Monday, December 7, 2020

அரிசி ஒகே சார், டிவி மிக்சி, கிரைண்டர் எல்லாம்?

#நிருபர் : அரிசி ஒகே சார், டிவி மிக்சி, கிரைண்டர் எல்லாம்?

#ஜெயரஞ்சன் : நீங்க என்னைக்காவது அம்மில சட்னி அரைச்சிருக்கீங்களா?

#நிருபர் : இல்லை, மிக்சி தான்.

#ஜெயரஞ்சன் : பகல் பூரா வயல்ல வேலை செஞ்சுட்டு, அரிசியை ஆட்டுக்கல்லில் ஆட்டி, சட்னியை அம்மில அரைக்கமுடியுமா? இல்ல தெரியாமதான் கேட்கிறேன் , இந்த மாதிரி தேவை இருக்கிற பெண்கள் யாராவது உங்ககிட்ட வந்து வேண்டான்னு சொன்னாங்களா?

***********************************************************************

#நிருபர்: அரிசியை வாங்கி கோழிக்கு போடறாங்களே?

#ஜெயரஞ்சன்: கொடுக்கிற அரிசில சாப்பாடு மட்டும் தான் செஞ்சி சாப்பிடனும், இட்லி, தோசை, பொங்கல் வைத்து சாப்பிடக்கூடாதுன்னு ஏதாவது இருக்கா?

#நிருபர் : இல்லை.

#ஜெயரஞ்சன்: அதேபோலத்தான் இதுவும். கோழிக்கு போட்டு வளர்த்து அவன்தானே சாப்பிடறான்? அரசாங்கத்தின் வேலை அரிசி கொடுப்பதோடு முடிந்தது. அதை என்னவாக்கி சாப்பிடனும்கிறது அவன் உரிமை.

*************************************************************************

#நிருபர்: அரிசியை இலவசமாக வாங்கி வெளியில் விக்கிறாங்களே அதற்கு என்ன சொல்றீங்க?

#ஜெயரஞ்சன்: விக்கிற அரிசியை நீங்க வாங்குறீங்களா, இல்லை உங்க கூட வேலை செய்றவங்க யாறாவது வாங்கறாங்களா?

#நிருபர்: இல்லை.

#ஜெயரஞ்சன்: யார் வாங்கறாங்க தெரியுமா?, அரசு கொடுக்கும் அரிசி ஒரு குடும்பத்து தேவையில் 30% சதம் தான். மீதம் தேவையான 70% த்துக்கு அவன் எங்க போவான்? அதனால தான் தேவையில்லன்னு விக்கிறவங்கிட்ட குறைஞ்ச விலையில் வாங்கி தன் மற்றும் தன் குடும்ப தேவையை பூர்த்தி செய்து கொள்கிறான். இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை ?

Natarajan Kandasamy

Sunday, August 30, 2020

அவதாரங்கள்

டாக்டர். சாலினி


விஷ்ணுவை மையமாக வைத்து புனையப்பட்ட புராணங்கள் பலவற்றிலும் story line ஒன்று தான்.

ஒரு திராவிட அரசன் இருப்பான்.
அவன் சிவபக்தனாக இருப்பான்
அவன் கடும் தவம் செய்து வரம் வாங்குவான். 
(Note this point, தவம் தான், நோ யாகம்)

என்ன வரம் என்றால்: சாகாவரம்.
மொத்தமாக சாவே இல்லாதவன் சாமி ஆகிவிடுவானே, அப்புறம் “இந்திரன் ஒத்துக்க மாட்டான், அதனால் வரத்தை கொஞ்சம் குறைச்சிக்கேளுப்பா” என்று சிவபெருமான் negotiate செய்வார்.

அதனால் பொத்தம் பொதுவாய் “சாவே இல்லை” என்பதை கொஞ்சம் மாற்றி, “இப்படி இப்படி எல்லாம் சாவு வர்றாது” என்று contentடை கொஞ்சம் மாற்றி வரம் பெறுவார் அந்த அரசர்.

அந்த வரத்தின் மகிமையால் அரசன் அமோகமாய் ஆட்சி செய்வான்.

இதற்கிடையில் இந்திரன் insecure ஆகி, பெருமாளிடம் போய் புலம்புவார்ல்.  ஏன் பெருமாளிடம் போகிறார்? வரத்தை கொடுத்த சிவனிடமே போய் வரத்தை வாபஸ் பெற சொல்லி கேட்கலாமே? 

No, சிவன் ரொம்ப straight forward. சொன்னா சொன்னது தான் டைப். விஷ்ணு தான் சாதுர்யமானவர். இந்திரனின் inferiorityயை எல்லாம் cover-up செய்வதை உபதொழிலாய் கொண்டவர்.

உடனே பெருமாள் அந்த வரத்தின் MUOவை கூர்ந்து கவனித்து, அதில் ஒரு loopholeலை கண்டுபிடித்து, கரெக்டாய், அந்த கெட் அப் ஒன்றை அணிந்துக்கொண்டு போய், அந்த அரசனை சந்திப்பார். கொல்வார். Assassination Expert அவர்.

இப்படி அவர் எடுத்த அவதாரங்களும் கொன்ற அரசர்களும் யார் யார்?
அவதாரம் # 4:  நரசிம்மா——>ஹிரன்யகஷிப்பு அவுட்
அவதாரம் # 5:  வாமணன்——>மகாவலி அவுட்
அவதாரம் # 6: பரசுராமர்——-> All kings all over the world out
(ஆமாம், உலகமெங்கும் உள்ள எல்லா ஷத்திரியர்களையும் தன் கோடாளியால் கொன்றாராம் மிஸ்டர் பர்ஸ். அப்படியானால் எகிப்து, கிரேக்கம், சுமேர், பாரசீகம், இந்தியா, சீனா என்ற சர்வ லோக அரசர்களும் அவுட்.
நம் ஊரில் இருந்த எல்லா ராஜாக்களும் அவுட்)

அவதாரம் # 7: ராமன். இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி தோன்றும். அது தான் எல்லா ராஜாக்களையும் முந்தைய அவதாரத்தில் கொன்றுவிட்டாரே, அப்புறம் எப்படி ரகுவம்சத்தில் மட்டும் ஒரு தசரதன்? அந்த தசரதனுக்கு நான்கு பாயச புத்திரர்கள்?!

இந்த லாஜிக் கேள்விக்கெல்லாம் பதில் இல்லை. 

ஓவர் டு அவதாரம் # 7 ராமா: அவன் கொன்ற அரசர்கள் வாலி, இராவணன். 

அவதாரம் # 8: கிருஷ்ணா——> மொத்த குரு வம்சமும் க்ளோஸ்

இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

மட்ஸ்ய, கூர்ம, வராக அவதாரங்கள்; மிருக உருவம், அதனால் அவற்றுக்கு தனி வழிப்பாடு இல்லை.

நரசிம்மருக்கும், சீதா ராமருக்கும், கிருஷ்ண அவதாரத்திற்கும் கோயில் வழிபாடு உண்டு.
@இதிலும் ராமனுக்கு தனியா சிலை லேது!

பரசுராமருக்கும், வாமணருக்கும் கோயில் வழிபாடு இல்லை. இந்த இரண்டு அவதாரத்தில் தான் விஷ்ணு பிராமணராய் வருகிறார்.  பரசுராமனாவது ஷத்திரியாஅம்மாவிற்கு பிறந்த பையன் என்று கதை சொல்லுவார்கள்.

What about the full blooded twice born brahmana Vamana? Why no Temple for him? 
பிகாஸ் கோயில் கட்டி வழிபடும் முறை பிராமணர்களுக்கு உண்டானது அல்ல.
அவர்கள் யாகம் வளர்த்து வேதம் ஓதி மட்டுமே வழிப்பட வேண்டும்.

அப்ப அவர்கள் நம்ம கோயில்களில் வந்து பூஜை போடுவது?
நாம் ஏமார்ந்த்தோம், அவர்கள் எடுத்துக்கொண்டார்கள்.

ஆக, வாமணனுக்கு கோயிலோ, பூஜையோ, வழிபாடோ இல்லை. ஆனால் மாவலிக்கு வழிபாடு உண்டு!

நாளை ஓணத்திரு நாள். ஐந்தாம் அவதாரம் காலி செய்த மாவலியை இன்னும் இந்த மலையாளிகள் ஞாபகம் வைத்து, பண்டிகை எடுக்கிறார்கள். புது துணி உடுத்தி, பூக்கோலம் போட்டு, விருந்து உண்டு, டீவியில் புது நிகழ்ச்சி பார்த்து...

மக்கள் இன்னமும் மாவலிக்கு தான் விஸ்வாசம் காட்டுகிறார்கள். 

ஆக அவதாரம் எடுத்தும் யூஸ் இல்லாடா மோனே
வாமணன் அவுட்டு, மக்கள் வின்னு!!

#ஆன்மீகப்பகுத்தறிவு

Tuesday, August 11, 2020

சண்டை செய்யனும்

அன்பு
வடசென்னை

ஒருத்தன் செத்தா முடியிற சண்டையாக்கா இது? 

ஜெயிக்கிறோமோ இல்லையோ, முதல்ல சண்டை செய்யனும். திருப்பி அடிக்கலனா, இவனுவ நம்மள அடிச்சு ஓட உட்டுகுனே இருப்பானுவ. 

குடிசையோ குப்பமேடோ இது நம்ம ஊரு, நாமதான் இத பாத்துக்கனும், நாம்தான் இதுக்காக சண்ட செய்யனும். 

Saturday, August 8, 2020

பாபர்_மருத்துவமனை

உச்சிக்குடுமி மன்றத்தின் ஆணையின்படி வஃக்பு வாரியதிற்கு கிடைக்கும் ஐந்து ஏக்கர் நிலத்தில் பிரம்மாண்டமான #பாபர்_மருத்துவமனை கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் தவறானவை எனத்தெரிய வருகிறது.

#பாபர்_மருத்துவமனை என்பது பொய்யான செய்தியாக இல்லாமல் உண்மையாகவே அதுதான் நடக்க வேண்டும்.

ஆனால் நியாயப்படியும், இந்த அரசு நமக்கு கொடுத்த வாக்குறுதிகளின்படியும் #பாபர்_மசூதி அது இருந்த இடத்தில், 450 ஆண்டு காலமாக தொழுகை நடத்தப்பட்டு வந்த அதே இடத்தில் தான் மீண்டும் எழுப்பப்பட வேண்டும். 

அதன் மீது இன்று பார்பன அதிகார திமிரில் எழுப்பப்படும் ராமர் கோவில் இடித்து தரைமட்டமாக்கியபின் மீண்டும் அதே இடத்தில் தான் #பாபர்_மசூதி கட்டப்பட வேண்டும். வேறு ஒரு இடத்தில் பாபர் மசூதி நிச்சயமாக கட்டப்படக்கூடாது. அது மதசார்பற்ற இந்திய அரசியலமைப்புக்கு நாம் செய்யும் மகத்தான துரோகமாகும். 

இது இன்று இல்லை என்றாலும் நிச்சயமாக ஒரு நாள் நடந்தேறும். இதுதான் நியதி! இதுதான் நியாயம்.!! 

இந்த நியாயத்தை இந்த மண்ணில் நிலை நாட்டிடும் தேசபக்தர்கள்/போராளிகள் நிச்சயம் உருவாக்குவார்கள்.

Thursday, July 30, 2020

திராவிட ஆட்சி நடை பெற்றதால் பின்னோக்கி இருக்கும் ஒரு திராவிட மாநிலத்தின் பரிதாபமான கதை

Kalyan Kumar 

50 வருடம் ஹிந்தி தெரியாமல் திராவிட ஆட்சி நடை பெற்றதால் பின்னோக்கி இருக்கும் ஒரு திராவிட மாநிலத்தின் பரிதாபமான கதை.....

உயர் கல்வி :

பள்ளிகல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம்… அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு அதிகம்..

#தமிழ் நாடு –                  49 %

பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் 

குஜராத் –             17.6% ; 
மபி –                     17.4% ; 
உபி –                    16.8% ; 
ராஜஸ்தான் –     18.0% ;

இந்திய சராசரி : 20.4%

கல்வி நிலையங்களின் தரம் :-

2017 ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் ரேங்க் பட்டியலை மத்திய அரசின் HRD துறை வெளியிட்டுள்ளது… அந்த பட்டியலின் படி,

முதல் 100 சிறந்த கல்லூரிகளில் 
37 கல்லூரிகள் இருப்பது தமிழ் நாட்டில்.. பிஜேபி பல ஆண்டுகளாக ஆளும் மோடியின் மாடல் மாநிலம் குஜராத்தில் இருபத்தோ வெறும் மூன்றுதான்.. 

இதேபோல ஹிந்தி பெல்ட் மாநிலங்களான மபி, உபி, பிகார், ராஜஸ்தான் போன்றவற்றிலிருந்து ஒன்று கூட
இந்த பட்டியலில் இடம் பிடிக்கவில்லை……

முதல் 100 சிறந்த பொறியியல் கல்லூரிகளில், 
தமிழ் நாடு –              22 ;
குஜராத் –                     5 ; 
மபி –                             3 ; 
உபி –                            6 ; 
பிகார் –                        1 ; 
ராஜஸ்தான் –             3

முதல் 100 சிறந்த பல்கலைகழகங்களில்
தமிழ் நாடு – 24 ;
குஜராத் – 2 ; 
மபி – 0 ; 
உபி – 7 ; 
பிகார் – 0 ; 
ராஜஸ்தான் – 4

பொருளாதார மொத்த உற்பத்தி (GDP) :-

இந்தியாவில் இருக்கும் 
29 மாநிலங்களில், 20 மாநிலங்களின் ஒட்டுமொத்த ஜிடிபியை தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய 
3 மாநிலங்கள் அளிக்கிறன. 

மகாராஷ்டிரா மாநிலத்தை அடுத்து இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பது தமிழ்நாடு.

தமிழ் நாடு – ₹18.80 lakh crore 
(2nd Place) ; 

பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் 

குஜராத் – ₹10.94 lakh crore (5th) ; 
மபி – ₹7.35 lakh crore (10th) ; 
உபி – ₹12.37 lakh crore (4th) ; ராஜஸ்தான் – ₹7.67 lakh crore (7th) ;
சத்தீஸ்கர் – ₹2.77 lakh crore (17th)

Infant Mortality Rate (IMR சிசு மரண விகிதம் 1000 பிறப்புக்கு) :-

#தமிழ் நாடு – 21 ; 

பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் 

குஜராத் – 36 ; 
மபி – 54 ; 
உபி – 50 ; 
ராஜஸ்தான் – 47 ; 
சத்தீஸ்கர் – 46 ; 
#இந்திய சராசரி : 40

Maternal Mortality Rate (MMR – ஒரு லட்சம் பிரசவத்தில் தாய் இறக்கும் விகிதம்) :-
—————————————–
#தமிழ் நாடு – 79 ; 

பிஜேபி ஆளும் வட மாநிலங்கள்
 
குஜராத் – 112 ; 
மபி – 221 ; 
உபி – 285 ;
ராஜஸ்தான் – 244 ; 
சத்தீஸ்கர் – 221 ; 
#இந்திய சராசரி : 167

தடுப்பூசி அளிக்கப்படும் குழந்தைகள் சதவீதம் (vaccination coverage) :-
————————————————–
#தமிழ் நாடு – 86.7% ; 

பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் 

குஜராத் – 55.2% ; 
மபி – 48.9% ; 
உபி – 29.9% ; 
ராஜஸ்தான் – 31.9% ; 
சத்தீஸ்கர் – 54% ; 
#இந்திய சராசரி : 51.2%

கல்வி விகிதாசாரம் (Literacy Rate) :-
—————————————————————-
#தமிழ் நாடு – 80.33% ; 

பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் 

குஜராத் – 79% ; 
மபி – 70% ; 
உபி – 69% ; 
ராஜஸ்தான் – 67% ; 
சத்தீஸ்கர் – 71% ; 
#இந்திய சராசரி : 74%

ஆண் – பெண் விகிதாசாரம் (ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு) இது குறைவாக இருந்தால், பெண் சிசு கொலை அதிகம் என்று பொருள்):-
———————————————————–
#தமிழ் நாடு – 943 ; 

பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் 

குஜராத் – 890 ; 
மபி – 918 ; 
உபி – 902 ;
ராஜஸ்தான் – 888 ; 
#இந்திய சராசரி : 919

தனி நபர் வருமானம் (Per Capita Income – ரூபாயில்)

#தமிழ் நாடு – 1,28,366 ; 

பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் 

குஜராத் – 1,06,831; 
மபி – 59,770 ;
உபி – 40,373 ; 
ராஜஸ்தான் – 65,974 ; 
சத்தீஸ்கர் – 64,442 ; 
#இந்திய சராசரி : 93,293

மனித வள குறியீடு (Human Development Index)

#தமிழ் நாடு – 0.6663 ; 

பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் 

குஜராத் – 0.6164 ; 
மபி – 0.5567 ; 
உபி – 0.5415 ; 
ராஜஸ்தான் – 0.5768 ; 
சத்தீஸ்கர் – 0.358 ; 
#இந்திய சராசரி : 0.6087

ஏழ்மை சதவீதம் (Poverty (% of people below poverty line))

#தமிழ் நாடு – 11.28% ; 

பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் 

குஜராத் – 16.63% ; 
மபி – 31.65% ; 
உபி – 29.43% ; 
ராஜஸ்தான் – 14.71% ; 
சத்தீஸ்கர் – 39.93% ; 
#இந்திய சராசரி : 21.92%

ஊட்டசத்து குறைபாடு குழந்தைகள் (Malnutrition)

#தமிழ் நாடு – 18% ; 

பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் 

குஜராத் – 33.5% ; 
மபி – 40% ; 
உபி – 45% ; 
ராஜஸ்தான் – 32% ; 
சத்தீஸ்கர் – 35% ; 
#இந்திய சராசரி : 28%

மருத்துவர்களின் எண்ணிக்கை (ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு)

#தமிழ் நாடு – 149 ; 

பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் 

குஜராத் – 87 ; 
மபி – 41 ; 
உபி – 31;
ராஜஸ்தான் – 48 ; 
சத்தீஸ்கர் – 23 ; 
#இந்திய சராசரி : 36

— இப்படி எந்த ஒரு அளவீடை எடுத்துக்கொண்டாலும், தமிழ்நாடு, மற்ற மாநிலங்களைவிட, குறிப்பாக, பிஜேபி ஆளும் மாநிலங்களை விட, எல்லாவிதங்களிலும் பல மடங்கு உயர்ந்த நிலையில் உள்ளது…. இந்திய சராசரியைவிட மேலே, முதலிடங்களில் உள்ளது..

மேலும்,

1. தமிழகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோரின் வாழ்வியல் வசதிகள், வட மாநில முற்பட்ட வகுப்பினரைவிட அதிகமாக உள்ளது.

2. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நிலையைவிட, தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, தலித் மக்களின் நிலை உயர்வாக உள்ளது.

3. தமிழகத்தில் தான் இந்தியாவிலேயே அதிக அளவில் பெண் தொழில் முனைவோர் அதிகம்..

உண்மைநிலவரம் இப்படியிருக்க, திராவிட ஆட்சியில் தமிழகம் முன்னேறவில்லை, வளரவில்லை என பாண்டேக்களும் மதன்களும் மாரிதாசுகளும் பொய்களை, வாய் கூசாமல் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள்… தமிழக மக்களை ஏமாற்ற முயல்கிறார்கள்….

Post shared . Author unknown .

Saturday, July 11, 2020

புத்தகங்கள்

தமிழரசன்
சாதி ஒழிப்பின் தேவையும் தமிழக விடுதலையும்

அண்ணன் ஆ. ராசாவின் 
2G அவிழும் உண்மைகள். 

எழுச்சி தமிழரின் 
அமைப்பாய் திரள்வோம். 

பேராசிரியர் நாகநாதன் அய்யா 
கூட்டாட்சி அரசியல் சாதகமா பாதகமா .

மேனாள் அமைச்சர் அய்யா முரசொலிமாறன் எழுதிய 
ஏன் வேண்டும் இன்ப திராவிடம். 

திராவிட இயக்க ஆய்வாளர் எம் . எஸ்.  எஸ் பாண்டியனின் 
“பிம்பச் சிறை “.

மேனாள் அமைச்சர் அய்யா சாதிக் பாட்ஷாவின் 
“மாநில சுயாட்சி ஏன் ? “ 

அறிஞர் அண்ணாவின் "மாஜிக்கடவுள்கள், நீதிதேவன் மயக்கம்" 

எழுத்தாளர் கரன் பிரபாவின்
“அம்பேத்க்கரின் பெண்ணியம்”

மருத்துவர் ஷாலினியின் 
“கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்”

தலைவர் கலைஞரின் 
“மும்முனை போராட்டம் கல்லக்குடி களம்”

Babasaheb's 
Thoughts on Linguistic states.

J.V Pawars 
Dalit panthers (Authorative history) 

M.S.S. PANDIAN's 
Brahmin and Non-Brahmin Genealogies of the Tamil Political Present. 


------------

பெரியாரின் பேச்சுகளும் எழுத்துகளும். குடியரசு நாளிதழில் அவர் எழுதியவை மற்றும் அவர் பேசியவை என அனைத்தும். 

புத்தகம் pdf வடிவில். அனைவருக்கும் பகிரவும்.

https://drive.google.com/file/d/1TVOcGlWMZ7FaLBFstPevdMPa9TWVpfVS/view?usp=drivesdk

------------

பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் - ஆனைமுத்து அய்யா தொகுத்தது 

பாகம் 1 - 20 

பெரியார் சிந்தனை களஞ்சியம் - ஆசிரியர் கி.வீரமணி தொகுத்தது 

பாகம் - 1 முதல் 32 வரை 

பெரியார் எழுத்தும் பேச்சும் - குடியரசு தொகுதிகள் 

பாகம் 1- 45

இன்னும் பல

-----111111-------

Assalaam alaikum wa rahmatullahi wa barakatuhu 

 The following link has a large number of beneficial islamic books that are available for download.  Please check it out and forward its a sadaqah jariah and please create time to read some of them.

https://drive.google.com/open?id=0B8lEw_negqRyMll3NlBZSEo1dUU

---------



https://readandshare123.blogspot.com/2017/12/blog-post.html
-----
https://drive.google.com/drive/mobile/folders/0ByWO0aO1eI_MN1BEd3VNRUZENkU?sort=13&direction=a
-------
தமிழக அரசின் Tamil digital library வழங்கும் 8600 நூல்களில் பட்டியல். Download இணைப்புகளுடன். அரிய புதையல்.

https://goo.gl/mFgqi7
--------
http://books.tamilcube.com/tamil/
_------

டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கர் அவர்களின் சாதி ஒழிப்பு - தமிழ் - ஒலி நூல் ..

எனது கூகுள் டிரைவ் லிங்க் பகிர்ந்துள்ளேன். தேவைபடுவோர் தரவிறக்கம் செய்து கொள்ளவும். நன்றி. 

தோழமையுடன்,
லியோ .

-------------------------

#புரட்சியாளர் பாபாசாகேப் அவர்களின் அனைத்து நூல்களும் தமிழில் PDF வடிவில் இந்த இணையதளத்தில் கிடைக்கின்றது..

http://drambedkarwritings.gov.in/content/


------------------------11
Balakumaran Stories PDF free download


https://poovascollections.blogspot.com/p/balakumaran-stories-pdf-free-download.html?m=1


அறிஞர் அண்ணா 

ஒலிகள்(original quality):

 https://mega.nz/#F!0nhXzarB!sNX-RrigOhsYNvPAH1fDRA

ஒலிகள்(Edited quality-HQ):

https://mega.nz/#F!JvJQ3SZC!PMrHLZarKWF8bTYemQb41w

அண்ணாவின் உரைகள், புத்தகங்கள், சிறுகதைகள், எழுத்துக்கள்:

https://mega.nz/#F!0uZEzaAZ!ke2MdeHWPAih80E7ZunyrA

இதிலுள்ள பல தொகுப்புகள் Sembian Ramalingam அவர்களின் முயற்சி.

------

https://m.facebook.com/story.php?story_fbid=10216687833501222&id=1622651206

ஆசிரியர்கள் அவசியம் படிக்க வேண்டிய 52 புத்தகங்கள்

வணக்கம் 🙏

*ஆசிரியர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்கள்* என்று 52 புத்தகங்கள் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு மாதமும் மூன்றாம் ஞாயிறன்று ஆசிரியர்கள் கூடி திருச்சியில் வாசித்து கலந்துரையாட திட்டமிட்டுள்ளோம்... விருப்பமுள்ள ஆசிரியர் நண்பர்கள் எங்களுடன் இணையலாம்... மேலும் தகவலுக்கு 9787035184 என்கிற எண்ணிற்கு வாட்ஸாப் மூலம் தொடர்புகொள்ளவும்... 

1. எனக்குரிய இடம் எங்கே? – பேரா.ச.மாடசாமி.
2. கனவு ஆசிரியர் – க.துளசிதாசன்.
3. ஆயிஷா – இரா.நடராசன்.
4. போயிட்டு வாங்க சார் – பேரா.ச.மாடசாமி.
5. டோட்டோசான் – ஜன்னலில் ஒரு சிறுமி – தமிழில். சு.வள்ளிநாயகம்& சொ.பிரபாகரன்.
6. ஆசிரிய முகமூடி அகற்றி – பேரா.ச.மாடசாமி
7. இது யாருடைய வகுப்பறை – இரா.நடராசன்.
8. குழந்தையும் கல்வியும் – பேரா.இரா.காமராசு
9. அமிர்தா பள்ளிக்குப் போகனுமா?. – விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன்.
10. கற்க கசடற – பாரதி தம்பி
11. முதல் ஆசிரியர் – தமிழில் பூ.சோமசுந்தரம்.
12. ஆளுக்கொரு கிணறு – பேரா.ச.மாடசாமி.
13. குழந்தைகளின் நூறு மொழிகள் – பேரா.ச.மாடசாமி.
14. கதை சொல்லும் கலை – ச.முருகபூபதி
15. வாழ்க்கையை புரிய வைப்பதுதான் கல்வி – முனைவர். ச.சீ.ராசகோபாலன்.
16. கல்விக் குழப்பங்கள் – மு.சிவகுருநாதன்.
17. சுகந்தி டீச்சர் – பாபு எழில்தாசன்.
18. கரும்பலகையில் எழுதாதவை – பழ. புகழேந்தி.
19. வகுப்பறையின் கடைசி நாற்காலி – ம.நவீன்
20. பகல்கனவு – டாக்டர்.சங்கரராஜுலு.
21. பள்ளிக்கூடம் – பா.ஜெயப்பிரகாசம்.
22. கல்வி சமூக மாற்றத்துக்கான கருவி – தமிழில் மூ.அப்பணசாமி
23. எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீங்க – தமிழில் ஜே.ஷாஜகான்
24. காலந்தோறும் கல்வி – முனைவர். என்.மாதவன்
25. என் சிவப்பு பால்பாயிண்ட் பேனா – பேரா.ச.மாடசாமி
26. சொர்க்கத்தின் குழந்தைகள் – தி.குலசேகர்
27. ஆயுதம் செய்வோம் – முனைவர். என்.மாதவன்
28. குழந்தைகளைக் கொண்டாடுவோம் – பேரா.இரா.காமராசு
29. தோட்டியின் மகன் – தமிழில். சுந்தர ராமசாமி
30. முரண்பாடுகளிலிருந்து கற்றல் – தமிழில். ஜே.ஷாஜகான்
31. உலகமயமாக்கலும் பெண் கல்வியும் – முனைவர்.சா.சுபா
32. தமிழக பள்ளிக் கல்வி – ச.சீ.ராசகோபாலன்.
33. இது எங்கள் வகுப்பறை – வே.சசிகலா உதயகுமார்.
34. கதைகதையாம் காரணமாம் – விஷ்ணுபுரம் சரவணன்.
35. கசக்கும் கல்வியும் கற்கண்டாகும் – பிரியசகி, ஜோசப் ஜெயராஜ்
36. சூப்பர் 30 ஆனந்தகுமார் – தமிழில் D I. ரவீந்திரன்.
37. ரோஸ் – இரா.நடராசன்.
38. வன்முறையில்லா வகுப்பறை – இரா.நடராசன்
39. தெருவிளக்கும் மரத்தடியும் – பேரா.ச.மாடசாமி
40. உனக்குப் படிக்கத் தெரியாது – தமிழில்.கமலாலயன்.
41. குழந்தைமையைக் கொண்டாடுவோம் – முனைவர்.என்.மாதவன்.
42. இவைகளா… கனவுப்பள்ளிகள்? பேரா.பொ.ராஜமாணிக்கம்
43. மீண்டெழும் அரசுப்பள்ளிகள் – பேரா.நா.மணி
44. கண்டேன் புதையலை – பிரியசகி
45. பாகுபடுத்தும் கல்வி -பேரா.வசந்திதேவி, பேரா.அனில் சத்கோபால்
46. கனவுப்பட்டறை – மதி
47. கல்வியில் வேண்டும் புரட்சி – தமிழில் அருணாசலம்.
48. கியூபா: கல்விக்கு ஒரு.கலங்கரை விளக்கம் – தியாகு.
49. ஓய்ந்திருக்கலாகாது – அரசி, ஆதி வள்ளியப்பன்.
50. பள்ளிக்கல்வி – புத்தகம் பேசுது கட்டுரைகள்
51. கரும்பலகைக்கு அப்பால் – கலகலவகுப்பறை சிவா
52. 13 லிருந்து 19வரை – முனைவர்.என்.மாதவன்

ஆசிரியர்களுக்கான புத்தகங்கள் மட்டுமல்ல இவைகள்…. பள்ளிக்கல்வியை நேசிக்கும் எல்லோருக்குமான புத்தகங்கள்.
சுவாசிப்பு  உயிர் பிழைக்க….. வாசிப்பு உயிர் தழைக்க….
வாசிப்பை நேசிப்போம்…. வாசிப்பை சுவாசிப்போம்…
நன்றி!

காங்கிரஸ் கட்சியை சார்ந்த படேலுக்கு பீஜேபீ சிலை வைப்பது ஏன்?

*காங்கிரஸ் கட்சியை சார்ந்த படேலுக்கு பீஜேபீ சிலை வைப்பது ஏன்?*

---(சம்பவம்1)---

இந்திய விடுதலைப் போரின் முன்னணித் தலைவர் காந்தி.

காந்தியார் கொலை செய்யப்பட்ட நாள் 1948 ஜனவரி 30, சுட்டுக் கொல்லப்பட்ட நேரம் மாலை 5 மணி 12 நிமிடம்.

அவர் பிர்லா மாளிகையில் இருந்து பிரார்த்தனைக்கு செல்லும்போது கடைசியாகப் பேசிக் கொண்டிருந்தது படேலிடம் தான். அப்போது மணி 4.50.

எப்போதும் உடன் இருக்கும் படேல், கோட்ஷே சுடும்போது மட்டும் இல்லை. 

---(சம்பவம்2)---

1) காந்தி கொலை செய்யப்பட்ட நாள் 1948 ஜனவரி 30. கொன்றது ஆர்.எஸ்.எஸ்.

2) ஆர்.எஸ்.எஸ் மீது தடை விதிக்கப்பட்டது 1948 பிப்ரவரி 4

3) தடை விலக்கப்பட்டது 1949 ஜூலை 11.

4) 1 வருடம் 4 மாதத்திற்குள் தடை விலக்கப்பட்டது.

5) தடையை விலக்கியவர் படேல் (அன்றைய உள்துறை அமைச்சர்) 

படேல்  காங்கிரசுக்குள் இருந்த ஒரு சங்கி.  திட்டத்தை வகுத்து கொடுத்ததிலிருந்து குற்றவாளிகளை தப்பவிட்டது வரை படேலின் பங்கு முக்கியமானது. 

1) ஜனவரி 20, 1948 அன்று நடைபெற்ற காந்தியார் மீதான முதல் கொலைமுயற்சி விசாரணையை பிசுபிசுத்துப் போக செய்தது. 

2) அதன் பின்னரும் காந்தியாருக்கு தேவையான பாதுகாப்பை பலப்படுத்தாமல் கொலையாளிகளுக்கு உதவியது 

3) கொலை வழக்கிலிருந்து முக்கிய குற்றவாளியான சாவர்கரை விடுவித்தது

4) மிகக் குறைந்த காலஇடைவெளியில், அற்பமான உறுதிமொழியின் அடிப்படையில்  ஆர்.எஸ்.எஸ் மீதான தடையை நீக்கியது 

என்பது போன்ற, காந்தியின் கொலையில் படேலின் தொடர்புகள் விசாரிக்கப்படவே இல்லை.

---(சம்பவம்3)---

1) தேசத்தந்தை காந்தியை கொன்ற ஆர்.எஸ்.எஸ் மீதான தடை ஒரு வருடத்தில் விலக்கப்பட்டது.

2) முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக்கு காரணமானதாக சொல்லப்படும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு 25 வருடமாக தடை நீடிக்கிறது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

எளிமையாக ஒரு விஷயத்தை உங்களால் விளக்க முடியவில்லையெனில், அதை நீங்கள் சரியாக கற்கவில்லை என பொருள்.! 

- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

தீக்குளிக்கச் சொல்லாதீர்கள்

Karthick Ramasamy
2019-06-07

உங்களுக்கான நண்பர்களை, வாழ்க்கைத்துணைகளை அல்லது சித்தாந்த/அரசியல் கொள்கையைகளை/தலைவர்களை தேர்ந்தெடுக்க எவ்வளவு காலம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்.

முடிவு செய்த பிறகு உங்களிடம் நிரூபிப்பதற்காக தினம் தினம் அவர்களை தீக்குளிக்கச் சொல்லாதீர்கள்.

Saturday, July 4, 2020

சீனா தேசம் சென்றாலும் சீர் கல்வியை கற்றுக் கொள்

Lafees Shasheed
2020-07-04

'சீனா தேசம் சென்றாலும் சீர் கல்வியை கற்றுக் கொள்' என்பது முஸ்லிம் சமூகத்தில் மிகவும் பிரபல்யமான ஒரு நாயக வாக்கு. ஆனால் உண்மையில் இந்த ஹதீஸை (?) ஒரு புனைந்துரை (மவ்லூஆத்) என்கிறார்கள் ஹதீஸ் திறனாய்வாளர்கள். சிலர் இதனை புனையப்பட்ட அறிவிப்பு கூட அல்ல, மாறாக இது இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் கூற்று என்கிறார்கள். எப்படியோ இது ஆதாரபூர்வமான நாயக வாக்கு அல்ல. ஆனால் முஸ்லிம் வெகுஜன உளவியலில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் கூறப்பட்டுள்ள ஹதீஸ்களில் இந்த அறிவுப்பு அளவுக்கு நன்றாக பதிந்து போன வேறு ஹதீஸ்கள் கிடையாது. கல்வி குறித்த இதர ஆதாரபூர்வமான ஹதீஸ்களை விஞ்சிய பிரபல்யம் 'சீனா தேசம் சென்றாலும்...' ஹதீஸுக்கு உள்ளது. இந்த அறிவிப்பின் கருத்தாக ' ஒருவேளை, சீனா வெகு தொலைவில் உள்ள நாடாக அக்காலத்தில் கருதப்பட்டமை ஆக இருக்கும். அல்லது அது (சீனா) அக்காலகட்டத்தில் விஞ்ஞானத் துறையினதும், தொழிற் துறையினதும் தொட்டிலாக புகழ்பெற்று விளங்கியதனாலும் இருக்கும் ' என்கிறார், உஸ்தாத் முர்தஸா முதஹ்ஹரி... ஆனால் எனக்கு ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலியின் அணுகுமுறை அடிப்படையில் இந்த பிரபல்யமான கூற்று குறித்து சிலவற்றை முன் வைக்கலாம் என்று தோன்றுகிறது.

முஸ்லிம்களின் மார்க்கம் பற்றிய புரிதலில் காணப்படும் ஒத்திசைவற்ற தன்மை (Incoherence) குறித்து கவனம் குவிப்பார், எமது ஆசிரியர் ஷெய்க் அல் கஸ்ஸாலி. அதாவது ஒரு விடயத்தில் முன்னுக்குப் பின் முரணாக கோட்பாட்டையும் நடைமுறையையும் கட்டியெழுப்பி இருப்பது.

உதாரணமாக நம்பிக்கை சுதந்திரம் குறித்து முஸ்லிம் அறிஞர்கள் வலியுறுத்தி பேசி இருக்கிறார்கள். இந்த மார்க்கத்தை ஏற்பதில் எந்த நிர்பந்தமும் இல்லை, ஒருவர் புற ரீதியான அழுத்தங்கள் எதுவுமின்றி சுயமாகவே இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் சட்ட வல்லுநர்களிடத்தில் மாற்றுக் கருத்துக்கள் எதுவும் இல்லை. ஆனால் சமவேளையில் இஸ்லாத்தில் இருந்து ஒருவர் வெளியேறினால் அவருக்கு மரண தண்டனை என்றும் அவர்கள் கூறுவார்கள். இது நம்பிக்கை சுதந்திரத்துக்கு எதிரான ஒரு கருத்து என்பது அவர்களுக்கு புரிவது இல்லை. இத்தகைய ஒத்திசைவற்ற புரிதல்களை கேள்விக்குட்படுத்தி அறிவுப் புலத்திலும், பொது மன்றத்திலும் இயங்கியவர், முஹ‌ம்ம‌த் அல் கஸ்ஸாலி. அதே அணுகுமுறை அடிப்படையில் 'சீனா தேசம் சென்றாலும்....' என்கிற அறிவிப்பை நோக்கலாம்.

இந்த அறிவிப்பை உலமாக்களும், மார்க்க உபன்யாசகர்களும், ஆன்மீக பயிற்றுவிப்பாளர்களும், பொது மக்களும் அடிக்கடி பாவித்து வருகிறார்கள். ஆனால் அதே நேரத்தில் முஸ்லிம் சமூகத்தில் மார்க்க கல்வி மற்றும் உலகக் கல்வி என்கிற என்கிற பிரிவினையும் தீவிரமாக உள்ளது. உலகக் × மார்க்கக் கல்வி என்கிற எதிர் முரணை உருவாக்கி உலமாக்கள் உலகக் கல்வியை விட மார்க்கக் கல்வியை சிறந்ததாகவும், ஆன்மிக பரிபூரணம் கொண்டதாகவும் வாதிட்டு வருகிறார்கள். இந்த வகையில் மார்க்கக் கல்வி என்பது இன்றைய காலத்தின் மாபெரும் அதிகார சொல்லாடல் கட்டுமானமாக இருந்து வருகிறது. இந்த சொல்லாடல் கட்டுமானத்தின் செல்வாக்கு காரணமாகவே மத்ரஸாக்களின் அடித்தளம் இவ்வளவு பலம் வாய்ந்ததாக முஸ்லிம் சமூகத்தில் காணப்படுகிறது. இதன் சமூக பரிமாணங்களை ஆராய இப்படியான பதிவுகளின் எல்லை போதாது. ஆனால் நுணுக்கமாக யோசித்துப் பார்த்தால் மேற்போந்த 'சீனா தேசம் சென்றாலும்....' என்கிற ஹதீஸின் கருத்துக்கு முஸ்லிம் சமூகத்தின் இந்த நடைமுறை அடிப்படையிலேயே முரண்படுகிறது.

நபிகளாரின் காலத்தில் சீனா தேசத்தில் எந்த மத்ரஸாவும் இருக்கவில்லை ; இறைதூதர்களும் இருக்கவில்லை. எனில் அங்கே சென்று அறிவு பெறுவது என்பதன் அர்த்தம் என்ன? உண்மையில் அப்படி ஒன்று இருப்பின் அது ஆயத்துல்லாஹ் முதஹ்ஹரி கூறியது போன்று விஞ்ஞானத்தினதும், தொழில் நுட்பத்தினதும், தத்துவத்தினதும் அறிவு தான். ஏனெனில் அது தான் அப்போது சீனா தேசத்தில் இருந்தது. உண்மையில் அல் குர்ஆனிய உலக நாகரீக கண்ணோட்டத்தின் படி அறிவு என்பது பிளவுபடாதது. அனைத்து அறிவுகளினதும் மூலம் பிரபஞ்சத்தின் தலைவனான இறைவனே. இந்த தெளிவு எமது முஸ்லிம் அறிஞர்களுக்கு இருந்ததனால் தான் அவர்கள் கிரேக்க தத்துவத்தையும், பாரசீக மெய்யியலையும், இந்திய கணிதத்தையும் அரபியில் கொண்டு வந்தார்கள். அவற்றை அகவயப்படுத்திக் கொண்டு அல் குர்ஆனிய உலக நாகரீக கண்ணோட்டத்திற்கு முரண்படாமல் வளர்த்து எடுத்தார்கள். அல் குர்ஆன், ஸுன்னாவை போலவே இயற்கையும் இறைவனை காட்டும் மூலங்களில் ஒன்று தான். இதனால் தான் 'அல் குர்ஆன் பேசும் பிரபஞ்சம் ; பிரபஞ்சம் மெளன அல் குர்ஆன்' என்று கூறினார், ஷெய்க் அல் கஸ்ஸாலி. உலகக் கல்வி, மார்க்க கல்வி என்கிற பிரிவினை எமது அறிவு மரபுக்கு அந்நியமான ஒன்று. அது நவீனத்துவத்தை எதிர் கொண்ட பழமைவாதத்தின் தோல்வி உளவியலின் வெளிப்பாடே அன்றி இஸ்லாமிய பண்பாட்டு மரபின் குரலல்ல அது.

பாரியதொரு கலாசார, விஞ்ஞான இயக்கத்தை இஸ்லாம் உலகிற்கு வழங்கியது. பல நூற்றாண்டுகளாக அதுவே கல்வி, அறிவியல், கலாசார, பண்பாட்டு துறைகளில் கொடி கட்டிப் பறந்தது. இப்னு சீனா, அல் பிரூனி, இமாம் கஸ்ஸாலி ஒமர் கைய்யாம் போன்ற மகத்தான இஸ்லாமியக் கற்றறிவாளர்களை அதுவே உருவாக்கியது. ஆனால் இந்த மரபை கொண்டாடும் நாம் சமவேளையில் உலகக் கல்வியை விட மார்க்க கல்வி உயர்ந்தது என்கிறோம்.. இத்தகைய மார்க்கம் குறித்த ஒத்திசைவற்ற புரிதல்களை களைவதே எமது எழுச்சிக்கான அடிப்படை நிபந்தனை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இமாம் முஹம்மத் அப்துஹு, ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி போன்றவர்களின் கோட்பாடு சட்டகங்களில் சமூக எழுச்சிக்கான முக்கியமான முறைமை சார்ந்த அணுகுமுறைகள் உள்ளது. அவற்றை நாம் கவனமாக பயில வேண்டும். சிந்தனை என்பது தொடரியக்கம். விமர்சன சிந்தனை தான் அறிவு!

#இங்கிருந்து அறிவோம்

#பாதையை_செப்பனிடல்

#பயகம்பர் நாயகமே

#இது_போன்று இன்னொன்றில்லை

Friday, July 3, 2020

BEING ETHICAL IS THE BIGGEST CRIME.!

Dr.John Aaron Prabhu.
Sr. Asst. Surgeon.
2020-07-03

BEING ETHICAL IS THE BIGGEST CRIME.!
It's my personal message to my colleagues. 

*முன்குறிப்பு*

சாத்தான்குளம் சம்பவத்தில் சான்று வழங்கிய அரசு மருத்துவர் மீதும் நிச்சயமாக தவறுள்ளது.!!  அரசியல் / அதிகார அழுத்தத்தால் மீண்டும் ஒரு மருத்துவர் பலியாகாமல் இருக்கட்டும் என்பதற்காக மட்டுமே இந்த பதிவு.!

*Disclaimer*

எல்லா நிகழ்வுகளுமே என் சொந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே.

*இனி உங்களுக்காக*

இன்றைக்கு கோவில்பட்டி டாக்டரைத் தண்டிக்கணும், கைது பண்ணனும். கொலைக்கு அவங்களும் உடந்தை.. அவங்களோட மருத்துவ கவுன்சில் உரிமத்தை ரத்து பண்ணியே ஆகணும்னு பேசுறவன்லாம் யார்னா.? இதுல ஏதாவது ஒருத்தனாத்தான் இருப்பான்...

*நிகழ்வு 1*

அவர்:
"என் மருமகள் Air travel பண்ணனும்.
அவளுக்கு Non Pregnant-னு ஒரு Certificate மட்டும் வேணும்.!"

நான்: 
"சரிங்க.! அதெப்படி எனக்கு தெரியும்.?! USG Abdomen பாத்துட்டு சொல்ல முடியும்.! 
இல்லைன்னா இங்க வரச்சொல்லுங்க. 
ஒரு UPTஆவது பாத்துட்டு, அந்த report mention பண்ணித்தான Certificate தர முடியும்.! நான் அவங்கள நேர்லகூட பாக்காம, நீங்க வந்து கேக்குறீங்களே..?!" - னு திரும்பக் கேட்டதுக்கு, முறைச்சிட்டு போறவன். 

*நிகழ்வு 2*

அவர்:
"என் பையன், நம்ம KV-ல படிக்குறான். டெல்லிக்கு Sports meet போறான்.! அதான், SCHOOL-ல DOCTOR-கிட்ட, ச்சும்மா பேருக்கு ஒரு Certificate-தான் கேட்டாங்க.!"

நான்: 
"Sports meetக்கு Physical fitness certificate தான.?! ECG, ECHO , ஒரு Basic blood investigations-கூட எதுவுமே Test பண்ணாம எப்படிங்க அவன் FIT-னு குடுக்க முடியும்.??!!
நாளைக்கு உங்க பிள்ளைக்கு ஏதாவது ஆச்சுன்னா, School management தப்பிச்சுக்கத்தான் இந்த Certificate.!"

டாக்டரை பலிகடா ஆக்குறதுக்குதான் இந்த Certificateனு நான் சொல்லித்தான் உங்களுக்கு புரியணுமா.?! வேற எதுக்குன்னு தெரிஞ்சவன் சொல்லு பாப்போம்.? ஏன்.? Track event-லயே குழந்தை இறந்த செய்தியெல்லாம் தெரியாதா உங்களுக்கு.?!  HOCMல போன மாசம்கூட ஒரு CRRI Sudden death. அதுக்குள்ளயா மறந்துட்டீங்க.?!!

*நிகழ்வு 3*

Corona காலகட்டத்துல, எந்த School-ம் function ஆகக் கூடாதுன்னு அரசாங்கமே ஆணையிட்டுள்ள நிலையில்

அவர்: 
"புள்ளைக்கு School admission-க்கு 
ஒரு Doctor certificate வேணும் மச்சான், வேறொன்னும் இல்லை.!!!"

நான்: 
"தயவுசெஞ்சு தொந்தரவு பண்ணாத, என்னால தர முடியாது.!"

*நிகழ்வு 4@*

"Govt.School Teacherஆ வேலை பாக்குறேன்.!
Alagappa Universityலதான் MA course பண்ணிட்டு இருக்கேன்.!
Exams வருது.!! படிச்சுருவேன்.!
Exam datesக்கு மட்டும் 3 ,3 நாள் மட்டும் நீங்க போன மாசமும் , இந்த மாசமும்
இந்த குறிப்பிட்ட தேதியில மட்டும், 
Medical Leave தந்தா போதும்..!!"

"அப்போ நீங்க ML கேக்குற Datesல தான Exam appear ஆகியிருப்பீங்க..?
உடம்பு சரியில்லை வேலைக்கு போக வேணாம்னு நான் சொல்ல,
அதே நாள்ல நீங்க பரிட்சை எழுதலாமா.?
அது எப்படிங்க முடியும்.??
CL போடுங்க, இல்லைன்னா,
Study Leaveனு apply பண்ணுங்க .!!
நான் தர மாட்டேன்..!!"

நிகழ்வு 5 :

"அக்கா பொண்ணு மாசமாயிருக்கா,
எனக்கு நெறைய Medical Leave இருக்கு,
ஒரு 2 months மட்டும் ML வேணும்.!!"

"Asst Surgeon cadre தான் டீச்சர் நான். Maximum 15 daysக்கு வேணும்னா தரலாம்.! அதுக்கு மேலதான் வேணும்னா, நீங்க வேற யார்ட்டயாவது வாங்கிக்கோங்க.!"

பாடம் சொல்லிக்குடுத்த டீச்சருக்கே ஒரு certificate தரமாட்டுறான் பாருங்க.
நம்மகிட்ட படிச்சவன்.! 
இன்னைக்கு டாக்டர் ஆகிட்டோம்னு அவ்ளோ தலைக்கணத்துல திரியுறான்.!

இத்தனைக்கும் நான் என்னோட பதவிக்கு இவ்ளோதான் முடியும்னு விளக்கமா சொன்னப்பிறகும்.!

நிகழ்வு 6 :

"சென்னைல இருந்து நாத்தனார் நம்ம ஊருக்கு வரணுமாம், 
அங்க E-Pass வாங்குறதுக்கு,
இங்க மாமியார் Critically ill-னு certificate இருந்தா போதுமாம்.! அதான். . .!!"

"தரமாட்டேன்.!" மறுத்ததற்கு.

வீட்டிற்கே வந்து,
"அவன் என்ன பெரிய சு#$*-யா.?
அவன நான் பாத்துக்கிறேன்.!"னு மிரட்டிட்டு போன மாண்புமிகு ஒருவர். . .

நிகழ்வு 7 :

"Abroad வேலைக்கு Apply பண்ணிருக்கேன்.!
அதுக்கு VISA வாங்க,
Covid19 - Negativeனு தா.!
இதுல என்ன ஆகிடப் போகுது உனக்கு.!!"

"அதெப்படி TEST பாக்காம தர முடியும்.?
ICMR Portal entry numberலாம் அந்த reportல பண்ணித்தான் தர முடியும்.!
அதுவும் அரசாங்க வேலைல இருந்துட்டே.!
Test பண்றதுக்கும் அப்படி guidelines எதுவும் இல்லை.!
அப்படி கண்டிப்பா வேணும்னா Private test பாருங்க. Result கொண்டுவாங்க.!
அதை base பண்ணி Certificate தரலாம்.!!"

நிகழ்வு 8 :

"போன வாரம் அண்ணன் வீட்ல கல்யாணம் நடந்துச்சுல.?! 
புள்ளை Matriculation Schoolல படிக்குதுல., அந்த Schoolல ஒரு நாள் Leaveகெல்லாம் உங்ககிட்ட certificate வாங்கிட்டு வரச்சொல்றாங்க. .!"
இதச் சொல்லும்போதே Parentsக்கு மொகத்துல அவ்ளோ சந்தோசம்.! 
இதுல பெருமை மயிருவேற,
புள்ளை படிக்குற School அவ்ளோ Strict-னு.!!!

நிகழ்வு 9 :

"அத்தை 1 மாசம் Medical Leave எடுத்திருந்தாங்கல்ல.?!
நாளைக்கு Join பண்றாங்க. அதான் fitness மட்டும் Sign வாங்கிட்டு வரச்சொன்னாங்க.!!"

"யாரா இருந்தாலும் நேர்ல பாக்காம 
எந்த certificateம் தாரதில்லைன்னு , 
நான் சொன்னேன்னு போய் சொல்லு போ.!"

நிகழ்வு 10 :

"கால்ல அடிபட்டுச்சு நம்ம டிப்போலதான் டிரைவரா இருக்கேன்.! 
போன மாசம் 10ம் தேதியிலிருந்து Leave வேணும் Sir.!!"

"நீங்க தப்பா நெனைச்சாலும் பரவால்லைங்க நான் pre-date போட்டு certificate தாரதில்லைங்க.!!"

இப்படித்தான் ஒரு டாக்டர், 
இவங்க சொல்றத நம்பி 
தெரிஞ்சவங்கதானேன்னு ML குடுத்துட்டு
அந்த driver, அவர் சொன்ன அடுத்தநாள்ல
Govt bus ஒரு பெரிய RTAல ஒருத்தன் சாகவும், தான் suspend ஆகாம தப்பிக்க, 
முன்தேதியிட்டு Medical certificateம் வாங்கி,
அந்த குறிப்பிட்ட நாளில் தான் duty-க்கே வரலைன்னு,
Enquiry committeeகிட்ட இந்த medical certificate produce பண்ணிட்டான்.
இப்போ, இதுநாள்வரை அந்த Doctorம் 
இந்த Driverஓட சேர்ந்து courtக்கு அலைஞ்சிட்டு இருக்க கதை தெரியுமா.??!

நிகழ்வு 11 :

"Old age pensionக்கு கையெழுத்து போட்டுத்தான ஆகணும்.!"

"Adhaar / voter ID-படி 48தான ஆகுது.?!"

"ஆமா, 48 வயச 58னு போட்டுக் குடுத்தா.
OAP வாங்கலாம். பாவப்பட்ட குடும்பம். பாத்து பண்ணுங்க.!!"

"முடியாது.! காசு வாங்கிட்டு காட்டுற இடத்துல கையெழுத்துப்போடுற எவன்கிட்டயாவது வாங்கிக்க. கிளம்பு.!!"

நிகழ்வு 12 :

சாயங்காலம் 4:30க்கு தூங்கிட்டு இருந்தவனை எழுப்பி,
"நாளைக்கு பவர் பத்திரம் பதியணும். 
அதான் Life certificate வாங்க வந்தேன்.!"

"நான் என்ன நீங்க தூக்கிட்டு சுத்துற Rubber stamp-னு நெனச்சீங்களா.?!
இது என்ன தலைபோற Emergencyயா.?!
நாளைக்கு Hospitalலதான் இருப்பேன் Duty timeல அங்க வந்து வாங்குங்க.!
வீடு, என்னோட Personal space ,
இங்க எவன் வரச்சொன்னது.?!"

நிகழ்வு 13 :

"இதே மாதிரி கடைசி நேரத்துல 
இன்னைக்கு 5 மணிக்குள்ள application அனுப்பனும். Attestation வேணும்னு.!"

"Originals எங்க.? எடுத்துட்டு வா.! இங்கதான் இருப்பேன் verify 
பண்ணிட்டு போட்டுத்தாரேன்.!

நிகழ்வு 14 :

காவலர்களிடம் மேலும் கவனமாக இருங்கள்.

என்னிடம் கால்மணி நேரத்திற்குமுன் மருத்துவ விடுப்பிற்கு சான்று வாங்கிச்சென்ற காவலர்,

மறுபடியும் தேடிவந்து
நேராக உள்ளே வந்து 
என் காலில் விழுந்து
என் காலைப்பிடித்து,
"சார், என்னோட எதிர்காலமே உங்க கைலதான் சார் இருக்கு.! 
தெரியாம பண்ணிட்டேன் சார்.!! 
என்னைய மன்னிச்சுடுங்க சார்.!!!"னு அழுகிறார். . .

எனக்கு என்ன நடந்ததென்றே புரியவில்லை.!
ஏனெனில், 
அவர்கள் நிலைய பொறுப்பு காவலரிடம் 
"பரிந்துரை" (Leave Pass) வாங்கி வந்தால் மட்டுமே,
விடுப்பு வழங்குவது வழக்கம்.!

அந்த S.I.-க்கு தெரியும் நான் 15 நாட்களுக்கு மேல்
அவருக்கே தரமாட்டேன் என்பது.!
புதிதாக வந்த இந்த Battalion-க்கு அது தெரியாது.!

நான் "8 நாட்கள்" என எழுதி தந்ததற்குமுன்
ஒரு 1-ஐ மட்டும் சேர்த்து "18 நாட்கள்" நான் வழங்கியதாக கொடுத்திருக்கிறார்.

"நீ, போய் டாக்டரிடம் வாங்கி வா"என என்னிடமே அனுப்ப,
வந்து என் காலில் விழுகிறார்.!!

நான் "இதுலயே இந்த திருட்டுத்தனம் பண்ற உனக்கெல்லாம் எதுக்கு போலிஸ் வேலை.?!"என வச்சு வாங்க,

குடும்பம், குழந்தைகள், எதிர்காலம் என காலை விடாமல் அழ.. ..
"நீயே உன் S.I.க்கு Call பண்ணி என் முன்னாடி நடந்ததைச் சொல்லு.!
நான் அப்புறம் அவர்கிட்ட பேசுறேன்"என

"சார் , நீங்க குடுத்துறுக்க மாட்டீங்கன்னு எனக்குத் தெரியும்.! அவன் 'இல்லை, டாக்டர்தான் 18 நாளுக்கு தந்தார்'னு என்கிட்டையே பொய் சொல்றான் , சார்.
அதான் உங்ககிட்டையே அனுப்பி வச்சேன்.! நீங்க என்ன சொன்னாலும்
அப்படியே பண்றேன், சார்..!!"

"இந்த தடவை மன்னிச்சு விடுங்க சார்.
இனி இப்படி தப்பு பண்ண மாட்டார்னு நம்புவோம்.!
நீங்க என்ன பண்ணனுமோ பண்ணுங்க.!"னு அனுப்பி வச்சேன்.!!

அன்றிலிருந்து 8 days எனில் (EIGHT DAYS ONLY)என அருகிலேயே எழுதவும் ஆரம்பித்தேன்.!!

நிகழ்வு 15 :

"சார், நம்ம Inspectorக்கு accident ஆச்சுல,
அவர் Admissionலதான் இருக்கார்.
உங்ககிட்ட 15 days extension வாங்கிக்கச் சொன்னார்.!!"

"இல்ல சார்.! அவர் எங்க Admissionல இருக்காங்களோ,
அவங்கள்ட்டயே Certificate வாங்கி குடுக்க சொல்லுங்க.!
நான் Individualஅ பாக்காம எந்த Certificateம் தாரதில்லை.!
எனக்கின்னு சில Principles வச்சு இருக்கேன்.!
நீங்க தப்பா நினைச்சாலும் பரவாயில்லை.!!
நான் அதையெல்லாம் மீறுறதில்லை.!!"

"நான் சொன்னேன் சார்.! அவர்தான் உங்ககிட்ட ஒருதடவை கேட்டுப்பாக்கச் சொன்னார்!!"

"சரி சார்.! நான் சொன்னத அவர்கிட்ட சொல்லிடுங்க. சந்தோசம்.!!"னு 
வணக்கம் வைச்சு அனுப்பிடுவேன்.!!!

மற்றும் பல நிகழ்வுகள் உண்டு.

இதுபோன்ற நிகழ்வுகளை நீங்களும் கடந்திருக்கலாம். . .

அவங்கள பொருத்தவரை
"அவங்களோட தேவை"க்கு இதெல்லாமே 
ஒரு சாதாரண கையெழுத்து.!

ஆனா, 
எனக்கு இந்த ஒற்றைக் கையெழுத்துதானே எல்லாமே.! 

என்னோட அடையாளம் அதுதான்.!!
நான் இதுவரை பட்ட கஷ்டத்துக்கு, படிச்ச படிப்புக்கு நானே கொடுக்கிற மரியாதை.!
பாக்குற வேலைக்கு நான் செய்யுற நீதி.!!

எனக்கு இதுதான் #ETHICS.!!
இதை எவனுக்காகவும் மீற மாட்டேன்.!!

நீங்க நிறைய பேர்
நீங்க யார்னே தெரியாத வெளியூர்ல வேலைபாக்குறவங்கதான.?!!

நான் MBBS முடிச்சதுல இருந்து
சொந்த ஊர்லதான் இருக்கேன்.!!!
10 வருசமா Govt Service-ல இருக்கேன்.!!
எத்தனை பேர் முறைச்சிட்டு திட்டிட்டு மிரட்டிட்டு போயிருப்பான்.!
வெகு சிலரே நீங்க சொல்றது சரிதான்னு புரிஞ்சுப்பான்.!!!

நான் Genuine groundsக்கு குடுத்த 
1000 Certificatesஐ பத்தி எவனும் அடுத்தவன்ட்டகூட சொல்லியிருக்கப் போறதில்லை.!!

ஆனா,
தரமாட்டேன் சொன்னத, 
என்ன காரணத்தால தரமறுத்தேன்னு மறைச்சு ஊரெல்லாம் பேரைக் கெடுத்துருவானுக.!!

எத்தனை பேர் இப்படி திரிஞ்சாலும்,
எனக்கு அதப்பத்தி கவலையே இல்லை.
ஏன்னா.? 
இப்படிப்பட்டவங்களோட 
"conduct certificate" என்னோட கூந்தலுக்குச் சமம்.??

எவனுக்கு இது திமிரா தெரிஞ்சாலும்
அதைப்பத்தி கவலையே எனக்கில்லை.!!!

ஏன்னா.? 
நான் எனக்கான நியாயப்படித்தான் நடந்துட்டு இருக்கேன்.!

அது போதாதா.?!!

நீங்க Gazetted Officer,
ஒருதடவை நீங்க Sign பண்ணிட்டா ,
அது Legal Document.!
You have every right to deny / refuse to give any Certificate.
If u really think it's unethical.!

Legal Consequence face பண்ண
Legal / Political / Financial backup-ம்
கொழுப்பும் இருந்தா 
50-100 வாங்கிட்டு certificate குடு.!
எவனும் தடுக்கப் போறதில்ல.!

எனக்கு அப்படி 50க்கும் 100க்கும்
என் கையெழுத்தை விக்குறதுல உடன்பாடே கிடையாது.!!

இப்படி Unethicalஆ நடந்து 
100 case பாத்து சம்பாதிக்கிறதவிட,
Ethicalஆ இருந்து 5 case பாத்தாலே
சந்தோசம்தான்.!!!

தொடர்ந்து நட்புப் பட்டியலில் இருப்போருக்கு தெரியும்,
"BEING ETHICAL IS A  BIGGEST CRIME.!"னு அப்பப்போ
Facebook Post பண்ணிருப்பேன்.!

அன்றைக்கெல்லாம் இதே மாதிரியான ஒரு சம்பவத்தைக் கடந்திருப்பேன்.!!

மருத்துவர்களாகிய நீங்கள் சட்டத்திற்கு உட்பட்டவர்கள்
அரசு மருத்துவர்கள் அரசாங்க அதிகாரி என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.!!

மருத்துவம் பார்ப்பதில் மட்டுமல்ல,
சான்றிதழ் வழங்குவதிலும் 
கூடுதல் கவனமாக இருங்கள்.!!!

வளைந்து குடுக்காமல் இருப்பது
அவ்வளவு சுலபமல்ல.!!
ஆனால்,
கண்டிப்பாக இருக்க முடியும்..!!! 

It's not that Easy to be Ethical.!
But BE ETHICAL.!!! 

நன்றி.!!! 

என்றும் அன்புடன்,
Dr.John Aaron Prabhu.
Sr. Asst. Surgeon.

Friday, June 19, 2020

எம்.ஜி.ஆர் - ரின் மனைவிகளும், கீப்புகளும்

Priya Perumal
2020-06-19

**எம்.ஜி.ஆர் - ரின் மனைவிகளும், கீப்புகளும்**

எம்ஜிஆர் மற்றும் கலைஞர் மூன்று திருமணங்கள் செய்தவர்கள் தான். 

ஆனால், கலைஞரின் திருமணங்கள் மட்டுமே விமர்சிக்கப்படுகின்றன, ஏன்?

முழுமுதற்காரணம்... 

கலைஞரைப்போல அவருக்கு வாரிசுகள் இல்லை. மேலும் சமூக வலைத்தளங்கள் வளர்ச்சிக்கு முன்பே சிக்கி சின்னாபின்னமாகமல் மறைந்து விட்டார்.  

முக்கியாமானது... 

கலைஞரை பார்ப்பனுக்கு பிடிக்காது. இன்றுவரை பெரும்பான்மையான ஊடகம் பார்ப்பன்னர்கள் மற்றும் பார்பன அடிவருடிகளிடம் இருக்கிறது. 

கலைஞர் இறந்த பின்னும் அரசியலில் அவரை நிலை நிறுத்த ஸ்டாலின் கனிமொழி மற்றும் அழகிரி (பாவம் சேர்த்து கொள்வோம்) இருக்கிறார்கள்.

கலைஞருக்கு தளபதி மு க ஸ்டாலின் போல எம் ஜி ஆருடைய வாரிசு இப்போது இருந்தால் நிலைமை வேறுவிதமாக இருக்கும்.

சரி விடுங்கள் விஷயத்திற்கு வருவோம்!!!

எம் ஜி ஆருக்கு சட்டப்படி மூன்று மனைவிகள் இருந்தனர்...

*முதல் திருமணம்*

எம்.ஜி.ஆர் முதலில் தங்கமணியை மணந்தார். பிரசவத்திற்காகத் தாய் ஊருக்குச் சென்ற தங்கமணிக்கு குழந்தை இறந்தே பிறந்தது. அதன் பின் தங்கமணியும் உடல்நலக் குறைவினால் இறந்தார்.

*இரண்டாவது திருமணம்*

அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் எம்.ஜி.ஆர். இருவருக்கும் குழந்தைகள் இல்லை. பின்னர் சதானந்தவதி நோய்க் காரணமாக இறந்தாக கருதப்பட்டார் அல்லது தள்ளி வைக்கப் பட்டார். 

*மூன்றாவது திருமணம்*

1948 மோகினி திரைப்படத்தில் எம்ஜிஆரும் வி. என். ஜானகியும் தோன்றும் காட்சி
எம்.ஜி.ஆர் இரண்டாவது கதாநாயகனாகத் தியாகராஜ பாகவதர் தயாரித்த ராஜ முக்தி படத்தில் நடித்தார். அப்படத்தில் வைக்கம் நாராயணி ஜானகி என்னும் வி. என். ஜானகி கதாநாயகியாக நடித்தார். 

அவர் எம்.ஜி.ஆரின் முதல் மனைவியான தங்கமணி சாயலில் இருந்தார். இதனால் ஜானகியின் மீது எம்.ஜி.ஆருக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.  (😂😂😂)

அவ்வீர்ப்பு மோகினி படத்தில் சேர்ந்து நடித்தபொழுது இருவரும் நெருங்கிப் பழகினர். 1950 ஆம் ஆண்டில் மருதநாட்டு இளவரசி படத்தில் கதைத் தலைவனாக எம்.ஜி.ஆரும் கதைத்தலைவியாக ஜானகியும் நடிக்கும்பொழுது காதலாக மாறியது.

அக்காலகட்டத்தில் எம்.ஜி.ஆரால் ஜானகிக்கு எழுதப்பட்ட காதல் கடிதங்கள் ஜானகியின் முதற்கணவரான கணபதி பட் கைகளில் கிடைத்தன.

கணபதி பட்டிற்கும் ஜானகிக்கும் இடையில் சண்டை முற்றியது. ஜானகி நள்ளிரவொன்றில் தன் மகனுடன் தனது வீட்டைவிட்டு வெளியேறி, அப்பொழுது லாயிட்ஸ் சாலையில் (தற்பொழுது அவ்வை சண்முகம் சாலை) குடியிருந்த எம்.ஜி.ஆரின் வீட்டிற்கு அடைக்கலம் தேடிவந்தார்.

எம்.ஜி.ஆர் அவரைத் தனது வீட்டிற்கு எதிரே இருக்கும் தெருவில் ஒரு வீட்டில் குடிவைத்தார்.

கேரளாவில் ஒரு கோவிலில் சில நண்பர்கள் முன்னிலையில் எம்.ஜி.ஆரும் ஜானகியும் மாலை மாற்றிக் கொண்டனர். ஜானகிக்கு மகனான அப்பு என்ற சுரேந்திரனை எம்.ஜி.ஆர் தன் வளர்ப்பு மகனாக ஏற்றுக்கொண்டார்.

இத்திருமணத்தை எம்.ஜி.ஆரின் அண்ணனும் நடிகருமான எம்.ஜி. சக்ரபாணியும், குடும்ப நண்பரும் நடிகருமான சி. டி. இராஜகாந்தமும் ஏற்க மறுத்தனர்.

எனினும் எம்.ஜி.ஆரின் இரண்டாம் மனைவி சதானந்தவதி உயிரோடு இருந்ததால் தம் திருமணத்தைப் பதிவுசெய்து கொள்ளாமலேயே எம்.ஜி.ஆரும் ஜானகியும் உடனுறைந்தனர் (Lived Together).

12 ஆண்டுகள் கழித்து 1962 பிப்ரவரி 25 ஆம் நாள் சதானந்தவதி மறைந்த பின்னர் சூன் 14ஆம் நாள் எம்.ஜி.ஆரும் ஜானகியும் சட்டப்படி தம் திருமணத்தைப் பதிவு செய்துகொண்டனர். இருவரும் லாயிட்சு சாலை வீட்டிலிருந்து வெளியேறி இராமாவரம் தோட்டத்திற்குச் சென்று குடியேறினர்.

மற்றபடி எம் ஜி ஆருக்கும் நடிகைகளான ஜெயலலிதா, மஞ்சுளா, லதாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை.

Saturday, June 13, 2020

கூத்தாடி - M. R. Radha

படித்தது/பகிர்ந்தது

கமலஹாசன் உஞ்சவிருத்தி பற்றி உளறியதை பார்த்ததும் நடிகர்கள் என்பவர்களை பற்றி அன்று M.R. ராதா சொல்லியது நினைவுக்கு வருகிறது

."என்னடா நடிகன், கலைஞன்னு நமக்கு பெயரு? ஆளாளுக்கு ஒரு பெயர் வச்சிக்கிறானுக‌. ஆனா அன்னைக்கு ஜனங்க வச்ச பேரு என்ன தெரியுமா? கூத்தாடி!!

 ஜனங்கஒழுங்கா உழைக்க போவான். காடு, கரை, வயல்னு உழைப்பான். கூத்தாடி பயலுக என்ன செய்வான் தெரியுமா? வீடு வீடா பிச்சை வாங்க போவான். ஆத்தா கூத்தாடி வந்திருக்கோம், அரிசி கம்பு இருந்தா போடுங்க தாயின்னு பிச்சை எடுப்பான். அது தான் அவனுக்கு சாப்பாடு. ராத்திரி உழைச்ச மக்கள் எல்லாம் வீடு திரும்பி
சாப்பிட்டு விட்டு கொஞ்ச நேரம் கூத்து பார்க்க வருவான், அப்போதான் கூத்தாடி வேலையே ஆரம்பிக்கும்! உழைச்ச மக்களுக்கு கொஞ்சம் உற்சாகம் கொடுக்குற கூத்தாடி பரம்பரை தான் நாங்கெல்லாம். அதனால அந்த கூத்தாடி பசங்கள பெருசா நினைச்சி அவனுகள மதிச்சி நாட்டை கொடுக்காதீங்க. நாசமாக்கிருவானுக!

அவனுகளுக்கு கூத்த தவிர ஒண்ணும் தெரியாது! ஒழுங்கா படிப்போ வேலையோ தொழிலோ இருந்தால் அவன் ஏன் கூத்தாட வாரான்?

 ஒண்ணுக்கும் லாயக்கு இல்லாத பய தான் அங்க வருவான். அடி மட்ட வரிசை அது. அவனை விட கீழான மடையன் ஒரு பயலுமில்ல, தெரிஞ்சிக்க!

அன்னைக்கு நாங்க வீடு வீடா போனோம். அரிசி கம்புகேழ்வரகுன்னு கொடுத்தாங்க. பசியாறினோம்! 

இன்னைக்கு விஞ்ஞானம் உங்கள எங்கள் கொட்டாயி தேடி வந்து காசு கொடுக்க சொல்லுது அவ்வளவு தான்.

 மற்றபடி நாங்க அன்னைக்கும் கூத்தாடி, இன்னைக்கும் கூத்தாடி, என்னைக்கும் கூத்தாடி

இது புரியாம நடிகன் மன்றம், தலைவன், மயிருன்னு கிளம்பாத! 
அசிங்கம் அவமானம்!
கூத்துக்கு அரிசி சோளம் கொடுத்த மாதிரி காசு எறிஞ்சுட்டு போயிட்டே இரு.

 தலைவன அங்க தேடாத! 
அது முட்டாள்தனம். 
அவன ஒரு ஆளுண்ணே நினைக்காத.
காசு கொடுத்தா எப்படி வேணும்னாலும் நடிப்பான் அயோக்கிய பயலுங்க!!” 😃 😃

திராவிடத்தால் குடித்தோம் ஒறவுகளே - உண்மை என்ன?

பெரியாரின் பேரன் நான்
2020-06-15

"திராவிடத்தால் குடித்தோம் ஒறவுகளே" என்று Mark Anthony என்ற "தம்பி" எனக்கு பட்டியலின மக்களின் பதிவில்  பதில் சொல்லியிருந்தார்...

என்னவோ, மது என்பதை திராவிட இயக்கங்கள் தான் தமிழனுக்கு அறிமுகப் படுத்தியது போன்ற தோற்றத்தை அவர் நிரூபிக்க முயன்றார்.....

1500 ஆண்டுகளுக்கு முன்னரே ,  ‘அர்த்த சாஸ்திரம்’  எழுதிய  கவுடில்யன் என்ற ஆ(சி)ரியன் தனது நூலில் "மக்களை எப்படி குடிக்கு அடிமையாக்குவது" தெளிவாக எழுதியுள்ளான்.

தனது  நூலில்  , எப்படி மக்களை குடிக்கு அடிமையாக்குவது, டாஸ்மாக் இல்லாமலேயே எப்படி பணத்தை கல்லாக் கட்டுவது என்பது குறித்து விரிவாகவே பதிவு செய்திருக்கிறான்.

மதுபானங்களை வடித்தெடுத்து அதனை நாடெங்கிலும் வணிகம் செய்யும் உரிமை அரசுக்கு மட்டுமே உண்டு எனவும், 
மது வணிகத்தை அரசுடைமையாக்க வேண்டுமெனவும்,அரசுக்குத் தெரியாமல் மது காய்ச்சி விற்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் எனவும் எழுதியுள்ளான். 

முக்கியமான பகுதி தம்பிகள் கவனமாக பின்வரவும்......

பிற்கால சோழர்களின் காலத்தில்

(அதாவது 
சீமான் தலைமேல்  தூக்கி  வைத்து, காசு,பணம் ,துட்டு,money க்காக கொண்டாடும் அதே சோழப் பேரரசன் தான்)

அவன் ஆட்சிக் காலத்தில் "குடி" கொடி கட்டிப் பறந்ததாகவும் 

"குடி மக்களுக்காகவே"

வசூலிக்கப்பட்ட வரி  ‘ஈழப் பூச்சி வரி’, 

என்று நான் சொல்லவில்லை...
சோழர்களின் ஆட்சி முறை சொல்கிறது.

சோழர்கள் காலத்தில் திராவிடமா ஆட்சிப் பொறுப்பில் இருந்தது ?

ஆங்கிலேயர் ஆட்சியில் ‘அப்காரி’ (Abhari Excise System) சட்டம் 1790-ல் நடைமுறைக்கு வந்தது. இச்சட்டத்தின்படி, மதுவகைகளை தயாரித்தல், விற்பனை செய்தல் என்பதற்கான உரிமைகளை அதிகத் தொகை செலுத்துபவர்களுக்கு வழங்கினர். 

இதனை தொடர்ந்து 1799-ல் ஆங்கிலேய அதிகாரிகள் அனுப்பிய அறிக்கையில், 

தஞ்சை மாவட்டம் முழுவதிலும் 
1793 – 94-ஆம் ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட ‘கள் வரி’யின் மதிப்பு 700 சக்தமாக்கள் 
(அதாவது ரூ.1088) 
என குறிப்பிட்டுள்ளனர். (ஆதாரம்: தஞ்சை மாவட்ட கெசட்). 

1900 களில் திராவிடமா தமிழகத்தை ஆண்டது ?

சரி,.........

தமிழ் வாழ்க !

நானே ஒரிஜினல் அக் மார்க்  தமிழ்ப்பிள்ளை !

என தனக்குத் தானே
Genealogical DNA test எடுத்து 

தமிழ்நாட்டில் தற்போது உள்ள தலைவர்களில் "வந்தேறிகள் " போக மீதமுள்ள ஒரே ஒரு தமிழன் நான் மட்டுமே என்று 

"கமுக்கூட்டில்  கட்டி வந்தவன் போல கையைத் தூக்கி நிற்கும் சீமானே" !

உங்களது பாட்டன்களில் ஒருவனான வள்ளுவன், 2000 ஆண்டுகளுக்கு முன்பே , கள்ளுண்ணாமை என்ற அதிகாரத்தில் பத்து குறள்களை எழுதுகிறார்...

கள் குடிப்பது தமிழரிடம் பரவியிருந்தது, என்பதற்கு அந்த பத்து குறள்கள் ஆதாரமில்லையா ?

அதனால்தான் வள்ளுவர் "மது தீமையானது என மக்களுக்கு அறிவுரை கூறி, கள் குடிக்க மக்களை அனுமதிக்காதே என்று அரசனுக்குக் கட்டளையிட்டார்.....

ஆனால் பார்ப்பன ஆரியக் கூட்டம் , என்ன சொன்னது.....

"அரசன் சாராயம் காய்ச்சவும், சாராயம் விற்கவும் மக்களை அனுமதிக்க வேண்டும். அவற் றைச் செய்கிறவர்களுக்கு வரிவிதிக்க வேண்டும் என்று அர்த்தசாத்திரம் மூலம் கட்டளையிட்டது. அன்றைய "சீமானின் தம்பிகளாக" இருந்த அரசர்கள் - அதை அப்படியே செய்தனர்.

இப்படி வள்ளுவர்....குடிக்காதே தம்பி குடிக்காதே !

என்று தமிழனைப் பார்த்து தொண்டைத் தண்ணி வத்த கூவிய போது திராவிடமா ஆட்சியில் இருந்து ஊத்திக் கொடுத்தது ?

உங்களது "முப்பாட்டிகளில்" ஒருத்தியான ஔவையார் அதியமானைப் பற்றி எப்படி புகழ்ந்து பாடுகிறார் என்று கேளும்...

"சிறிய கட் பெறினே எமக்கீயும் மன்னே
பெரியகடட் பெறினே யாம் பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே"

என புறநானூற்றில் 235 வது பாடலில் புகழ்கிறார்.

பொருள் புரியுதா ?

சிறிதளவு கள் கிடைக்குமானால் அதனை முழுமையாக எனக்கு உண்ணக் கொடுத்துவிடுவான். அது தீர்ந்துபோன பின்னர் 

பெருமளவு கள் கிடைக்குமாயின் வேண்டிய அளவு எனக்குக் கொடுத்து நான் உண்டு பாடக் கேட்டுக்கொண்டே அவனும் பருகுவான். 

கேட்கவே புல்லரிக்குது !
ஔவையார் காலத்து அரசு திராவிட அரசா, அதிபரே ?

அடுத்து அதே ஔவையார் மூவேந்தர்கள் பற்றிப் பாடும் பாடல்...

பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து,         
பாசிழை மகளிர் பொலங் கலத்து ஏந்திய
நார் அரி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து,
இரவலர்க்கு அருங் கலம் அருகாது வீசி,

சேரமான் மாரிவெண்கோவும், 

பாண்டியன்கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும்,

சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும்,

ஒன்னா இருந்து சரக்கடித்தது பற்றி பாடியது.

இன்னொரு தமிழ் மன்னன்,
ஆவூர் மூலங்கிழார்,இவர் 
மல்லி கிழான் காரியாதியைக் காணச் சென்றார். மல்லி கிழான் தந்த கள்ளை, அவ்வூரில் பல அரண்களிலிருந்து ஆடவர் பலரும் குடித்து, களா, துடரி போன்ற பழங்களை உண்பதையும், பின்னர் காட்டாற்று மணற்குன்றின் மீது ஏறி நின்று நாவல் பழங்களைக் கொய்து தின்பதையும், பன்றிக் கறி உண்பதையும் பற்றி பாடியுள்ளார்.
புறநானுறு 177 வது பாடல்.

பரிபாடலில் ஒரு பாடல்....
 
"விரும்பிய ஈரணி மெய் ஈரம் தீர
கரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல் 
பேர் மகிழ் செய்யும் பெரு நறாப் பேணியவே
கூர் நறா ஆர்ந்தவள் கண்"

அதாவது உடலை மூடியிருக்கும் நனைந்த ஆடையை சூடாக்கும் பொருட்டு அவள் கள்ளை மாந்தினாள் that means  சரக்கை  Full ஆ ஏத்திக்  கொண்டாள், அதனால் அவளது நெய்தல் மலர் போன்ற கண்கள் சிவந்தன.... 

ஒரு மகிழ்வுந்தில் அண்ணன் பேட்டி தரும் போது கண்கள் சிவக்க "ஒளறினாரே" அது போல...

இப்படி பதிற்றுப்பத்து, பரிபாடல், குறுந்தொகை என தமிழ் இலக்கியத்தில்
 33 % இட ஒதுக்கீட்டையும் 
தாண்டி பெண்களும் மது மாந்திய போது ஆட்சியில் இருந்தது திராவிட அரசல்ல என்பதை
சீமானின் ஒறவுகள் "நுட்பமாக புரிந்து கொள்ள வேணும்"

இதுக்கெல்லாம் வரலாற்று ஆதாரம் இருக்கா? என்று கேட்டு "நெத்திக்கண்ணை தொறந்துகிட்டு" ஒரு நக்குற குரூப்....sorry "நக்கீர குரூப்" கெளம்பி வரும், அவர்களுக்காக...

யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல்

பொன் செய் புனை கலத்து ஏந்தி, நாளும்

ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ் சிறந்து,                              

ஆங்கு இனிது ஒழுகுமதி! ஓங்கு வாள் மாற!
 
என்ற புலவர் நக்கீரரின் பாடல் இன்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கையாளும் பாடலாக உள்ளது.

சீமாண்டியார் தும்பிகளே !

இருக்கீங்களா ?........

இப்படி சங்கிகளும், பாப்பார வேதங்களும் தூக்கிச் சுமக்கும் கடவுளர்கள் குடித்து "ரிப்பன் கட் பண்ணி" தொடங்கி வைத்ததை, வேத காலம் மக்களும், சங்க கால "தமிழ்ப் பிள்ளைகளும்"தொடர,

ஓகோன்னு குடிச்சு கும்மாளம் போட்டுட்டு இங்க வந்து "திராவிடத்தால் தான் குடித்தோம்னு கொம்பு சுத்துறீங்களே "!

வெக்கமாயில்ல !

சரி... சமகால அரசியலுக்கு வருவோம்.....

பெரியார் தான் இந்தியாவிலேயே முதன்முதலாக 1921 நவம்பரில் ஈரோட்டில் கள்ளுக்கடை மறியலை ,தம் மனைவி, தங்கை, உறவினர், நண்பர் களைக் கொண்டு நடத்தினார்.

15.11.1921இல் தண்டனை பெற்றார். அது இந்தியா முழுவதிலும் எதிரொளித்தது. சேலத்தில் தனக்குச் சொந்தமாக இருந்த தென்னை மரங்களிலிருந்து கள் இறக்குவதை முதலில் நிறுத்தினார். பிறகு தென்னை மரங்களையே வெட்டி னார். அப்போது  பெரியார் 
"திராவிட இயக்கத்தில்" இல்லீங்கோ !முதல்நிலை காங்கிரசுக்காரர், அப்படி காங்கிரஸில் இருந்தாலும் "எண்ணத்திலும் செயலிலும் தீவிர திராவிட அரக்கனுங்கோ"........

"கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு வளையத்துக்குள் கொளுத்தப்படாத கற்பூரமாகத் தமிழ்நாடு
எத்தனை நாளைக்குத்தான் தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்?"....

'எனவே மதுவிலக்கை ரத்து செய்கிறேன்" என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அன்றைய முதலமைச்சர் கலைஞர் விளக்கமளித்தார்.

இப்படியொரு விளக்கத்தை ஏன் தரவேண்டும் ?

ஆமா,ஆமா....தமிழ்நாட்டுல மதுவைக் கொண்டு வந்தது கருணாநிதிதானே !

ரொம்ப சந்தோசப்பட வேணாம்....

1971-ம் ஆண்டில் மதுவிலக்கு ரத்து செய்யபட்டதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே குடி, திருட்டுத்தனமாகப் பெருகிவிட்டது. 

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் , கள்ளச்சாராயம் காய்ச்சி, சிக்கிய  "தம்பிகள்" விவரம்.......

1961 - 1,12,889 பேர்

1962 - 1,29,977 பேர்

1963 - 1,23,006 பேர்

1964 - 1,37,714 பேர்

1965 - 1,65,052 பேர்

1966 - 1,89,548 பேர்

1967 - 1,90,713 பேர்

1968 - 2,53,607 பேர்

1969 - 3,06,555 பேர்

1970 - 3,72,472 பேர்

இப்படி ஒரு கணக்கை அன்று வெளியிட்டவர் யார் தெரியுமா ?

MGR.!

'ஆனந்த விகடனில்’ அவர் எழுதி வந்த 'நான் ஏன் பிறந்தேன்?’ தொடரில்தான் இந்த ஆதாரங்களை அள்ளி வீசினார்...

ஏம்பா,  1960 - 1070 திராவிட ஆட்சியா ? 

குடி இருந்தது; குடிகாரர்களும் இருந்தார்கள். கள்ளச் சாராயமாக இருந்ததை நல்ல சாராயமாக மாற்றி, அதில் இருந்தும் அரசுக்கு நிதி திரட்டலாம் என்ற பாதையைக் கண்டுபிடித்த பாவச் செயலை கலைஞர் செய்தார் என்று வேண்டுமானால் சொல்லலாம்......

தொடங்கிய அவரே அதை முடித்தும் வைத்தார்.

மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதி இழப்பீடு வழங்குவோம்’ என அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்திருந்தார்.

'தமிழ்நாட்டுக்கு நிதி உதவி செய்யுங்கள்’ என கலைஞர் கேட்டார். 'இது மதுவிலக்கைப் புதிதாக அமுல்படுத்தும் மாநிலங்களுக்குத்தான் தரப்படும்’ என "அந்தர் பல்டி"  அடித்தார் இந்திரா !

"காங்கிரஸை" வீழ்த்திவிட்டு பதவிக்கு வந்த அந்த "தன்மான அரக்கன்" கலைஞருக்கு, நிதி கொடுக்க மறுக்கும் தந்திரமாக அந்தக் காரணத்தை இந்திரா கண்டுபிடித்தார். 

கடுமையான நிதி நெருக்கடியில் தமிழக அரசு தள்ளாடிய போது .... வேறு வழி தெரியாமல் தவித்தபோது....

ராஜாஜி கலைஞரிடம்......"மதுவிலக்கை 1937-ம் ஆண்டில் நான் அமல்படுத்தியபோது, நிதி நெருக்கடியைச் சமாளிக்கவே விற்பனை வரியை அமல்படுத்தினேன். அப்படி புது வழி இருக்கிறதா எனப் பாருங்கள்’ என்றார்.

அதற்கு கலைஞரோ "ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்கவிடுவதை விட, மதுவிலக்கை ரத்து செய்வது மேல், நிதிநிலை சீரானதும் மீண்டும் அமுல்படுத்துவோம்"..........

எனக்கூறி 30.8.1971 ல் மதுவிலக்கை ரத்து செய்தார்....

சொன்னபடியே 
1973ல் கள்ளுக்கடைகளையும், 1974ல் சாராயக்கடைகளும் மூடி...
1975 முதல் தமிழ்நாட்டில் மதுவிலக்கை கலைஞர் அமுல்படுத்தினார்.

அதன் பிறகு MGR ம் JJ யும் "ஜே ஜே" என சாராயக்கொடி நாட்டியதை நாடறியும்.

என் இறுதி மூச்சு இருக்கும் வரை மதுவிலக்குக் கொள்கையை நான் நிறைவேற்றுவேன் என என்னைப் பெற்ற அன்னை மீது உறுதி எடுத்துக் கொள்கிறேன்’ (2.12.1979 'அண்ணா’ நாளிதழ்) எனச் சொன்ன அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் இரண்டு ஆண்டுகள்கூட அதில் உறுதியாக இருக்க முடியவில்லை......

TASMAC க்கில்  அடிமை அதிமுக அரசு PASS MARK வாங்கி வரும் நிலையில் .....

இந்த வரலாற்றையெல்லாம் வசதியாக மறைத்துவிட்டு

 "பெரியாரையும் ,அண்ணாவையும், கலைஞரையும்" 

நோக்கி மட்டுமே உங்களது விரல்களும் நாவும் நீளுமென்றால்.....

அவற்றை வெட்டியெறிய எங்களுக்கு "திராவிடம்" கற்றுத் தந்துள்ளது, என்பதையும் மனதில் இறுத்துங்கள்.

இனிமேலும் யாராச்சும் வந்து
"திராவிடத்தால குடித்தோம், கெட்டோம்னு பதிவத் தூக்கீட்டு வருவீங்க"......

வாங்க....காத்திருக்கிறேன்....

பெரியாரின் பேரன் நான்.

ஆதார நூல்கள் :
"மதுவிலக்கு நேற்று, இன்று, நாளை" ஆசிரியர் கோ.செங்குட்டுவன்
கிழக்கு பதிப்பகம்.

"மதுவிலக்கு" :சின்னக்குத்தூசி
பதிப்பகம்:நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்.

Kautilya Arthashastra, R. P. Kangle, tr. 3 vols. Laurier Books, Motilal, New Delhi (1997) ISBN 81-208-0042-7

Kautilya: The Arthashastra . L.N. Rangarajan (Ed., Rearranger & Translator), 1992, Penguin Classics, India. ஐஎஸ்பிஎன் 0-385-49062-3'

Ajnapatra' by Ramchandra Pant AmatyaBoesche, Roger (2002). 

The First Great Political Realist: Kautilya and His Arthashastra. Lanham: Lexington Books......

திராவிட இயக்கம் தலித்களுக்கு செய்ததென்ன?

தேவேந்திரர் குரல் தேசம்... என்ற குழுவில் பெரியாரைப் பற்றி இழிவாகவும் பட்டியல் இன மக்களுக்கு திராவிட கட்சிகள் எதுவுமே செய்யவில்லையென்றும்...

"வாட்ஸ் ஆப் தகவல்களே வரலாறு" என்று எண்ணிக் கொண்டிருக்கும் சில அதிமேதாவிகள் புலம்பிக்கொண்டிருந்தனர்.

நான் மிகவும் நாகரீகமாக எதிர்க் கருத்தைப் பதிவிட்டேன்...

அதற்கு Valuthi Venthan ,  Sandhiyar Sandy ,  என்ற தோழர்கள் பதில்வினையாற்றினர்.

அவர்களுக்கு அங்கேயே பதில் சொல்வதைவிட தனிப்பதிவில் பதில் கூறுவதே சிறப்பாக இருக்கும் என்பதால் இப்பதிவு.....

அய்யா, Ariyalur Parobakari & விஸ்வநாதன் விஸ்வநாதன், பெரியார் எங்களுக்கு "ஊ...ப" கொடுக்கவில்லை...
அவர் ஒருவர் மட்டும் இல்லையென்றால் நீங்கள் தான் இன்னமும் "அவாளை"  ஊம்....க் கொண்டு இருந்திருப்பீர்கள்.

பட்டியலின மக்களுக்கு அப்படி என்னதான் செய்துவிட்டன திராவிட இயக்கங்கள் ? 

 “பள்ளர், பறையர் என்று இழிவாக உள்ள பெயரை மாற்றி ஆதி திராவிடர் என்ற பொதுப் பெயர் மாற்றம் செய்தது நீதிக்கட்சியின் ஆட்சி.
எண் 217 சட்டம் (பொது) நாள் 25.03.1922.

ஆதி திராவிடர் பிள்ளைகளைப் பொது பள்ளிகளில் கட்டாயமாகச் சேர்க்க அரசு ஆணை. G.O.No.87 நாள் 6.1.1923.

அரசு மானியம் பெறும் பள்ளிகளில் ஆதி திராவிடர் பிள்ளைகளைச் சேர்க்க மறுத்தால் அரசு மானியம் இரத்து செய்யப்படும். அரசு ஆணை G.O.No.88. நாள் 16.1.1923.

திருச்சி மாவட்ட நிர்வாகம் ஆதி திராவிடர் பிள்ளைகளை தனி இடத்தில் தங்கிப் படிக்க அனுமதி கோரியதை அரசு ஏற்க மறுத்து, ஆதி திராவிடப் பிள்ளைகளையும், மற்ற சாதிப் பிள்ளைகளையும் ஒன்றாகத்தான் படிக்க வைக்க வேண்டும் என்று ஆணை. G.O.No.2015 dated 11.2.1924.

இந்தியாவிலேயே முதன் முதலாக ஆதி திராவிட மாணவர்கள் இலவசமாகத் தங்கி படிக்க, ஆதி திராவிடர் மாணவர் விடுதி திறக்கப்பட்டது. G.O.No.2563 dated 24.10.1923.

1931க்குள் ஆதி திராவிட மாணவர்களுக்கு மூன்று விடுதிகள் ஏற்படுத்தப்பட்டன. (T.G.Boag ICS. Madras Presidency 1881 - 1931 பக்கம் 132).

ஆதி திராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. G.O. 1243.நாள்  5.7.1922.

ஆதி திராவிட மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதத் தேர்வுக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. G.O. 1241 சட்டம் (கல்வி) நாள் 17.10.1922.

ஆதி திராவிட வகுப்பு மாணவர்களுக்கு நான்காம் வகுப்பு முதல் கல்வி உதவித்தொகை வழங்கிட அரசாணைப் பிறப்பிக்கப்பட்டது. G.O. 1568 சட்டம், 
நாள் 06.11.1923

ஆதி திராவிட மாணவர்களுக்குச் சில பள்ளிகளில் தனி வகுப்பறைகள் இருந்ததை அரசு கண்டித்தது. ஆதி திராவிட மாணவர்களை அதிக எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளும் கல்வி நிறுவனங்களுக்கு அதிக அளவில் அரசின் பண உதவி அளிக்கப்படும் என்று அரசாணைப் பிறக்கப்பட்டது.  G.O.205 நாள் 11.02.1924.

மருத்துவக் கல்லூரியில் பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பின் தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. G.O. 866 (பொது) சுகாதாரம், நாள் 17.06.1922.

இந்தியாவில் இருந்த வேறு எந்த மாகாணத்திலும் இல்லாத அளவிற்கு ஆதி திராவிடர்களுக்குப் பஞ்சமி நிலத்தைப் பிரித்து வழங்கியது. நீதிக்கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை, 1920-21 ஆதி திராவிடர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பஞ்சமி நிலம் 19,251 ஏக்கர் மட்டுமே. ஆனால் நீதிக் கட்சி ஆட்சியில் 1931 வரை பிரித்துக் கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலம் 3,42,611 ஏக்கர் ஆகும். (சென்னை மாகாண அரசின் புள்ளிவிவர அதிகாரி எழுதிய Madras Presidency 1881 - 1931 என்ற நூல் பக்கம் 132.) மேலும் 1935 மார்ச் 31 வரை ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலத்தின் அளவு 4, 40, 000 ஏக்கராக உயர்ந்துள்ளதை ஜஸ்டிஸ் ஏடு, 19.7.1935 இல் சுட்டிக் காட்டியுள்ளது.

கல்வி, சுகாதாரம், பொதுப்பணி போன்ற முக்கியப் பணிகளை அப்போது உள்ளாட்சி நிர்வாகங்களே கவனித்து வந்தன. அந்த நிறுவனங்களில் ஆதி திராவிடர் ஒருவரை அரசு நியமனம் மூலம் அமர்த்தி அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களித்தது நீதிக் கட்சியே. சென்னை மாகாணத்தில் உள்ளாட்சியில் ஆதி திராவிடர் பிரதிநிதித்துவம் பெற்றிருந்த விவரம்:

1920-21 மொத்த எண்ணிக்கை ஆதி திராவிடர் நியமனம் பெற்றவை மாவட்டக்கழகங்கள் (District Boards) 17 வட்டக்கழகங்கள் (Taluk Boards) 66 நகராட்சிகள் (Municipalities) 46 என்க.

ஆதி திராவிடர் பொது இடங்களில் புழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால், அவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று இரட்டை மலை சீனிவாசன் 22.08.1924 இல் சென்னை சட்ட மன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தையும், வீரய்யன் 24.02.1925 இல் கொண்டு வந்த தீர்மானத்தையும் ஏற்றுக் கொண்டு சத்திரம், சாவடி, அரசு அலுவலங்கள், பொதுச் சாலைகள், பொதுக் கிணறுகள், போன்ற பொதுவான இடங்களில் ஆதி திராவிடர்கள் வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களுக்கு ரூ 100 அபராதம் விதிக்கப்படும் என்று அரசாணையில் (Gazette Notification 08.04.1925 Part IV) தெரிவிக்கப்பட்டது. இந்த அரசாணையைத் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய மொழிகளில் வெளியிட்டதோடு தண்டோரா மூலம் சென்னை மாகாணம் முழுவதும் பொது மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆதி திராவிடர்களுக்கு இருந்த சமூகத் தடைகளை நீக்க வழிவகை செய்தது நீதிக் கட்சியே.

1935 அரசியல் சட்டம் நடப்புக்கு வரும்வரை தாழ்த்தப்பட்டவர் நியமனம் மூலம் மட்டுமே பதவி வகித்தனர். அப்போது டெல்லியில் இருந்த சட்டசபைக்குப் பெயர் (MLA) Member of Legislative Assembly 1928இல் சென்னை சட்டமன்றம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி சட்டசபைக்கு அனுப்பப்பட்ட முதல் தாழ்த்தப்பட்ட உறுப்பினர் எம்.சி.ராஜாதான். நீதிக் கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் சுப்பராயன் ஆட்சியில்தான் அது நிறைவேறியது. அவர் டெல்லி சென்றதால்தான் அகில இந்திய அளவில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை ஒருங்கிணைக்க முயற்சி செய்ய முடிந்தது.

1921 - 22 இல் வகுப்புரிமை ஆணைகள் பிறப்பிக்கப்பட்ட போதிலும்,  பார்ப்பனர்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து அதை நடைமுறைப் படுத்தாவண்ணம் இடையூறு செய்து வந்தனர். 1924 இல் அரசுப் பணிகளில் வேலைக்கு ஊழியர்களை அமர்த்துவதற்காக ஒரு ஆணையம் உருவாக்கப்பட்டது ‘Staff Selection Board ‘என்று அதற்குப் பெயர் அது தான் இப்போது T.N.P.S.C ஆக மாறியுள்ளது; 1925 முதல் அரசாங்க ஆண்டறிக்கைகளில் வகுப்பு வாரியாக அரசு ஊழியர்கள் விவரம் காலாண்டுதோறும் வெளியிடப்பட்டு வந்தது.

பனகல் அரசர் ஆட்சிக்காலத்தில் 1927-1926க்குள் ஆதி திராவிடர்கள் காவலர் பணியில் 382 பேரும், தலைமைக் காவலர் பணியில் 20 பேரும், துணை ஆய்வாளர் பணியில் ஒருவரும் அமர்த்தப்பட்டனர். 1935இல் துணைக் கண் காணிப்பாளர் வரை ஆதி திராவிடர் பதவி உயர்வு பெற்றனர்; 1927 இல் தான் ஆதி திராவிடர் ஒருவர் இன்ஸ்பெக்டராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்; (‘Staff Selection Board அறிக்கை பக் 120.) அந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஆதி திராவிடர்களைக் காவல் துறையில் காவலர்களாக கூடச் சேர்த்துக் கொண்டதில்லை என்று எம்.சி ராசா 1928 இல் மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் கூறியுள்ளார். (எம்.சி. ராசா வாழ்க்கை வரலாறும் எழுத்தும் பேச்சும் ஜெ. சிவசண்முகம் பிள்ளை, பக் 42).....

இவ்வளவு உரிமைகளையும் திராவிட இயக்கங்கள் வாங்கித் தரவில்லையென்றால் என்ன செய்துகொண்டு இருப்பீர்கள்.......என்பதை உங்கள் முடிவிற்கே விடுகிறேன்.

பெரியார் வழியில் ஆட்சி செய்த கலைஞரும், தற்போதைய திமுக வும் செய்த சாதனைகளை பதிவிட்டால் பதிவு பெரிதாகி விடும்.....எனவே அதை தனிப் பதிவாக இடுகிறேன்......

அடக்கம் உடையார் அறிவிலர்என் றெண்ணிக்

கடக்கக் கருதவும் வேண்டா – மடைத்தலையில்

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்

வாடி இருக்குமாம் கொக்கு.....

இந்தப் பாடலின் பொருள் தெரிந்து கொண்டு நாவடக்கத்துடன் பதில் தரவேண்டும்......

என்ற எச்சரிக்கை விடும்.......

பெரியாரின் பேரன் நான்.

Sunday, June 7, 2020

தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு பெறும் இந்து ஜாதிகள்:367

இட ஒதுக்கீடு ஜாதியை வளர்கிறதா?பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன்.

இட ஒதுக்கீடு சுருக்கம்:

தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு பெறும் இந்து ஜாதிகள்:367

BC-139, MBC-48
De-notified - 68
SC-76, ST-36 
BC Muslim - 7

சதவிகிதம்:

FC(EWS)10%
BC Hindu:26.5%
BC Muslim:3.5%
MBC:20%
SC:18%(Total)
SC:15%
SC(Arunthathiyar):3%  
ST:1%

Saturday, May 23, 2020

ஒருத்தர வேலைக்கு எடுக்கறது… கல்யாணம் பண்ணிக்கற மாதிரி.

© செல்வேந்திரன்
2020-05-23

அப்பா சொன்னார்: 

"டேய் ஒருத்தர வேலைக்கு எடுக்கறது… கல்யாணம் பண்ணிக்கற மாதிரி. எடுக்கதுக்கு முன்னாடி நூறு வாட்டி யோசி. ஆயிரம் கேள்வி கேளு. பத்து எடத்துல விசாரி. ஆனா ஒருதடவ வேலைக்கின்னு எடுத்துட்டா, அவனா போற வரைக்கும் வச்சி காப்பாத்து"

அப்பா மரணிக்கும் வரை எங்கள் தீப்பெட்டி கம்பெனி ஐம்பதாண்டுகள் நீடித்தது. கடைசி ஊழியரும் கிளம்பிய பின்னர்தான் லைஸென்ஸை சரண்டர் செய்தோம். கணேசன் மேச்சஸின் மேனாள் ஊழியர்களுள் சிலர் ஃபேஸ்புக்கில் என்னைப் பின் தொடர்கிறார்கள். அவர்கள் இதை உறுதி செய்வார்கள்.

**அப்படியானால் எப்படியாப்பட்டவனையும் கடைசி வரை கட்டி மேய்க்க வேண்டுமா?**

மூன்று விதிவிலக்குகள். 

1) பணம் கையாடல், 
2) பாலியல் தொல்லை, 
3) நிறுவனத்தின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்பாடுகள். 

தீர விசாரித்து குற்றம் நிரூபணமானால், கைச்செலவுக்குப் பணம் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடு. 

**சரி. பெர்பார்மன்ஸ்?** 

ஒருவன் ஒரு வேலையை செய்யவில்லை யென்றால், அதற்கு இரண்டே காரணங்கள்தான். 

1) அவனுக்கு வேலை செய்யத் தெரியவில்லை – உனது தேர்வு தவறானது. 

2) அவன் வேலை செய்ய விரும்பவில்லை –  உனது தேர்வு தவறானது. 

ஆராயாமல் நீ செய்த தவறுக்கு அவன் எப்படி பொறுப்பாவான். வச்சு வாழு. 

செயல்திறனற்ற மனிதன் என்று ஒருவன் உலகிலேயே இல்லை. ஒருவனின் பலத்தை வைத்து விளையாடு. பலவீனத்தைச் சுட்டி சுட்டி அடிக்காதே. அவனுக்கு என்ன வருமோ எதைச் செய்ய விரும்புகிறானோ அதைச் செய்யச் சொல். 

அப்படியொரு பணி உன் கம்பெனியில் இல்லை என்றால் அவனாக விலகிடும் வரை சம்பளம் கொடு. அது உன் தலையெழுத்து. 

**உள்ளே வரும்போது எல்லோரும் உலக உத்தமர்கள் போலத்தானே வருகிறார்கள். பிறகுதானே சுயரூபம் தெரிகிறது?** 

‘தம்பி.. ஒருத்தனின் மனப்போக்கு (ஆட்யூட்யூட்) மாறிப் போய்விடுவதற்கு அவன் மட்டும்தான் காரணமாக இருக்கமுடியுமா?’ 

என்ன விவாதித்தாலும் ஒரு ஊழியனை வீட்டுக்கு அனுப்புவதை அவரிடம் வாதாடி வெல்ல முடியாது. குருணையை குத்தித் தின்று வளர்ந்தவர். நெஞ்சறிந்து பிறிதொருவன் பசித்திருக்கப் பொறுக்காதவர். 

"ஒரு சமூகத்தில் உபரி என்பது குழந்தைகளுக்கும் முதியவர்களுக்குமானது" - எனச் சொன்ன இயேசுவை இதயத்தின் ஒரு பக்கத்திலும், "பழவர்க்கங்கள் நோயாளிகளுக்குரியவை பணக்காரர்கள் அதை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்" - எனச் சொன்ன காந்தியை மறுபக்கத்திலும் சுமந்தவர். லாபம் என்பதை ஒருவித பாபம் என்று கருதிய லட்சியவாத தலைமுறையைச் சேர்ந்தவர்.

---

பொருளாதார மந்தநிலை காலகட்டத்தில் வாகன உற்பத்தியாளர்களும், மென்பொருள் நிறுவனங்களும் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியதை அவரால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. 

"செல்வா.. ஒரு மாசம் வருமானம் இல்லைன்னா கூட சம்பளம் போட முடியாதுன்னா இவன் நடத்துனதுக்குப் பேரு தொழிலா… (இதற்கு மேல் அவர் சொல்லும் வசவுச் சொல்லை எழுத எனக்கே கூசுகிறது)" 

---

தனது தயாரிப்பை, சந்தை மதிப்பை, வாடிக்கையாளர்களை, முதலீட்டாளர்களை யெல்லாம் விட தன் ஊழியர்களையே பெரும்சொத்தாய் கருதுகிறவனே செழிப்பான். 

முன் சொன்னவை புறக்காரணிகளால் எளிதில் வீழ்ந்துவிடக் கூடியவை. திறமை மிக்க ஊழியர்களைக் கொண்டு மீண்டும் சாம்ராஜ்யங்களைக் கட்டி எழுப்பிவிட முடியும். இந்த ஆண்டில் ஏற்பட்ட நட்டத்தை வரும் ஆண்டில் சரிக்கட்டி விட முடியும். ஆயிரம் முன்னுதாரணங்களைத் தரமுடியும். 

உடனடியாக ஒன்றைச் சொல்வதானால், நாடடங்கினால் (lockdown) உலகம் முழுக்க தீப்பெட்டிகளுக்குத் தட்டுப்பாடு உருவானது. வட இந்தியாவில் ஐம்பது பைசா தீப்பெட்டி மூன்று ரூபாய்க்கு விற்றது. கோவில்பட்டி சிவகாசி பகுதிகளில் பல்லாண்டுகளாக தேங்கிய பண்டல்கள் அத்தனையும் காசானது. புதுரத்தம் ஏற்றிய உடல் போல ஆகிவிட்டது தீப்பெட்டித் தொழில். 

கையுறைகள், பிபி கிட்டுகள், முக கவசங்கள் இன்னபிற மருத்துவ ஆடைகளுக்கான ஆர்டர்கள் உலகெங்கிலுமிருந்து வந்து குவிய திருப்பூர் துள்ளாட்டம் போடுகிறது. 

ஓசூரின் பார்மா நிறுவனங்கள் இரட்டைச்சம்பளத்தில் ராப்பகலாய் காய்ச்சல் மாத்திரை அடித்துக் கொண்டிருக்கின்றன. 

**அனைத்துத் தொழிலுக்கும் ஏற்றமும் உண்டு. இறக்கமும் உண்டு. லாபத்தைச் சுகிப்பேன். நட்டம் வரும் நிழல் தெரிந்தாலும் அடுத்தவன் சோற்றில் மண்ணள்ளிப் போடுவேன் என்பவர்கள் பொருளாதார மந்தநிலை இல்லையென்றாலும் அழிவார்கள்.**

இன்று ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் துறைகளுள் பெரும்பாலானவற்றின் அந்திமம் பத்தாண்டுகளுக்கு முன்னரே தெரிந்துவிட்டது. ஆயினும் ஆட்களை வேலைக்கு எடுப்பதையோ, அநியாயச் சம்பளம் கொடுப்பதையோ, தொழிலை விரிவுபடுத்துவதையோ, ஆடம்பரத்தைக் குறைப்பதிலோ இந்நிறுவனங்கள் அக்கறை காட்டவில்லை. 

கடன் வாங்கி கடன் வாங்கி முக்குளித்தார்கள். நாங்கள் விற்பனையில் முதலிடம் என்றார்கள். நல்ல இலாபத்தில் இயங்குகிறோம் என்று பொய்ச்சித்திரம் காட்டினார்கள். முதலீட்டாளர்களின் மனமகிழ் மன்றம் போல கம்பெனியை நடத்தினார்கள். இயக்குனர்களின் பட்டியல் நீள்வதும் அவர்களது சம்பளம்  வீங்குவதும் நிகழ்ந்தது. இந்தக் குற்றங்களுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளாதவர்கள் அதன் தண்டனையை ஊழியர்களுக்கு வழங்குவது ஏற்புடையதல்ல.

**முதலீடு செய்தவனின் நோக்கம் இலாபம் மட்டுமே. இங்கே அறவுணர்ச்சி பஜனைகள் செல்லுபடியாகாது என்பவர்களின் குரல் கேட்கிறது.** 

ஆம், திடீர் நட்டத்தின் முழுச் சுமையையும் முதலாளிகளே ஏற்கவேண்டுமென்பது ஏற்புடையதல்ல. 

* ஊழியர்கள் தங்கள் சம்பளத்தின் ஒருபாதியை விட்டுக்கொடுக்கலாம். 

* சலுகைகளின் சில பகுதிகளை விட்டுக்கொடுக்கலாம். 

* வேலை நேரத்தை அதிகரிக்கலாம். செலவுகளைக் குறைக்கலாம்.

* குடும்பத்திற்கு வேறு வருமானம் உண்டு, சம்பளம் இல்லாமலும் சமாளிக்க முடியும் என்பவர்கள் தங்களது சம்பளத்தை நிலைமை சரியானதும் வாங்கிக் கொள்கிறேன் என பொருத்துக் கொள்ளலாம். 

* அப்படி விட்டுக் கொடுப்பவர்களுக்கு பிற்பாடு சிறிது வட்டியோ / இலாபமோ சேர்த்து தொகையை நிறுவனங்கள் கொடுக்கலாம். 

* வங்கிகளிடமோ அல்லது முதலீட்டாளர்களிடமோதான் ஒரு நிறுவனம் கடன் வாங்க வேண்டுமென்பதில்லை. 

* இதெல்லாவற்றையும் தாண்டியும் நிறுவனம் மூழ்கும் நிலைமை வந்தால் மனமுவந்து வெளியேற முன்வருபவர்களுக்கு ஊக்கத் தொகை அறிவிக்கலாம். 

* வெளியேறிய பின்னரும் நிறுவனத்திற்கான சேவைகளை அளிக்கும் வெண்டாராக சிலருக்கு வாய்ப்பளிக்கலாம். 

இவையனைத்தும் வெளிப்படைத் தன்மையான உரையாடல்களின் வழியே மட்டுமே சாத்தியம். 

--- 

இந்த இடத்தில் பொருத்தப்பாடு கருதி ஒன்றைச் சொல்கிறேன். 

அக்காலத்தில், நக்கீரன் இதழ் நெருக்கடியை சந்திக்கும்போது சில முகவர்கள் அடுத்தடுத்த மாதங்களுக்குரிய தொகையை கூட முன்கூட்டியே செலுத்தி விடுவார்கள். போலவே முகவர்கள் எதிர்பாராத இழப்பைச் சந்தித்து நெருக்கடியில் இருக்கும்போது நக்கீரன் இதழ் அவர்களைப் பில் பணம் கேட்டு தொந்தரவு செய்ய மாட்டார்கள். நக்கீரன் கோபால் கடைப்பிடித்த விழுமியம் அது. 

தொழில் என்பது ஒருவரையொருவர் கைத்தாங்கி விடுவது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக சமணர்களும் பீதர்களும்  யவனர்களும் காப்பிரியர்களும் கடைப்பிடித்த வணிக அறம் அதுதான். தொழிலிலும் நிர்வாக அமைப்பிலும் மேலாண்மையிலும் அமெரிக்காவின் கோமணத்தையே நாமும் கட்டிக்கொண்டு ஆடியதன் காட்சிகள்தான் நாம் இன்று காண்பது. ஐஐஎம் கக்கிய இத்தனை ஜெனரல் மானேஜர்களாளும், துணைத்தலைவர்களாளும், சி.இ.ஓக்களாலும், கன்சல்டுகளாலும் ஒரு இரண்டு மாதங்கள் தாக்குப்பிடிக்க முடியாதென்றால் இந்த ஆர்கனோகிராமின் பொருள் என்ன? 

---

கூட்டம் கூட்டமாய் தங்கள் ஊருக்குக் கிளம்பும் வட இந்தியத் தொழிலாளர்களுக்குப் பிஸ்கட்டும் நீரும் தந்து ரயிலில் அனுப்புகையில் ஒன்றைக் கேட்டேன்: 

**‘உங்கள் ஊரில் பாலாறும் தேனாறுமா ஓடுகிறது.. அங்கு சென்று என்ன செய்வீர்கள்?’**

‘ஐயா எங்கள் ஊரில் பிழைக்க வழியில்லாமல்தான் இங்கு வந்தோம். சம்பளத்தில் ஏற்றத்தாழ்வு, வேலைநேரத்தில் ஏற்றத்தாழ்வு, தங்குமிடம் தகரக்கொட்டாய், உண்ணும் உணவு பன்றிக்குரியது எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டோம். நன்றியோடுதான் உழைத்தோம். 

வீடடங்கால் (lockdown) நாங்கள் பசித்திருந்தோம். உணவுக்காக தட்டியபோது முதலாளிகளின் கதவுகள் திறக்கப்படவே இல்லை. அவர்கள் காதில் பஞ்சை அடைத்துக் கொண்டு பஞ்சணையில் புரண்டு படுத்துக்கொண்டார்கள்.

பசியென கதறும் ஒருவனைக் கடந்துபோக முடியுமென்றால், கண்டு கொள்ளாமலிருக்க முடியுமென்றால் அங்கே நீதியுணர்ச்சி செத்துவிட்டது என்று பொருள். நான் உணவில்லாமல் இன்றோ நாளையோ நாளை மறுநாளோ இறக்கக் கூடுமெனில், இவர்கள் என்னை எடுத்து அடக்கம் செய்யமாட்டார்கள். என் உடல் ரோட்டில் வீசப்படும். அநாதையாகச் செத்துப் போவதற்குப் பதிலாக ஊரில் என் அன்னையின் மடியில் சாவேன். 

---

ஒரு மனிதனுக்குச் சோறு போட சமூகத்திற்கு வக்கில்லையெனில் உலகையே தீயிட்டு கொளுத்து என ஒரு கவிஞன் அறம்பாடுவது இதனால்தான். 

ஒருவனின் பசி கண்டு கொள்ளப்படா தென்றால் அதுதான் அறவீழ்ச்சியின் எல்லை. அதற்கு அப்பால் கீழிறங்குவதற்கு எதுவுமில்லை. 

‘தருமம்’ எனும் ஒரே காரணத்திற்காக நான் பிறந்த மண்ணிலும் அதிகமாய் நேசித்த ‘கோவையும்’ இதற்கு விதிவிலக்கல்ல எனும் உண்மையால் என் கும்பி எரிந்தது. இன்று இது என் ஊரல்ல. 

---

இந்தியாவில் கூலிகள் வீழ்த்தப்பட்ட பின்னர் இப்போது ஊழியர்கள் வீழ்த்தப்படும் சீசன் துவங்கியிருக்கிறது. 

அவர்களுக்கு இத்தருணத்தில் சொல்வதற்கு என்னிடம் இரண்டே சொற்கள்தான் இருக்கின்றன. 

முதலாவது, இந்த வேலை தந்த சம்பளத்தில்தால் குடும்பம் பசியாற்றியது. வாடகை கொடுத்தீர்கள். பிள்ளைகள் படித்தார்கள். முதலாளிகளுக்கு நன்றி சொல்வோம். அவர்கள் நெருக்கடியிலிருந்து மீள மனதார வாழ்த்துவோம். 

இரண்டாவது, உலகமே இருள் மண்டி எங்கும் மரண ஓலமும் பசியின் கூக்குரலும் ஒலிக்கும் நாட்களில் நீங்கள் வெளியேற்றப் பட்டிருக்கிறீர்கள். எளிதாக இன்னொரு பிழைப்பைத் தேடிக்கொள்ள வழியற்ற சூழலில் ஈவிரக்கமின்றி வெளியேற்றப் பட்டிருக்கிறீர்கள். 

இப்படியொரு தலைவனுக்குக் கீழ்தான் நீங்கள் இத்தனை நாட்கள் களமாடியிருக்கிறீர்கள். இதை காட்டிக் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். 

* ஒரு மாட்டிற்குப் பதிலாக நுகத்தில் தன் கழுத்தைக் கொடுத்தவனை விட, 

* ஊனமுற்ற மனைவியை தோளில் தூக்கிக்கொண்டு கொளுத்தும் வெயிலில் காலுக்குச் செருப்பில்லாமல் நடப்பவனை விட, 

* தண்டவாளத்தில் படுத்துச் செத்தவனை விட, 

* தன் தகப்பனை சைக்கிளோடு சேர்த்துக்கட்டி ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் மிதித்துச் சென்ற சிறுமியை விட சற்று மேலான வாழ்க்கை உங்களுடையது. 

அச்சம் கொள்ளாதீர்கள். கொரானாவிலும் கொடியது அச்சம். பதட்டமடையாதீர்கள். இன்னொரு அடிமைச் சங்கிலியை அவசர அவசரமாக அணிந்து கொள்வதற்குப் பறக்காதீர்கள். வீட்டில் இருப்பவர்களையும் பதட்டப் படுத்தாதீர்கள். நீங்கள் பிறந்ததே இந்த நிறுவனத்தில் இதே வேலையை மட்டுமே பார்க்க வேண்டு மென்பதற்காக அல்ல. இந்த வேலை மறுக்கப்பட்டதால் திருவண்ணாமலை கோவில் வாசலில் நின்று பிச்சை எடுக்கப்போவதில்லை. 

நிலைமை நிச்சயம் மாறும். அதிகபட்சம் சில மாதங்களுக்கு செளகர்ய குறைகள் ஏற்படலாம். பெட்ரோல், கல்வி, விருந்து வேக்காடுகள் போன்ற அதிகச் செலவினங்கள் தேவைப்படாத காலம். முடிந்தவரை தாக்குப் பிடியுங்கள். குடும்பமாகக் காந்தியின் கால்களைப் பற்றிக்கொள்ளுங்கள். நம் இன்றையப் பிரச்சனைகளுள் பெரும்பாலானவற்றுக்கு அந்தக் கிழவனிடம் தீர்வு இருக்கிறது. 

 **ஆனது ஆகட்டும் அடிச்சு நொறுக்கு அடுத்தது என்ன?’ எனும் மந்திரத்தை கற்றுத் தருகிறேன்.** 

நெருக்கடியான காலகட்டம் என்பது உண்மையில் மிகப்பெரிய வாய்ப்பு. உங்களுக்கு கண் என ஒன்றிருந்தால் போதும். 

உதாரணம்: திருக்குறளரசியின் நிறுவனம், இதுநாள் வரை மக்கள்தொடர்பு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு ஆகிய சேவைகளை அளித்து வந்தது. இந்த இரண்டிற்கும் அடுத்த இரண்டாண்டுகளுக்கு வாய்ப்பே இல்லை. உட்கார்ந்து ஒப்பாரி வைக்கவில்லை. ஊழியர்களைத் துரத்தவில்லை. ‘எங்கள் தின்பண்டங்கள் பாதுகாப்பாகத்தான் தயாரிக்கப் படுகின்றன என்பதை விளக்கும் குறும்படங்களை’ உணவுத் தொழிலில் இருப்பவர்களுக்காக  இயக்க ஆரம்பித்து விட்டாள். வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற இத்தகு விழிப்புணர்வு வீடியோக்கள் இன்று அவசியமானவை. 

இந்த இடத்தில் ஒரு சிறிய எச்சரிக்கை. எந்தத் தொழிலும் அதற்குரிய வருவாயைத்தான் தரும் (எலி புழுக்கை போடும்; யானை சாணி தரும் – அப்பா) உங்களது அனைத்துத் தேவைகளையும் ஆசைகளையும் அது பூர்த்தி செய்ய வேண்டுமென எதிர்பார்ப்பது நம்மைத் தெருவில்தான் கொண்டு போய் நிறுத்தும். உங்கள் முதலாளியின் கோளாறும் அதுதான்.  

வாசித்துக் கொண்டே இருங்கள். சிந்தித்துக் கொண்டே இருங்கள். முயற்சித்துக் கொண்டே இருங்கள். புதிய வெளிச்சத்தின் சிறிய கீற்று தட்டுப்பட்டாலும் ‘ங்கொப்பன் மவனே சிங்கம்டா’ எனும் மந்திரத்தை சொல்லிக்கொண்டு விளக்கிடுங்கள்.

நினைவிருக்கட்டும் பத்தாம் வகுப்பின்  ‘சைன் தீட்டா, காஸ் தீட்டா’ போன்ற கொடூரங்களையே சமாளித்து வென்றவர் நீங்கள். 

அப்பாவின் மந்திரச் சொற்களோடே முடிக்கிறேன்: 

‘அழுதுக்கிட்டு இருக்காதடா… 
உழுதுக்கிட்டு இரு’ 

- © செல்வேந்திரன்

Sunday, May 17, 2020

நாம் தமிழர் - பாசிச அறிக்கை

நாம் தமிழர் ஆவணம் – தேசிய அறிக்கையன்று, பாசிச அறிக்கை!
குறிப்பு: இதை எழுதி இரண்டு வருடங்கள் ஆகப்போகின்றது. இக்கட்டுரையுடன் நண்பர்கள் பலரும் எழுதிய கூர்மையான, காத்திரமான விமர்சனக் கட்டுரைகளுடன் கூடிய தொகுப்பு ஒன்று வெளியானது. அவற்றின் அவசியமும் முக்கியத்துவமும் இன்றும் நிலவுவதாகவே கருதுகிறேன்.

எமது விமர்சனங்களின் விளைவாக, தமது ஆவணத்தைத் திருத்தப் போவதாகப் பின் வாங்கியவர்கள் இன்றுவரையில் அது குறித்து மவுனமாக இருப்பதோடு மட்டுமின்றி, ஆவணத்தின் பல கருத்துக்களை பலவகைகளில் ஆங்காங்கு ஒப்பித்து வருவதையும் அவதானிக்க முடிகிறது.

இறுதியாக, நடந்து முடிந்த திருச்சி மாநாட்டில், “நாம் தமிழர்” கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆவணத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்களில் எந்த மாற்றமும் இன்றி ஒப்பித்திருப்பதைக் கவனத்தில் கொண்டு இதை என் பக்கத்தில் வலையேற்றுகிறேன்.

அதே சமயம், “நாம் தமிழர்” கட்சியினருக்கு இவ்விமர்சனங்கள் ஒருவகையில் பொருட்டாக இருக்கப்போவதில்லை என்ற புரிதலும் என்னளவில் ஏற்பட்டிருக்கின்றது. காரணம், அவர்கள் இத்தகைய கருத்தியல்களைக் கணக்கில் கொள்ளாத ஒரு அரசியல் புலத்தில் – வெகுமக்கள் அரசியல் களனில் – இயங்கிக் கொண்டிருப்பவர்கள். இவை அவர்களுக்குப் பொருட்டும் அல்ல. அவர்களது புரிதலுக்கு உட்பட்டவையும் அல்ல.

ஆகையால், இனி விமர்சனங்கள் அத்தளத்திற்குரிய வகையில் நகரவேண்டும் என்பது எனது அவதானிப்பு. முயற்சி கைகூட வேண்டும்.

————————————

கடந்த ஒரு நூற்றாண்டு காலத் தமிழக அரசியல் வரலாற்றில் எந்தக் கட்சியும் முன்வைக்கத் துணிந்திராத அரசியல் நிலைப்பாடுகளை வைத்து ஒரு அரசியல் ஆவணத்தை வெளியிட்டிருக்கிறது “நாம் தமிழர்” கட்சி. தமிழக அரசியலின் மையநீரோட்டத்தில் இருந்து இதுவரையிலும் பிரித்து நோக்கப்படாது இருந்தவர்களான முஸ்லீம்கள், கிறித்தவர்கள், மொழிச் சிறுப்பான்மையினர் ஆகியோரைப் பிரித்து, விலக்கி, எதிர் நிலையில் நிறுத்தி, இனத்தூய்மை வாதத்தின் அடிப்படையில் ஒரு அரசியலை முன் மொழியவும் துணிந்திருக்கிறது.

ஒரு அரசியல் கட்சியின் ஊடாக, தமிழகத்தில் இதுவரையில் தலையெடுத்திராத பாசிசப் போக்கு “நாம் தமிழர்” என்ற வடிவத்தில் தோன்றியிருக்கிறது. “நாம் தமிழர்” என்ற அக்கட்சியின் முழக்கத்தில் வெளிப்படுவது தேசியவாதம் அல்ல, அப்பட்டமான பாசிசம். இதைத் தெளிவுறப் புரிந்து, இத்தகைய ஆபத்துகளில் இருந்து நம்மை விடுவித்துக் கொள்வது இன்றைய காலகட்டத்தின் கட்டாயம்.

அந்நோக்கில், “நாம் தமிழர்” கட்சி வெளியிட்டிருக்கும் ஆவணத்தின் உள்ளீடாக இருப்பது தேசியவாதம் அன்று, பாசிசமே என்பதைத் தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம். ஆவணம் முன்வைத்திருக்கும் கருத்துக்களை, உள்ளது உள்ளவாறு எடுத்துக் கொண்டு, அதன் பாசிசத்தன்மையைக் காட்ட முனைவதற்கு மேலாக வெறொன்றையும் இக்கட்டுரை செய்துவிடவில்லை.

தமிழகத்தின் முதல் பாசிசக் கட்சி ஆவணம்

”நாம் தமிழர்” கட்சி வெளியிட்டிருக்கும் ஆவணம் சில அரசியல் முடிவுகளைத் தேர்வு செய்திருக்கிறது. அந்த அரசியல் முடிவுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆதாரங்களின் அடிப்படையில் அல்லாது, தொன்ம அடிப்படையில் மீள எழுதியிருக்கிறது. அத்தொன்ம வரலாற்றில் இருந்து, தமிழியம் என்ற ஒரு கருத்தியலைக் கட்டமைக்கிறது. அக்கருத்தியலின் வழி தனது அரசியல் முடிவுகளுக்கு வலுவான நியாயங்களைக் கற்பிக்கிறது. ஆவணம் இயங்கும் முறை இது.

ஆனால், ஆவணத்தை வாசிப்பவர்களுக்கு இது புலப்படாமல் இருக்க, தொன்ம வரலாற்று விளக்கத்தில் இருந்து தொடங்கி, அரசியல் முடிவுகளுக்கு வந்து, அதற்கான விளக்கங்களையும் தரும் வகையில் ஆவணம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த வெளிப்படையாகத் தெரியும் வடிவத்தைத் தவிர்த்து, மேலே விளக்கிய அதன் இயங்கு – கட்டமைவில் இருந்து ஆவணத்தை அணுகிப் பார்க்கலாம்.

”நாம் தமிழர்” கட்சி ஆவணம், தனது இலக்குகளாக பின்வருவனவற்றைக் கூறுகிறது:

இந்தியாவில், அந்தந்த மாநிலத்தில், அந்தந்த மாநிலத்தவரே ஆளும் நிலையில், தமிழ்நாட்டில் தமிழர் ஆளமுடியாத நிலை தொடர்ந்து நிலவுவதை மாற்றி, தமிழரை ஆட்சிப் பீடத்தில் ஏற்றுவதே உடனடி இலக்காகும்.

இந்திய ஒன்றிய இறையாண்மைக்கு உட்பட்ட முழுத் தன்னாட்சி உரிமைகொண்ட மாநிலங்களின் உண்மையான கூட்டாட்சி ஒன்றியத்தை நிறுவுதலே நாம் தமிழர் கட்சியின் அடுத்த திட்டமாகும். (பக்கம்: 30)

ஒரு தேர்தல் கட்சிக்கு உரிய, மிகவும் எளிமையான, நல்ல கோரிக்கைகள்தாம். வரவேற்கப்பட வேண்டியவைதாம். இவ்வளவு எளிமையான இலக்குகளை வைத்திருக்கும் ஒரு ஆவணத்தை பாசிசம் என்று குற்றம் சாட்டுவது தகுமா? ஆனால், ஆவணம் இப்படி எளிமையான கோரிக்கையோடு நின்றிருந்தால் பிரச்சினையே இல்லை!

ஆவணம், முகப்பிலேயே வைத்திருக்கும் முழக்கங்கள் இவை: ”இது மற்றுமோர் அரசியல் கட்சி அன்று! மாற்று அரசியல் புரட்சி!” ”நாங்கள் அரசியல்வாதிகள் அல்லர்! புரட்சிவாதிகள்!”

இந்த இருமுழக்கங்களுக்கும் இவ்வளவு எளிமையான இலக்குகளுக்கும் பாசிசத்திற்கும் என்ன தொடர்பு இருக்கமுடியும் என்ற கேள்வி எழலாம்.  “புரட்சி” என்பதன் பொருள் அறியாமல் பேசுகிறார்களோ என்று சந்தேகமும் இயல்பாக எழலாம்.

ஆனால், பிற்சேர்க்கையில் ”ஆவணத்தை விளக்கிடும் உரைவீச்சுத் தெறிப்புகள்” பகுதியில் உள்ள தெளிவான விளக்கத்தில் இருந்து தொடங்கினால் விடயம் புரிய வரும்.

அது பின்வருமாறு:

புரட்சி என்பது,

தலைகீழ் மாற்றம்!

அடிப்படை மாற்றம்!

அமைப்பு மாற்றம்!

அரசியல் மாற்றம்! (பக்கம்: 51)

மிகத் தெளிவான புரிதல் இருப்பது தெளிவாகிறது.

மாநில ஆட்சியைப் பிடிக்கும் இலக்கு, உண்மையான இந்தியக் கூட்டாட்சியை உருவாக்கும் இலக்கு புரட்சிகர மாற்றம் இல்லை என்ற தெளிவுடனேயே ஆவணம் இயற்றப்பட்டிருக்கிறது. ”தமிழர் குமுகம் (சமூகம்) பற்றிய மதிப்பீடு” என்ற பகுதியில், பக்கம் 23 –ல் ”அதிகாரமற்ற தமிழ்நாட்டு ஆட்சியைக்கூட ஆளும் உரிமையையும் இழந்ததாக” தமிழர் குமுகம் வீழ்ந்துபட்டிருப்பதாக ஆவணம் வெளிப்படுத்தும் ஆதங்கம் அத்தகைய தெளிவை வெளிக்காட்டி விடுகிறது.

அப்புறம் என்ன ”தலைகீழ் மாற்றம்” செய்யத் துடிக்கிறது “நாம் தமிழர்” கட்சி!

அதையும் தெளிவாகவே கூறியிருக்கிறது ஆவணம்.

”ஆய்தப் புரட்சி அல்ல!

அறிவுப் புரட்சி!

கருவி ஏந்திய புரட்சி அல்ல!

கருத்துப் புரட்சி!”

”நாம் தமிழர்” கட்சி நிகழ்த்தப் போவதாகக் கூறும் புரட்சி கருத்துப் புரட்சி மட்டுமே! அத்தகையதொரு புரட்சியைச் செய்யப்போவதாலேயே அவர்கள் தம்மை ”அரசியல்வாதிகள் அல்லர் புரட்சிவாதிகள்” என்று முழு சுய உணர்வோடு முகப்பிலேயே அறிவிக்கிறது ஆவணம்.

அத்தகைய ”கருத்துப் புரட்சி” என்ன என்பதையும் ஆவணம் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறது.

கடந்த 80 வருடங்களாக, தமிழ் நாட்டில் ஆதிக்கத்தில் இருக்கும் திராவிடக் கருத்தியலை – அது சமூகத்தில் முற்போக்கான பாத்திரத்தை ஆற்றியிருக்கிறது, பார்ப்பனியத்திற்கு அணைபோட்டிருக்கிறது என்று நிலவும் ஒருமுகமான கருத்தொருமிப்பை வீழ்த்தி, தலைகீழாகப் புரட்டிப் போட்டு, பார்ப்பனியத்தைக் காட்டிலும் மோசமான சமூகச் சீரழிவை உருவாக்கியது திராவிடக் கருத்தியலே; பார்ப்பனியமும் திராவிடக் கருத்தியலும் எதிரெதிரானவை என்ற கருத்தியலைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு, இரண்டும் எதிரெதிரானவை அன்று உடனொட்டிப் பிறந்தவையே என்று ஒரு தலைகீழ் கருத்துப் புரட்சியைச் செய்வதே “நாம் தமிழர்” கட்சி ஆற்றவிருக்கும் கருத்துப் புரட்சி என்று ஆவணம் மிகத் தெளிவாகவே விளக்கியிருக்கிறது.

”நாம் தமிழர்” ஆற்றவிருப்பதாக அவர்களது கட்சி ஆவணம் பறைசாற்றும் இந்தப் புரட்சியே பாசிசம்.

புரட்சி எப்படி பாசிசமாகும் என்ற கேள்வி உடனடியாக வாசிப்பவர் மனதில் எழக்கூடும்.

பாசிசம் குறித்த மரபான மார்க்சிய விளக்கங்கள், அதை ஒரு மிகப் பிற்போக்கான, மிக மோசமான, ஆபத்தான போக்காகவே வரையறுத்திருக்கின்றன. பாசிசம் மிகவும் பிற்போக்கான, ஆபத்தான போக்கு என்பது சரியே என்றாலும், அது நிலவும் சமூக அமைவில் ஒரு தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்தவே முனைகிறது என்ற பொருளில், நிலவும் அனைத்தையும் புரட்டிப் போட முனைகிறது என்ற பொருளில் ஒரு “புரட்சிகரமான” அரசியல் போக்கே!

பாசிஸ்டுகளின் அகவயமான புரிதலும் தாம் புரட்சியாளர்கள் என்பதுவே!

”நாம் தமிழர்” கட்சியின் ஆவணம் அறிவித்திருப்பதைப் போன்று அக்கட்சி நிகழ்த்த முயற்சிப்பது ஒரு ”பாசிசப் புரட்சி” யையே.

இதை விளங்கிக் கொள்ள ”பாசிசம்” என்பதை வரையறுத்துப் புரிந்து கொள்வது முதலில் அவசியம்..

ஒருபுறம், “தேசியம் என்றாலே பாசிசம்” “தேசியம் பாசிசக் கூறுகளை தன்னளவிலேயே உட்கொண்டிருக்கிறது” என்ற அறிவுப்புல ஆதாரம் அற்ற அபத்தமானக் குற்றச்சாட்டு.

இன்னொருபுறம், தேசியக் கோரிக்கைகளை வெளிப்படையாக முன்வைத்துக் கொண்டு பாசிசத்தை முன்வைக்கும் ஆபத்தான போக்கு.

உருப்பெற்று வரும் தமிழ் தேசியத்தை ஒரு ஜனநாயகப் பூர்வமான நோக்கில் வளர்த்தெடுப்பதற்கு, இந்த இரு எதிர் முனைப் போக்குகளின் ஆபத்துக்களை உணர்ந்து கொள்வதும், பாசிசத்தை தேசியத்தில் இருந்து வித்தியாசப்படுத்தி தெளிவுபடுத்திப் புரிந்துகொள்வதும் இன்று மிக அத்தியாவசியமான ஒன்றாகியிருக்கிறது.

பொதுவில் “பாசிசம்” என்பது தமது அரசியல் ”எதிரிகளை” அல்லது தமக்கு ஒவ்வாதவர்களை வசைபாடும் ஒரு சொல்லாகப் பயன்படுத்தும் போக்கே நீக்கமற நிறைந்திருக்கிறது. அதே போன்று, சர்வாதிகாரப் போக்கு ஒருவரிடம் வெளிப்பட்டால், அல்லது ஜனநாயமற்ற போக்கு வெளிப்பட்டாலும்கூட உடனே அவர்களை “பாசிஸ்ட்டு” என்று வசைபாடுவதும் வழக்கமாகிவிட்டது. அத்தகைய மழுங்கிப்போன பிரயோகத்தில் இருந்து அப்பதத்தை விடுவித்து, அதன் அரசியல் கோட்பாட்டு அர்த்தத்தில் கையாளப்பட வேண்டும் என்பதுவும் இன்றைய நிர்ப்பந்தமாக எழுந்திருக்கிறது.

இந்த நோக்கில், கடந்த இருபது ஆண்டுகளில் கல்விப் புலங்களில் நிகழ்ந்திருக்கும் ஆரோக்கியமான ஆய்வுகள், விவாதங்களின் ஊடாக பாசிசம் குறித்து ஒரு தெளிவான வரையறை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் முக்கிய பங்களிப்புகளை அளித்திருப்பவர், Roger Griffin என்ற பிரிட்டிஷ் கல்வியாளர். பாசிசம் குறித்து அவர் முன்வைக்கும் விரிவான கருத்துக்களுக்குள் புகுவது இங்கு சாத்தியமில்லை. அவர் முன்வைக்கும் மையமான வரையறுப்புகளை மட்டும் தற்சமயம் எடுத்துக் கொள்வது போதுமானது.

பாசிசம்: ஒரு அரசியல் கோட்பாட்டு வரையறை

ரோஜர் க்ரிஃபின் பாசிசம் குறித்து முன் வைக்கும் வரையறை பின்வருமாறு:

பாசிசம் என்பது ஒரு அரசியல் கோட்பாட்டு வகையினம். அவ்வரசியல் கோட்பாட்டின் மையக்கருவாக அமைந்திருக்கும் தொன்மம், அதன் பல்வேறு வடிவ சாத்தியங்களிலும், தேசப்புத்துயிர்ப்பு என்ற வடிவிலான அதிதீவிர வெகுமக்கள் தேசியவாதமாக உருக்கொள்ளும்.

(Fascism is a genus of political ideology whose mythic core in its various permutations is a palingenetic form of populist ultra-nationalism.)

இந்த வரையறுப்பின் மூன்று அம்சங்களாவன:

1. தேசப்புத்துயிர்ப்பு (palingenesis)

2. அதிதீவிர தேசியவாதம் (ultra – nationalism)

3. வெகுமக்கள் தன்மை கொண்டிருத்தல் (populism)

அவற்றுக்கு ரோஜர் க்ரிஃபின் தரும் விளக்கங்களாவன:

தேசப்புத்துயிர்ப்பு என்பது பழைய பொற்காலம் ஒன்றை மீட்டெடுக்கும் நோக்கில் அமைந்த கருத்தமைவு அன்று. பழம் பெருமை மிக்க தமது தேசம், வரலாற்று ரீதியாகச் சிதைந்து, தற்காலத்தில் அரசியல், சமூகம், பண்பாடு, பொருளாதாரம் என்று அனைத்து அம்சங்களிலும் சீரழிந்து வீழ்ந்துபட்டுக் கிடக்கிறது என்பதை வலியுறுத்தி, இந்தச் சீரழிவிலிருந்து மீண்டு, தேசம் புதிய வலிமையோடு புத்தெழுச்சி பெறவேண்டும் என்று வலியுறுத்துவதே இக்கருத்தமைவின் பண்பு என வரையறுக்கிறார்.

பழைய பொற்காலத்திற்குத் திரும்புவது அல்லது மீட்டெடுப்பது என்ற கருத்தமைவை வைப்பவர்கள் பிற்போக்குவாதிகளாக அறியப்படுபவர். பிற்போக்குவாதிகளைப் போன்று பாசிஸ்டுகள் பழைய பொற்காலம் ஒன்றுக்குத் திரும்புவதை வலியுறுத்துவதில்லை. மாறாக, புதிய வலிமையோடு தேசம் மீண்டும் பிறக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துவர் என்று வித்தியாசப்படுத்துகிறார். அந்த வகையில், பாசிஸ்டுகள் தேசத்தின் சமூக, பொருளாதார, பண்பாட்டு, அரசியல் ஆகிய அனைத்து அம்சங்களையும் அடியோடு மாற்றியமைப்பதைத் தமது இலக்காகக் கருதுபவர்கள், என்ற பொருளில் ஒரு ”புரட்சியை” – தலைகீழ் மாற்றத்தை – நிகழ்த்த விரும்புபவர்கள் என்று விளக்குகிறார். பாசிஸ்ட்டுகளும் தம்மைப் புரட்சியாளர்கள் என்ற சுய புரிதலுடனே இயங்குவர் என்பதையும் காட்டுகிறார்.

இத்தாலியின் பாசிஸ்டுகளுக்கு ரோமானியப் பேரரசு பழமையின் கூறாக இருந்தது. ஜெர்மனியின் நாஜிக்களுக்கு ஆரிய இனம் பழமையின் கூறு. ஆனால், அந்த பழைய நிலைக்குத் திரும்புவது அவர்களது நோக்காக இருக்கவில்லை. அந்தப் பழம் பெருமையை மீட்டெடுப்பது, புது வலிமையோடு தமது தேசத்தை புதிதாகப் பிறக்கச் செய்வதே அவர்களது சுயபுரிதலாகவும் இலக்காகவும் இருந்தது.  அதே போன்று, கிறித்தவம், முதலாளியம், சோஷலிசம் ஆகியவற்றால் சீரழிந்து வீழ்ந்துபட்டிருந்த தமது தேசத்தை அவற்றின் செல்வாக்கிலிருந்து மீட்டு, தமது தேசத்தின் பழம் பெருமைமிக்க அம்சத்தின் (ரோமானிப் பேரரசு, ஆரிய இனம்) அடிப்படையில் அனைத்து அம்சங்களிலும் வலிமைமிக்க நவீன தேசத்தைக் கட்டமைப்பதே அவர்களது இலக்காக இருந்தது.

தேசப் புத்துயிர்ப்பு என்ற இக்கருத்தமைவை விளக்க முற்பட்ட இன்னொரு சந்தர்ப்பத்தில் ரோஜர் க்ரிஃபின், அக்கருத்தமைவின் மற்றுமொரு முக்கிய பண்பாக, அப்புத்துயிர்ப்பு மிக அருகாமையில், வெகு விரைவில் நிகழப்போகிறது, என்பதாகவே பாசிசத்தால் முன்வைக்கப்படும் என்றும் வலியுறுத்தினார்.

இரண்டாவதாக, பாராளுமன்ற அரசியலுக்கு எதிரான தீவிரவாதப் போக்குகள், முதலாளிய தாராளவாதத்திற்கு எதிரான தீவிரப்போக்குகள் ஆகியவற்றைக் குறிப்பவையாக மட்டுமே அதிதீவிர தேசியவாதம் என்ற பதத்தை க்ரிஃபின் வரையறுக்கவில்லை. பல்வேறு வகைப்பட இனமைய வாதங்களையும் (ethno – centrism) பிற இனத்தவர்கள் மீதான இனவெறுப்பையும் (xenophobia) பிறப்பின் அடிப்படையில் அமைந்த தூய்மையான இனக்குழுவாக தேசத்தைக் கட்டமைக்கும் இனவாதத்தையும் (biologically determined racism) உள்ளடக்கியதே அதிதீவிர தேசியவாதம் என்பதாக வரையறை செய்கிறார். நாஜிக்கள் ஜெர்மன் தேசத்தை ஜெர்மன் இனமாக வரையறுத்தது இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.

தேசத்தை எந்தக் கலப்படமும் அற்ற தூய்மையான ஒரு இனக்குழுவாக முழுச் சுய உணர்வோடு வரையறுக்கும்போது மட்டுமே அது அதிதீவிர தேசியவாதமாக, பாசிசத்தின் முக்கிய கூறுகளில் ஒன்றாக அமைந்திருக்கும் என்று வலியுறுத்துகிறார்.

மூன்றாவதாக, தற்காலத்தைய நிலையில், தேசத்தின் “தூய்மையான” மக்கள், இனக்கலப்பாலும், சுய உணர்வின்றி தமக்குள்ளேயே போரிட்டு ஒருவரையொருவர் வீழ்த்திக் கொண்டிருப்பதாலும் “உறக்க நிலை”யில் ஆழ்ந்திருக்கும் சூழல் நிலவுவதாக பாசிஸ்டுகள் கொள்வர். அத்தகைய “உறக்க நிலை”யில் இருந்து அவர்களை விழித்தெழச் செய்து, தேசத்தைப் புதிதாகப் பிறக்கச் செய்யும் தமது நிகழ்ச்சி நிரலில் முழு வேகத்தோடும் உற்சாகத்தோடும் பங்கேற்கச் செய்வதே அத்தகைய அதிதீவிர தேசியவாதம் வெகுஜனத் தன்மை கொண்டிருப்பதன் பொருள்.

இதைச் செய்ய வேண்டிய பொறுப்பு, புதிதாகப் பிறக்கும் தேசத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கப் போகும் ”புதிய உயர் குடியினருக்கே” உரியது. இவர்கள், தேசத்தில் ஏற்கனவே அறியப்பட்ட பழைய “உயர் குடியினர்” அன்று. தேசத்தின் புத்துயிர்ப்பு என்ற கொள்கையில் கொண்டிருக்கும் பிடிப்பு, அக்கொள்கையை அடைவதில் அவர்களுக்கு உள்ள உறுதி மற்றும் பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ”முன்னணிப் படை”யாகிய கட்சியின் உறுப்பினர்களில் இருந்தே இப்”புதிய உயர் குடியினர்” அடையாளம் காணப்படுவார்கள்.

அதிதீவிர தேசியவாதத்தின் “வெகுஜனத் தன்மை” இவ்வாறு இருமுகம் கொண்டது. இதன் உள்ளடங்கிய அம்சம், தேசத்தின் “தூய்மையான” சக்திகளை விழித்தெழச் செய்வதன் மூலம் (வெகுமக்கள் மற்றும் “புதிய உயர் குடியினர்”) இனத்தூய்மையை மீட்டெடுத்தல் – பிற இனத்தவரை விலக்குதல். இனத்திற்குள்ளேயே இருக்கும் இக்கருத்தோடு முரண்படும் சக்திகளை ஒழித்தல்.

இந்த மூன்று கூறுகளும் அறிவியல் பூர்வமான ஒரு கருத்தமைவை அடித்தளமாகக் கொண்டிராமல், ஒரு தொன்மத்தின் அடியாக அமைந்திருக்கும். பாசிசம் தலையெடுக்கும் வெவ்வேறு பிரதேசங்களின், தேசங்களின் தனித்தன்மைகள் சார்ந்து, இத்தொன்மக் கருவின் தனித்தன்மையும், அதன் பரிமாணங்களும் இருக்கும்.

இந்த வரையறுப்பையும் விளக்கங்களையும் ரோஜர் க்ரிஃபின் 1991 ஆம் ஆண்டு வெளியிட்ட The Nature of Fascism என்ற தமது நூலில் முன்வைத்தார். 1960 களுக்குப் பின் பாசிசம் குறித்த ஆய்வுகள் தேங்கிக் கிடந்த சூழலில், ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளில் எழுந்த பலவிதமான பாசிசப் போக்குகளையும் ஆய்ந்து, அவற்றின் பொதுமையான பண்புகள் என்று ஒற்றை வரியில் சுருக்கமாக இவர் முன்வைத்த வரையறை கல்விப் புலங்களில் கடும் விவாதங்களைக் கிளப்பியது.

இந்த விவாதங்களின் போக்கில், அவரது வரையறுப்பிற்கு பல தளங்களில் கிடைத்த வரவேற்பால் உந்தப்பட்டு, 1998 ஆம் ஆண்டு, பாசிசம் குறித்த ஆய்வுகளில் தாம் முன்வைத்திருக்கும் கருத்தமைவையொட்டி ”புதிய ஒத்திசைவு” ஒன்று உருவாகி வருவதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து, அவரது வரையறுப்புடன் உடன்படாத கல்வியாளர்களுடன் மீண்டும் ஒரு சுற்று கடும் விவாதங்கள் நிகழத் தொடங்கின.

இச்சுற்று விவாதங்களில், பாசிசம் குறித்த தமது வரையறுப்பின் குறைகள் சிலவற்றை உணர்ந்து கொண்டு, 2004 ஆம் ஆண்டளவில் சில திருத்தங்களைச் செய்யவும் முன்வந்தார் ரோஜர் க்ரிஃபின்.

அவரது வரையறை, இரண்டு உலக யுத்தங்களுக்கிடையே ஐரோப்பாவில் எழுந்த பாசிசப் போக்குகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டிருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய நிலைமைகளில் புதிதாக உருவாகத் தொடங்கியிருந்த நவ – பாசிசக் குழுக்களின் பண்புகள் சில இந்த வரையறையை மீறியவையாக இருந்தன. மேலும், பாசிசம் ஐரோப்பியாவில் மட்டுமின்றி ஆசிய ஆப்பிரிக்க நாடுகளிலும் தோன்றக்கூடியதன் சாத்தியத்தை உள்ளடக்கியதாக இவ்வரையறை இருக்கவில்லை.

இரு உலக யுத்தங்களுக்கு இடையில் ஐரோப்பாவில் தோன்றிய பாசிசம் வெகுமக்கள் தன்மையைக் கொண்டிருந்தது. தேசத்தின் புத்துயிர்ப்பு வெகுவிரைவில் நிகழப்போகிறது என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தது. இந்த இரு அம்சங்களையும் தீர்மானிப்பதில் அக்காலத்தைய ஐரோப்பிய சமூக எதிர்கொண்டிருந்த கடும் நெருக்கடிகள் அமைந்திருந்தன.

முதலாம் உலகப் போரின் பாதிப்புகள், ரசியப் புரட்சியின் விளைவாக, ஐரோப்பாவெங்கும் கம்யூனிஸ்ட் எழுச்சி குறித்துப் பரவியிருந்த அச்சம், முதலாளியப் பொருளாதாரத்தின் கடும் வீழ்ச்சி, பகுத்தறிவு (rationalism) முன்னேற்றம் (progress) என்ற கருத்தமைவுகளில் சமூகத்தின் அறிவார்த்த பிரிவினரிடையே கடும் அவநம்பிக்கை, வெகுமக்களிடையே பரவியிருந்த கடும் அதிருப்திகள், போராட்டங்கள் ஆகிய காரணிகள் அக்காலத்திய பாசிசத்தின் வடிவத்தைத் தீர்மானிப்பதில் செல்வாக்கு செலுத்தின.

இந்த நெருக்கடிகள், ஜெர்மனியிலும் இத்தாலியிலும் மிக அதீதமாக முனைப்பு பெற்றிருந்த காரணத்தாலேயே அவ்விரு நாடுகளிலும் பாசிசம் பெரும் வெகு மக்கள் இயக்கங்களாக எழுச்சி பெற்றன. அதிகாரத்தைக் கைப்பற்றின. சர்வாதிகாரங்களை நிறுவின. ஆரவாரமான பெரும் நிகழ்வுகள், இராணுவம் அல்லாத குழுக்களின் ஆயுதம் ஏந்திய அணிவகுப்புகள், ஸ்வஸ்திகா போன்ற சின்னங்கள் சர்வ வியாபகமாக பாவிக்கப்பட்டது போன்ற வடிவங்களை எடுத்தன. ஒற்றைக் கட்சி, ஒரே தலைவன், (”ஒரே மக்கள், ஒரே பேரரசு, ஒரே தலைவன்” என்பதே நாஜிக்களின் முழக்கமாக இருந்தது) பொருளாதார – பண்பாட்டு உற்பத்திகளின் பெரும் நிறுவனமயமாக்கல், இளைஞர் இயக்கங்கள், போன்ற அமைப்பு வடிவங்களை எடுத்தன.

அதே சமயம், ஜெர்மனி – இத்தாலி இரு நாடுகளின் தனித்துவமான நிலைமைகளையொட்டி இவற்றில் பாசிசக் கட்சிகளின் அணுகுமுறைகளும் தமக்குரிய தனித்துவத்தைக் கொண்டிருந்தன. ஜெர்மனியில் ஹிட்லர், தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்ற அதிகாரத்தைக் கைக்குள் கொண்டு வந்து, பிறகே பின் வாசல் வழியாக சர்வாதிகாரியாக முடிந்தது. இத்தாலியில், முசோலினி, ரோமை நோக்கி அணிவகுப்போம் என்று அறிவித்ததுமே அதிகாரம் அவரது கைகளில் விழுந்தது.

ஐரோப்பாவின் பிற நாடுகளில் பாசிச சக்திகள் இதுபோன்று எளிதில் பெரும் எழுச்சி காணவோ அதிகாரத்தைக் கைப்பற்றவோ சாத்தியப்படவில்லை. (ஸ்பெயினில் ஃப்ராங்கோவின் ஆட்சியை பாசிசம் என்று பொதுவுடைமையர்கள் சொல்வது வழமை. க்ரிஃபின் மட்டுமின்றி மற்ற பல ஆய்வாளர்களும் அதை மறுக்கின்றனர்). இதன் விளைவாக, பாசிசம் குறித்த ஆய்வுகள் பெரும்பான்மையும் இந்த இரு நாடுகளை மையமாகக் கொண்டே செய்யப்பட்டிருந்தன. மேலே விவரித்த வகையான அமைப்பு வடிவங்கள், சின்னங்கள், நடவடிக்கைகளே பாசிசத்தின் வரையறைகள் என்று ஆய்வாளர்கள் மத்தியிலும், அவை ஏற்படுத்தியிருந்த பாதிப்புகளால் வெகுமக்கள் மத்தியிலும் தின்மையாகப் பதிந்துவிட்டிருக்கின்றன. க்ரிஃபினின் வரையறுப்பிலும் தேசத்தின் புத்தியிர்ப்பு வெகு அருகில் நிகழ இருக்கிறது என்ற கருத்தமைவும், வெகுமக்கள் தன்மை (இந்த இரு நாடுகளின் குறிப்பான அனுபவங்கள்) ஆகிய இரு அம்சங்கள் பாசிசத்தின் பொதுவான வரையறுப்பாக இடம் பெற்றன.

ஆனால், இரண்டாம் உலகப் போரின் முடிவுக்குப் பிறகு, பாசிசச் சக்திகளால் விளைந்த பேரழிவுகளை வெகுமக்கள் அனுபவித்து உணர்ந்தபிறகு, பாசிசத்தின் இக்குறிப்பான வடிவங்களின் சிறு வெளிப்பாடுகளும் வெகுமக்களின் அங்கீகாரத்தைப் பெறமுடியாதவையாகிப் போயின. பாசிசச் சக்திகளும் தாம் இனி அந்த வடிவங்களை எடுக்கவியலாது என்பதை நன்கு உணர்ந்துகொண்டுள்ளன. புறச்சூழல் அளவிலும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஐரோப்பிய பொருளாதாரம் வளம் பெற்றதும், ”மக்கள் நல அரசுகள்” (welfare states) வெகுமக்களின் வாழ்க்கை நிலைமைகளில் கொண்டு வந்த பெரும் முன்னேற்றங்களும் தேசம் சீரழிந்திருக்கிறது என்றோ அதை உடனடியாக “புத்துயிர்ப்பு” கொள்ளச் செய்யவேண்டும் என்றோ கருத இடமின்றிச் செய்துவிட்டன.

இத்தகைய மாறிய நிலைமைகளில், பாசிச இயக்கங்கள் புதிய தளங்களில் தமது செயல்பாடுகளை நகர்த்துவதையும், புதிய வடிவங்களையும் எடுக்கத் தொடங்கியுள்ளன.

முதலாவதாக, பாசிச இயக்கங்கள், ”தேசப்புத்துயிர்ப்பு” என்ற கருத்தமைவை ஒரு சர்வதேச அல்லது பல்தேசியக் கூட்டமைவு என்ற தளத்திற்கு நகர்த்தியிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, ஐரோப்பா வெள்ளை இனத்தவர்களுக்கு மட்டுமே உரியது என்று முழங்கும் ஆப்பிரிக்கர்கள் – ஆசியர்கள் மீதான இனவெறுப்பு, முன்னாள் சோவியத் யூனியனில் இருந்த பல தேசிய இனங்களின் மீதான ரசிய ஆதிக்கத்தை வலியுறுத்தும் போக்கு, தேசிய இனங்களின் சிறைக்கூடமான இந்தியாவைப் பிளவுபடாமல் காப்பாற்ற வலியுறுத்தும் இந்துத்துவப் போக்கு, இந்தியத் தேசித்திற்குள்ளாக இருப்பதை அங்கீகரித்துக் கொண்டே தீவிர இனவாத – பிரதேசவாதத்தை வலியுறுத்தும் போக்கு – சிவசேனா, என்பவற்றைக் குறிப்பிடலாம்.

“தேசப்புத்துயிர்ப்பு” ஒரு நீண்ட இடைக்காலத்தில் சிக்குண்டு இருப்பதாக பாசிஸ்டுகளின் சுயபுரிதல் பரிணாமம் பெற்றிருப்பது இதற்கான காரணங்களில் ஒன்று. மற்றது, இரண்டாம் உலகுக்குப் பிறகான முதலாளிய வளர்ச்சி, பெரும் அளவிலான ஆசிய மற்றும் ஆப்பிரிக்க மக்களின் குடிபெயர்வுகளை பல்வேறு காரணிகளால் சாத்தியப்படுத்தியிருக்கிறது. அதனால் விளைந்த பெரும் அளவிலான இனக்கலப்புகளை நீக்கி ஐரோப்பிய (இன்னபிற மேற்கூறிய எடுத்துக்காட்டுகளும்) அளவில் இனத்தூய்மையை உருவாக்குவதே தற்சமயம் முக்கிய பிரச்சினையாக முன்னிற்கிறது என்றும் பாசிஸ்டுகளின் சுயபுரிதலில் மாற்றம் நிகழ்ந்திருப்பது.

“தேசப்புத்துயிர்ப்பு” என்ற கருத்தமைவை நவ – பாசிஸ்டுகள் முற்றிலுமாகத் துறந்துவிடவில்லை. அது நீண்ட கால இலக்காகவும், அதற்கு முன்னதாக பிரதேச அளவிலான இனக்கலப்புகளைக் களைவது தற்காலத்தைய அவசியமாகவும் அவர்களது புரிதலில் நுணுக்கம் கூடியிருக்கிறது எனலாம்.

இரண்டாவதாக, ஒரு மையப்படுத்த தேச அளவிலான, அமைப்பு என்ற நிலையில் இருந்து, அதிகாரப் படிநிலை வரிசையற்ற, மையம் சிதறுண்ட, தலைமையற்ற, தெளிவான வரையறைகள் அற்ற சிறு சிறு குழுக்களாக பாசிச அமைப்புகள் பரிணாமம் பெற்றிருக்கின்றன. இரு உலகப் போர்களுக்கு இடையிலான, பாசிசத்தின் நன்கு அறியப்பட்ட அடையாளங்களான “ஒரே மக்கள், ஒரே பேரரசு, ஒரே தலைவன்” என்ற முழக்கம் எங்கு முளைவிட்டாலும் அடையாளம் காணப்பட்டு, துடைத்து அழிக்கப்படும் என்பதை நன்கு உணர்ந்துகொண்டுள்ள நிலையில், மைய நீரோட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சியாக செயல்பட முடியாது என்ற நிலையில், சமூகத்தில் அவற்றுக்கு அங்கீகாரம் இனியும் கிடைக்க வாய்ப்பே இல்லை என்ற நிலையில், தமக்குப் பாதகமான சூழலே மேலோங்கியிருக்கிறது என்பதை உணர்ந்த நிலையில், இத்தகைய சிறு குழுக்களின் வடிவத்திற்கு பாசிசம் நகர்ந்திருக்கிறது.

இந்த நவ – பாசிசக் குழுக்கள் செயல்படும் களம், மைய நீரோட்ட சிவில் – சமூக வெளிகள் என்பதில் இருந்து, கருத்தமைவுகளை மாற்றியமைக்கும் நுணுக்கமான தளங்களுக்கு நகர்ந்திருக்கிறது. இரு உலகப் போர்களுக்கிடையில் உருவெடுத்த பாசிசத்தின் கொடூரங்களை மறக்கடிச் செய்யும் வகையிலான, கருத்தமைவுகள் தளத்திலான தாக்குதலைத் தொடுப்பது இவற்றின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்றாக இருக்கிறது. இசைக் குழுக்கள், இணைய தளப் பிரச்சாரக் குழுக்கள், ரகசிய வன்முறைக் குழுக்கள், தனிநபர் பயங்கரவாதச் செயல்பாடுகள் என்ற வடிவங்களை இந்த நவ – பாசிசம் எடுத்திருக்கிறது (இசைக் குழுக்கள் தவிர்த்த ஏனைய வடிவங்களையும், இந்தியச் சூழலுக்கே உரிய வேறு பல அமைப்பு வடிவங்களையும் ஆர். எஸ். எஸ் –ன் நடவடிக்கைகளை அறிந்தவர்களுக்கு விளக்கத் தேவையில்லை).

இறுதியாகக் குறிப்பிட்ட தனிநபர் பயங்கரவாதச் செயல்பாடுகள், பாசிசத்தின் இன்னொரு அம்சத்தை நோக்கி நம்மை நகர்த்திச் செல்லும். நன்கு அறியப்பட்ட இரு எடுத்துக்காட்டுகள்: அமெரிக்காவில் ஓக்லஹோமா நகரில் Timothy McVeigh  மற்றும் இலண்டனில்  David Copeland நிகழ்த்திய தனிநபர் பயங்கரவாத தாக்குதல்கள். இருவருமே இத்தகைய சிறு பாசிசக் குழுக்களின் செல்வாக்கிற்கு ஆட்பட்டு – இரண்டாமவர் எந்த இயக்கத்திலும் உறுப்பினராக இல்லாதவர், இணைய தளத்தில் அக்குழுக்களின் பிரச்சாரங்களின் செல்வாக்கினால் உந்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது – இனவெறி மிகுந்த தனி பயங்கரவாதத் தாக்குதலில் இறங்கியவர்கள்.

ஒரு “புனிதப் போரில்” தமது பங்களிப்பை ஆற்றியாக வேண்டும் என்ற உந்துதலுக்கு ஆட்பட்டு இத்தகையவர்கள் செயல்பட்டிருப்பதுவே பாசிசத்தின் மற்றுமொரு முக்கிய அம்சத்திற்கு நகர்த்துவது. பாசிசம் ஒரு மதநீக்கம் செய்யப்பட்ட அரசியல் மதம் (political religion) என்ற தன்மையை கொண்டிருப்பது என்பதுவே அது.

The Nature of Fascism நூலில் ரோஜர் க்ரிஃபின் பாசிசத்தை வரையறுக்கும் அம்சங்களில் ஒன்றாக, ”அரசியல் மதம்” என்பதை ஏற்றுக்கொள்ளவியலாது என்று நிராகரித்திருந்தார். ஆனால், 1998 ற்குப் பிறகான விவாதங்களில், “அரசியல் மதம்” என்ற கருத்தமைவு குறித்து பிற கல்வியாளர்களின் ஆய்வுகள் சுட்டும் நிதர்சனங்களை உணர்ந்து பாசிசம் அத்தகைய தன்மை கொண்டது என்பதையும் அதன் வரையறுக்கும் கூறுகளில் ஒன்று என்பதையும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

ஜெர்மனியிலும் இத்தாலியிலும் தோன்றிய இரு பாசிச இயக்கங்களுமே வழமையான மதங்களின் இறை என்ற அம்சத்தை மட்டும் நீக்கிய, ஆனால், அதன் அத்தனை அம்சங்களையும் சுவீகரித்துக் கொண்ட, மதநீக்கம் செய்யப்பட்ட அரசியல் மதங்களாகவே (secular political religion) திகழ்ந்தன என்பதை அக்காலத்தைய ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியிருந்தபோதும் அக்கருத்தமைவு பெரிதும் புறக்கணிக்கப்பட்டே வந்தது.

சமீப ஆய்வுகள் மீண்டும் அந்த அம்சத்தின்மீது கவனத்தைக் குவித்துள்ளன. மதங்களின்பால் ஹிட்லர் முசோலினி இருவருக்கும் ஒரே விதமான பார்வையே இருந்தது. மதங்களின் இடத்தை தமது கொள்கை நிறைவு செய்ய வேண்டும் என்பதுவே அது. ஹிட்லர் மிக வெளிப்படையாகவே ஜெர்மானிய மக்களை நோக்கி “எனக்குத் தேவை உமது ஆன்மாக்களே!” என்றான்.

ஆனால், இருவரது அணுகுமுறைகளும் அவரவரது நாட்டுச் சூழலுக்கு ஏற்ப, தந்திரோபாய உத்திகளைக் கொண்டிருந்தன. ஹிட்லர் ஆரம்பம் முதலே கிறித்தவத்தின் மீது தாக்குதல் தொடுக்காமல் சமரச அணுகுமுறையையே மேற்கொண்டிருந்தான். ஜெர்மனியில், தேர்தல் வழிப்பட்ட பாதையின் வழியாகவே அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்பதை உணர்ந்திருந்ததால், ஹிட்லருக்கு இந்தச் சமரசம் தவிர்க்க முடியாமல் இருந்தது. முசோலினியோ இடதுசாரி முழக்கங்களை முன்வைத்து கத்தோலிக்கத்தின் மீது தாக்குதல் தொடுத்தே அதிகாரத்தைக் கைப்பற்றினான். அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர், கத்தோலிக்கத்துடன் இணக்கமாகச் செல்வது தனக்குப் பலவழிகளில் நல்லது என்பதைக் கண்டு கொண்டான். ஆனால், இரண்டு பாசிச சர்வாதிகாரிகளுமே, மதங்களின் இடத்தில் தமது கொள்கையை நிலைநாட்டுவதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தனர்.

நவ – பாசிசக் குழுக்கள் சிறு குழுக்களாக இயங்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருந்தபோதும், அவர்களது இனத்தூய்மை சார்ந்த நம்பிக்கைகள் ஒரு மதவெறித் தன்மைக்கு நிகரான – ஆனால், மத நம்பிக்கையற்ற – வெறி கொண்டிருப்பது மீண்டும் அத்தகைய அரசியல் மதம் என்ற தன்மை பாசிசத்தின் முக்கிய கூறுகளில் ஒன்றாக இருப்பதையே உணர்த்துகிறது.

இத்தெளிவுகளுக்குப் பிறகு, பாசிசத்தை வரையறுக்கும் மிகப் பொதுமையான கூறுகளை 2004 ற்குப் பின்னான எழுத்துக்களில் க்ரிஃபின் செறிவுபடுத்தியிருக்கிறார்.

அவற்றை இவ்வாறு தொகுத்துக் கொள்வது நலம்:

தேசப்புத்துயிர்ப்பு (palingenesis) உடனடியாக அடையத்தக்க இலக்கு என்ற அர்த்தத்தில் அல்லாமல், பொதுவான இலக்காக வைப்பது. நிலவும் சூழல்களுக்கு ஏற்ப அது உடனடியாக அடையத்தக்கதாகவோ அல்லது நீண்டகால நோக்காகக் கொண்டு இடைப்பட்ட காலத்தில் பிரதேச அளவிலான இனத்தூய்மையை வலியுறுத்தும் இலக்கை வலியுறுத்துவதாக உருக்கொள்ளலாம்.

அதிதீவிர தேசியவாதம் (ultra – nationalism) என்பதில் மாற்றமில்லை. அது இனத்தூய்மைவாதத்தையே மையக்கருவாகக் கொண்டது.

மதநீக்கம் செய்யப்பட்ட, ஆனால், மதத்தின் இடத்தை இட்டு நிரப்புகிற அரசியல் மதமாகத் (political religion) திகழ்வது.

இவை அனைத்திற்கும் மூலக் கருவாக ஒரு தொன்மத்தைக் கொண்டிருப்பது (mythic core).

Fascist minimum – பாசிசத்தின் குறைந்தபட்ச, தீர்மானகரமான பொது வரையறை என்று இதைக் கூறலாம்.

இப்பொது வரையறுப்பு இடம் – காலம் – சூழல் இவற்றின் தனித்தன்மைகள் சார்ந்து பல்வேறு தனித்துவமான, அல்லது கலவையான வடிவங்களைக் கொண்டே நடைமுறையில் பாசிச இயக்கங்களாக உருக்கொள்கின்றன. மேலும், தெளிவாகச் சொல்வதென்றால், அத்தகைய பல்வேறு தனித்துவமான நடைமுறை வெளிப்பாடுகளில் இருந்து பெறப்பட்ட பொதுமை இது. கோட்பாட்டளவில் “ideal type” என்று சொல்லத்தக்கது.

வெகுஜனத் தன்மையும், உடனடிப் புத்துயிர்ப்பும் சூழல்களையொட்டி மாறக்கூடியவை என்பதால் அவை பொதுவரையறுப்பில் இருந்து நீக்கப் பெற்றுள்ளன.

பாசிசம் குறித்த இந்த பொதுவரையறுப்பைக் கொண்டு நோக்கினால் “நாம் தமிழர்” அறிக்கை ஒரு தேசிய அறிக்கையா, பாசிச அறிக்கையா என்பது விளங்கிவிடும்.

தமிழின் முதல் கரசேவகர்களும் அவர்களது சந்தேகப் பட்டியலும்

ரோஜர் க்ரிஃபினின் வரையறுப்பினடியாக நோக்கும்போது ஆவணத்தின் அடிநாதமாக இருப்பது பாசிசக் கருத்தியலே என்பது உறுதியாகிறது.

பாசிசத்தின் வரையறுப்பில் முதல் அம்சமான தேசப்புத்துயிர்ப்பு (palingenesis):

”நாம் தமிழர்” ஆவணம் முழுவதும் ”தேச உரிமை மீட்சி” என்ற தொடர் பரவியிருப்பதை வாசிப்பவர்கள் கவனிக்கலாம். ”திராவிடக்” கருத்தியலின் ஆதிக்கத்தாலும், பிற மொழியாளர்களின் சுரண்டலாலும் தமிழ்ச் சமூகம் சிதைவுபட்டிருக்கிறது என்பதைத் தொடர்ந்து குறிப்பிடும் ஆவணம், அதிலிருந்து “மீட்சி” பெறுவதற்கான வழியாகத் தமிழ் நாட்டை தமிழர்களே ஆள வேண்டும் என்பதை வலியுறுத்துவதும் வெளிப்படை. ஆனால், இழந்த உரிமைகளை மீட்பது என்ற பொருளில், அடிமைத் தளைகளில் இருந்து விடுபடுவது என்ற பொருளோடு நின்றுவிடவில்லை. அவ்வாறு இருந்திருந்தால், அது தேசிய விடுதலை நோக்கு என்ற அளவில் இருந்திருக்கும்.

மாறாக, “மீட்சி” என்பதை ஆவணம் முன்மொழிவது, பாசிசத்திற்கே உரிய  ”தேசப்புத்துயிர்ப்பு” என்ற வகையில் அமைந்திருப்பதை ” ஆவணத்தை விளக்கிடும் உரைவீச்சுத் தெறிப்புகள்” என்ற பகுதியில் உள்ள “உரைவீச்சுத் தெறிப்பு” ஒன்று தெள்ளத் தெளிவாக உணர்த்திவிடுகிறது.

பக்கம் 48 இல்:

”நாம் தமிழர் கட்சி

ஆட்சிக்காக மட்டுமல்ல!

தமிழின மீட்சிக்காக!”

என்று தாம் தமிழின மீட்சிக்கானவர்களே என்ற விளக்கத்தைத் தொடர்ந்து, அடுத்த பக்கத்திலேயே:

”கட்டடத்திற்கு

வெள்ளையடிக்க வந்தவர்கள் அல்லர்!

அந்தக் கட்டடத்தையே இடித்துவிட்டு

மறுகட்டடத்தைக்

கட்ட வந்த புரட்சியாளர்கள்!” (பக்கம்: 49)

என்று தெளிவுபடுத்துகிறார்கள்.

தமிழ் தேசத்திற்கு விடுதலை பெற்றுத்தருவது என்பதல்ல; ”மறுகட்டடத்தை” உருவாக்குவதே அவர்களது இலக்காம். ”நாம் தமிழர்” ஆவணத்தின் “தேசப்புத்துயிர்ப்பு” நோக்கு, இக்குறிப்பிட்ட வகையிலானதாக – பழைய கட்டடத்தையே இடித்துவிட்டு புதிய கட்டடத்தைக் கட்டுவதாக (கொத்தனார்கள் என்று சொல்லிக் கொள்கிறார்களோ, இன்ஜினியர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்களோ தெரியவில்லை! ஆனால், கட்டடத்தை இடிக்கப் போவதாகச் சொல்வது கரசேவகர்களை நினைவுபடுத்தினால் அதற்கு அவர்களே பொறுப்பு!) வெளிப்படுகிறது.

இவ்விடத்தில் ஒரு ”தொன்மக் கரு”வின் வெளிப்பாடே பாசிசம் என்பது குறித்து சற்று தெளிவுபடுத்திக் கொள்வது அவசியம். அத்தொன்மக் கரு வேறொன்றுமில்லை. ”புத்துயிப்பு” அல்லது “மறுபிறப்பு” என்ற கருதுகோளே.

உலகின் அனைத்துப் பண்பாடுகளிலும் இந்தப் “புத்துயிர்ப்பு” அல்லது “மறுபிறப்பு” என்ற கருதுகோள் உறைந்திருப்பதைக் காணமுடியும். மனித ஆன்மாவிற்கு அழிவில்லை, என்ற கற்பனையில் ஊற்றெடுத்து, அந்த ஆன்மா இன்னொரு உடல் உருக்கொள்ளும் என்ற நம்பிக்கையாக உருமாறி, பின் நிறுவனமயப்பட்ட பல்வேறு மதங்களின் ஆதார சுருதியாக இப்புத்துயிர்ப்பு என்ற கருதுகோள் நிலைபெற்றதையும் காணமுடியும். மனித குலத்தின் ஆதியிலிருந்து அதனை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிற மரணத்தின் மீதான அச்சத்தில் இருந்து பிறப்பதே இத்தொன்மக் கரு. அதை சமூகத்தின் மீது, குறிப்பாக தேசத்தின் மீது சாற்றுவதே பாசிசத்தின் தனித்தன்மை.

பல்வேறு சமூகப் பண்பாட்டுச் சூழல்களின் குறிப்பான தன்மைகளுக்கே உரிய முறையில் இத்தொன்மக் கரு பல்வேறு வடிவம் கொள்கிறது. குறிப்பான, சமூகப் பண்பாட்டுச் சூழல்களின் தனித்தன்மைகளில் தோன்றும் பாசிச இயக்கங்கள், இத்தொன்மக் கருவை தமது ஆதாரச் சுருதியாகக் கொண்டு, தமது சமூக வரலாற்றுப் பின்புலத்திற்கே உரிய, அறிவியலுக்குப் புறம்பான மூடத்தனமான நம்பிக்கைகளோடு இணைத்து உருக்கொள்கின்றன. எடுத்துக்காட்டாக, ஜெர்மானிய நாஜிக்கள், இத்தொன்மக் கருவோடு இணைத்தது, ”தூய ஆரிய இனம்” என்ற அறிவியலுக்கு முற்றிலும் எதிரான இனப்பெருமை சார்ந்த மூடத்தனம்.

நமது சூழல் முளைவிட்டிருக்கும் பாசிஸ்டுகள், இப்புத்துயிர்ப்பு அல்லது மறுபிறப்பு (ஆவணம் கைக்கொண்டிருக்கும் மொழியில் ”மறுக்கட்டடம்”) என்ற தொன்மக் கருவோடு இணைக்கும் அறிவியலுக்குப் புறம்பான அல்லது போலியான அறிவியல் மீது கட்டமைக்கப்பட்ட இரு மூடத்தனமான நம்பிக்கைகள், “உலகின் மொழிகளுக்கெல்லாம் ஆதி மொழியான தமிழ்” மற்றும் “கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி”.

ஆவணத்தின் முதல் பத்தியே போலியான அறிவியலின் மீது கட்டப்பட்ட இந்த இரு மூடநம்பிக்கைகளில் இருந்தே தொடங்குகிறது. உலகின் முதல் மொழி தமிழ், லெமூரியாக் கண்டம், குமரிக் கண்டம் என்பவற்றுக்கெல்லாம் எந்தவிதமான அறிவியில் பூர்வமான ஆதாரங்களும் இல்லை. இதை எத்தனை முறை கூறினாலும் விளங்கிக் கொள்ள மறுக்கிற மூட நம்பிக்கையாளர்களின் கருத்துக்களை முதல் பத்தியிலேயே தனது முற்கோளாகக் கொண்டு தொடங்கியிருக்கிறது ஆவணம்.

மேலும் ஒரு படி மேலே சென்று அதற்கான ”அறிவியல் பூர்வமான ஆதாரமாக” புகழ் பெற்ற மொழியியல் ஆய்வாளரான நோம் சோம்ஸ்கியின் கூற்றாக, அப்பட்டமான பொய் ஒன்றைக் கூறவும் தயங்கவில்லை.

அது என்ன பொய்?

இதுதான்: ”அதனால்தான் புகழ் பெற்ற மொழியியல் அறிஞர் நோம் சோமிசிகி அவர்கள், “உலக மொழிகள் அனைத்தும் ஒரு மூலமொழியில் இருந்தே பிறந்திருக்க வேண்டும்; அம் மூலமொழி தமிழாக இருக்கலாம்”, என்று கருத்துரைத்துள்ளார்.”

முதலாவதாக, நோம் சோம்ஸ்கியின் ஆய்வுகள் மொழிகளின் வரலாற்றுத் தோற்றம் என்ற புலம் சார்ந்தவையே அல்ல. மொழியைக் கற்பதற்கான திறன், மனித மூளையின் அமைப்பில் உள்ளார்ந்து இருக்கிறது என்ற கருதுகோளையே அவர் தமது ஆய்வுகள் வழியாக முன்வைத்தார். அதன் அடிப்படையில் Transformative Generative Grammar என்பதாக இன்று பரவலாக அறியப்படுவதை முன்வைத்தார். 10 ஆண்டுகளுக்கு முன்பாக, அவரது மேற்குறிப்பிட்ட மொழியியல் அடிப்படையில் அமைந்த இலக்கண நோக்குகள் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறையைச் சேர்ந்த மொழியியல் துறையில், உசாத்துணை நூல்களாக பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

நோம் சோம்ஸ்கி, இத்தகைய மூடத்தனமான ஒரு கருத்தை எங்குமே கூறியிருக்கவில்லை. இத்தகைய அறிவியலுக்குப் புறம்பாக ஒரு கருத்தை அவரது கூற்றாக ஆவணம் தன் முதல் பத்தியிலேயே வைத்திருப்பது ஏதோ அறியாமல் செய்த பிழை என்று கருவும் இயலாது. தமது மூடத்தனமான கருத்துக்களுக்கு வலு சேர்க்க, அப்பட்டமான ஒரு பொய்யை கூசாமல் சொல்லத் துணிந்திருக்கிறது ஆவணம் என்பது தெள்ளெனத் தெரிகிறது.

அவ்வகையில், தமிழ் நாட்டின் அரசியல் வரலாற்றிலேயே முதல் முறையாக, முதல் பத்தியிலேயே அப்பட்டமாக பொய் சொல்லத் துணிந்த ஆவணம் என்ற பெருமையையும் “நாம் தமிழர்” ஆவணம் பெற்று நிற்கிறது.

இருக்கும் கட்டடத்தை இடித்துவிட்டு (கரசேவகப் பணி) “மறுகட்டடத்தை” கட்டுவோம் என்ற விளக்கத்தில் “நாம் தமிழர்” கட்சி ஆவணம், தனக்கே உரித்தான “தேசப்புத்துயிர்ப்பு” என்ற பாசிசத்தின் மையமான அம்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. இத் தொன்மக் கருவிற்கு வலுசேர்க்கும் விதமாக “ஆதிக் குடி” “முதல் மொழி” என்ற அறிவியல் பூர்வமற்ற மூடத்தனமான கற்பனைகளையும் அவற்றை நிறுவ இரு பெரும் அறிஞர்களின் கூற்றாக அப்பட்டமான பொய்களையும் சொல்லத் துணிந்திருக்கிறது.

அதே சமயம், இத்”தேசப்புத்துயிர்ப்பு” வெகுவிரைவில் நிகழக்கூடிய சாத்தியமில்லை என்பதிலும் ஆவணம் தெளிந்தே இருக்கிறது. “தேசிய இனங்களின் சிறையாக” அரை நூற்றாண்டுக்கும் மேலாக, வலுவாக தாக்குப் பிடித்து நிற்கும் இந்திய அரசை மீறி, அத்தனை சுலபத்தில் தமிழ் தேசப் புத்துயிர்ப்பை நிகழ்த்திவிட இயலாது என்ற தெளிவு இருப்பதாலேயே,

எம் இன எதிரிகளின் சட்டத்திற்குட்பட்ட

தேர்தல் பாதையை நாம் விரும்பி ஏற்கவில்லை.

வரலாறு நம்மீது வலிந்து திணித்துள்ளது. (பக்கம்: 53)

என்ற விளக்கத்தையும் அளிக்கிறது.

இந்திய வல்லாதிக்க அரசை மீறித் தமிழ் தேச புத்துயிர்ப்பை உடனடி நிகழ்ச்சி நிரலில் வைப்பது சாத்தியமில்லை என்பதை உணர்ந்திருப்பதாலேயே, இந்திய இறையாண்மையை ஏற்றுக் கொண்டு, தேர்தலில் பங்கேற்று, ஒரு நீண்ட கால நோக்கில் “தேசப் புத்துயிர்ப்பை” நிகழ்த்தும் நிகழ்ச்சி நிரலை மேற்கொள்கிறது.

தற்காலத்தைய நவ – பாசிஸ்டுகள், தமது நிகழ்ச்சி நிரல்களை ஒரு பல்தேசிய மட்டத்திற்கு நகர்த்தியிருப்பதற்கு ஒப்பானது இது. நவ – பாசிசக் கும்பல்களில் ஒன்றான சிவசேனை கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஒப்பானது.

பாசிசத்தின் இரண்டாவது முக்கிய அம்சமான அதிதீவிர தேசியவாதத்திற்கு (ultra – nationalism) இனி நகர்வோம்.

தமிழ் தேசத்திற்கான வரையறுப்பாக ஸ்டாலினின் இலக்கணத்தை ஆவணம் பக்கம் 31 – 32 ல் குறிப்பிடுகிறது. ஸ்டாலினின் வரையறுப்பை ஆவணம் எங்ஙனம் திரித்திருக்கிறது என்பதைக் காண்பதற்கு முன்பாக, அவரது வரையறுப்பை தெளிவுபடுத்திக் கொள்வது நலம்.

ஸ்டாலின் தமது தேசம் (nation) குறித்த வரையறுப்பில் இனம் (race) என்ற வகையினத்தை மிகக் கவனமாகக் குறிப்பிட்டு விலக்கினார். “மார்க்சியமும் தேசியப் பிரச்சினையும்” என்ற அவரது புகழ் பெற்ற சிறு நூலின் முதல் கட்டுரையின் ஆரம்ப வரிகளிலேயே இதை தெள்ளத்தெளிவாக விளக்கியிருக்கிறார்:

”ஒரு தேசம் என்பது என்ன?

தேசம் என்பது முதன்மையாக ஒரு சமூகக் குழுமம். ஒரு மக்கள் தொகுதியின் உறுதியாக நிலைபெற்ற சமூகக் குழுமம்.

இச்சமூகக் குழுமம், இன ரீதியாகவோ, பழங்குடியினர் அடிப்படையிலானதோ அன்று. நவீன இத்தாலிய தேசம் ரோமர், டியூட்டானியர், எட்ருஸ்கியர், கிரேக்கர், அராபியர் இன்னும் இதுபோன்ற பல இனங்களால் உருவானது. ஃப்ரெஞ்சு தேசம் கௌல், ரோமர், பிரித்தானியர், டியூட்டானியர் இன்னும் பலரால் உருவானது. பிரிட்டிஷ், ஜெர்மன் இன்னும் இது போன்ற மற்ற தேசங்களும் இவ்வாறு பல்வேறு இனத்தினர், பழங்குடியினரின் கலப்பினால் உருவானவை என்றே சொல்ல முடியும்.

ஆக, ஒரு தேசம் என்பது, வரலாற்று ரீதியாக உருவாகி அமைந்த ஒரு மக்கள் தொகுதியின் சமூகக் குழுமமே தவிர, இன ரீதியாகவோ பழங்குடியினர் அடிப்படையிலோ அமைந்ததன்று.”

(குறிப்பு: மொழியாக்கம் எனது. Community என்பதை சமூகக் குழுமம் என்பதாகவே தொடர்ந்து மொழியாக்கம் செய்து வருகிறேன். அதை social group என்று திருப்பி மொழியாக்கம் செய்து புரிந்து கொள்ள வேண்டாம் என்று கோருகிறேன்)

[What is a nation?

A nation is primarily a community, a definite community of people.

This community is not racial, nor is it tribal. The modern Italian nation was formed from Romans, Teutons, Etruscans, Greeks, Arabs, and so forth. The French nation was formed from Gauls, Romans, Britons, Teutons, and so on. The same must be said of the British, the Germans and others, who were formed into nations from people of diverse races and tribes.

Thus, a nation is not a racial or tribal, but a historically constituted community of people.

http://marxists.org/reference/archive/stalin/works/1913/03a.htm#s1%5D

இந்த முன்நிபந்தனையை வரையறுத்த பின்னரே ஸ்டாலின், அக்கட்டுரையின் பிற்பாதியில் தேசிய இனத்திற்கான தமது வரையறுப்பைத் தந்திருப்பார்.

அவ்வரையறுப்பு பின்வருமாறு:

”ஒரு பொதுமொழி, நிலப்பரப்பு, பொருளாதார வாழ்வு, ஒரு பொதுப்பண்பாட்டின் ஊடாக வெளிப்படும் பொதுவான உளவியல் நிலை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, வரலாற்று ரீதியாக உருவாகி நிலைபெற்ற ஒரு மக்கள் தொகுதியின் சமூகக் குழுமமே ஒரு தேசமாகும்.”

[A nation is a historically constituted, stable community of people, formed on the basis of a common language, territory, economic life, and psychological make-up manifested in a common culture.- மேலுள்ள சுட்டி காட்டும் அதே பக்கத்தில்]

ஆவணம் இவ்வரையறுப்பை மிகச் சரியாக, பிசகேதும் இன்றித் தருகிறது:

”தமிழர்கள் ஒரு தேசிய இனம் எனும் தகுதியுடைய இனம். இவ்வினத்திற்கான பொதுமொழி, தொடர்ச்சியான நிலப்பரப்புடைய பொதுவான வாழும் பகுதி, பொதுப் பொருளாதார வாழ்வு, ஓரினமென்ற மன இயல்பு ஆகிய கூறுகளுடன் வரலாற்று அடிப்படையில் உருவான நிலையான மக்களினம், தமிழ் குமுகாயமாகும். தனக்கென அரசியல் பண்பாட்டு வாழ்வியல் உரிமைகளோடும், இறையாண்மையோடும் இருந்த, இருக்க வேண்டிய ஒரு இனம், தமிழினம் ஆகும்.”  (பக்கம் 31 – 32) (அழுத்தம் எனது. அழுத்தம் தராப்படாத பகுதி ஸ்டாலினின் வரையறுப்பு)

ஆனால், முன்னொட்டாகவும் பின்னொட்டாகவும் சேர்த்திருக்கும் வரிகளிலும், வரையறுப்பின் முதல் சொல்லாக்கத்திலும், மிக வெளிப்படையாக, இனம் என்பதற்கே அழுத்தம் தருகிறது. ஸ்டாலினின் வரையறுப்பைச் சரியாகத் தரும் அதே போதில், அவர் விலக்கி வைத்த இனம் என்ற வகையினத்தின் அடிப்படையிலே தமிழ் தேசத்தை வரையறை செய்கிறது.

தேசத்தின் மையக்கூறாக, தூய இனம் என்ற வகையினத்தைக் கொள்வதாலேயே ஆவணம் முழுக்க இனவாதம் தலைவிரித்து ஆடுவதாக இருக்கிறது.

ஆவணம் விவரித்துச் செல்லும் சமூக வரலாற்றின்படி, இந்தியத் துணைக்கண்டம் முழுவதுமே (பாகிஸ்தான் உட்பட) தமிழர் என்ற இனத்தால் ஆளப்பட்டது. ஆரிய இனப் படையெடுப்பிற்குப் பின் நிகழ்ந்த இனத்திரிபால் உருவானதே திராவிடம் என்ற இனம். தமிழ் மொழி திரிந்ததால் உருவானவையே இந்தியத் துணைக்கண்டம் முழுதும் பரவியிருக்கும் பிற மொழிகள்.

இத்தகைய இனத்திரிபில் இருந்து, தமிழ் இனத்தையும் தமிழ் மொழியையும் அதன் தூய நிலைக்கு மீட்பதே ஆவணம் முன்மொழியும் அரசியல். இது தேசிய வாதமன்று. தூய இனவாதம்.

இவ்வாறு, இனத்திரிபு என்று நோக்குவதாலேயே, திராவிடத்தை வேரறுக்கக் கோருகிறது ஆவணம். மொழித் திரிபு என்று நோக்குவதாலேயே தமிழ் நாட்டில் வாழும் பிற மொழியினரைத் தம் தாய் மொழி தமிழே என்று உணர்ந்து ஏற்றுக் கொள்ளுமாறு மென்மையாக மிரட்டவும் செய்கிறது:

”உங்களைப் பிறமொழியாளர் என்று சொல்லி,

உங்களைப் பிறராகப் பார்க்க நாங்கள் விரும்பவில்லை.

உங்கள் மூலத் தாய்மொழியாம் தமிழுக்குத் திரும்பிட

உங்களுக்கு உள்ள முழு உரிமையை நாங்கள் ஏற்கிறோம்.” (பக்கம்: 50)

ஒரு தேசத்தில் சிறுபான்மையினராக வாழும் பிற மொழி பேசுவோர், தமது தாய்மொழியைக் கைக்கொள்வதற்கான முழு உரிமையை ஏற்பதுவே ஜனநாயக அணுகுமுறையாக இருக்க முடியும். அவர்களது மூல மொழி, பெரும்பான்மையினரின் மொழியே என்று கற்பித்து அதற்குத் திரும்பிட உரிமை தருகிறோம் என்பது – இதில் முழு உரிமை வேறாம் – என்பது மிரட்டல் அல்லாமல் வேறு என்ன? இனவாத வெறியில் இருந்தல்லாமல் வேறு எதில் இருந்து இத்தகைய மிரட்டல் எழ முடியும்!

இதன் அடுத்த வரிகளிலேயே மீண்டும்:

தனி இனமாக நீங்கள் வாழ வாழ்த்துகிறோம்; ஆனால் ஒன்று;

தமிழர் தேசத்தில் தமிழர் ஆட்சியை நீங்கள் வாழ்த்துங்கள்!

எனக்கு அடங்கி, என்னை வாழ்த்தினால் நீ இங்கு வாழலாம் என்ற பெரிய அண்ணாத்தையின் (big brother attitude) மென்மையான மிரட்டல் அல்லாமல் இது வேறு என்ன!

ஸ்டாலினின் வரையறுப்பைத் தரும் ஆவணம், அவரது கருத்தில் பல்வேறு இனங்களின் கலப்பினூடாக வரலாற்று ரீதியாக நிலைபெற்ற ஒரு மக்கள் தொகுதியினரே ஒரு தேசமாக உருப்பெறுகின்றனர் என்பதைக் கவனமாகத் தவிர்க்கிறது. (ஸ்டாலினின் இவ்வரையறுப்பைக் காட்டிலும் செறிவான நோக்குகளை இங்கு விரிவஞ்சித் தவிர்க்கிறேன்). பல இனத்தவர், பல மொழி பேசுபவர் கலந்து, நெடுங்கால வரலாற்று தொடர்ச்சியில் ஊடாடி, உருப்பெற இருப்பதே நவீனத் தமிழ் தேசம் என்பதை உணராது, தூய இனவாதச் சகதியில் வீழ்ந்தமையால், இனவெறி விஷத்தைக் கக்குவதாக இருக்கிறது.

எந்தவொரு தேசமும் தூய இனக்குழுவால் நிலைபெற்றவை அல்ல. தூய இனவாதம் தேசியவாதமும் அல்ல. தூய இனவாதம், பாசிசத்தின் முக்கிய அம்சமான ultra – nationalism – அதிதீவிர தேசியவாதமே.

பாசிசத்தின் மூன்றாவது முக்கிய அம்சமான அரசியல் மதம் (political religion) “நாம் தமிழர்” ஆவணத்தில் எங்ஙனம் உருக்கொண்டிருக்கிறது என்பதோடு இப்பகுதியை முடித்துக் கொள்கிறேன்.

செயற்பாட்டுக் கொள்கைகள் பகுதியில், ”நாளைய தமிழர் ஆட்சியில், அரசு சமயம் சாராது. ஆனால், யாருடைய தனிப்பட்ட சமய நம்பிக்கையிலும் அரசு தலையிடாது.” (பக்கம்: 60) “நாம் தமிழர்” ஆட்சி சமயச் சார்பற்றதாக இருக்கும் என்று அறிவிக்கிறது ஆவணம்.

நல்லது. ஆட்சிக் கனவோடு, நல்ல ஆட்சியை நல்குவதாகக் கனவு காண்பது மிக நல்லது.

ஆனால், முரண்பாடுகள் பகுதியில், மூன்றாம் முரண்பாடாக ”தமிழியத்தியற்கும் முகமதியத்திற்கும், தமிழியத்திற்கும் கிறித்துவத்திற்குமிடையே முரண்பாடு” (பக்கம்: 37) என்று வரையறுக்கிறது ஆவணம்.

இதை விளக்குமிடத்தில் கீழ்வருமாறு விரித்துரைக்கிறது:

“3 ஆம் முரண்பாடுகளான முகமதியமும் கிறுத்தவமும் தமிழ்த் தேசியத்தை ஒவ்வொரு காலத்தில் ஆளுமை செலுத்தியவை; சட்டப்பாதுகாப்பும், சொத்துடைமை வலுவும், பன்னாட்டுப் பின்புலமும் கொண்டு, மதவழித் தனி இனக்கட்டுமானம் கொண்டவை; முகம்மதியத் தமிழரும், கிறித்தவத் தமிழரும் தங்களுடைய முதன்மை அடையாளம், தமிழ்த் தேசிய அடையாளமே என்று உணர்ந்தறிந்து வருவாராயின், நட்பு முரண் வகையிலும், அல்வழிப் பகைமுரண் வகையிலும் இடம்பெறுவர்; இவர்கள் எச்சரிக்கையோடும் விழிப்போடும் அன்போடும்  கையாளப்பட வேண்டிய தரப்பினர்.” (பக்கம்: 39)

சமயச்சார்பற்ற அரசமைக்கப் போவதாகக் கனவு காணும் ஒரு கொள்கை ஆவணம், எல்லாச் சமயத்தினரையும் சமமாக அணுகியிருக்க வேண்டும். குறைந்தது “எச்சரிக்கையாக அணுகப்பட வேண்டியவர்கள்” என்று பட்டியலிட்டால், அதில் அனைத்து மதத்தினரையுமாவது சேர்த்திருக்க வேண்டும். ”நாம் தமிழர்” ஆவணமோ இஸ்லாமியர்களையும் கிறித்தவர்களையும் “சந்தேகப் பட்டியலில்” சேர்த்துவிட்டு, இந்துக்களுக்கு அதிலிருந்து விதிவிலக்கு அளித்திருக்கிறது. ஆர். எஸ். எஸ். பி. ஜே. பி. சிவசேனா ஆகிய இந்துத்துவ சக்திகளின் ”கொள்கைகளுக்கும்” இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதை வாசிப்பவர்களின் கற்பனைக்கு விட்டுவிடலாம்.

என்றாலும், தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதன் முதலாக, இஸ்லாமியர்களையும் கிறித்தவர்களையும் “சந்தேகப் பட்டியலில்” சேர்த்த கொள்கையை அறிவித்த முதல் ஆவணம் என்ற பெருமையையும் “நாம் தமிழர்” ஆவணமே தட்டிச் செல்கிறது என்பதைக் குறிப்பிடாமல் விடுவது வரலாற்றுக்கு துரோகம் செய்வதாகிவிடும்.

இத்தகைய நுட்பமான இந்துத்துவச் சார்புக் கொள்கையை அறிவித்தாலும், ஆவணம் எந்த ஒரு மதத்தையும் தனது உத்தியோகப்பூர்வமான மதமாக ஒப்புக்கொண்டுவிடவில்லை. மாறாக, பாசிசத்தின் கூறான, அரசியல் மதம் (political religion) ஒன்றையே தனது கொள்கையாக தெளிவாக அறிவிக்கிறது.

கலைச்சொல் விளக்கம் பகுதியில் ”தமிழியம்” என்பதாக ஆவணம் கீழ்க்கண்டவாறு வரையறை தருகிறது:

தமிழியம்: ஐந்திணை மரபுசார்ந்த இயற்கை நெறி, எண்ணியம் சார்ந்த அறிவியநெறி, பொதுமை சார்ந்த உலகியநெறி, உயிரிநேயம் சார்ந்த அருள்நெறி ஆகியவற்றை உ:ள்ளடக்கிய அறம், பொருள், இன்பம் போற்றும் விழுமிய வாழ்வியம் (வாழ்வியல் நெறி). (பக்கம்: 117)

இது ஒரு மதம் சாராத வரையறுப்பு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த வரையறுப்பின்படி வாழ்ந்தாலே ஒருவர் தமிழர் என்ற வரையறைக்குள் வருவர் என்று நிபந்தனையையும் விதிக்கிறது ஆவணம்: ”தமிழியத்தை வாழ்வியல் நெறியாகவும், தமிழர் நலனை நடைமுறையாகவும் கடைப்பிடிப்பவர் வாழும் தமிழர் ஆவார்.” (பக்கம்: 116)

இந்த வரையறுப்பின்படி இன்று வாழும் தமிழரில் ஒருவரைக்கூடத் தமிழராகச் சொல்லமுடியாது (”நாம் தமிழர்” இயக்கத்தவரின் தலைவர் கூட இதன்படித் தமிழர் அல்லர் என்றாகும்) என்பது ஒருபுறம் இருக்க, பாசிசத்தின் மூன்றாவது வரையறுக்கும் அம்சமான அரசியல் மதத்தை “நாம் தமிழர்” ஆவணம் தமிழ் மக்கள் மீது திணிக்கிறது என்பதுவே இங்கு கவனத்திற்குரியது.

மதம் தொடர்பான தனது நிலைப்பாடாக ஹிட்லர் கூறியதோடு, இந்த வரையறுப்பை ஒப்பிட்டுப் பார்ப்பது நலம்:

“தேசிய சோஷலிசம், சற்று நீண்ட காலம் ஆளுகையில் இருந்துவிட்டால், நாம் வாழ்ந்து கொண்டிருப்பதிலிருந்து மாறுபட்ட ஒரு வாழ்க்கையை நினைத்துப் பார்ப்பதுகூட சாத்திமற்றுப் போகும்.

நீண்ட கால நோக்கில், தேசிய சோஷலிசமும் மதமும் ஒத்திசைந்து இருப்பது சாத்தியப்படாத ஒன்று.

இந்த முரண்பாட்டை மதத்திற்கு எதிரான போராக அர்த்தப்படுத்திக் கொள்ளலாமா என்று சி. எஸ். எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் முகமாக ஃப்யூரர் மேற்கொண்டு கூறியதாவது:

இல்லை. இதன் பொருள் மதத்திற்கு எதிராக நாம் போர் தொடுக்கப் போகிறோம் என்பதில்லை. சிறந்த தீர்வு என்பது, எந்தவிதமான களையெடுப்புகளும் செய்யாமலேயே, இம்மதங்கள் தம்மைத் தாமே அழித்துக்கொள்ளும்படி விட்டுவிடுவதாகவே இருக்கும்.”

[When National Socialism has ruled long enough, it will no longer be possible to conceive of a form of life different from ours.

In the long run, National Socialism and religion will no longer be able to exist together.

On a question from C. S., whether this antagonism might mean a war, the Fuehrer continued:

No, it does not mean a war. The ideal solution would be to leave the religions to devour themselves, without persecutions.

HITLER’S TABLE TALK 1941-1944: His Private Conversations. Translated byNorman Cameron and R.H. Stevens Introduced and with a new Preface byH.R. Trevor-Roper]

ஹிட்லர், ஆட்சியைப் பிடிக்கும் முன்பாகவும் சரி, கைக்கொண்ட பிறகும் சரி, எந்த மதத்தினர் மீதும் தாக்குதல் தொடுக்கவில்லை (யூதர்கள் மீதான தாக்குதல் இனவெறி அடிப்படையிலே இருந்தது). ஜெர்மனியில் ப்ரொட்டஸ்டண்ட் கிறித்தவர்களின் பலம் உணர்ந்து அவர்களைப் பகைத்துக் கொள்ளாமல், கண்டும் காணாமல் இருக்கும் நிலையையே எடுத்தான். சில வேளைகளில் ஊக்குவிக்கவும் செய்தான்.

தமிழகத்தில் முளைவிட்டிருக்கும் பாசிஸ்ட்டுகள், இஸ்லாமியர்களையும் கிறித்தவர்களையும் “சந்தேகப் பட்டியலில்” சேர்த்துவிட்டு, ”இந்து” மதத்தினர்பால் கண்டும் காணாத நிலையெடுத்திருப்பது அதற்கு ஒப்பானதே. ஹிட்லரைப் போலவே, நாஜிக் கொள்கைக்கு நிகரான, அரசியல் மதமாக “தமிழியம்” என்ற அரசியல் மதத்தையும் முன்மொழிந்திருப்பதுவும் அப்பட்டமான பாசிசமே!

———————————————

பின்குறிப்பு:

பாசிச அபாயத்திற்கு உடனடியாக எதிர்வினையாற்ற வேண்டும் என்ற வேகத்தில் ”கீற்று” இணைதளத்திற்காக எழுதப்பட்ட கட்டுரைத் தொகுதியில் இருந்து சில பகுதிகளை, இத்தொகுப்பின் அவசியம் கருதி எடிட் செய்து பகிர்கிறேன். உடனடி எதிர்வினையாக எழுதியதுகையில் நேர்ந்த சிறு தவறுகளையும் ”முன் பின்னாக” வரிசை மாறியிருந்த தவறுகளையும் திருத்தியிருக்கிறேன். நன்றி!