Tuesday, January 21, 2020

இராமனைச் சார்ந்தவர்கள் யாரும் நிம்மதியாக இருந்ததில்லை.

சாந்தி நாராயணன்
2010-01-21

இராமாயணத்தின்  உருவகப்படி இராமன்
இராமனைச் சார்ந்தவர்கள் யாரும் நிம்மதியாக இருந்ததில்லை.

பெற்ற தசரதன், ராமனின் தாய், வளர்ப்புத் தாய் கூனி ,
கட்டிய மனைவி,
லட்சுமணன் முதல் கூடப் பிறந்த சகோதரர்கள் யாரும் மகிழ்வோடு இல்லை. 

நடந்த தேசத்திலெல்லாம் உறவுகளை மோத விட்டான். 
 
ஆண்ட நாட்டு மக்களையெல்லாம் அழுகையிலும் அவநம்பிக்கையிலும் வைத்தான்.

கூட்டுச் சேர்ந்த சுக்ரீவன் விபீஷ்ணன் 
அரசியல் செய்த அத்வானி 
கால் வைத்த இலங்கை
பிறந்த  உத்திரபிரதேசம் வரை 
ராமனைச் சார்ந்த எவரும் நிம்மதியாய் இருந்ததில்லை.

வாழ்நாள் எல்லாம் 
ராமனும் நிம்மதியாய் இருந்துவிடவில்லை.

பார்ப்பனியத்துக்கு பலியாளாக வாழ்நாள் எல்லாம் 
துக்கமும் துயரமும் இரத்தமும் மனச் சஞ்சலமாகவுமே. வாழ்ந்து இறந்தான் ராமன் 

கடைசி வரை கை பிடித்த சீதை நிம்மதியாய் வாழவிடவுமில்லை. துடிக்கத் துடிக்க தீக்கிறையானாள் .

தனக்காக எல்லாம் துறந்த தம்பி லட்சுமணனை 
பார்ப்பனர்களை மதிக்காமல் போனான் என்று கொலை செய்யும் படியானது.

வளர்ந்து பெரியவானனது முதல் பெற்ற தசரதன் நிம்மதியை இழந்தான் . அப்படியே இறந்தான். 

லவனும் குசனும் தந்தை பெயர் அறியாமலே காடுகளில் 
வாழவேண்டியதிருந்தது  

காதலித்த சூர்ப்பனகை அங்கம் அறுபட்டு அலையவிடப்பட்டாள் 

இராமன் பெயர் சொன்ன காந்தி ராமனின் பெயராலே இயக்கம் நடத்தியவர்களால் கொல்லப் பட்டார்

பார்ப்பனர்களைத்தவிர வேறெருவரின் நன்மைக்காக இராமன் உழைக்க அனுமதிக்கப் பட்டவனில்லை.

வேதம் படித்ததற்காக கொலை செய் என்ற போது ஓடோடி படுகொலை செய்த அடியாளாகவே இராமன் இருந்தான் .
 

ராமனைப் போன்ற ஒரு துஷ்ட பிம்பம் எந்தக் கதைகளிலும் சொல்லப் படவுமில்லை .

அதனால் தானோ என்னவோ தமிழர்கள் இராமனை விட்டு விலகியே இருந்தார்கள். இங்கே அனுமனுக்கு உள்ள மதிப்பு கூட ராமனுக்கு இல்லை. 

இராமனின் துன்பியல் நிகழ்வுகளின்  கடைசி உதாரணமாக ரஜினியாகவே  இருக்கட்டும்.


Saturday, January 18, 2020

வெஜிட்டேரியன் என்னும் பித்தலாட்டம்

Omar Sahrif
2020-01-18

தரவு 1: எங்கள் ஊரில் இருக்கும் இறைச்சிக் கடையில் ஒரு நாளைக்கு ஒரு மாடு எனும் விகிதத்தில் தான் இறைச்சி விற்கப்படும். ஊரில் இருக்கும் மொத்த குடும்பங்களின் எண்ணிக்கை 800இற்கும் சற்று மேல். 

தரவு 2: மனித பரிணாம வளர்ச்சியின் படி மனிதன் என்பவன் ஒரு omnivore அதாவது அனைத்தும் உண்ணி. இன்னும் சரியாகச் சொல்வதென்றால் அவனால் தாவரம், மாமிசம் இரண்டையும் உண்ணவும், சமிபாடடையச் செய்யவும் முடியும். 

தரவு 3: உணவுச் கலாச்சாரம் என்பது நிலம், தட்பவெட்பம், சூழல், மனித உடல் - உழைப்பு போன்ற பிரதான காரணங்கள் மற்றும் இன்னபிற காரணங்களுக்கமைய மாறுபடும். இக்கலாச்சாரம் பல்லாயிரம் வருடங்கள் பரிணாம வளர்ச்சியைக் கொண்டிருக்கும். உதாரணத்திற்கு தென்னாசிய மக்களின் உடல் உழைப்பிற்கும் ஐரோப்பியனின் work smart not hard ஏற்ப அவர் அவர் உணவு கலாச்சாரம் சுவை, வகையறா, அளவு போன்றவற்றில் பயங்கரமாக மாறுபடும். இதை ஒன்றும் பண்ண முடியாது. வழுக்கட்டாயமாக மேற்கு உணவுக்கலாச்சாரத்தை இங்கு திணிக்க முயன்றாலும் இன்னும் பகல் சோற்றை replace பண்ண முடியவில்லை. 

தரவு 4: எமது ஒருவேளை பிரதான உணவில் சோறு, ஏதாவது ஒரு இறைச்சி வகை அல்லது முட்டை, ஒன்றிரண்டு மரக்கறி, கீரை இருக்கும். இந்த வீகனிஸ்ட் மற்றும் அனிமல் அக்டிவிஸ்ட் நினைத்துக் கொண்டிருப்பது எப்படியென்றால் நாமெல்லாம் ஒருவேலை உணவிற்கு தனியொரு மாட்டை சாப்பிடுகிறோம் என்று. 

தரவு 5: உணவுச் சங்கிலி என்று ஒரு வஸ்து இருக்கின்றது. தாவரங்களை மாத்திரம் உண்பவை, மாமிசம் மாத்திரம் உண்பவை, இவையிரண்டையும் உண்பவை. இயற்கையாகவே அமைந்திருக்கும் balance இது. இதற்குள் இருக்கும் விளக்கங்கள் மாத்திரமே விஞ்ஞான விளக்கமாக அமையும். இதற்கு முரணாக இருப்பவை எவ்வளவு முக்கினாலும் விஞ்ஞானத்திற்கு முரணாகவே இருக்கும். 

தரவு 6: இலங்கையில் குறைபோஷக்குடையவர்கள் 22% சரியான போஷனை உணவு கிடைக்கப் பெறாதவர்கள் 33% இதில் பாதிப்பிற்குள்ளானவர்கள் பெரும்பாலும் குழந்தைகள். 

தரவு 7: மகப்பேறு நிலையங்களில் தொடர்ந்தும் வலியுறுத்தும் ஒரு விடயம் iron. குழந்தைகளுக்கு இரும்புச்சத்துள்ள உணவுகளை கொடுங்கள் என்பதுதான். இரும்புச்சத்து அதிகம் இருப்பது ஈரல். அங்கு பணியாற்றும் தாதிமார்கள் குறைபட்டுக்கொள்ளும் ஒரு விடயம் பெரும்பாலானவர்கள் (சிங்களவர்கள்) இறைச்சி வகைகளை குழந்தைகளுக்கு கொடுப்பதில்லை என்பதுதான். 

தரவு 8: Veganism என்பது மேற்கில் உருவான ஒரு மொண்ணைத் தனமான கன்சப்ட். Animal Cruelty என்ற ஒரு விடயத்தை வைத்து உருட்டிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களில் எவரும் குழந்தைப் பருவத்தில் இருந்து வீகனிஸத்தை ஆரம்பித்தவர்கள் இல்லை. நன்றாக உண்டு, குடித்து விட்டு தமது இன்னொரு பென்டசியாக உருவாக்கிக் கொண்டதே இந்த வீகனிஸம். 

தரவு 9: நாம் பழகியிருக்கும் உணவு முறைக்கு ஒருபோதும் வீகனாக மாற முடியாது. ஒரு இறைச்சித் துண்டுக்கு பகரமாக எவ்வளவு மரக்கறி, கீரை, தானிய வகைகள், nuts சாப்பிட வேண்டும் என்பதை calorie நிபுணர்களிடம் கேட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். 

தரவு 10: இந்த நவீன முதலீட்டியம் எப்படி மனிதனின் உணவுக் கலாச்சாரத்தில் புகுந்து அவற்றை தமது வியாபார லாபங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்கின்றது என்பதையும் இந்த வீகனிஸத்தையும் ஒப்பிட்டுப் பாரத்தால் இந்த கணக்கு விளங்கும்.

https://m.facebook.com/story.php?story_fbid=10207124562348731&id=1721970697

பார்பன தீவிரவாதிகள்

தாம்ப்ராஸ் கவனத்திற்கு:

இந்தியாவில் ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டு பதவி இழந்த,

முதல் தீவிரவாதி காந்தியை கொன்ற கோட்சே

முதல் மத்திய அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி.

முதல் முதல்வர் ஜெயலலிதா!

டிஸ்மிஸ் செய்யப்பட்ட முதல் IPS சபேசன்!

முதல் ராணுவ அதிகாரி கே.ஆர்.ராகவன்!

இதுங் எல்லாமே நம்மவா.... என்பது கூடுதல் தகவல்!

😊😊😊

"எம். ஜி. ஆர்" - வண்டவாளம்

Karhi Karthi Chinna
2018-08-15

எம்ஜி ஆர்  என்ன   இப்படி   நாறுது...

படித்து தெரிந்து கொள்ளுங்கள். இளம் தலைமுறையினரே.....

யார் இந்த MGR? 
மறைக்கப்பட்ட உண்மைகள்**
கலைஞருக்கு எதிரா சர்க்காரியா கமிசன் மட்டுமே.ஆனா MGR க்கு எதிரா பால்கமிசன், ரே கமிசன் எரிசாராய முறைகேடு, மருத்துவ கல்லூரி சீட்டு முறைகேடு, பால்டிகா கப்பல் நிலக்கரி பேர முறைகேடு,ராபின் மெயின் முறைகேடு, பாஸிச அடக்குமுறை ஆட்சி, ஏகப்பட்ட துப்பாக்கி சூடுகள், பொருளாதார நாசம், பத்திரிக்கை சுதந்திரம் பறிப்பு, நீதித்துறை மிரட்டல் என எண்ணற்ற குற்றச்சாட்டுகள்.

ஆனால் எதுவுமே பேசப்படவில்லையே ஏன்?

இவர் சினிமாவில் நடிகராக  உத்தமர், வீரர், மக்கள் போராளி, குடியை எதிர்ப்பவர் என பல வேசங்களில் வலம் வந்தவர். ஆனால் உண்மையில் அவர் யார்?

திமுகவின் பொருளாளராக அனைத்து அதிகாரத்துடன் இருந்த MGR கணக்கு கேட்டாராம். ஆனா கலைஞர் கணக்கு தரவில்லையாம். அவரை கட்சியை விட்டு நீக்கிவிட்டார்களாம்.

வேடிக்கையா இருக்குமே😁

ஆனால் ஊரெல்லாம் இதே பேச்சுதான். எல்லோரும் நம்பினர்.
ஆனா இந்திராவின் மிரட்டல்தான் MGR ரின் இந்த பேச்சுக்கும் நடத்தைக்கும் காரணம்.

MGR ஒன்னாம் நம்பர் பயந்தாங்கொள்ளி. மத்தியில் யார் பிரதமரோ யாரிடம் வருமானவரித்துறை இருக்கிறதோ அவர்களை கண்டாலே நடுக்கம்தான். அப்படித்தான் இந்திராவின் அடிமையாக மாறி திமுகவை பிரித்தார்.

MGR ன் அடிமைத்தனத்தால் கச்சத்தீவை இந்திரா கொடுத்தபோது திமுக மட்டுமே அதை எதிர்த்தது.  அதிமுக அனைத்து துவாரங்களையும் மூடிக்கொண்டது. சட்டமன்ற  தீர்மானத்தை கூட ஆதரிக்கவில்லை.

 2016 ல் ஜெ சட்டமன்றத்தில் கச்சத்தீவை பற்றி வாய்கிழிய பேசியபோது MGR ன் கோழைத்தனத்தை பற்றி பேசாதது ஏன்?

மேலும் ஜெ பேசும்போது 2008 ல் தான் கச்சத்தீவை மீட்க வழக்கு போட்டதாக சொல்லியிருக்கிறார்.
1977 ல் ஆட்சிக்கு வந்த MGR ஏன் வழக்கு போடவில்லை?
1991 இல் ஜெ ஆட்சிக்கு வந்ததும் ஏன் வழக்கு போடவில்லை?

ஏனென்றால் இதெல்லாம் ஊரை ஏமாற்றும் வேலை என்பது ஜெ க்கு நன்கு தெரியும். இனி கச்சத்தீவை மீட்க வழியே இல்லை.
1974 ல் திமுகவுடன் காங்கிரஸ் மற்றும்  அதிமுக சேர்ந்து மத்திய அரசின் முடிவை எதிர்த்திருந்தால் அப்போதைய கச்சத்தீவு தாரை வார்ப்பை தடுத்திருக்கலாம்.

ஆனா அப்போது பொத்திக்கொண்டு இருந்த அதிமுகவும் ஜெ யும் இன்று வாய்கிழிய பேசுவது உச்சகட்ட நகைச்சுவை

1976 இல் எமர்ஜென்சி நேரத்தில் கலைஞர் மீது எண்ணிலா வழக்குகளை போட்டார் இந்திரா.
அவரது நோக்கம் கலைஞரை ஊழல்வாதியாக ஒரு பிம்பத்தை உருவாக்குவதே. 

அத்தனை பத்திரிக்கைகளும் ஊடகங்களும் 2G விவகாரத்தை 
எப்படி ஊதி பெருக்கினார்களோ அதே மாதிரிதான் அன்றும் அவாள் சார்பு பத்திரிக்கைகள் தினம் தினம் சர்க்காரியா விசாரணை செய்திகளை பரப்பின. எமர்ஜென்சி என்பதால் ஒரு தரப்பான கலைஞருக்கு எதிராக செய்திகள் பரப்பப்பட்டது.
கலைஞர் தரப்பு நியாயங்கள் மக்களுக்கு போய் சேராமல் பார்த்துக்கொண்டன.

மக்கள் குறிப்பாக அடித்தட்டு மக்கள் அப்படியே நம்பினார்கள். இன்றும் கலைஞர் மீது அன்று குத்தப்பட்ட ஊழல் முத்திரை விலகவில்லை.

ஆனால் இறுதிவரை சர்க்காரியா கமிசனால் எதையும் நிரூபிக்கமுடியவில்லை. ஆனால் மக்களிடத்தில் திமுக மீது வெறுப்பு வந்தது.

விளைவு... 1977 ல் அதிமுக + இந்திரா கூட்டணி பெரும் வெற்றி.
ஆனால் மத்தியில் காங்கிரஸ் தோல்வி. 

வழக்கம்போல வடிகட்டிய கோழை MGR மத்திய அரசு பக்கம் சாய்ந்ததுடன் தனித்து நின்று தமிழகத்தில் ஆட்சியை பிடித்தார்.

மத்திய அரசுக்கு பயந்துக்கொண்டு தஞ்சை MP இடைத் தேர்தலில் இந்திரா போட்டியிட விரும்ப MGR அதை ஏற்கவில்லை.
இந்திரா கர்நாடகா சிக்மக்ளூரில் நின்று வென்றார்.

மத்தியஅரசின் நிர்ப்பந்தம் காரணமாக தன்னை நிராகரித்த கோழை MGR மீது கடும் கோபம் கொண்ட இந்திரா தான் கலைஞருக்கு செய்த கொடுமைகளுக்கு வருந்தி கலைஞருக்கு தூது அனுப்பி பின்பு மெரினாவில் மக்களிடம் தனது ஆட்சியின் எமெர்ஜென்சி கால தவறுகளுக்கு வருத்தம் தெரிவிக்க திமுக- காங்கிரஸ் உறவு ஏற்பட்டு 1980 ல் தமிழகத்தில் ஒரு இடம் தவிர அனைத்து MP தொகுதிகளிலும்
அந்த கூட்டணி வென்றது.

ஆனால் அதே ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் MGR மீண்டும் வெல்ல அதன் பிறகே MGR ன் உண்மை முகம் வெளியானது.

 
1980 தேர்தலில் வென்ற பிறகுதான் எம்ஜிஆர் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை ரத்து செய்தார். சாராயக் கடைகளை கொண்டு வந்தார். அந்த சாராயக்கடைகள் ஏலம் எடுப்பதன் மூலம் அந்த வருவாய் கட்சிக்காரர்களுக்கே இருக்க வேண்டும் என்று கருதினார்.

அதற்காக சாராயக்கடை ஏலம் கோருபவர்கள் தங்கள் கட்சி உறுப்பினர் சீட்டு விவரங்களை குறிக்க வேண்டும். அவர்களுக்கே முன்னுரிமை தரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு எழுதப்படாத ஆணை பிறப்பித்தார். அது முறையாக நடக்கிறதா என்பதை உளவுத்துறை மூலம் கண்காணித்து நடைமுறைப்படுத்தவும் செய்தார்

சாராயக்கடைகள் திறக்கப்பட்ட வேளை. சாராயக் கம்பெனி நடத்த ஒரு குறிப்பிட்ட தொழிலதிபருக்கே அனுமதி வழங்கப்பட்டது.

1975-80 வரை அரசின் மொத்த வரி வருமானத்தில் கலால் வரியின் பங்களிப்பு வெறும் 1 சதவிகிதம் மட்டுமே.

1980-81 அஇஅதிமுக அரசு தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக மதுப் பயன்பாட்டின் மீதான தடையை நீக்கியது. இதனால் குறிப்பிடத்தகுந்த அளவில் கலால் வரி வருவாய் அதிகரித்தது.

 மாநிலத்தின் மொத்த வரி வருவாயில் குறிப்பிடத்தகுந்த அளவாகக் கலால் வரியின் மூலம் 13.9 சதவிகித வருமானம் 1980-85 வருட காலத்தில் பெறப்பட்டது.

 இந்தக் கலால் வரியில் 80 சதவிகிதம் நகர்ப்புற, கிராமப்புற ஏழைகள் பரவலாக அருந்தும் நாட்டுச் சரக்குகளான பட்டைச் சாராயம், கள் மூலம் பெறப்பட்டது என்பது பெரும்பாலான கலால் வரியை இவர்களே செலுத்தினார்கள் என்பதை விளக்குகிறது.

இந்தக் கலால் வரி வருமானமானது 1981-82 காலத்தில் ரூ.110 கோடியில் இருந்து 1984-85 வருட காலத்தில் ரூ.202 கோடியாக உயர்ந்து கிட்டத்தட்ட இரு மடங்கு அளவுக்கு அதிகரித்திருப்பது கவனத்துக்குரியது.

இதெல்லாமே MGR ரால் ஏழைகள் உழைப்பு எப்படி உறிஞ்சப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள்

எம்.ஜி.ஆரின் தயவால் பணக்காரர்கள் பெற்றது அதிகம். பட்ஜெட் புள்ளிவிவரங்கள் சொல்வதைவிட அதிகமாகவே அவர்கள் பயன்பெற்றார்கள்

சட்ட ரீதியாகவும், சட்டத்துக்குப் புறம்பாகவும் பல கோடி ரூபாய் பொதுப் பணத்தைச் சாராய உற்பத்தியாளர்கள், நகர்ப்புற ரியல் எஸ்டேட் ஒப்பந்ததாரர்கள் ஆகியோரின் தனிப்பட்ட நலன்களுக்காகக் கைமாற்றிக் கொண்டார்கள்.

MGR ரின் அஇஅதிமுக அரசு முறையற்ற மோசடியான மதுக் கொள்கையை வகுத்தது

தமிழக அரசின் ஒட்டுமொத்த மது விற்பனையைக் கவனித்துக்கொள்ள டாஸ்மாக் அமைப்பு 
ஏற்படுத்தப்பட்டது.

இந்தியாவில் உற்பத்தியாகும் வெளிநாட்டு மதுவகைகள் (IMFLs) விநியோகம் செய்யும் மது உற்பத்தியாளர்களுக்கே மது விலையை நிர்ணயிக்கும் உரிமையை வழங்கியது.

இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் மட்டுமே IMFL மதுவகைக்கு உற்பத்தியாளர்களுக்குப் பதிலாக டாஸ்மாக் வழியாகத் தமிழக அரசே கலால் வரி செலுத்தியது.

சுத்திகரிக்கப்பட்ட ஸ்பிரிட் மீதான எல்லா வகையிலான கலால் வரியிலிருந்தும் மது உற்பத்தியாளர்களுக்குத் தமிழக அரசு வரிவிலக்கு வழங்கியிருந்தது. 

இவை அனைத்தும் தமிழக அரசின் கஜானாவுக்கு ஒவ்வொரு வருடத்துக்கும் 100 கோடி ரூபாய் என்கிற அளவில் ஏழு வருடங்கள் தொடர்ந்து பெருத்த வரி இழப்பை உண்டு செய்தன.

 லாபத்தில் இயங்கிக்கொண்டிருந்த அரசு நிறுவனங்கள் தனியாருக்கு அற்பத் தொகைக்குக் கைமாற்றப்பட்டன மற்றும் அரசுக்குச் சொந்தமான நகர்ப்புற நிலங்கள் மிக மலிவான தொகைக்குத் தனிப்பட்ட நபர்களின் நலன்களுக்காக வழங்கப்பட்டன. 

1977-85 இடைப்பட்ட காலத்தில் அடிமைத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு மத்திய அரசு 26.70 லட்சம் நிதி ஒதுக்கியது. இதில் அஇஅதிமுக அரசு 17.04 லட்சம் நிதியைச் செலவு செய்யாமலும், 3.68 லட்சம் நிதியைத் தேவையில்லை என்றும் திருப்பிச் செலுத்தியது.

1983இல் இருந்து விவசாயக் கூலிகளுக்கான குறைந்தபட்ச ஊதியத்தைத் திருத்தியமைக்கவேயில்லை. ஒவ்வோர் இரண்டு வருடத்துக்கு ஒருமுறை ஊதியத்தை ஏற்ற வேண்டும் என்கிற மத்திய அரசின் அழுத்தத்துக்குப் பிறகும் அரசு இப்படி நடந்துகொண்டது.

வறுமைக் கோட்டுக்குக் கீழே தமிழகத்தின் 40 சதவிகித மக்கள் வாடிக்கொண்டிருந்தார்கள். 1977-87 வரை அவர்களின் நிலைமை முன்னேறவே இல்லை.

 மாநிலத்தின் வேலைவாய்ப்பின்மை அளவு மேலும் அதிகரித்தது.1975- 83–க்கு இடைப்பட்ட காலத்தில் கிராமப்புற வேலைவாய்ப்பின்மை அளவு 86 சதவிகிதம் அதிகரித்தது.
இது ஒட்டுமொத்த தேசிய அளவான 17.8 சதவிகிதத்தை விட மிகவும் அதிகமாகும்.

நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை அளவு 1977-78 – 1983 காலத்தில் அகில இந்திய அளவில் குறைந்தபோது தமிழகத்தில் அதிகரித்தது.

விவசாயிகளின் தோழனாக பல படங்களில் நடித்த எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தவுடன் வாகைக்குளத்தில் விவசாயிகளைச் சுட்டுக் கொன்றார்.

மீனவனின் நண்பனாக படகோட்டியில் நடித்த எம்.ஜி.ஆர் அப்பாவி மீனவர்களை சுட்டு வீழ்த்தினார்.

வட ஆற்காடு, தர்மபுரி மாவட்டங்களில் கொடுமையான நிலச்சுவான்தார்களை எதிர்த்துப் போராடிய மார்க்சிய- லெனினிய அமைப்பைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்களை துடிக்க துடிக்க என்கவுன்டர் செய்தார்.

ஒரு வருடத்திற்கும் மேலே முதல் தகவல் அறிக்கையே தராமல் 1.5 லட்சம் மக்களை சிறையில் அடைத்து சித்தரவதை செய்தார்.

எம்ஜிஆரின் ஆட்சி காலத்தில்  பத்திரிக்கையாளர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், இயக்கவாதிகள் இப்படி அனைத்து தரப்பினருக்கும் அடக்குமுறை அனுபவத்தை தந்தது

இதற்காக குண்டாஸ் போன்ற புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன

காவல்துறைக்கு தன்னிச்சையான அதிகாரம் கொடுக்கப்பட்டு அரசை விமர்சிப்பவர்கள் ஒடுக்கப்பட்டனர்.

விசாரணைக் கைதிகளின் மரணம் வருடம்தோறும் அதிகரித்தது.

1980-களில் நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாயிகள் சங்கம், மாநிலம் தழுவிய கடையடைப்பு நடத்தியது. வேடசந்தூர் உட்பட பல கிராமங்களில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், பல்வேறு காலகட்டங்களில் 14 விவசாயிகள் பலியாகினர்.

* 1980 டிசம்பர் 31-ம் தேதி, குருஞ்சாக்குளம் விவசாயப் போராட்டத்தின்போது, 8 விவசாயிகள் போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலியாகினர்.

* 1985-ம் ஆண்டு, சென்னையில் மீனவர் போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில், 3 மீனவர்கள் பலியானார்கள். பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில், 5 பேர் பலியானார்கள்.

*1987 வன்னியர் சங்க போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் 21 பேர்

1980-ல் வடஆற்காடு மற்றும் தர்மபுரி மாவட்டகளில் மார்க்சிய லெனினிய கட்சியைசேர்ந்த 15 பேரும் 1981-ல் நான்குபேரும் எங்கவுண்டரில் கொல்லப்பட்டனர். இந்த கொலைகளை உயர் நீதிமன்றம் கண்டித்தும் இதில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு பாராட்டும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.

எம்.எல்.ஏக்களையும் அமைச்சர்களையும் விமர்சிக்கும் திரைப்படங்களை தடை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

1981-ல் பத்திரிக்கைகளை ஒடுக்கும் விதமாக சட்டம் கொண்டுவரப்பட்டது. 

எந்த வகையிலும் விமர்சனம் என்பது இல்லாமல் பார்த்துக்கொண்டது எம்ஜிஆர் அரசு. உதாரணமாக கொமல் சுவாமிநாதனின் ‘தண்ணீர் தண்ணீர்’ நாடகம் தமிழக கிராமங்களின் அவலத்தை சொல்லும் நாடகமாகும். இந்த நாடகம் தணிக்கை செய்யப்பட்டது. 

இதைத் தழுவி எடுக்கப்பட்ட K. பாலசந்தரின் ‘தண்ணீர் தண்ணீர்’ திரைப்படத்தை தடைசெய்ய்யக்கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது. 

மத்திய அரசு தடைவிதிக்காத் சூழலில் காவல்துறை மூலம் அத்திரைப்படம் ஓடும் திரையரங்கு உரிமையாளர்கள் மிரட்டப்பட்டனர்....

திட்டங்கள் கூட தொடர்ந்து 13 வருடம் ஆட்சியில் இருந்தும் சத்துணவை தவிர வேறு எதையும் பெரிதாக கொண்டு வர வில்லை என்பதும் உண்மை......

மக்களின் ஆதரவிருந்தும் ‘தண்ணீர் தண்ணீர்’ ஒரு சில வாரங்களிலே திரையிலிருந்து விலகியது....

மொத்தத்தில் அடக்குமுறையாலும் பார்ப்பணீயத்தாலும் மூடி மறைக்கப்பட்ட மிக மிக மோசமானவர் தான் இந்த ம.கோ.இராமச்சந்திரன்.......
அதில் சில ஆதாரங்கள்.......

எரிசாராய ஊழலும் ரே கமிசனும்**

ரே கமிஷன் பற்றி வாசிக்க - https://www.facebook.com/kilimookkuArakkanLtd/posts/1742192422667272

பால் கமிஷன் பற்றி வாசிக்க
 https://www.facebook.com/kilimookkuArakkanLtd/posts/1742733099279871

எம்ஜிஆரின் பால்டிகா  நிலக்கரி கப்பல் பேர ஊழலும் மருத்துவ சீட்டு முறைகேடும்.

https://www.indiatoday.in/magazine/indiascope/story/19791215-dmk-leader-karunanidhi-charges-m.g.-ramachandran-government-with-shipping-deal-scam-822260-2014-02-18

MGR ம் ஈழமும்

எம்ஜிஆர் புலிகளை ஆதரிக்க காரணம் இரண்டு

1) கலைஞர் சபாரத்திணத்தை ஆதரித்தார். அவருக்கு எதிரா புலிகளை ஆதரித்தார்.

2) இந்திரா அப்போது ஈழப்போராளிகளுக்கு தமிழகத்தில் பயிற்சி தந்தார்

இல்லாவிடில் பொத்திக்கொண்டு
மௌனமாகத்தான் இருந்திருப்பார்.

எம்ஜிஆர் பணம் கொடுத்தார் என்பது உண்மைதான்
ஆனால் மத்திய அரசு ஒப்புதல் பெற்றுதான் கொடுத்தார்.

சார்க் மாநாட்டுக்கு ஜெயவர்த்தனே வந்தபோது  சென்னையில் இருந்த பிரபாகரனை வீட்டுகாவலில் வைத்தது எம்ஜிஆர்.

டெல்லி அசோகோ ஹோட்டல் விவகாரத்தில் பிரபாகரன் எம்ஜிஆரிடம் உதவி கேட்டார் எம்ஜிஆர் கண்டுக்கொள்ளவில்லை.

1987இல் ராஜிவ் இந்திய அமைதிப்படையை இலங்கைக்கு  அனுப்பிய போதும், 1987 செப்டம்பரில் 20க்கும் அதிகமான போராளிகளை இந்திய கடற்படை சிங்கள அரசிடம் ஒப்படைத்த போதும், திலிபன் உண்ணாவிரதம் இருந்து மறைந்த போதும், தமிழ் நாட்டில் அதிகாரத்தில் இருந்தது எம்ஜிஆர்தான்

https://www.indiatoday.in/magazine/special-report/story/19870731-after-10-years-of-ramachandran-rule-tamil-nadu-presents-a-very-sorry-picture-799093-1987-07-31

Ray commission உதயம் ஏன்?
கலைஞரை ஊழல்வாதி என முத்திரை குத்திய உத்தமர் எம்ஜியாரின் சாராய ஊழல் பற்றிய முழு விபரங்கள் 👇

https://www.indiatoday.in/magazine/investigation/story/19821015-former-hc-judge-to-head-one-man-commission-to-probe-tamil-nadus-liquor-problem-772287-2013-08-27

---

https://m.facebook.com/story.php?story_fbid=133640270901958&id=100027679574288

Wednesday, January 8, 2020

ஆலய நுழைவு போராட்டத்தில் மூஸ்லீம்களின் பங்கு

Dhileepan Bakutharivu
2020-01-07

17 ஆகஸ்டு 1938.

ராவ் பகதூர் எம்.சி.ராஜா விடாப்பிடியாக கோயில் நுழைவு மசோதா ஒன்றை மெட்ராஸ் மாகாணத்தின் முதல் சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். கோயில்களுக்குள் அனைத்து சாதியினரும் நுழைய வழிவகுக்கும் இந்த மசோதாவுக்கு முதல் முட்டுக்கட்டை போட்டவர் அன்றைய மாகாண முதல்வர் ராஜாஜி. "புது சட்டம் எதுவும் தேவை இல்லை. இதற்கு மக்களின் ஆதரவு இருக்காது", என்பது அவரது வாதம். 

ராஜா விடுவதாக இல்லை. விடாப்பிடியாக வாக்கெடுப்புக்கு விட்டே ஆக வேண்டும் என்று வாதிட, அனைத்து சாதியினரும் கோயிலுக்குள் நுழைய வழி செய்யும் ரிமூவல் ஆஃப் சிவில் டிசெபிலிட்டி பில் வாக்கெடுப்புக்கு வந்தது. அதற்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் 24 பேர் மட்டுமே! அவர்களின் பெயர்கள் உங்கள் பார்வைக்கு:
1. குமாரராஜா முத்தையா
2. ஆதிமூலம்
3. அப்பாதுரை
4. பக்தவத்சலு
5. கவுஸ் முஹைதீன்
6. ராஜா ராவ்
7. லால்ஜான்
8. கிராந்தி வெங்கடர்
9. செல்லப்பள்ளி ஜமீன்
10. அப்துல் ஹமீது கான்
11. அப்துல் ரவூப்
12. அப்துல் அலி ராசா, ஆரக்கல் சுல்தான்
13. அப்துல் ரகுமான் கான்
14. ஹெச் எஸ் ஹுசைன்
15. ஷேக் தாவூத்
16. ஷேக் மன்சூர்
17. முகம்மது அலி பேக்
18. அகமது பாதுஷா
19. கே சி சப்தரிஷி
20. கலீஃபுல்லா
21. ஆர் எம் பலட்
22. எம்.சி. ராஜா
23. சுவாமி சகஜானந்தம்
24. ஆரி 

மசோதாவுக்கு எதிராக ஓட்டளித்தவர்கள் 130 பேர்! நடுநிலை எடுத்தவர்கள் 8 பேர். அவர்களில் 7 பேர் ஆங்கிலேயர் அல்லது ஆங்கிலோ இந்தியர். மீதமுள்ள அந்த ஒருவர் தன் கணவரை எதிர்த்து நடுநிலை எடுத்தவர். அவர் கணவரோ ராஜாஜியின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு மசோதாவை எதிர்த்து ஓட்டளித்த அன்றைய பொதுப்பணித்துறை அமைச்சர் யாகூப் ஹாசன் சேட். நடுநிலை எடுத்த அந்தப் பெண்மணி, யாகூப் ஹாசனின் மனைவியும், மாகாணத்தின் முதல் இசுலாமியப் பெண் சட்டமன்ற உறுப்பினருமான துருக்கி நாட்டைச் சேர்ந்த கதீஜா யாகூப் ஹாசன்!  

ஆக, அனைத்து சாதியினரும் கோயிலுக்குள் நுழைய வேண்டும் என்று வாக்களித்தவர்களில் பெரும்பாலான உறுப்பினர்கள் - இசுலாமியர்! கணவரை எதிர்த்து நடுநிலை எடுத்த ஒரே பெண்ணும் இசுலாமியர்!

*வரலாறை அறிய வேண்டும் என்பதற்காக மட்டுமே இந்தப் பதிவு. இங்கு வந்து மத ரீதியாக கம்பு சுற்ற வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்!

#மீள்



https://m.facebook.com/story.php?story_fbid=2834135776671604&id=100002256278432

ஆலய நுழைவு போராட்டத்தில் மூஸ்லீம்களின் பங்கு

Dhileepan Bakutharivu
2020-01-07





https://m.facebook.com/story.php?story_fbid=2834135776671604&id=100002256278432

Friday, January 3, 2020

50 வருட திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு சீரழிந்துவிட்டது

*ஒரு பொய்யை தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தால்,அது ஒரு நாள் உண்மை என நம்பப்படும் என்பார்கள்,,,அப்படித்தான் தமிழ்நாட்டில் ஒரு பொய் பல வருடங்களாக சொல்லப்பட்டு வருகிறது,,,*

அது *"50 வருட திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு சீரழிந்துவிட்டது"* என்பது,,,

நாமும் எதைப்பற்றியும் சிந்திக்காமல், அதை ஆமோதித்துக் கொண்டு, நம்மை நாமே குறைவாக மதிப்பிட்டுக் கொண்டுள்ளோம் !!

கீழே உள்ள புள்ளி விவரங்களை கொஞ்சம் பாருங்கள் !!

*உயர்க்_கல்வி*

பள்ளி கல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம். அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு அதிகம். தமிழ் நாடு - 38.2%. பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 17.6%; மபி - 17.4%; உபி - 16.8%; ராஜஸ்தான் - 18.0%; இந்திய சராசரி : 20.4ரூ.

*கல்வி_நிலையங்களின்_தரம்*

2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் ரேங்க் பட்டியலை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை (HRD) வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலின் படி,

*முதல் 100 சிறந்த கல்லூரிகளில் 37 கல்லூரிகள் இருப்பது தமிழ் நாட்டில்,,,*

பிஜேபி பல ஆண்டுகளாக ஆளும் மோடியின் மாடல் மாநிலம் குஜராத்தில் இருபத்தோ வெறும் மூன்றுதான். இதேபோல ஹிந்தி பெல்ட் மாநிலங்களான மபி, உபி, பிகார், ராஜஸ்தான் போன்றவற்றிலிருந்து ஒன்றுகூட இந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை.

முதல் 100 சிறந்த பொறியியல் கல்லூரிகளில், தமிழ் நாடு - 22 ; குஜராத் - 5 ; மபி - 3 ; உபி - 6 ; பீகார் - 1 ; ராஜஸ்தான் - 3.

முதல் 100 சிறந்த பல்கலைகழகங்களில்

தமிழ் நாடு - 24 ; குஜராத் - 2 ; மபி - 0 ; உபி - 7 ;

பிகார் - 0 ; ராஜஸ்தான் - 4

*பொருளாதார_மொத்த_உற்பத்தி*(GDP)

இந்தியாவில் இருக்கும் 29 மாநிலங்களில், 20 மாநிலங்களின் ஒட்டுமொத்த ஜிடிபியை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 3 மாநிலங்கள் அளிக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பது #தமிழ்நாடு.

தமிழ் நாட்டின் வளர்ச்சி விகிதம் மற்ற தென் மாநிலங்களை விட அதிகமாக உள்ளது.

*தமிழகத்தின் மொத்த வருமானம், ஒட்டு மொத்த பாகிஸ்தான் நாட்டின் வருமானத்திற்கு சமம்*

ஒரு மாநிலத்தின் வருமானம் இந்தியாவிற்கே சவால் விடும் அண்டை நாட்டின் வருமானத்திற்கு நிகராக உள்ளதென்றால், அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும்.

தமிழ் நாடு - 18.80 lakh crore (2nd Place); பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 10.94 lakh crore (5th Place ; மபி - 7.35 lakh crore (10 th Place) ; உபி - 12.37 lakh crore (4 th Place) ; ராஜஸ்தான் - 7.67 lakh crore (7 th Place) ; சத்தீஸ்கர் - 2.77 lakh crore (17 th Place)

*சாப்ட்வேர்_ஏற்றுமதி* (ஆயிரம் கோடியில்)

தமிழ் நாடு - 75,000 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 1917 ; மபி - 343 ; உபி - 13,740 ; ராஜஸ்தான் - 712; சத்தீஸ்கர் - 18

*சிசு_மரண_விகிதம்* 1000 பிறப்புக்கு

தமிழ் நாடு - 21 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 36 ; மபி - 54 ; உபி - 50 ; ராஜஸ்தான் -47 ; சத்தீஸ்கர் - 46 ; இந்திய சராசரி: 40

*ஒரு_லட்சம்_பிரசவத்தில்_தாய்_இறக்கும்_விகிதம்*

தமிழ் நாடு - 79 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 112 ; மபி - 221 ; உபி - 285; ராஜஸ்தான் - 244 ; சத்தீஸ்கர் - 221 ; இந்திய சராசரி : 167

*தடுப்பூசி_அளிக்கப்படும்_குழந்தைகள்_சதவீதம்*

தமிழ் நாடு - 86.7%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 55.2%; மபி - 48.9%; உபி - 29.9%; ராஜஸ்தான் - 31.9%; சத்தீஸ்கர் - 54%; இந்திய சராசரி : 51.2%

*கல்வி_விகிதாசாரம்*

தமிழ் நாடு - 80.33%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 79%; மபி - 70%; உபி - 69%; ராஜஸ்தான் - 67%; சத்தீஸ்கர் - 71%; இந்திய சராசரி : 74%

ஆண் - பெண் விகிதாசாரம் (ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு) இது குறைவாக இருந்தால், பெண் சிசு கொலை அதிகம் என்று பொருள்):-

தமிழ் நாடு - 943 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 890 ; மபி - 918 ; உபி - 902 ; ராஜஸ்தான் - 888 ; இந்திய சராசரி : 919

*தனி_நபர்_வருமானம்* (Per Capita Income) - ரூபாயில்

தமிழ் நாடு - 1,28,366 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 1,06,831; மபி - 59,770 ; உபி - 40,373 ; ராஜஸ்தான் - 65,974 ; சத்தீஸ்கர் - 64,442; இந்திய சராசரி : 93,293

தமிழ்நாடு அரசு மாநில வரி வருமானத்தில், இந்தியாவில் நான்காவது இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டின் தனி நபர் வருமானம் பெரும்பான்மையான இந்திய மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளது.

*வீடுகளுக்கு_மின்சாரம்* (households having electricity)

தமிழ் நாடு - 98.3%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 96%; மபி - 89.9%; உபி - 70.9%; ராஜஸ்தான் - 91%; சத்தீஸ்கர் - 95.6%

*மனித_வள_குறியீடு* (Human Development Index)

தமிழ் நாடு - 0.6663 ; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 0.6164 ; மபி - 0.5567 ; உபி - 0.5415 ; ராஜஸ்தான் - 0.5768 ; சத்தீஸ்கர் - 0.358 ; இந்திய சராசரி : 0.6087

*ஏழ்மை_சதவீதம்* Poverty (% of people below poverty line)

தமிழ் நாடு - 11.28%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 16.63%; மபி - 31.65%; உபி - 29.43%; ராஜஸ்தான் - 14.71%; சத்தீஸ்கர் - 39.93%; இந்திய சராசரி : 21.92%

*ஊட்டசத்து_குறைபாடு_குழந்தைகள்* (Malnutrition)

தமிழ் நாடு - 18%; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 33.5%; மபி - 40%; உபி - 45%; ராஜஸ்தான் - 32%; சத்தீஸ்கர் - 35%; இந்திய சராசரி : 28%

*மருத்துவர்களின்_எண்ணிக்கை*(ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு)

தமிழ் நாடு - 149; பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 87; மபி - 41 ; உபி - 31; ராஜஸ்தான்-48 ; சத்தீஸ்கர்-23 ; இந்திய சராசரி:36

இன்னும் இது போல சொல்லிக் கொண்டே போகலாம்,,,,

உலக புகழ் பெற்ற பொருளாதார நிபுணரும்,நோபல் பரிசு வென்ற *அமெர்த்தியா சென்* அவர்கள் , தமிழ்நாட்டின் வளர்ச்சியை பற்றி இவ்வாறாக கூறுகிறார்,,,,

*தமிழ்நாட்டை_வடமாநிலங்களோடு_ஒப்பிடுவதே_தவறு #முன்னேறிய_நாடுகளோடு_தான்_ஒப்பிட_வேண்டும்*

இனி எவனாவது தமிழ்நாடு திராவிடக் கட்சிகளால் நாசமாய் போச்சு என்றால், வட மாநிலத்திற்கு போகும் அடுத்த ரயிலில் ஏற்றி அனுப்புங்கள்,,,,

As just forwarded msg....