Tuesday, May 30, 2017

புரட்சித் திருமணம் என்றால் என்ன? - பெரியார்

14-03-1950
புரட்சித் திருமணம் என்றால் என்ன?

சுயமரியாதைத் திருமணம் என்பது எது?

நமக்கு மேலான மேல் ஜாதிக்காரன் என்பவனை புரோகிதனாக வைத்து நடத்தாத திருமணம் சுய மரியாதைத் திருமணமாகும்.

பகுத்தறிவுத் திருமணம் என்றால் என்ன?

நமக்குப் புரியாததும், இன்ன அவசியத்திற்கு இன்ன காரியம் செய்கிறோம் என்று அறிந்து கொள்ளாமலும், அறிய முடியாமலும் இருக்கும்படியானதுமான காரியங்களைச் (சடங்குகள்) செய்யாமல் நடத்தும் திருமணம் பகுத்தறிவு திருமணம் ஆகும்.

தமிழர் திருமணம் என்றால் என்ன?

புருஷனுக்கு மனைவி அடிமை (தாழ்ந்தவள்) என்றும், புருஷனுக்கு உள்ள உரிமைகள் மனைவிக்கு இல்லை என்றும் உள்ள ஒரு இனத்திற்கு ஒரு நீதியான மனு நீதி இல்லாமல் வாழ்க்கையில், கணவனும் மனைவியும் சரிசம உரிமை உள்ள நட்பு முறை வாழ்க்கை ஒப்பந்தமாகக் கொண்ட திருமணம் தமிழர் (திராவிடர்) திருமணமாகும்.

சுதந்திரத் திருமணம் என்றால் என்ன?

ஜோசியம், சகுனம், சாமி கேட்டல், ஜாதகம் பார்த்தல் ஆகிய மூடநம்பிக்கை இல்லாமலும், மணமக்கள் ஒருவருக்கொருவர் நேரில் பார்க்காமல், அன்னியர் மூலம் ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்தும், அல்லது தெரிந்து கொள்வதைப் பற்றிக் கவலையில்லாமல் மற்றவர்கள் கூட்டி வைக்கும் தன்மை இல்லாமலும், மணமக்கள் தாங்களாகவே ஒருவரை ஒருவர் நன்றாய் அறிந்து திருப்தி அடைந்து காதலித்து நடத்தும் திருமணம் சுதந்திரத் திருமணமாகும்.

புரட்சித் திருமணம் என்றால் என்ன?

தாலி கட்டாமல் செய்யும் திருமணம் புரட்சித் திருமணமாகும்.

சிக்கனத் திருமணம் என்றால் என்ன?

கொட்டகை, விருந்து, நகை, துணி, வாத்தியம், பாட்டுக் கச்சேரி, நாட்டியம், ஊர்வலம் முதலிய காரியங்களுக்கு அதிகப் பணம் செலவு செய்வதும், ஒருநாள் ஒரு வேளைக்கு மேலாகத் திருமண நிகழ்ச்சியை நீட்டுவதும் ஆன ஆடம்பர காரியங்கள்
சுருங்கின செலவில், குறுகிய நேரத்தில் நடத்துவது சிக்கனத் திருமணமாகும்.

இவைகளையெல்லாம் சேர்த்து நடத்துகிற திருமணத்திற்கு ஒரே பேராக என்ன சொல்லலாம்?

நவீனத் திருமணம் அல்லது தற்காலமுறைத் திராவிடத் திருமணம் என்று சொல்லலாம்.

தந்தை பெரியார் அவர்கள் “சித்திர புத்திரன்” என்கிற புனைப் பெயரில் 14-03-1950 "விடுதலை" நாளிதழில் எழுதியது.

Via ..@ஆசிப் நியாஜ்..நன்றி தோழர்

Sunday, May 28, 2017

பட்சிகளின் தகவமைப்பு என்பது சூழலியலின் சங்கிலியில் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டவை

Pitchimuthu sudhar
Via Facebook
2017-05-29

புறக்கணிக்கப்படும் அசைவ பட்சினிகள்
----------------------------------------------------------

அமெரிக்காவின் ஒரெகான் மாகாணத்தில்  8900 சதுர கிமீ பரப்பளவில் விரிந்து கிடக்கிறது எல்லொஸ்டோன் (Yellowstone national park) தேசியப் பூங்கா. இதுவெ உலகின் முதல் தேசியப் பூங்காவாகும்.

திடீரென்று இந்த தேசியப் பூங்காவின் பல்லுயிர் பெருக்கம் சரியத் துவங்கியது. காரணம் இங்கிருக்கும் புல், சிறு செடி என அனைத்து தாவரங்களையும் தின்று காலி செய்த எல்க் (Elk) என்னும் ராட்சத மான்கள் கட்டுக்கடங்காமல் பெருகியதே.

ஏன் இவை கட்டுக்குள் இல்லாத அளவிற்கு பெருகியது?

எல்க் ராட்சத மான்களை தொடந்து கட்டுக்குள் வைத்திருந்த அசைவ பட்சினியான‌ ஓநாய்களை அப்பகுதியில் வாழ்ந்த கொயேட் என்னும் குள்ளநரிகள் கொல்லத்   துவங்கியதால் ஏற்பட்ட தலைவலியே.

பிறகு, 1995 ஆம் ஆண்டு  இந்த காட்டில் ஓநாய்களை  மீண்டும் வனத்துறையினர் இப்பகுதியில் அறிமுகபப்டுத்தினர்.

ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு பிறகு 2014 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விபரத்தின்படி படி, எல்லோஸ்டோன் தேசிய பூங்காவில்  மான்களின் இனப் பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டது, அதனால் சிறு தாவரங்கள் தொடங்கி அதன் வாயிலாக வளரும் புழு, பூச்சிகளை அவற்றை உண்ணும் பறவைகள், நீர் நாய்கள் என எல்லோஸ்டோன் தேசிய பூங்காவின் பல்லுயிர் பெருக்கம் எல்லோரையும் ஆச்சரியப் படுத்தும் வகையில் மீட்டெடுக்கப்பட்டது.

இது சார்ந்து நியூசம், எல்லிட் என்ற இரு ஆராய்ச்சியாளர்கள் எல்லோஸ்டோன் தேசியப் பூங்காவில்  நெடிய‌ ஆய்வினை மேற்கொண்டு அதன் முடிவுகளை ஜர்னல் ஆல் எகாலஜி என்னும் சர்வதேச ஆய்விதழில் வெளியிட்டார்கள்  (Thomas M. Newsome, William J. Ripple. A continental scale trophic cascade from wolves through coyotes to foxes.  Journal of Animal Ecology Volume 84, Issue 1, pages 49–59, January 2015)

மான்கள் பார்க்க சாது என நினைத்து காடு முழுவதும் மான்கள் இருந்தால் விரைவில் வனம் அழியும் என்பது நம்மில் எத்னி பேருக்கு தெரியும்.
.
அதைப் போலவே சைவ, அசைவ பட்சிகளின் தகவமைப்பு என்பது சூழலியலின் சங்கிலியில் ஒன்றோடொன்று பின்னி பிணைக்கப்பட்டவை. ஆகையால் மிகையாக‌ சைவ‌ சித்தாந்தம் பேசி சூழலியல் சங்கிலியின் ஒரு முனையின் அறுத்தெறிந்தால் விளைவு அதை அறுப்பவர்களுக்கே எதிராய் முடியும்.

நம் தனிப்பட்ட இறை நம்பிக்கைகளைத் தாண்டி  எல்லா உயிரினங்களுக்கும் இயற்கையின் தகவமைப்பு சூழல் படியே வளர்கிறது. அசைவம், சைவ சிந்தாந்தங்களை தாண்டி சுற்று சூழலியலை உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்.

அசைவப் பிரியர்கள் விலங்குகள் வதை செய்கிறார்கள் என்று உங்கள் மனம் நம்பத் தொடங்குமானால், பசுவின் கன்று பாலை திருடி கெட்டி தயிர் போட்டு லஞ்ச சாப்பிடுவதை நிறுத்துங்கள்.

பிறையை ஒவ்வொரு பகுதியிலும் பார்த்தே தீர்மானிக்க வேண்டும

சவூதிக்கும் நமக்கும் இரண்டரை மணி நேரம் வித்தியாசம் ஆனால் சவூதி பிறைக்கும் நமது பிறைக்கும் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் வித்தியாசம் வருகின்றதே அது எப்படி? உதாரணமாக சவூதியில் 8ந் தேதி பெருநாள் என்றால் நமக்கு 9 அல்லது 10ந் தேதியில் தான் பெருநாள் வருகிறது. அது எப்படி?

முதலில் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். சவூதிக்கும் நமக்கும் இரண்டரை மணி நேரம் வித்தியாசம் என்பது சூரியனுடைய கணக்கின் அடிப்படையில் ஏற்படுவதாகும். சூரியனின் உதயம் அஸ்தமனம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து நேரத்தைத் தீர்மானிக்கிறோம். அதாவது சென்னையில் சூரியன் மறைந்து கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் கழித்து சவூதியில் சூரியன் மறையும். இது சூரியக் கணக்கு இதை பிறை தென்படுவதற்கு அளவு கோலாக எடுக்க முடியாது.

உதாரணமாக சவூதியில் 8ந் தேதி மாலை 6.30 மணிக்கு முதல் பிறை பிறக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் நமது நாட்டில் இரவு 9.00 மணி. அதாவது சவூதியில் பிறை பார்த்த நேரத்தை விட இரண்டரை மணி நேரத்தைக் கடந்திருப்போம். தலைப்பிறையை ஒன்பது மணிக்கெல்லாம் பார்க்க முடியாது. சவூதியில் பார்த்த பிறையை நாம் பார்க்க வேண்டுமானால் நமது நாட்டில் மறுநாள் (9ந் தேதி) மாலை 6.30 அல்லது ஏழு மணிக்குத் தான் பார்க்க முடியும்.

சூரிய உதயத்தை நாம் சவூதியை விட இரண்டரை மணி நேரம் முன்னதாக அடைகிறோம். அதே சமயத்தில் சந்திரன் தென்படும் நிலையை அவர்களை விட சுமார் 21.30 மணி நேரம் பிந்தி அடைகிறோம். இதனால் நமது நாட்டில் பிறை தென்படும் நாளில் சவூதியில் பிறை 2 ஆக இருக்கும் வாய்ப்பிருக்கிறது. (ஒரே நாளிலும் தெரியலாம்) எனவே சந்திரன் அடிப்படையில் மாதத்தைத் தீர்மானிக்கும் போது சூரியக் கணக்கில் உள்ள நேர வித்தியாசத்தைப் பொருத்திப் பார்க்கக் கூடாது.

சவூதிக்கும் நமக்கும் ஒரு நாள் வித்தியாசம் ஏற்படுவது இயற்கையானது தான். அல்லாஹ்வும் அதனால் தான் அம்மாதத்தை யார் அடைகிறாரோ என்று கூறுகின்றான். இதை ஏற்கனவே கூறியுள்ளோம்

இரண்டு நான் வித்தியாசம் வருகின்றதே இது எப்படி?

எப்படிப் பார்த்தாலும் ஒரு நாளுக்கு மேல் வித்தியாசம் ஏற்பட சாத்தியமில்லை என்பது உண்மை தான். இரண்டு நாள் வித்தியாசம் ஏற்படுவதற்கு ஒரு தரப்பில் ஏற்படும் தவறுகள் தான் காரணம்.

பொதுவாக அமாவாசை முடிந்து 20 மணி நேரம் ஆவதற்கு முன்னால் உலகில் எந்தப் பகுதியிலும் பிறை தென்படுவதற்கு வாய்ப்பில்லை. 20 மணி நேரத்திற்குப் பின் ஏதேனும் ஒரு நாட்டில் பிறை தெரிய ஆரம்பித்து எல்லா நாட்டிற்கும் தெரிவதற்கு சுமார் 20 மணி நேரம் ஆகும். அதாவது அமாவாசை முடிந்த பின்னர் பிறை தென்படுவதற்கு சுமார் 20 மணி நேரத்திலிருந்து நாற்பது மணி நேரம் வரை ஆகும். இந்த காலவரையறைக்கு முன்னதாக யாராவது பிறை பார்த்ததாகக் கூறினால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

சவூதி அரேபியாவைப் பொறுத்தவரை இது வரை பிறை பார்த்ததாக அறிவித்த பல ஆண்டுகளில் பிறை தென்படுவதற்கே வாய்ப்பில்லாத நேரத்தில் பிறை பார்க்கப்பட்டதாகத் தான் அறிவித்துள்ளார்கள். இதை நாம் சுயமாகச் சொல்லவில்லை. லண்டனிலிருந்து வெளியாகும் என்ற ஈழ்ங்ள்ஸ்ரீங்ய்ற் என்ற பத்திரிகையும் மலேசியாவிலுள்ள சர்வதேச இஸ்லாமிய தேதி கவுன்சில் என்ற அமைப்பும் மற்றும் நமது நாட்டிலுள்ள வானியல் ஆராய்ச்சி நிறுவனங்களும் உறுதி செய்துள்ளன.

சவூதி எந்த அடிப்படையில் இவ்வாறு அறிவிக்கின்றது என்பது நமக்குத் தெரியவில்லை

சந்திர சுழற்சியின் அடிப்படையில் சவூதிக்கும் நமக்கும் இடையில் ஒரு நாள் வித்தியாசம் ஏற்படுகின்றது. சவூதியின் தவறான நிலைபாட்டினாலும் ஒரு நாள் வித்தியாசம் ஏற்படுகின்றது. இதனால் தான் சவூதி அரசாங்கம் பிறை பார்த்ததாக அறிவித்த நாளுக்கும் நாம் பிறை பார்க்கும் நாளுக்கும் இரண்டு நாட்கள் வித்தியாசம் ஏற்படுகின்றது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிறை பார்த்து அல்லது குறிப்பிட்ட பகுதிகளிலிருந்து தகவல் வந்தால் அதை ஏற்று மக்கள் செயல்பட்டுக் கொண்டிருந்த போது ஒரு பகுதிக்கும் மற்றோர் பகுதிக்குமிடையில் ஒரு நாள் மட்டுமே வித்தியாசம் இருந்து வந்தது.

புதிதாக சவூதியிலிருந்து நோன்பு, பொருநாள் ஆகியவற்றை இறக்குமதி செய்ததால் தான் தமிழ்நாட்டிற்குள்ளேயே இரண்டு நாட்கள் வித்தியாசம் ஏற்பட ஆரம்பித்தது.

உலகம் முழுவதும் ஒரே நாளில் பெருநாளைக் கொண்டு வர வேண்டும் என்று கூறி அறிமுகப்படுத்தப்பட்டது தான் சவூதி பெருநாள் கொள்கை. இதன் மூலம் இரண்டு நாட்களில் பெருநாளைச் சந்தித்துக் கொண்டிருந்த தமிழகத்தில் மூன்று நாட்கள் பெருநாள் ஏற்படுவதற்கு வழி வகுத்ததைத் தவிர வேறு எந்தச் சாதனையையும் இந்தக் கொள்கை ஏற்படுத்தவில்லை என்பது நிதர்சனமாக உண்மையாகும்.

பிறையை ஒவ்வொரு பகுதியிலும் பார்த்தே தீர்மானிக்க வேண்டும். பிறை தென்படாத பகுதிகள் முந்தைய மாதத்தை முப்பதாகப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் கூறியுள்ளோம்.

மார்க்கம் நமக்குக் கற்றுத் தந்த இந்த எளிமையான நடைமுறையை ஒவ்வொரு பகுதியினரும் கடைப்பிடிக்க ஆரம்பித்து விட்டால் உலகம் முழுவதும் ஒரு நாளுக்கு மேல் வித்தியாசம் ஏற்பட வாய்ப்பில்லை. அந்த நிலை விரைவில் ஏற்பட்டுவிடும் என்று நம்புவோம். இன்ஷாஅல்லாஹ்.

#பிறை_ஆய்வு #நூலிலிருந்து

ஆண்களால் ஆண்களுக்காக உருவாக்கப்பட்ட ஆண்களின் வன்முறைதான் மதம் என்பது

Ilangovan geetha
Via Facebook
2017-05-28

"ஆண்களால் ஆண்களுக்காக உருவாக்கப்பட்ட ஆண்களின் வன்முறைதான் மதம் என்பது."

இதில் இந்து மதத்துக்கென்று ஒரு கூடுதல் ஸ்பெசாலிடி உண்டு.

"பார்ப்பன ஆண்களால் பார்ப்பன ஆண்களுக்காக உருவாக்கப்பட்ட பார்ப்பன ஆண்களின் வன்முறைதான் இந்து மதம் என்பது."

ஏனெனில் இந்து மதத்தின் மூலமான வைதீக மதத்தை உருவாக்கிய பார்ப்பனர்கள் இந்தியாவுக்கு வந்த போது அவர்களுடன் பெண்களைக் கொண்டு வந்ததாகச் சான்றில்லை. எனவே பார்ப்பன ஆண்கள் மட்டுமே இந்தியாவிற்குள் புகுந்ததாய் அனுமானிக்க வேண்டியிருக்கிறது.

ஒருவேளை குறிப்பிடும் அளவில் இல்லாமல் மிக மிகக் குறைவான எண்ணிக்கையில் வந்திருக்கலாம்.

இதன் காரணமாய் ஆரியர்கள் பெண்டாள எடுத்த பெண்கள் எல்லோரும் இந்த மண்ணின் மைந்திகளாகவே அமைந்திருந்தனர். கன்னிகா தானங்கள் என்று உழைக்கும் வர்க்கத்தின் பெண்களை கலவிக்காக ஆரிய பார்ப்பனர்கள் அபகரித்துக் கொண்டார்கள்.

அப்படி இந்த மண்ணின் இருந்து பெறப்பட்ட பெண்களிடம் கலவி வைத்துக் கொண்டாலும் கூட பார்ப்பனர்களால் ஒருபோதும் தனக்குச் சமமாய் இந்தப் பெண்களை வைத்துக் கொள்ள மனம் ஒப்பவில்லை. எனவே அதற்கு அவர்கள் முன் வரவே இல்லை.

எனவேதான் வேதத்தில் சூத்திரர்களையும், பெண்களையும் சம நிலையில் வைத்தனர்

பார்ப்பனர். சூத்திரர்களுக்கும், பெண்களுக்கும் கல்வி கற்க உரிமை இல்லை என்றனர்.

இதன் காரணமாகவே....

மற்ற மத நூல்களில் பெண்ணை ஒரு சொத்தாக, அடிமையாக மட்டும் பார்க்கும் பார்வை இருக்கிறது.
இந்து மத நூலில் மட்டும் பெண்ணை அடிமையாக மட்டுமல்லாமல் எதிரிகளிடம் காட்டும் வன்மத்தோடும் பார்க்கும் பார்வையைக் காண முடிகிறது.

இதற்கான உதாரணங்கள் கீழே:

பெண்களுக்கு தனி அடையாளங்களையோ சுயேச்சையான செயல்பாடுகளையோ மனு தர்மம் நிராகரிக்கிறது. அவர்களின் சொந்த விருப்பு வெறுப்புகளை அது அனுமதிக்கவில்லை.

இளமையில் தந்தையாலும் பருவகாலத்தில் கணவனாலும் முதுமையில் மைந்தராலும் காக்கப்பட வேண்டியவர். ஆதலால் மாதர் எஞ்ஞான்றும் தம்மிச்சையாக இருக்கக் கூடாதவர்
— மனுதரும சாத்திரம் , அத்தியாயம் 9 செய்யுள் 3

எந்தப் பருவத்தினளாயினும் தனது இல்லத்தில் கூட எந்தப் பெண்ணும் தன்னிச்சைப்படி எச்செயலும் இயற்றலாகாது.
— மனுதரும சாத்திரம் , அத்தியாயம் 5 செய்யுள் 147

பெண்களை ஒழுக்கக் கேடானவர்களாகவும் மயக்கும் குணம் கொண்டவர்களாகவும் மனுதர்மம் சித்தரிக்கிறது. பாலியல் ரீதியில் ஒழுக்கக் கேடுகள் எவையாவது நடந்தால் அதில் ஆணுக்கு பொறுப்பு எதுவுமில்லை என்பது போலவும் அவனை ஒரு அப்பாவியைப் போலவும் கருதி பெண்களை மனுதர்மம் இழிவுபடுத்துகிறது.

தங்கள் அலங்காரத்தால் மனிதரைக் கவரும் தன்மை பெண்களின் இயல்பாகையால் அறிந்தோர் பெண்களிடம் கவனக் குறைவாக நடந்து கொள்ளமாட்டார்கள்.
— மனுதரும சாத்திரம் , அத்தியாயம் 2 செய்யுள் 213

புலன்களை அடக்கியவனாயினும் அறிவிலியாயினும் அவர்களைத் தங்களது தொடர்பால் காமக்குரோதமுள்ளவனாகச் செய்வர் மாதர்.
— மனுதரும சாத்திரம் , அத்தியாயம் 2 செய்யுள் 214

பெரும்பாலும் மாதர் கற்பிலார் என்றே பெரிதும் பல நூல்களிலும் குறப்படுவனவற்றையும் கேட்பீராக.
— மனுதரும சாத்திரம் 9, அத்தியாயம் செய்யுள் 19

இவ்வாறு பெண்களை இழிவுப்படுத்தும் மனுதர்மம் மாதரைக் காப்பாற்றுவதற்கான காரணத்தையும் விளக்குகிறது .

வீட்டிற்கு வேண்டிய பாத்திரம் முதலியவற்றை தேடிப் பெறுவதற்காக பொருளை அவளிடம் கொடுத்தும் அதனைக் காப்பாற்றி வைத்து வேண்டிய போது செலவிடும்படி செய்தும் தட்டு முட்டுச் சாமான்களை சுத்தமாக வைத்துக் கொள்ளச் செய்தும் வீட்டை துப்புரவாக்கி வைத்தல், தேவ பூசைக்கான ஏற்பாடுகளைச் செய்தல், அடுக்களைப் பொறுப்பு, பாத்திரம் படுக்கை முதலியவற்றைச் சரியாக கவனித்துக் கொள்ளல் போன்ற இன்றியமையாத இல்லத்துக் காரியங்களை மனைவிக்குக் கற்பித்து அவற்றை அவளைக் கொண்டு செய்வித்தல் போன்றவற்றாலும் அவளது மனம் வேறிடம் செல்லாமற் காக்க!
— மனுதரும சாத்திரம் , அத்தியாயம் 9 செய்யுள் 11

கணவன் எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும் பெண் அவனுக்கு அடங்கி நடக்க வேண்டுமென்று விதிக்கிறது மனுதர்மம்.

கணவன் சூதாடுகிறவனாயினும் குடிகாரனாக இருந்தாலும் பிணியாளனாயினும் மனைவி அவனுக்கு செருக்குற்று பணிபுரியாமலிருந்தால் அவளுக்கு அழகு செய்தல், ஆடை, படுக்கை இவற்றை மறுத்து மூன்று மாதம் விலக்கி வைக்கவும்.
— மனுதரும சாத்திரம் , அத்தியாயம் 9 செய்யுள் 78

இழிநடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணமின்மை இவற்றையுடையவனாயினும் கற்பினாளான பெண் தன் கணவனை தெய்வமாகப் பேணுக.
— மனுதரும சாத்திரம் , அத்தியாயம் 5 செய்யுள் 154

மறுமையின் பத்தில் நாட்டமுள்ள பெண்மணி தன் கணவன் இருப்பினும் இறப்பினும் அவன் கருத்துக்கு மாறுபாடாக நடக்கக் கூடாது.
— மனுதரும சாத்திரம் , அத்தியாயம் 5 செய்யுள் 156.

ஆக மொத்தம் இந்த மனு (அ) நீதியைத் தெரிந்து கொள்வது  சமகாலத்திய எல்லா பெண்களுக்கும் அவசியமானதாகும்.

சுயசார்புடன், சுய மரியாதையுடன் வாழும் எந்தப் பெண்ணும் குறைந்த பட்ச அறிவும், சுரணையும் கொண்டிருந்தால், தன்னை ஒரு இந்து என்று அடையாளம் சொல்லிக்கொள்ளமாட்டாள்.

29.05.2014

ராவணனைப் போல் சகோதரன் இருக்க வேண்டும

கர்ப்பமாக இருந்த தாய், தன் மகளிடம் கேட்டாள்...

"உனக்குத் தம்பி வேண்டுமா, அல்லது தங்கை வேண்டுமா?" என்று...

மகள், "தம்பி வேண்டும்" என்றாள்.

"யாரைப் போல் தம்பி இருக்க வேண்டும்?" என்று தாய் கேட்க, "ராவணனைப் போல் இருக்க வேண்டும்" என்றாள் மகள்.

திடுக்கிட்ட தாய், "உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா என்ன? ராமனைப் போல் ஒரு சகோதரன் வேண்டும் என்று சொல்லாமல், ராவணனைப் போல் வேண்டும் என்கிறாயே!" என்றாள்.

"அம்மா! நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? உடன் பிறந்த சகோதரி அவமானப்பட்டாள் என்பதற்காக, ராவணன் தன் அரியணை, ராஜ்ஜியம், உயிர் அனைத்தையும் இழந்தானே! தன் எதிரியின் மனைவியைச் சிறை பிடித்த போதிலும், அவளை ஒரு போதும் தீண்டவில்லையே! ஆனால் ராமன், யாரோ ஒருவன் சொன்னான் என்பதற்காக, கர்ப்பவதியாக இருந்த தன் மனைவியை ஒதுக்கி வைத்தானே! அவளை தீக்குளித்துத் தன் புனிதத்தை நிரூபிக்கச் செய்தானே!

உனக்கு வேண்டுமானால் ராமனைப் போல் மகன் பிறக்கட்டும். ஆனால் எனக்கு ராவணன் போன்ற சகோதரன் தான் வேண்டும்" என்றாள் மகள்.

தாயால் பதில் கூற முடியவில்லை. அதிர்ந்து போனாள்.

இக்கதை ஒரு விவாதத்தைத் துவக்கலாம். ஆனால் கதையின் உட்பொருளைக் கூர்ந்து நோக்கினால், ஒரு உண்மை புலப்படும்.இவ்வுலகில் நல்லவர், கெட்டவர் என்பது நாம் நம் தனிப்பட்ட அனுமானங்களால் முடிவு செய்வதே.

கேளிக்கைகளில் திளைப்பவன் என்பதால்,
ஒருவன் கெட்டவன் என்றில்லை.
கோவிலுக்குச் செல்பவன் என்பதால்,
ஒருவன் நல்லவனும் இல்லை.

கோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக்காரனும் சரி - கேட்பதென்னவோ பிச்சை தான்.

நம் எண்ணங்கள் தராசின் முள் போல் இருத்தல் வேண்டும்.

படித்ததில் பிடித்தது*

எனக்கு இட்லி பிடிக்காது. நாளைல இருந்து நீ இட்லி சாப்ட . . . த்தா வெட்டிடுவேன் !!

V Tamizhvanan
Via Facebook
2017-05-28

A: டேய் மாட்டு கறிய எல்லாம் சாப்ட கூடாது டா.

B: ஏன் டா ?

A: ஏனா மாடு நமக்கு பால் தருது. அம்மா மாதிரி. அத எப்டி சாப்புடுறது ?

B: எப்டி டா 6 அறிவுள்ள அம்மாவ, 5 அறிவுள்ள ஒரு மிருகத்துக்கு கூட கம்பேர் பன்ற ??

A: ஆமா ! அம்மாக்கு அப்றம் நமக்கு பால் கொடுக்றது மாடு தானே ??

B: இரு உனக்கு விளக்கமா சொல்றேன்.
மாடு ஒரு காலத்ல காட்டு விளங்கு.
எப்படி மான், குதிரை எல்லாம் காட்ல சுத்திட்ருக்கோ அப்படி சுத்திக்ட்டு இருந்த ஒரு மிருகம் தான் மாடு.
மனிஷன் இயற்கையிலேலே ஒரு வேட்டை விளங்கு.
விவசாயம் பன்னி சோறு சாப்பட்றதுக்கு முன்னாடி வேட்டையாடு இறைச்சிய தான் சாப்டான்.
மாட்டையும் அப்படி தான் வேட்டையாடி சாப்டான்.
மத்த விளங்குகள விட மாட்டுக்கு அதிகம் பால் சுறக்கும் தன்மை இருந்துச்சு.
அதனால மாடுங்கள பாலுக்காகவும், இறைச்சிக்காகவும் வேட்டையாட ஆரம்பிச்சான்.
இன்னிக்கு நீங்க வீட்ல வளக்ற மாடுகளோட முன்னோர்கள் எல்லாம், ஏதோ ஒரு காட்டுல பாலுக்காகவும், இறைச்சிக்காகவும் வேட்டையாடப்பட்ட உயிர்கள் தான்.
எந்த மாடும் தானா வந்து இந்தா என் பால கரந்துக்க னு சொல்லல.
மாடு அதோட குட்டிக்கு தான் பால வச்சி இருக்கு.
உங்க அம்மாவும் உனக்கு தான் பால வச்சி இருக்காங்க.
மாடு அதோட குட்டிக்கு சுறக்ற பால . . . அத கட்டி போட்டு கொடும பன்னி பால திருடி சாப்புட்றது நியாயமா என்ன ??
அம்மா கூட கம்பேர் பன்றயே, அம்மாவ என்ன அப்டி கட்டு போட்டு கொடும பன்னியா பால் கரந்து குடிச்ச ?

A: டேய் இல்ல டா ! ஓவரா பேசாத !

B: பின்ன எப்டி டா ?
ஒரு காலத்ல இந்த நாட்ல எல்லோரும் மாட்டுக்கறி சாப்ட்டுக்டு தான் இருந்தோம்.
இன்னைக்கு அந்த பழக்கம் பார்ப்பனியத்தால சிலர் கிட்ட இருந்தஉ போயிடுச்சு.
சிலர் கிட்ட இன்னும் இருக்கு.
சரி விருப்பமில்லாதவங்க சாப்ட தேவ இல்ல. அது அவங்க விருப்பம்.
விருப்பம் இருக்கவங்க சாப்புட்றதுல உனக்கு என்ன ப்ரச்சன ?

A: இல்ல டா ! அது அவ்ளோ பெரிய உயிர். கொள்ளலாமா ?

B: ஓ உன் வழிக்கே வறேன். 150 பேர் சாப்டணும்னா எத்தன கோழி உயிர கொள்ளணும் ?

ஒரு 60 கோழி

150 பேர் சாப்டணும்னா எத்தன ஆட்டு உயிர கொள்ளுவ ?

ஒரு 15 ஆடு

150 பேர் சாப்டணும்னா ஒரே ஒரு மாட்ட தான் கொள்ள வேண்டி இருக்கும்.

மிருகங்கள கொள்றது தப்புனு எந்த அறிவியல் டா சொல்லுது ?
மிருக சுழர்ச்சில ஒவ்வொரு மிருகமும் இன்னொரு மிருகத்த கொண்ணு தான் சாப்பிடுது. அப்டி சாப்டா தான் எல்லா மிருகங்களும் உயிர் வாழும்.

அது மட்டுமில்ல. மிருகங்கள உணவு தேவைக்காக தவிற வேறு எதுக்கு கொண்ணாலும் தப்பு தான். தேவைக்காக மிருகங்கள கொள்றது இயற்கை நியதி.

A: அய்யோ ! என்ன ஆள விடு டா ! எனக்கு மாட்டு கறி சாப்புட்றது புடிக்ல. யாரும் சாப்ட கூடாது.

B: ஏன்டா நாயே !!! உன்ன ஒரு மனிஷன்னு மதிச்சு இவ்ளோ நேரம் விளக்கும் கொடுத்தேன்.
எனக்கு இட்லி பிடிக்காது. நாளைல இருந்து நீ இட்லி சாப்ட . . . த்தா வெட்டிடுவேன் !!