Friday, January 23, 2015

இந்தியாவில் முஸ்லீம்களின் மக்கள்தொகை

இந்தியாவில் முஸ்லீம்களின் மக்கள்தொகை கடந்த பத்தாண்டுகளில் 24 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் வெறும் சதவீதம் 0.8 மட்டுமே முஸ்லீம்களால் உயர்ந்துள்ளது. பெரும்பான்மை சதவீதம் இந்து குழந்தைகளால் உயர்ந்துள்ளது. ஆனால் நேர்மையற்ற இந்திய ஊடகங்கள் கொட்டை எழுத்துகளில் இந்தியாவில் முஸ்லீம்களின் மக்கள்தொகை 24 சதவீதம் அதிகரித்துள்ளது என்று செய்தியை திரித்து வெளியிடுகின்றன.

நேற்று கூட சங்பரிவார் இந்தியாவில் உள்ள இந்து பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமென்று வேண்டுகோள் வைத்துள்ளன. பெண்கள் வெறும் பிள்ளை பெறும் மிஷின்கள் மட்டுமே என்பது சங்பரிவாரின் எண்ணம். இதைவிட பெண்களை யாரும் கேவலப்படுத்த முடியாது. ஆனால் இந்த ஆட்கள்தான் பெருமாள் முருகன் பெண்களை அசிங்கபடுத்தி விட்டார் என்று கத்துகிறார்கள்.

பெருமாள் முருகனுக்கு தேசிய ஊடகங்கள் ஒரு கரத்தில் ஆதரவு. மறுகரத்தில் இந்தியாவில் முஸ்லீம்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று செய்தி. இந்த விஷயத்தில் ஊடகங்களின் இரட்டை நாக்குகள் எப்படி சுழல்கின்றன பாருங்கள்.

- விநாயக முருகன்.

No comments:

Post a Comment