Friday, January 30, 2015

இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெறாமல் இருந்திருந்தால்

1965 களில் தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம் நடைபெறாமல் இருந்திருந்தால் இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆங்கிலம் அகற்றப்பட்டு இந்தி மட்டும் இருந்திருக்கும். இவ்வாறு மாறியிருந்தால் தமிழகத்தில் இந்தி எந்த அளவில் புகுந்து என்னவெல்லாம் நடந்திருக்கும் என்பதை குறித்து ஓர் அலசல்.
1. இந்திய ஆட்சிப்பணி, காவல்துறை பணிகளில் (IAS, IPS) தேர்வுகளில் இந்தியில் மட்டுமே கேள்விதாள்கள் கொடுக்கப்படும். தமிழகத்திலிருந்து ஒருவர் கூட IAS, IPS ஆகியிருக்க முடியாது. 
2. நெடுஞ்சாலைதுறையால் வைக்கப்பட்டுள்ள பெயர்ப்பலகைகள் அனைத்தும் ஆங்கிலம், தமிழ் இல்லாமல் இந்தியில் மட்டுமே இருந்திருக்கும். 
3. பாஸ்போர்ட், தொடர்வண்டி சீட்டு, விமான சீட்டு என அனைத்து மத்திய அரசு தொடர்பான ஆவணங்களிலும், இடங்களிலும் இந்தி மட்டுமே இருந்திருக்கும். 
4. ஐஐடி போன்ற மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் நுழைவு தேர்வு கேள்விகள் ஆங்கிலம் இல்லாமல் இந்தியில் மட்டுமே இருந்திருக்கும். தமிழகத்திலிருந்து ஒருவர் கூட படித்திருக்க மாட்டார்கள். 
5. அனைத்து பள்ளிகளிலும் அனைத்து பாடங்களும் இந்தி வழிக் கல்வியின் (இந்தி மீடியம்) முலமாக படித்திருப்போம். 
6. தமிழகத்தில் உள்ள மத்திய மாநில வேலைவாய்ப்புகள் அனைத்திலும் இந்தியை தாய்மொழியாக கொண்டவர்களால் நிரம்பியிருப்பார்கள். 
7. அரசியல் கட்சிகள் வைக்கும் பெரிய பேனர்கள் அனைத்தும் இந்தியில் இருந்திருக்கும். 
8. வடநாட்டில் இருப்பது போல பேருந்துகள், கடைகள் என அனைத்து இடங்களிலும் பெயர்பலகை இந்தியில் தான் இருந்திருக்கும். 
9. தமிழகம் ஐ.டி துறையில் இவ்வளவு முன்னேறியிருக்காது. ஆங்கிலம் தெரியாத காரணத்தால் வெளிநாடுகளுக்கு அதிகமான நபர்கள் சென்றிருக்க முடியாது. இந்தி பேசும் மாநிலங்கள் போல தமிழகம் மிகவும் பின்தங்கி இருந்திருக்கும். 
10. சென்னையில் அமெரிக்க தூதரகம் இருந்திருக்காது. 
11. தமிழில் இவ்வளவு திரைப்படங்கள் மற்றும் இவ்வளவு தொலைக்காட்சிகள், செய்தி ஊடகங்கள், இணையதளங்கள் வந்திருக்காது. 
12. வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை என அனைத்திலும் இந்தி மட்டுமே இருந்திருக்கும் . தமிழ் கட்டாயம் இருந்திருக்காது. 
13. பிறப்பு இறப்பு சான்றிதல் கூட இந்தியில் தான் இருந்திருக்கும். 
14. தமிழக சட்டமன்றத்தில் பல இந்திக்காரர்கள் உள்ளே புகுந்திருப்பர்கள். இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சட்ட மன்றங்களிலும் இந்தி தான் சட்டமன்ற மொழியாக இருந்திருக்கும். 
15. இந்தியாவில் உள்ள தேசிய இனங்களின் மொழிகளும் இந்நேரம் வழக்கத்தில் இருந்து அழிந்திருக்கும். 
16. வீட்டில் உள்ள குழந்தைகளும் பெற்றோர்களிடம் இந்தியில் தான் பேசிக் கொண்டிருந்திருப்பார்கள். இந்தி தெரியாதவர்கள் தமிழகத்தில் இருக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். 
17. தமிழகத்தில் தமிழில் வணிகம் செய்ய முடியாத நிலை உருவாகி இருக்கும். இந்தி தெரிந்தவர்களுக்கே தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
இவ்வாறு அடுக்கிக் கொண்டே போகலாம். தமிழர்கள் செய்த மொழிப் போராட்டத்தின் விளைவாக அனைத்து மாநில மொழிகளும் காப்பாற்றப்பட்டது என்பதில் நமக்கு பெருமையே ! இருப்பினும் இந்திய அரசின் இந்தித் திணிப்பு இன்னும் ஓயவில்லை. தமிழர்களின் மொழிப் போராட்டமும் முடியவில்லை.

முத்துகுமார் இறுதி ஊர்வலத்தில்


  • முத்துக்குமாரன் தந்த பேர் ஆயுதம்மான அவன் சடலத்தோடு இருந்த மூன்று நாட்களில் நான் கண்டவற்றையும் காதில் கேட்டவற்றையும் எனது சாட்சியமாய் பதிவு செய்கிறேன். 
  • தீர விசாரித்து மெய் காணும் அரசியல் ஞானம்மோ, அல்லது காண வேண்டிய அவசியத்திற்கான அரசியல் சார்போ என்னிடம் இல்லை. 
  • எந்த ஒரு தனிமனிதனின் இயக்கத்தின் உண்மையை அர்ப்பணிப்பை நான் கேள்விக்குள்ளாக்கவும் முயலவில்லை. 
  • அவரவர் அவர்களுக்கான நியாயங்களை புறக்கணித்து தம்மைத் தாமே சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டியக் காலத்தில் நாம் இருக்கிறோம் என்பதே நான் உணர்ந்து கொண்ட்து. 
  • என்னைப் போல் மூன்று நாட்களும் முத்துக்குமரனோடு இருந்தவர்கள் தங்கள் சாட்சியங்களைப் பதிவு செய்வது வருங்கால வரலாற்றிற்கு உதவும் என நம்புகிறேன். 

- இயக்குனர் ராம்
.

Thursday, January 29, 2015

நடுநிலை செய்திகளை காட்சி ஊடகங்களில் அறிய முடியாது:

நடுநிலை செய்திகளை காட்சி ஊடகங்களில் அறிய முடியாது

தமிழில்
  1. புதிய தலைமுறை - பச்சைமுத்து பாரிவேந்தருக்கு சொந்தமானது. இவர் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ள ஒரு கட்சியின் நிறுவனர். 
  2. தந்தி தொலைக்காட்சி - யின் ஒரு சார்பு நிலைப்பாடு உலகறிந்த உண்மை.
  3. சன் செய்திகள் - கலாநிதி மாறனுக்கு சொந்தம். இவர்கள் செய்தி சார்பு மாறிக்கொண்டேயிருக்கும்.
  4. ஜெயா செய்திகள், கலைஞர் செய்திகள் - முறையே அ.தி.மு.க ,தி.மு.க கட்சிகளின் தொலைக்காட்சிகள்.
தமிழில்தான் இப்படி என்றால் ஆங்கில செய்தி தொலைக்காட்சிகள் இதைவிட மோசமான நிலைமையில் உள்ளன:
  1. ஐபிஎன் - அம்பானிக்கு சொந்தம்.
  2. டிவி டுடே - பிர்லா குழுமத்தின் கையில். 
  3. நியுஸ் 24 - ன் உரிமையாளர்கள் ராஜீவ் சுக்லா, ரவி சங்கர் பிரசாத்
  4. இந்தியா டிவி - பா.ஜ.க தலைவர்களுக்கு சொந்தம்.
  5. இந்தியா நியுஸ் - காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான வினோத் சர்மா வுடையது. 
  6. என்டிடிவி - ஜிண்டால் மற்றும் சிதம்பரம் கையில்.
  7. ஜி நியுஸ் - பா.ஜ.க வின் ஆதரவாளர்களுக்கு உரிமையானது.
  8. டைம்ஸ் நௌ - கார்ப்பரேட்களின் செய்தி நிறுவனம். மோடிக்கு முழுக்க முழுக்க ஆதரவு. அவ்வப்போது சிறிது காங்கிரசுக்கும் ஆதரவு எனும் தனது கார்ப்பரேட் நாகரிகத்தை காப்பாற்றிக்கொள்ளும் நிறுவனம்.
உண்மை செய்திகளை நாம் எங்கே தேடுவது.

எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு - வாழ்க திருவள்ளுவர்

அவுரங்க சீப்... அவுரங்க சீப்.. ன்னு ஒரு மன்னன் இருந்தானாம்..

அவுரங்க சீப்... அவுரங்க சீப்.. ன்னு ஒரு மன்னன் இருந்தானாம்..
.
அப்போ நாட்டிலே இருக்கும் சொத்தெல்லாம் மன்னனுக்குதான் சொந்தமானதாம்.. அத்தகைய காலத்தில், அம்மன்னன் தன் கையால் உழைத்து, அதன் மூலம் வரும் வருமானத்தில் தான் சாப்பிட்டே வந்தானாம்..
.
ஆனால், அவனை கெட்டவன் என்று சொல்கிறார்கள் கேணக் கிறுக்கர்கள்..
.
இப்போ.. பிரதமர்... பிரதமர்...ன்னு ஒருத்தர் இருக்காப்ல,
.
அவருக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.. 
வசிக்க வசிப்பிடம் கொடுக்கப்படுகிறது.. 
எதுவும் அவருக்கு சொந்தமில்லை..

ஆனால் ஒரு மணி நேரத்திற்க்காக பத்து லட்சம் ரூபாய்க்கு ஆடை அணிகிறார்.. உல்லாசமாக உலகை சுற்றி வருகிறார்..
.
போங்கடா போக்கத்த பசங்களா..
.
---பேச்சு முத்து----

உமாசங்கர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை

நேற்று (28) ஆனந்த விகடனிலிருந்து உமாசங்கர் IAS மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கருத்து கேட்டனர். நான் சொன்னது:

1. அவர் ஒரு அரசு உயர் அதிகாரியாக இருந்தாலும் அவருக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் உண்டு. அரசியல் சட்டத்தின் 25ம் பிரிவின்படி எந்த ஒரு குடிமகன் அலலது குடிமகளுக்கும் தான் விரும்பும் மதத்தை 1.கடைபிடிக்க 2.வெளிப்படுத்த 3. பிரச்சாரம் செய்ய உரிமை உண்டு.

2. கிறிஸ்தவம், இஸ்லாம், பவுத்தம் முதலான மதங்கள் proseletising religions. இந்த் மதங்களைச் சேர்ந்தோர் தமக்குக் கிடைத்த "நற்செய்தியை"ப் பிறருக்கும் அறிவிப்பது தம் மதக் கடமைகளில் ஒன்று என நம்புகின்றனர். அந்த வகையில் உமாசங்கர் அவரது நம்பிக்கையைக் கடைபிடிக்கிறார்.

3. உமாசங்கரின் மதப்பிரச்சாரம் அ. பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்காத வரைக்கும் ஆ. அவரது அரசதிகாரத்தைத் தன் மதப்பிரச்சார நடவடிக்கைகட்குப் பயன்படுத்தாத வரைக்கும், அவர் அலுவலக நேரம் அல்லாத தருணங்களில் மதப் பிரச்சாரம் செய்வதைத் தடுக்க இயலாது.

ஆனந்த விகடன் தரப்பிலிருந்து கேட்கப்பட்ட அடுத்த கேள்வி: 
"உமாசங்கர் தான் தனது நற்செய்திக் கூட்டங்களின் ஊடாக நோய்களைக் குணப்படுத்துவதாகச் சொல்கிறாரே அது மூட நம்பிக்கை இல்லையா?"

நான் சொன்னது: 
அது மூட நம்பிக்கை என்பதுதான் என் கருத்து. இதுமட்டுமல்ல இந்தத் "தொடு சிகிச்சை" முதலியவற்றையும் கூடத்தான் நான் மூட நம்பிக்கை எனக் கருதுகிறேன். ஆனால் இந்த மூட நம்பிக்கைகளை எதிர்கொள்வதற்கான வழி பகுத்தறிவுப் பிரச்சாரந்தானே ஒழிய இப்படி selective ஆகப் பழி வாங்குவதுஅல்ல.

9000 ஆண்டுகளுக்கு முன் எங்கள் நாட்டில் ப்ளாஸ்டிக் சர்ஜரி இருந்தது என ஒரு பிரதமர் உளறுவது, டெஸ்ட் டியூப் பேபி தொழில் நுட்பம் இருந்தது எனப் பாட நூல்களில் எழுதுவது இதையெல்லாம் விடவா உமாசங்கர் சொல்வது அபத்தமானது?

Marx Anthonisamy
--------------------------------------------------------------------------------------------------------------

உமா சங்கர் விவகாரத்தில் உமா சங்கருக்கு மதப்ப்பிரச்சாரம் செய்ய உரிமை இருக்கிறது என்று வாதாடுவதற்க்குப் பதில் அரசு அதிகாரிகள் மட்டுமல்ல, எம்.எல்.ஏ, எம்பிக்கள், அமைச்சர்கள், பிரதமர் என யாரும் தங்கள் மதச்சார்புக்ளை வெளிப்படையாக பேசக் கூடாது என்ற கோரிக்கையை நாம் வலியுறுத்த வேண்டும்.

மோடி அமெரிக்க சென்றபோது பகவத் கீதையை ஒபாமாவுக்கு நினைவுப் பரிசாக வழங்கினார்.அதே போல சபர்மதி ஆசிரமத்திற்கு வந்த சீன அதிபர் ஜி ஜிங்பிங்கிற்கு நரேந்திர மோடி, சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட பகவத் கீதையை பரிசளித்தார். ஒரு மத சார்பற்ற நாட்டின் அரசியல் சாசனத்தின் பேரால் உறுதிமொழியேற்ற ஒரு பிரதமர் மதப் பிரதியான கீதையை பிற நாட்டு அதிபர்களுக்கு பரிசாக கொடுக்கிறார் என்றால் அது பச்சையான மதப் பிரச்சாரம் இல்லாமல் வேறு என்ன? 

அதே போல பகவத் கீதை தேசிய நூலாக அறிவிக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார். பா.ஜ.க அமைச்சர்களும் எம்.பிக்களும் நாள்தோறும் பேசி வரும் மதவெறிப் பேச்சுகளுக்கு எல்லையே இல்லை. மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி “ராமரை பின்பற்றுபவர்களின் ஆட்சி வேண்டுமா அல்லது முறைதவறிப் பிறந்தவர்களின் ஆட்சி வேண்டுமா என்று டெல்லி மக்கள் முடிவு செய்யவேண்டும்” என்று பகிரங்கமாக பேசினார்.

அரசியல்வாதிகள் இப்படி என்றால் மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செயல்பட வேண்டி இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் விஞ்ஞானிகள் திருப்பதி வெங்கடாசலபதி, காளகஸ்தி கோயில்களில் வழிபாடு செய்தனர். உமா சங்கர் 'அரசு அலுவலகங்களில் சரஸ்வதி பூஜைகொண்டாடலாம் என்றால் நான் ஏன் கிறிஸ்துவ பிரச்சாரம் பண்ணக் கூடாது?' - என்று கேட்பதில் அர்த்தம் இருக்கிறது.

பிரச்சினை மிகவும் எளியையானது. இந்துமதம் சார்ந்த அத்தனையும் மதம் சார்ந்த ஒன்றாக அல்லாமல் அனைவருக்குமான பொதுவான இந்தியப் பண்பாடாகவும் இயல்பான உரிமைகளாகவும் இங்கு கருதப்படுகின்றன. இந்துக்கள் அல்லாதவர்களுடைய நம்பிகைகள் அனைத்தும் மதம் சார்ந்த்தாக, அன்னியமானதாக ஆபத்தானதாக மாற்றப்படுகின்றன. இந்த உளவியல் பெரும்பான்மைவாத பண்பாட்டு பாசிசத்திற்கே இட்டுச் செல்லும்.


அர்சியல்வாதிகள் – அரசு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நோன்புக் கஞ்சி குடிக்கவும் வேண்டாம், சங்கராச்சாரியார் காலில் விழவும் வேண்டாம், ஜெபக் கூட்டங்களில் பங்கெடுக்கவும் வேண்டாம். மதசார்பற்ற,பாரபட்சமற்ற அரசியல் அதிகாரத்தையும் நிர்வாக அதிகாரத்தையும் சந்தேகத்திற்கிடமில்லாதவகையில் முன்னெடுக்க வேண்டுமென்றால் அரசு அமைப்புகளும் அதன் பிரதிநிதிகளும் எல்லாவிதமான மத அடையாளங்களிலிருந்தும் விலகியிருக்கவேண்டும். அதுவே சட்டப்படியும் தார்மீகரீதியாகவும் சரியாக இருக்கும்.

Manushya Puthiran

--------------------------------------------------------------------------------------------------------------

நல்ல பதில். எல்லாருக்கும் உள்ள மதத்தை பரப்பும் உரிமை அரசு அதிகாரிகளுக்கு இல்லை என்பது தவறு.

மூடநம்பிக்கை என்ற விஷயத்தில் தீவிர பகுத்தறிவுவாதம் மட்டும்தான் 'எல்லாமே மூட நம்பிக்கை' என தெளிவாக பேசுகிறது. அதன்படி பார்த்தால் மதங்கள் அனைத்தையும் தடை செய்ய வேண்டி வரலாம்.

ஆனால், மதத்தை நம்பிக்கை என சொல்லி ஏற்றபின் 'சாதா நம்பிக்கை' மற்றும் 'மூட நம்பிக்கை' இடையேயான கோடு தெளிவற்றதாக உள்ளது.

அரசு சார்ந்த அறநிலையத்துறை கூட 'சனிபெயர்ச்சி அன்று லட்சார்சனையில் பங்கு பெற்று சனீஸ்வர பகவான் அருளை பெறுங்கள்" என விளம்பரம் வெளியிடுகிறது. இது மூடநம்பிக்கை பரப்பும் செயல் என கூற முடியும்.

நீங்கள் சொன்னபடி, இவற்றை எல்லாம் தனிநபர் விருப்பம் என்ற வகையில் விட்டுவிட்டு, பகுத்தறிவு பிரச்சாரம் மூலம் எதிர்கொள்வதே சரி.

இங்கே வேறொரு கோணமும் முக்கியம். ஒரு செயல் மூடநம்பிக்கை என உணர்ந்தும், அது பிடித்திருக்கிறது என்பதால் செய்ய முடியும். சனிக்கிழமைகளில் சனீச்வரன் சன்னதியில் விளக்கு ஏற்றுவதால் பயனில்லை என அறிவு சொன்னாலும், காலாற நடந்து போய் விளக்கேற்றுவது பிடித்திருக்கிறது.

பத்து ரூபாய் செலவு. மற்றபடி என்ன நஷ்டம்?

Venkatesan Chakaravarthy 

ஆர்எஸ்எஸ் ஆள் , என்று சொன்னால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகின்றது

கேள்வி :- அடேய் கிளிமூக்கா, ஆ ஊ என்றால், குருமூர்த்தி ஒரு ஆர்எஸ்எஸ் ஆள், கிழக்கு பத்ரி ஒரு ஆர்எஸ்எஸ் ஆள், முக்குத் தெரு பிள்ளையார் கோவில் ஐயர் ஒரு ஆர்எஸ்எஸ் ஆள் என்று அடிச்சுவிடுறியே அவர்கள் எல்லாம் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் என்பதற்கு உன்னிடம் அவர்களின் அடையாள அட்டை ஆதாரமிருக்கின்றதா ?
.
பதில் :- தமிழ்நாட்டில் கலகக்காரர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பாதுகாப்புப் புகலிடம் பெரியார் திடலும் பெரியாரிய கடல் திராவிடர் கழகமும்தான். ஒரு சில மாதங்களுக்கு முன்னர், பழைய குருநாதர் மூலம், திராவிடர் கழகத்தில் எனது இந்தப் புனைப்பெயரில் உறுப்பினராக திராவிடர் கழக மேலிடத்தை அணுகினேன். உறுப்பினராக வேண்டும் என்றால் உண்மையான பெயர் விபரங்களுடன் மட்டும்தான் சேர முடியும், பேக்கு ஐடி, வழிப்போக்கு பெயர் என்பதெல்லாம் கூடாது என்று மூக்கில் குத்திவிட்டார்கள்.
.
தேசவிரோத இயக்கம் என்று வேதவிற்பன்னர்களால் ஏசப்படும் திகவில் கூட சட்டப்படி மட்டுமே உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகின்றது. ஆனால் தேசபக்தி ஆர்எஸ்எஸ் அமைப்பில் உறுப்பினர் பதிவு , உறுபினர் ஆவணம் என்று எதுவுமே கிடையாது .
.
திராவிட இயக்கங்களைப் போன்று , ஆர்எஸ்எஸ் ஆவணப்படுத்தப்பட்ட கட்டமைப்பைக் கொண்டதல்ல. அவ்வமைப்பிற்கு சட்டவிதிமுறைகளோ , உள்ளமைப்பு தேர்தல் முறைகளோ கிடையாது. ஆர்எஸ்எஸ் தலைமையைத் தவிர வேறு யாருக்கும் நேரடி ஆர்எஸ்எஸ் ஆவணப்படுத்தப்பட்ட அடையாளம் கிடையாது. ஆர்எஸ்எஸ் உளவியல் ரீதியாக உறுப்பினர்களை சேர்க்கும் ஒரு அமைப்பு. மேலும் "பார்ப்பனிய தேசிய" ஆதரவாளர்கள் பெரும்பாலானோர் அரசாங்க அதிகாரிகளாக இருப்பதால் . அவர்களால் நேரிடையாக வேறோர் அமைப்பில் , அதுவும் அன்று காந்தியைக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பில் உறுப்பினராக சேர முடியாது. நேரடி உறுப்பினர் பதிவு முறை இல்லாததால், "காரியம்" முடிந்தவுடன், காரியகர்த்தாக்களுக்கும் தமக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று கழட்டிவிட்டுவிடலாம். சட்டரீதியிலும் ஒன்றும் செய்ய முடியாது. இப்படிசிலப்பல காரணங்களால் ஆர்எஸ்எஸ் அமைப்பு உறுப்பினர்களை ஆவணப்படுத்துவதில்லை.
.
வெளிப்படையாகவோ , ரகசியமாகவோ ஒருவர் ஷாகாவில் பங்கேற்றாலோ அல்லது ஆர்எஸ்எஸ் கருத்தியல்களை பதிப்பித்தோ எழுதியோ , அதை முன்னிறுத்தி பின்புலத்தில் இயங்கினாலோ அவர் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்று தாராளமாக சொல்லலாம். அது எல்லாம் இருக்கட்டும், ஆர்எஸ்எஸ் ஆள் , என்று சொன்னால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகின்றது , ஆர்எஸ்எஸ் என்ன அவ்வளவு பெரிய பயங்கரவாத அமைப்பா என்ன.....!!??.


கிளிமூக்கு அரக்கன்

மாதவிலக்கு நாட்களில் பெண்கள் வேலைக்கு போவதுதான்

மாதவிலக்கு நாட்களில் பெண்கள் வேலைக்கு போவதுதான் 
பாரத தேசத்தின் மாபெரும் சுற்றுச் சூழல் கேடு, 
அனைத்து சீரழிவுகளுக்கும் காரணம்
- சங்கராச்சாரி

ஏன் எல்லா ஜாதி மாணவர்களும் ஒன்றாக தங்க அனுமதிவில்லை

இன்றைய‬ தினம் பக்கத்து ஊருக்கு ஒரு வேலையாக சென்றேன். அங்கே ஆதிதிராவிடர் மாணவர் விடுதியை கடந்து சென்றபோது எனக்கும் இதுபோன்ற கேள்வி எழுந்தது, ஏன் எல்லா ஜாதி மாணவர்களும் ஒன்றாக தங்க அனுமதிவில்லை!
  • இஙக எல்லானுமே மதிப்பெண்ணில் மட்டும் தான் சமத்துவம் பேசுவானுஙக!
  • அரசு வேலை வாயப்பில் சமத்துவம் பேசுவானுஙக! 
  • சாதிசானறிதழை ஒழிக்காம இநதியா உருப்படாதுணணு துள்ளி குதிப்பானுஙக!
  • இட ஒதுக்கீட்டால தான் நாடேகெட்டு நாறுகிறதெனறு ஒப்பாரி வைப்பானுஙக மொள்ளமாறி பசஙக!
பட்டியலின மக்களை தவிர பெரும்பானமையான பலபேர், பட்டியலின மக்களில் ஒருவன் படித்து உயர் பதவிக்கு வநது விட்டாலே, நெஞ்சு முதல் குஞ்சு வரை எரிஞ்சி, அவிநது நீறி - "இடஒதுக்கீட்டால திறமையில்லாதவனும், தகுதியில்லாதவனும் உயர்பதவிக்கு வநது விட்டானுக" - எனறு பெறாமையில் புழுத்து சாகாதவன்- இஙகே மிக குறைவு!!

முறபடுத்தபட்டோர்கள் 100 சதஇட ஒதுக்கீட்டை தாஙகள் மட்டும் முழுமையாக அனுபவிக்கிற போது 100 சதம அவர்கள படிக்கிற போது பட்டியலின மக்கள் படிக்க தடைவிதித்திருநதாகள்! ஒருசதம் கூட அனறு படிக்கவில்லை தடையால்!

ஆனால் அடுத்தவன் கல்வியுரிமையை, வாள முனையிலும், வன்முறையிலும், பெருமபானமை பலத்திலும், ஆணட மன்னர்களுக்கு அரைஅடி வெள்ளை தோல் நிலத்தை காட்டியும் / கூட்டியும் / விரித்தும் - கொடுத்து பட்டியலின மக்களை பல தலைமுறைக்கு படிக்கவிடாமல், பல நுாறு வருடஙகள் பினனே தள்ளிய அயோக்கியதனத்தை எவனும் இஙகே பேசுவதுமில்லை! பாடமாக வைப்பதுமில்லை!

திராவிட திருட்டு ஓட்டு பொறுக்கி கூட்டஙகளின வரலாறு பள்ளியில பாடமாககபட்டது. 120 வகையானதீணடாமை தடைகளைபோட்டு பட்டியலின மக்களை, மிருகஙகளை விடகேவலமாக நடத்திய வரலாறு இஙகே குழி தோணடி புதைக்கபட்டது. அதனால் தான கண்டகண்ட நாயகள எல்லாம் 2000 வருடமாக பட்டியலின மக்களை படிக்கவிடாமல் படித்து, கேவலம் ஒரு குண்டூசியை கூட கண்டுபிடிக்க வக்கற்ற முட்டா கூமுட்டை கூட்டஙகள்- பட்டியலின மக்களின் 67 வருட படிப்பை கிணடல் அடிக்கிறார்கள்! திறமையற்றவர்களாம், தகுதியற்றவாகளாம்!

அடுத்தது தமிழ்நாட்டில் இருக்கும் 69 சத இடஒதுக்கீட்டை எதோ பட்டியலின மக்கள மட்டுமே அனுபவிக்கிற மாதிரி. பிறபடுத்தபட்டோனும், மிகமிக பிற்படுத்தபட்டோனும் 50 சத இடஒதுக்கீட்டை அவர்கள அனுபவித்து விட்டு, எல்லாமே பட்டியலின மக்களுக்கே அரசு செயகிறது - என்று கண்ணீரும் கம்பலையுமாக நீலிக்கண்ணீர் வடித்து குறறுயிரும், குலையுயிருமாய கஞ்சிககு வழியில்லாம நடு தெருவில பஞ்ச பரதேசியாய கிடக்கிறார்கள்.

இனறு பள்ளி மாணவர்கள மத்தியில் சாதிவெறியை துாணடிவிடுவதே இநத மதிபபெண் வித்தியாசம்தான்! ஏன இடஓதுக்கீடு? என்று எவனாவது பள்ளி மாணவர்களுக்கு பாடம் வைத்திருக்கிறனா?

தீண்டாமை ஒரு பாவச்செயல்! தீணடாமை ஒரு பெருஙகுற்றம்! தீண்டாமை மனிதகுலத்திறகு எதிரானது! என்று ப்ளளி புத்தகத்தில் முதல் பக்கத்தில் அச்சிட்டிருக்கிறார்களே! அதறகு என்ன காரணம்! 120 வகை தீணடாமை தடைகள் எனனெ்ன்ன்? பட்டியலின மக்கள பட்ட கஷ்டஙகள என்னெனன - என்று எவனாவது பாட்ம் வைத்திருக்கிறானா? இநத திராவிட திருட்டு ஓட்டு பொறுக்கி கூட்டஙகளும், தேசிய அரசியல் பேசியவனும், பொதுவுடமை பேசுகிறவனும் இதைபற்றி வாய திறக்கிறானா?

கண்டகண்ட நாயகளின் சரித்திரஙகள் எல்லாம் வாழ்ககைககு அவசியமேயில்லாத கறபனை கடவள பயலகளின கதைகள் இஙகே பாடத்திலிருக்கினறன! வௌளைக்காரன இநத நாட்டை அடிமை படுத்தியதையும் அவன் செயத கொடுமைகளையும் திரித்து எழுத முடிகின்றது! ஆனால் இநத நாட்டின மண்ணின மைநதாகளை அடிமை படுத்தியதையும் உலகத்திலே எநத நாட்டு மனிதனும் செய்யாத அயோக்கிய தனஙகளை அநியாயஙகளை செயத ஆதிக்க சாதிவெறி அயோக்கிய நாயகளின் கொடுமைகளை பள்ளியில் பாடமாக வைத்தார்களா?

செக்கிழுத்த வஉசி கதை பாடமாகயிருக்கிறது! ஆனால் பட்டியலின் மக்களி ஆதிக்க சாதி தெருவில் நடக்க வேணடுமென்றால் கழுத்தில எச்சி சட்டியை கட்டிக கொணடு முதுகில் தெனனை ஓலையைகட்டி இழுத்துபோக வைத்த காட்டு மிராணடி கூட்டஙகளின கேடு கெட்ட கதைகள் பாடமாக்க பட்டிருக்கிறதா??

வௌளைக்காரன துப்பாக்கியால் இநதியர்களை சுட்டுவீழ்த்திய கதைகள பாடமாகயிருக்கிறது! ஆனால் பட்டியலின் மக்களின் குடிசைகள் பல ஆயிரம்இநத நாட்டில சுட்டு போசுக்க பட்ட வரலாறு பாடமாக்கபட்டதா? அப்படி பாடமாக்கபட்டிருநதால் படிக்கிற மாணவர்களுக்கு உணமை புரிநதிருக்கும்! இடஒதுக்கீட்டின நியாயத்தை உணர்நதிருப்பாகள்!

திருட்டு திராவிட ஓட்டு பொறுக்கி கூட்டஙகளும், பொதுவுடமை கட்சிகளும், தேசியவாதிகளும் பட்டியலின மக்களை வைத்து அரசியல் லாபம் பார்த்தார்களே தவிர, அரசியல் நடத்தினாகளே தவிர,
பார்ப்பானை எதிக்க பட்டியலின மக்களையும் தஙகளுக்கு பயனபடுத்தி இன்று, பாப்பானை வீழ்ததி பார்ப்பானுக்கு பதிலாக பிசியும் எம்பிசியும் கலக்கிகொணடிருக்கிறாகள்!

காலனி வீடு கட்டி தநதாலும் ஊருக்கு வெளியே தான கட்டிதருவாகள்! சமத்துவபுரம் கணடாலும் ஊருக்கு வெளியே தான சமமாக சமத்துவம் காணபார்கள்! ஆதி திராவிட ப்ள்ளி கட்டி தநதாலும் அப்படியே, ஏன அனைத்து மாணவர்களையும் விடுதிகளில் ஒனறாக தஙகவிடவில்லை?

ஓட்டு வாஙகுவது எப்படி? சாதியை வைத்து தானே. திராவிடஓட்டு பொறுக்கி கூட்டஙகளும், இநதிய தேசிய களவாணி கூட்டஙகள்ளும், மக்களின சாதி வெறியை பயனபடுத்தி தீ மூட்டி குளிர் காயகினறன! இவர்கள நினைத்திருநதால் இநத 67 வருடஙகளில் சமத்துவ சமுதாயம் கண்டிருக்க முடியாதா? அட்லீஸ்ட் சாதி வெறியையாவது தணித்திருக்க முடியாதா? ஏன அமெரிக்காவில் வௌளையாகள் கறுப்பு இன மக்களுக்கு செயத அநியாயஙகளுக்கு அவர்களின வாரிசுகள் இனறு கறுப்பின மக்களிடம் தஙகள் முன்னோகள் செயத தவறுக்காக மன்னிப்பு கேட்டிருக்கிறார்களே! காரணம்என்ன?

வரலாற்று உணமைகளை படித்து அவர்கள் ஒத்துக கொணடு தஙகளை திருத்த முனவருகிறாகள்! கறுப்பின மக்களை இநத தலைமுறை மக்கள் ஓரளவுக்கேனும் சமத்துவமாக பாக்க முன வருகிறார்களே! இநத ஓட்டுபொறுக்கிகளுக்கு சமத்துவமா முக்கியம்? அதன் விளைவுகள்தான் அரசின அத்தனை அலுவல்களையும் ஆதிக்க சாதி தெருவில வைத்து விட்டு சேரியை பறக்கணித்திருப்பதும, ஆதி திராவிடமாணவர்களின பள்ளி மற்றும் விடுதிகளை ஊருக்கு வெளியே ஒதுக்கி வைத்திருப்பதும, பொதுவான பள்ளி ஒன்று கூட சேரி தெருவில கட்டி கொடுக்காததும் இநத ஓட்டு பொறுக்கிகளின் சமத்துவ சாதனைக்கான சாட்சிகள்!

தநதைபெரியா கூட காலனியை ஊருக்குளளே கட்டிக்கொடுஙகள் இடமிலலையெனறால் அடுக்குமாடியாக கட்டிக் கொடுஙகள்! சேரியை கூட்டாதீாகள், குறைக்கும் வழியை, காணணுஙகள் - என்று கூடகோரிக்கை வைத்தார்! ஓட்டுபொறுக்கி கூட்டஙகளுக்கு சமத்துவமா அல்லது சாதி நல்லிணக்கமா முக்கியம்? சாதி ஒழிப்பா முக்கியம்? ஓட்டு தானே முக்கியம்? சும்மாவா தநதை பெரியார் சொன்னார்? தேர்தல் பாதை திருடன பாதை என்று? அரசியல்வாதிகளை அயோக்கியாகள் எனறு தநதை பெரியார் திட்ட இதுவும் ஒரு காரணமே! மானம் சூடு சொரணையற்ற கூட்டஙகள்! ஒரு ஊருக்குள இன்னொரு ஊர் (சேரி) பள்ளி, விடுதி கேவலமாகயிலலையா?

இது கணிணி யுகமா? அல்லது காட்டுமிராணடி யுகமா?
இஙகு நடப்பதும் கறகால ஆட்சி தான்!!

- ‎தோழர்‬ ஆன்றணி தஞசை அவர்கள பதிவின் பின்னுாட்த்திலிருநது

பிரபஞ்சன் அவர்களின் பதில்

ஆனந்த விகடனில் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களிடம் கேட்ட கேள்விக்கு அவரின் பதில்:
சமூக உணர்வுள்ள எழுத்தாளர் என்ற முறையில் சமகால சமூக தமிழ்ச் சூழலின் பிரச்சனைகளாக நீங்கள் கருதுபவை?
டாகடர் ராமதாஸ் தலித் மக்களுக்கு எதிராக இடைநிலை சாதி அமைப்புகளை திரட்டுகிறார். இது மிகவும் ஆபத்தானது. காதலை இவர்கள் எதிர்ப்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. ஒன்றிரண்டு இடங்களில் நடைபெறும் தவறுகளை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்தமாக காதல் திருமணங்க்ளை எதிர்ப்பது தவறு.
இன்னொருபுறம் பாஜக மதவாதத்தையும் பண்பாட்டு திணிப்பையும் மேற்கொள்ள பார்க்கிறது. இதை எதிர்க்க வேண்டிய திராவிட கட்சியான திமுக தன் அடிப்படையை இழந்து நிற்கிறது. தமிழ் தேசியவாதிகள் தெலுங்கு கன்னடம் பேசும் சாதியினரை தமிழர்களுக்கு எதிராக சித்தரிக்கிறார்கள். இது அடிப்படையிலேயே தவறானது. தமிழர்களின் பண்பாட்டுக்கு அவர்களின் பங்கு அளப்பரியது.
திருமாவளவன் போன்ற தலித் தலைவர்கள் சமூக மாற்றத்தை முன்னெடுப்பார்கள் என்று நம்புகிறேன். ஆனால் தலித் மக்களும் அருந்ததியர்களின் விடுதலை பற்றி கவலை படுவதில்லை. ஒரு தலித் தலைவரே அருந்ததியர்களின் உள் இட ஓதுக்கிட்டுக்கு எதிராக வழக்கு தொடுக்கிறார். ஒடுக்கப்பட்டவர்களில் ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கும் அருந்ததியர் விடுதலையை நாம் ஆதரிக்க வேண்டும். 
அதே போல எல்லா சாதி ஆண்களாலும் ஒடுக்கப்படுபவளாக பெண் இருக்கிறாள். பெண் விடுதலை இல்லாமல், ஒரு சமூகம் மேன்மையுறாது.

Tuesday, January 27, 2015

தேசியக்கொடியை அவமதித்துவிட்டார்

தேசியக்கொடியை ஹமீத் அண்சாரி அவமதித்துவிட்டார் என்றால் தேசத்திற்க்காக உயிரை நீத்த இராணுவ அதிகாரியை மோடி அவமதித்துவிட்டார் என்று சொல்லலாமா??







கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 11 கட்டளைகள்.

நீங்கள் ஏதேனும் சூழ்நிலையில் கைது செய்யப்பட்டால் அந்த சமயம் உங்கள் உரிமை என்ன..?

கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 11 கட்டளைகள்.

1. கைது செய்கின்ற அதிகாரி அடையாள அட்டை பொருத்தியிருக்கவேண்டும்.
2. கைது செய்தவுடன் அந்த இடத்திலே கைது குறிப்பு தயாரிக்க வேண்டும். 
3. கைது செய்யப்படும் தகவலை உறவினர், நண்பர், தெரிந்தவருக்குத் தெரிவிக்க வேண்டும். 
4. கைது செய்யப்பட்ட விபரம் 8 மணி முதல் 12 மணி நேரத்திற்குள் உறவினருக்கு அறிவிக்க வேண்டும். 
5. தான் விரும்பும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பதற்கான உரிமை உண்டு என்பதை கைது செய்யப்பட்டவருக்குத் தெரிவிக்க வேண்டும் 
6. காவலில் உள்ள இடத்தில் கைது விபரம், கைது குறித்தத் தகவல் தெரிவிக்கப்பட்டவிபரம் மற்றும் எந்த அதிகாரியின் பொறுப்பில் இருக்கிறார் என்ற விபரங்களை பதிவேட்டில் குறிக்க வேண்டும்… 
7. கைது செய்யப்பட்டவர் உடல் நிலையைப் பரிசோதித்துச் சோதனைக் குறிப்பு தயார் செய்ய வேண்டும். 
8. கைது செய்யப்பட்டவரை 48 மணி நேரத்திற்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். 
9. கைது செய்யப்பட்ட ஆவணங்களைக் குற்றவியல் நடுவருக்கு அனுப்ப வேண்டும். 
10. கைது செய்யப்பட்டவரை விசாரிக்கும்போது வழக்கறிஞர் உடனிருக்க வேண்டும். 
11. கைது பற்றிய தகவல் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும்.

அப்படி என்னதான் பேசியிருப்பார்கள்




அப்படி என்னதான் பேசியிருப்பார்கள்?
56" இஞ்ச் மார்பு, இவ்வளவு கூனி குறுகி எதற்காக?

- Puliangudi Seyad Ali
--------------------------------------------------------------------------------------------------------------

வல்லரசை எதிர்த்து நின்று அடிபணிய மறுத்ததுதான்
எங்களின் அடையாளம்.

ஏகாதிபத்திய கால்களை நக்கி பிழைத்து பழகி போனது
அவாளின் அடையாளம்.

போர்த்துக்கிஷியர்களை கட்டுமரம் கொண்டு 
எதிர்த்து நின்ற குஞ்சாலி மரைக்காயர்களை தொடர்ந்து 

பிரிட்டிஷ் வல்லரசை 
எதிர்த்து நின்ற திப்பு சுல்தானிலிருந்து 

உலக ஏகாபத்திய எதிர்ப்புதான் எங்கள் அடையாளம். 
இதுவரை பணிந்ததில்லை எங்கள் தலைகள்.

- வலையுகம் ஹைதர் அலி

--------------------------------------------------------------------------------------------------------------

ஏண்டா உனக்கு வெக்கமா இல்ல, 
உன்பேர சட்ட புல்லா போட்டு வச்சிருக்கே.
நீயெல்லாம் இந்த நாட்டோட பிரதமர்.

உன்ன சொல்லி குத்தமில்ல...
உனக்கெல்லாம் ஓட்டு போட்ட மக்கள சொல்லணும்.

இதுல நீயெல்லாம் ன் பொண்டாட்டிக்கி 100 பட்டு புடவை வாங்கிதாரே...
உன் பொண்டாட்டிக்கு ஒரு கூறபுடவையாவது வாங்கி கொடுத்து இருக்கியா... 
சரி விடு... அவ இதெல்லாம் கட்டுவானாவது உனக்கு தெரியுமா... 

என்ன கரெக்ட் பண்ண பாக்குறியா?
பிச்சிப்பிபுடுவேன் பிச்சி !


- பா.ஜ.க விற்கு எதிரான மாணவர்கள்

மனைவியை நேசித்தால்

"உங்கள் மனைவியை நேசித்தால் இந்து மதத்திற்கு மாறுங்கள்" - பாலிவுட் ‘கான்’ நடிகர்களுக்கு இந்து மகாசபை சவால்!

மனைவியை நேசிக்க இந்து மதமாக இருக்க வேண்டாம், ஒரு நல்ல மனிதனாக இருந்தால் போதும். மதம் மதம் என்று சொல்லி இந்தியாவை சுடுகாடாக மாற்றிராதிங்க.!!!

மனைவியை நேசித்தால்தான் - இந்து என்றால், 
மனைவியை நேசிக்காதவர்களை இந்து மதத்தை விட்டு விரட்டுங்கப்பா !?

முதல் ஆளு நம்ம மோடிதான்!

-Ravi Kumar

Friday, January 23, 2015

சிறுநீரக கல் பிரச்சினைக்கு

சிறுநீரக கல் பிரச்சினைக்கு ஆபரேஷன் (அறுவை சிகிச்சை) இல்லாமல் இயற்கை முறையில் குணப்படுத்தலாம். 

ஆண் பெண் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் பகிருங்கள்.!

சீறுநீர் கல்லடைப்பு இருக்கிறது அறுவை சிகிச்சை மூலம் தான் குணப்படுத்த முடியும் என்ற பேச்சுக்கு இனி இடமே இல்லை. எந்த அறுவை சிகிச்சையும் இல்லாமல் பணச்செலவே இல்லாமல் இயற்கை முறைப்படி உடனடியாக குணப்படுத்தலாம். குணமடைந்தவரின் சிறப்பு பேட்டியையும் இத்துடன் இணைத்துள்ளோம்.

மனிதனுக்கு நோய்வந்த போது அதை குணப்படுத்த நம் சித்தர்கள் எளிமையான இயற்கை மருத்துவ முறையை நமக்கு அளித்தனர். மனிதனை நோயிலிருந்து குணப்படுத்த வேண்டும் அடுத்த மனிதனுக்கும் தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை நாளடைவில் ஒருவருக்கொருவர் பொறாமை கொண்டு பணத்துக்காக சிதைந்து விட்டது. இயற்கை மருத்துவம் என்றால் உணவே மருந்து,மருந்தே உணவு என்ற நோக்கத்தில் நாம் இதை இப்போது தூசு தட்டி படிக்க ஆரம்பித்திருக்கிறோம். இதற்க்கு எல்லாம் வல்ல இறைவனின் ஆசியும் அனைத்து சித்தர்களின் ஆசியும் நடத்துதலும் எங்களுக்கு தேவை.

படத்தில் மேலே காணப்படும் நபர் பெயர் பெ.முத்துகிருஷ்ணன் இவர் ஒரு விவசாயி சொந்த ஊர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம். கடந்த மாதம் இவர் சிறுநீரக கல் பிரச்சினையால் பெரும் அவதிபட்டார். சிறுநீர் கழிக்க முடியாமல் மருத்துவமனைக்கே செல்லாத இந்த நபர் வலி தாங்க முடியாமல் மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் (Scan) செய்து பார்த்ததில் சிறுநீரகத்தில் கல்லடைப்பு இருக்கிறது. உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறி அனுப்பி விட்டனர். இவர் மேலும் ஒரு மருத்துவமனைக்கு சென்று அங்கும் ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார். இரண்டு முடிவுகளுமே ஒரே மாதிரியாக இருக்க ஆபரேஷன் மூன்று தினங்கள் கழித்து வைத்துக்கொள்லலாம் அதுவரை இந்த மாத்திரையை சாப்பிடுங்கள் என்ற கூறி மருத்துவர் இவரை அனுப்பி விட்டனர்.

அடுத்த நாள் காலையில் நாம் இவரை சந்தித்தோம் சிறுநீர் கழிக்க முடியாமல் வலியால் இவர் பட்ட துன்பம் பார்க்க முடியாமல் ஏதாவது இயற்கை மருந்து இருக்கிறதா என்று தேடிபார்த்த போது ஒரு வழி கிடைத்தது. அதாவது குறைந்தது உங்களின் உயர அளவுள்ள வாழைத்தார் போடாத வாழை மரத்தை, உங்களின் இடுப்பளவு உயரத்துக்கு சம மட்டமாக வெட்டி விடவும். இப்போது வாழைப்பட்டைகளுக்கு நடுவே, வாழைத் தண்டு என்று சொல்லப்படும் அதன் குருத்து இருக்கும். இக்குருத்தை உங்களது கையின் நடு விரல் நீளத்திற்கு நோண்டி எடுத்து விட வேண்டும். இவைகளை கட்டாயம் சூரியனின் மறைவுக்கு பின்னரே செய்ய வேண்டும்.

நோண்டி எடுக்கப்பட்ட வாழை:



இப்போது அவ்வாழை மரத்தின் வெட்டப்பட்ட மேற்பரப்பைப் பார்த்தால், நாம் தண்ணீர் அருந்தும் டம்ளர் அல்லது குவளை போன்று காட்சியளிக்கும். இதன் மேலே மாவு சலிக்க பயன்படுத்தும் நைலானால் ஆன சல்லடை ஒன்றை மேற்பரப்பில் வைத்து விடவேண்டும். இது தோண்டிய குருத்துக் குழிக்குள் தும்பு, தூசி, கொசு, ஈ, பூச்சிகள் விழாமல் தடுப்பதற்கும், பொழியும் பனி நீர் அக்குருத்துக் குழிக்குள் செல்வதற்குமே. ஆதலால், துணி போன்ற வேறு எதையும் பயன்படுத்தக் கூடாது.

அடுத்தநாள் காலை சூரிய உதயத்திற்கு முன் சுமார் 6.30 மணிக்கு பார்த்தால், அக்குருத்துக் குழிக்குள், அவ்வாழையின் உதிரம் என்று சொல்லக்கூடிய நீர் மற்றும் பனி நீர் ஆகியன முழுமாக நிரம்பியிருக்கும்.

நீர் நிரம்பிய நிலையில் வாழை:



அதனை அப்படியே உறிஞ்சி குடிக்கும் குழலைக் கொண்டு உறிஞ்சி குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதற்கு முன் எதையும் சாப்பிடக் கூடாது.

சரியாக ஒன்பது மணிக்கு தேவைக்கு ஏற்ப குறைந்தது 200 மில்லி தண்ணீர் குடிக்க வேண்டும். பின் அரை மணி நேரம் கழித்து வழக்கம் போல சாப்பிடலாம்.

மேலே நாம் கூறியது போலவே நண்பர் முத்துகிருஷ்ணன் முந்தைய நாள் இரவு வெட்டி வைத்துள்ளார். விடியும் வரை வலியால் தூங்காமல் அவதிப்பட்டுள்ளார். அடுத்த நாள் அதிகாலை 7 மணிக்கு சாற்றை குடித்துள்ளார். சரியாக 9 மணிக்கு தண்ணீரும் குடித்துள்ளார். வலி குறையத்தொடங்கியதை உணர்ந்திருக்கிறார். சரியாக மதியம் 1 மணிக்கு வலி சுத்தமாக அவருக்கு இல்லை சிறுநீர் கழிக்கும் போது இருந்த வலி அவரிடம் இப்போது இல்லை.

இப்படியே ஒரு நாள் விட்டு ஒரு நாள் மூன்று நாள் சாற்றைக் குடிக்கும்படி கூறினோம் 5 நாள் கழித்து ஸ்கேன் செய்து பார்த்திருக்கிறார் உங்கள் சிறுநீரகத்தில் கல் எதும் இல்லை என்ற முடிவு அவரை மட்டுமல்ல அவர் குடும்பத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இன்னும் பல மருத்துவ தகவல்களுக்கு இணைந்திருங்கள்.!

இந்து சாஸ்திரங்கள் பெண்களை இழிவுபடுத்துகிறதா

இந்து சாஸ்திரங்கள் பெண்களை இழிவுபடுத்துகிறதா? ஆதாரம் என்ன?

மனைவியில்லாத ஒருவன், பிள்ளையில்லாத ஒருவன், தனக்கு வாரிசு தேவைப் படுமானால், மற்றொருவனுடைய மனைவியிடம் பிள்ளை பெற்றுக் கொள்ளலாம். 
- மனுசாஸ்திரம்: அத்தியாயம் 9, ஸ்லோகம் 52.

பிள்ளை இல்லாமல் ஒரு குலம் அழியுமானால், ஒரு பெண் தனது கணவனின் உடன் பிறந்த சகோதரர்கள் அல்லது தனது கணவனின் ஏழு தலைமுறைக்கு உட்பட்ட பங்காளிகள் யாருடன் வேண்டுமானாலும் கூடி பிள்ளைபெற்றுக் கொள்ளலாம்.
- மனுசாஸ்திரம்: அத்தியாயம் 9, ஸ்லோகம் 59.

கணவன் வாரிசு இல்லாமல் இறந்துவிட்டால் மனைவி வேறு ஒரு ஆணிடத்தில், தனது கணவன் சம்பாதித்த பொருளைக் கொடுத்து, பிள்ளையைப் பெற்றுக்கொள்ளலாம். 
-மனுசாஸ்திரம்: அத்தியாயம் 9, ஸ்லோகம் 190.

(நாளை திருச்செங்கோட்டில் நடைபெறவுள்ள, 'சமுதாய சுயமரியாதை விழிப்புணர்வுக் கூட்ட'' துண்டறிக்கையிலிருந்து.)

டூ வீலர் ஓட்டும் பெண்களுக்கு விண்ணப்பம்

டூ வீலர் ஓட்டும் பெண்களுக்கு விண்ணப்பம்: 

* மாஸ்க் ஹெல்மெட் அணிவது கஷ்டம்தான். இந்தத் திருவோடு மாதிரி ஒரு மாடல் விற்கிறது அல்லவா....அதைப் போடலாம். 

* ரியர்-வ்யூ மிரர் நாட்டு நாய் காதுகள் மாதிரி ஒவ்வொண்ணும் ஒவ்வொரு பக்கம் இருக்கும். அதை tight வைத்து ரியர் பார்த்துப் பழகலாம்.

* சிக்னலிலிருந்து கிளம்பும்போது flight தனது சக்கரங்களைத் தூக்காமல் கொஞ்ச தூரம் பறப்பது போல், ரெண்டு பக்கமும் கால்களை ரோட்டிலிருந்து ரெண்டு இன்ச் உயரத்தில் வைத்து பயணிப்பதைத் தவிர்க்கலாம். 

* பின்னால் அமர்ந்திருக்கும் குழந்தை உங்கள் முதுகின் நேர் எதிர்புறம் அமர்ந்து வருவதை என்கரேஜ் செய்யவேண்டாம்.

* ஒரு குறுகிய சந்தில் முன்னால் நிறைய வண்டிகள் நிற்கும்போது, எதிரிலிருந்து வரும் வாகனத்துக்கு வழி கொடுக்காமல் ஃபுல் ரைட்டில் புத்திசாலிதனமாய் ஏறிப் போய் நின்று டார்ச்சர் செய்வதை அறவே தவிர்க்கலாம். 


* வழியில் கடையில் ஏதாவது வாங்கப் போகும்போது குழந்தையை அப்படியே பைக்கில் அரிசி மூட்டையைப்போல் விட்டுச் செல்வதைத் தவிர்க்கலாம்.


* எங்காவது வண்டி ஓட்டும்போதுசொதப்பி யாராவது திட்டினால் என்ன நடந்தது என்றே தெரியாததுபோல் ஒரு சின்னப் பப்பா முகத்தோடு எஸ்கேப் ஆகாமல் நின்று திட்டு வாங்கிக் கட்டிக்கொண்டு திருந்தலாம்.


..இன்னும் நிறைய ...லாம் இருக்கு.... இப்போதைக்கு இது செய்தாலே போதும்...


- Prabhu Kalidas

இந்தியாவில் முஸ்லீம்களின் மக்கள்தொகை

இந்தியாவில் முஸ்லீம்களின் மக்கள்தொகை கடந்த பத்தாண்டுகளில் 24 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் வெறும் சதவீதம் 0.8 மட்டுமே முஸ்லீம்களால் உயர்ந்துள்ளது. பெரும்பான்மை சதவீதம் இந்து குழந்தைகளால் உயர்ந்துள்ளது. ஆனால் நேர்மையற்ற இந்திய ஊடகங்கள் கொட்டை எழுத்துகளில் இந்தியாவில் முஸ்லீம்களின் மக்கள்தொகை 24 சதவீதம் அதிகரித்துள்ளது என்று செய்தியை திரித்து வெளியிடுகின்றன.

நேற்று கூட சங்பரிவார் இந்தியாவில் உள்ள இந்து பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று வேண்டுகோள் வைத்துள்ளன. பெண்கள் வெறும் பிள்ளை பெறும் மிஷின்கள் மட்டுமே என்பது சங்பரிவாரின் எண்ணம். இதைவிட பெண்களை யாரும் கேவலப்படுத்த முடியாது. ஆனால் இந்த ஆட்கள்தான் பெருமாள் முருகன் பெண்களை அசிங்கபடுத்தி விட்டார் என்று கத்துகிறார்கள்.

பெருமாள் முருகனுக்கு தேசிய ஊடகங்கள் ஒரு கரத்தில் ஆதரவு. மறுகரத்தில் இந்தியாவில் முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று செய்தி. இந்த விஷயத்தில் ஊடகங்களின் இரட்டை நாக்குகள் எப்படி சுழல்கின்றன பாருங்கள்.

- விநாயக முருகன்.

Thursday, January 22, 2015

கருத்துச் சுதந்திரமும், ஒத்துழையாமையும்!

கருத்துச் சுதந்திரமும், ஒத்துழையாமையும்!
பகுத்தறிவற்றவர்கள், பாசிச சக்திகள் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களை மிரட்டியும், நமது கருத்துச் சுதந்திரத்தை விரட்டியும் அராஜகம் செய்து கொண்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
கருத்துச் சுதந்திரத்தின் அருமை, பெருமைகளை ஆறு ஆண்டு காலம் எத்தியோப்பியாவில் ஒரு ஸ்டாலினிஸ்ட் இராணுவ ஆட்சியின் கீழ் வாழ்ந்து புரிந்து கொண்டவன் நான். கருத்துச் சுதந்திரம் இல்லாத வாழ்க்கை செத்த வாழ்க்கையாகவே இருக்கும்.
கருத்துச் சுதந்திரத்துக்காக இங்கே தமிழகத்தில் நாம் போராடிக் கொண்டிருக்கும்போது, உலக அளவில் நபிகள் நாயகத்தின் கார்ட்டூனை வெளியிடும் சார்லி ஹெப்டோ பிரச்சினையும் ஓடிக் கொண்டிருக்கிறது. கோடானுகோடி முசுலீம் மக்களின் அடிப்படை மத நம்பிக்கைகளை, பழக்க வழக்கத்தை காலில் போட்டு மிதிப்பது சரியா என்ற கேள்வி எழுகிறது.
நான் கல்லூரி மாணவனாக அமெரிக்காவுக்குச் சென்ற புதிதில் "The Last Temptation of Jesus Christ" என்று ஒரு திரைப்படம் அங்கே வெளியிடப்பட்டது. மத நம்பிக்கையுள்ள கிறித்தவர்கள் படத்தைக் கடுமையாக எதிர்த்தார்கள். கருத்துச் சுதந்திரவாதிகள் படத்தை ஆதரித்தார்கள். ஒருநாள் நானும் சில நண்பர்களும் படம் பார்க்கச் சென்றோம். நுழைவுச்சீட்டு வாங்குவதற்காக நாங்கள் வரிசையில் நின்றபோது, சில கிறித்தவ நண்பர்கள் ஒவ்வொருவரிடமும் வந்து நின்று "இந்தப் படம் எங்கள் மத நம்பிக்கையைக் கேவலப்படுத்துகிறது; கிறித்தவர்களாகிய எங்களைப் புண்படுத்துகிறது; தயவு செய்து இந்தப் படத்தைப் பார்க்காதீர்கள்" என்று கேட்டுக் கொண்டனர். இந்த முதிர்ச்சியான அணுகுமுறை என்னை மிகவும் கவர்ந்தது. இந்தப் படம் பார்க்க விரும்பவில்லை என்று சொல்லிவிட்டு நான் விலகிச் சென்றதாக நினைவு.
இம்மாதிரியான ஓர் அற்புதமான அணுகுமுறையைத்தான் உலக முசுலீம் மக்கள் இங்கே கடைபிடிக்கிறார்கள். "சார்லி ஹெப்டோ கிறுக்குத்தனமான ஒரு கார்ட்டூன்தானே போட முடியும், போடுங்கடா" என்று சொல்லிவிட்டு, பிரச்சினையை முற்றிலுமாகப் புறக்கணிக்கிறார்கள். அதற்கு மேல் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நபிகள் நாயகத்தின் படத்தை "அதிகாரபூர்வமானதாக" ஆக்க விடாமல் அமைதி காக்கிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை கருத்துச் சுதந்திரத்தை மதிக்கிறேன்; எனது கருத்துக்களோடு பிறர் கருத்துக்கள், படைப்புக்கள் மோதல் போக்கை மேற்கொள்ளும்போது, அவற்றோடு, அவர்களோடு ஒத்துழைக்க மறுக்கிறேன்.
S.p. Udayakumar

எங்க சாதிக்கார பொண்ணுக வெள்ளையாக இருக்கிறதால தான்

ஒரு பய சொன்னான் எங்க சாதிக்கார பொண்ணுக வெள்ளையாக இருக்கிறதால தான் அந்த சாதிக்கார பயலுக எங்க பொண்ணை பார்க்கிறாங்க என்று...

அடேய் தமிழனுடைய நிறம் கருப்பு ஆனால் அந்த வெள்ளை நிறம் எப்படி உன்னோட சாதியில் கலந்தது என்று கேட்டால் மூச்சு பேச்சை காணமாட்டேங்குது...

ஒருமுறை முகமது அலி தனது தோலின் நிறத்தை பற்றி இவ்வாறாக கூறினார்:
எனது தோளில் உள்ள ஒவ்வொரு வெள்ளையணுக்களும் எனது முந்தைய தலைமுறையை சேர்ந்த பெண்கள் மீது வெள்ளையினத்து முதலாளிகளால் திணிக்கப்பட்ட பாலியல் வன்முறைக்கான அடையாளங்கள்

நம்ம பயலுக என்னடான்னா தங்களுடைய முந்தைய தலைமுறை வெள்ளையடிக்கப்பட்ததை கூட பெருமையாக சொல்லிக் கொண்டு அலைகிறானுங்க.

ரொம்ப அதிகமா போறீங்கடா... இதெல்லாம் நல்லதுக்கில்ல...

- Anthony Fernando

ஒரு குழந்தையாவது பெத்துக்க சொல்லுங்க

உங்க தலீவர பொண்டாட்டி கூட சேந்து ஒரு குழந்தையாவது பெத்துக்க சொல்லுங்க:

இந்துக்கள் நான்கு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் - சாக்சி மகாராஜ்

இந்துக்கள் ஐந்து குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் - ஷியாமல் கோஸ்வாமி

மோடி மீண்டும் பிரதமர் ஆக இந்துக்கள் பத்து குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் -  சங்கராச்சார்யா வாசுதேவானந்தா

அது சரி முதல்ல உங்க தலீவர பொண்டாட்டி கூட சேந்து ஒரு குழந்தையாவது பெத்துக்க சொல்லுங்க, அவரு முதல்ல ஃபாதர் ஆகட்டும் அப்புறம் மறுடியும் பிரதமர் ஆகலாம்

-அன்புடன் ஆர்.எஸ்.எஸ்