Saturday, July 11, 2020

காங்கிரஸ் கட்சியை சார்ந்த படேலுக்கு பீஜேபீ சிலை வைப்பது ஏன்?

*காங்கிரஸ் கட்சியை சார்ந்த படேலுக்கு பீஜேபீ சிலை வைப்பது ஏன்?*

---(சம்பவம்1)---

இந்திய விடுதலைப் போரின் முன்னணித் தலைவர் காந்தி.

காந்தியார் கொலை செய்யப்பட்ட நாள் 1948 ஜனவரி 30, சுட்டுக் கொல்லப்பட்ட நேரம் மாலை 5 மணி 12 நிமிடம்.

அவர் பிர்லா மாளிகையில் இருந்து பிரார்த்தனைக்கு செல்லும்போது கடைசியாகப் பேசிக் கொண்டிருந்தது படேலிடம் தான். அப்போது மணி 4.50.

எப்போதும் உடன் இருக்கும் படேல், கோட்ஷே சுடும்போது மட்டும் இல்லை. 

---(சம்பவம்2)---

1) காந்தி கொலை செய்யப்பட்ட நாள் 1948 ஜனவரி 30. கொன்றது ஆர்.எஸ்.எஸ்.

2) ஆர்.எஸ்.எஸ் மீது தடை விதிக்கப்பட்டது 1948 பிப்ரவரி 4

3) தடை விலக்கப்பட்டது 1949 ஜூலை 11.

4) 1 வருடம் 4 மாதத்திற்குள் தடை விலக்கப்பட்டது.

5) தடையை விலக்கியவர் படேல் (அன்றைய உள்துறை அமைச்சர்) 

படேல்  காங்கிரசுக்குள் இருந்த ஒரு சங்கி.  திட்டத்தை வகுத்து கொடுத்ததிலிருந்து குற்றவாளிகளை தப்பவிட்டது வரை படேலின் பங்கு முக்கியமானது. 

1) ஜனவரி 20, 1948 அன்று நடைபெற்ற காந்தியார் மீதான முதல் கொலைமுயற்சி விசாரணையை பிசுபிசுத்துப் போக செய்தது. 

2) அதன் பின்னரும் காந்தியாருக்கு தேவையான பாதுகாப்பை பலப்படுத்தாமல் கொலையாளிகளுக்கு உதவியது 

3) கொலை வழக்கிலிருந்து முக்கிய குற்றவாளியான சாவர்கரை விடுவித்தது

4) மிகக் குறைந்த காலஇடைவெளியில், அற்பமான உறுதிமொழியின் அடிப்படையில்  ஆர்.எஸ்.எஸ் மீதான தடையை நீக்கியது 

என்பது போன்ற, காந்தியின் கொலையில் படேலின் தொடர்புகள் விசாரிக்கப்படவே இல்லை.

---(சம்பவம்3)---

1) தேசத்தந்தை காந்தியை கொன்ற ஆர்.எஸ்.எஸ் மீதான தடை ஒரு வருடத்தில் விலக்கப்பட்டது.

2) முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைக்கு காரணமானதாக சொல்லப்படும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு 25 வருடமாக தடை நீடிக்கிறது.

No comments:

Post a Comment