Saturday, September 29, 2018

புத்தர் நபியா - Lafees

பொறுப்புதுறப்பு:

* இலங்கையில் தமிழ் சமூகத்தில், புத்தரும் ஒரு நபி என்ற கருத்தாக்கம் மேலேலுந்துள்ளது. தமிழ்நாட்டிலும் திருவள்ளுவர் ஒரு நபி என்ற உறையாடல் நீண்ட காலமாக உள்ளது.

* இது கட்டுரையாளரின் சொந்த கருத்து.

* உங்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தால் கீழேயுள்ள கட்டுரையாளரின் பேஸ்புக் லிங்கில் விவாதிக்கலாம். ஏற்கனவே பலர் விவாதித்து கொண்டிருக்கின்றார்கள். நல்லதொரு உரையாடல்.

---

Lafees Shaheed
20180930

புத்தரை ஒரு நபி என்று கூறி இருக்கிறார், உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீத். பொதுவாக நான் முபாரக் மெளலவி போன்றவர்களை பொருட்படுத்துவது இல்லை. ஏனெனில் ஒரு கருத்தை முன் வைப்பதில் உள்ள சமூகம் சார்ந்த பொறுப்புணர்ச்சியுடன் இவர்கள் செயலாற்றுவதில்லை. ஒரு கருத்தை முன் வைக்கும் பொழுது அனுமானம், பிரதியட்சம், தர்க்கம் எனும் ஒழுங்கில் அல்லது இவற்றில் ஒன்றில் தங்கி எழுதவும் முடியும். ஆனால் அதனை விட முக்கியமானது ஒரு கருத்தை முன் வைக்கும் சூழல், அது பெரும் அர்த்தம், உடைவு மற்றும் இன்னொரு சூழலில் அது பெரும் வித்தியாசமான அர்த்த தளங்கள் இன்னபிற போன்றவை.

மேற்போந்த வகையில் முபாரக் அப்துல் மஜீத்தின் புத்தர் குறித்த கருத்துக்களை பரிசீலித்தால் கருத்தாக்க அளவில் அதற்கு ஒரு அறிவியல் மதிப்பு இருப்பதாகவும் ஆனால் இலங்கை சூழமைவு - Context - சார்ந்து அது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் நாம் கணிக்கலாம்.

இறைத்தூதர்கள் அனுப்பப்படாத சமூகங்கள் எதுவும் இல்லை எனும் பொதுவான அல் குர்ஆன் வசனத்தையும் அன்பியா அத்தியாயம் 85 ஆவது வசனத்தில் குறிப்பிடப்படும் துல்கிஃப்ல் (அலை) எனும் நபி குறித்த குறிப்பான கருத்தையும் தனது ஆய்வுக்கு ஆதாரமாக முன் வைத்திருக்கிறார், முபாரக் அப்துல் மஜீத்.

அதாவது பொதுவாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பட்ட நபிமார்களை குறித்து மட்டுமே நாம் அறிவோம், ஆனால் உலகில் ஏனைய பிரதேசங்களுக்கும் நபிமார்கள் அனுப்பப்பட்டு இருக்கிறார்கள், துல்கிஃப்ல் அந்த வகையில் இந்திய உப கண்டத்திற்கு அனுப்பப்பட்ட நபி அவர் பெயரின் அர்த்தம் கபிலவஸ்துவை சேர்ந்தவர் என்பது தான், இது புத்தரை குறிக்கிறது ஆக புத்தர் ஒரு நபி என்பது தான் முபாரக் மெளலவியின் கருத்தின் சாரம்.

நல்லது, இவற்றை நாம் ஓரளவுக்கு திறனாய்வு ரீதியாக பரீசிலிக்கலாம். ஏனெனில் முபாரக் மெளலவியின் கருத்துக்கு ஒரு அறிவியல் மதிப்பு இருக்கிறது. ஏலவே பேராசிரியர் முஹம்மத் ஹமீதுல்லாஹ் எனும் ஆய்வாளர் துல்கிஃப்ல் (அலை) எனும் பெயரின் அர்த்தம் சார்ந்து அது புத்தரை குறிக்கலாம் என்று அனுமானம் செய்திருக்கிறார். இந்த வகையான மொழியியல் ஆய்வுகள் சர்வதேச புலமைத்துவ வட்டாரங்களில் கவனத்தில் கொள்ளப்படுபவையே.

ஆனால் கலாநிதி முஹம்மத் ஹமீதுல்லாஹ் தனது கருத்தை ஒரு அனுமானம் அளவில் மட்டுமே கூறி இருக்கிறார். முபாரக் அப்துல் மஜீதோ தனது கருத்தை ஒரு முற்றுண்மை என்பதாக முன் வைக்கிறார். அதாவது புத்தரும் ஒரு நபி என்று நாம் நம்ப வேண்டுமாம்.

ஷரீஆ ரீதியில் இது ஏற்புடைய வாதம் அல்ல என்பது ஒரு புறமிருக்க இலங்கை Context இல் இது தரும் அர்த்தம் விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தி விடலாம். இதனையும் கொஞ்சம் பரிசீலிக்கலாம்.

இலங்கையின் தற்போதைய சமூக சூழலை பெரிய அளவுக்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். பேரினவாதம் சிறுபான்மை மக்களை - குறிப்பாக முஸ்லிம்களை - அச்சுறுத்தி வருகிறது. முஸ்லிம்களை பொறுத்தவரையில் பேரினவாதத்தின் வெறுப்பரசியல் இரண்டு வகையான அடித்தளத்தில் தான் பிரதானமாக நிலை கொண்டிருக்கிறது.

1. முஸ்லிம்கள் வந்தேறி குடிகள். அவர்களை இலங்கையின் பூர்வ குடிகளாக கருத முடியாது.

2. சிறுபான்மை முஸ்லிம் சமூகம் பெருன்பான்மை சிங்கள சமூகத்தினை விடவும் அதிக நலன்களையும், சலுகைகளையும், உரிமைகளையும் அனுபவித்து வருகிறது.

இந்த வாதங்களை வைத்து தான் பேரினவாதம் தன்னுடைய ஆள் திரட்டலை செய்து வருகிறது.

இத்தகைய விரோதமான சூழலில் பெருன்பான்மையினரின் மதமான பெளத்தத்தின் நிறுவனரை நாம் நபி என்று கூறுவது எவ்வகையான விளைவுகளை ஏற்படுத்தும்?

ஏலவே பெருன்பான்மை இன மக்களின் உரிமைகளை நாம் பறித்து வருவதாக பேரினவாதம் பிரசாரம் செய்து வரும் நிலையில் முஸ்லிம்கள் அவர்களுடைய மத நிறுவனரை கூட உரிமை கொண்டாடுகிறோம் என்று தவறான அர்த்தம் இதன் மூலம் உருவாகாதா?

வந்தேறி குடிகளான முஸ்லிம்கள் உரிமைகளை, சலுகைகளை மட்டுமின்றி எமது மதத்தையும் ஆக்கிரமிக்கிறார்கள் என்று பாசிஸ்டுகள் பேசிட இது வழி வகுக்காதா?

ஒரு அனுமானத்தினை பொது மன்றத்தில் முன் வைத்து வெறுப்பை வளர்ப்பது தான் சரியான அரசியல் நிலைப்பாடா?

இதனால் தான் நாம் முபாரக் மெளலவியை பொறுப்பற்று கருத்துதிர்ப்பு செய்பவர் என்கிறோம். ஒரு கருத்து உருவாக்கும் சமூகப் பதிவு முக்கியமானது. புத்தர் விவகாரத்தில் முபாரக் மெளலவியின் கருத்துக்கள் உருவாக்கும் சமூகப் பதிவுகள் முஸ்லிம்களுக்கு எதிராகவே மாறிவிடும். இதனை நாம் கட்டாயமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

இறைத்தூதர்கள் அனுப்பப்படாத சமூகங்கள் எதுவும் இல்லை எனும் அல் குர்ஆனிய கண்ணோட்டத்தை பொறுத்தவரையில் ஷெய்க் முஹம்மத் அப்துல்லாஹ் தர்ராஸ் முன் வைக்கும் அவதானம் தான் சரியானது. தர்ராஸ் கூறுவார் :

'இந்த வசனம் ஏனைய மதங்கள், தத்துவங்கள் தொடர்பில் ஒரு அணுகுமுறை சார்ந்த வழிகாட்டலை முஸ்லிம்களுக்கு அளிக்கிறது. அதாவது ஏனைய மதங்களின், தத்துவங்களின் கருத்துக்களை சில வேளைகளில் அது முன் சென்ற நபிமார்களின் தூதுத்துவத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று கண்ணியமாக நோக்கிட இது வழிவகுக்கிறது. தஃவா கண்ணோட்டத்தில் இது முஸ்லீம்களை நேர்மறையான எண்ணம் கொண்டவர்களாக மாற்றுகிறது '

புத்தரின் கருத்துக்களில் இருந்து நாம் பயன் பெற மேற்போந்த ஷெய்க் தர்ராஸின் கண்ணோட்டத்தை சுவீகரித்துக் கொள்வது போதுமானது. இதனை தாண்டி புத்தரை நபி என்று கூறும் அனுமானத்தினை முன் வைத்து எமது சூழலின் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பை நாம் அதிகரித்து விட வேண்டாம்.

முபாரக் அப்துல் மஜீத் எதிர்காலத்தில் இவற்றை எல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் இது போன்ற கருத்து முன் வைப்புகளின் பிரதிபலிப்பை அனுபவிப்பது அவர் மட்டுமே அல்ல. மாறாக சமூக அதற்கு கொடுக்கும் விலை மிக அதிகமாக இருக்கும்....!

#இங்கிருந்து அறிவோம்
#பாதையை_செப்பனிடல்

https://m.facebook.com/story.php?story_fbid=1092859674226127&id=100005063134008

Thursday, September 27, 2018

சட்டப்பிரிவு 497 பற்றி - Karl max

பொறுப்புதுறப்பு:

* "சட்டப்பிரிவு 497 நீக்கம்" - உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றிய மாறுபட்ட பார்வை.

* இது கட்டுரையாளரின் சொந்த கருத்து, அதனால என்னிடம் வந்து யாரும் சண்டை போடாதீர்கள்

* உங்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தால் கீழேயுள்ள கட்டுரையாளரின் பேஸ்புக் லிங்கில் விவாதிக்கலாம். ஏற்கனவே பலர் விவாதித்து கொண்டிருக்கின்றார்கள்.

-----
Karl Max Ganapathy
20180927

“ஒரு திருமணமான பெண்ணுடன் (அவளுடைய கணவனது சம்மதம் இல்லாமல்) வேறொரு ஆண் உடலுறவு வைத்துக்கொண்டால், அதை குற்றமாகக் கருதி அவனுக்கு தண்டனையளிக்கவேண்டும்” என்பதுதான் சட்டப்பிரிவு 497 ன் சாராம்சம். இத்தகைய பிறழ் உறவில் ஈடுபடும் பெண்ணுக்கு இதில் தண்டனை கிடையாது என்பது முக்கியம்.

இப்போது இந்த சட்டப்பிரிவு 497ஐ தான் உச்சநீதிமன்றம் செல்லாது என்று அறிவித்து நீக்கியிருக்கிறது. இந்த விக்டோரியா காலத்து சட்ட நடைமுறை ஏன் வந்தது என்றால், ஒரு பிறழ் உறவில் பெண்ணை seduce செய்வபவனாக ஆணை அது வரையறுக்கிறது. அதனால் அவன் குற்றவாளி. நடந்த பிறழ் உறவில் ஆணின் தூண்டுதலுக்கு ஆளாகி பாதிப்புக்கு உள்ளானவள் மட்டுமே பெண் (victim), அதனால் அவளுக்கு தண்டனை கிடையாது என்பதே இதுவரை இருந்து வந்த சட்டம்.

“கணவன் ஒன்றும் மனைவிக்கு முதலாளி அல்ல” என்றும் இது ”ஒரு பெண் என்ற அடிப்படையில் அவளது கவுரவத்தைக் குலைப்பதாக இருக்கிறது” என்கிறார் தலைமை நீதிபதி. அவர் சொல்வது உண்மைதான். பெண்ணை சொத்தாகப் பார்க்கும் பழைய நடைமுறையே இந்த சட்டத்தின் அடிப்படை. இந்த சட்டம் நீண்ட காலத்திற்கு முன்பே நீக்கப்பட்டிருக்கவேண்டியது. இப்போது நீக்கப்பட்டிருப்பதை வரவேற்கவேண்டும்.

மேலும் இந்த சட்ட நீக்கம் அவளது உரிமையை அங்கீகரிக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் அவளது செய்கைக்கு அவளுக்கு இருக்கும் பங்கையும் உறுதி செய்கிறது. இந்த சட்டப் பிரிவு நீக்கத்தை ஏதோ கள்ள உறவில் ஈடுபடத் தூண்டும் உத்வேகம் போல புரிந்துகொள்ளவேண்டியதில்லை. மேலும் கல் தோன்றி மண்தோன்றிய காலத்திலேயே கள்ள உறவும் தோன்றியது என்பதுதான் மனிதகுல வரலாறு.

நவீன காலத்தில் என்றல்ல, பழங்காலத்திலும் கூட seduce செய்வது என்று வந்தால் ஆணை விட பெண்கள்தான் தீவிரமாக இருந்திருக்கிறார்கள் என்பதே இதிகாசங்களின் வழி நாம் புரிந்துகொள்வது. பிறகு எதற்கு இந்த மாதிரி ஒரு சட்டம் வந்திருக்கும் என்றால், நெருங்குபவனை பயமுறுத்தி துரத்தி விடுவதற்குத்தான் என்றே நினைக்கிறேன். அவளைக் கண்காணிப்பதை விட இது சுலபம் என்றும் நினைத்திருக்கலாம். அதன் மூலம் மனைவி மீது ஒரு கட்டுப்பாட்டை கணவன் சாதித்துக்கொள்ள முடியும்  என்பதுதான் நோக்கம். நமது மத கோட்பாடுகளுக்கும் இதுவே அடிப்படை. மதத்திலிருந்துதானே சட்டங்கள் வருகின்றன.

இன்றைய சமூக நிலையோடு வைத்து பொருத்திப் பார்த்தால், இதைப் போன்ற சட்டப்பிரிவு மாற்றங்கள், நீக்கங்கள்  நிறைய செயல்படுத்த வேண்டியிருக்கிறது என்பதே உண்மை.

நாம் தினமும் நாளிதழ்களில் படிக்கும் கள்ளக்காதல் கொலைகளுக்கு, குறிப்பாக கணவன்கள் கொல்லப்படுவதில், “மாட்டிக்கொண்டால் ஆணுக்கு தண்டனை” எனும் அச்சத்திற்குப் பங்கிருக்கிறதா என்பது ஆராய்ச்சிக்கு உரியது. “நமது கள்ள உறவு எனது கணவனுக்குத் தெரிந்துவிட்டது, அவன் நீதிமன்றத்தை நாடினால் உனக்கு தண்டனை நிச்சயம்...” என்று தான் உறவில் இருக்கும் இன்னொருவனிடம் அந்தப் பெண் சொல்லும் சூழலை கற்பனை செய்து பாருங்கள்.

Manipulate செய்வதில் குறிப்பிட்ட உயரத்தை அடைந்திருக்கும் இன்றைய பெண் சமூகத்தின் ஒரு பகுதி, தனது கணவனுக்கு எதிராக, தனது காதலனை ஏவி விடும் மூர்க்கத்தில் இந்த தீர்ப்பு உடைப்பை ஏற்படுத்தியிருப்பதாகவே நான் பார்க்கிறேன். பெண்களின் கவுரவத்தைக் காப்பாற்றும் அதே நேரத்தில், தொடர்புடைய ஆண்களின் உயிரைக் காப்பாற்றுவதிலும் இந்த சட்ட நீக்கம் பெரும் பங்காற்றும் என்பதே கள எதார்த்தம்.

இதே போல பிறழ் உறவு உள்ளிட்ட மற்றைய குற்றங்களிலும், அதில் பங்கு பெரும் பெண், தான் பெண் என்பதாலேயே தன்னை பாதிக்கப்பட்டவளாக முன்வைக்கும் தன்மையைத் தடுக்கும் விதத்தில் நிறைய மாற்றங்களைக் கொண்டுவர வேண்டியதும் அவசியம். அந்த வகையில் இந்த சட்டப்பிரிவு நீக்கம் பெரும் பாய்ச்சல்!

https://m.facebook.com/story.php?story_fbid=2143361299030715&id=100000705985759

Wednesday, September 26, 2018

ரஃபேல் ஃப்ராட் - ராஜ ராஜேந்திரன்

ரஃபேல் ஃப்ராட்
±++++++++++++++++
(நன்றி: ராஜ ராஜேந்திரன்)

ரஃபேல் விமானங்களைத் தயாரித்துத் தரும் தஸ்ஸோ - ஃப்ரான்ஸ் நிறுவனத்தைப் பற்றி, இன்றைய (26/09/2018 புதன்) தமிழ் இந்துவின் கடைசி பக்கத்தில் ஒரு பத்தியைப் போட்டிருந்தார்கள்.  பெருவியப்பைத் தந்தது !

ஸ்வீடனின் போஃபர்ஸ் பீரங்கிகளைப் போலவே, தஸ்ஸோ தயாரிப்புகளும் அட்டகாசமானவைகளே என்கிறது கட்டுரை.  போக 100 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தை பெற்ற கம்பெனி தஸ்ஸோ.  ஜாகுவார், மிராஜ் 2000 போன்ற அட்டகாசமான போர் விமானங்களை, ஏற்கனவே அவர்களிடமிருந்துதான் நாம் வாங்கி வைத்திருக்கிறோம்.  மிராஜ் 2000 விமானங்கள் கார்கில் போரில், செம கெத்து காட்டியது என்பதெல்லாம் வரலாறு.  ஆக, ரஃபேல் விமானங்கள் மிகத் திறன்வாய்ந்ததாகத்தான் இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகங்களுமில்லை, ஆனால் ;

ரஃபேல் டீல் பற்றி, இதுவரை நான் வாசித்த பல ஜாம்பவான்களின் ஆதாரப்பூர்வக் கட்டுரைகளிலிருந்தும், திருட்டுக் கம்மனாட்டி பக்தாள்களின் முட்டுக்களிலிருந்தும் என்ன தெரியவருகிறது எனப் பார்ப்போம் !

1.) 2014-ன் ஆரம்பம்.  ஃப்ரான்ஸ் தஸ்ஸோவின் ரஃபேல் போர் விமானம் ஒன்றை தலா 526 கோடி என்று பேரம் பேசி முடிக்கிறது காங்கிரஸ் அரசு.  மொத்தம் 126 விமானங்களுக்கான ஆர்டர் கொடுக்கலாம் என முடிவெடுக்கப்படுகிறது ! 

அதில் 18 விமானங்களை உடனடியாக டெலிவரி செய்யவேண்டும், மீதமிருக்கும் 108 விமானங்களை இந்தியாவில் வைத்து, இந்திய அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்சுடன் கூட்டு சேர்ந்து, தஸ்ஸோ வடிவமைத்து தரும். ஆக, 526 கோடிகள் x 126 = 67000 கோடிகள் மதிப்புள்ள ஒப்பந்தம் !  

தஸ்ஸோவுடனான மெயின் இந்தியப் பார்ட்னர் H A L மட்டுமே !  ஆக்சுவலா இதுதான் பக்காவான மேக் இன் இந்தியா திட்டம்.  ஜப்பானின் சுசூகி எப்படி மாருதியுடன் இணைந்து, இந்தியாவில் கார் உற்பத்தியை பிரம்மாண்டமாகச் செய்ததோ, அதுபோன்ற ஒரு திட்டம்.  இந்தத் திட்டம் இறுதி நிலையில் இருந்த பொழுது, இந்தியப் பொதுத் தேர்தல் அறிவிக்கப்படுகிறது !

2.) ஒப்பந்தங்கள் இறுதிசெய்யப்படாத நிலையில், 2014- மே, பிரம்மாண்ட வெற்றியைப் பெற்று மோடி ஆட்சிக்கு வருகிறார்.  இறுதிசெய்யப்படாத அந்த ஒப்பந்தங்கள் அப்படியே கைவிடப்பட்டு, தேவைப்பட்டால் பேசுகிறோம் என்றிருக்கிறது இந்தியப் பாதுகாப்புத் துறை.  ஒரு லட்சம் கோடிகள் வரை புரளக்கூடிய ஒப்பந்தம்.  உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட கமிஷனே பத்தாயிரம் கோடிகளுக்கு மேல் வரும், ருசிகண்ட திருட்டுப் பூனைகள் விடுமா என்ன ?

3.) ஃப்ரான்ஸ்சுக்கு மோடியுடன் பல தொழிலதிபர்கள் செல்கிறார்கள், அதிலொருவர் அனில் அம்பானி.  தஸ்ஸோவுடன் ஃப்ரெஷ்சாக டீல் பேசப்படுகிறது.  டீல் இறுதியும் செய்யப்படுகிறது. 

அதாவது, “ நிம்மில் ரொம்போ லேட் பண்ணிட்டான் மோடிஜி, புராணா ரேட் மே நம்மில் கொட்க்க முட்யாத் “ என்றாராம் தஸ்ஸோ சேட். 

அதிர்ச்சியுற்ற தேஷ் பக்த் (சுருக்கமாக தே ப) மோடி, ” அரே ஹம் கரீப் மாத்தாக்கி லட்கா, பாத்து செய் சேட் “ என்று அவன் தாள் பணிந்தாராமாம்.  மிகவும் சலித்துக்கொண்டே தஸ்ஸோ சேட், சரி, சரி ஒரு ஃப்ளைட் இப்போ 1670 கோடி ஆவும்.   ஆனா அந்த ரேட்டுக்கு நம்மிள் நிம்மில்க்கு கொடுக்கணும்ன்னா வோ ஹெச் ஏ எல் ச்சோர் கமினே ஹமாரா பார்டனர் இல்லே, இதோ பரோட்டோ சூரி மாதிரி இருக்காம் பார், இந்த அனில்தான் நம்ம இந்திய பார்ட்னர், டீக்ஹை “ என்றிருக்கிறார்.

இப்படியாக நமக்கு கதையைச் சொல்லிக் கொண்டிருப்பது பாதுகாப்புத் துறை அமைச்சர் சீ. நிர்மலா !

உலகில் என்றுமே கொள்வோருக்குத்தான் மரியாதை அதிகம்.  நாம் நினைப்போம் படைப்பவருக்கு என்று.  கிடையாது.  கேரளாக்காரன் பூராப்பயலும் காய்கறிலருந்து, பால், முட்டை, மீன் என்று எல்லாவற்றுக்கும் நம்மளத்தான் நம்பிக் கிடக்கான் என்பது அபத்தமான ஒன்று.  அது ஊளைத் தமிழ்த் தேசிய முட்டாள்கள் சிலர் வைக்கும் கூற்று.  அவன் டிமாண்ட்.  நாம் சப்ளையர்ஸ்.  அவனுக்குத்தான் மதிப்பு அதிகம்.  நாம் நியாயமான விலையில், தரமான பொருட்களை, எப்போது கேட்டாலும் சப்ளை செய்தால் மட்டுமே நம்மிடம் தொடர்ந்து அவன் வாங்குவான்.  நம்மைவிட உயர்தரத்தில், விலையையும் குறைத்து, அதேபோல் அவைகளை எப்போதுமே தருவானெனில், மிக எளிதாக நம்மை உதறிவிட்டு, டிமாண்ட் அவன் பக்கம் சென்றுவிடும்.  இதுதான் வணிக உலக யதார்த்தம் ! 

4.) ஆக, ரஃபேல் எங்கே புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கும் இந்திய அரசு ஆர்டரை, வேற்று நாட்டு போட்டிக் கம்பெனிக்கு கொடுத்து விடுமோ என்றுதான் அஞ்சியிருக்குமே அன்றி, மாமி சொன்ன தஸ்ஸோ சேட் கதையெல்லாம் முழுப் பொய்.  ஆனால் வெட்கமேயில்லாமால் ஒரு விமானத்துக்கு 1144 கோடிகளுக்கும் மேல் விலையைக் கூட்டி வைத்துவிட்டு, அவர்கள் சொல்லும் ஒரே ஒரு காரணம், “ இப்ப டீல் என்னன்னா லேட்டஸ்ட் வெர்ஷன் & ஃபுல்லி லோடட் ஃப்ளைட் ” 

என்ன தஸ்ஸோ சேட் டேங்க் ஃபுல்லா பெட்ரோல நிரப்பித் தர்றாராமா ? என்று கேட்டால்..... உஸ்ஸ்ஸ் சவுண்டா பேசாத, பாகிஸ்தான், சைனா உளவாளி எவனாவது பக்கத்துலருந்தா ராணுவ மேட்டர், லீக்காகிடப் போகுது, காதைக் கொண்டா, ஏவுகணை, கன், புல்லட்டோட ஃபுல் லோடா வரப்போகுது, காலரைத் தூக்கு காலரைத் தூக்கு, போல்லோ பாரத் மாத்தாக்கீ என்று திசை திருப்புகிறதுகள் காவிக் கூட்டம் !

5.) எந்தவித முன் அனுபவமும் இல்லாத ரிலையன்ஸ் டிஃபன்ஸ்க்கு, தன் போர்விமான பாகங்களைக் கொடுத்து அசெம்பிள் செய்ய எப்படி நூற்றாண்டு பாரம்பரிய நிறுவனமான தஸ்ஸோ முன் வரும் ?  அதுவும் லட்சக் கோடிகள் டீலுக்கு, ஐந்து லட்ச ரூபாய் முதலீடாகக் கொண்ட, எந்தக் கட்டுமானத் தளவாடங்களுமற்ற ஒரு கம்பெனிக்கு ??  இங்கதான் மோடிஜி தம் திறனை முழுக்க வெளிப்படுத்தியிருக்கிறார்.

6.)  ” அரே தஸ்ஸ்சோ, உனக்கு காங்கிரஸ் கொடுத்தது ஜஸ்ட் 526 கோடி, நம்மிள் மேக் இன் இந்தியா, ஹமாரா இந்தியா, மேரா பாரத் கொடுப்பது 1670 கோடி.  ஹெச் ஏ எல், புச் ஏ எல்லாம் வேண்டாம்.  இதோ நம்ம குஜராத்தி அனில்.  திவால் கண்டிஷன்ல இருக்கான்.  நானும் ஜமைக்கா ஓடப்போறேன் லுக் அவுட் நோட்டிஸ தூக்குங்கிறான்.  போதும்.  எத்தனை பேரைத்தான் ஓட விடுறது ?  இவன இந்திய பார்ட்டனரா ஏத்துக்கிட்டு கையெழுத்தப் போடு.  எந்த ஏரோப்பிளேனையும் நீ இந்தியாவுல செஞ்சு ஒண்ணும் நொட்ட வேணாம்.  எல்லாத்தையும் ஒங்கூர்லருந்தே செஞ்சு அனுப்பு.  பாதுகாப்புத்துறைக்கு நாங்க வச்சிருக்கிற அல்லக்கை ஒண்ணு, தன்னோட பாடி லேங்வேஜ வச்சே எல்லாத்தையும் சமாளிச்சுக்கும் “  இப்படித்தான் நடந்திருக்கும் என்பதுதான் நாம் வைக்கும் குற்றச்சாட்டு.  அதற்காகத்தான் மேரா பி எம் ச்சோர் ஹைன்னு கைல பச்சைக் குத்தி வைரலாக்கினோம் !

7.)  தே பக்கள், முழுக்க முழுக்க இது ராணுவ ரகசியம், நாம எல்லாத்தையும் வெளிப்படையா பேச முடியாது, கூடாது, காங்கிரஸ் டீல் 4 ஜி தலைமுறை ஃப்ளைட்டுன்னா, நாங்க டீல்போட்டது 5 ஜி தலைமுறை ஃப்ளைட், ஃபுல்லி லோடட், சகல ஏவுகணைகள் பொருத்தப்பட்டு......அய்யய்யோ ஒளறிட்டனே, ஒளறிட்டனே இப்படில்லாம் நோண்டி நோண்டி கேட்டு நாட்டு பாதுகாப்பு மேட்டர்ல விளையாடுறீங்களே நீங்கல்லாம் ஆன்ட்டி இண்டியன்ஸ், என்று வழக்கம் போல், நம் மேலேயே குற்றம் சாட்டிவிட்டு ஓடி ஒளிகிறதுகள் :(

8.)  சரிப்பா அந்த டுபாக்கூர் அனில் ? 

அவர டுபாக்கூர்ன்னா உம் நாக்கு அழுகிப் போகும்.  நாட்டுக்காக தன் குடும்பத்தையே அர்ப்பணித்த நிறுவனம் அது.  தொழில் செய்யறதுல அவங்களுக்கு இல்லாத அனுபவமே இல்ல.  கப்பல் கட்டற கம்பெனி வச்சிருக்கிற ஆளுக்கு, ஃப்ளைட் கட்டத் தெரியாதா ?  போவியா.  இப்படி இருக்கிறது பானுகோம்ஸ்களின் முட்டு !

9.) 2 ஜி வழக்கில், முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்கிற வழக்கமான நடைமுறையில் விட்ட டெண்டரில் ஆ.ராசா, தன் விருப்பப்பட்ட கம்பெனிகளுக்குச் சாதகமாக, டெண்டர் தேதியை முன்னமே அவர்களுக்குச் சொல்லி..... (அல்லது) இவரே பினாமி கம்பெனிகளை ஏற்பாடு செய்து, அந்த அலைக்கற்றை உரிமங்களை அவர்களுக்குச் சகாய விலையில் தந்துவிட்டார்.  இதனால் நாட்டுக்கு இத்தனை லட்சம் கோடிகள் இழப்பு.  போக, சில டுபாக்கூர் கம்பெனிகள் ரகசியமாக பாகிஸ்தான், சைனாவுடன் தொடர்பு கொண்டவைகள்.  இதனால் நாட்டுப் பாதுகாப்பு நாசமாகப் போகும் என்றெல்லாம் தே ப முலாம்கள் பூசி, ஓலமிட நாம் மதி மயங்கி, அவன்கள் கூப்பாடு போட்டதையெல்லாம் உண்மையென நம்பிக் கிடந்திருக்கிறோம்.  உச்சநீதிமன்றமும் இந்த ஏலமுறையில் போதிய டெக்னாலஜி அறிவின்றி, அந்த உரிமங்களையெல்லாம் ரத்து செய்து மறு ஏலத்திற்கு ஏற்பாடு செய்தது.  ஆனால் இன்றைய நாள் வரை, அவன்கள் சொன்ன அந்த லட்சம் கோடிகளெல்லாம் வரவு வந்ததே இல்லை !  இதில் ஊழலே இருந்திருக்காது என்று சொல்ல வரவில்லை.  ஆனால், லட்சம் கோடி ஊழல் என்றே மிகக் கேவலமான ஒரு பொய்யைச் சொல்லி மக்களை முட்டாளாக்கிய ஒரு கும்பல், அவர்களுக்கு ஒத்துழைத்த ஊடகங்கள், இன்று பகிரங்கமாக Excess 1144 Crores X 126 Flights = 1 லட்சத்து 44 ஆயிரம் கோடிகளை, அப்படியே ஊழல் செய்து, மோடி அரசு வாயில் போட்டுக்கொண்டிருப்பதையோ, ஒரே ஒரு விழுக்காடு கூட போர் விமானத் தயாரிப்பில் அனுபவமற்ற, அனில் அம்பானியை தஸ்ஸோ கூட்டாளியாக நியமிக்கப்பட்டிருப்பதையோ உரத்த குரலில் பேச (குறைந்தபட்சம் அர்னாப் வாய்ஸ்சிலாவது) வேண்டியவர்கள், பம்மி, பலவீனமான குரலில், ஊழலா, அன்னிய நாட்டுச் சதியா, காங்கிரஸ் அரசியலா என்பதைக் கேட்க சகிக்க முடியவில்லை !

10.) ஆக, நாட்டுப்பற்று, இந்துமதப் பாதுகாப்பு, எல்லையில் ராணுவ வீரர்கள் என்றெல்லாம் ஜல்லியடிக்கும் தே பக்கள், ஊழலால் 70 வருட சுதந்திர இந்தியா பாழ்பட்டுக் கிடப்பதாய் புலம்பும் நடுநிலை முகமூடிக் காவிகள், இந்த வெளிப்படையான ரஃபேல் பேர ஊழலில், முகம் வெளிறி, தத்தக்கா பித்தக்கா என்று முட்டுக் கொடுத்து வருவதை நாம் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  எங்கே எவனோ ஒருவன், ரஃபேல் விமான பேரத்தில் ஊழலில்லை என்று எதைச் சொல்லி அடித்தாலும், இவன்கள் அங்கு போய் பெருமூச்சு விட்டபடி ஆனந்தக் கண்ணீர் வடிப்பதைப் பார்த்தால், அதுகள் மீது பரிதாபம்தான் பிறக்கிறது.  இவ்வளவு பெரிய நாட்டுப் பாதுகாப்பு வர்த்தகத்தில், நாடாளுமன்ற நிலைக்குழு ஒப்புதல் இல்லாமல் மோடி தன்னிஷ்டத்துக்கு பேரம் செய்திருப்பதே மாபெரும் தவறு எனும்போது, ராணுவ ரகசியம் என்று மிகக் குழந்தைத்தனமான ஒரு மொண்ணைக் காரணத்தை காட்டுவதெல்லாம் மன்னிக்கவே முடியாத ஒரு குற்றம், மாபெரும் தவறு.

டெய்ல் பீஸ் :  ஒரு போர் விமானம் 526 கோடிகள்.  இவன்கள் எக்ஸ்ட்ராவாக கொடுப்பது 1144 கோடிகள்.  விமானத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக கொடுக்கிறார்கள்.  போர் விமானத்தில் எத்தனை ஏவுகணைகளை பொருத்தி விட முடியும் ?  ஏவுகணைகள் எப்படி போர் விமானத்தை விட விலை அதிகமாக இருக்கும் ?  இதெல்லாம் ராணுவபடைக்கலன்கள் பற்றியச் சிறு அறிவுமற்ற ஒரு சாமானியனின் கேள்விதான் ! 

ஆனால் பாமரன் எனக்கேத் தெரியுமளவு இவ்வளவு வெளிப்படையான ஊழலுக்கு, முட்டுக்கொடுக்கும் முட்டாளர்களை அடையாளம் கண்டுகொள்ள இந்த ரஃபேல் நமக்கு உதவுகிறது.  அடியோடு இதுகளை அகற்ற, நாளை நாட்டுக்கும் உதவப் போகிறது.

மீண்டும் நன்றி.
ராஜ ராஜேந்திரன், சென்னை-1