Saturday, February 29, 2020

ஓர் அமைப்பை அழிப்பது எப்படி...?

# ஓர் அமைப்பை அழிப்பது எப்படி...?
**************-****************

ஒரு தோழருக்கு இதை அனுப்பினேன்...

படித்துவிட்டு ஆமாங்க இப்படிதாங்க நடந்துக்கிறாங்க என்றார்..

அட மக்கு நீயே அப்படித்தான் நடந்துகிட்டு இருக்க)

01. கூட்டங்களுக்கு அழைப்பு 
வந்தாலும் போககூடாது.போனாலும்
கால தாமதமாகப் போக வேண்டும்.
கூட்டத்தில் கலந்து கொண்டால்
அதிகாரிகளை(பொறுப்பாளர்களை)ப் பற்றியும் இதர உறுப்பினர்களைப் பற்றியும் குறைக்கூற வேண்டும்.

02. எந்தக் கருத்துக்கு ஆதரவாக வாக்களிக்க நேரிடுகிறதோ வெளியில் அதன் எதிர் கருத்திற்க்கு ஆதரவாக செயல்பட வேண்டும்.
 
03. எல்லோரது கருத்துக்களையும்
ஏற்றுக்கொள்வதாக கூட்டத்தில்
சொல்ல வேண்டும். ஆனால்
யாருடைய கருத்துக்களையும்
ஏற்றுக்கொள்ளவில்லை என்று வெளியில் சொல்லவேண்டும்.

04. ஏதாவது ஒரு குழுவில் உறுப்பினராக
போட்டால் பொறுப்பேற்கக் கூடாது.
ஏனென்றால் செயலாற்றுவதை விட 
விமர்சனம் செய்வது எளிதானது.
எந்த குழுவிலும் உறுப்பினராகப்
போடவில்லை என்றால் புறக்கணிக்கப்பட்டதாக புலம்ப வேண்டும்.

05. கூட்டத் தலைவர் எதாவது
முக்கியமான பிரச்சனையைப் பற்றி
கருத்தைக் கேட்டால் கருத்து எதுவும்
இல்லை என்று சொல்லவேண்டும்.
ஆனால் கூட்டத்தில் இருந்து வெளியே
வந்ததும் எதை எப்படி செய்யவேண்டும்
என்று எல்லோரிடமும் சொல்ல வேண்டும்.

06. ஒரு காரியமும் செய்யக்கூடாது
விரும்பி சில பேர் செயலாற்றும்போது
குழு மனப்பான்மையை உருவாக்கிவிட்டால் அந்த அமைப்பே உருப்படாது என்று பேச வேண்டும்.

07. விருந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டால்
வீண் பண விரயம் என்று சொல்ல வேண்டும். ஏற்பாடு செய்யவில்லை என்றால் அமைப்பே செத்து விட்டதாகக் குறை கூறவேண்டும்.

08. கலைநிகழ்சிகள் நடந்தால்
நுழைவுச் சீட்டுகள் விற்பனையாகும்
வரை காத்திருக்க வேண்டும். பிறகு
ஏமாற்றப்பட்டதாகச் சொல்லவேண்டும்.

09. முதன்மை விருந்தினரின்
இருக்கையில் உட்காரச் சொன்னால்
நாசூக்காக மறுக்க வேண்டும்
அப்படி கேட்கப்படவில்லை என்றால் 
புறக்கனிக்கப்பட்டதாகச் சொல்ல வேண்டும்.

10. அமைப்புக்கு செலுத்த வேண்டிய
தொகையை செலுத்தாமல் முடிந்த 
அளவு கால தாமதம் செய்ய வேண்டும்.
முடிந்தால் பணமே கட்டக்கூடாது.

11. எப்போழுதும் விழிப்பாக
இருந்து சிறிய காரணம் கிடைத்தாலும்
பதவி விலகுவதாக அச்சுறுத்தவேண்டும்.
முடிந்தால் நண்பர்களும் இதே போல அச்சுறுத்த தூண்டப்பட வேண்டும்.

12. அமைப்பில் இருந்து வரும்
கடிதங்களுக்கு பதில் எழுதுவதை 
முடிந்த அளவு தாமதம் செய்ய வேண்டும்.
பதிலே எழுதாமல் இருப்பது உத்தமம்.

13. கடைசியாக ஆனால் மிக  முக்கியமான ஒன்று உண்டு. எந்தக் காரணத்தை முன்னிட்டும் பதவியில் இருந்து விலகக் கூடாது. ஏனென்றால் அங்கம் வகிக்கும் அமைப்பை அழிக்கும் வாய்ப்புத் தவறிவிடும்..

- நன்றி திருப்பூர் வாய்ஸ் இதழில் வந்து பின் (2007 ல் பதியம் இதழில் அச்சேற்றியது)

No comments:

Post a Comment