Tuesday, February 27, 2018

ஆம்னி பஸ் கொள்ளைகள்

Rabeek Raja
Via facebook
2018-02-28

* மூன்று சம்பவங்கள்
         * ஆறு அதிர்ச்சிகள்
                * இரண்டு கேள்விகள்
                           * ஒரு கோரிக்கை

# சம்பவம் 1 :

ஆண்டுதோறும் தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்கால நாட்களில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில், போக்குவரத்து அமைச்சராக யார் இருந்தாலும் தவறாமல் ஒரு பேட்டி தருவார்கள். "தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று.

# சம்பவம் 2 :

ஆம்னி பேருந்துகளில் நடக்கும் கட்டணக் கொள்ளையைத் தடுக்க, எல்லா பேருந்துகளிலும் அரசுக்கட்டணத்தை எழுதி ஒட்ட வேண்டும். கூடுதல் கட்டணப் புகார்களைப் பெற புதிய தொலைபேசி எண்ணை அறிவிக்க வேண்டும் என பொதுநல வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று
உத்தரவிட்டிருக்கிறது.

# சம்பவம் 3 :

தீர்ப்பைக்கேட்டு பதறி எழுந்த அரசு தரப்பு வழக்கறிஞர், ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்க ஏற்கனவே அரசு சார்பில் புகார் எண்கள் அறிவிக்கபட்டிருக்கின்றன.
பயணிகள் 044- 24749001, 044- 26744445 என்ற எண்களில் புகார் செய்யலாம் என தெரிவித்திருக்கிறார்.

√ அதிர்ச்சி 1 :

நேற்று தீர்ப்பு வந்ததும், நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்கள் சிலர் அந்த புகார் எண்ணுக்கு அழைத்திருக்கிறார்கள். போனை எடுத்த அலுவலக உதவியாளர், "இது புகார் தெரிவிக்கும் எண்ணே இல்லை. அரசுத் துறையின் இணை செயலாளர் எண். இந்த எண்ணில் கட்டணக் கொள்ளை தொடர்பான எந்தப் புகார்களும் பெறப்படுவதில்லை" என சொல்லியிருக்கிறார்.

"சரி புகார் செய்ய வேறு தொலைபேசி எண்களைக் கொடுங்கள் எனக் கேட்க, ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளைக்கென தனி புகார் எண்களே இல்லை. ஆட்டோ ஓட்டுநர்கள், மீட்டர் பற்றிய புகார்களுக்கு மட்டுமே புகார் எண் இருக்கிறது என்றிருக்கிறார்.

√ அதிர்ச்சி 2 :

" கூடுதல் கட்டணம் பெறும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை " என அரசு சொல்லியிருப்பதால் எவ்வளவு கட்டணம் என ஆராய்ச்சியில் இறங்கினால் அதிர்ச்சி தான்  காத்திருக்கிறது.

SETC அரசு இணையதளத்தில்
சென்னை - திருச்சி இடையே (382கிமீ) சாதாரண பேருந்து கட்டணம் ₹186 .

Red Bus, Make my trips போன்ற இணைய தளங்களில் (பண்டிகைக் காலங்கள், வெள்ளி, சனி,ஞாயிறு இவற்றை எல்லாம் தண்ணி தெளித்து விட்டுவிடுங்கள்) வார நாட்களிலேயே ஏசி இல்லாத சாதாரண பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ₹450. ஆக எப்படி வெளிப்படையாக இப்படி சட்டத்தை மீறுகிறார்கள் என்று கேட்டால் அடுத்த அதிர்ச்சிக்கு தள்ளுகிறார்கள்.

√ அதிர்ச்சி 3 :

தமிழ்நாட்டில் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு அரசு பயணக் கட்டணமே நிர்ணயிக்க முடியாது. ஏன்?

√ அதிர்ச்சி 4 :

தமிழ்நாட்டில் பயணிகள் போக்குவரத்துக்காக ஆம்னி பஸ்களுக்கு அனுமதியே வழங்கப்படவில்லை.
ஐயோ ! அப்புறம்..!!

√ அதிர்ச்சி 5:

பிறகு எப்படி ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன ?
ஐம்பது பேர் ஒரு திருமணத்திற்காக வெளியூர் செல்கிறோம் என தனியார் ஆம்னி பேருந்தோடு ஒப்பந்தம் செய்து பேருந்தையே வாடகைக்கு எடுத்து செல்வோம் இல்லையா, அதுமாதிரி குழுவாக ஆம்னி பேருந்துகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுத்தான் தினம்தினம் இயக்கப்படுகின்றன.
(ஆம்னி பஸ்சுல பக்கத்துல உட்கார்ந்திருக்கிறவன் சட்டப்படி உங்க சொந்தக்காரனாக இருக்க வேண்டும்).

√ அதிர்ச்சி் 6 :

தமிழ்நாட்டில் Semi Sleeper, Sleeper வகை பேருந்துகளுக்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவேயில்லை. வெளிமாநில ரெஜிஸ்ட்ரேசனில் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

#கேள்வி 1 :

சட்டபூர்வமாக தனி நபர் பயணத்திற்கே அனுமதி இல்லாத நிலையில் ஆம்னிபஸ் உரிமையாளர்கள், கூடுதல் கட்டணம் வாங்கக் கூடாதென எப்படி மாநில அமைச்சர் பேட்டி கொடுக்க முடியும்.?

#கேள்வி 2 :

அரசு அனுமதியில்லாத பயணத்திற்கு, அரசுத் தரப்பால் கட்டணமே நிர்ணயிக்க முடியாத பயணத்திற்கு எப்படி கட்டணக் கொள்ளை என்று ஒரு புகார் இருக்க முடியும்? அதற்கு எப்படி ஒரு அரசு புகார் எண் அறிவிக்கப்பட முடியும்? அதை எப்படி ஒரு அரசு வழக்கறிஞர் தைரியமாக நீதிமன்றத்தில் சொல்ல முடியும் ?

கோரிக்கை :
---------------------

கூடுதல் பயணக் கட்டணம், கட்டணக் கொள்ளை தொடர்பான புகார் எண், ஆண்டுதோறும் அமைச்சரின் தெம்பூட்டும் பேச்சு , நீதிமன்றத்திற்கு தவறான தகவல் என போங்கு ஆட்டம் ஆடாமல், காலத்திற்கேற்ப மோட்டார்
வாகன சட்டத்தைத் திருத்தி தொலையுங்கள்.

என்ன செய்யலாம் ?
பொறுப்பானவர்கள் யோசிப்பது நலம்.

இதெல்லாம் அரசு பேருந்து அதிகாரியின் முக நூல் பக்கத்தை மேய்ந்த போது கெடச்ச புல்லு கட்டு.

Jagannathan Balakrishnan

https://m.facebook.com/story.php?story_fbid=1807760415956347&id=100001672181780

மாதவிடாய் ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டியவை.

மாதவிடாய் ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டியவை.

ஒரு பெண் கர்ப்பம் தரிக்க தகுதியான பின் ,
அவளுடைய உடம்பில் ஒவ்வொரு மாதமும் ஒரு முட்டை விருத்தியடையும். அந்த முட்டை கருத்தரித்தால், உள்வாங்கிக்கொள்ள கர்ப்பைப்பையின் உட்பகுதியும் மாதாமாதம்
வளர்ச்சியடைந்து தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும். அந்த முட்டை கருத்தரிக்காமல் அழிந்துபோகும்போது வளர்ச்சியடைந்த கர்ப்பைப்பையின் உட்பகுதியும், சிதைவடைந்து இரத்தமாக வெளியேறும்.

ஆக, மாதவிடாய் என்பது,
ஒரு உயிரை உள்வாங்க தயாரான கர்ப்பைப்பையின் உட்பகுதியின் வெளியேற்றமேயன்றி,
அது ஒரு தீண்டத்தகாத விடயமோ,
அல்லது பெண்ணை ஓரம்கட்டி வைக்கவேண்டியதற்கான‌ காரணமோ இல்லை.

உங்கள் வாயினுள் ஒரு சிறிய கட்டி வளர்கிறது, பிறகு அது சிதைவடைந்து இரத்தமாக வெளியேறும்போது உங்களுக்கு எப்படி இருக்கும் என ஆண்கள் கற்பனை செய்துபாருங்கள். ஒரு சிறிய கட்டிக்கே அப்படியென்றால், கர்ப்பைப்பையின் உட்பகுதி முழுவதுமாக சிதைவடையும் போது எவ்வளவு அசெளகரியங்கள் ஒரு பெண்ணுக்கு ஏற்படும்.

அதுவும் ஒவ்வொரு மாதமும் இந்த அசெளகரியத்தை ஒரு பெண் எதிர்கொள்ள வேண்டும் என்பது எவ்வளவு கடினமானதாக இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.
ஒரு பெண்ணின் உள்ளே எழுந்தமானமாக முட்டை வளர்வதில்லை. இதன்போது எக்கச்சக்கமான ஹோர்மோன்கள் சுரக்கப்படும். இந்த ஹோர்மோன்கள்தான் கர்ப்பைப்பையின் உட்பகுதியின் வளர்ச்சிக்கு உதவுவது மட்டுமல்லாமல், ஒரு குழந்தை உருவானால், அவளில் உடம்பில் ஏற்படவேண்டிய பல மாற்றங்களை உருவாக்கும்.

உதாரணத்துக்கு, ஒரு பெண் பால் கொடுப்பதற்கு ஒப்பான ஒருசில மாற்றங்கள் மார்பில் ஏற்படும். இதனாலும் எக்கச்சக்கமான அசெளகரியங்கள் ஏற்படும்.
அந்த ஹார்மோன்களின் தாக்கத்தால் பெண்கள் மன அளவிலும் பல அழுத்தத்திற்கு உள்ளாவார்கள். அதனால் அவர்களின் கோபம், எரிச்சலடையும் தன்மை அதிகரிக்கும்.

இவ்வாறு ஒரு பெண் மாதாமாதம் பல உடல், உள அழுத்தத்துக்கு உள்ளாவது, என்றோ ஒருநாள் அவள் ஒரு ஆணுக்குப் பெற்றுக்கொடுக்கப்போகும் குழந்தைக்காக,அதனால் அந்த மாதாந்த அசெளகரியத்தை எதிர்கொள்ள ஆண்களாகிய நாமும் ஏதோ ஒருவகையில் பங்களிப்புச் செய்ய கடமைப்பட்டவர்களாகிறோம் இல்லையா?

இது ஒரு கணவன் தன் மனைவியை கவனித்துக்கொள்வதாக மட்டும் அமைந்துவிடுவதில்லை, ஒரு சகோதரியை சகோதரன் கவனித்துக்கொள்ளளாம், ஒரு மகன் தன் தாயினைக் கவனித்துக்கொள்ளளாம், ஒரு தகப்பன் தன் மகளினை கவனித்துக்கொள்ளளாம்.
எவ்வாறு கவனித்துக்கொள்ளளாம்?
இதன்போது கவனித்துக்கொள்ளுதல் என்பது ஒரு பெண்ணை நோயாளிபோல கவனித்துக்கொள்வதல்ல.

1.உங்களோடு வாழும் பெண் ( தாய், சகோதரி, மனைவி ) இவ்வாறான நாட்களில் எரிச்சலடைந்தால் பதிலுக்கு நீங்களும் ஆத்திரப்படாமல் இருக்கலாம்.

2.இந்த நாட்களில் உங்களுக்கு தேநீர் போட்டுத்தர மறந்துவிட்டாள்,சாப்பாடு தர பிந்திவிட்டது போன்ற அற்ப காரணங்களுக்காக ஆத்திரப்படாமல் இருக்கலாம்.

3.ஒரு பெண் கடையில் நப்கின் வாங்கும்போது கேலி செய்வதுபோல பார்ப்பதைத் தவிர்க்கலாம்.

4.ஒரு பெண்பாவித்த நாப்கின்னை குப்பத்தொட்டியில் எறிவதை கேலி செய்யாமல் இருக்கலாம்.

5.உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நீங்களே நப்கின் வாங்கிக்கொடுக்கலாம்.

6.எல்லாவற்றுக்கும்மேலாக ஒரு பெண் தனக்கு மாதவிடாய் அதனால் கொஞ்சம் கஷ்டமாக உள்ளது என்று சொல்லக்கூடியளவு உரிமையை அல்லது சந்தர்ப்பத்தை
ஏற்படுத்திக்கொடுக்கலாம்.

ஒரு பெண்ணின் மனதில் நீங்கள் உயர்ந்த இடத்தைப்பெற்றுக்கொள்ள இவ்வாறான சின்ன சின்ன உதவிகளே போதும்.
அடுத்தமாதம் உங்கள் மனைவியோ, காதலியோ மாதவிடாயாய் இருக்கும்போது, " என்ன கஷ்டமாக இருக்கிறதா?" என்று ஆறுதலாய் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டுவிட்டு, உங்கள் உறவில் எவ்வளவு சந்தோஷமான மாற்றங்கள் ஏற்படுகின்றது என்று பாருங்கள்.......

Srinivasan nithish

Monday, February 26, 2018

CBF: 2014:

CBF: 2014:

1)  அகம் புறம் அந்தப்புரம். Rs:999/-
  2)  மாயவலை. Rs:500/-
3)  என் பெயர் சிவப்பு. Rs:475/-
4)  மறுபக்கம். Rs:395/-
  5)  6174. Rs:300/-
  6)  அமெரிக்க பேரரசின் ரகசிய வரலாறு. Rs:250/-
  7)  உப பாண்டவம். Rs:225/-
8)  பஞ்சமர். Rs:170/-
9)  எண்ணெய் அரசியல். Rs:170/-
10)  சம்ஸ்காரா.  Rs:130/-
11)  காந்தியார் கொலை. Rs:100/-
  12)  இயற்பியலின் கதை.  Rs:100/-
13)  பசுவின் புனிதம். Rs:90/-
14)  ஜாலியா தமிழ் இலக்கணம். Rs:75/-
  15)  கணிதத்தின் கதை. Rs:70/-
16)  பாரதீய ஜனதா பார்ட்டி. Rs:60/-
17)  கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை. Rs:40/-
18)  அயோத்தி ராமன். Rs:15/-
19)  கஷ்மீர். Rs:10/-
20)  அரசு. Rs:10/-

CBF: 2015

CBF: 2015

     0) Exile - 1000/-
1) அஞ்ஞாடி - 925/-
2) வேர்கள் - 999/-
     3) அசுரன் - 395/-
4) கெளரவன் - 395/-
5) பாபர் நாமா - 400/-
6) யாருடைய எலிகள் நாம் - 300/-
     7) சைபர் சாத்தான்கள் - 50/-
     8) சென்னைக்கு மிக அருகில் - 320/-
     9) சரோஜா தேவி - 100/-
10) ராஜீவ் படுகொலை: தூக்கு கயிற்றில் நிஜம் - 200/-
11) திப்புசுல்தான் - மொஹிபுல் ஹசன் - 500/-



------------------------

யாமம் (நாவல்) - எஸ்.ரா
அஞ்ஞாடி - பூமணி

ஜி.குப்புசாமி மொழிபெயர்ப்பு நூல்கள்

ஜி.குப்புசாமி மொழிபெயர்ப்பு நூல்கள்.....

1.என் பெயர் சிவப்பு
ஓரான் பாமுக் (ஆசிரியர்),
ஜி.குப்புசாமி (தமிழில்)
ரூ.475
காலம்: பதினாறாம் நூற்றாண்டு. களம்: துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல். ஆட்டமன் சாம்ராஜ்ஜியத்தின் சுல்தான் மூன்றாம் மூராத் ஹிஜ்ரா சகாப்தத்தின் ஆயிரமாவது ஆண்டுத் தொடக்கத்தைக் குறிக்கும் ‘விழா மலரை’ உருவாக்க விரும்புகிறார். ஆட்டமன் பேரரசின் மகத்துவங்களையும் தன்னுடைய கீர்த்தியையும் பதிவு செய்யும் வகையில் மலரை உருவாக்கும் பொறுப்பை இஸ்தான்புல்லின் நுண்ணோவியர்களிடம் ஒப்படைக்கிறார்.


2.பனி
ஓரான் பாமுக் (ஆசிரியர்),
ஜி.குப்புசாமி (தமிழில்)
ரூ.450
ஓரான் பாமுக்கின் படைப்புகளில் தனித்துவமான நாவல் ‘பனி’. சொல்லப்படும் கதையும் கதை நிகழும் களமும் அவரது பிற நாவல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. பாமுக்கின் படைப்புகளில் வெளிப்படையாக அரசியல் பேசும் நாவல் ‘பனி’. மதச் சார்புக்கும் சார்பின்மைக்கும் இடையிலான மோதலைத் துப்பறியும் கதையின் வேகத்துடனும் திருப்பங்களுடனும் சொல்கிறது இந்த நாவல். தனது படைப்புகளின் நிரந்தரக் களமான இஸ்தான்புல் நகரத்தைவிட்டு துருக்கியின் எல்லைப்புற நகரமான கார்ஸை புனைகளமாக்கியிருக்கிறார் பாமுக்.


3.இஸ்தான்புல் - ஒரு நகரத்தின் நினைவுகள்
ஓரான் பாமுக் (ஆசிரியர்),
ஜி.குப்புசாமி (தமிழில்)
ரூ.350
தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் நகரத்தைப் பற்றி நினைவுகூறும் இந்நூல் பாமுக் தனது இளமைப் பருவத்தை திரும்பிப் பார்க்கிறார். இளமைப்பருவத்திலேயே ஒரு எழுத்தாளனின் வளர்ச்சி நிலைகள் தனக்குள் துலங்கியதை நினைவுகூறுகிறார். தனது நகரம் மாறியதையும் நகரத்தோடு தானும் மாறியதையும் நுட்பமாகச் செல்லிச் செல்கிறார்.


4.கனவுகளுடன் பகடையாடுபவர்
ஜி.குப்புசாமி (தமிழில்)
ரூ.140
நோபல் பரிசு பெற்ற ஹோஸே ஸரமாகோ, ஓரன் பாமுக்,குந்தர் கிராஸ், நாகிப் மாஃபெளஸ் ஆகியோரின் தன்வரலாறு சார்ந்த நோபல் உரைகளும் சல்மான் ருஷ்டி மற்றும் ஓரான் பாமுக்கின் கட்டுரைகளும் இத்தொகுதிக்கு மிகுந்த வலுச்சேர்க்கின்றன.
தமிழ் படைப்பு மற்றும் வாசிப்பு சூழலை மாற்றியமைக்கும் புத்தகம் இது.


5.கடல்
ஜான் பான்வில் (ஆசிரியர்),
ஜி.குப்புசாமி (தமிழில்)
ரூ.125
துயரம், நினைவுகள், காதல் - இவை மூன்றும்தாம் ஜான் பான்வில்லின் 'கடலை' உருவாக்கியிருக்கும் கூறுகள். கலை வரலாற்று ஆய்வாளரான மாக்ஸ் மார்கன் இளம் பருவத்தில் விடுமுறையைக் கழித்த கடலோர கிராமத்துக்கு மனைவி அன்னாவின் மறைவுக்குப் பிறகு திரும்பவும் வருகிறார்.

ஜி.நாகராஜன் ஆக்கங்கள்

ஜி.நாகராஜன் ஆக்கங்கள்.

நூலின் பெயர்:     ஜி.நாகராஜன் ஆக்கங்கள்,
ஆசிரியர் பெயர்: ஜி.நாகராஜன்,
தொகுப்பு:            சுந்தர ராமசாமி.

உள்ளடக்கம்

நாவல்கள்.
     நாளை மற்றுமொரு நாளே
     குறத்தி முடுக்கு

சிறுகதைகள்
     அணுயுகம்
     வெகுமதி
     போலிஸ் உதவி
     அங்கும் இங்கும்
     தீராக்குறை
     பச்ச குதிரை
     சுழற்ச்சி
     சம்பாத்தியம்
     மிஸ் பாக்கியம்
     பூர்வாசிரம்
     நடிகன்
     வாழ்வும் எழுத்தும்
     மயக்கம்
     ஆண்டுகள்
     இருளிலே
     அக்கினி பிரவேசம்
     எண்கள் ஊர்
     கயிற்று நுனி
     அப்படி ஒரு காலம்
     யாரோ முட்டாள் சொன்ன கதை
     நான் புரிந்த நற் செயல்கள்
     இழிந்த சாதி
     கிழவனின் வருகை
     பூவும் சந்தனமும்
     கல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா
     ஜூரம்
     போலியும் அசலும்
     துக்க விசாரணை
     மனிதன்
     மனச்சிறை
     இலட்சியம்
     ஓடிய கால்கள்
     நிமிஷ கதைகள்
     ஆண்மை
     நிலவொளியிலே
     மாடர்ன் காதல்
     சுய விருந்து
     அரசியல்வாதியின் மரணம்

உரை நடை
     கொவபுரியின் எழுச்சி
     இன்ப்ளுயன்சா
     போர்முறை புரட்சியும் புதிய நிலையும்
     யாரும் கேட்டுவிட்டால்
     பொன் மொழிகள்
     கடிதங்கள்
     இலக்கிய அனுபவங்கள்
     கண்டத்தும் கேட்டதும்
     மௌனமும் பித்தமும்
     பரத்தையர் பற்றி
     சுந்தர ராம சாமிக்கு எழுதிய கடிதங்கள்

ஆங்கில படைப்புகள்

Novel
     With Fate Conspire

Short Stories
     Father
     A Tribute
     The Day and the Darkness

Article
     About Dreams

வே.ஆனைமுத்து கருத்துக் கருவூலம்

வே.ஆனைமுத்து கருத்துக் கருவூலம்
Rs.6,250.00
http://tinyurl.com/p2gbs8z

1. அறிவுநெறி அடிக்கற்கள்
1950 முதல் வெளிவந்த குறள்மலர் ஏட்டில் 47 கட்டுரைகளும், 1957 முதல் வெளிவந்த குறள்முரசு ஏட்டில் 36கட்டுரைகளும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரையான ஆழமான பல அரிய செய்திகள் இப்படைப்புகளில் இடம்பெற்றுள்ளன.1947இல் குமரன் இதழுக்கு இவர் எழுதிய ‘சாதி தொலைந்ததெனச் சாற்று’ என்கிற ஈற்றடி வெண்பா, அண்ணா நடத்திய திராவிட நாடு 1947 மே மலரில் தடித்த எழுத்தில் இடம்பெற்றது என்கிற புதிய தகவலை இந்நூல் கொண்டுள்ளது.

2. தமிழ்நாட்டில் பண்பாட்டுப் புரட்சி
இந்நூல் ‘சிந்தனையாளன்’ஏட்டில் தொடராக வந்தபோது தமிழ்நாட்டில் கற்றவர் நடுவில் பெரிய அறிவுத் தாக்கத்தை ஏற்படுத்தியதொரு படைப்பாகும்.ஆனைமுத்து அவர்களின் ஆழ்ந்த இலக்கண-இலக்கியப் புலமைக்கும்,தமிழரின் வாழ்வியல் நெறி பற்றிய கறாரான கருதுகோளுக்கும் மிகப்பெரிய கருத்துப் பெட்டகமாக இந்நூலைக் கருதலாம்.தமிழர்தம் இல்லங்கள் தோறும் கட்டாயம் இடம்பெற வேண்டிய ஒப்பற்ற படைப்பு இது.

3. இந்திய அரசமைப்புச் சட்டம் ஒரு மோசடி
பல்கலைக்கழகத்தில் இடைநிலை வகுப்புக் கல்வி மட்டுமே பெற்ற வே.ஆனைமுத்து உழைப்பின் ஒளி யாய் நின்று இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஆழ்ந்துகற்றார்.உலகின் பல்வேறு நாடுகளின் சட்டப் புத்தகங்களையும் தேடித் தேடிப்படித்தார்.தம் தேடுதலில் கிடைத்த பட்டறிவைக் கொண்டு இந்திய அரசமைப்புச் சட்டம் ஒரு மோசடியான சட்டமே; இந்நாட்டின் உழைக் கும் மக்களுக்கு எதிரான சட்டமே என்பதை அசைக்க இயலாத சான்றுகளுடன் இந்நூலில் எண்பித்துள்ளார்.

4. விகிதாசார வகுப்புவாரி இடப்பங்கீடு
இந்தியாவின் விகிதாசார வகுப்புவாரி இடப்பங்கீட்டு வரலாற்றில் அழிக்க முடியாத பெயராய் விளங்கு வது தோழர் வே. ஆனைமுத்துவின் பெயராகும். அரசமைப்புச் சட்டப்படி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு ஒதுக்கீடு பெற இவர் நடத்திய  போராட்டங்கள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களாய் மின்னுபவை ஆகும்.இன்றும் எல்லாப் பிரிவார்க்கும் 100 விழுக்காடும் உரிய முறையில் பங்கிடப் பெறத் தொடர்ந்து போராடி வருகிறார். இந்நூல் அப்போராட்டம் பற்றிய விரிவான வரலாற்று ஆவணம்.

5. நாத்திகர் போர்வாள்
இந்நூலும் சிந்தனையாளன் ஏட்டில் தொடர் கட்டு ரையாக இடம்பெற்றது. ‘நாத்திகம்’ ஒரு வாழ்க்கைநெறி.அறிவு விடுதலையின் திறவுகோல்.பெரியார் தொண்டர்கள், பொதுவுடைமைத் தோழர்கள்,மக்கள் விடுதலை அவாவும் அனைத்துத் தோழர்கள் என எல்லோரும் படித்துப் பயன்பெற வேண்டிய நூல் இது.

6. மார்க்சியப் பெரியாரியம்
1976இல் தோற்றங்கண்ட மா.பெ.பொ.க. “இந்தியாவில் பொதுவுடைமை மலர மார்க்சிய-பெரியாரிய நெறியில் தேசிய இனவழிப்பட்ட சமஉரிமை உடைய சமதருமக் குடிஅரசுகள் ஒருங்கிணைந்த உண்மையான கூட்டாட்சி அமைய ஆவன செய்தல்”என்கிற உயரிய குறிக்கோளோடு செயலாற்றி வருகிறது.ஒரு கொள்கை ஆவணம் போல் திகழும் இந்த நூலில் மார்க்சியம் பெரியாரியம்,மார்க்சியப் பெரியாரியம் ஆகியவற்றுக்கான விளக்கம், பெரியார் கொள்கை வெற்றிக்குப் பெரியார் தொண்டர்கள் செய்ய வேண்டிய பணி போன்றவை குறித்து மிகத்தெளிவான விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன.மக்கள் விடுதலையை நாடுவோர் அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிய சிறந்த படைப்பு இது.

7. இயக்கம்
பெரியாரின் அணுக்கத் தொண்டராய்-அவரின் உயரிய நம்பிக்கையைப் பெற்றவராய் விளங்கித் திராவிடர் கழகத்தில் பணியாற்றிவந்த தோழர் ஆனைமுத்து,பெரியாரின் மறைவுக்குப்பின் அந்த அமைப்பி லிருந்து வெளியேற்றப்பட்டார்.1976-இல் பெரியார் சம உரிமைக் கழகம் என்கிற தனி அமைப்பைத் தோற்றுவித்தார்.அதுவே மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியாய்ப் பெயர் மாற்றம் பெற்றது.மா.பெ.பொ.க.யும், அதன் சார்பு அமைப்பான அனைத் திந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவையும்,தமிழக அளவிலும் இந்திய அளவிலும் மேற்கொண்ட கிளர்ச்சி கள், பரப்புரைகள் அரசியல் சமுதாயத் தளத்தில் ஆற்றிவரும் பணிகள் ஆகியவை பல்வேறு தலைப்பு களில் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

8. அரசியல்-தமிழ்நாடு
‘சுயமரியாதை இயக்கத்தின் இறுதி இலக்கு பொதுவுடைமைச் சமுதாயத்தை அமைப்பதே’ என 1931இலேயே உறுதிபட உரைத்தார் பெரியார்.பெரியாரியத்தை ஏற்றுக்கொண்ட ஆனைமுத்து இச்சிந்தனைப் போக்கில் தமிழக அரசியலை உள்வாங்கி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது.இதில் இடம்பெற்றுள்ள ‘தமிழால் ஏய்க்கும் தமிழர்கள்’ எனும் தொடர் கட்டுரைத் தனிநூலாகவும் வெளிவந்துள்ளது.

9. அரசியல்
இந்தியா, உலகம் இந்திராவின் நெருக்கடிகால ஆட்சி, விவசாயிகள் நிலை, தனியார் சொத்துரிமைச் சட்டம் உள்ளிட்ட இந்திய அரசியல்,பொருளியல்,சமூகவியல் பற்றிய விரிவான கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. பாலஸ்தீன விடுதலைப் போராட்டம், மூன்றாம் உலகப் போர் மூளுமா?சோவியத்து ஒன்றியத்தின் வீழ்ச்சி போன்ற உலக அரசியல் செய்திகளையும் இந்நூற் கட்டுரைகள் விவாதிக்கின்றன.

10. தேசிய இன விடுலை
‘தேசிய இனப்பிரச்சினை : தேசவிரோதம் ஆகுமா?’, ‘சுதந்தரத் தமிழ்நாடு : ஒரு சிந்தனை’, ‘இந்திய தேசிய இனங்களின் விடுதலை நம் கடமை என்ன?’, ‘தமிழ்த் தேசத் தன்னுரிமை’, ‘தமிழ்த் தேசியமும் கூட்டாட் சியும்’ உள்ளிட்ட அறிவுகொளுத்தும் ஆழமான கட்டு ரைகள் இடம்பெற்ற நூல் இது.தேசிய இனங்களின் விடுதலை ஒளியில் தாய்மொழிக் கல்வியின் தேவை, தூக்குத் தண்டனை ஒழிப்பு, பஞ்சாப் மற்றும் காஷ்மீர் சிக்கல்களுக்கான தீர்வுகளும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.

11. ஒடுக்கப்பட்டோர் விடுதலை
உலகில் பிற நாட்டு மக்களுக்கிடையே இல்லாத பெருங்கேடு,இந்தியத் துணைக் கண்டத்தில் மட்டுமே வாய்த்துவிட்ட கழுவ முடியாத கறை என்பது சாதி,தீண்டாமைக் கொடுமையாகும். ஆளும் வகுப்பார், அரசியல்வாதிகள், காவல்துறை, நீதிமன்றம், உயர் அதிகார வர்க்கம் போன்ற அனைத்துமே இங்குள்ள வெகுமக்களுக்கு எதிராகவே நடந்துகொள்ளும் போக்கி னையும்,இதற்கான தீர்வையும் முன்வைக்கும் அரிய கட்டுரைகளின் தொகுப்பு.

12. தமிழீழ விடுதலை
இந்தியத் துணைக் கண்டத்தின் தெற்கு முனையில் கடல் நடுவே கண்ணீர் துளியாய்த் தத்தளிக்கிறது தமிழீழம். தமிழீழ மக்களின் போராட்டம் நெடியது. வரலாற்றில் அம்மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட வஞ்சம் கொடியது. இன்றுவரை ஈழச்சிக்கலில் இந்திய ஆட்சி யாளர்கள் செய்துவரும் இரண்டகம் மன்னிக்கவே முடியாதது. வே. ஆனைமுத்து பல்லாண்டுகளுக்கு முன்பிருந்தே ஈழ மக்களின் தாளமுடியாத துயர்களை எண்ணிக் கண்ணீர் வடிப்பவர். நேரில் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்த்துத் திரும்பியவர்.தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன்,சுபதமிழ்ச் செல்வன் ஆகியோரை நேரில் கண்டு உரையாடியவர்.ஈழச் சிக்கலுக்குத் தீர்வாக அவர்முன் வைக்கும் அரசியல் தீர்வுகளை உள்ளடக்கிய மிகமிக இன்றியமையாத நூல்.

13. காலப்பதிவுகள்
காலம் என்பது காட்டாறு போல ஓடிக்கொண்டே இருப்பது. ‘உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு’என மனித வாழ்வின் நிலையாமையை மணிச்சுருக்கமாய்ச் சொன்னார் குறளாசான்.இந்நூலில் வே.ஆனைமுத்து தமக்கு அணுக்கமாய்த் திகழ்ந்த,தாமறிந்த தோழர்களின் மறைவுகள் குறித்து எழுதிய இரங்கற் செய்திகள், பிறர்க்கு வழங்கிய நூல் மதிப்புரைகள்,பல்வேறு ஏடு களில் வந்த அவரின் நேர்காணல்கள் உள்ளிட்டவற்றைத் தொகுத்துக் காலப்பதிவுகளாகச் சிறப்பாக வெளியிட்டுள்ளார். வருங்காலத் தலைமுறையோர்க்கும் இஃது வழிகாட்டும்.


14 & 15 பெரியாரியல் - பகுதி 1, பகுதி 2
தொண்டு செய்து பழுத்த பழமாய் விளங்கிய தந்தை பெரியாரின் தன்னலமற்ற வாழ்வின் பன்முகப் பண்புக்கூறுகளை நுணுகி நுணுகி ஆராய்ந்த மதி நலச் சிறப்புடையார் தோழர் வே. ஆனைமுத்து. இந்நூல் பெரியாரின் தனித்தன்மைகள் குறித்து மிக எளிதில் எல்லாத் தரப்பாரும் புரிந்துகொள்ளும் தன்மை யில் எழுதப்பட்டுள்ளது. பெரியார் என்கிற ஆகச்சிறந்த ஆளுமையைப் பற்றி மணிச்சுருக்காய் அறிந்திட இதனி னும் சிறந்த நூல் வேறில்லை என்றே சொல்லலாம்.

16. பெரியார் ஈ.வெ.ரா. பயணக் காலக் கண்ணாடி
‘ஆனைமுத்து கருத்துக் கருவூலம்’ தொகுப்பில் இந்நூல் பலவகையிலும் தனித்தன்மை வாய்ந்தது. தம் வாழ்வின் இறுதிக் காலம் வரை மக்களுக்காகவே வாழ்ந்து மக்களுக்காகவே உழைத்த மாபெரும் தலை வர் பெரியார் ஆவார்.செல்வச்சீமான் வீட்டுப் பிள்ளை யாய்ப் பிறந்தும் ஒரு துறவியைப் போன்ற தூய-எளிய-ஈக வாழ்வு வாழ்ந்த அந்த மக்கள் தலைவரின் வாழ்க்கைச் சுவடுகளை -அன்றாட வாழ்வின் நிகழ்வு களை -காலக் கண்ணாடியாய்க் காட்டும் வரலாற்று ஆவணம்.மிகுந்த பொறுமையும்,அரிய தேடலும் கொண்டு,ஒப்பரிய தம் உழைப்பை ஈந்து தோழர் ஆனைமுத்து நமக்கு வழங்கியுள்ள வித்தகம் மிக்க புத்தகச் சொத்து இது.


ஆனைமுத்து பதிப்பித்துள்ள 5 நூல்கள்:

1, 2 - தத்துவ விவேசினி தொகுதி 1, தொகுதி 2 :
19ஆம் நூற்றாண்டைய பகுத்தறிவுக் கிழமை இதழாகிய தத்துவ விவேசினி, பு. முனிசுவாமி நாயக ரால் 1882 முதல், 1888 வரை நடத்தப்பட்டதாகும். ‘தத்துவ விவேசினி என்பதற்கு உண்மையை விளங் கச் செய்யும் பத்திரிகை என்பது பொருள்’என மிகச் சுருக்கமான விளக்கம் இந்நூலுக்குத் தரப்பட்டுள்ளது.19ஆம் நூற்றாண்டிலேயே நாம் எண்ணி எண்ணி வியக்கத்தக்க நாத்திகக் கருத்துகளை, அறிவியல் செய்தி களை, மிக முற்போக்கான உலக நடப்புகளை வெளி யிட்ட இதழ். இவ்விரு தொகுப்புக்கும் வே. ஆனைமுத்து வழங்கியுள்ள ஆராய்ச்சி முன்னுரை மிக ஆழமானது. படிப்போரை மலைக்கச் செய்வது. இவ்விரு தொகுதி களும் பதிப்புலகில் ஒரு சாதனை.

3.The Thinker : 
தத்துவ விவேசினியை நடத்திய முனிசாமி நாயகர் ஆங்கிலத்தில் நடத்திய இதழ். இவ்விதழ்களில் அய்ரோப்பிய எழுத்தாளர்களும் தமது கருத்துக்களை மிகச் சிறந்த தருக்க ஆற்றலுடன் அழகிய சிறந்த ஆங்கிலப் புலமையுடன் படைத்தளித்துள்ளது வியக்கத்தக்கதாகும்.தத்துவ விவேசினி நூலுக்குரிய அத்தனை சிறப்புகளும் இதற்கும் உண்டு.

4. மத விசாரணை :
இந்நூலாசிரியர் சுவாமி சிவானந்த சரசுவதி என்பவர்தான் பெரியாரால் வெளி யிடப்பட்ட ‘ஞானசூரியன்’ என்னும் நூலுக்கும் ஆசிரியர். ‘பணம் பிடுங்கிப் பார்ப்பனர்கள்’, ‘கைவல்யம் கலைக்கியானம்’போன்ற நூல்களும் இவரால் எழுதப் பட்டவையாகும்.மதவிசாரணை நூலில் வேதம், இதிகாசம் போன்றவை பற்றி மிகமிக ஆழமாக எழுதப் பட்டுள்ள செய்திகள், அறியாமை இருள்நீக்கும் ஒளிச் சுடர்களாகும்.

5. நானும் என் தமிழும் :
தோழர் சங்கமித்ரா ஆனைமுத்து அவர்கள் மேல் அளவற்ற ஈடுபாடு கொண்டவர். ஆனைமுத்துவின் அத்தனை எழுத்துக்களும் அச்சாக்கம் பெற வேண்டும் என்னும் பெரு விருப்போடு இரண்டு இலக்கம் ரூபாயைத் தோழர் களிடம் நன்கொடையாகத் திரட்டித் தந்தவர். அவரின் இறுதிமுறி இந்நூல் என்றால் அது மிகையில்லை. 75 பக்கங்களே கொண்ட இக்குறுநூல் தமிழ் மேம்பாடு தொடர்பான ஏராளமான செய்திகளை உள்ளடக்கியுள்ளது.

நம் காலத்தின் அருமருந்தாய் வெளிவந்துள்ள தோழர் வே.ஆனைமுத்துவின் இந்த அரிய கருத்துக் கருவூலம் உள்ளிட்ட 21 நூல்களின் மொத்த விலை ரூ.6260 ஆகும்.