும் முடியாது. நாளை நான் கண் விழிப்பேனா என்றால் அதை என் மருத்துவர் தான் சொல்ல வேண்டும்.  ஆதலால் என் சொத்துக்களை கழகத்திற்கு எழுதி வைக்க முடிவு செய்து விட்டேன். அதற்கு தேவையான ஆவணங்களை தயாரித்து தாருங்கள். எங்கு கையொப்பம் இட வேண்டுமோ அங்கே கையொப்பம் இடுகிறேன். இதை உடனடியாக செய்தாக வேண்டும் என்று தன் வயிற்றில் கையை வைத்து தன் வலியை கட்டுபடுத்த முயன்று கொண்டே கட்டளை இடுகிறார் அந்த கிழவர்.

கிழவனின் உடல்நிலையை அறிந்த சட்ட ஆலோசகர்களோ  தயக்கத்துடன், ஐயா! உங்கள் சொத்துக்கள் சட்டபடி உங்கள் வாரிசுகளுக்கே போகும். அதை நீங்கள் மாற்றி வேறு ஒருவருக்கு எழுதவேண்டுமானால் அதற்கு உங்கள் வாரிசின் சம்மதமும் கையொப்பமும் வேண்டும் என்ற சட்ட சரத்தை கூறுகிறார்கள்.

இளம் வயதில் தன் மனைவியை பறிகொடுத்த அந்த கிழவன், இறந்து பிறந்த குழந்தைகள் என தற்சமயம் வாரிசுகள் யாரும் இல்லை அவருக்கு. ஆதலால் தனது சொத்துக்கள் தன் சகோதரர் குடும்பத்தினருக்கு தான்  சேரும் என்றனர் சட்ட ஆலோசகர்கள். உடனே தன் சகோதரரை நாடுகிறார் அவர். சகோதரரோ சொத்துக்களை கழகத்திற்கு எழுதி வைக்க உடன்படவில்லை.

யாருக்கு தான் அன்றைய கால மதிப்பில் பல கோடிகளை தானம் செய்ய மனம் வரும்.

மீண்டும் சட்ட ஆலோசகர்கள் கூட்டப்படுகிறார்கள். மாற்று வழிகளை ஆராய்கிறார்கள்.

70 வயது முதியவருக்கு இருந்த ஒரே வழி ஒரு வாரிசை உருவாக்க வேண்டும்! எப்படி என்பது தான் சிக்கல். குழந்தைகளையோ இல்லை பெரியவர்களையோ தத்து எடுத்து வாரிசு ஆக்க சட்டம் அனுமதிக்க வில்லை. அப்படியானால் ஒரே வழி திருமணம் மட்டுமே!

முடியாது என்கிறார் அவர்!. சரி திருமணம் தான் வழி என்றால் எப்படி 70 வயது முதியவரை ஒருவர் திருமணம் செய்து கொள்வர்?

அன்றைய காலத்தில் பெண்களுக்குகான திருமணம வயதோ 13. எப்படி சாத்தியம். முடியாது என்ற தீர்க்கமான முடிவை எடுக்கிறார் அந்த முதியவர்.

இதை முவதுமாக பார்த்துக் கொண்டிருந்த அந்த முதியவரின் 35 வயது திருமணமாகாத பணிப்பெண்  முன் வந்தார்.

சட்டத்திற்காக தானே திருமணம். எப்படியும் நான் இந்த முதியவருடன் முழு நேரமும் இருந்து பணியாற்றி வருகிறேன். முதியவரின் உடல்நிலை கருதியும் அவரின் நல்ல நோக்கத்திற்காகவும் இதை நானே செய்கிறேன் என்கிறார்.

சட்ட வல்லுநர்களோ இதை விட்டால் வழி இல்லை என்கிறார்கள். உடன் இருப்பவர்களில் சிலருக்கு இதில் உடன்பாடு இல்லை. ஆனால் தனது சொத்துக்கள் குடும்பத்தினருக்கு போவதில் உடன்பாடு இல்லை. உடல்நிலையோ அவர் கையில் இல்லை.

தீர்க்கமான சிந்தனைக்கு பின் இசைகிறார். 1949ஆம் ஆண்டுஏப்ரல் திங்கள் 9ஆம் நாள் அந்த திருமணம் நடக்கிறது. உடன்பாடு இல்லாதவர்கள் விலகி செல்கிறார்கள். ஆனால் தனது கோடிக்கணக்கான சொத்துக்களை தன் சமுதாயத்திற்காக எழுதி வைத்த நிம்மதியோடு தன் வயிற்றில் உண்டாகும் வலியை மறந்து பெருமூச்சு விடுகிறார் அந்த கிழவர்.

யார் அந்த கிழவர்? ஆம் அவரே தான்... நம் பெரியார் ஈ. வெ. இராமசாமி –

பணிப்பெண் பெயரோ  மணியம்மை.