Saturday, December 30, 2017

அனைவருக்கும் ஒரு உடலுறவுக் குழப்பம் வரும்

Vijey baskervijey
Via facebook
2017-12-30

டிவியில், ஆண் உறுப்பு நிமிர்ந்து ஜம்மென்று நிற்க இந்த மாத்திரையை எடுத்துக் கொள்ளுங்கள் என்ற விளம்பரத்தைப் பார்த்தேன்.

இதைப் பார்த்து எத்தனை பேர் வாங்குவார்கள் என்றும் யோசித்துப் பார்த்தேன்.

திருமணமான புதிதில் அனைவருக்கும் ஒரு உடலுறவுக் குழப்பம் வரும். நம் ஊர் சூழ்நிலையில் இது அனைத்தும் ஆண்கள் பொறுப்பு. பெண்கள் இதை கண்டுகொள்ள மாட்டார்கள்.

ஆண் திருமணமான உடனே பெண்ணை குத்தி ஏத்தி சோலி முடிக்க வேண்டும். அதில் வலி அதிகமாக இருந்தால் கூட பெண் ஏற்றுக் கொள்வாள். ஆனால் அது பற்றி இன்னும் அதிகம் தெரிந்து மட்டும் வைத்திருக்க மாட்டாள்.

கெரசின் ஸ்டவ்வில் பர்னரில் இருந்து சிறு துளை வழியே கெரசின் ஆயில் ஆவியாகி தீயாக எரியும். சில சமயம் அந்த சிறுதுளை அடைத்திருந்தால் ஒரு “ஸ்டவ் பின்” வைத்திருப்பார்கள். அதை வைத்து குத்தி துளையில் உள்ள அழுக்கை எழுப்பார்கள்.
அந்த நிகழ்வில் ஸ்டவ் பின்னுக்குதான் வேலை. துளைக்கு வேலை இல்லை.

இந்தியாவில் ஆண் பெண் திருமண உடலுறவு  கிட்டத்தட்ட இந்த கெரசின் ஸ்டவ் கதையாகத்தான் இருக்கும். ஸ்டவ் பின்னு சொந்தக்காரர்களுக்கு நம்ம பின் உறுதியானதுதானா என்ற குழப்பம் வந்து விடும்.

அப்படி ஒரு குழப்பம் னக்கும் வரவே ஒரு
குவாலிஃபைடு மருத்துவரை அணுகினேன். அவர் என்னை பரிசோதித்துவிட்டு

“நல்லா இருக்குப்பா உனக்கு (மகிழ்ச்சி டாக்டர்). இதப் பாரு ஹெல்தியா இருக்கு (ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டாக்டர்). எல்லாருக்கும் கல்யாணம் ஆன புதுசுல இதுமாதிரி குழப்பம் வரும். நீ எப்பவும் போல இரு. இருந்தாலும் ரெண்டு அல்லது மூணு தடவை இந்த மாத்திரை டிரைப் பண்ணு. உனக்கு பிபி இருக்கா”

“இல்ல டாக்டர்”

“சுகர் இருக்கா”

“இல்லவே இல்ல டாக்டர்”

“அலர்ஜி எதுனா”

“நோ டாக்டர்”

அப்ப இதுல நாலு மாத்திரை மட்டும் வாங்கிக்க அதுக்கு அரை மணி நேரம் முன்னாடி போட்டுக்க என்றார். ஆனா தேவைன்னா மட்டும் போடு என்றார்.

நானும் வாங்கி ஆணுக்கே உரிய ஆர்வத்தில்  போட்டேன். அதோடு சேர்த்து ஒரு டம்ளர் பாலும் சாப்பிட்டு மாத்திரையின் விளைவுக்காக காத்திருந்தேன்.

யெஸ் வேலை செய்தது. கொஞ்சம் மனதுக்குள் மூடாக கற்பனை செய்ததும் அவர் நிமிர்ந்தான். திண்ணென்று நிமிர்ந்தான். வொண்டர்ஃபுல்லாக நிமிர்ந்தான். லவ்லியாக நிமிர்ந்தான்.

ஆனால் நிமிர்ந்தானே தவிர அவன் கிளர்ச்சியைக் கொடுக்கவில்லை. கால் மரத்துப் போகும் போது யார்வது காலைத் தொட்டால் வேறு எதையோ தொட்டது மாதிரி இருக்கும் கவனித்திருக்கிறீர்களா?

அது மாதிரி அது உடலைத் தாண்டி வேறு எங்கோ இருப்பது போன்று உணர்ந்தேன். அதைத் தொட்டால் வரும் கிளர்ச்சி உணர்வு மூளையைத் தாக்கவில்லை.

சுத்தமாக பிடிக்கவில்லை. மறுநாள் காலையில் மீதம் இருந்த மூன்று மாத்திரைகளையும் தூரப்போட்டேன்.

டாக்டர் சொன்ன உனக்கு ஹெல்தியா இருக்கு என்ற வாக்கியத்தை நம்பினேன்.

இந்த உலகில் 300 கோடி தம்பதிகள் இருக்கிறார்கள் என்றால் அந்த 300 கோடி ஜோடிகளுக்கும் அவர்களுக்கே உரிய உடலுறவு முறைகள் அந்த அந்த வயதுக்கு ஏற்ப இருக்கும். அதுதான் உண்மை. இதை இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

போர்னோ என்ற முழுநிர்வாண உடலுறவுக் காட்சிகளை அதிகம் பார்த்து அப்படித்தான் உடலுறவு இருக்கும் என்று நினைத்துப் போனால் அங்கே ஏமாற்றமும் இயலாமையும்தான் ஆண்களை வாட்டும்.

திருமணம் செய்யப் போகிறீர்கள். திருமணம் ஆன புதிதில் ஒரு ஆணாக என்ன செய்ய வேண்டும். பெண் ஒத்துழைக்கவில்லை ஒத்துழைக்கிறார். வெட்கப்படுகிறார். வெட்க்கபடவில்லை. இதையெல்லாம் விடுங்கள்.

ஒரு ஆணாக உங்களால் என்ன செய்ய முடியும்...

1.போர்னோ பார்ப்பதை குறைத்து விடுங்கள். அதிக வெளிச்சத்தில் திரையில் அழகான பெண் உடலைப் பார்த்து நிஜமாக பார்க்கும் பெண் உடல் அந்த அளவுக்கு கவர்ச்சியாக இருக்காது. ஒரு பெண்ணோடு உறவு கொள்ளப் போகிறீர்கள். ஆசை ஆசையாக திறந்து பார்க்கிறீர்கள். மார்பு, இடுப்பு என்று ரசிக்கிறீர்கள். அந்த ரசிக்கும் நேரம் உங்கள் உறுப்பு நிமிர்ந்து இருக்கும். மறுபடியும் நிர்வாணம் பழகும் போது அது கொஞ்சம் அடங்கப் போகும். நீங்கள் வெறித்தனமாக போர்னோ பார்ப்பவராய் இருந்தால் இந்த ”நிமிர்வு நேரம்” உங்களுக்கு சீக்கிரம் முடிந்து போய்விடும். திருமணம் என்றெல்லாம் முடிவாகிவிட்டால் போர்னோவைப் பார்க்காதீர்கள்.

2. திருமணம் ஃபிக்ஸ் ஆகிவிட்டால் அடிக்கடி கையடிக்காதீர்கள். ஒரு சொட்டு விந்து 60 சொட்டு ரத்தம் என்று சொல்லவில்லை. உங்கள் வீணையை நீங்களே அதிகம் மீட்டி பழகிய போது வேறு
யாராவது மீட்டினால், அல்லது உறவின் போதான
உணர்வுகள் பெரிதாய் உங்களை ஈர்க்காது. தினமும் கையடிக்கும் பழக்கம் உள்ள இளைஞர்கள். மூன்று நாளைக்கு நாலு நாளைக்கு ஒருமுறை என்ற ரொட்டீனுக்குள் வாருங்கள். ஒரேடியாக கையடிக்காமல் அந்த Tool ஐ துருப்பிடிக்கவும் விடாதீர்கள்.

3. மனம்தான் உடலுக்கு எல்லாமே என்பதால் தேவையில்லாத பதற்றத்தில் இருந்து வெளியே வாருங்கள். மனதை பரப்பரப்பில்லாமல் திருமணம் முடிந்து ஒரு வருடமாகவது வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். ஃபேஸ்புக் போன்றவற்றை விட்டு ஒதுங்கி இருத்தல் நலம். நல்ல தூக்கத்துக்கும் செக்ஸில் செமையாக வேலை செய்வதற்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது.

4. பெண்ணுறுப்பின் அடிப்படை உடல் கூறுகளை தெரிந்து கொள்ளுங்கள். ஏதாவது ஒரு நல்ல டாக்டர் எழுதிய புத்தகத்தை ஒரு ரவுண்ட் வாசிக்கலாம். அடிக்கடி வாசிக்க வேண்டியதில்லை.

5. கொஞ்சம் கற்பனையாக இருங்கள். பெண்ணின் Pleasure புள்ளிகளை வருடுவதுதான் உறவின் முக்கிய கட்டம் என்று வரும் போது ஒரே நேரத்தில் எவ்வளவு அதிகமாக Pleasure புள்ளிகளை வருட முடியும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.

6. பெண்ணை ஒரு Soul ஆக பார்க்கமுடியுமா என்று பாருங்கள். ஒரு மாலிலோ அல்லது பொது இடத்திலோ  நிற்கிறீர்கள். கும்மென்று மிக அழகான பெண்கள் உங்களைக் கடக்கிறார்கள். பாகம் பாகமாக உங்கள் கண்கள் கவனிக்கிறது. அதே சமயம் அந்த உடலுக்குள் இருக்கும் Soul ஐ, உடலுக்குள் இருக்கும் அவரை அடையாளம் காணமுடியுமா என்று பாருங்கள். அவருக்கொரு வலி இருக்கும், ஒரு உணர்வு இருக்கும். ஒரு ரசிப்புத்தன்மை இருக்கும், விறுப்பு வெறுப்பு இருக்கும். திருமணத்துக்கு பிறகு மனைவியை புரிந்து கொள்ள இது உதவும். அப்படி Soul ஆகவும் பார்க்கும் போது செக்ஸ் இன்னும் உணர்வுப்பூர்வமாய் அமையும்.

7. இதையெல்லாம் தாண்டி தைரியமாக இருங்கள். எதற்காகவும் அவமானப்பட மாட்டேன் என்று இருங்கள். எல்லாமே இங்கே பக்காவாக நடந்து விடாது. அப்படி நடக்காமல் போகும் பட்சத்தில் அதை உங்கள் பர்சனல் அவமானமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். கூனிக் குறுகி விடாதீர்கள். அதற்கு எண்ணற்ற காரணங்கள் இருக்கலாம். அதை பொறுமையாக ஆராய்ந்தால் மிக எளிமையான தீர்வு ஒன்று இருந்தே தீரும். So செக்ஸ் செய்யும் போது தேர்வு எழுதும் மனநிலையோடு போகாதீர்கள். அது பதற்றத்தைத்தான் கொடுக்கும். மிஞ்சி மிஞ்சி போனால் என்ன நடந்துவிடும் என்று ரிலாக்ஸாக போங்கள்.

இப்படியெல்லாம் ஆண் குறைந்தபட்சம் அவனைத் தயார்படுத்திக் கொள்ளலாம். இப்படி தயார்படுத்துவது அன்றாட வாழ்க்கையில் அலட்டல் இல்லாமல் எளிமையாக நடக்க வேண்டும்.

போங்க போங்க நல்லாயிருங்க.. போங்க :) :)

https://m.facebook.com/story.php?story_fbid=1570338369725166&id=100002470551465

No comments:

Post a Comment