Saturday, February 29, 2020

ஓர் அமைப்பை அழிப்பது எப்படி...?

# ஓர் அமைப்பை அழிப்பது எப்படி...?
**************-****************

ஒரு தோழருக்கு இதை அனுப்பினேன்...

படித்துவிட்டு ஆமாங்க இப்படிதாங்க நடந்துக்கிறாங்க என்றார்..

அட மக்கு நீயே அப்படித்தான் நடந்துகிட்டு இருக்க)

01. கூட்டங்களுக்கு அழைப்பு 
வந்தாலும் போககூடாது.போனாலும்
கால தாமதமாகப் போக வேண்டும்.
கூட்டத்தில் கலந்து கொண்டால்
அதிகாரிகளை(பொறுப்பாளர்களை)ப் பற்றியும் இதர உறுப்பினர்களைப் பற்றியும் குறைக்கூற வேண்டும்.

02. எந்தக் கருத்துக்கு ஆதரவாக வாக்களிக்க நேரிடுகிறதோ வெளியில் அதன் எதிர் கருத்திற்க்கு ஆதரவாக செயல்பட வேண்டும்.
 
03. எல்லோரது கருத்துக்களையும்
ஏற்றுக்கொள்வதாக கூட்டத்தில்
சொல்ல வேண்டும். ஆனால்
யாருடைய கருத்துக்களையும்
ஏற்றுக்கொள்ளவில்லை என்று வெளியில் சொல்லவேண்டும்.

04. ஏதாவது ஒரு குழுவில் உறுப்பினராக
போட்டால் பொறுப்பேற்கக் கூடாது.
ஏனென்றால் செயலாற்றுவதை விட 
விமர்சனம் செய்வது எளிதானது.
எந்த குழுவிலும் உறுப்பினராகப்
போடவில்லை என்றால் புறக்கணிக்கப்பட்டதாக புலம்ப வேண்டும்.

05. கூட்டத் தலைவர் எதாவது
முக்கியமான பிரச்சனையைப் பற்றி
கருத்தைக் கேட்டால் கருத்து எதுவும்
இல்லை என்று சொல்லவேண்டும்.
ஆனால் கூட்டத்தில் இருந்து வெளியே
வந்ததும் எதை எப்படி செய்யவேண்டும்
என்று எல்லோரிடமும் சொல்ல வேண்டும்.

06. ஒரு காரியமும் செய்யக்கூடாது
விரும்பி சில பேர் செயலாற்றும்போது
குழு மனப்பான்மையை உருவாக்கிவிட்டால் அந்த அமைப்பே உருப்படாது என்று பேச வேண்டும்.

07. விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டால்
வீண் பண விரயம் என்று சொல்ல வேண்டும். ஏற்பாடு செய்யவில்லை என்றால் அமைப்பே செத்து விட்டதாகக் குறை கூறவேண்டும்.

08. கலைநிகழ்சிகள் நடந்தால்
நுழைவுச் சீட்டுகள் விற்பனையாகும்
வரை காத்திருக்க வேண்டும். பிறகு
ஏமாற்றப்பட்டதாகச் சொல்லவேண்டும்.

09. முதன்மை விருந்தினரின்
இருக்கையில் உட்காரச் சொன்னால்
நாசூக்காக மறுக்க வேண்டும்
அப்படி கேட்கப்படவில்லை என்றால் 
புறக்கனிக்கப்பட்டதாகச் சொல்ல வேண்டும்.

10. அமைப்புக்கு செலுத்த வேண்டிய
தொகையை செலுத்தாமல் முடிந்த 
அளவு கால தாமதம் செய்ய வேண்டும்.
முடிந்தால் பணமே கட்டக்கூடாது.

11. எப்போழுதும் விழிப்பாக
இருந்து சிறிய காரணம் கிடைத்தாலும்
பதவி விலகுவதாக அச்சுறுத்தவேண்டும்.
முடிந்தால் நண்பர்களும் இதே போல அச்சுறுத்த தூண்டப்பட வேண்டும்.

12. அமைப்பில் இருந்து வரும்
கடிதங்களுக்கு பதில் எழுதுவதை 
முடிந்த அளவு தாமதம் செய்ய வேண்டும்.
பதிலே எழுதாமல் இருப்பது உத்தமம்.

13. கடைசியாக ஆனால் மிக  முக்கியமான ஒன்று உண்டு. எந்தக் காரணத்தை முன்னிட்டும் பதவியில் இருந்து விலகக் கூடாது. ஏனென்றால் அங்கம் வகிக்கும் அமைப்பை அழிக்கும் வாய்ப்புத் தவறிவிடும்..

- நன்றி திருப்பூர் வாய்ஸ் இதழில் வந்து பின் (2007 ல் பதியம் இதழில் அச்சேற்றியது)

Monday, February 10, 2020

பிள்ளையாரை முன்பு உடைச்ச மாதிரி இப்ப உடைக்க முடியுமா?

பெரியார்_காலத்தில்_அவரது செயல்பாட்டுக்கு_எதிர்வினையாற்றி தோற்றுப்_போன_ஆர்எஸ்எஸ்_சங்கிகள். 
தந்தை_பெரியார்_இயக்கத்தைப் பார்த்து_இப்போது_சவால் விடுகிறார்கள்.

#பிள்ளையாரை_முன்பு_உடைச்ச_மாதிரி #இப்ப_உடைக்க_முடியுமா? 
#ராமனை_செருப்பால்_அடிச்ச_மாதிரி #இப்போ_அடிக்க_முடியுமா? 
என்று கேட்கிறார்கள். 
அவர்களுக்கு நமது எதிர் வினாக்கள்:

1) முன்பு எங்கள் மக்களைப்பார்த்து சூத்திரப்பயலே தள்ளிப் போடா என்று சொன்னீர்களே! இப்போது அது மாதிரி சொல்ல முடியுமா?
2) எங்கள் மக்களை தொட்டால் தீட்டு பார்த்தால் பாவம் என்று சொன்னீர்களே! இப்போது சொல்ல முடியுமா?
3) முன்பு நாங்கள் தொட்ட பொருளைத் தண்ணீர் தெளித்து எடுத்துச் செல்வீர்களே! இப்போது அது மாதிரி செய்ய முடியுமா?
4) முன்பு சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று சொன்னீர்களே! இப்போது சொல்ல முடியுமா?
5) முன்பு தவம் இருந்த சம்பூகனின் சிரம் கொய்தீர்களே! இப்போது அதுபோலச் செய்ய முடியுமா?
6) முன்பு ஏகலைவன் கட்டைவிரல் வாங்கியதுபோல இப்போது கட்டைவிரலை வாங்க முடியுமா?
7) முன்பு தமிழன் கட்டிவைத்த சத்திரத்துச் சாப்பாடு பார்ப்பானுக்கு மட்டும்தான் என்று தின்று கொழுத்தீர்களே! இப்போது அப்படித் தின்று தீர்க்க முடியுமா?
8) முன்பு எங்களைக் காலில் செருப்பணியாதே என்று சொன்னீர்களே! இப்போது சொல்ல முடியுமா?
9) முன்பு எங்கள் தோளில் துண்டு போடாதே என்று சொன்னீர்களே! இப்போது அதுபோல் சொல்ல முடியுமா?
10) முன்பு எங்களைத் தெருவில் நடக்காதே என்று சொன்னீர்களே! இப்போது அதுபோல் சொல்ல முடியுமா?
11) முன்பு எங்களை முழங்காலுக்குக் கீழ் வேட்டி அணியாதே என்றீர்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?
12) முன்பு எங்களைக் குடைபிடிக்காதே என்று சொன்னீர்களே! இன்று அப்படிச் சொல்ல முடியுமா?
13) முன்பு ஆர்எஸ்எஸ் தோன்றிய மராட்டியத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் கால் பட்டால் தீட்டு என்று அவர்கள் நடந்த தடத்தை அழிக்க விலக்குமாற்றைக் கட்டி நடக்க வைத்தீர்களே! இப்போது அவ்வாறு செய்ய முடியுமா?
14) முன்பு தீண்டத்தகாதவதர் எச்சில் துப்ப கழுத்திலே கலயத்தைக் கட்டிக்கொண்டு நடக்க வைத்தீர்களே! அதுபோல இப்போது செய்ய முடியுமா?
15) திருவாங்கூர் சமஸ்தானத்தில் ஒவ்வாரு ஜாதிக்காரனும் நம்பூதிரிக்கு இவ்வளவு அடி தூரத்தில்தான் நின்று பேச முடியும் என்று சொன்னீர்களே! இன்று அவ்வாறு சொல்ல முடியுமா?
16) முன்பு எங்கள் பெண்கள் ஜாக்கெட் அணியக் கூடாது என்று சொன்னீர்களே! இன்று அவ்வாறு சொல்ல முடியுமா?
17) முன்று எங்கள் தாய்மார்கள் ஜாக்கெட் அணிந்தால் முலைவரி போட்டீர்களே! இன்று அதுபோல் வரி போட முடியுமா?
18) எங்கள் முன்னோர் தலைமுடி வளர்த்தால் முண்டாசு கட்டினால் அதற்கெல்லாம் வரி போடடீர்களே! அதுபோல இப்போது வரி போட முடியுமா?
19) முன்பு எங்கள் பிள்ளைகளுக்கு மங்கலகரமான உயர்வான பெயர் வைக்கக் கூடாது என்று சொன்னீர்களே! இன்று அவ்வாறு சொல்ல முடியுமா?
20) முன்பு சீரங்கம் போன்ற கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய அனுமதி இல்லை என்று போர்டு வைத்தீர்களே இப்போது அப்படி வைக்க முடியுமா?
21) முன்பெல்லாம் படிப்பு எங்களுக்கு மட்டும்தான் வரும். உனக்கெல்லாம் வராது என்று சொன்னீர்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?
22) எங்களுக்கு மட்டும்தான் தகுதி திறமை இருக்கு. உங்களுக்கு இல்லேன்னு சொன்னீங்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?
23) முன்பு குலக்கல்வித்திட்டம் கொண்டு வந்து வண்ணான் பிள்ளை துணி வெளுக்கனும். நாவிதன் பிள்ளை முடிவெட்டனும். என்று சொன்னீர்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?
24) இவன் குயவன் மண்பாண்டம் செய்கிறான். இவன் வண்ணான் துணி வெளுக்கிறான். இவர் அய்யர் மிகவும் நல்லவர். பாடம் படிக்கிறார் என்று பாடம் வைத்தீர்களே! இப்போது அப்படிச் சொல்ல முடியுமா?
25) ராஜாஜி சொன்னதுபோல உங்கள் பிள்ளைகளை உயர் படிப்பு படிக்க வைக்காதீங்க. குலத்தொழிலைக் கற்றுக் கொடுங்கள் என்று சொல்ல முடியுமா?
26) அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதுக்குன்னு முன்பு சொன்னீங்களே! அதுபோல இப்போது சொல்ல முடியுமா?
27) முன்பு கணவனை இழந்த பெண்ணை சதி என்ற பெயரால் உயிரோடு கொளுத்தினீர்களே! அதுபோல இப்போது கொளுத்த முடியுமா?
28) முன்பு எட்டு வயதுக்குள் திருமணம் செய்ய வேண்டும் என்று குழந்தைத் திருமணத்தைச் செய்து வைத்தீர்களே! இன்று அதுபோலச் செய்ய முடியுமா?
29) அன்று விதவைப் பெண்களை வெள்ளைப் புடவை உடுத்தி மூலையில் உட்கார வைத்தீர்களே அதுபோல இன்று செய்ய முடியுமா?
30) முன்பு கன்னிகாதானம் என்ற பெயரால் பெண்ணையே தானமாகப் பெற்றீர்களே! அதுபோல் இன்று செய்ய முடியுமா?
31) தேவதாசி முறையை ஆதரித்த நீங்கள் அதனை மீண்டும் கொண்டுவருவோம் என்று உங்களால் துணிச்சலாகச் சொல்ல முடியுமா?
32) பெண்களுக்கு பெற்றோர் சொத்தில் பங்கு இல்லை என்று வெளிப்படையாகச் சொல்ல முடியுமா?
33) முன்பு மன்னர்களை ஏமாற்றி ஊர்களையே தானமாகப் பெற்றீர்களே! இன்று அதுபோல் ஏமாற்ற முடியுமா?
34) இவை எதுவும்கூட வேண்டாம் உங்கள் திட்டமான மனுதர்மத்தை இந்திய அரசியல் சட்டத்துக்குப் பதிலாக மீண்டும் கொண்டு வருவோம் என்று வெளிப்படையாகச் சொல்ல முடியுமா?
 #திருமணமான பெண் பார்ப்பானுடன் இரவு தங்கி தோஷம் கழித்த பின்புதான் கணவன் தொடமுடியும் என்று இப்போது சொல்லிப்பாரேன்,,, பிள்ளையாரை கடவுளை உடைக்கமாட்டான் உன்னையே உடைப்பான்,,!

இப்படி அடுக்கடுக்கான வினாக்களை எங்களாலும் தொடுக்க முடியும். இந்தக் கொடுமைகளையெல்லாம் எதிர்த்துத் தந்தை பெரியார் போராடியபோது அதற்கு எதிராக பிள்ளையாரையும் ராமனையும் நீங்கள் கொண்டு வந்ததால்தான் பிள்ளையாரை உடைத்தார். ராமன் படத்தை எறித்தார். பெரியாரின் உழைப்பால் பலன் பெற்ற மக்கள் அவருக்கு ஆதரவாக இருந்தனர்.

இன்று அதனையெல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் என்பதால் பக்தியைக் காட்டி மக்களை ஏய்க்கப் பார்க்கிறீர்கள். அதற்கெல்லாம் மக்கள் ஏமாற மாட்டார்கள். ஏமாறப் போவது நீங்கள்தான் என்பது திண்ணம்! பெரியார் பெரும்படை அதனை முறியடிக்கும் எச்சரிக்கை!

பெல் ஆறுமுகம்!

Tuesday, February 4, 2020

1964 - 1967 பக்தவத்சலம் தலைமையிலான ஆட்சி #தமிழகத்தின்_இருண்ட_காலம்

கக்கனையும் காமராஜரையும் 1967ல் தோற்கடித்தவர்கள் தமிழக மக்கள் என்று தொடர்ச்சியாக புலம்பும் கூட்டம் ஒன்று எப்போதும் உன்டு.

திராவிட முன்னேற கழகம் துவங்கிய நாளில் இருந்து தமிழுக்காய், தமிழர் நலனுக்காய் அவர்கள் முன்னெடுத்த போராட்டங்கள், அவர்களின் அர்ப்பணிப்புகள், தியாகங்கள் பற்றி எல்லாம் சிறிதும் தெரியாமல் அரசியல் வரலாறு படிக்காமல், திமுக வெறுப்பை மட்டுமே அடிப்படையாக கொண்டு பொய்யை மட்டுமே பேசி பரப்பி மக்களின் மனதில் நஞ்சை விதைக்க முயல்கிறவர்களின் முட்டாள் தனமான ஒப்பீட்டுப் பிதற்றலே இது.

அரசியல் வரலாறு படிக்காத, தெரியாத இளைஞர்களின் கனவு அரசியல் தலைவர்களான கக்கன், காமராசர், பக்தவசலம் ஆகியோரின் 1964-1967 வரையிலான தமிழக ஆட்சி தான் இன்று வரை தமிழகத்தின் மிக மோசமான இருண்ட காலம். 

1964-67 ஏன் தமிழகத்தின் #இருண்டகாலம் :-

♦ விவசாயிகள் விளைச்சல் இன்று தவித்தது பக்தவத்சலம் ஆட்சியில் தான்.

♦ விவசாயிகள் எலி கறி சாப்பிட்டது பக்தவத்சலம் ஆட்சியில் தான்.

♦ பொதுமக்கள் உணவிற்கு அரிசி இன்றி தவித்தது பக்தவத்சலம் ஆட்சியில் தான்.

♦ மூட்டையாய் அரிசி வைத்திருக்க அரசு தடை விதித்தது பக்தவத்சலம் ஆட்சியில் தான்.

♦ ஒரு வீட்டில் கல்யாணம் நடந்தால்  எத்தனை பேருக்கு சாப்பாடு போடப்பட்டது என்று இலையை வைத்து கணக்கு பார்க்கும் கொடுமை நடந்தது அப்போது தான்

♦பருப்பு, கடுகு விலை சாமானியன் வாங்க முடியாத அளவிற்கு உயர்ந்தது பக்தவத்சலம் ஆட்சியில் தான்.

♦ தமிழக மாணவர்கள் போராட்டத்தை ஒடுக்க முதல் முறையாக மாநிலத்திற்குள் இந்திய ராணுவத்தை வரவழைத்தது பக்தவத்சலம் ஆட்சியில் தான்.

♦ விவசாயிகள் வாழ்வாதாரத்தை தொலைத்து நூற்றுக்கணக்கில் தற்கொலை செய்து கொண்டதும் இதே பக்தவத்சலம் ஆட்சியில் தான்.

அரிசிக்கு தட்டுப்பாடு, உணவு பஞ்சம், பட்டினி சாவு,
உணவாய் எலி கறி உண்ணுதல், மாணவர் போராட்டம் என மக்களின் மிகப்பெரும் சொல்லொனாத் துயரத்திற்கு காரணமான 1964 - 1967 பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி காலம் #தமிழகத்தின்_இருண்ட_காலம்.

சரி 1964 - 1967 என்பது பக்தவச்சலம் ஆட்சியின் அவலங்கள் என்றே வைத்துக்கொள்வோம்.

அதற்கும் கக்கனுக்கும் காமராசருக்கு என்ன தொடர்பு என்று கேட்டு வருவார்கள்.

அதற்கும் நம்மிடம் பதிலிருக்கிறது.

யார் இந்த #கக்கன்?

இன்றைய இளைஞர்களில் பெரும்பாலோருக்கு தெரிந்தது எல்லாம் ஏழ்மையின் சிகரம், எளிமையின் உச்சம், கரைபடியாத கரத்திற்கு சொந்தக்காரர் கக்கன் என்பது தான். ஆனால் தமிழக போலீஸ் இலாக்கா மந்திரி கக்கனின் உண்மை முகம் அறிந்திடாத பேதைகளே இவர்கள்.

இந்தியை எதிர்த்து நடந்த மாணவர்களின் போராட்டத்தை நசுக்க மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய போலீஸ் மந்திரி தான் இந்த கக்கன். பொள்ளாச்சியில் மட்டும் நூற்றிற்கும் மேலான மாணவர்களை சுட்டுக் கொன்றது கக்கனின் ஒற்றை கையெழுத்து. 

தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 500க்கும் மேலான மாணவர்கள் கக்கன் மந்திரியாய் இருந்த அரசின் துப்பாக்கி குண்டிற்கு இறையானார்கள் என்பது இன்றைய மாணவர்கள், இளைஞர்கள் எத்தனை பேருக்கு தெரியும்?

யார் இந்த #காமராஜர்?

கல்வி கண் திறந்தவர், மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தவர், ஏழை மக்களின் பால் தீராத அன்பு கொண்டு காலம் முழுவதும் அவர்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தவர். இவை மட்டுமே காமராசர் அல்ல. இதற்காக நாமும் அவரை மதிக்கிறோம், புகழ்கிறோம், அது தனி department.

அதே நேரத்தில் இங்கே தாய் தமிழகத்தில் பட்டினி சாவு, விவசாயி தற்கொலை, அரிசி தட்டுப்பாடு, உணவு பஞ்சம், விலைவாசி உயர்வு என்று மக்கள் தினம் தினம் அன்றாட வாழ்க்கையை நகர்த்தவே போராடி கொண்டு இருக்கையில் தேசிய அரசியலில் இருந்து மீண்டும் மாநில அரசியலுக்கு வந்த காமராசர், விருதுநகரில் தன் தேர்தல் பிரச்சாரத்தில் ஒரு இடத்தில் கூட பஞ்சம், பசி, பட்டினியால் வாடும் மக்களின் இந்த வறுமையை போக்க காங்கிரஸ் அரசு என்ன திட்டங்களை வைத்து இருக்கிறது என்று குறிப்பிடவில்லை. 

ஆனால் என்ன குறிப்பிட்டார் தெரியுமா? 

நாங்கள் படுத்துக்கொண்டே வெற்றி பெறுவோம். இந்த மக்கள் மீண்டும் எங்களை தான் ஆட்சியில் அமர்த்துவார்கள் என்றல்லவா குறிப்பிட்டார். 

அது தான் மக்கள் காங்கிரசை ஒரேடியாக படுக்கையில் வைக்க காரணமானது.

திமுகவும், நீங்கள் படுப்பது நிச்சயம், ஜெயிப்பது கடினம் என்று காமராசரின் வாயை அடைத்தது.

1967ல் கக்கன், காமராசர், பக்தவத்சலம் இருந்த காங்கிரசின் எதேச்சதிகார மக்கள் விரோத இருண்ட கால ஆட்சியில் இருந்து தமிழகத்தை மீட்க தமிழக மக்களை காக்க அரசியல் களத்தில் திமுக எவ்வளவு போராடி வென்றது தெரியுமா?
 
1967 வரை 50 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டு தமிழகத்தின் எதிர்கட்சியாய் இருந்த திமுக 1967 பொது தேர்தலில் தன் அயராத உழைப்பை வெளிப்படுத்தினால் இன்னும் சில சட்ட மன்ற உறுப்பினர்களை கூடுதலாக பெற முடியும் என்று அரசியல் ஆர்வலர்கள் பரவலாய் கருத்து தெரிவித்து இருந்த போதும், தானும் தன் கட்சி உறுப்பினர்களும் சட்டமன்ற படி ஏறுவதை விட மக்களின் துயர் துடைக்க இன்னல் நீக்க, படி அரிசி திட்டத்தை காமராஜர் தலைமையிலான காங்கிரசு அரசு கொண்டு வந்தால் திமுக இந்த தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று சாமானிய மக்களின் நலனுக்காய் அறிவித்தவர் அண்ணா.

காமராசர், பகதவச்சலும் உள்ளிட்ட அன்றைய ஜமீன்தார்களுக்கான தலைவர்கள் ஒரே குரலில் உங்களால் முடிந்தால் படி அரிசி திட்டத்தை செய்து காட்டுங்கள் பார்க்கலாம் என்று நம் பேரறிஞரை பார்த்து எள்ளி நகையாடினர். இவர்களின் இந்த ஏளன பேச்சு தான் அன்று திமுகவை கோட்டையில் அமர்த்த அண்ணாவை உந்தும் சக்தியாக இருந்தது. 

காங்கிரஸ், கம்யூனிஸ்ட் நீங்கலாக அனைத்து கட்சிகளுடனும் கட்சிகள் என்று சொல்வதைவிட அனைத்து தரப்பு தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் ஒருங்கிணைத்து அன்று வரை இந்திய வரலாற்றில் யாரும் கண்டிராத மற்றும் காங்கிரசுக்கு எதிராய் யாரும் முன்னெடுக்காத மிகப் பெரிய கூட்டணியை பேரறிஞர் தமிழகத்தில் உருவாக்கினார். "முடிந்தவரை கரும்புச் சாறு சிந்தாமல் பிழிந்துவிட்டேன். அதற்கு மேலும் சாறு இருந்தால் ஈக்களுக்கு உணவாகட்டும் என்று விட்டுவிட்டேன்’’ என்றார் . அதை "கூட்டுறவு" என்றும் அறிவித்தார் அண்ணா.

வேறு வேறு இலக்கு, லட்சியம், விடாப்பிடிவாதம் கொண்ட பலரை இணைத்து அமைத்த கூட்டணிக்குக் கொள்கையே இல்லை. மக்களை ஏமாற்றும் வேலை. இதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று காமராசரும், காங்கிரசாரும் தெருத் தெருவாய் பிரசாரம் செய்தனர். ‘ஒன்றுபட்ட கொள்கை உண்டு, அதுதான் எதேச்சதிகார காங்கிரஸை வீழ்த்துவது’ என்று காமராசரை பார்த்து கர்ஜித்தார் அண்ணா. 

”ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம், ஒரு படி அரிசி நிச்சயம்” என்றார் அண்ணா. அரிசி வைத்திருக்க தடை விதித்த காங்கிரஸ் அரசின் மீதான கோபத்தில் கொதித்து கொண்டிருந்த சோற்றுக்கே வழி இன்றி சாக கிடந்த மக்கள் மனதில் அண்ணாவின் படி அரிசி திட்ட அறிவிப்பு திமுக சாமானிய மக்களுக்கான கட்சி என்ற மிக பெரும் நம்பிக்கையை கொடுத்தது மட்டும் இன்றி காமராசரின் காங்கிரஸ் கட்சி பெரு முதலாளிகளுக்கான கட்சி என்ற உண்மையை மக்கள் உணர செய்தது.

பக்தவத்சலம் அண்ணாச்சி...பருப்பு விலை என்னாச்சு?’,
‘காமராசர் அண்ணாச்சி...கடுகு விலை என்னாச்சு?’ 
என்ற காங்கிரஸ் அரசுக்கு எதிரான தி.மு.கவினரின் இந்த இடி முழக்கம் தமிழகம் எங்கும் விண்ணதிர ஒலித்தது. இதற்கு மக்கள் மத்தியில் காங்கிரஸ் தலைவர்கள் பதில் சொல்ல முடியாமல் திண்டாடினர். 

அன்று விகடன் பத்திரிக்கை "அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் கழுதையில் சவாரி செய்வது போல்" ஒரு கேலிச்சித்திரம் வெளியிட்டது. இந்த கேலிச்சித்திரத்தை சுவரொட்டிகளாக மாற்றி தமிழகம் முழுவதும் காமராசரின் காங்கிரஸ் பிரச்சாரம் செய்து மக்களிடம் வாக்குகளை கேட்டது. கழுதை மீது எரியா கோட்டையை பிடிக்க முடியும்? என்று கேலி பேசியது காங்கிரஸ். "கோட்டையை பிடிக்க கழுதை தேவை இல்லை. மக்கள் தான் தேவை" என்றது திமுக.

ஒரு புறம் மக்கள் பஞ்சத்தில் சாகும் கொடுமை நடந்து கொண்டு இருக்க இந்த "விகடன்" காங்கிரஸ் அரசுக்கு ஆதரவாக கருத்தை பரப்புகிறதே என்று திமுக உள்ளிட்ட அனைத்து கூட்டணி தலைவர்களுமே புலம்பி கொண்டிருக்க திமுகவின் முன்னணி தலைவர் ஒருவரின் குரல் விண்ணதிர ஒலித்தது!

“எவ்வளவு நாளைக்கு இந்த அதிகாரம் செய்ய முடியும் ஆட்சியாளர்களே! அதிகாரிகளே! எண்ணிக்கொள்ளுங்கள் இன்னும் ஆறே நாள்! ஆட்சி மாறும்! அதிகாரமும் மாறும்!" என்று முழங்கினார் அவர். 

ஆம் அவர் தான் அவரே தான்...தானிருந்தவரை இந்திய அரசியலை தன்னை சூற்றியே சூழல விட்ட தென்னகத்தின் சூரியன் #கலைஞர்_மு_கருணாநிதி.

5 லட்சம் செலவு செய்தால் அணணாதுரையையே தோற்கடிப்போம் என்றார் காமராசர். அந்த காமராசரை தோற்கடித்து காட்டியது திமுக.

எல்லா எதிர்ப்புகளையும் மீறி ‘எப்படியாவது வென்றாக வேண்டும்’ என்ற அண்ணாவின் தம்பிகளின் துடிப்பு, கண் துஞ்சாத உழைப்பாய் மாற, மக்கள் செல்வாக்கோடு திமுக 137 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியை பிடித்தது.

எந்த விகடன் திமுக தலைவர்கள் "கழுதையில் செல்வதாய்" கேலி சித்திரம் வரைந்ததோ, அதே விகடன் திமுகவின் வெற்றியை தொடர்ந்து "திமுக தனித்து போட்டியிட்டு இருந்தாலும் நிச்சயம் ஆட்சியை பிடித்தே இருக்கும் " என்று தன் தலையங்கத்தில் எழுதியது.

1967 திமுகவின் சட்டமன்ற தேர்தல் வெற்றி என்பது சாதாரண வெற்றி கிடையாது. 
அது ஒரு சரித்திர சாதனை வெற்றி!

இந்திய அரசியல் வரலாற்றில் சுதந்திரம் பெற்று தந்த கட்சி என்ற பிம்பத்தை தாங்கி அசுர பலத்துடன்  நின்ற தேசிய கட்சியை "முதன் முதலில் வீழ்த்தி ஒரு மாநில கட்சி ஆட்சியை பிடித்தது இந்தியாவில் அதுவே முதல் முறை".

அது நிகழ்ந்தது தமிழகத்தில் தான்.

அந்த சாதனையை செய்தது திமுக தான்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இன்று காமராசரையும் கக்கனையும் தூக்கி கொண்டு வருபவர்களுக்கு சொந்தமாக சுட்டிக்காட்ட ஒரு தலைவர் கூட இல்லை என்பதை உணருங்கள்.

அந்த காமராசரையும், கக்கனையும் இன்று வரை திமுகவினர் தங்களால் முடிந்தளவு மதித்தே எழுதுகின்றனர் என்பதையும் மனதில் வையுங்கள்.

அரசியல் தலைவர்களை அவர்களின் நிறை குறைகளோடு அணுகி சீர் தூக்கி அலசுவதில் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை.

அதே சமயத்தில் காமராஜர் காரில் போனார், கக்கன் சைக்கிளில் போனார் என்று எழுதிக்கொண்டிருந்தால் உரித்து உப்புக்கண்டம் போடப்படும்.

இராமனைச் சார்ந்தவர்கள் யாரும் நிம்மதியாக இருந்ததில்லை.

சாந்தி நாராயணன்
2010-01-21

இராமாயணத்தின்  உருவகப்படி இராமன்
இராமனைச் சார்ந்தவர்கள் யாரும் நிம்மதியாக இருந்ததில்லை.

பெற்ற தசரதன், ராமனின் தாய், வளர்ப்புத் தாய் கூனி ,
கட்டிய மனைவி,
லட்சுமணன் முதல் கூடப் பிறந்த சகோதரர்கள் யாரும் மகிழ்வோடு இல்லை. 

நடந்த தேசத்திலெல்லாம் உறவுகளை மோத விட்டான். 
 
ஆண்ட நாட்டு மக்களையெல்லாம் அழுகையிலும் அவநம்பிக்கையிலும் வைத்தான்.

கூட்டுச் சேர்ந்த சுக்ரீவன் விபீஷ்ணன் 
அரசியல் செய்த அத்வானி 
கால் வைத்த இலங்கை
பிறந்த  உத்திரபிரதேசம் வரை 
ராமனைச் சார்ந்த எவரும் நிம்மதியாய் இருந்ததில்லை.

வாழ்நாள் எல்லாம் 
ராமனும் நிம்மதியாய் இருந்துவிடவில்லை.

பார்ப்பனியத்துக்கு பலியாளாக வாழ்நாள் எல்லாம் 
துக்கமும் துயரமும் இரத்தமும் மனச் சஞ்சலமாகவுமே. வாழ்ந்து இறந்தான் ராமன் 

கடைசி வரை கை பிடித்த சீதை நிம்மதியாய் வாழவிடவுமில்லை. துடிக்கத் துடிக்க தீக்கிறையானாள் .

தனக்காக எல்லாம் துறந்த தம்பி லட்சுமணனை 
பார்ப்பனர்களை மதிக்காமல் போனான் என்று கொலை செய்யும் படியானது.

வளர்ந்து பெரியவானனது முதல் பெற்ற தசரதன் நிம்மதியை இழந்தான் . அப்படியே இறந்தான். 

லவனும் குசனும் தந்தை பெயர் அறியாமலே காடுகளில் 
வாழவேண்டியதிருந்தது  

காதலித்த சூர்ப்பனகை அங்கம் அறுபட்டு அலையவிடப்பட்டாள் 

இராமன் பெயர் சொன்ன காந்தி ராமனின் பெயராலே இயக்கம் நடத்தியவர்களால் கொல்லப் பட்டார்

பார்ப்பனர்களைத்தவிர வேறெருவரின் நன்மைக்காக இராமன் உழைக்க அனுமதிக்கப் பட்டவனில்லை.

வேதம் படித்ததற்காக கொலை செய் என்ற போது ஓடோடி படுகொலை செய்த அடியாளாகவே இராமன் இருந்தான் .
 

ராமனைப் போன்ற ஒரு துஷ்ட பிம்பம் எந்தக் கதைகளிலும் சொல்லப் படவுமில்லை .

அதனால் தானோ என்னவோ தமிழர்கள் இராமனை விட்டு விலகியே இருந்தார்கள். இங்கே அனுமனுக்கு உள்ள மதிப்பு கூட ராமனுக்கு இல்லை. 

இராமனின் துன்பியல் நிகழ்வுகளின்  கடைசி உதாரணமாக ரஜினியாகவே  இருக்கட்டும்.