Tuesday, August 28, 2018

ஐந்திலக்கணம் பற்றிய தகவல்கள

🌐🌀🌸 *வெளிச்சம் போட்டித்தேர்வு பயிலகம்-திருவாரூர்* 🌸🌀🌐

*பொதுத்தமிழ்*
🌷🌷

*ஐந்திலக்கணம் பற்றிய தகவல்கள்*

1. எழுத்து இலக்கணம்
2. சொல் இலக்கணம்
3. பொருள் இலக்கணம்
4. யாப்பு இலக்கணம்
5. அணி இலக்கணம்

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

🌷1. எழுத்து இலக்கணம்:-

🐓 எழுத்துக்கள் இரண்டு வகை - 2
1. முதல் எழுத்து
2. சார்பெழுத்து

1. முதல் எழுத்து வகைகள் - 2 (1. உயிர் எழுத்து, 2. மெய்யெழுத்து)

1. உயிர் எழுத்துக்கள் - 12
🐓வகைகள் - 2
குறில் எழுத்துக்கள் - 5 (அ,இ,உ,எ,ஒ)
நெடில் எழுத்துக்கள் - 7 (ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ)

2. மெய்யெழுத்து - 18
🐓 வகைகள் - 3
🐓வல்லினம் - 6 (க,ச,ட,த,ப,ற)
🐓மெல்லினம் - 6 (ங,ஞ,ண,ந,ம,ன)
🐓இடையினம் - 6 (ய,ர,ல,வ,ழ,ள)

2. சார்பெழுத்து வகைகள் - 10
1. உயிர்மெய்
2. ஆய்தம்
3. உயிரளபெடை
4. ஒற்றளபெடை
5. குற்றியலுகரம்
6. குற்றியலிகரம்
7. ஐகாரக்குறுக்கம்
8. ஔகாரகுறுக்கம்
9. மகரக்குறுக்கம்
10. ஆய்தகுறுக்கம்

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

🌷2.சொல் இலக்கணம்:-

🐿 ஓர் எழுத்து தனித்து நின்றோ, இரண்டு, மூன்று முதலிய எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தந்தால் அது - சொல்

🐿 சொல்லை குறிக்கும் வேறு சொற்கள் - மொழி, பதம், கிளவி

🐿 பதம் வகைகள் - 2 (1. பகாப்பதம், 2. பகுபதம்)
1. பகாபதம்:-
🐿 பகுதி, விகுதி என பிரிக்க இயலாத சொல் - பகாப்பதம்

🐿 பகாபதம் வகைகள் - 4
1. பெயர் பகாப்பதம்
2. வினைப் பகாப்பதம்
3. இடைப் பகாப்பதம்
4. உரிப் பகாப்பதம்

2. பகுபதம்:-
🐿 பகுதி, விகுதி என பிரிக்கப்படும் சொல் - பகுபதம்
🐿 பகுபதம் வகைகள் - 2 (1. பெயர்ப் பகுபதம், 2. வினைப் பகுபதம்)

🐿 பெயர்ப் பகுபதம் வகைகள் - 6
1. பொருள் பெயர்ப் பகுபதம்
2. இடப் பெயர்ப் பகுபதம்
3. காலப் பெயர்ப் பகுபதம்
4. சினைப் பெயர்ப் பகுபதம்
5. பண்புப் பெயர்ப் பகுபதம்
6. தொழிற் பெயர்ப் பகுபதம்

🐿 வினைப் பகுபதம் வகைகள் - 2 (1. தெரிநிலை வினைப் பகுபதம், 2. குறிப்பு வினைப் பகுபதம்)

🐿 பகுபதம் உறுப்புகள் - 6
1. பகுதி
2. விகுதி
3. இடைநிலை
4. சந்தி
5. சாரியை
6. விகாரம்

🐿 இடைநிலை வகைகள் - 2 (1. பெயர் இடைநிலை, 2. வினை இடைநிலை)
🐿 பெயர் பகுபதத்தில் வரும் இடைநிலை - பெயர் இடைநிலை
🐿 வினை இடைநிலை வகைகள் - 3
1. இறந்த கால இடைநிலை
2. நிகழ்கால இடைநிலை
3. எதிர்கால இடைநிலை

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

🌷3.பொருள் இலக்கணம்:-

📚 பொருள் இலக்கணம் வகைகள் - 2
1. அகப்பொருள்
2. புறப்பொருள்

(1) அகப்பொருள்:-
📚 ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தம்முள் நுகரும் இன்பம் பற்றி கூறுவது - அகப்பொருள்

📚 அகப்பொருள் உள்ள திணைகள் - 5
📚 இதை 'அன்பின் ஐந்திணை' என்றும் கூறுவர்.
📚 இதில் கைக்கிளை, பெருந்திணை சேர்த்து ஏழு எனவும் கூறுவர்

📚 அகத்திணை கூறிய பொருட்கள் - 3
1. முதற் பொருள்
2. கருப்பொருள்
3. உரிப்பொருள்
1. முதற்பொருள்:
📚 முதற்பொருளில் அடங்கி உள்ளவை - நிலமும், பொழுதும்
📚 நிலம் வகைகள் - 5 (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை)
📚 பொழுது வகைகள் - 2 (சிறுபொழுது, பெரும்பொழுது)
2. கருப்பொருள்:-
📚 ஐவை நிலத்திற்கு கூறிய உறுப்பினர்கள் - 14 (தெய்வம், உயர்ந்தோர், தாழ்ந்தோர், உணவு, பறவை, விலங்கு, ஊர், நீர், பூ, மரம், பண், யாழ், பறை, தொழில்)
3. உரிப்பொருள்:-
📚 குறிஞ்சி - காண்டல் (அல்லது) புணர்தல் நிமித்தமும்
📚 முல்லை - இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
📚 மருதம் - ஊடலும் ஊடல் நிமித்தமும்
📚 நெய்தல் - இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
📚 பாலை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

(2) புறப்பொருள்:-
📚 புறப்பொருள் திணைகள் - 12
1. வெட்சி - பகைவர் பசுக்கூட்டங்களை கவர்தல்.
2. கரந்தை - பகைவர் கவர்ந்து சென்ற பசுக் கூட்டங்களை மீட்டல்
3. வஞ்சி - பகைவன் நாட்டின் மீது படையெடுத்து செல்லல்.
4. காஞ்சி - பகையெடுத்து வந்த பகைவரை நாட்டில் புகாதவண்ணம் எதிர்சென்று தடுத்தல்.
5. நொச்சி - பகைவர், கோட்டை மதிலை கைப்பற்றாவண்ணம் காத்தல்.
6. உழிஞ்சை - பகைவருடைய கோட்டை மதிலை வளைத்துப் போர் செய்தல்
7. தும்பை - இரு திறந்து வீரரும் போர்களத்தில் எதிரெதிரே நின்று போர் புரிதல்.
8. வாகை - பகைவரை வென்றவர் வெற்றயை கொண்டாடுவர்.
9. பாடாண் - ஆண்மகனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றை போற்றி பாடுவது.
10. பொதுவியல் - வெட்சி முதல் பாடாண்வரை உள்ள புறத்திணைகளின் பொதுவானவற்றையும் அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது.
11. கைக்கிளை - ஒருதலை ஆண், பெண் ஆகிய இருவரில் எவரேனும் ஒருவரிடத்து மட்டும் தோன்றும் அன்பு. இது 2 வகை ( ஆண்பால் கூற்று, பெண்பால் கூற்று)
12. பெருந்திணை - பொருந்தாக் காமம். இது ஒத்த தலைவனும் தலைவியும் அல்லாதாரிடத்து உண்டாகும் அன்பு
🌷🌷🌷🌷🌷🌷🌷

🌷4. யாப்பிலகணம்:-

📚 யாப்பின் உறுப்புகள் மொத்தம் - 6
1. எழுத்து
2. அசை
3. சீர்
4. தளை
5. அடி
6. தொடை

1. எழுத்து:-
📚 எழுத்து பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரிந்தது தான்

2. அசை:-
📚 எழுத்துக்கள் தனித்தோ இணைந்தோ சீருக்கு உறுப்பாகி நிற்பது - அசை

📚 அசைகள் வகைகள் - 2 (நேரிசை, நிரையசை)

3. சீர்:-
📚 அசைகள் ஒன்றோ, இரண்டோ, மூன்றோ, நான்கோ இயைந்து நிற்பது - சீர்

📚 சீர்கள் எண்ணிக்கை - 30
1. மாச்சீர் - 2
2. விளச்சீர் - 2
3. காய்ச்சீர் - 4
4. கனிச்சீர் - 4
5. பூச்சீர் - 8
6. நிழற்சீர் - 8
7. ஓரசைச்சீர் - 2

4. தளை:-
📚 சீர் ஒன்றோடொன்று இயைத்து கட்டுப்பட்டு நிற்பது - தளை

📚 தளை வகைகள் - 4
1. ஆசியத்தளை
2. வெண்டளை
3. கலித்தளை
4. வஞ்சித்தளை

5. அடி:-
📚 அடி வகைகள் - 5
1. குறளடி - இரண்டு சீர்கள்
2. சிந்தடி - மூன்று சீர்கள்
3. அளவடி - நான்கு சீர்கள்
4. நெடிலடி - ஐந்து சீர்கள்
5. கழிநெடிலடி - ஆறு சீர்கள்

6. தொடை:-
📚 தொடை வகைகள் - 5
1. மோனைத் தொடை
2. எதுகைத் தொடை
3. முரண் தொடை
4. இயைபு தொடை
5. அளபெடைத் தொடை
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

🌷5. அணி இலக்கணம்:-
📚 அணி என்பதன் பொருள் - அழகு

📚 அணிகள் வகைகள் - 2
1. சொல்லணி
2. பொருளணி
📚 சொல்லணி வருபவை - சிலேடை, மடக்கு, யமகம், திரிபு
📚 பொருளணி வருபவை - உவமை, உருவகம்

அணிகள் பின்வருமாறு:-

📚 இல்பொருள் உவமையணி
📚 ஏகதேச உருவக அணி
📚 பிறிது மொழிதல் அணி
📚 வேற்றுமை அணி
📚 வஞ்சிப்புகழ்ச்சி அணி
📚 இரட்டுற மொழிதலணி
📚 சொற்பொருள் பின்வருநிலையணி
📚 தற்குறிப்பேற்ற அணி
📚 நிரல்நிறை அணி

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

Tuesday, August 21, 2018

தேவியின் மாதவிடாய்க் குருதி?

----------

உதிரமே சற்று ஓய்வெடு!
------------------------------------
பெண்ணே
உன் உதிரத்தை பாலாக்கி எமக்களித்தாய் -அங்கே
தீட்டில்லை பசிமட்டுமே
தெரிந்தது!

உன் உதிரத்தால் எமை
ஈன்றெடுத்தாய் - ஆனால்
தீட்டில்லை
தாயும் சேயும் நலம்
என்றது இச்சமூகம்!

உன் உதிரத்தால்
உருவானதுதானே இந்த
மொத்த உலகமும்!
தீட்டில்லை என்கிறார்கள்!

பாரதமாம் மாதாவாம்
நீதியாம் தேவதையாம்
அங்கேயும் தீட்டில்லை!

கற்பகிரக கடவுளர்களுக்கு
கூட விதிவிலக்கு
அவர்களுக்கும் தீட்டில்லை!

பெண்ணே
நீ அணியும் நாப்கினுக்கு மட்டும் வரி எனும் வேட்டு
ஆனால் அந்த நாளில்
நீ தொட்டால் தீட்டு!

என்ன விந்தை
என்ன விந்தை
எனை ஈன்ற என் தாயும்
நான் பெற்ற என் மகளும்
எனக்கெப்படி தீட்டாவார்கள்!

மனிதனை படைத்த கடவுளின் புனிதம்
அதே மனிதனால் தீட்டாகிறது!
இதை சந்தேகிப்பதற்கு பதிலாக
கன்னத்தில் போட்டுக்கொள்கிறார்கள்
கபடவேட திருடர்கள்!

பெண்ணே
நீ தொட்டால் தீட்டாகும் கடவுள்;
உன்னைவிட எப்படி
உயர்ந்ததாகும்?
உன் உதிரத்தின் சக்தி
உலகையே உலுக்குகிறதென்றால்,
நினைத்துக்கொள்
இனிமேல் நீதான் சக்தியென்று!

உன் உதிரத்தால் வெள்ளமாம்
பேரழிவாம் பேசக்கேட்டேன்
பெருமைதானே உனக்கு
சொல்! சொல் ! சொல்!
இனி கோயிலெங்கும்
தடையின்றி செல்! செல்! செல்!

பார்த்திபன் ப
21/08/2018

---------

Venpura Saravanan
2018-08-22

தேவி பிறகு ஒருக்களித்து
படுத்துக் கொண்டாள்...
____________________________
ருதுவான நாள்முதல்
உடல் பிரளயத்திற்கு
மாதந்தோறும் தன்னை
ஒப்புக் கொடுப்பது
வரமா சாபமா எனும்
குழப்பத்திலேயே
வீட்டுக்கு விலக்காகவும்
கோயிலுக்கு தீட்டாகவும்
இரட்டை வேடம் தேவிக்கு.

அருளாசி வேண்டி
கோயிலுக்குத் தன்னை
தேடிவரும் தேவியரில்
தினமும் நூறுபேர்
வராமல் இருப்பதன்
ரகசியம் அறிந்த தேவி
கழிவறையோ தனியறையோ
இல்லாத கருவறைக்குள்
மாதந்தோறும் படும் அவஸ்தையை
யாரிடம் சொல்லியழவென
தவிக்கிறாள் ஆசிவழங்கியபடியே.

அன்றாடம் கழிக்கும்
சிறுநீருக்கும் மலத்திற்கும் அண்டாத
விலக்கோ தீட்டோ
மாதந்தோறும் கசியும் குருதிக்கு
ஏன் எப்படி வந்தது என்ற
நினைப்பிலேயே
அர்ச்சனைப் பொருட்களுடன்
நாப்கினை எதிர்பார்த்து
ஏமாந்து போகிறாள்
ஒவ்வொரு மாதமும்.

திருவிழாக் காலமொன்றில்
ஆடை ஆபரணம் அலங்காரத்துடன்
பூப்பல்லக்கேறி நகர்வலம் போன
தேவியின் கண்கள் பூஞ்சையடைய
முகம் வெளிறிப்போய் சோர்வுற்று
திருக்கோயில் வந்து சேர்ந்தபோது
நடை சாத்தப்பட்டிருந்தது குறிப்பறிந்து!

அடிவயிற்றில் இடி இடித்ததுபோல்
உயிர்போகும் வலியை மென்றபடி
பிரகாரத்தின் மூலையொன்றில்
ஒருக்களித்து படுத்துக் கொண்டாள்
அருள்பாலிக்கும் தேவி.

https://m.facebook.com/story.php?story_fbid=1683672088410554&id=100003033384569

----

சத்தியபெருமால் பாலுசாமி
2018-08-21
  
கடவுளின் ஸ்வந்த தேசம் மூழ்கிய போது
கடவுளர்களும் மூழ்கிப் போனார்கள்
மூழ்கடித்தது நீரல்ல மாதவிடாய்க் குருதியே என்றான் பூசகன்
'தேவியின் மாதவிடாய்க் குருதியா?' எனக் கேட்டான் கவிஞன்
'ஐயோ எங்கள் ஜகத் ஜனனியைக் கேவலப்படுத்திவிட்டானே' எனக் கொடுவாளைத் தூக்கினான் பூசகன்
'அட எந் தூமச் சீல' எனக் காறித் துப்பிய தேவி கேட்கிறாள்
"மாதவிடாய்க் குருதி வடிக்காமல் எப்படியடா நான் ஜகத் ஜனனி ஆனேன்?"

#standwithmanushyaputhiran

https://m.facebook.com/story.php?story_fbid=2316963908344202&id=100000918452805

-----

புலியூர் முருகேசன்
2018-08-21

தேவி இரண்டாம் முறையாகக் சூல்கொண்ட போது-
பெரும் பித்து நிலையிலிருந்தாள்.
பிய்த்தெறியப்பட்ட ஆடைகளுக்கு நெருப்பூட்டி
பசியாற்றினாள்.
குளிரின் வாதைக்கு
நைந்த புகழ்மாலைகள் இன்னும் தீராமல் இருக்கின்றன.
சூல் கலைத்த எருக்கங் குச்சியில் ஒட்டியிருந்தது
தேவியின் எச்சப் பித்துநிலை.
நள்ளிரவில் குருதிக் கட்டிகள் படுக்கையெங்கும் சிதறி நனைய-
விழிச் சூட்டு நீரில்
படுக்கை அலசி
பெருமூச்சில் உலர்த்தியவள்-
விடிகாலையில் தன் அறைக்குள் போய் கால்கடுக்க நின்றுகொண்டாள்
இவ்வுலகிற்கு அருள் பாலிக்க!

#standwithmanushyaputhiran

https://m.facebook.com/story.php?story_fbid=2092248437760203&id=100009252006214

Monday, August 20, 2018

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த பரம்பரைகள்...

டக்ளஸ் முத்துக்குமார்
2018-08-21

தமிழகத்தின் ஆண்ட பரம்பரையினரின் வரலாறு.. - யார் இந்த பரம்பரைகள்...

வன்னியர்கள், தேவர்கள் பள்ளர்கள், பரையர்கள், நாடார், யாதவர்கள், ரெட்டியார், செட்டியார்  என எல்லா சாதிகளும் ஆண்ட பரம்பரை னு சொல்லுகிறத பாத்தா சிரிப்புத்தான் வருது.

நாட்ட ஆளுர ராஜாக்கள் உங்கள் பாட்டன் பொண்டாட்டி மேல ஆசை பட்டு, தூக்கிட்டு போயி மேட்டர் முடிச்சி குழந்தை பிறந்தா அது ஆண்ட பரம்பரை ஆயிருமா..? வெள்ளைக்காரன் விதைச்சிட்டு போனது கூட இன்னும் அவனோட கலருல சீவிர் சீவிர் ரெம்ப கிராம புறங்களுல பிறந்துட்டுஇருக்கு அதையெல்லாம் இங்கிலாந்து இளவரசர், இங்கிலாந்து ராணி னு சொல்லிரலாமா..?

பொய்யான நிரூபிக்கபடாத, சாத்தியமில்லாத கதைகளை நம்பிக்கிட்டு,  நாங்க ஆண்ட சாதி னு மார்தட்டுவதால என்ன பயன் இருக்கு..? சாதிவெறியை தூண்டி விட்டு ஒருத்தர ஒருத்தர் மாத்தி மாத்தி வெட்டிக்கிட்டு சாகுர நிலமைக்குத்தான் கொண்டுபோகுமே தவிற இந்த போலி பெருமையால என்ன கிடச்சிறபோகுது..?

நீங்க ஆண்ட பரம்பரை, பேண்ட பரம்பரை, மோண்ட பரம்பரை னு பேசுரதுக்கு முன்னாடி வரலாற தெரிஞ்சிட்டு பேசணும். எந்த மன்னனும் அவன் கல்யாணம் முடிக்கும் போது அவனுக்கு சமமான அவனோட குலத்து ராஜா மகளத்தான் காட்டுவானோ தவற தேவர் சாதி புள்ளையயோ, வன்னியர் சாதி புள்ளையையோ போயி கட்டுறது கிடையாது. அப்றம் எப்படி நீங்கயெல்லாம் ஆண்ட பரம்பரை..? இங்க ஆண்டவன் எல்லாம் ராஜாக்கள், ராஜபுத்திரர்கள் னு தான் தனியான வகுப்பா இருந்துருக்கானுக ஒழிய எவனும் வன்னியன், நாடார், தேவர் னு இருந்ததில்லை.

ஒரு நாட்ட ஆளுர மன்னன் வாரிசே இல்லாம இறந்துட்டானா, இந்த ராஜா பதவிக்கு யாரு வறதுன்னு யானைட்ட மாலையை கொடுத்து தெருவழியா நடக்கவிடுவானுக, யானையும் யார் கழுத்துல போடுதோ அவனுக ராஜா னு தமிழ் இலக்கியங்களுல கூட சொல்லப்பட்டுருக்கு. ஆனா இந்த தெருவுபக்கம் வரக்கூடாதுன்னு சாதி பேர சொல்லி தள்ளி வைச்சிருப்பானுக, யானையை சுத்தி பார்ப்பனன் தான் நிப்பான், இப்ப யானை யாரு மேல மாலைய போடும்..?

பாவம்.. இந்த வன்னிய பயகளும் அந்த தெருபக்கம் போகமுடியாது, பள்ளர், பறையர், சக்கிலியர் தேவர் னு எவனும் போக முடியாது. வரலாற ரெம்ப எல்லாம் பொராட்ட வேண்டாம், கடைசியா ஒரு நூறு, நூத்தம்பது வருசத்த மட்டும் பொரட்டி பாத்தாலே உண்மை புரிஞ்சிரும். இப்ப இருக்குற தேவர் பயகள மேல்சாதிகாரங்க ஊருக்குள்ளயே விடமாட்டாங்க. அம்புட்டு பேரும் கள்ளபய, களவாணி பய னு எங்கேயும் சேத்துக்க மாட்டானுக. இந்த ஈன பொழப்பு பொலச்சவங்கதான் இப்ப ஆண்ட பரம்பரை னு கம்பு சுத்துராணுக..

அடுத்து இந்த வீர சத்திரிய வன்னிய பயகளோட யோக்கியம் பாப்போம். இப்பவரைக்கும் தலித் மக்களை இந்த எப்படி ஒதுக்கி வைச்சு, பல கொடுமைகளை செஞ்சி வருதோ அதே மாதிரி இந்த வன்னிய பயகளையும் இந்த சமுதாயம் ஒதுக்கி வைச்சிட்டு இருந்துச்சி,

நாயுடு, முதலியார், செட்டியார், பிள்ளை, உடையார் போன்ற பல பல ஆதிக்க ஜாதிகாரங்க, வன்னிய உழைக்கும் மக்களை ‘பள்ளிப் பய..’ னு இப்ப வரைக்கும் இழிவாத்தான் பேசிட்டு இருக்கானுக. இதெல்லாம் வன்னியர்களுக்கு தெரியாதா..? வன்னியர்னா தொடுற பறையர் னு இப்ப வரைக்கும் உங்களையும் இழிவாதான் ஆதிக்க சாதிகள் சொல்லிட்டு வராங்க. இப்பயும் இது கிராம புறங்களில் வழக்கத்தில் இருக்கு..

இந்த தாழ்த்தப்பட்ட வன்னியர்கள் இப்போ ஆண்ட பரம்பரை னு கூவுனா.., எப்படி சிரிக்காம இருக்க முடியும்.

இதே வன்னியங்க ஆதிக்க சாதி மக்களுக்கு எதிரா போராடி இருக்கானுக, ஆதிக்கசாதிய எதிர்த்து ஆங்கிலேயர்களுக்கு விசுவாசமா இருந்திருக்காணுக. பிறகு அங்கிலயர்கள் பல்வேறு நாடுகளுக்கு தேயிலை தொட்ட தொழிலாளர்களாக லட்சக்கணக்கில அனுப்பட்டவர்கள்.

தென்னாப்ரிக்கவிற்க்கு தோட்ட தொழிலாளர்களாக அழைத்து செல்லப்பட்ட பல லட்சம் அடிமைகளுள் பாதிக்கு மேல வன்னியர்கள். அங்க அடிமையா கஷ்டப்படுகிறானுக, அவனுகயெல்லாம் திரும்ப நாட்டுக்கு அனுப்பி வைக்கணும் னு இங்க இருக்குற வன்னியர் எல்லாம் சேர்ந்து ஆங்கிலேயர்களுக்கு எதிரா உண்ணா விரதம் இருந்திருக்காணுக.  இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிச்சி பார்ப்பன கவிஞன் பத்திரிக்கைல செய்தி எழுதிருக்கான். ஆதாரம் எல்லாம் இருக்கு. இந்த லட்சணத்துல நீங்க புதுசா ஆண்ட பரம்பரை னு கதையவுட்டா.. சிரிக்காம எப்பிடி இருக்க முடியும்

அடுத்து பள்ளர்கள பத்தி பார்ப்போம்.. இவனுகளோட ஆண்ட புராணம் எப்ப ஆரம்பிக்கப்பட்டதுனா.. ஆரம்பத்தில தீவிர தலித் அரசியல் பேசிட்டு இருந்த குருப்புல, ஒரு கோஷ்டி இது சரிப்படாது னு மள்ளர் மீட்பு களம் ங்கிற பேர்ல மள்ளர் குல வரலாறு னு பிட் நோட்டீஸ் குடுக்க ஆரம்பிச்சது. என் கைலயும் ஒன்னு கொடுத்தாங்க, அப்ப 2003, நான் பத்தாம் படிச்சிட்டுருந்தேன் விவரம் தெரியல. பள்ளர் எல்லாம் மள்ளர் னு சொன்னவங்க நான் காலேஜ் படிக்கும் போது 2007 ல அதையும் பட்டி டிங்கரிங் பாத்து தேவேந்திர குல வேளாளர் னு சோழர்களோட லிங்க் பண்ணுனதும் இல்லாம, ரிக் வேதத்தில சொல்ல படுற இந்திரனோட வாரிசுக சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. இவனுக வரலாற தேட ரிக் வேதம் வரைக்கு போக வேண்டாம் நாம..

1937 ஆம் வருஷத்தில தஞ்சை காங்கிரஸ் 3வது அரசியல் மாநாடு நடந்துச்சி.

மாநாட்டிக்கு முன்னாடி சமபந்தி விருந்தும் நடந்துச்சி. சாதி, மதம் பேதமின்றி அனைவரும் உணவரந்தலாம் காங்கிரஸ் கோஷ்டி மைக்க புடிச்சி கூவிட்டு இருந்துச்சி.  அங்க வேடிக்கை பார்க்க வந்த மூன்று பள்ளர் தொழிலாளிக பயத்துடன் உக்காந்து சாப்பிட்டு இருந்தாங்க. திடீர்னு சபாபதி உடையார் என்ற காங்கிரஸ் பிரமுகர் அவனுக தலைய பிடிச்சி இழுத்து போட்டு " ஏண்டா பள்ளப்பயலுகளா... உங்களுக்கு இவ்வளவு திமிர் வந்திருச்சா... இந்த கூட்டத்தில சரிசமமா சாப்புடலாமா.. னு, பக்கத்தில் கிடந்த சவுக்கு கட்டையை எடுத்து மூணு பேரையும் வெளுத்துபுட்டான். .

(28.12.1937) மறுநாள் காலை பண்ணையில் தலித் மக்கள் அறுவடை வேலை செய்துகொண்டிருந்தாங்க. அப்போது அங்கு வந்த பண்ணையாரின் ஏஜெண்டான கிருஷ்ணமூர்த்தி அய்யங்கார் " மாநாட்டு கூட்டத்தில் நேற்று சாப்பிட்டது யார்? அவர்களை இங்கு கொண்டு வாருங்கள் " என்று உத்தரவிட்டான்.

முதலில் தேவசகாயம் என்ற தலித் நபரை கூட்டிப்போனார்கள். அப்போது அய்யர் அவனை சும்மா இழுத்துட்டு வருவியா..? அந்த படுவாவ அடி என்று ஆணையிட்டார். பின்பு அந்த ஊரின் தலையாரி மாணிக்கம் என்பவர் அந்த தேவசகாயத்தை விளாமரத்தில் கட்டி வெளுத்து, மூணு பேருக்கும் முட்டை போட்டு ஒடுங்கடா பள்ள நாயகளா னு விரட்டி புட்டாங்க

இந்த கேச பெரியார்தான் நடத்துராரு இப்படி பல சாமுதாயதால் ஒடுக்கப்பட்டு வந்த பள்ளர்கள் ஆண்ட பரம்பரை னு பேசுரத பாத்தா வேடிக்கையாதான் இருக்கு.

அடுத்து சாம்ப குல வீர பறைய வெள்ளார்.. இவங்க பள்ளர் விடுற கதைக்கு நாமளும் பங்குக்கு விடணுமுன்னு ஒரு அஞ்சி வருசாமா அம்பேத்கார தூர தூக்கி போட்டு இந்துத்துவால இறங்கிட்டாங்க. ஆனா இவனுக விடுற கதை இருக்கே..

மத்தவன் எல்லாம் ஆண்ட பரம்பரை னு தான் சொல்லிட்டு திரியூராணுக. ஆனா இவனுங்க சிவனும் பார்வதியும் பறையங்க னு நாங்கெல்லாம் சிவனோட பரம்பரை னு உடுராணுக கதகதையா.. சிவனோட ஆகம கோவிலுக்குள்ள நான வீர சைவபறையன்டா போனா, எவனாவது உள்ளவிடுவானா.. தைரியம் இருந்தா ஆண்ட பெருமை பேசிட்டு சிவன் கோவில் கருவறைக்குள் போயி சிலையை தொட்டுட்டு வந்து சொல்லு வீர பறையர் வெள்ளார் னு..

அடுத்து வீர சத்திரிய வம்ச நாடார்கள்... இவனுங்க இப்ப சர்டிபிகேட்லயே மாத்த ஆரம்பிட்டாங்க, ஆனா இவனுங்க எங்க ஆண்டாங்க னு தான் தெரியல. ஒரு வேல சேரநாட்ட ஆண்டுருப்பங்களோ னு கேரளா சைடு போயி பாத்தா... 200 வருசமா நாடார் குடும்ப பொண்ணுங்க மேலாடை போடுறதுக்காக போராட்டிட்டு இருந்துருக்கான்க, ஒரு வரலாற்று காலமா பொண்ணுங்க மார்ல சேலையும், ஆம்பலைகளுக்கு சட்டையும் போடவிடாம கேரள நம்பூதிரி பார்ப்பனன் கொடுமையா பண்ணிட்டு இருந்திருக்காங்க. அதுக்கு பயந்துபோன சத்திரிய நாட்டார் வம்சத்தினர் தமிழ்நாட்டு பக்கம் போனா கொஞ்சம் மரியாதையா இருக்கலாம் தெரிச்சி ஓடி வந்திருக்காணுக. இந்த காங்கிரஸ் புண்ணியத்தால மல்லியக்கட்டை, மாவு ஏவாரம் னு பாத்து வளர்ந்து வந்திருக்காங்க. அடுத்தவங்களுக்கு முன்மாதிரியா இருக்கவேண்டியங்க, ஆண்ட பரம்பரை மோண்ட பரம்பரை னு பேசிட்டு திரியூராணுக.

அடுத்து கவுண்டனுக.. இவனுக கொங்குநாட்ட ஆண்டவங்க நங்கதாண்டா னு கூவிட்டு திரியூராணுக. அதாவது எவன் எந்த ஆண்ட பரம்பரையா இருந்துட்டு போ.. ஆனா கொங்கு நாட்டு பக்கம் மட்டும் வரலாறு தேடி வந்துராதீக னு ஈரோடு, பழனி, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி ஒரு எல்லகோடு போடுறான். அப்பிடி இவனுகளோட ஆண்ட வரலாறு என்னன்னா.. இவனுங்க   வீட்டு பொண்ணுங்கள கோவிலுக்கு தேவியாள் வேலைக்கு நேந்து விடுறது. வரலாற பொரட்டி பாத்தா, ஐயர்களுக்கு இவனுகதான் வெப்பன் சப்பளையரு. ஆதாவது தேவதாசிகளாக பணிவிடை செய்ய அனுப்புறது. இப்ப நிந்தியானந்தாவுக்கு சேர்த்து விடுற மாதிரி அந்த காலத்து ஆன்மீக பணிகளுக்கு கவுண்டர் இன பெண்களும் போயிருக்காங்க. இது பேக்கரி டீலிங் மாதிரி இருந்தாலும், எவனும் எங்கேயும் ஆளல, சும்மா நாமளும் சொல்லுவோம் னு பொய்ய பரப்பிட்டு திரியூராணுக.

அடுத்து பகடைக.... இவனுங்க இப்பதான் தேட ஆரம்பிச்சிட்டு இருக்கானுக. "இருக்குற சாதிகளுக்கு எல்லாம் சாணி மூத்திரம் அல்லுறோமே.. இந்த வாழ்வியலை மாத்துற வழி எது.? னு யோசிக்காம, எங்க பாட்டன் எங்க ஆண்டுருப்பான், எந்த சந்துல மோண்டுருப்பான் னு கிளற ஆரம்பிச்சுட்டாங்க. இதுல ஒரு கோஷ்டி ஒண்டிவீரன்க்கு பெருசா மணிமண்டபம் கவர்மெண்ட்  கட்டணுமுன்னு இதை வச்சி மக்கள ஏமாத்தி அரசியல் பேசிட்டு தெரியுது. ஒண்டிவீரன் அடிமை வேல தானே செஞ்சான் அதுக்கு எதுக்கு மணிமண்டம். இந்த மாதிரி தான் பகடைக அடிமையா விசுவாசமா வேல செய்யணும் னு காட்டவா..?

ஆண்ட பரம்பரை பற்றி பேசும் எந்த தேவனோ, கவுண்டனோ, பள்ளனோ, பறையனோ, சக்கிலியனோ, வன்னியனோ, நாடாரோ பார்ப்பனன் வகுத்த சாதிக்குள்ளயே முண்டியடிச்சி மேல போகத்தான் பாக்குறானோ தவிற எவனும் சாதிய விட்டு வெளிய வர சிந்திக்கிறதேயில்ல. இதெல்லாம் ஒருத்தன ஒருத்தன் அடிச்சிக்கிட்டு சாகத்தானே.. சமத்துவமா வாழுறதுக்கு இவனுககிட்ட என்ன கருத்து இருக்கு..?

வன்னியர் பொண்ண காதலிச்சி கல்யாணம் முடிச்சா பறையன வெட்ட வரான். கேட்டா சாதி கவுரவம் குறைச்சிரும் னு சொல்றான். வன்னியன் ஒரு செட்டியார் பெண்ணையோ, கவுண்ட பெண்ணையோ காதலிச்சி கல்யாணம் முடிச்சா தலைய சொறிஞ்சி சிரிசிக்கிட்டு ஏத்துக்கிறான். இதுல மட்டும் சாதி கவுரவம் போயிடாதா..?

ஒரு பறையர்.. பள்ளர், சக்கிலிய பொண்ண திருமணம் செஞ்சா குறைச்சலா நினைக்கிறான். அதே பறையன் வன்னியன், பார்ப்பன பொண்ண முடிச்சா பெருமையா நினைக்கிறான். இந்த சாதி என்ற சமைப்புதானே இவர்கள பெருமையா நினைக்கு தூண்டுது? ஆண்ட பெருமை பேச தூண்டுது?

இப்படி மானமில்லாம அடுத்தவன் காலபுடிச்சிட்டு, அவனுக்கு கீழ ஒரு சாதியா வாளனுமா..? இதுக்கு நீங்கெல்லாம் செத்துறலாம். எவ்வளவு தூரம் சாதிக்குள்ள போட்டி போட்டு முண்டியடிச்சி மேல போக நினைச்சாலும், எட்ச்ல பார்ப்பனன் இருப்பான். உங்கள அவனுக்கு கீழ வச்சியே விளையாட்டு காட்டுவான்.

மனுசனா ஒண்ணா கூடி வாளனுமுன்னா எல்லாம் ஒண்ணா சேர்ந்து பூணூல வெட்டுங்க.
இல்ல.., நீங்கதாண்டா ஒருத்தன ஒருத்தன் வெட்டிக்கிட்டு சாகனும்.

https://m.facebook.com/story.php?story_fbid=214724272736083&id=100025955349834