Sunday, December 31, 2017

பறைச்சிகள் எல்லாம் இரவிக்கை கட்டியதால் தான் துணி விலை கூடியது

கிருஷ்ணசாமி பெ கண்ணன்
Via facebook
2017-12-31

"பறைச்சிகள் எல்லாம் இரவிக்கை கட்டியதால் தான் துணி விலை கூடியது", எனப் பெரியார் சொன்னதாகச் சமூக வலைத் தளங்களில் சிலர் தவறான கருத்தைப் பரப்பி வருகின்றனர். அதற்கான விளக்கம்:

வேலூர் நாராயணன் அவர்கள் சென்னை மாநகர மேயராக இருந்த சமயம். வேலூர் நாராயணன் அவர்கள் மகனுக்கும், அமைச்சர் சத்யவாணி முத்து அம்மையார் அவர்கள் மகளுக்கும் இடையே திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருந்தது. அதனை விரும்பாமல் ஜாதிப் பெயரை சொல்லி மேயர் திட்டியதாக ஒரு பிரச்சினை வெடித்தது.

அந்தச் சூழலில் வேலூர் நாராயணன் அவர்கள் தம் பிறந்த நாள் விழாவில், தந்தை பெரியார் அவர்களை உரையாற்றிட அழைத்திருந்தார். இந்தக் கூட்டத்தின் பின்னணியை அறிந்த தந்தை பெரியார் அவர்கள், பொதுக் கூட்டத்திலேயே விவரங்களைப் போட்டு உடைத்து விட்டார்.

வேலூர் நாராயணன் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவர். அப்படியா சொல்லியிருக்க மாட்டார். ஒருக்கால் அப்படி சொல்லியிருந்தால் அவர் தி.மு.க.வில் இருப்பதற்கே லாயக்கற்றவர் என்று கடுமையாகப் பேசினார் தந்தை பெரியார்.

அக்கூட்டத்தில் பேசிய தந்தை பெரியார் அவர்கள், ஜாதியைப் பற்றிப் பேசுகிறவர் அத்தனைப் பேரும் பார்ப்பானுக்கு வைப்பாட்டி மகனே என்று கூறினார். என்னைப் பொறுத்தவரை நான் பறையனாக இருப்பதைக் கேவலமாகக் கருதவில்லை. சூத்திரனாக இருப்பதையே கேவலமாகக் கருதுகிறேன். எனக்குப் பிள்ளை இல்லை. ஒரு சமயம் பிள்ளை இருந்தால், அதுவும் பெண்ணாக இருந்தால், மாண்புமிகு சத்தியவாணி முத்து அம்மையார் மகனுக்குக் கொடுத்திருப்பேன் அல்லது சிவராஜ் மகனுக்குக் கொடுத்திருப்பேன்.

காதல் மணம் வேண்டுமென்கிற நீ இப்படி சொல்லலாமா என்று கேட்பீர்கள். காதல் ஏற்படும் முன்பே சொல்லி விடுவேன். இதேபோல் தாழ்ந்த ஜாதிப் பையன்களாகப் பார்த்து காதல் செய் என்று சொல்லி விடுவேன்", என்று சென்னை அயன்புரத்தில் நடைபெற்ற அந்தப் பொதுக் கூட்டத்தில்  (11.12.1968) பேசினார்.

மேலும் அவர் பேசுகையில், நான் பறையன் எனக் கேவலமாகச் சொன்னதாக தாழ்த்தப்பட்ட மக்களிடம் சொல்லியிருக்கிறார்கள். நான் பல தடவை இந்தச் சொல்லை சொன்னாலும், அதை ஒழிப்பதற்காக சொன்னது தான்.

எலெக்சன் நேரத்தில் இப்படியெல்லாம் செய்வது சாதாரணம். எலெக்சன் போது, "ராமசாமி நாயக்கர் பறைச்சியெல்லாம் ரவிக்கை போட்டுக் கொண்டார்கள் என்று தாழ்த்தப்பட்ட பெண்களைக் கேவலமாக சொன்னார் என்று விளம்பர நோட்டீஸ்களெல்லாம் போட்டு, தாழ்த்தப்பட்ட மக்கள் அவர் ஆதரிக்கிற கட்சிக்கு ஓட்டுப் போடாதீர்கள்", என்று வால் போஸ்டர்கள் ஒட்டி இருக்கிறார்கள்.

நான் சொன்னது உண்மைதான். நான் தாழ்த்தப்பட்ட பெண்கள் இதற்கு முன் ரவிக்கை போடக் கூடாது; போட்டால் அடிப்பார்கள். மேலே துணியே போகக்கூடாது. அப்படி இருந்த சமுதாயம் காலம் மாறுபாட்டால் எப்படி ஆகி இருக்கிறது; இன்றைக்கு ரவிக்கை இல்லாமல் பார்க்க முடியவில்லையென்று சொன்னேன்.

இதைக் கொண்டு அந்த இன மக்களை எனக்கு விரோதமாகத் தூண்டவும், நான் ஆதரிக்கின்ற கட்சிக்கு ஓட்டுப் போடாமல் செய்வதற்காகக் கிளப்பி விடப்பட்டதேயாகும்".

Isai Inban பதிவிலிருந்து .....

தரவு:
கவிஞர் கலி. பூங்குன்றன்
துணைத் தலைவர்,
திராவிடர் கழகம்.

தோழர்....  ராஜா ஜி

https://m.facebook.com/story.php?story_fbid=2031819907106161&id=100008345140039

தாசி வீட்டுக்கு போகும் கடவுள் - ஸ்ரீரங்கம் உற்சவம் - ஆபாச இந்துமதம்..

டக்ளஸ் முத்துகுமார்
Via facebook
2017-12-31

தாசி வீட்டுக்கு போகும் கடவுள் - ஸ்ரீரங்கம் உற்சவம் - ஆபாச இந்துமதம்..

இந்த நிகழ்ச்சிக்கு பெயர் பாரிவேட்டை உற்சவம். இன்னொரு பெயர் மட்டையடி உற்சவம் என்றும் சொல்வார்கள். இன்றும் திருக்கண்ணபுரம், சிறீரங்கம், கீழையூர் போன்ற முக்கிய வைணவத் திருத்தலங்களில் இந்த உற்சவத்தை கோலாகலமாகக் கொண்டாடுவார்கள்.

வருடாவருடம் மாட்டுப் பொங்கலன்றும் மறுநாளும் இந்த உற்சவம் நடைபெறும்.

குதிரை வாகனத்தில் கிளம்புகிறார் பெருமாள். மேளதாளம் முழங்குகிறது. நாதஸ்வரம் இசைக்கிறது. குதிரைமீது இரண்டு பக்கமும் கால்களை போட்டுக் கொண்டிராமல் ‘சைக்கிள் கேரியர்’-ல் நாம் உட்கார்ந்து போவோமே அதுபோல் இரண்டு கால்களையும் ஒரே பக்கத்தில் போட்டுக்கொண்டு போகிறார் பெருமாள்.

கொஞ்சதூரம் போன பிறகு... மேளம் நிறுத்தியாகி விட்டது. நாதஸ்வரத்தை எடுத்து அதற்கான துணியுறையில் போட்டு விடுகிறார் வித்வான், ஏன்?

அது தாசிகள் வசிக்கும் தெரு. அங்கே போகும்போது யாருக்கும் தெரியக்கூடாது என்று வாத்தியத்தையும் நிறுத்திவிடுகின்றனர். அங்கே போன பிறகு பெருமாளை இறக்கி வைக்கிறார்கள்.

இது உற்சவத்தில் வரும் காட்சிகள். ஏன் இந்த காட்சிகள்?

பெருமாள் கொஞ்ச தூரத்தில் இருக்கும் தாசிகள் தெருப்பக்கம் போகிறார். இவர் வெளியே போனாரே எங்கே இன்னும் காணோம் என நினைத்துக் கொண்டிருக்கிறார் பிராட்டி. இரவு ஆகிவிட்டது. ஊரெல்லாம் அடங்கிவிட்டது. அப்படியும் பெருமாள் கோயிலுக்குத் திரும்பவில்லை. இரவு முழுதும் தாசிகளுடன் தங்கியிருந்து அனைத்தையும் முடித்துவிட்டு மறுநாள் காலை ஆசுவாசமாகப் புறப்படுகிறார் பெருமாள்.

மறுபடியும் காலையில் உற்சவம் தொடர்கிறது, அதே குதிரையில் ஏறி... கோயிலுக்கு வருகிறார்.

கோயில் வாசலில் எதிரே வழியை மறித்துக்கொண்டு நிற்கிறார் பிராட்டி.

“எங்கேய்யா போயிட்டு வந்தீர்?” இது பிராட்டியின் கேள்வி.
அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் மறுபடியும் உள்ளே நுழைய மறுபடியும் தடுக்கிறார் பிராட்டி. இருவரும் எதிரெதிரே ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு நிற்க, இப்படியே நேரம் ஓடிக் கொண்டிருக்க,  அப்போதுதான் சமாதானத்துக்காக வருகிறார் அங்கே நம்மாழ்வார்.

நம்மாழ்வாரின் சமாதானத்துக்குப் பிறகு பெருமாளை உள்ளே விடுகிறார் பிராட்டி.

இதுதான் அந்த கோவில்களில் நடைபெறும் உற்சவம்.

இந்த உற்சவம் நடக்கும்போது எல்லாரும் கையெடுத்து கும்புடுகிறார்கள்.

இதில் கும்பிட என்ன இருக்கிறது?

கடவுள் என்ற காவலி பயபுள்ள மேட்டர் வீட்டுக்கு போயிட்டு வந்திருக்கு. இதை எப்படி மக்களே முட்டாத்தனமா கும்பிடுறீங்க..? அந்த அளவுக்கா உங்க உங்க மூளை மழுங்கி போயிருக்கு...

இந்து சகோதரர்களே.. உங்க வீட்டுல இப்படி யாராவது போய்ட்டு வந்த இப்படித்தான் கும்பிட்டு கெடப்பீங்களா...
கொஞ்சமாவது அறிவிங்கறது வேண்டாமா....

https://m.facebook.com/story.php?story_fbid=336430766760418&id=100011804916897

68 வயது குடிகார நோயாளி

மு. செ. பாதுஷா
Via facebook
2018-01-03

68 வயது குடிகார நோயாளி:

இது ரஜினியோட அரசியல் பிரவேசம் அல்ல. லதா ரஜினியோடது.

"கிடா விருந்து வைக்க மாட்டேன், சோ இல்லாதது பெரிய இழப்பு" போன்ற வாக்குமூலங்களிலிருந்து அவர் குறிப்பிடுவது எந்த வகையான ஆன்மீகம், யாருக்கான அரசியல் என்பதை விளங்கிக்கொள்ள பெரிய அரசியல் அறிவெல்லாம் தேவையில்லை. ரஜினியோட இந்த "ஆன்மீக அரசியல்" நிச்சயமாக நமக்தானதல்ல.

பள்ளி இடத்துக்கு, மாநகராட்சி கடைக்கு,
வாடகை தராமல் ஏமாற்றும் லதா ரஜினி  "ரஜினி-ங்ர brand வேல்யூவை சும்மா விட்டு விடுவாரா"

கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு தன்னுடைய இறுதி காலத்தில் உள்ள 68 வயது குடிகார நோயாளியை (கவனிக்க "குடிநோயாளி" அல்ல) வைத்து முடிந்த வரை ஆதாயமடைய பார்பீனியம் துடிக்குது.

இப்படி நினைத்து பாருங்கள்:

1) புதுக்கட்சி, 234 இடங்களில் போட்டி
2) ஆட்சியை பிடித்து முதல்வர்
3) கமல் எதிர்கட்சி தலைவர்.
4) 1 வருடத்தில் நோய் காரணமாக மரணம்
5) லதா ரஜினிகாந்த் அடுத்த முதல்வர்

(விஸ்வாமித்திரர் காலத்திலிருந்தே பார்பனரல்லாதோரை முடக்கவும் தின்று செரிக்கவும் பார்பீனியம் பெண்களைத்தான் பயன்படுத்தி உள்ளது. தற்போது ரஜினி என்னும் சூத்திரன் மூலம் லதாவுக்கு ஆட்சி அதிகாரம்)

"இன்னும் இரண்டு/மூனு/பத்து வருடத்தில் பார்பன முதல்வர், பார்பன எதிர் கட்சி தலைவர்"

- ஒரு பார்பனனா, ஒரு RSS-காரனா எவ்வளவு மகிழ்சி தரக்கூடிய விசயம், அப்படியே ஜிவ்வுன்னு இருக்குல்ல. இதுல பாதி நடந்தால் கூட அவர்களுக்கு பெரும் வெற்றிதான்.

ரெம்ப கேவலமான சாத்தியமற்ற கற்பனையாக இருக்கா?

அப்படியல்ல, கிட்டதட்ட இதுபோன்ற  நிலையை உருவாக்கத்தான் சுமார் 30 வருடங்களாக பார்பன ஊடகங்களும், பார்பன அறிவுஜீவிக்களும், பார்பன அடிமைகளும் கண் அயராது உழைத்து வருகிறார்கள். "திராவிடத்தால் வீழ்தோம், கம்யூனிஸ அபாயம், இஸ்லாமிய தீவிரவாதம், ஊழல் திமுக, அடிமை அதிமுக, குடிகார தேமுதிக" - என்பதெல்லாம் கடந்த 30 வருடங்களாக அவர்கள் மக்கள் மத்தியில் கட்டியெழுப்பிய புரட்டுக்கள்.

இங்கே கவனிக்க வேண்டிய விசயம் "முதல்வர் லதா, எதிர்கட்சி தலைவர் கமல்" என்பதல்ல, "பார்பன முதல்வர், பார்பன எதிர் கட்சி தலைவர்" என்னும் கருத்தாக்கம்தான்.

அந்த பார்பனர் யாராக வேண்டுமானாலும் எந்த கட்சியிலிருந்து வேண்டுமானாலும் இருக்கலாம்:

கமல், லதா, அஜித், அம்ருதா, மைத்ரேயன், நிரமலா, Y.G. மகேந்திரன், S.V. சேகர், H.ராஜா, மாதவன், திரிசா, அரவிந்த்சாமி, குருமூர்த்தி... ஏன் அனிருத்க்கு என்ன குறைச்சல்.

---

"பொன்னியின் செலவன்" - ஐ தமிழின் ஆகச்சிறந்த இலக்கியமாக கருதும் தற்குறிதான் ரஜினி. அவரிடம் போய் "உங்க கொள்கை என்ன?" என்று கேட்டால் அதிர்ச்சி அடையத்தான் செய்வார். அவர் என்ன வச்சிக்கிட்டா வஞ்சகம் பண்ணுகிறார். ஆனால் தமிழ்நாடு போன்ற அறிவார்ந்த சமூகத்தில், கொள்கையே என்னவென்று தெரியாமல் "234 இடங்களிலும் தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடிப்பேன்" - என்று சொல்ல எவ்வளவு தடித்தனம் வேண்டும். இந்த லட்சணத்துல, இவர் தொடங்கவிருக்கின்ற புதுக்கட்சியின் பைலா புரோக்கர் மணியன் தலைமையில்தான் தயாராகிறதாம்.

விஜயகாந்த் ஒப்பீட்டளவில் சுயபுத்தியுடன் சிந்தித்தவர். தமிழகத்தின் அனைத்து பிரச்சினைகளிலும் வெளிப்படையாக தனது கருத்தை (சரியோ, தவறோ) யாருக்கும் பயப்படாமல் பேசியவர். ஆனால் அவரது குடும்பத்தார்களின் பேராசையாலும் அரசியல் புரோக்கர்களின் சூழ்ச்சியாலும் வீழ்ந்து போனார். தொண்டை பிரச்சனையால் தெளிவற்று பேசியதை "குடிச்சுட்டு பேசுகிறார்" என்று ஊதிப்பெருக்கியதில் பார்பன ஊடகங்களின் (daily, weekly, facebook, memes, what'sup group) பங்கு மகத்தானது.

நமது நாட்டில் (அதாவது தமிழ்நாட்டில்) ஜனநாயக/திராவிட பார்வையில் இதெல்லாம் நடப்பதற்கு சாத்தியமற்றவை. அல்லது குறைந்தபட்சம் 20 அல்லது 30 வருடங்களுக்கு சாத்தியமற்றது. ரஜினியை அடுத்த சிவாஜி/விஜயகாந்த் என்று ஏளனம் செய்யலாம், ஆனால் ர‌ஜினியின் இந்த அறிவிப்பு நிச்சயம் ஓட்டுக்களை பிரிக்கும்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் படுதோல்வி அடைந்தது உண்மைதான். ஆனால் திமுக-க்கு தான் பெரும் இழப்பு ஏற்பட்டது, ஆட்சி இழப்பு. விஜயகாந்த்தை கடைசி வரை கூட்டணிக்குள் கொண்டுவர கலைஞர் ஏன் பிடிவாதமாக முயற்சித்தார் என்பது திமுக தோல்வியடைந்த தொகுதிகளில் வெற்றி/தோல்வி ஓட்டு வித்தியாசத்தை ஆராய்ந்தால் தெரியும்.

சமீபகாலமாக RSS திமுகவுக்கு எதிராக செய்யும் சதியில் பிரதானமானது இதுதான். கடந்த பாரளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் முறையே தமிழருவி மணியன், வைகோ போன்ற புரோக்கர்களை கொண்டு சாதித்தது இதைத்தான். திமுகவை பலமான கூட்டணி அமைக்க விடாமல் செய்ததில் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளதன் மூலம் கடந்த பத்தாண்டுகளில் திமுகவைச் மத்தியிலும் மாநிலத்திலும் செல்லாக் காசாக்கியுள்ளதை மறுக்க முடியாது.

இதே பாணியில், வரும் பாராளுமன்ற,  சட்டமன்ற தேர்தல்களில் திமுகவை ஆட்சியை பிடிக்க விடாமல் முடக்கவும் ரஜினி பயன்படலாம் என்பது புரோக்கர்களின் நம்பிக்கை. ஓரே கல்லில் ரெண்டு மூனு மாங்கா.

இது சார்ந்து ரஜினிக்கு ஆதரவாக  இறக்கிவிடப்பட்டிருக்கும் IT டீமின் அளவும், பட்ஜெட்டும் உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டது.

திமுக கடந்த பத்து வருடங்களாக தொடர்ந்து செய்த தவறு: "ஆளும் கட்சியின் மீது மக்களுக்குள்ள அதீத வெறுப்பு சிந்தாமல் சிதறாமல் தங்களுக்கு ஓட்டாக விழும்" - என்ற அடிப்படையற்ற நம்பிக்கை. இதே மனநிலையில் தான் சமீபத்திய R. K. நகர் இடைத்தேர்தலையும் எதிர் கொண்டார்கள்.

ஆனாலும் அதையும் தாண்டி வேறு சில காரணிகளும் உள்ளன. "மக்களுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் தங்களை விட்டால் வேறு போக்கிடம் இல்லை" என்ற அதீத தன்னம்பிக்கையை கைவிட்டு வாழ்வா சாவா என்ற ரீதியில் முழஈடுபாட்டுடன் உழைக்க வேண்டும். தற்போதுள்ள பஜக எதிர்ப்பை  இன்னும் தீவிரப்படுத்த வேண்டும்.

வரும் பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் திமுகவிற்கு கடும் சவாலை தரக்கூடியதாக இருக்கும். இதில் கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டும், இல்லையென்றால் மீண்டுமொரு வனவாசத்திற்கு தயாராக வேண்டியதுதான். ஆட்சியை பகிர்ந்து கொண்டாவது இரண்டாம் வனவாசத்தை தவிர்க்க வேண்டும்.

கடந்த ஐம்பது வருடங்களாக குருவி சேர்த்தது போல நாம் சேர்த்த சமூகநீதி சார்ந்த கட்டுமானங்கள் ஒவ்வொன்றாக நம் கண்முன்னே கதறல்களுக்கு நடுவே வீழ்தப்படுகின்றன.

எனவே, தமிழ்நாட்டை பொறுத்த வரை, நமக்கு தற்போதய உடனடி தேவை நிலையான திராவிட ஆட்சி. திமுக ஆட்சி அல்லது திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சி.

---

ரஜினியை ஏன் இப்போது RSS களமிறக்குகிறது?

RSS-ஐ பொருத்தவரை "இந்தியாவை இந்து நாடு என்று RSS தோற்றுவிக்கப்பட்ட நூறாவது ஆண்டில் போது அறிவிக்க வேண்டும்" - என்பதுதான் லட்சியம்.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல்களில் பெற்ற குறிப்பிடதக்க வெற்றிகளினால் இரண்டு/மூன்று வருடங்களில் ராஜ்யசபா-வில் போதுமான பெரும்பான்மை பெறக்கூடிய சூழ்நிலை உள்ளது. எனவே, 2019 ல் மீண்டும் மத்தியில் ஆட்சியை பிடித்தால் மக்களவை, மாநிலங்களவை என்று தங்களால் நினைத்த அனைத்தையும் சட்டப்படியே செய்ய முடியும்.

இப்படியான சாதகமான சூழலில், அரசியல் சாசன சட்ட திருத்தத்தை  தாங்கள் எதிர்பார்த்ததை விட விரைவில் செய்துவிட முடியும் என்று நம்புகிறது. எனவே, அதை எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக செய்ய நினைக்கின்றார்கள்.

எனவே ரஜினியை போல வேறு சிலரும் சீரான இடைவெளியில் வருவார்கள்.

இங்கு பலர் "அரசியல் சாசன திருத்தம்" என்பதை அபாயகரமான பிரச்சனையாக நினைப்பதில்லை. திருத்தம் என்ற பெயரில் ஒட்டுமொத்த சாசனத்தையே மாற்றப் போகிறார்கள். தற்போதுள்ள அரசியல் சாசனத்தில் "இந்தியா இந்து நாடு" என்று மாற்றுவது மட்டுமல்ல அவர்களது நோக்கம், அவர்கள் விரும்பும் குறைந்தபட்ச சட்டங்கள்:

1) பாரதம் என்னும் இந்தியா இந்து தேசமாகும்.
2) இந்தியாவின் அதிகாரப்பூர்வ மதம் இந்து மதமாகும்.
3) இந்து தேசத்தில் இந்து மதத்தை பழிப்பது தண்டனைக்குரிய குற்றம்.
4) இந்தியா இந்துக்களுக்கே, ஆட்சி அதிகாரத்திற்கு உரியவர்கள் இந்துக்களே.
5) வாக்குரிமை இந்துக்களுக்கு மட்டுமே. வாக்குரிமை படிநிலை கொண்டதாகும். அவரவர் தகுதிநிலை புள்ளிகளின் அடிப்படையில் ஒருவர் அளிக்கும் வாக்கின் மதிப்பிற்கும் மற்றொருவர் அளிக்கும் வாக்கின் மதிப்பிற்கும் வித்தியாசம் இருக்கும்.
6) இந்துக்கள் அல்லாதவர்களுக்கு தனி அடையாள அட்டை வழங்கப்படும். ஆதாருடன் இணைக்கப்பட்ட அதை அவர்கள் எப்போதும் அணிந்திருக்க வேண்டும்.

"இந்தியா இந்துக்களுக்கே, ஆட்சி அதிகாரத்திற்கு உரியவர்கள் இந்துக்களே"

இந்த முழக்கங்களை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறதா?

"தமிழ்நாடு தமிழர்களுக்கே, தமிழன்தான் தமிழ்நாட்டை ஆளனும்"

இது நமது தமிழ் பாசிஸ்டுகளின் முழக்கம். தமிழ் பாசிஸ்ட்டுகள் தங்களுக்கான கொள்கை முழக்கங்களை இந்துத்துவ பாசிஸ்ட்டுகளிடமிருந்தே பெறுகிறார்கள்.

இந்த பாசிஸ்ட்டுகள் "யார் இந்தியன், யார் தமிழன்" என்ற வறையறையில் நேர்மையற்றவர்களாகத்தான் இருப்பார்கள்.

அவர்களை நாம் கவனமாக புறந்தள்ள வேண்டும்.

---

Saturday, December 30, 2017

விவாகரத்து வழக்கு தாக்கல் செய்வது எப்படி:

ஹிந்து திருமண சட்டப் பிரிவு 13 படி, எப்படி விவாகரத்து வழக்கு தாக்கல் செய்வது எப்படி:
=======================================

------------------------------------------------------------
I. என்ன காரணங்கள் கூறி கணவரோ, மனைவியோ விவாகரத்து கேட்க முடியும் ?
------------------------------------------------------------

1.கள்ள தொடர்பு
2. தொழு நோய்
3. கொடுமைப்படுத்துதல் (மன ரீதியான கொடுமையும் உள்ளடங்கும்)
4. பாலுறவு நோய்
5. ஒருவர் இன்னொருவரை விட்டு விலகி போதல்.
6. துறவறம் செல்லுதல்
7. மதம் மாறி செல்லுதல்
8. கணவர் அல்லது மனைவி உயிரோடு இருக்கிறாரா என தெரியாமல் இருத்தல்.
9. மன நல பாதிப்புக்கு உள்ளாகி இருந்தால்.
10. இணைந்து வாழாமல் இருத்தல்.
மேலே சொன்னது, இருவருக்கும் பொதுவானது.

------------------------------------------------------------
II. மனைவி, கணவர் மேல் விவாகரத்து கேட்க, கூடுதலான காரணங்கள்:
------------------------------------------------------------

1. கணவர் வேறு பெண்ணை கற்பழிப்பு செய்கை செய்திருந்தால், விலங்குகளோடு உடலுறவு கொண்டால், மல வாய் மூலம் ஒரு ஆணுடனோ, பெண்ணுடனோ உடலுறவு கொண்டால்.

2. ஹிந்து திருமண சட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு, முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது, இரண்டாம் திருமணம் செய்திருந்தால். (1956 இல் ஹிந்து திருமண சட்டம் நடைமுறைக்கு வந்தது)

3. பதினைந்து வயதுக்கு முன் ஒரு பெண், ஒருவரை திருமணம் செய்திருந்து, பதினெட்டு வயதுக்குள் அந்த திருமணத்தை துறந்தால்.

4. ஒரு வருடமாக உடலாலும், மனதாலும் பிரிந்திருந்தால், மேலும் மனைவி ஜீவனாம்ச வழக்கு போட்டு தீர்ப்பாகி, கணவர் அதை மதித்து பணம் கட்டாமல் இருந்தாலும், மனைவி, கணவரிடம் விவாகரத்து கேட்கலாம்.

------------------------------------------------------------
III. விவாகரத்து வழக்கு எங்கு தாக்கல் செய்யலாம் ?
------------------------------------------------------------

- கடைசியாக இருவரும் எங்கு கணவர் –மனைவியாக வாழ்ந்த இடம் (இதற்கு எழுத்துபூர்வமான, ஏற்று கொள்ளகூடிய ஆதாரம் வேண்டும், உதாரணம் – வாடகை ஒப்பந்தம், குடும்ப அட்டை)
- திருமணம் நடந்த இடம்
- எதிர்மனுதார் குடியிருக்கும் இடம்
மனைவிக்கு கூடுதல் point :
மனைவி, விவாகரத்து வழக்கு தாக்கல் செய்யும்போது எந்த இடத்தில் வசிக்கிறாரோ அந்த இடத்தில்,

- சார்பு நீதிமன்றம் அல்லது குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம். (உதாரணம் – மதுரை மாநகராட்சி எல்கைக்குட்பட்டது என்றால், மதுரை குடும்ப நீதிமன்றம், மதுரை மாநகராட்சிக்கு வெளியே, என்றால், சார்பு நீதிமன்றம்)

------------------------------------------------------------
IV. என்ன ஆவணங்கள் தேவைப்படும் ?
------------------------------------------------------------

1. கணவரின் இருப்பிட சான்று
2. மனைவியின் இருப்பிட சான்று
3. திருமண பத்திரிக்கை அல்லது திருமணம் பதிவு செய்திருந்தால், திருமண சான்றிதழ்
4. திருமண புகைப்படம்
5. யார் வழக்கு தாக்கல் செய்கிறார்களோ, அவர்களது பாஸ்போர்ட் புகைப்படம்
6. இருவரும் சேர்ந்து வாழ எடுத்து கொண்ட முயற்சிகள் தோற்று விட்டன என்பதை காட்டும் ஆவணங்கள் (இருந்தால்)
7. வருமான வரி சான்றிதல்கள் (இருந்தால்)
8. என்ன வேலை பார்க்கிறார், என்ன சம்பளம் வாங்குகிறார் என்ற விவர சான்றிதல்கள் (இருந்தால்)
9. குடும்ப background பற்றிய தகவல்களை காட்டும் ஆவணங்கள் (இருந்தால்)
10. ஒரு வருடத்திற்கு மேல், கணவர், மனைவி பிரிந்து வாழ்கிறார்கள் என்பதை காட்டும் ஆவணம் (இருந்தால்)
11. சொத்துக்கள் ஏதும் கணவர், மனைவிக்கு இருந்தால், அதை காட்டும் ஆவணம்( இருந்தால்)

------------------------------------------------------------
V. எவ்வளவு செலவு ஆகும் ?
------------------------------------------------------------

நீதிமன்ற கட்டணம் 5௦ ரூபாய் ஆகும். வழக்கறிஞர் கட்டணம், வழக்கு செலவு தனி.

https://m.facebook.com/groups/685954204947280?view=permalink&id=702983953244305

அனைவருக்கும் ஒரு உடலுறவுக் குழப்பம் வரும்

Vijey baskervijey
Via facebook
2017-12-30

டிவியில், ஆண் உறுப்பு நிமிர்ந்து ஜம்மென்று நிற்க இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளுங்கள் என்ற விளம்பரத்தைப் பார்த்தேன்.

இதைப் பார்த்து எத்தனை பேர் வாங்குவார்கள் என்றும் யோசித்துப் பார்த்தேன்.

திருமணமான புதிதில் அனைவருக்கும் ஒரு உடலுறவுக் குழப்பம் வரும். நம் ஊர் சூழ்நிலையில் இது அனைத்தும் ஆண்கள் பொறுப்பு. பெண்கள் இதை கண்டுகொள்ள மாட்டார்கள்.

ஆண் திருமணமான உடனே பெண்ணை குத்தி ஏத்தி சோலி முடிக்க வேண்டும். அதில் வலி அதிகமாக இருந்தால் கூட பெண் ஏற்றுக் கொள்வாள். ஆனால் அது பற்றி இன்னும் அதிகம் தெரிந்து மட்டும் வைத்திருக்க மாட்டாள்.

கெரசின் ஸ்டவ்வில் பர்னரில் இருந்து சிறு துளை வழியே கெரசின் ஆயில் ஆவியாகி தீயாக எரியும். சில சமயம் அந்த சிறுதுளை அடைத்திருந்தால் ஒரு “ஸ்டவ் பின்” வைத்திருப்பார்கள். அதை வைத்து குத்தி துளையில் உள்ள அழுக்கை எழுப்பார்கள்.
அந்த நிகழ்வில் ஸ்டவ் பின்னுக்குதான் வேலை. துளைக்கு வேலை இல்லை.

இந்தியாவில் ஆண் பெண் திருமண உடலுறவு  கிட்டத்தட்ட இந்த கெரசின் ஸ்டவ் கதையாகத்தான் இருக்கும். ஸ்டவ் பின்னு சொந்தக்காரர்களுக்கு நம்ம பின் உறுதியானதுதானா என்ற குழப்பம் வந்து விடும்.

அப்படி ஒரு குழப்பம் னக்கும் வரவே ஒரு
குவாலிஃபைடு மருத்துவரை அணுகினேன். அவர் என்னை பரிசோதித்துவிட்டு

“நல்லா இருக்குப்பா உனக்கு (மகிழ்ச்சி டாக்டர்). இதப் பாரு ஹெல்தியா இருக்கு (ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டாக்டர்). எல்லாருக்கும் கல்யாணம் ஆன புதுசுல இதுமாதிரி குழப்பம் வரும். நீ எப்பவும் போல இரு. இருந்தாலும் ரெண்டு அல்லது மூணு தடவை இந்த மாத்திரை டிரைப் பண்ணு. உனக்கு பிபி இருக்கா”

“இல்ல டாக்டர்”

“சுகர் இருக்கா”

“இல்லவே இல்ல டாக்டர்”

“அலர்ஜி எதுனா”

“நோ டாக்டர்”

அப்ப இதுல நாலு மாத்திரை மட்டும் வாங்கிக்க அதுக்கு அரை மணி நேரம் முன்னாடி போட்டுக்க என்றார். ஆனா தேவைன்னா மட்டும் போடு என்றார்.

நானும் வாங்கி ஆணுக்கே உரிய ஆர்வத்தில்  போட்டேன். அதோடு சேர்த்து ஒரு டம்ளர் பாலும் சாப்பிட்டு மாத்திரையின் விளைவுக்காக காத்திருந்தேன்.

யெஸ் வேலை செய்தது. கொஞ்சம் மனதுக்குள் மூடாக கற்பனை செய்ததும் அவர் நிமிர்ந்தான். திண்ணென்று நிமிர்ந்தான். வொண்டர்ஃபுல்லாக நிமிர்ந்தான். லவ்லியாக நிமிர்ந்தான்.

ஆனால் நிமிர்ந்தானே தவிர அவன் கிளர்ச்சியைக் கொடுக்கவில்லை. கால் மரத்துப் போகும் போது யார்வது காலைத் தொட்டால் வேறு எதையோ தொட்டது மாதிரி இருக்கும் கவனித்திருக்கிறீர்களா?

அது மாதிரி அது உடலைத் தாண்டி வேறு எங்கோ இருப்பது போன்று உணர்ந்தேன். அதைத் தொட்டால் வரும் கிளர்ச்சி உணர்வு மூளையைத் தாக்கவில்லை.

சுத்தமாக பிடிக்கவில்லை. மறுநாள் காலையில் மீதம் இருந்த மூன்று மாத்திரைகளையும் தூரப்போட்டேன்.

டாக்டர் சொன்ன உனக்கு ஹெல்தியா இருக்கு என்ற வாக்கியத்தை நம்பினேன்.

இந்த உலகில் 300 கோடி தம்பதிகள் இருக்கிறார்கள் என்றால் அந்த 300 கோடி ஜோடிகளுக்கும் அவர்களுக்கே உரிய உடலுறவு முறைகள் அந்த அந்த வயதுக்கு ஏற்ப இருக்கும். அதுதான் உண்மை. இதை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

போர்னோ என்ற முழுநிர்வாண உடலுறவுக் காட்சிகளை அதிகம் பார்த்து அப்படித்தான் உடலுறவு இருக்கும் என்று நினைத்துப் போனால் அங்கே ஏமாற்றமும் இயலாமையும்தான் ஆண்களை வாட்டும்.

திருமணம் செய்யப் போகிறீர்கள். திருமணம் ஆன புதிதில் ஒரு ஆணாக என்ன செய்ய வேண்டும். பெண் ஒத்துழைக்கவில்லை ஒத்துழைக்கிறார். வெட்கப்படுகிறார். வெட்க்கபடவில்லை. இதையெல்லாம் விடுங்கள்.

ஒரு ஆணாக உங்களால் என்ன செய்ய முடியும்...

1.போர்னோ பார்ப்பதை குறைத்து விடுங்கள். அதிக வெளிச்சத்தில் திரையில் அழகான பெண் உடலைப் பார்த்து நிஜமாக பார்க்கும் பெண் உடல் அந்த அளவுக்கு கவர்ச்சியாக இருக்காது. ஒரு பெண்ணோடு உறவு கொள்ளப் போகிறீர்கள். ஆசை ஆசையாக திறந்து பார்க்கிறீர்கள். மார்பு, இடுப்பு என்று ரசிக்கிறீர்கள். அந்த ரசிக்கும் நேரம் உங்கள் உறுப்பு நிமிர்ந்து இருக்கும். மறுபடியும் நிர்வாணம் பழகும் போது அது கொஞ்சம் அடங்கப் போகும். நீங்கள் வெறித்தனமாக போர்னோ பார்ப்பவராய் இருந்தால் இந்த ”நிமிர்வு நேரம்” உங்களுக்கு சீக்கிரம் முடிந்து போய்விடும். திருமணம் என்றெல்லாம் முடிவாகிவிட்டால் போர்னோவைப் பார்க்காதீர்கள்.

2. திருமணம் ஃபிக்ஸ் ஆகிவிட்டால் அடிக்கடி கையடிக்காதீர்கள். ஒரு சொட்டு விந்து 60 சொட்டு ரத்தம் என்று சொல்லவில்லை. உங்கள் வீணையை நீங்களே அதிகம் மீட்டி பழகிய போது வேறு
யாராவது மீட்டினால், அல்லது உறவின் போதான
உணர்வுகள் பெரிதாய் உங்களை ஈர்க்காது. தினமும் கையடிக்கும் பழக்கம் உள்ள இளைஞர்கள். மூன்று நாளைக்கு நாலு நாளைக்கு ஒருமுறை என்ற ரொட்டீனுக்குள் வாருங்கள். ஒரேடியாக கையடிக்காமல் அந்த Tool ஐ துருப்பிடிக்கவும் விடாதீர்கள்.

3. மனம்தான் உடலுக்கு எல்லாமே என்பதால் தேவையில்லாத பதற்றத்தில் இருந்து வெளியே வாருங்கள். மனதை பரப்பரப்பில்லாமல் திருமணம் முடிந்து ஒரு வருடமாகவது வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். ஃபேஸ்புக் போன்றவற்றை விட்டு ஒதுங்கி இருத்தல் நலம். நல்ல தூக்கத்துக்கும் செக்ஸில் செமையாக வேலை செய்வதற்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது.

4. பெண்ணுறுப்பின் அடிப்படை உடல் கூறுகளை தெரிந்து கொள்ளுங்கள். ஏதாவது ஒரு நல்ல டாக்டர் எழுதிய புத்தகத்தை ஒரு ரவுண்ட் வாசிக்கலாம். அடிக்கடி வாசிக்க வேண்டியதில்லை.

5. கொஞ்சம் கற்பனையாக இருங்கள். பெண்ணின் Pleasure புள்ளிகளை வருடுவதுதான் உறவின் முக்கிய கட்டம் என்று வரும் போது ஒரே நேரத்தில் எவ்வளவு அதிகமாக Pleasure புள்ளிகளை வருட முடியும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.

6. பெண்ணை ஒரு Soul ஆக பார்க்கமுடியுமா என்று பாருங்கள். ஒரு மாலிலோ அல்லது பொது இடத்திலோ  நிற்கிறீர்கள். கும்மென்று மிக அழகான பெண்கள் உங்களைக் கடக்கிறார்கள். பாகம் பாகமாக உங்கள் கண்கள் கவனிக்கிறது. அதே சமயம் அந்த உடலுக்குள் இருக்கும் Soul ஐ, உடலுக்குள் இருக்கும் அவரை அடையாளம் காணமுடியுமா என்று பாருங்கள். அவருக்கொரு வலி இருக்கும், ஒரு உணர்வு இருக்கும். ஒரு ரசிப்புத்தன்மை இருக்கும், விறுப்பு வெறுப்பு இருக்கும். திருமணத்துக்கு பிறகு மனைவியை புரிந்து கொள்ள இது உதவும். அப்படி Soul ஆகவும் பார்க்கும் போது செக்ஸ் இன்னும் உணர்வுப்பூர்வமாய் அமையும்.

7. இதையெல்லாம் தாண்டி தைரியமாக இருங்கள். எதற்காகவும் அவமானப்பட மாட்டேன் என்று இருங்கள். எல்லாமே இங்கே பக்காவாக நடந்து விடாது. அப்படி நடக்காமல் போகும் பட்சத்தில் அதை உங்கள் பர்சனல் அவமானமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். கூனிக் குறுகி விடாதீர்கள். அதற்கு எண்ணற்ற காரணங்கள் இருக்கலாம். அதை பொறுமையாக ஆராய்ந்தால் மிக எளிமையான தீர்வு ஒன்று இருந்தே தீரும். So செக்ஸ் செய்யும் போது தேர்வு எழுதும் மனநிலையோடு போகாதீர்கள். அது பதற்றத்தைத்தான் கொடுக்கும். மிஞ்சி மிஞ்சி போனால் என்ன நடந்துவிடும் என்று ரிலாக்ஸாக போங்கள்.

இப்படியெல்லாம் ஆண் குறைந்தபட்சம் அவனைத் தயார்படுத்திக் கொள்ளலாம். இப்படி தயார்படுத்துவது அன்றாட வாழ்க்கையில் அலட்டல் இல்லாமல் எளிமையாக நடக்க வேண்டும்.

போங்க போங்க நல்லாயிருங்க.. போங்க :) :)

https://m.facebook.com/story.php?story_fbid=1570338369725166&id=100002470551465