Thursday, March 31, 2016

வைகோ அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை!

திராவிடப் புரட்சி
via Facebook
2016-Mar-27

வைகோ அவர்களை பாராட்ட வார்த்தைகளே இல்லை!

திராவிட இயக்கத்தை அழிக்க விட மாட்டேன் என சூளுரைத்தவர் இப்போது அதை நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார்!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரை தனது இயக்கத்திற்கு வைத்தவர், இன்று பெயருக்கு ஏற்றவாறு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மறுமலர்ச்சிக்கு உறுதுணையாக செயலாற்றியிருக்கிறார்!

திராவிடர் இயக்கம் ஒரு நூற்றாண்டை கடந்து அடுத்த நூற்றாண்டில் காலடி எடுத்து வைக்கும் நேரத்தில், திராவிட இயக்கத்தை ஒழித்தே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு சிலர் களமிறங்கிய சூழலில், திராவிட இயக்கத்தை காக்கும் பெரும் பணியில் வைகோ வெற்றி பெற்றிருக்கிறார்!
விடுதலைப் புலிகள் அமைப்பில் தற்கொலைப் படை என்றொன்றிருந்தது அதை கரும்புலிகள் என்றழைப்பார்கள். அதையொத்த அரசியல் தற்கொலைப் படையாக, படையின் தன்னிகரற்ற தலைவராக வைகோ அவர்கள் ஆற்றியிருக்கிற பணியினை, தியாகத்தை வரலாறு போற்றும்!

ஆம் தோழர்களே! வைகோ அவர்கள் ஒருங்கிணைப்பில் உருவாகியிருக்கும் தேர்தல் அரசியல் கூட்டணி என்பது சாதாரணமான ஒன்றல்ல. அதை திராவிட இயக்கத்தை காக்கும் கூட்டணி என்றழைத்தால் மிகையாகாது!
சமீப கால அரசியல் நகர்வுகளை கூட்டிக் கழித்துப் பார்த்தால் வைகோ அவர்களின் சாமர்த்தியமான அரசியல் புரியவரும்!

அறிஞர் அண்ணா, கலைஞர் வரிசையில் திராவிட இயக்கத்தின் இராஜதந்திரியாக தற்போது தோற்றமளிக்கிறார் வைகோ அவர்கள்!
இதை படிக்கும்போது அப்படி என்ன செய்துவிட்டார் வைகோ? என்ற கேள்வி அவரது ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் மனதில் நிச்சயமாக எழும். அதற்கான விடைதான் அடுத்து வருவது.

வைகோ அவர்கள் ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்தியிருக்கிறார். முக்கிய மூன்று பின்வருமாறு.

தமிழக அரசியலில் ஓரளவிற்கு வாக்கு வங்கியை கொண்டிருந்த கட்சிகளோடு கூட்டணி அமைத்து அதன் மூலமாக தங்களை வலுவானவர்களாக காட்டிக்கொண்டு இருந்த ஹிந்துத்துவா அமைப்பான பிஜேபி கட்சி, பல தொலைக்காட்சி விவாதங்களில் தங்கள் பெயரில் ஒருவரையும், பினாமி பெயரில் ஒருவரையும் அனுப்பி தங்களது இருப்பை போலியாக காட்டிக்கொண்டிருந்தது. தமிழகத்தில் இரண்டு சதவீத வாக்குகள் கூட இல்லாத பிஜேபி, மேலும் தங்களது ஆட்டத்தை ஆடாமல் தடுக்கும் வண்ணம் செயலாற்றியுள்ளார் வைகோ அவர்கள்.

திமுக, பிஜேபி ஆகிய இரு கட்சிகளோடு கூட்டணி அமைக்க வாய்ப்புகளை பெற்றிருந்த விஜயகாந்த் திமுகவோடு கூட்டனி அமைக்க சாத்தியமில்லை என்ற நிலையில், அவரை பிஜேபி இழுக்க வாய்ப்பளிக்காமல் சாதுரியமாக மநகூவோடு கூட்டணி அமைக்க வைத்து. பிஜேபியை தனிமைப்படுத்தியிருக்கிறார் வைகோ அவர்கள். பிஜேபியோடு கூட்டனி அமைத்தால் சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்களின் வாக்குகள் கிடைக்காது என்ற அச்சத்தினால் அதிமுகவே பிஜேபியோடு கூட்டனி அமைக்க தயங்கும் நிலையில், சேர வாய்பிருந்த விஜயகாந்தை பிரித்து, பிஜேபியை அநாதையாக்கியிருக்கிறார் தமிழக தேர்தல் அரசியல் களத்தில்.

அடுத்து, ஏற்கனவே அதிமுகவோடு கூட்டணி அமைத்திருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் மீண்டும் அதிமுகவோடு சேரும் வாய்ப்பை தடுத்திருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல், பாமக அதிமுகவோடு கூட்டணி அமைக்காமல் இருக்கும் நிலையில், விசிக்கள் அதிமுகவோடு கூட்டணி அமைக்க இருந்த வாய்ப்பை தடுத்திருக்கிறார். இதன் மூலம் அதிமுகவின் பலம் குறைக்கப்பட்டிருக்கிறது.

மூன்றாவது, ஈழ பிரச்சனையை மட்டும் முன்னிறுத்தி அரசியல் அடையாளத்தை பெற்ற சிலரை ஒன்றிணைத்து, தமிழ் தேசிய அரசியல் கூட்டனி என்ற பெயரில், சில பல சில்லறை கட்சிகளை ஒன்றினைத்து கூட்டணியை உருவாக்க வாய்பிருந்த நிலையை முற்றிலுமாக தவிர்த்து சில சில்லறைகளை தனித்து தேர்தலில் போட்டியிடும் சூழலை ஏற்படுத்தியிருக்கிறார்.

இவைகள் அனைத்திற்கும் முத்தாய்பாக, மநகூ விஜயகாந்தோடு கூட்டனி வைத்த போது, விஜயகாந்தை முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்ததன் மூலமாக, தான் இருக்கும் மூன்றாவது அணியை முற்றிலுமாக நிர்மூலமாக்கியிருக்கிறார். இது ஒரு அரசியல் தற்கொலை என்பதை தெரியாதவர் அல்ல வைகோ அவர்கள். இருப்பினும், திராவிட இயக்கத்தை காப்பதற்காக வைகோ அவர்கள் தியாக உணர்வோடு எடுத்த முடிவாகவே இதை காண முடிகிறது.

எனவே, திராவிட இயக்கம் அடுத்த நூற்றாண்டில் வெற்றிகரமாக நகர மிக முக்கிய பங்காற்றியுள்ளார் வைகோ அவர்கள்!

வைகோ அவர்களுக்கு உளமார்ந்த பாராட்டுகள்! வரலாறு உங்களை வாழ்த்தும்!

உதய் எனும் மின்சாரத் திட்டத்தில் தமிழகம் கையெழுத்திட மறுத்தது

Elango Kallanai
via Facebook
2016-Mar-31

தேசியக் கட்சிகள் மாநிலங்களை, மாநிலக் கட்சிகளை மதிக்காமல் செயல்படுவது எப்போதும் நடப்பது. தமிழ்நாட்டில் மட்டுமே தேசியக்கட்சிகளை இவ்வளவு பரிதாபமான நிலையில் தான் வைத்திருக்கிறார்கள்.

சமீபத்தில் ஒரு நடுவண் அமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்கவே முடியவில்லை, ஆனவமானவர் என்கிற அர்த்தத்தை கொடுத்திருந்தார். ஆனால் தமிழக அரசின் சார்பில் பிரச்சனை அதுவல்ல, உதய் எனும் மின்சாரத் திட்டத்தில் தமிழகம் கையெழுத்திட மறுத்ததே காரணம் என்று அறிக்கை விட்டார்கள். தமிழகம் கையெழுத்திட மறுத்ததால் பல மாநிலங்கள் இதன் பாதகத்தின் அடிப்படையில் கையெழுத்திடவில்லை என்பது முன்னேரை பார்த்து சுதாரித்த விஷயம் தான் நினைவுக்கு வருகிறது.

மக்கள் நலனை ஒட்டி மத்திய அரசு இந்தத் திட்டத்தைக் கொண்டு வரவில்லை. விவசாயிகளுக்கும் தொழிற்சாலைக்கும் கிடைக்கும் மின்சாரத்தில் இலவசமோ தள்ளுபடியோ கூடாது என்பது உட்பட பல உள்குத்துக்கள் இருக்கிறது. ஆமா No free lunch  எனும் அமெரிக்க வசனத்தை ஏற்றுப் பிறந்தவர்கள் பாஜகவினர். மக்குப் பயலுக. மத்திய அரசின் கட்சி என்ன சொல்கிறது என்றால், தமிழகம் மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்குகிறது, அதை நாங்கள் குறைத்துக் கொடுப்போம் என்கிறது.

உண்மை என்னவெனில் நிலக்கரிக்கு அதிகமான வரியை மத்திய அரசு விதிப்பதே காரணம் என்று மாநில அரசின் வாதம். முன்பு தேசிய கிரிட்டிர்காக காத்திருந்த போது நமக்கு மின்சாரமே கிடைக்கவில்லை. அதை வைத்து காங்கிரசே திமுக வை பழி வாங்கியது. கடந்த நான்கு ஆண்டுகளில் மின்சாரம் அதிக விலைக்கு வாங்கினாலும் தொடர்ச்சியாக கிடைக்கிறது.

மத்திய அரசின் அடியாட்கள் பலர் மின் உற்பத்தியில் பெரும்புள்ளிகள். காற்பறேட்டுகள் மின் உற்பத்தியில் குதித்திருக்கிறார்கள். ரிலையன்ஸ்  அலகு ஒன்றிற்கு மும்பையில் பதினோரு ரூபாய்க்கு விற்கிறது. நான் இது பற்றி கடந்தவருடம்  எழுதியிருந்தேன். ஆம் மின்சக்தியை தனியார்களிடம் இருந்து வாங்கி விற்கும் மத்திய அரசு என்ன சொல்லும், இப்போது பெட்ரோல் விலை உலகளவில் விழுந்திருந்தாலும் ரிலையன்ஸ் சொல்லும் நஷ்டக் கணக்கையே சொல்லும்.

இதை எதிர்த்துக் குரல் கொடுக்கக் கூட மாநில அரசால் முடியாது. உதயில் கை எழுத்திடாதது பற்றி இன்று ஜாவ்தேக்கர் கத்துகிறார். மத்திய அரசே நேரடியாக எல்லா விநியோகங்களையும் கையில் எடுப்பது ஆபத்தானது. மாநில அரசு மின் உற்பத்திக்கு செய்வதற்கு எதிராக சூழலியல் அமைச்சகத்தை வைத்து நிறைய முட்டுக்கட்டை போடுகிறார்கள். அதனாலேயே அணுமின் நிலையத்தை நமது தலையில் கட்டப் பார்க்கிறார்கள். சொல்லப் போனால் உள்ளாட்சி அமைப்புகளை வைத்து மின்சாரம் தயாரிக்கும் பணியை அரசு துவங்குவது விரைவிலேயே நடக்க வேண்டும்.

இந்த உதய் விவகாரத்தில் ஜெயலலிதாவின் வெளிநடப்பை முழு மனதோடு ஆதரிக்கிறேன்.

சுதந்திரமாக உணர வைப்பதே தலை சிறந்த கல்வி

Elango Kallanai
via Facebook
2016-Mar-31

என் நண்பன் பிரபுக்கண்ணன் கடந்த பதினைந்து வருடங்களாக கிரீஸ் டென்மார்க் நார்வே என்று ஐரோப்பாவில் மென் பொருள் தயாரிக்கும் யூத நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். அவரிடம் ஐரோப்பியக் கல்வியில் என்ன சிறப்பு? என்று அவ்வப்போது கேட்பேன். அவரது பிள்ளை நார்வேயில் பள்ளியில் படிக்கிறான்.

பிரபுக்கண்ணன் சொல்வது இது தான். ஐரோப்பாவில் கல்விக்கூடங்கள் இந்தியாவில் உள்ள அரசுப் பள்ளிகள் போல சுதந்திரமானவை. அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் தான் பிரபுக்கண்ணனும் படித்தார்.  என்பது அவருடைய கூற்று.

திராவிடத்தால் மிகப்பெரிய வீழ்ச்சி நிகழ்ந்திருக்கிறது

கடந்த ஐம்பது ஆண்டுகளில் "திராவிடத்தால் மிகப்பெரிய வீழ்ச்சி நிகழ்ந்திருக்கிறது" என்று பல்வேறு அரசியல் கட்சிகள் ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார்களே இது உண்மையா???

மேம்போக்காகப் பார்த்தால் இந்தக் குற்றச்சாட்டு அப்படியே உண்மையைப் போலத் தோற்றமளிக்கும், ஊடகங்களில் தோன்றும் நிலைய வித்துவான்களாகிய நடுநிலை அம்பிகளில் துவங்கி நாம் தமிழர் கட்சியின் சீமான், புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் தலைமையிலான மக்கள் நலக் கூட்டணி, பாரதீய ஜனதா, பாட்டாளி மக்கள் கட்சி வரை இன்று வெகு இயல்பாகப் பயன்படுத்துகிற ஒரு சொல்லாடல்,

"கடந்த ஐம்பது ஆண்டுகளில் திராவிடம் தமிழக மக்களைச் சுரண்டிக் கொள்ளையடித்து விட்டது".

உண்மையில் மேற்சொன்ன அரசியல் இயக்கங்கள் எல்லாம் தமிழக அரசியலில் வேரூன்றக் காரணமாக இருந்ததே திராவிடம் என்கிற கோட்பாடுதான். ஒருவகையில் இன்றைய திராவிடக் கோட்பாட்டுக்கு எதிரான அரசியல் செய்யும் இந்த அரசியல் கட்சிகளை திராவிடச் சிந்தனைகளை கூறேற்றும் ஒரு இயற்கையான அரசியல் இயங்கியலாகத் தான் பார்க்க முடியும். திராவிடம் ஒரு சமூக இயக்கமாக, இயங்கியலாக தமிழ்ச் சமூகத்தில் ஊடுருவித் தாக்கங்களை உருவாக்கிய அரசியல் பயணம்.

திராவிடம் முதலில் சமூக நீதியை வென்று காட்டியது, பிறகு கல்வியையும், வளர்ச்சியையும் வளர்த்து எடுத்தது, பின்பு பொருளாதாரச் சிந்தனைகளை, பண்பாட்டுக் களத்தில் மாற்றங்களை உருவாக்க முனைந்து அதில் ஒரளவுக்கு வெற்றியும் பெற்றது, சமூகவியல் மற்றும் பொருளியலில் இருக்கிற முரண்களைக் கொண்டே இங்கே ஏனைய அரசியல் இயக்கங்கள் உருவாகின, புதிதாக இந்த நூற்றாண்டில் உருவாகிய எந்த ஒரு தமிழக அரசியல் இயக்கமும் பெரியாரின் கருத்தியலை அல்லது திராவிடத்தின் கருத்தியலை ஒரு புள்ளியில் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டிய சூழலும், தாக்கமும் இருப்பதை யாரும் மறுதலிக்க இயலாது.

பாட்டாளி மக்கள் கட்சியாகட்டும், விடுதலைச் சிறுத்தைகள் ஆகட்டும், நாம் தமிழர் ஆகட்டும், வியப்புரிய கோட்பாட்டு முரணாக ஒரு புள்ளியில் தந்தை பெரியாரை எந்த முரண்பாடுகளும் இல்லாமல் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். அரசியல் அங்கீகாரம் ஆகட்டும், அதிகாரம் ஆகட்டும், கூட்டணி ஆட்சி என்கிற முழக்கங்கள் ஆகட்டும் எல்லாமே அவர்கள் வேண்டுவதும், கேட்பதும் திராவிடம் என்கிற மூல வேரிடத்தில் இருந்துதான் என்பதை கவனமாகப் பார்க்க வேண்டும்.

திராவிடம் என்பது இவர்கள் கற்பிதம் செய்வதைப் போல வேற்று மொழியினத்தவர் சார்ந்த அல்லது ஒருங்கிணைந்த ஒரு அரசியல் தத்துவம் அல்ல, திராவிடக் கோட்பாடு உருவாக்கப்பட்ட போது இருந்த நிலவியல் மற்றும் அரசியல் சூழல் என்பது ஏனைய தென்னிந்திய மாநிலங்களையும் உள்ளடக்கிய ஒன்றாக இருந்தது, படிப்படியாகப் நீதிக் கட்சியும், பெரியாரின் சுயமரியாதை இயக்கமும் அந்த நிலைப்பாட்டில் இருந்து விலகி முழுக்க முழுக்க தமிழக அரசியல் என்கிற எல்லைக்குள் வீரியம் பெற்றது என்கிற வரலாற்றுப் புரிந்துணர்வு இங்கே திராவிடத்தை எதிர்க்கிற யாருக்கும் இல்லை என்பது உண்மையில் அதிர்ச்சியும், வியப்பும் தருவதாகவே இருக்கிறது.

கர்நாடகத்திலோ, ஆந்திராவிலோ, கேரளாவிலோ திராவிட இயக்கங்களின் தாக்கம் முற்றிலுமாக இல்லை என்பதை இவர்களில் யாரும் புரிந்து கொள்வதில்லை. ஆக, வளர்ச்சி அடைந்த இன்றைய திராவிடம் என்பது தமிழக அரசியல் மற்றும் சமூகவியலில் மாற்றங்களையும், மேம்பாடுகளையும் கொண்டு வருவதற்கான ஒரு கருவியாகவே அடையாளம் காணப்படுகிறது.

தெலுங்கர்களும்,கன்னடர்களும், மலையாளிகளும் ஏதோ தமிழர்களுக்கு அநீதி இழைப்பதைப் போலவும், தெலுங்கு பேசுகிற மக்கள் இங்கே தமிழக அரசியல் களத்தை ஆட்கொண்டு விட்டதாகவும், ஆதித் தமிழ்க் குடிகளின் அரசியல் கனவுகள் மற்றும் அடிப்படை உரிமைகளை அவர்கள் பறித்துக் கொண்டதாகவும் கற்பனை செய்து கொண்டு கூக்குரலிடும் ஒரு அரசியல் என்பது வெகு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட முடியாத ஒரு தேவையற்ற குழப்ப அரசியல் என்பதை இந்தத் தேர்தல் இந்தக் கட்சிகள் அனைத்துக்கும் உணர்த்தக் கூடும்.

பெரியாரையும், திராவிட இயக்கச் சிந்தனை மற்றும் அரசியலை வெவ்வேறாகப் பிரித்துப் பார்க்க முடியாது, பெரியாரை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றால் உறுதியாக அவர்கள் திராவிட இயக்கக் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டவர்களாகவே புரிந்து கொள்ளப்படுவார்கள், ஏனெனில் திராவிடம் என்கிற கோட்பாட்டை தமிழக அரசியலில் ஒரு வெகுமக்கள் இயக்கமாக மாற்றிக் காட்டியதே பெரியாரின் சாதனை, ஆக திராவிடம் என்கிற கோட்பாட்டையும், பெரியாரையும் பிரித்துப் பார்ப்பது முதலில் மிகப்பெரிய முரண்.

திராவிடம் முதலில் பாசிச இந்துத்துவ ஆற்றல்களிடம் இருந்து விடுதலை பெற்றுக் கொடுத்தது, பிறகு மொழி சார்ந்த முன்னேற்றங்களை முன்னெடுக்கத் துவங்கியது, பிறகு சமூக நீதியை அரசியல் மயப்படுத்தியது, பிறகு அந்த அரசியல் மயப்படுத்தலின் மூலம் பல்வேறு வாய்ப்புகளையும், உரிமைகளையும் சட்ட வடிவமாக்கியது, பிறகு மறுக்கப்பட்ட கல்வியையும், வேலைவாய்ப்புகளையும் இயல்பான அடிப்படை சட்ட உரிமையாக்கியது.
பிறகு பொருளாதார மேம்பாடுகளை வழங்கியது, பிறகு உள்கட்டமைப்பு வசதிகளை வழங்கியது, சமூக அரசியல் தளங்களில் எல்லாத் தரப்புக்குமான அங்கீகாரத்தையும், தேடலையும் அதுவே உருவாக்கியது, இறுதியாக இன்று பெரியார் படத்தை வைத்துக் கொண்டு திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று முழக்கமிடும் ஒரு உள்முரண்பாட்டு அரசியல் எழுச்சியையும் அதுவே உருவாக்கி இருக்கிறது. இந்த உள்முரண்பாடு ஒரு மிகப்பெரிய வெற்றி அடைந்த கோட்பாட்டின் பரிணாம வளர்ச்சி என்றே பின்பு வரலாற்றில் குறிக்கப்படும்.

திராவிடம் மூன்று மிக முக்கியக் காரணங்களுக்காக உருவாக்கப்பட்டது, சமூக நீதி, மொழி வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாடு, இந்த மூன்றும் திராவிட இயக்கங்களால் தமிழக அரசியல் பண்பாட்டுத் தளங்களை வென்று விட்டிருக்கிறது, இலக்குகளை அடைந்து விட்ட எந்த ஒரு கோட்பாட்டுக்கும் நிகழ்கிற ஒரு தொய்வான நெகிழ்வான சூழலே திராவிட இயக்கங்களின் மீது இன்று சுமத்தப்படுகிற குற்றச்சாட்டுக்களின் மூலம்.

திமுகவின் அடிப்படை உறுப்பினராக இருந்த அண்ணன் திருமாவளவனைப் போன்றவர்களும், திமுகவின் சார்பில் நாடாளுமன்றத்துக்குப் போட்டியிட்ட டாக்டர் கிருஷ்ணசாமி போன்றவர்களும் இன்று தனி இயக்கங்கள் கண்டு ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் ஆற்றலாக மாறி இருப்பதும் திராவிட இயக்கங்களின், திராவிட இயக்கச் சிந்தனைகளின் நீட்சி என்றே பொருள் கொள்ளப்படும்,

உலகளாவிய ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் குரலோடு இசைந்து செல்கிற ஒரு பாதையாகவே தலித் அரசியல் இயக்கங்களின் பாதை இன்று முன்னகர்கிறது. திராவிடம் மற்றும் தலித்தியம் என்பது முற்றிலும் மாறுபட்ட வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு இலக்குகளை நோக்கிச் செல்லும் பாதை அல்ல, மாறாக ஒரே இலக்கை நோக்கிச் செல்கிற வெவ்வேறு இணைப் பாதைகள்.

ஆனால், தமிழ் தேசியம் என்கிற பெயரில் திராவிட அரசியல் மற்றும் சிந்தனைகளை எதிர்க்கிற அதிகார வேட்கையும், குழப்பவாத அரசியல் சிந்தனைகளும் கொண்ட சீமானைப் போன்றவர்களை இங்கே களைகளாகவே நாம் பார்க்க வேண்டும், அதிகார போதையில் வாய்க்கு வந்ததைப் பேசிக் கொண்டு, மேடை கிடைத்தால் போதும், "அவனை விரட்டுவேன், இவனை விரட்டுவேன், அம்மாவுக்குப் பிறந்தானா, அப்பாவுக்குப் பிறந்தானா, அவனைப் பிடித்துக் கஞ்சா வழக்குப் போடுவேன், பொம்பளை வழக்குப் போடுவேன்" என்று பினாத்திக் கொண்டு "தமிழ், தமிழ்" என்று ஒருபக்கம் கூவிக் கொண்டே தேர்தல் அறிக்கையைக் கொண்டு போய் சமஸ்க்ருத அரச்சனைத் தட்டில் அடகு வைக்கும் ஒரு அக்மார்க் பாசிச இந்துத்துவ முகமாக மாறி இருக்கும் சீமானைப் போன்ற அரைவேக்காட்டு அரசியல்வாதிகளின் திராவிட எதிர்ப்பை ஒரு பொருட்டாகக் கருதி விவாதிப்பதே திராவிட இயக்கங்களுக்கும், தந்தை பெரியாரின் சமூக நீதிக் கனவுகளுக்கும் செய்கிற துரோகம் என்பதால் அவரையும் அவரது கட்சியையும் நாம் புறக்கணிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

கடும் கோடையைப் போல அச்சுறுத்திய பார்ப்பனீய வெம்மையின் தாக்குதல்களில் இருந்து தமிழ்ச் சமூகத்தைத் தனது படர் நிழலால் அழிந்து விடாமல் காத்து வளர்த்த பெருமரம் போன்ற திராவிடத்தின் நிழலில் வசதியாக அமர்ந்து கொண்டு அந்த மரத்தை வேரோடு வீழ்த்துவது எப்படி என்று ஆளாளுக்குப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இனி இழக்க ஏதுமில்லை என்கிற வெற்றியின் களிப்போடு திராவிடம் அவர்களை வேடிக்கை பார்க்கிறது.

# # # சோதனைப் பயணத்துக்கே இவ்வளவு பேச்சுன்னா, தெரியுதா பவரு.....என் டொங்குகளா....... # # #

திமுக என்றால் என்ன ?? கலைஞர் கருணாநிதி என்பவர் எப்படி பட்ட தலைவர்

திமுக என்றால் என்ன ?? கலைஞர் கருணாநிதி என்பவர் எப்படி பட்ட உன்னதமான தலைவர் என்பதை மாற்று கட்சிகளில் உள்ள இன்றைய இளைய தலைமுறை தெரிந்து கொள்ள இந்த செய்தியை முழுமையாக படிக்க வேண்டும் .
மன்னிக்கனும் கொஞ்சம் நீளமானதுதான் .

‪#‎கலைஞா்‬
அவருடைய அரசியல் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய துரதிர்ஷ்டம் இருக் கிறது. அவருடைய காலத்தில் அவருக்கு சமமாக அரசியல் செய்யக்கூடியவர்கள் யாரும் இல்லை என்பதுதான் அது.
மனுஷ்யபுத்திரன்

போர்வாள் அட்டகத்தி ஆன கதை! - - ப.திருமாவேலன்,

போர்வாள் அட்டகத்தி ஆன கதை! - - ப.திருமாவேலன்,

‘தம்பி’ பிரபாகரனை தமிழ் ஈழத்தின் அதிபராக்கப் போராடிவந்த வைகோ, இன்று ‘கேப்டன் பிரபாகரன்' படத்தில் நடித்த விஜயகாந்தை, தமிழ்நாட்டின் முதலமைச்சராக்கத் துடிக்க ஆரம்பித்திருக்கிறார். சயனைட் சாப்பிடுவதற்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

1967-ம் ஆண்டில் பேரறிஞர் அண்ணாவை ஆட்சியில் அமர்த்த, விருதுநகர் வீதிகளில் கல்லூரிப் பருவத்தில் கால்கடுக்க அலைந்த வைகோ, 50-வது பொதுவாழ்வு பொன்விழாவைக் கண்ட பிறகு வேகாத வெயிலில் விஜயகாந்தை முதலமைச்சராக்க அலையத் தயாராகிவிட்டார். அழகாக ஆரம்பித்த பயணம் அதலபாதாளத்தில் விழுந்திருக்கிறது. தவறுகளைச் சத்தமாகவும் நல்லவற்றை மறைமுகமாகவும் செய்யும் இயல்புகொண்ட வைகோ, தே.மு.தி.க-வுக்கு விருப்பம் உள்ள பி.ஆர்.ஓ-வாக மாறிவிட்டார்.

மதிமுக உருவான பின்னணியும் கோபாலின் கபட நாடகங்களும்

- Antony Parimalam

ராஜீவ் கொலைக்கு பின் நடந்த தேர்தலில் மிகப்பெரிய தோல்வியை கண்ட திமுகவுக்கு அடுத்த பேரிடியாக இறங்கியது திமுகவில் இருந்து மதிமுக பிரிந்த சம்பவம். இது நடந்தது 1993 ல்.

அதற்கு காரணமாக கூறப்பட்டது நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசின் உளவுத்துறை ஜெயலலிதா தலைமையிலான தமிழக காவல்துறைக்கு அனுப்பிய கடிதமும் அதைதொடர்ந்து நடந்த சம்பவங்களும்.

இந்த சம்பவம் நடந்த போது வைகோ திமுக வின் மாநிலங்களவை உறுப்பினர். அதாவது 1978 முதல் 1996 வரை தொடர்ச்சியாக 18 ஆண்டுகள் திமுக வின் உறுப்பினராக இருந்தார்.