Monday, August 13, 2018

திராவிடம் பற்றி 50 நூல்கள்

Krishnavel T S
2018-08-13

பல நேரங்களில் நண்பர்கள், என்னிடம் பேசும் போது, சார், எனக்கு பெரியாரை பிடிக்கும், அண்ணாவை பிடிக்கும், கலைஞரையும் பிடிக்கும், ஆனால் இந்த திராவிட இயக்கத்தின் வரலாற்றை எளிமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் எந்த நூலை படிக்கலாம் என்று கேட்பார்கள்.

100 வருட திராவிட இயக்க வரலாறை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் ஓரிரு நூல்களை படித்தால் எப்படி போதுமானதாக இருக்கும், நிறைய படிக்கவேண்டும் என்று நான் கூறுவேன், இன்றைய படிக்க ஆசைதான் சார் ஆனால் நேரம் இல்லையே என்ன செய்வது, முதலில் எந்த எந்த நூல்களில் இருந்து தொடங்குவது என்று பதில் கேள்வி வரும்.

நண்பர்களுக்காகவே, எளிதில் படிக்கும் வகையில், அதாவது சராசரியாக 20 முதல் 40 பக்கங்கள் கொண்ட சிறு சிறு நூல்களாக தெரிவு செய்து 50 நூல்களை கீழே பட்டியல் இடுகிறேன், இவைகளை படித்தால் ஓரளவு திராவிட இயக்க வரலாறை நீதிக் கட்சி காலத்தில் இருந்து இன்றைய காலகட்டம் வரை புரிந்து கொள்ள முடியும்.

இந்த நூல்களின் தொகுப்பை நான் திராவிடம் 50 என்று அழைக்க விரும்புகிறேன்.

1. 21-ஆம் நூற்றாண்டு பெரியார் நூற்றாண்டே!
• கழக பொதுச்செயலாளர் திரு.கி.வீரமணி 25.10.1997அன்று பழனியில் நடைபெற்ற, மத்திய நிர்வாக குழு கூட்டத்தில் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்

2. அபத்தமான இந்துமதம்
• குஷ்வந்த் சிங் அவர்களின் கருத்துகள் மற்றும் இந்துமதம் தன்னிடத்தில் கொண்டுள்ள அபத்தங்களை தோலுரிக்கும் ஆசிரியர் வீரமணி அவர்களின் கையடக்க நூல்

3. பிள்ளை-யார்? –
• பெரியாரின் ஆராய்ச்சி நூல் நான்கு வகை பிள்ளையார் பற்றி பெரியார் கூறுகிறார்
• முதல் கதை பிள்ளையார் நமக்கு எனலாம் தெரிந்த அழுக்கு உருண்டை பிள்ளையார் கதை
• இரண்டாம் கதை காட்டில் இரண்டு யானைகள் உறவில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சிவனும் பார்வதியும் அவற்றுள் புகுந்து அதனால் யானை தலையுடன் பிறந்த கதை
• மூன்றாம் கதை பார்வதி கருவுற்றிருந்த போது ஒரு அரசன் அவள் வயிற்ருக்குள் புகுந்து கருவின் தலையை வெட்டிவிட, தலையில்லாமல் பிறந்த குழந்தையின் கதை
• நான்காம் கதை, தக்ஷனின் யாகத்தை அழிக்க சிவன் தன பூதகணங்களின் தலைவனான கணபதியை அனுப்ப தக்ஷன் கணபதியின் தலையை வெட்டிவிட, இரண்டாம் மகன் சுப்பிரமணியன் சென்று அண்ணனை மீட்ட கதை   

4. கந்தபுராணமும் இராமாயணமும் ஒன்றே!
• 19960-l வெளிவந்த இந்த நூல், அன்னை மணியம்மையார் எழுதியது, இந்த நூல் கந்தபுராணமும் இராமாயணமும் ஒன்றே என்று நிறுவுவதோடு நில்லாமல், ராமாயணமும் பாரதமும் காலத்தால் கந்தபுராணத்தை விட மிகவும் பின்தங்கியவை என்பதையும் தெளிவாக விளக்குகிறார்

5. கழகமும் பிரச்சாரமும்
• திராவிட கழத்தின் செயல்பாடுகள், நோக்கம் மற்றும் கோட்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்லவேண்டியதன் வழிமுறைகளை விளக்கும் இந்நூல் ஆசிரியர் வீரமணி அவர்களால் எழுதப்பட்டது

6. பகுத்தறிவு முழக்கம்
• “அறிவுடையார் அமெரிக்காவில்
அய்யாயிரம் ரூபாய் உடையார்
அறிவிலார் இங்கே அய்யங்கார் பழைய
இரும்புக் கடையிலே ரூ.3 ½ பழம்
இரும்பு பேரிச்சம் பழத்துக்கு உடையார்” என்று பகுத்தறிவு இல்லாமல் மக்கள் படும் அவதிகளை வேடிக்கையான கவிதை மூலம் நாவலர் நெடுஞ்செழியன் எழுதிய நூல்

7. பெரியாரும் இராமலிங்கரும்
• பெரியார் மக்களிடையே கூறி வந்த புராணம், வேதம் மற்றும் மதம் பற்றிய கருத்துகளுக்கு ஒத்த சிந்தனை கொண்ட இராமலிங்க அடிகளின் பொன்மொழிகளின் தொகுப்பு 

8. பேய்,பில்லி, சூனியம் ஆவி மொசடிகள்
• பேய்,பில்லி, சூனியம் ஆவி போன்ற கருத்துக்கள் மூலம் மக்கள் ஏமாற்றப்படுவதை அறிவியல் பார்வையில் பல கட்டுரைகள் மூலம் விளக்கம் 

9. 13 மாத பி.ஜே.பி ஆட்சி
• வாஜ்பேயி தலைமையில் நடந்த 13 மாத பி.ஜே.பி ஆட்சி, மொத்தத்தில் என்ன செய்து கிழித்தது என்பதை பற்றிய ஆசிரியரின் உரை நூல் வடிவில்

10. அம்மா பேசுகிறார்
• இந்தியாவில் முதல் முதலாக ராவண லீலா என்ற விழாவை நடத்திக் காட்டி பெரியாரின் மறைவுக்கு பிறகும் நாத்தீகம் மற்றும் பகுத்தறிவு கொள்கைகளை தொடர்ந்து நிலைநாட்ட போராடிய வீராங்கனை, அம்மாவின் மனந்திறந்த கொள்கை முழக்கம் இந்த நூல்.   

11. இந்துக்கள் ஒன்றுசேர முடியுமா?
• இந்துகள் என்ற பெயரில் மக்கள் எந்த காலத்திலும் ஒன்று சேர்ந்து ஏன் வாழவே முடியாது என்பதை பற்றிய அலசல்

12. இரண்டு வழிகள்
• உலகில் நல்வழி என்பதற்கு இரண்டு வழிகள் உண்டு ஒன்று இயற்கையான வழி மற்றொன்று இயற்க்கைக்கு மாறான வழி, இவை குறித்து மேற்கு நாட்டு சிந்தனையாளர் ஆர்.ஜி.இங்கர்சால் எழுதிய நூல் தமிழில்

13. இராவணன் வித்தியாதரனா?
• 1947ல் வெளிவந்த இந்த நூல் பேராசிரியர் அ.சக்ரவர்த்தி அவர்களால் எழுதப்பட்ட ஒரு ஆராய்ச்சி நூல், இந்திய விடுதலைக்கு முன்னரே பார்ப்பனிய எதிர்ப்பு தமிழ் நாட்டில் எப்படி இருந்த்தது என்பதற்கு இந்த நூல் ஒரு நல்ல எடுத்துக்காட்டு 

14. நீட் நுழைவுத் தேர்வு கூடாது ஏன்?
• இந்த நுழைவுத் தேர்வை பலர் பலவிதமாக பாராட்டிபெசினாலும் அடிப்படையில் இந்த தேர்வு என் கூடாது அதனால் என்ன என்ன கேடுகள் என்று விளக்கும் நூல்

15. நவோதயா பள்ளிகள் கூடாது ஏன்?
• நவோதயா பள்ளிகள், எப்படி பணம் படைத்த பெற்றோருக்கும், ஏழை பெற்றோருக்கும் இடையே ஒரு பெரும் சுவடை எழுப்பி சமத்துவத்தை குலைத்து, இந்துத்துவா கொள்கைகளை பரப்புவதில் முடியும் என்று கல்வி நெறியாளர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்களின் விளக்கமான நூல்    

16. நரகம் எங்கே இருக்கிறது?
• “Where is the Hell?” என்ற பெயரில் ஆங்கிலத்தில் மார்ஷல் ஜெ காவின் எழுதிய நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு, பண்டிதர் எஸ்.முத்துசுவாமிபிள்ளை அவர்களால் 1932-ல் வெளிவந்த ஒரு அறிய நூல்

17. தந்தை பெரியாரும் டாக்டர் அம்பேத்கரும்
• இவ்விரு பெருந்தலைவர்கள் சந்தித்து கொண்ட தருணங்கள் அப்போது நடந்த சுவையான விஷயங்கள் குறித்த நூல்

18. பொசுங்கட்டும் மனுதர்மம்!
• பெண்களை இழிவுபடுத்தும் மனுதர்ம குப்பைகள், பார்ப்பனமயமான மனுதர்ம சுலோகங்கள், தந்தை பெரியார் பார்வையில் மனுதர்மம், மனுதர்மத்தை அம்பேத்கர் ஏன் எரித்தார் போன்ற சிறந்த கருத்துகள் கொண்டது இந்த நூல் 

19. மதம் என்றால் என்ன?
• மதம் என்ற கருத்தியல் குறித்த மேற்கு நாட்டு சிந்தனையாளர் ஆர்.ஜி.இங்கர்சால் எழுதிய நூல் தமிழில்

20. மீனாட்சிபுரத்தில் மதம் மாற்றம் ஏன்?
• மீனாட்சிபுரத்தில் மக்கள் மொத்தமாக இஸ்லாத்தை தழுவினார்கள், பலர் அதற்கு பல காரணங்கள் கூறினார், ஆனால் Firsthand information என சொல்லப்படும் நேரடி சான்றே முக்கியமானது, ஆசிரியர் வீரமணி அவர்கலேநேரில் சென்று மதம் மாறியவர்களிடம் கேள்வி பதில் மூலம் பெற்ற சான்றுகள், இந்நூலில் உள்ளவை ஒலிநாடாவில் இருந்து நேரடியாக எழுதப்பட்டது   

21. மூடநம்பிக்கைகள்
• நம்மிடையே நிலவும் பல மூட நம்பிக்கைகளை ஒழிக்கும் வழிவகைகள் பற்றிய நூல்

22. அய்யப்ப பக்தர்களுக்கு சில கேள்விகள்
• மகரஜோதி மோசடி முதற்கொண்டு சபரிமலையில் நடக்கும் பல புரட்டுகள் குறித்த நூல் இது

23. கம்பன் கெடுத்த காவியம்
• பெயரை பாரத்துடன் உங்களுக்கு புரிந்திருக்கும் கம்பனது தவறுகள் பட்டியலிடும் நூல் 

24. பிரார்த்தனை மோசடி
• எம்.ஜி.யார் நோய்வாய்பட்டு இருந்த நேரத்தில் பிராத்தனை என்ற பெயரில் நடந்த எல்லா வித கொமாளித்தனகளும் விரிவாக சொல்லப்பட்டுள்ளது

25. புரோகிதர் ஆட்சி
• 1949-ல் வெளிவந்த இந்த நூல் இந்திய பார்ப்பனர் மற்றுமின்றி உலகெங்கிலும் பூசாரிகளும் புரோகிதர்களும் செய்த அட்டகாசங்களை விளக்கமாக சொல்லும் சொல்லும் நூல்

26. பெரியார் சொன்னார் கலைஞர் செய்கிறார்
• பெரியாரின் கனவுகளும் அவற்றை கலைஞர் நிறைவேற்றிவரும் பாங்கினையும் பற்றி தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம் இந்த நூல்

27. புட்டபர்த்தி சாய்பாபா?
• சாய்பாபா கையை ஒருபுறம் ஆட்டினால் தண்ணீர் பெட்ரோல் ஆகிவிட்டதாம் கையை மறுபுறம் ஆட்டினால் தண்ணீர் டீசல் ஆகிவிட்டதாம், பேசாமல் இவரை நாட்டுடமை ஆக்கி எரிபொருள் தாயரிப்பதை விட்டுவிட்டு இந்திய அரசாங்கம் என் அரபு நாடுகளை தேடி ஓடுகிறது., சாய்பாபா வின் திருட்டுத்தனங்களை தோலுரிக்கும் நூல் இது  

28. திராவிடர் இயக்கத்தின் தோற்றமும்- தேவையும்
• திராவிட இயக்கம் ஏன் தோன்றியது அது இன்றும் ஏன் தேவைபடுகிறது என்பது குறித்த இனமான பேராசிரியர் க.அன்பழகனின் தீர்க்கமான பார்வை மற்றும் கருத்துகள்

29. ஜாதி ஒழிய வேண்டும் ஏன்?
• சட்டம் போட்டு சாதிபிரிவினை பார்க்க கூடாது என்று சொன்ன இந்திய சர்க்கார் ஏன் போலீஸ்காரன் கையில் கத்திரிகோலை கொடுத்து பூணூல் தெரியும் படி எங்கே பார்ப்பானை பார்த்தாலும் அங்கேயே ப்போனலை கத்தரிக்கும்படி ஏன் சொல்லவில்லை – பெரியாரை தவிர வேறு யார் இப்படி சிந்திக்கமுடியும், மேலும் பல கருத்துகள் கொண்ட நூல்   

30. காஞ்சி சங்கராச்சாரியாரைப் புரிந்து கொள்வீர்!
• சின்ன குத்தூசி மற்றும் ஞாநி ஆகியோர் காஞ்சி சங்கராச்சாரியை எடுத்த நேரடி பேட்டியின் தொகுப்பு, இதில் முக்கியமான செய்தி என்னவென்றால், பெட்டி எடுத்த இருவரும் பிறப்பால் பார்ப்பனர் ஆனால் பெரியாரின் பக்கம் வந்துவிட்டவர்கள் 

31. கடவுளர் கதைகள்
• இந்துமத்தின் பல்வேறு கடவுள்களும், அவர்கள் பிறந்தமுறை என்று சொல்லப்படும் அறிவுக்கு ஒவ்வாத ஆபாசக் குப்பைகளை பற்றிய விளக்க நூல்

32. பெரியார் டிரஸ்டுகள் ஒரு திறந்த புத்தகம்
• பெரியார் டிரஸ்டு என்ன பணிகளை செய்கிறது அதன் செயல்பாடுகள் என்னென்ன, என்பது பற்றிய விளக்க நூல் 

33. சர் ஏ.டி.பன்னீர் செல்வம்
• தன் பராசக்தி திரைப்படத்தில் கலைஞர் அவர்கள், சிவாஜியின் குணசேகரன் கதாபாத்திரம், எனக்கு பிள்ளை பிறந்தால் பன்னிர்செல்வம் என்றும் பெண் பிறந்தால் நாகம்மை என்றும் பெயர் வைப்பேன் என்று பேசவைத்திருப்பார், திராவிட இயக்க முன்னோடிகளில் ஒருவரான இவரின் வாழ்கை வரலாறு    

34. தமிழரின் மறுமலர்ச்சி
• தமிழ் மற்றும் இசை தமிழ் ஏன் முக்கியம் என்று அண்ணாவின் ஆணித்தரமான வாதங்கள்

35. கிறித்துவர்கள் சிந்தனைக்கு
• பொதுவாக திராவிட கழத்தின் மீதும் பெரியார் மீதும் வைக்கப்படும் குற்றச்சாட்டு நீங்கள் இந்து மதத்தை மட்டுமே எதிர்ப்பீர்கள் என்பது, முட்டாள்தனம் இந்து மதத்தின் தனிப்பட்ட சொத்தா என்ன, விவிலியத்தில் உள்ள முட்டாள்தனங்கள் குறித்தான நூல் இது  

36. கிரிமீலேயர் கூடாது ஏன்
• மண்டல் கமிஷன் குழுவின் 27% இடவொதிகீட்டில் வருமானம் குறித்து Creamy layer என்ற பாகுபாடு ஏன் கூடாது என்று விளக்கும் ஆசிரியர் வீரமணி அவர்களின் நூல்

37. கடவுள்
• கடவுள் என்ற கருத்தியல் குறித்த மேற்கு நாட்டு சிந்தனையாளர் ஆர்.ஜி.இங்கர்சால் எழுதிய நூல் தமிழில்

38. இந்து மதப் பண்டிகைகள்
• சொர்க்கவாசல் திறப்பு, சிவராத்திரி முதல் ஆயுத பூஜையால் அழ்ந்த ராஜ்ஜியம் வரை அனைத்து இந்து மத பண்டிகைகளின் மூடத்தனம் பற்றி பெரியார் விளக்கும் நூல்

39. இதிகாசங்களின் தன்மைகள்
• 1963-ல் வெளிவந்த பண்டிதர் இ.ம.சுப்பிரமணியம் எழுதிய இந்த நூல் அந்தா காலத்திலேயே புராணங்களின் புரட்டுகளை தெளிவாக விளக்கிய நூல்

40. அறிஞர்கள் பார்வையில் பார்ப்பனர்
• திருமூலர், அவ்வையார் முதல், பெரியார், மணியம்மை மற்றும் ஆசிரியர் வீரமணி வரை பார்ப்பனர் பற்றி இந்த அறிஞர்களின் பார்வை மற்றும் கருத்துகளின் தொகுப்பு இந்த நூல்   

41. வாழ்க திராவிடம்
• 1947-ல் இனமான பேராசிரியர் க.அன்பழகன் எழுதிய நூல் ஆரியத்தின் புரட்டுகளையும் திராவிடத்தின் அவசியத்தையும் விளக்கும் நூல்

42. செங்கல்பட்டில் சுயமரியாதை சூறாவளி
• முதல் சுயமரியாதை மாநாடு நடந்து 80 ஆண்டுகள் நிறைவு ஆனாதை ஒட்டி செங்கல்பட்டில் 2008ஆம் ஆண்டு நடந்த விழாவில் பெரியாரின் கொள்கைகள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது என்பன ஆவணப்படுத்தும் நூல் இது
43. பகவத் கீதை இதுதான்
• ஆசிரியர் வீரமணி அவர்களின் கீதையின் மறுபக்கம் நூலை முழுவதும் படிக்க நேரமில்லை என்பவர்கள் இந்த நூலை படிக்கலாம், ஆசிரியர் அவர்களின் உரையே இந்த நூல்

44. ‘திராவிடர் இயக்கத் தலைவர்’ டாக்டர் சி.நடேசனார்
• திராவிட இயத்தின் மூலம் முதல் முதலில் மக்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்காக பல முயற்ச்சிகள் எடுத்த திராவிட இயக்க மூத்த முன்னோடிகளில் ஒருவரவது வரலாறு

45. யார் இந்த இராமன்?
• ராமாயணமும், ராமனும் பார்பனரின் நல்வாழ்வுக்கும் பிற மக்களை சுரண்டுவதற்கும் எப்படி வழிவகை செய்கிறது என்பது குறித்த பல ஆதாரத்துடன் கூடிய நூல் இது  

46. பேய்-பூதம்-பிசாசு-அல்லது ஆவிகள்
• விவிலியம் முதற்க் கொண்டு பல்வேறு புராணக்கதை மூலம் பேய்-பூதம்-பிசாசு-அல்லது ஆவிகள் கதைகள் மூலம் மக்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் என்பது குறித்த மேற்கு நாட்டு சிந்தனையாளர் ஆர்.ஜி.இங்கர்சால் எழுதிய நூல் தமிழில்

47. புதிய கல்விக்கொள்கையா? நவீன குலக்கல்வித் திட்டமா?
• பிரதமர் மோடி கொண்டுவர நினைக்கும் புதிய கல்வி கொள்கை என்பது பழைய குலக்கல்வி திட்டத்தின் நவீன வடிவம் என்பதை விளக்கும் ஆசிரியர் வீரமணி அவர்களின் நூல் இது

48. நாடாளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீடு முட்டுக்கட்டை ஏன்?
• இத்தனை ஆண்டுகள் கடந்தும் பெண்களுக்கு நாடாளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீடு என் கொண்டு வர முடியவில்லை யார் அதற்கு காரணம் என்பதை விளக்கும் ஆசிரியர் வீரமணி அவர்களின் நூல்

49. தமிழ்நாட்டு இந்து சமயங்களின் வரலாறு
• தமிழ்நாட்டு இந்து சமயங்களும் அவை பார்ப்பனிய மதத்தில் இருந்து எப்படி வேறுபட்டது என்பது குறித்த பேராசிரியர் கா.சுப்பிரமணிபில்லை அவர்கள் எழுதிய ஒரு பழைய நூல்

50. தமிழ்நாட்டில் சமூகநீதி வரலாறு-ஒரு பார்வை
• தமிழ்நாட்டில் சமூக நீதி போராட்டம் எப்படி தொடங்கி இப்போது நாம் எங்கே இருக்கிறோம் என்பதை பற்றிய ஒரு வரலாற்று பார்வை ஆசிரியர் வீரமணி எழுதிய இந்த நூல்

இந்த 50 நூல்களின் தொகுப்பின் விலை ரூ.700/- மட்டுமே இந்த தொகுப்பை வாங்க https://bit.ly/2KSQPwG இந்த சுட்டியை அழுத்தவும்

https://m.facebook.com/story.php?story_fbid=10212271526569441&id=1416623901

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. குப்பைக்கு எதற்கு 700 ரூபாய்?

    ReplyDelete