Thursday, February 26, 2015

அந்த முஸ்லிம் பெண்கள்

அந்த முஸ்லிம் பெண்கள்.
(டீஸ்டா செடல்வாட் மீதான பழி வாங்கும் நடவடிக்கை குறித்து நான் மார்ச் மாத உயிர்மை இதழில் எழுதியுள்ள கட்டுரையிலிருந்து சிலவரிகள்....)
"..........இவ்வளவுக்குப் பின்னும் இது போன்ற வன்முறைகளில் இன்று அதிக அளவில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டது குஜராத் 2002 ல்தான் என்பது குறிப்பிடத் தக்கது. மோடி அமைச்சரவையில் இருந்த ஒரு அமைச்சர் உட்பட 117 குற்றவாளிகள் அங்கு இப்போது தண்டிக்கப்பட்டுள்ளார்கள் என்றால் அதன் பின்புலமாக உள்ளவை இரண்டு.

  1. ஒன்று பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் கொண்ட உறுதி. 
  2. மற்றது அந்த உறுதியை அவர்களுக்குத் தந்து அதை அணையாமல் காத்த டீஸ்டா செடல்வாடின் ஈடு இணையற்ற கடும் அர்ப்பணிப்பு.
பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள், குறிப்பாக பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட முஸ்லிம் பெண்கள் உறுதியுடன் நின்றதையும், அவர்களின் கணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இதை ஒரு இழிவாகக் கருதாமல் அவர்களுக்குத் துணை நின்றதையும் நினைக்கும்போது மனம் சிலிர்க்கிறது. 

பாலியல் வன்முறை என்று வந்து விட்டால் பாதிக்கப் பட்டவர்களின் பெயரைக் கூட வெளியிடக் கூடாது, படத்தை அறவே வெளியிடக் கூடாது என்கிற சூழலில் ரொம்பவும் கட்டுப் பெட்டியானவர்கள் எனக் கருதப்படும் முஸ்லிம் பெண்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டதும், கொடும் பாலியல் வன்முறைக்கு ஆளான பில்கிஸ் பானு போன்றோர் தொலைக் காட்சிகளில் நேர்காணல் அளித்ததும், பல நேரங்களில் இத்தகைய பெண்களின் கணவர்கள் அவர்களோடு நின்றதும் வரலாற்றில் பதியப்பட வேண்டிய ஒன்று.

தங்களுக்கு இழைக்கப்பட்டது அவமானமல்ல. அது குற்றம். அது வன்முறை. அந்தக் குற்றத்துக்கு உரியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதொன்றே அவர்களின் ஒரே நோக்காக இருந்தது

(படத்தில் பில்கிஸ் பானு (2008). அவர் மீது வன்முறை புரிந்தவர்கள் தண்டிக்கப்பட்ட அன்று ப்ரெஸ் மீட்டில்... 'நான் சுமத்திய குற்றம் உண்மை என்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது... என் உயிருக்கு இன்னும் ஆபத்து உள்ளது..' என்று அவர் அன்று கூறினார்)

அடத்தூஊ கேடுகெட்ட காவி பன்னிகளா

அடத்தூஊ.... கேடுகெட்ட காவி பன்னிகளா....
சக மனிதனை தொடவோ அல்லது தனக்கு நிகராக அருகில் உட்காரவோ கூட அனுமதிக்காத ஈனப்பிறவிகள் வாழும் இதே நாட்டில்,
.
அவர் யார், என்ன சாதியென்று பார்க்காமல் சாக்கடை ஓரமாக கிடந்த தொழுநோயாளிகளை தொட்டு தூக்கி உணவளித்து உடையளித்து பாதுகாத்த அன்னை தெரேசாவை கொச்சை படுத்தும் ஈனப்பிறவிகளே....
.
உங்கள் மூஞ்சியில் காறி உமிழ்கிறேன்... த்தூஊஊஊ....
.
அன்சாரி முஹம்மது

---------------------------------------------------------------------------------------------------------------

மதங்களின் மீது வெறுப்பேறி இருந்த ஒரு காலம் இருந்தது, பிறகு ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மதங்கள் மனித வாழ்க்கையின் எச்சங்களை, மனித மனத்தின் வக்கிரமான சகிக்க இயலாத இன்னொரு பக்கத்தை இயல்பான வாழ்க்கைக்கு உந்தித் தள்ளும் வடிகாலாக தொடர்ந்து இருந்து வந்திருப்பதை வரலாற்றில் வாசித்து அறிய முடிந்திருக்கிறது.
.
"மார்க்ஸ்" சொன்னதைப் போல "மதம் மனித மூளையால் விடை கண்டறியப்படாத பல்வேறு குழப்பமான கேள்விகளுக்கான பதிலாய் உருவெடுத்திருக்கிறது", பல்வேறு பெயர்களும், கோட்பாடுகளும் பொதிந்து கிடந்தாலும் அடிப்படையில் மதங்கள் மனித மனத்தை வடிகட்டும் வேலையைத் தொடர்ந்து செய்து வந்திருக்கிறது அல்லது கூட்டு சமூகத்தின் மனசாட்சியை அழிவு, அச்சம் மற்றும் மரணத்தின் பிடியிலிருந்து பன்னெடுங்காலமாக அது காப்பாற்றி வந்திருக்கிறது. மரணமும், பிரிவும் மனிதனுக்குக் கொடுக்கிற சொல்லொனாத் துயரத்தை மதம் ஓரளவு துடைத்திருக்கிறது.
.
நிகழ்காலத்தில் புழக்கத்தில் இருக்கிற மதங்களில் கிறிஸ்துவத்தின் மீது எனக்கு அளப்பரிய மரியாதை உண்டு, எல்லாவற்றுக்கும் பொதுவான கடவுளரைத் தொழுவதற்குக் கூடப் பல படிநிலைகளையும் தடைகளையும் உண்டாக்கி வைத்திருந்த பிற்கால இந்துத்துவத் கோட்பாடுகளுக்கு நடுவே மனிதக் குழந்தைகளை அழைத்து உணவூட்டி, உடை கொடுத்து ஒரே வகுப்பறையில் அமர வைத்த மதம் கிருத்துவம்.
.
தந்தை பெரியாரின் திராவிடக் கருத்தாக்கம் உள்ளீடு செய்யப்பட்டு தமிழ்ச் சமூகம் உயர் சாதிக் கோட்பாட்டு ஆளுமையில் இருந்து பரவலாக விடுபடுவதற்கு முன்னதாகவே கிறிஸ்துவம் நமது கூட்டு சமூக மனநிலையில் பொதுவுடைமை கருத்தாக்கத்தையும், அறிவேற்றத்தையும் தீவிரமாகவே உள்ளீடு செய்திருக்கிறது. இன்றைக்கும் தமிழகத்தின் பல்வேறு கிராமங்களில், குறிப்பாகத் தென் மாவட்டங்களில், கிறிஸ்துவத் தேவாலயங்களும், கல்வி நிலையங்களும் சமூக மாற்றத்திலும், சமூக நீதியிலும் பெருமளவு தாக்கம் உருவாக்கி இருக்கின்றன.
.
உயர் ஞான மரபு, முக்தி, முற்றும் துறத்தல் என்று இந்து மதம் வெகு மக்களின் வாழ்க்கையில் இருந்து வெகு தொலைவில் நிலை கொண்டிருந்த போது கிறிஸ்துவ மதமும் அதன் போதகர்களும் வாழ்க்கையின் விளிம்பில் கிடந்த எமது மக்களை தங்கள் திருக்கரங்களால் பூசிக்க மட்டும் அழைக்காமல், அவர்களை கல்வி கற்கவும், பொது சமூக நீரோட்டத்தில் கலந்து மதிப்புறவும் உதவி செய்தார்கள். கெட்டியாய் உறைந்து போயிருந்த நலமுற்ற மக்களையே சீண்டாமல் கிடந்த மதங்களிடையே அழுகிக் கிடந்த தொழு நோயாளிகளையும், புழுக்கள் நெளிந்த நோயாளிகளையும் அரவணைத்துக் கொண்டார்கள்.
.
எல்லா மதங்களையும் போல கிறிஸ்துவத்திலும் பல்வேறு நிறை குறைகளும், முரண்களும், குற்றங்களும் இருக்கலாம், ஆனால், தமிழ்ச் சமூகத்துக்கு கிறிஸ்துவம் ஒரு பெரும் கொடை என்பதை மனசாட்சி உள்ள எந்தத் தமிழனும் மறுக்க முடியாது. தென் மாவட்டங்கள் பலவற்றில் கல்வியும், அடிப்படை வாழ்க்கை வசதிகளும் இல்லாது அழிந்து கொண்டிருந்த எமது மக்கள் பலரின் வாழ்க்கையில் கிறிஸ்துவமும், கிறிஸ்துவ தேவாலயங்களும் மிகப்பெரிய மாற்றங்களை உண்டாக்கி இருக்கிறது.
.
அந்த வரிசையில் இந்திய சமூகத்தின் இன்னொரு மூலையில் கிடந்த மேற்கு வங்கத்தையும், அதன் நிலப்பரப்பு மக்களையும் தனது தூய அன்பினாலும், பெருங்கருணையினாலும் "அன்னை தெரேசா" போன்ற மகத்தான மனிதர்கள் அரவணைத்துப் போற்றினார்கள். வீதியில் எறியப்பட்ட அனாதைக் குழந்தைகளின் உணவுக்காகக் கொடை கேட்டு தெருக்களில் அலைந்த அன்னையின் முகத்தில் எச்சில் உமிழப்பட்ட கொடுங்கனத்திலும், அமைதியின் உருவாய், "கிறிஸ்துவத்தின் பெயரால் இந்த எச்சிலை நான் எடுத்துக் கொள்கிறேன், ஆனால், எமது குழந்தைகளுக்காய் வேறு ஏதேனும் கொடுங்கள்" என்று கேட்ட தாய்மையின் பெருவடிவம் அன்னை தெரேசா.
.
பொதுவான கடவுளை வணங்குதற்கும் தனிப்படிகளைக் கட்டி வைத்து, கடவுளின் பெயரால் மனிதர்களை இழிவு செய்யும் பிற்கால இந்துத்துவ அடிப்படைவாதிகளுக்கு கிறிஸ்துவத்தையும் அதன் மகத்தான கல்வி மற்றும் சமூகப் பணியாற்றிய மனிதர்களையும் விமர்சிப்பதற்கோ, புழுதி வாரித் தூற்றுவதற்கோ எத்தகைய தார்மீக உரிமையும் இல்லை.
.
கிறிஸ்துவம் மானுடக் குழந்தைகளை ஒருங்கிணைத்து ஒரே வரிசையில் அமர வைத்த அதே காலத்தில் தான் பொதுக் குளங்களில், பள்ளிகளில், தெருக்களில், அரசியலில் என்று சமூகத்தின் எல்லாப் படிநிலைகளிலும் எமது குழந்தைகளை அண்ட விடாமல் செய்தது இந்து மதத்தின் "சோ கால்ட்" உயர் குடிக் கூட்டம், இன்று வரைக்கும் குழந்தைகளாய் மானுடத்தின் பூக்களாய் மலர்கிற பிஞ்சுகளை, பூமியின் புன்னகை போலச் சிரிக்கிற பிஞ்சுகளை வர்ணத்தின் பெயரால், சாதியின் பெயரால் மனம் குறுக வைக்கிற உங்கள் வக்கிர மதத்தை விடப் பல்லாயிரம் மடங்கு உயர்ந்தது கிறிஸ்துவமும் அதன் பணிகளும்.
.
### போங்கடே நீங்களும் உங்க மதமாற்ற ஊளையும் ### — feeling Devine with the work of Mother Teresa & Christianity in India.
.
Arivazhagan Kaivalyam


Thursday, February 5, 2015

ஓட்டுனருக்கு தெரிந்த விஷயம், தெரியாத உண்மை.

வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை.

* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு.

* அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும் போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும் போதோ மட்டும் எரிய விட வேண்டும்.

* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும் போது, அனைத்து விளக்குகளையும் எரிய விடக்கூடாது.

* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டு விட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதே சமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக்கூடாது என்று பொருள்.

* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத வேண்டும்.

* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒரு முறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.

* கனரக வாகனங்களின் பின் புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளி தான் வைக்க வேண்டும்.

* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே “டிம்’ செய்ய வேண்டும்.

* வளைவுகளில் அதி வேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு “இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்’ என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்து விடும்.

* கார்களில் செல்வோர் “சீட் பெல்ட்’ அணியும்போது சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக்கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளிவராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் “அப்சர்வ்’ செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.

* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது.

* மொபைல் போன் “சிக்னல்’ இல்லாத இடங்களிலும், மொபைலின் “கீ லாக்’ செய்யப்பட்ட நிலையிலும், ஏன் “சிம்கார்டு’ இல்லாத நிலையிலும் கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.

* மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

கிளிமூக்கு அரக்கரே, ஆனா சில கேள்விக்கும் பதில் சொல்லணுமே

A Antony Xavier என்ற எனது ரசிகர், "அன்புள்ள அரக்கரே, நல்லது, ஆனா சில கேள்விக்கும் பதில் சொல்லணுமே" என்று ஆரம்பித்து கேட்டக்கேள்விகளுக்கு நான் அளித்த பதில். தொடர்வது அவரது கேள்விகளும் எனது பதில்களும்.
.
கிளிமூக்கு அரக்கன்
.
கேள்வி: கருணாநிதிக்கும் இந்த 2g க்கும் தொடர்பு இருக்கா இல்லயா?
பதில்: இல்லை.
.
கேள்வி: அவருக்கும் அவரோட துணைவியாரோட பொண்ணுக்கும் தொடர்பு இருக்கா இல்லயா?
பதில்: இருக்கிறது.
.
கேள்வி: அவருக்கும் கலாநிதி..தயாநிதி சன்டிவிக்கும் தொடர்பு இருக்கா இல்லயா?
பதில்: கலைஞருக்கும் அவரது பேரன்களுக்கும் தொடர்பு இருக்கிறது. கலைஞருக்கும் சன்டிவிக்கும் தொடர்பில்லை. கலாநிதிக்கும் அவரது தம்பி தயாநிதிக்கும் தொடர்பிருக்கிறது. சன்டிவிக்கும் தயாநிதிக்கும் தொடர்பில்லை. உங்கள் சொத்தில் உங்கள் தம்பிக்கு தொடர்பு உள்ளது என எவனாவது கிளப்பிவிட்டால் கடுப்பாகி, கொந்தளிப்பீர்கள் அல்லவா? அதே விதி கலாநிதி-தயாநிதிக்கும் பொருந்தும்.
.
கேள்வி: கலைஞருக்கும் கலைஞர் டிவிக்கும் தொடர்பு இருக்கிறதா இல்லயா?
பதில்: இல்லை. அதிமுகவில் அண்ணா பெயர் வருகிறது என்பதற்காக அண்ணாவுக்கும், அண்ணா திமுகவுக்கும் தொடர்பு இருக்கிறது எனச் சொல்லமுடியுமா?
.
கேள்வி: திருவாரூர்லேருந்து மூளை மற்றும் மஞ்சப்பையோட வந்தப்ப இவ்வளவு சொத்து சேர்ப்போம்னு அவருக்கு தெரியுமா தெரியாதா?
பதில்: அவருக்கு கண்டிப்பாக தெரியும். என் பழைய குருநாதரின் நண்பர் "ஸ்டாம்பு சித்தர் டான் அசோக்" அரக்கன் இப்போதுதான் சினிமாவில் வசனம் எழுதவே ஆரம்பித்திருக்கிறார். அதற்குள், அவர் எவ்வளவு சொத்து சேர்க்கப்போகிறார் என என்னிடம் உறுதியாக-தெளிவாக பட்டியலிடுகிறார். அப்படி இருக்கும் போது , திமுக ஆட்சிக்கு வருவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்னமே பெரும் கதை / வசனகர்த்தா என்று பேரும் புகழும் பெற்ற மூளாதி- மூளைக்காரரான பேரரக்கன் கலைஞருக்கு சொத்து சேர்ப்பதில் மட்டுமல்ல, எங்கெங்கு சொத்து வாங்கப் போகிறோம், முதல்வர் ஆனபின் என்னென்ன நலப்பணிகளை நிறைவேற்றுவோம் என்பதும் கூட கிளம்பி வரும்போதே தெரிந்திருக்கும்.
.
கேள்வி: தமிழ்... தமிழர்... திராவிடர்... இந்த மூனெழுத்து மூலமா இன்னும் எவ்வளவு சொத்து சேக்க முடியும்னு யாருக்காச்சும் தெரியுமா?
பதில்: தெரியாது. ஆனால் சீமான், நெடுமாறன் போன்றவர்களுக்கு கண்டிப்பாகத் தெரியும். கேட்டுப்பாருங்கள். ஆனால் வெட்டியாக அதை ஆராய்ந்து கொண்டிருப்பதை விட கலைஞர் அரசு உருவாக்கியிருக்கும் தமிழ்ப்பேரகராதி என்ற தமிழ்ச்சொத்தை வாங்கிவிடுங்கள். உலகிலேயே அதிக கலைச்சொற்கள் உடைய மொழியாக தமிழை ஆக்கிய ஆராய்ச்சிக் களஞ்சியமான அது, கலைஞர் தமிழுக்குச் சேர்த்த பெருஞ்சொத்து.

கேள்வி: இந்த இலங்கைகாரங்க தலைவர இன்னும் ஏழேழு தலைமுறைக்கும் ஆட்டத்துல சேர்த்துக்க மாட்டாங்கன்றது அவருக்கு தெரியுமா?
பதில்: ஜெயவர்தனே, ராஜபக்சே போன்ற இலங்கைக்காரர்கள் எப்போதுமே கலைஞரை ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டதில்லை. சென்ற வருடம் கூட கலைஞரின் உருவபொம்மையை கொலும்புவில் எரித்தார்கள். ஈழத்தந்தை செல்வா, தமிழ்ச்செல்வன், ஆண்டன் பாலசிங்கம், பிரபாகரன் போன்ற இலங்கைக்காரர்கள் எப்போதுமே கலைஞரை ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டுதான் இருந்திருக்கிறார்கள். கலைஞர் பல சூழல்களில் ஈழ அணியின் தமிழ்நாட்டு கேப்டனாகவும் களத்தில் நின்று தன்னால் இயன்ற அளவுக்கு இந்திய அணியை எதிர்த்தும், அதன் அமைதிப்படையை எதிர்த்தும் விளையாடியிருக்கிறார். அதனால் முதல்வர் பதவியையும் இழந்திருக்கிறார். ஆனால் 1991 தேர்தலில் தமிழக மக்கள் இலங்கைக்காரர்களை ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை என்பதுதான் பெருஞ்சோகம்! ஆக, கலைஞரை இலங்கைக்காரர்கள் ஆட்டத்தில் சேர்க்கிறார்களா, இல்லையா என்பது கேள்வியே அல்ல. நீங்கள் யாரை இலங்கைக்காரர்களாக பார்க்கிறீர்கள் என்பதுதான் கேள்வி!
.
கேள்வி: இன்னும் ஒரு 10 தலைமுறைக்காவது கருணாநிதின்னு பேர்கூட அவங்க வைக்க கூசுவாங்கன்னு தெரியுமா?
பதில்: சென்ற மாதம் ஈழத்தமிழர் ஒருவர் எனக்கு மெயில் அனுப்பியிருந்தார். தனது இரண்டாவது ஆண் குழந்தைக்கு கலைஞர் கருணாநிதி என பெயர் சூட்டியிருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவரது முதல் குழந்தையின் பெயர் பிரபாகரன். என்னது? நான் பொய் சொல்கிறேனா? உங்கள் கேள்வியை நீங்கள் உண்மை என நிரூபியுங்கள். நான் என் பதிலை உண்மை என நிரூபிக்கிறேன்.
.
கேள்வி: ஜெயலலிதாவகூட நம்பலாம் ஆனா கருணாவ நம்பவே கூடாதுன்னு நம்பிக்கிட்டு இருக்கறவங்களப்பத்தி தெரியுமா?
பதில்: தெரியும். தன்னுடனே இருந்து தனக்கே இறுதியில் திரோகம் இழைத்த 'கருணா'வை நம்பக்கூடாது என பிராபகரன் கூட கடைசியில் தான் உணர்ந்தார். ஆனால் அவர் கூட புலிகளுக்கு தீவிரவாதிப் பட்டம் வாங்கிக் கொடுத்த ஜெயலலிதாவை நம்பியதாக எந்த அதிகாரபூர்வ தகவலும் இல்லையே! ஒருவேளை நீங்கள் சீமான், வைகோ, நெடுமாறன் போன்றவர்களை சொல்கிறீர்களோ?
.
கேள்வி: நம்மளையும் இந்த திமுக கொடிய தூக்கிப் புடிச்சிருக்கிறதாலேயே நாலு பேரு மனுசனா மதிப்பான்..........அப்படின்னு நெனச்சிக்கிட்டு இருக்குற என்னயப்போல இருக்குற நாலு பேத்தயும் பத்தி தெரியுமா?
பதில்: நன்றாகவே தெரியும். திமுக கொடி மட்டுமல்ல. திராவிடர் கழக கொடி, மதிமுக கொடி, பெதிக கொடி, த.பெ.வி.க கொடி, அவ்வளவு ஏன், அதிமுக கொடி என கருப்பு சிவப்பு கொடி எதை தூக்கிப் பிடித்தாலும் மனுசனாக மதிக்கப்படுவீர்கள். அதைவிட பெரியாரும், அண்ணாவும், கலைஞரும், வி.பி.சிங்கும் போராடிப் பெற்றுக்கொடுத்த இட ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி படித்தால் மனுசனாக மதிக்கப்பட மட்டுமல்ல போற்றவே படுவீர்கள்.
.
--------------------------------------------------------------------------------------------------------------
.
நாம் தமிழர் என்ற வீரத்தமிழர் முன்னனி புனைவுப் பெயர்களுக்கெல்லாம் முன்னோடியான ஆர் எஸ் எஸ் ஸ்லீப்பர் செல் கணக்கில் ஒருவர் அத்வானி புகைப்படத்துடன் விஜய் யாதவ் என்ற பெயரில் (அனேகமாக மாம்பலம் டைம்ஸ் படிக்கும் கிரிக்கெட் ரசிகராக இருக்கக் கூடும் என்று நினைக்கின்றேன்) பேரரக்கன் கலைஞரைத் தாக்கி பின்வருமாறு ஒரு கேள்வி கேட்டிருந்தார். சக அரக்கர்களின் கேள்விகளைக் கூட கண்டு கொள்ளாமல் விட்டுவிடலாம் ஆனால் தேவாதிதேவ இந்திரர்களுக்கு உடனடியாக பதில் சொல்ல வேண்டும்தானே. இல்லை எனில் சாபமிட்டுவிடுவார்கள். விஜய்யின் ஆபாசக் குறிப்புகளை மட்டும் நீக்கிவிட்டு அவர் கேட்டிருந்த கேள்வி கீழே.
.
கேள்வி :
"ஜெயிலில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற்றி அடித்தாலும் வெளியே வந்ததும் நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று கொஞ்சமும் கூச்சமுமில்லாமல் குனிந்து வீராணம் வழக்கு வராமல் பார்த்துக்கொண்ட ராஜ தந்திரம் உங்களுக்கு உண்டா? இருந்திருந்தால் தன் ஆதரவில் இருந்த வாஜ்பாய் அரசின் போதே வழக்கை ஒன்றுமில்லாமல் செய்திருக்க முடியாதா? விஞ்ஞான முறையில் ஊழல் செய்தவர் என்று நீதியரசர் சர்காரியார் சொல்லிவிட்டாரே அந்த பெரியவர் வாக்கு பொய்த்து போய் விட கூடாதே என்பதற்காக விஞ்ஞானத்திலேயே ஊழல் செய்து 1.76 லட்சம் கோடி சம்பாதித்து காட்டிய சாமர்த்தியம் யாருக்காவது வருமா?"

என்னுடைய பதில்:
எமர்ஜென்சியில் கலைஞர் கைது செய்யப்படவில்லை என்ற அடிப்படை தகவலைக் கூடத் தெரிந்து வைத்திருக்காமல் நீங்கள் கேள்வி கேட்பதனால் உங்களின் மற்ற கேள்விகளுக்கான முகாந்திரத்தின் மேல் ஐயப்பாடு எழாமல் இல்லை. எமர்ஜென்சிக்குப்பின்னர் இந்தியா முழுவதும் கடும் தோல்வியையும் அவமானத்தையும் சந்தித்த இந்திரா நாடி வந்து ஆதரவைக் கேட்டது கலைஞரிடம்.
.
இந்திரா காந்தியால் , கலைஞர் மேல் குற்றஞ்சாட்டப்பட்டவை எல்லாம் உண்மை எனில், இடைக்காலத்தில் மொராஜி , சரன்சிங் அரசாங்கத்தில் இருந்த எம்ஜிஆர் மேலும் கிடுக்கிப்பிடி போட்டு நிருபித்திருப்பார். எல்லாவற்றிற்கும் மேலாக எம்ஜிஆரே ,கலைஞர் ஊழல் செய்தார் என்பதற்கு தன்னிடம் ஆதாரமில்லை என்று சாட்சியளித்தார். ஆக கலைஞருக்கு என்றுமே தான் செய்த தவறுகளுக்காக இந்திரா தேவையாக இருந்ததில்லை. இந்திராவிற்குத்தான் தன்னை மீண்டும் நிலை நிறுத்திக் கொள்ள கலைஞர் தேவைப்பட்டார்.
.
ஆர் எஸ் எஸ் சின் மறைமுக அரசாக மாறிப்போக இருந்த ஜனதா அரசிற்கு மாற்றாக இந்திராவே இருந்தார் என்பதால் அரசியல் மாண்பின்படி, கலைஞர் , இந்திரா காந்தி தனது கட்சியுடன் கூட்டுச் சேர சம்மதித்தார். கலைஞர் எம்ஜிஆரை அத்தேர்தலில் மண்ணைக் கவ்வ வைத்தார். இந்தச் செய்திகள் எல்லாம் தெரிய வேண்டுமெனில், சவுக்கு, விஜயபாரதம் , தினமலர் மட்டும் படிக்கக் கூடாது விஜய் அவர்களே. வரலாற்றுப்புத்தகங்கள், ஆய்வுக்கட்டுரைகள் எல்லாம் வாசிக்க வேண்டும்.
.
அடுத்தது, கலைஞர் விஞ்ஞான முறைப்படி ஊழல் செய்தார் என்பது. உங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டுடன் விளக்குகின்றேன். நீங்கள் கலைஞரைத் திட்டினாலும் நல்லவர் என்பதை யாம் அறிவோம். இது எடுத்துக்காட்டு மட்டுமே. திடிரென உங்கள் மேல் ஒரு குற்றச்சாட்டு.
.
நீங்கள் ஒரு பெண்ணை அல்லது ஓர் ஆணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டீர்கள் என்று உங்கள் எதிரிகள் உங்களின் மேல் அபாண்டமாக பழி போடுகின்றார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நல்லவர் தூயவர் என்பதால் நீதிமன்றம் போகின்றீர்கள். உங்களைக் கடும் பிராயத்தனம் பட்டும் நிருபிக்கின்றீர்கள். இருந்த பொழுதும், உங்களின் எதிரிகள். உங்களின் மேல் பழி போட ஏதுமில்லாத பொழுது, நீங்கள் விஞ்ஞானப் பூர்வமாக பாலியல் வன்கொடுமை செய்தவர் , அதனால்தான் சாட்சிகள் , தடயங்கள் இல்லை என்று சொன்னால் நீங்கள் கெட்டவர் என்பதாகிவிடுமா. அல்லது ஊரில் நடக்கும் 1.7 லட்சம் கோடி பாலியல் கொடுமைகளுக்கெல்லாம் நீங்கள் தான் காரணம் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?
.
பொதுவாக வேதவிற்பன்னர்களின் மனு நீதி கமிஷன்கள், குற்றம் நிருபிக்கப்படவில்லை என்றால் வேதகால விஞ்ஞானப்படி ஊழல் செய்தார்கள் என்பார்கள். நெருப்பில் தள்ளிவிட்டுவிட்டு ஜோதியில் ஐக்கியம் என்பார்கள். நீங்கள் உண்மையிலேயே யாதவாக இருந்தால் முலாயம் யாதவ், லாலு யாதவ் போல சமூகநீதிக்காக கலைஞருடன் இணையுங்கள். ஸ்லீப்பர் செல் என்றால், தொடர்ந்து எனக்கு தூண்டில் புழுவாக இருங்கள். உங்களை வைத்து நான் பதில் சொல்லி பெருங்கூட்டத்தை எனக்காக்கிக் கொள்கின்றேன்.

இஸ்லாம் மதம் தழுவினால் என்னா வெறி வருகிறது

சாதீயத்திற்கு எதிராக எனனை இனனும்அதிகமாக எழுத துாணடிய தோழர் இளமாறன் பாவாடைசாமியின் வேதனை பதிவு இது!!
.
21ம்நுாற்றாணடிலும் இப்படி பல காட்டுமிராணடிக்ள இருக்கிறார்கள்! இநது மதம் எப்படிபட்ட நஞ்சை இநத நாட்டில விதைத்திருக்கிறதெனபதறகு சாட்சி இநத ஒருபதிவே போது!ம்!!

  • எவனடா இநது இஙகே? 
  • 85 சதவீதம் இநதுக்கள இருப்பதாக மார்தட்டும் பிறமதக்காரனை மிரட்ட பட்டியலின மக்களை உஙகள கூட்டஙகளில் சேர்த்து-எண்ணிககைக்காக பலத்தை காட்டத்தான் நாஙகளா என்று கேட்டிருக்கும் கேளவிக்குஎன்ன பதில தருவீாகள்?
  • சாதிவெறியை துணடாட இஸ்லாம் மதம் தழுவினால் என்னா வெறி வருகிறது?
  • ஆதாயத்திறகாக மதம் மாறினார்கள் என்று கூவும் குள்ள நரி கூட்டஙகளே!! இநத பதிவிறகு என்னபதில தருவீர்கள்?

------------------------------------------------------------------------------------
இள மாறன் பாவாடை சாமி
Yesterday at 10:11am ·
அவமானம் !!அவமானம் !!அவமானம்!!
------------------------------------------------------------------------------------
.
இன்னிக்கு நடந்தத நெனைச்சா இப்படிதான் எழுத தோணுது.!!
ச்சே ஏன்டா இப்படி ஒரு பிறவி எடுத்தோம்னு இருக்கு.
நடந்தத அப்படியே எழுதறேன். என் மேல ஏதாவது தப்பு இருக்கான்னு சொல்லுங்க. இந்த பிரச்சனைக்கு என்ன பண்ணலாம்னு சொல்லுங்க.
.
எனக்கு பல வருசமா க்ளோஸ் பிரன்டு ( இனிமே அவன் பிரன்டும் இல்லை ஒரு -------- இல்லை) வீட்டில தைப்பூசத்துக்கு சாமி கும்புட்றாங்கன்னு என்னைய கட்டாயம் வரணும்னு சொல்லி இருந்தான். சரிண்ணு நானும் அவன் வீட்ட நல்லா கழுவி சுத்தம் பண்ணிட்டு ( நேத்திக்கு 12 மணி வரைக்கும்) இன்னிக்கு காலைல ஆறு மணிக்கே நல்லா சுத்த பத்தமா குளிச்சிட்டு பொங்கலுக்கு எடுத்த புது டிரெச போட்டுகிட்டு கெளம்பி அவன் வீட்டுக்கு போயிட்டேன்.
.
போனதுலேயிருந்து ஒரு நிமிசம் கூட ரெஸ்ட் இல்ல. சாமி கும்புட ஜாமான் வாங்கிட்டு வர- சாப்பாட்டுக்கு ஹெல்ப் பண்ண -அப்படின்னு செம வேல.- நம்ம பிரண்டு வீட்ல பங்சன் நாம செய்யாம வேற யாரு செய்ய போறாங்கன்னு அலுப்பு பாக்காம எல்லா வேலயும் செஞ்சேன்.- அதுல நான் எந்த கொறையும் வைக்கல-. நம்ம நண்பர் வீட்டு பங்சன நம்ம வீட்டு பங்சனா நெனைக்குற ஆளு நான்-.- சாமி கும்புடுறதுனால நேத்து ஒனர் வீட்ல குடுத்த பிரியாணிய கூட சாப்புட்ல-. நேத்திக்கே நல்லா முடி வெட்டி ஷேவ் பண்ணிட்டேன்!!.
.
மொத அவமானம் !!
-------------------------------
.
இன்னிக்கு காலைலே நான் அஅவன் வீட்ல ரொம்ப நேரமா அடக்கி வச்சிருக்க முடியாம ஒன்னுக்கு அடிக்க போனே்ன!!போறப்பவே அவன் அப்பா என்கிட்ட சொன்னாரு- தம்பி !!கக்கூஸ்ல நல்லா தண்ணி ஊத்தீருப்பான்னு சரின்டு ஒன்னுக்கு போன உடனே நல்லா தண்ணி ஊத்துனேன். -வெளிய வந்த வொடனே அவன் அப்பா திருப்பி என்கிட்ட தண்ணி நல்லா ஊத்துபான்னாரு.- எனக்கு எதும் புரியல- சரின்டு திருப்பி நல்லா கக்கூஸ்ல தண்ணி ஊத்துனேன்.- கொஞ்ச நேரத்துக்கு அப்பறம் அவங்க சொந்தகாரரு ஒருத்தரு கக்கூஸிக்கு போனாரு சரி இவருக்கும் அதே மாதிரி அட்வைசு பன்னுவாங்கன்னு பாத்துகிட்டே இருந்தேன். ஆனா ஒரு பய வாய தெறக்கல. சரி வேற யாராவது கக்கூஸ்க்கு போறப்ப எனக்கு சொன்ன மாதிரி ஏதாவது அட்வைஸ் பன்னுவாங்கன்னூ பாத்துகிட்டே இருந்தேன். ஒரு வார்த்த சொல்லல-.ஒரு வழியா சாமி கும்புட்டுட்டு சாப்பாடு போட ஆரம்பிச்சோம்!!
.
இரணடாவது அவமானம்
----------------------------------------
.
திடீருனு பிரன்டு அப்பா என்கிட்ட வந்து நீ சாப்பாடு போட வேணாம்பா !!நீ உக்காந்து சாப்டுன்னு சொல்லிட்டாரு.- சரி காலேலேர்ந்து பம்பரமா சுத்தி சுத்தி வேல செஞ்சோம்- இன்னும் பட்டினியா இருக்கோமேன்னு அக்கறைல சொல்ராருன்னுட்டு- சரி சாப்டலாம்ணுட்டு கைய கழுவிட்டு சாப்பிட உக்காரப்ப அவுரு இங்க உக்காராத !!கீழ உன் பிரன்ண்டு ரூம்ல போய் உக்காரு!! அங்க சாப்பாடு வரும்னாரு!!. நான் உடனே எதுக்கு உங்களுக்கு கஷ்டம்?? இங்க மொட்ட மாடிலயே சாப்புடுறேன் அப்பிடிண்ணேன் அவரு உடனே இல்லப்பா சொன்னா கேளு கீழ போ உனக்கு விசயத்த அப்புறம் சொல்றேன்னாரு!!
.
எனக்கு அப்ப ஒன்னும் புரியல!! சரி நம்மள தனியா சாப்டறப்ப நல்லா கவனிப்பாங்க போலருக்குண்ணு நெனைச்சுகிட்டு கீழ என் பிரன்டு ரூமுக்கு போயிட்டேன்.--- என்னோட பிரன்டு அவன் அக்கா பிள்ளைங்க ஸ்கூல் படிக்குதுங்க -சாப்பாடு குடுக்க போயிட்டான்-.தனியா சாப்புட ஒரு மாதிரி சங்கடமா இருந்துச்சு!! சரி பிரன்டு வர வரைக்கும் வெயிட் பன்னுவோமான்னு இல்ல என்ன செய்லாம்ன்னு யோசிச்சுகிட்டு இருக்கறப்பவே திடு புடுன்னு வந்தாங்க!! இலைய போட்டு சாப்பாட போட்டு குழம்பை ஊத்தி கூட்டு பொறியல வச்சுட்டு போயிட்டாங்க -. இருந்த பசிக்கு நானும் சரின்னு சாப்பிட ஆரம்பிச்சிட்டேன். சாப்டுக்கிட்டே மெல்ல யோசிக்க ஆரம்பிச்சேன் எதுக்கு நம்பள இப்படி தனியா உக்கார வச்சி சாப்பாடு போடுராறாங்க!!
.
சாதாரணமா ஒண்ணுக்கு அடிக்க போனா இப்படி அட்வைஸ் பன்றாங்க. சரி பிரண்டு வரட்டும் கேட்டுக்கலாம்ன்னு ஒரு யோசன. அவன்ட எப்படி கேக்கறதுன்னு ஒரு குழப்பம். அதுக்குள்ள இலைல இருந்த சாப்பாடு தீந்துருச்சு!! சரி சாப்பாடு வாங்கி ரசம் வாங்கி சாப்பிடலான்னு பாத்துகிட்டே இருந்தேன் யாரையும் காணம். எச்ச கையோட எந்திரிச்சு போய் சோறு போடுங்கன்னு கேக்கவா முடியும்.?? பொறுத்து பொறுத்து பாத்துட்டு சரி கெளம்பலாம் வீட்டில போயி கொஞ்சம் சாப்டுக்கலாம்ன்னு எந்திரிச்ச உடனே பிரன்டு அம்மா வந்துட்டாங்க அவுங்க என்கிட்ட என்னப்பா?? அதுக்குள்ள எந்திரிச்சுட்ட?? நல்லா சாப்புடுப்பா அப்படின்னாங்க. எனக்கு மடிச்சு வச்ச இலைய திருப்பி தொறந்து வச்சு சாப்புட அசிங்கமா இருந்துச்சு. சரின்னுட்டு பாலிசா இல்லீங்கம்மா போதும் புல்லா சாப்பிட்டேன்னு சொல்லிட்டு எச்சி இலைய தூக்கிகிட்டு போய் போட்டு கை கழுவிட்டேன்.!! திருப்பி மெல்ல நான் வந்து பாக்குறேன்- நான்சாப் பிட்இடத்த என்பிரண்டு அம்மா தண்ணி ஊத்தி கழுவோ கழுவுன்னு கழுவி வுட்டுகிட்டு இருக்காங்க.--
.
எனக்கு ஒரு மாதிரி அசிங்கமா போச்சு நான் என்ன பண்ணி மாதிரியா தின்னேன்.?? ஏண்ணா சாப்புடுற விசயத்துல நான் ரொம்ப கன்டீசனா இருப்பேன்-. ஒரு சோத்து பருக்கைய கீழ சிந்தமாட்டேன்- கருவேப்பிலை தானேண்ணு தூக்கி போட மாட்டேன்1.ஏண்ணா எங்கப்பா நான் ஐஞ்சு வயசா இருக்கறப்பவே தவறீட்டாரு. அதுக்கபறம் எங்கம்மா ஒண்டி ஆளா கட்டட வேல செஞ்சு வர கூலில தான் நான் என் தம்பி அண்ணன் நாலு பேரும் சாப்புடுணும். பள்ளிக்கூடம் இருக்குறப்ப பிரச்சன இல்ல சத்துணவு வரும். --லீவு நாள்ல சாப்பாட்டு க“்ஷ்டம் தாங்க முடியாது -பல ராத்திரி பட்டினியாவே தூங்கிருவேன் -. ஏதோ இப்ப நானும் தம்பியும் வேலைக்கு போறதுனால சாப்பாட்டு பிரச்சன இல்ல.
.
மூணாவது அவமானம்
------------------------------------
.
சரி விசயத்துக்கு வருவோம் அதுக்குள்ள பிரண்டும் வந்துட்டான் !!.சரின்னு சொல்லிட்டு கிளம்பிறப்ப பிரண்டு அம்மா வேக வேகமா வாசலுக்கு வந்து என்கிட்ட தம்பி!! தம்பி கோவிச்சிகாம மாடிக்கு போயி வேலகாரம்மா கூட சும்மா ஒரு கை புடிச்சி அத தூக்கி போட்டுட்டு வீட்டுக்கு போப்பா அப்டின்னாங்க. --என்னத்த ஒரு கை புடிச்சி என்னத்த தூக்கி போடனும்னு யோசிச்சிகிட்டே மாடிக்கு போனப்பதான் தெரிஞ்சுச்சு எல்லாரும் சாப்பிடட எச்சி இலைய ஒரு பெரிய சாக்குல விரிச்சி அதுல போட்டிருந்தாங்க. எனக்கு சரியான டென்சன் ஆயிருச்சு-- ஆனா பிரன்டு கூப்பிட்டான்னு வந்தோம்!!!!நம்ம எதாவது டென்சன்ல பேசுனா அவுனுக்கு மனசு கஸ்டப்படுமேன்ட்டு பேசாம ஒரு கை புடிச்சி எச்சி மயிரு இலைய குப்பை தொட்டில தூக்கி போட்டுட்டு திரும்பிகூட பாக்காம சைக்கிள எடுத்துகிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.
.
இத நெனச்சு நெனச்சு டென்சன் மேல டென்சன்.இருந்த கடுப்புக்கு பிரன்ட நேர்ல பாத்து நல்லா நாலு கேக்கணும்னு முடிவு பண்ணிட்டு அவனுக்கு போன் அடிச்சேன்.-- ரொம்ப பிசி பிசின்னு சீன் மயிரு போட்டான்.-- த-க்காளி வரீயா இல்ல நான் வீட்டுக்கு வரட்டுமான்னேன். என்ன நெனைச்சானோ தெரியல அலறி அடிச்சுகிட்டு பைக்ல ஓடியாந்துட்டான்!!.
.
நாலாவது அவமானம்
-----------------------------------
.
வந்த உடனே நடந்த எல்லாத்தயும் சொன்னேன். கடைசியா எச்சி இலைய எடுக்க சொன்னப்ப ஏன்டா பேசாம இருந்தேன்னு அவன கேட்டேன்-. அப்படி இல்ல- இப்படி இல்லண்ணு ஏதோ சொல்லி சமாளிச்சுட்டு கடசியா ஒரு நூறு ருவாய குடுத்து-- அப்பா குடுக்க சொன்னாருன்னான். எனக்கு வந்துச்சே கடுப்பு !!ஏண்டா நான் இந்த காசு பு---------தான் வந்தேன்னு நெனைச்சியா?? புடிச்சி ஏறு ஏறுன்னு ஏறி வுட்டேன்.-----
.
ஆனாலும் எனக்கு மனசு கேக்கல. இதுக்கு சாதிய தவிற வேற காரணமில்ல!! ஏன் அப்படி சொல்றேண்ணா அங்க மொட்டைமாடியில எல்லார் கூடயும் சேந்து உக்காந்து சாப்பிட்ட ஒரு ஆளு சரியான தண்ணி வண்டி !!பல தடவ சாக்கடையில உழுந்து கெடக்கறத ஊரே பாத்திருக்கு--- அந்த ஆளு அவுங்க சாதின்னு சரி சமமா உக்கார வச்சு தான் சாப்பாடு போட்டாங்க.-- வயசுல பெரியவங்க சாதி பாப்பாங்கன்னு தெரியும்-- ஆனா நம்ம வயசு பசங்க அவ்வளவுக்கா சாதி பாக்க மாட்டாங்கன்னு நெனைச்சுகிட்டு இருந்தேன். --இப்பதான் தெரியுது எல்லா பயலுகளும் உள்ளுக்குள்ள நல்லா சாதிய வச்சிகிட்டு இருக்கானுங்க
.
என்னைய ரொம்ப பேரு நைசா நக்கல் நையாண்டி பண்ணீருக்கானூக-- ஆனா இப்படி டைரக்டா செஞ்சது செருப்ப கழட்டி அடிச்ச மாதிரி. எனக்கு ஒரு டவுட்டு --இப்படி சாதி சுத்தம் பாக்குறானுங்களே--அவுனுங்க சாதிகாரனுங்களுக்கு மட்டும் வட்டிக்கு உட்டு வர வருமானத்துல சாப்புடுவானுங்களா.?? இவனுங்க திங்குற சோத்த நெறைய மள்ளருங்க தான வெள்ளாம பண்ணி தராங்க !!அது மட்டும் எப்படி சுத்தமாவுது.?
.
இதுல ஒரு காமடி அவுங்க வீட்ல தலைவர் பிரபாகரன் பெரிய படத்த மாட்டிருப்பானுங்க--. பிரபாகரன் என்ன அவுங்க சாதி காரனுக்கா போராட்டம் பண்ணாரு எல்லாத்துக்கும் சேத்துதான போராடுனாரு.
.
நம்ம தெரு பயலுகள்ட்ட விசயத்த சொன்னேண்ணா உட்டு உரிஉரிண்ணு உரிச்சுருவாங்க-- ஆனா அடிச்சு ஒதச்சு வாங்குனா அது என்ன மரியாதை??. பழகிகிட்டு இப்படி பண்ணாஅவுனுங்களுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்ணு பேசாம இருக்கேன். ஆனா நெனைக்க நெனைக்க பயங்கர டென்சனா ஆவுது.


கிறித்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது

உதகையில் நடந்த இந்து முன்னணி மாநாட்டில்:
  • நம் நாட்டிலுள்ள நம் இனத்தைச் சேர்ந்தவர்கள் (இந்துக்கள்), கிறித்தவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது
  • அவர்களின் பொருட்களை வாங்கவோ பயன்படுத்தவோ கூடாது
-என அறிவுறுத்தி மதக்கலவரத்தைத் தூண்டிவிடும் விதத்தில் இந்து முன்னணியினரால் போடப்பட்ட வரலாற்று(?) சிரப்பு மிக்க தீர்மானத்திற்க்கு பதிலாக உதகை திராவிடர் கழகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை:

இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் மேதாவி மூதேவி டவுஸர்களின் கவனத்திற்கு:
  • நீங்கள் மின்சாரத்தைப் பயன்படுத்தாதீர்கள், இதைக் கண்டுபிடித்தவர் - பென்ஜமின் பிராங்கலின் என்னும் கிறித்தவர்.
  • நீங்கள் இரயில் வண்டியில் பயணம் செய்யாதீர்கள், இதை கண்டுபிடித்தவர் - ஹென்றி போர்டு என்ற கிறித்தவர்.
  • நீங்கள் திரைப்படங்களைப் பார்க்காதீர்கள், இதைக் கண்டுபிடித்தவர் - தாமஸ் ஆல்வா எடிசன் என்ற கிறித்தவர்.
  • நீங்கள் வானொலியைக் கேட்காதீர்கள், இதைக் கண்டுபிடித்தவர் மார்க்கோனி என்ற கிறித்தவர்.
  • நீங்கள் கடிகாரத்தைப் பயன்படுத்தாதீர்கள், இதைக் கண்டுபிடித்தவர் - பீட்டர்ஹல் என்ற கிறித்தவர்.
  • நீங்கள் அச்சுப்பொறியைப் பயன்படுத்தாதீர்கள், அதைக் கண்டுபிடித்தவர் - ஹூடன் பார்க்கேக்ஸ்டன் என்ற கிறித்தவர்.
  • நீங்கள் டயரைப் பயன்படுத்தாதீர்கள், இதைக் கண்டுபிடித்தவர் டன்லப் என்ற கிறித்தவர்.
  • நீங்கள் டெலிபோனைப் பயன்படுத்தாதீர்கள், இதைக் கண்டுபிடித்தவர் - அலெக்சாண்டர் கிரஹாம்பெல் என்ற கிறித்தவர்.
  • நீங்கள் தையல் மிஷின் கருவியை பயன்படுத்தாதீர்கள், இதைக் கண்டுபிடித்தவர் கோபாஸ் என்ற கிறித்தவர்.
  • உங்கள் கால், கை, உடைந்தால் நீங்கள் எக்ஸ்ரே எடுத்துக் கொள்ளாதீர்கள், இதைக் கண்டுபிடித்தவர் வில்லியம் ரோன்டஜன் என்ற கிறித்தவர்.
  • நவீன மருத்துவ உபகரனங்களை பயன்படுத்தாதீர், அது 10ம் நூற்றாண்டில் Abu al-Qasim khalaf ibn al-Abbas Al- Zahrawi (father of modern medical equipments) என்ற முஸ்லிமால் கண்டு பிடிக்கப்பட்டது
  • Fountain பேனாவை பயன்படுத்தாதீர்கள் அது 953ம் ஆண்டு எகிப்தை சேர்ந்த சுல்தான் என்ற முஸ்லிமால் கண்டுபிடிக்கப்பட்டது
  •  கேமரா தத்துவம் 11ம் நூற்றாண்டில் Ibn al-Hayan என்ற முஸ்லிமால் கண்டுபிடிக்கப்பட்டது ஆகையால் கேமரா முன் அம்மனமா நிக்காதீர்கள்.
  • மூக்குக் கண்ணாடி மற்றும் உயிர்காக்கும் பாராசூட் 9ம் நூற்றாண்டில் ஸ்பெய்னை சேர்ந்த Abbas ibn- Firnas என்ற முஸ்லிமால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆகையால் கண்ணாடி போடாதீர்கள், உங்கள் உயிரை காப்பாத்திக்கொள்ள மறந்து கூட பாராசூட்டை பயன்படுத்தாமல் செத்து தொலைங்க.
  • சோப்பு 9ம் நூற்றாண்டில் Ali ibn Nafi (Zirgab) என்ற முஸ்லிமால் கண்டு பிடிக்கப்பட்டது. அட பாண்டைகளா நீங்க தான் குளிக்கவே மாட்டீங்களே அப்போ சோப்பு பயன்படுத்தாம இருப்பது உங்களுக்கு ரொம்ப ஈஸியா போச்சி
  • இரத்த ஓட்டம் 13ம் நூற்றாண்டில் Ibn-Nafis என்ற முஸ்லிமால் கண்டுபிடிக்கப்பட்டது
  • காற்றாலை மின்சாரம் 634 ம் ஆண்டுகளில் பெர்சியர்கள் என்ற ஈராக் முஸ்லிம்கள் கண்டுபிடிக்கப்பட்டது
  • செஸ் விளையாட்டு 10ம் நூற்றாண்டில் ஸ்பெய்ன் மூர்ஸ் என்று அழைக்கப்படும் முஸ்லிம்களால் கண்டு பிடிக்கப்பட்டது. அதனால் உங்களுக்கு தெரிந்த காமசூத்திர விளையாட்டையே அவுத்து போட்டுட்டு ஆடுங்க
  • "Al-gebra" Muhammad ibn mura Al-Khawarizni என்ற முஸ்லிமால் கண்டுபிடிக்கப்பட்டது
  • பேஸ் பேஸ் தினம் குடிக்கும் காப்பி ஏமன் முஸ்லிம்களால் கண்டுபிடிக்கப்பட்டது, அதனால் நீங்க உங்க முன்னோர் இன்னோர் குடிக்கிற மாட்டு மூத்திரத்தையே குடிங்க பேஸ் பேஸ் நன்னா இருக்கும்
  •  மிக முக்கியமாக டீசல் பெட்ரோல் பயன்படுத்தாதீர்கள். ஏனெனில், அது இசுலாமிய நாடுகளிலிருந்து கிடைக்கிறது. அதனால் உங்க வாய்ள ஊத்துர மாட்டு மூத்திரத்தையே உங்க வண்டிக்கும் ஊத்துங்க நன்னா ஓடும்
  • அரபு நாடுகளுக்கு பிழைக்கப்போனவர்களை திரும்பி வரும்படி செய்யுங்கள் ஏனெனில் அது இசுலாமிய நாடு.
அடேய் டவுசர் பாண்டைகளா உங்க டவுசரையும் அவுத்து போட்டுட்டு ஓடுங்கடா வந்தேரிப்பயலுகலா

Wednesday, February 4, 2015

எந்தச் சமூகம் இந்திய கார்பரேட்டுகளைக் கட்டுப்படுத்துகிறது

இன்றைய நிலையில் பிராமணீயம்:

ஆகஸ்டு 2012 ஆண்டு EPW என்ற வாரப் பத்திரிக்கையில் வெளியான "Corporate Boards in India Blocked by Caste?" என்னும் தலைப்பில் எந்தச் சமூகம் இந்திய கார்பரேட்டுகளைக் கட்டுப்படுத்துகிறது என்பதை அறிய ஆய்வு அறிக்கையை வெளியிட்டது.
.
தேசிய பங்கு சந்தை மற்றும் பம்பாய் பங்கு சந்தை ஆகியவற்றில் பட்டியலிடப்பட்டுள்ள 4000 தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் போர்டு உறுப்பினர்களில், முதல் 1000 நிறுவனங்களின் போர்டு உறுப்பினர்களின் சாதி மற்றும் சமூக-பொருளாதார நிலையை ஆய்வு செய்தது.
.
இந்தியாவில் கடைசிப்பெயர் பொதுவாக சாதியைக் குறிக்கும். கடைசிப் பெயர் மற்றும் சமூக வலைதளங்களைக் கொண்டு அவர்களின் சாதியினரைக் கண்டறிந்து வெளியிட்டுள்ள இவ்வறிக்கையின் படி 1000 கார்பரேட் நிறுவனங்களில் 9052 போர்டு உறுப்பினர்களின் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.


நன்றி: விக்கி

பெரியாருக்கு மாற்றாக யாரை பரிந்துரைக்கிறார்

தமிழ் தேசியப் பொதூடைமை கட்சியாக இயங்கி வந்து... பிறகு பொதூடைமைக்கும் தமிழ் தேசியத்திற்கும் ஒரு சம்மந்தமும் இல்லை என்று உணர்ந்து... இன்று தமிழ் தேசியப் பேரியக்கம் என்ற பெயரில் இயங்கும் தோழர் மணியரசன் அவர்கள், "பெரியார் ஒரு தமிழர் விரோதி" என்று சித்தரிப்பை தீவிரமாக தொடர்ந்து பரப்புகிறார்.

சரி பெரியாருக்கு மாற்றாக யாரை பரிந்துரைக்கிறார் என்று பார்த்தால்...
ராஜ ராஜ சோழன் - யார் இவன்...
சாட்சாத் ஒரு பார்பன அடிமை...
மக்களை சேரியில் ஓடிக்கியவன்...

சரி, தோழரின் பெரியார் மீதான குற்றச் சாட்டுகளை பார்ப்போம்...

1.பெரியார் தான் முதன் முதலில் இங்கே திராவிடம் என்ற சொல்லை அரசியலில் கொண்டு வந்தார்.அதற்க்கு முன் இங்கே அந்த வார்த்தை இல்லை

இந்த குற்றச்சாட்டின் நோக்கம்... இல்லாத திராவிடத்தை பெரியார் தான் தன் சுயநலத்திற்கு கொண்டு வந்தார் என்று குறிப்பதே.

எவ்வளவு பெரிய வரலாற்றுப்பிழை... திராவிடம் என்ற சொல் ஒன்றும் பெரியாரால் உருவாக்கப்பட்டது இல்லை...

அது 1856 ஆம் ஆண்டு "கால்டுவெல்" என்பவரால் உரக்க சொல்லப்பட்டது... இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் தென்னகத்து மொழிகளுக்கும் ஒரு சம்மந்தம் இல்லை என்றும்... இங்கே உள்ள மொழிகள் ,தமிழை பிறப்பிடமாக கொண்டு வந்துள்ளதாகவும்... தமிழே தலை சிறந்த மொழி எனவும் கூறினார்...

  • பெரியாருக்கு முன்னர் 1887 ஆம் ஆண்டு முதல் "ஜான் ரத்தினம்" எனும் தோழர் 'திராவிட பாண்டியன் என்ற இதழை நடத்தி வந்தார்
  • 1892 ஆம் ஆண்டு அயோத்திதாச பண்டிதர் ,தன்னை திராவிடன் என்று முன்மொழிந்து உள்ளார்
  • 1894 ஆம் ஆண்டு இரட்டை மலை சீனிவாசன் ,தான் நடத்தி வந்த "பறையர் ஜன சபை" என்பதை "திராவிட மகா சபை" என நடத்த தொடங்கினார் 
  • ஜான் ரத்தினம், அயோத்திதாச பண்டிதர், இரட்டை மலை சீனிவாசன் ஆகிய அனைவரும் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் ஆவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக இங்கே தாழ்த்தப்பட்ட மக்களின் உயர்வுக்கு திராவிடம் என்ற அடையாளமே பெரிதும் துணை நின்றுள்ளது என்பது உறுதியாகிறது.

2. "திராவிடம்" என்பது பார்பனர்களை தான் குறிக்கும், பாருங்கள் "மட்டை பந்து ஆட்டக்காரர் - ராகுல் டிராவிட்" ஒரு பார்பனர். அவர் பெயரில் திராவிட் இருக்கிறது.

அடையாளம் என்றால் பொதுவாக இருப்பது தான், கோடிக்கணக்கான மக்களில் இருந்து தோழரால், பாவம் ஒருவரை தான் கண்டுபிடிக்க முடிந்துள்ளது.

"விதிவிலக்கு விதியாகாது" என்று தோழருக்கு எப்படி தெரியாமல் போனது என்று தெரியவில்லை.

இங்கே ஆரிய பெயர்களை சுமப்பவர்கள் எல்லாம் ஆரியர்கள் என்று சொன்னால், எவ்வளவு அபத்தமாக இருக்குமோ, அப்படி உள்ளது இந்த உதாரணம்.

3. பெரியாருக்கு முன்னரே இங்கு "சுயமரியாதை திருமணங்கள்" நடந்துள்ளது. மறைமலை அடிகள் நடத்தி வைத்துள்ளார், பெரியார் ஒன்றும் புதிதாக செய்யவில்லை.

மகிழ்ச்சி, வாழ்த்துக்கள், அவர் நடத்தி வைத்தது பார்பன மந்தாரங்கள் அற்ற திருமணமே ஒழிய, ஜாதி ஒழிப்பு திருமணங்கள் அல்ல,

யார் இந்த மறைமலை அடிகள்? பார்பனிய சடங்குகளை ஏதிர்த்து திருமணம் செய்து வைத்தார். ஏன்? பெரியாரை போல், தமிழர்கள் அனைவரும் சமம் என்று நினைத்ததாலா? இல்லவே இல்லை... இவர் சைவ மத ஆதரவாளர்...

பார்ப்பனியத்தை போல தீண்டாமையை போதித்த சைவ மத ஆதரவாளர்... பார்ப்பனியத்தை ஏதிர்க்க காரணம் அதில் தீண்டாமை உள்ளது என்பதால் அல்ல... அது சைவ சமயத்திற்கு போட்டி என்பதால்...

பார்ப்பனியத்திற்கு நிகராக தீண்டாமையை போதித்ததே அடியாரின் "சைவ சமயம்"

தோழருக்கு ஒரு நல்ல உதாரணம் கூட கிடைப்பதில்லை பாவம். கிடைப்பதெல்லாம் பார்பன அடிமை ராஜ ராஜ சோழனும், தீண்டாமையை ஆதரித்த மறைமலை அடிகளும் தான்.

4. பெரியார் தமிழை காட்டு மிராண்டி மொழி என சொல்லி விட்டார்.

இவர்கள் என்னமோ அன்றைய கால கட்டத்தில் மக்களுக்கு தமிழ் வழியில் கல்வி கொடுத்து மக்களுக்கு அறிவு ஊட்டினார்கள் போலவும், அப்போது வந்து பெரியார் தமிழை காட்டு மிராண்டி மொழி என்று சொன்னார் என்பது போலவுமே சித்தரிப்பது.

அன்று தமிழ் மொழி இருந்தது இடைநிலை ஜாதிகள் கையிலும், பார்பனியர் கையிலும், தமிழின் பெருமை பேசியது எல்லாம் "தேவாரம்", "திருவாசகம்",  "பெரிய புராணம்" ஆகிய மூட நம்பிக்கைகளையும், தீண்டமைகளையும் ஏடுத்துக்காட்டாக காட்டி

அதனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் என்ன பயன் என்று தான் பெரியார் யோசித்தார்?

தமிழை சைவ சமய பெருமை பேசுவதற்கு பயன்படுத்தினார்களே தவிர, அதனால் மக்களுக்கு என்ன பயன்?

மக்களுக்கு என்ன பயன் என்று யோசித்தார், "திருக்குறள்" மாநாடு நடத்தினார்.

அதற்கு முன் திருக்குறளை எந்த "தமிழ் அறிஞர்கள்" கொண்டு சென்றார்கள் என்று "மணியரசன்" தோழர் கூறட்டும்.

பெரியார் தமிழை காட்டு மிராண்டி மொழி என்று சொல்லிவிட்டார் என்று கூறும் நபர்களுக்கு பின்னால் "சைவ சமய ஆதரவு" பூனை ஒளிந்து கொண்டு உள்ளது என்பதே நிதர்சனம்.

4. பெரியாரின் நீதிக்கட்சியிலே பார்பன ஆதரவாளர்கள் இருந்தனர்

தோழர் வரலாற்றையே படிப்பதில்லை போலும், வெறும் பெரியார் ஏதிர்ப்புக்கு மட்டும் தேடி தேடி குறிப்பு எடுத்துள்ளார்.

ஆம், நீதிக்கட்சி பார்பனர் அல்லாதோர் இயக்கமாக் செயல்பட்டாலும் அதில் உள்ளவர்கள் பார்பன சடங்குகளில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர்.

அதை பெரியார் உணர்ந்ததால் தான் நீதிக்கட்சியில் இருந்து "'காங்கிரசுக்கு" சென்ற பெரியார் அங்கிருந்து மறுபடியும் "நீதிக்கட்சிக்கு" செல்லாமல்... "சுயமரியாதை இயக்கம்" கண்டு அதன் நீட்சியாக "திராவிடர் கழகம்" தோன்றியது...

வீடே சொர்க்கம் தான்

கணவன் மனைவி இப்படி இருந்தால் வீடே சொர்க்கம் தான்...
1. எண்ணங்கள் வெவ்வேறாக இருந்தாலும், ஒருவர் எண்ணத்திற்கு ஒருவர் மதிப்பு தந்து சொல்வதை காதில் வாங்க வேண்டும். 
2. கணவன் மட்டுமே வேலைக்கு செல்லும் வீட்டில், தன்னால் தான் குடும்ப பொருளாதாரம் இயங்குகிறது என்பதை எப்போதும் கணவன் வார்த்தைகளில் வெளிப்படுத்தக் கூடாது. 
3. மனைவியும் வேலைக்கு செல்லும் வீட்டில், நானும் தான் வேலைக்கு போறேன் என்ற வார்த்தையை மனைவி அடிக்கடி சொல்லக் கூடாது. 
4. இவரிடம்/இவளிடம் இதைச் சொன்னால் பெரிய பூகம்பமே வெடிக்குமோ என்ற பயத்தை ஒரு போதும் மனைவிக்கு கணவனும், கணவனுக்கு மனைவியும் தரக்கூடாது. பொய்யின் ஆரம்பமே பயம் தான். 
5. எவ்வளவு பெரிய சண்டை என்றாலும் உங்கள் இருவர் பற்றி மட்டும் தான் பேச வேண்டும். கணவன் குடும்பத்தாரை பற்றி மனைவியும், மனைவியின் குடும்பத்தாரை பற்றி கணவனும் பேசவே கூடாது. தவறுகளில் மிகப்பெரிய தவறு இது. 
6. மனைவியை தன்னில் ஒரு பாதியாக பார்க்காவிட்டாலும் வேலைக்காரியாய் பார்க்காமல் இருப்பது கணவனுக்கு அழகு. 
7. மனைவியை ஏற்றது போல் அவள் குடும்பத்தையும் முழுமனதாய் கணவன் ஏற்க வேண்டும். கணவனை ஏற்றது போல் அவன் குடும்பத்தையும் முழுமனதாய் மனைவி ஏற்க வேண்டும். (இப்படி வாழ்ந்தால் முதியோர் இல்லங்கள் நிச்சயம் குறையும்) 
8. கணவன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு நேரம் கழித்து வீடு வருவது. மனைவியை மட்டும் வீட்டுக்குள்ளே ஆயுள் கைதி ஆக்குவது, அவளை வெளியுலகம் அறியவிடாமல் செய்வது தவறு. படிப்பறிவில்லா பெண்களை சில ஆண்கள் இப்படித்
தான் நடத்துகின்றனர். 
9. கணவனும் மனைவியும் தனித் தனியே வெளியில் சென்றால் நேரமாய் வீடு திரும்ப வேண்டும். அப்படி நியாயமான காரணத்திற்காக தாமதம் ஏற்பட்டால் ஒருவர் சொல்லும் காரணத்தை ஒருவர் நம்பி ஏற்றக் கொள்ளவேண்டும். 
10. அம்மாவின் சமையல் பக்குவத்தை எதிர்பார்த்து மனைவியின் சமையலை சாப்பிட்டு, ஏமாற்றம் என்றதும் அவளை திட்டக் கூடாது. அப்படி திட்டுவேன் தான் என்றால் அதற்கு முன் ஒன்றை யோசியுங்கள்: திருமணம் ஆன புதிதில் உங்க அம்மாவும் இப்படித் தான் உங்க அப்பாவிடம் திட்டு வாங்கி இருப்பார்கள் சமையலுக்காக.பக்குவம் பார்த்ததும் வந்து விடக்கூடியதல்ல.பல வருட அனுபவத்தில் வருவது.
நரகமாய் இருக்கும் வீடு சொர்க்கம் ஆவதும், சொர்க்கமாய் இருந்த வீடு நரகம் ஆவதும் கணவன் மனைவி நடந்து கொள்ளும் விதத்தில் தான் இருக்கிறது.

-ஆதிரா