Thursday, June 29, 2017

பார்ப்பனிய விமர்சனம் பார்பனர்களுக்கே தேவை

வாசுகி பாஸ்கர்
Via Facebook
2017-06-29

பார்ப்பனிய விமர்சனம் பார்பனர்களுக்கே தேவை

என் பள்ளி கால நண்பனை பல வருடத்திற்கு பிறகு சந்திக்க நேர்ந்தது, பிறகு முகநூலில் நட்பாகி போனோம், வழக்கமாக நிரம்பி கிடக்கும் சாதி எதிர்ப்பு பதிவுகளை பார்த்து ஒரு கம்மன்ட் போட்டான், அது 'சாதிய வெறி தான் தவறு, ஆனால் சாதியில் நம் அடையாளங்கள் மறைந்து கிடக்கிறது, சாதி அடையாளம் அவசியம்' என்பதாக இருந்தது, நாளடைவில் நாங்கள் மிக நெருக்கமாக பழக ஆரம்பித்தோம், ஒன்றாகவே பொழுதுகளை கழித்தோம், அவரவர் படிக்கும் புத்தகங்களை, சம்பவங்களை குறித்து விவாதித்தோம், கேள்விகளை பதிலுக்கான ஆரம்பமாக பார்த்தோம், நாங்கள் இருவரும் தனித்து இருக்கும் போது இப்படியாக சைக்காலஜி, தனி மனித உணர்வு, சமூக அரசியல், சினிமா, பொதுப்புத்தி, வரலாறு என்று தலைப்புகள் நீளும். மனதில் இருந்து சொல்ல வேண்டுமானால், என்னை அதிகம் சமூகம் சார்ந்த சிந்தனையை நோக்கி தள்ளிய காலம் அது தான், என்னை நான் நெறி படுத்திய காலமும் கூட.   

அவன் பிறப்பால் பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவன், அதை நான் அறிந்து வைத்திருப்பதற்கு அவன் சிறு வயதில் இருந்தே சுமந்த அடையாளங்கள் தான் காரணமே ஒழிய, பத்தாண்டு, பதினைந்து ஆண்டுக்கு மேல் நான் நட்போடு இருக்கும் இன்னபிற பல நண்பர்களின் சாதிகளை நான் இன்று வரை அறியேன்.

அவனின் பெற்றோர்களும் பார்ப்பன குடும்பத்தில் பிறந்து விட்டதனாலவே அந்த அடையாளங்களை சுமப்பவர்கள், சம்பிரதாயம் என்னும் வம்சா வழி அடையாளங்களை துறக்க இயலா சமூக சூழ்நிலை வாதிகள். என்னோடு பழகி விட்டதனால் என்கிற காரணத்திற்காக சொல்லவில்லை, எல்லோர் மீதும் பாரபட்சமில்லாமல் பேரன்பு கொண்ட மனிதம் போற்றும் மனிதர்கள், நீங்களே நாளை பழக நேர்ந்தால் இதை உணர்வீர்கள். 

ஆனால், எங்களின் தொடர் உரையாடலில் நடந்த மாற்றங்கள் 'சாதி என்பது சமூகத்துக்கு தேவையான அடையாளம் இல்லை' என்பதை நாளடைவில் அவன் சமூகத்தின் யதார்த்த புள்ளியில் இருந்து உணர ஆரம்பித்தான், நாஞ்சில் நாடான் போன்றவர்கள் மறைமுகமாக சாதியை தூக்கி பிடிக்கும் எழுத்தாளுமையால் சாதி சம்மந்தப்பட்ட கருத்துக்கள் அவனுள் அப்படியாக பதிந்து இருந்தது. கருத்து மாற்றத்தால் ஒரு மன மாறுதலை நான் கண்கூடாக கண்டிருக்கிறேன், சொன்னது போல இதற்கு முக்கிய காரணம், பேசியது, பேசிக்கொண்டே இருந்தது.

பார்ப்பன குடும்பத்தில் பிறந்தும் பார்ப்பனியத்தின் வீரியம் தெரியா நிறைய பேர் இருக்கிறார்கள், ஒரு வேலை நானும் ஆர்தோடக்ஸ் என்று சொல்லிக்கொள்ளும் பார்ப்பன குடும்பத்தில்  பிறந்திருந்தால், எப்படி இருந்திருப்பேன்? என்கிற கேள்வியில் இருந்து இதற்கான பதிலை எடுக்கிறேன்.

அதற்கான வாய்ப்புகள் இரண்டு வகை,

1. சமூகத்தில் பிறர் எப்படி பார்ப்பனிய சித்தாந்தத்தால் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை அறிய வாய்ப்பில்லாமல் மேம்போக்காக அதிலே ஊறி வாழுதல்,

2. பார்பனியத்தோடு ஊறி, தெரிந்து, அதனோடவே இருத்தல், உயர்த்தி பிடித்து வாழுதல் 

இதில், முதலில் இருக்கிற நிலையில் வாழ்கிறவர்களை இரண்டாம் நிலைக்கு தள்ளுவது மிக பெரிய காரியமில்லை, வெளியுலக புறக்கணிப்போடு பார்ப்பனிய கலாச்சாரத்தோடு முண்டாசு கட்டி வாழ்ந்தால் அதுவே உங்களை கை பிடித்து இரண்டாம் கட்டத்திற்கு கொண்டு போகும். அல்லது ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்று செலக்டிவாக முற்போக்காக இருத்தல், அநியாய தவறுகளை நியாயப்படுத்தாமல் தவறை தவறென்று ஒப்புக்கொள்ளுதல். இந்த நிலையில் இருப்பவர்களை வைத்து கொண்டு நாம் பேசும் போது நாம் தவறுகளை சுட்டி காட்டினால், அவர்களால் அதற்கான நியாயமான பதிலை சொல்ல முடியாதபடி மௌனத்தில் தள்ளலாம், அல்லது அவர்களையும் கண்டிக்க வைக்கலாம்.

இரண்டாம் வகை, 'ஆமா, நான் பார்ப்பனன் தான், பார்பனீயவாதி தான் என்ன இப்போ' என்று சொல்லும் வகை, அங்கே எந்த விதமான உரையாடலும் எந்த மாற்றமும் கொண்டு வராது, நீ பேசுறதை பேசிக்கோ, நான் ரிவிட் அடிப்பேன் என்று அதே திமிரோடு காலத்துக்கும் பேச வேண்டிய நிர்பந்தமே நம்மை பார்ப்பினியத்துக்கு எதிராக பேச வைக்கும். 

ஆனால் பேசினால் தான் நியாயம் நிறுவப்படும் என்பதற்கு நடப்பு கால உதாரணங்களை சொல்கிறேன்,

பார்ப்பனீயம் என்பது தாத்தாவுக்கு தாத்தாவுக்கு தாத்தா நிகழ்த்திய அக்கிரமம் இல்லை, நான் டைப் செய்து கொண்டிருப்பினும் இந்த கணம் நிகழ்ந்து கொண்டிருப்பது தான் பார்ப்பனீயம், அதை நீங்கள் கண் திறந்து பார்க்க வேண்டும், facebook ன் மெமரிஸ் போஸ்டுகள் வரும் போது, நாம எப்போவோ பார்ப்பனர்களை விமர்சனம் செய்து இருக்கிறோம் என உங்களை ஒரு போதும் எண்ண வைக்காது, அதற்கு related ஆன அக்கிரமங்கள், பொய்மை, அயோக்கியத்தனம் நிகழ்காலத்திலேயே நடக்கும்.

1. முந்தாநாள் facebook memories ல், சுவாதி கொலையை செய்தது பிலால் மாலிக் என்கிற பார்ப்பனிய நரி தந்திர பரப்புரை போன வருடம் கிட்ட தட்ட இதே கால கட்டத்தில் நடந்தது.

2.  இரண்டு நாள் முன்னே நடந்த ஒரு கொலையை செய்தது இஸ்லாமியர்கள் என்று எச்.ராஜா, ராகவன் போன்றோர் பதிவுகள் பதிய, போலீஸ் விசாரணையில் கொலையை செய்த நால்வரும் இந்துக்கள் என்று தெரிய வந்தது.

3. நேற்று பழனியில் மாடு ஏற்றி கொண்டு போன விவசாயியின் வாகனத்தை இந்து கட்சியினர் தாக்க, பதிலுக்கு போலீஸ் தடியடி நடத்த, இதே எச் ராஜா தன் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

மாடு ஏற்றி கொண்ட வாகனத்தை மறித்தது முதல் தப்பு, அடிதடியில் இறங்கியது இரண்டாம் தப்பு, ஆனால் கொஞ்சமும் கூச்சம் நாச்சம் இல்லாமல், அறம் என்பதை அரையணாவுக்கு கூட மதிக்காமல் இப்படியாக புளுகுவதையும் தொடர்ந்து ஆயிரமாயிரம் ஆண்டு இந்தியாவில் நிகழ்த்தி கொண்டிருப்பதற்கு பெயர் தான் பார்ப்பனீயம்.

  இப்படியாக பார்ப்பினியத்தின் சமூக அவலங்களை பட்டியலிட சொன்னாலோ, அல்லது இன்னும் நுட்பமாக அலச சொன்னாலோ, இன்னும் ஆயிரமாயிரம் விஷியங்கள் இருக்கிறது. ஒரு கட்டத்தில் பார்ப்பனர்களால் அவதூறு பேசியும், கத்தியும் தான் பேச முடியுமோ ஒழிய ஒரு நாளும் நியாயமான தர்க்கம் என்பது சாத்தியமற்றது.

வாயடைக்கவும், கருத்தை நிறுவவும் நாம் பேசித்தான் ஆகவேண்டும், பேசுவதால் தனிப்பட்ட முறையில் உண்டாக போகும் இழப்புகளை குறித்து நீங்கள் கவலை பட்டீர்களானால், உங்களால் ஒரு போதும் பேசவே முடியாது. முற்போக்காக இருப்பதற்கு மிக குறுகிய வாய்ப்பே வழங்கப்பட்ட சூழலில் வளரும் பார்ப்பனிய குழந்தைகளுக்காவது நாம் பேசியே ஆகவேண்டும், கொஞ்சம் pause விட்டால்,

'காலையில ஆறு மணி, கோழி கொக்கரக்கோ ன்னு கூவுச்சி' என்பதை போல நீங்கள் முதலில் இருந்து ஆரம்பித்தாக வேண்டும்.

Tuesday, June 27, 2017

பார்பீனியம் - ஊழலின் ஊற்றுக்கண்

Sadhu Sadhath
Via Facebook
2017-06-27

Mr . Sve ஷேகர்வால் ...
நல்லா இருக்கேளா ஷார் வால் .... ? உமக்கு என்ன வோய் உம்ம தண்ணியார் அதாங்க தம்பி பொண்டாட்டி தலைமைச் செயலாளர் இருக்கும் தெம்புல ஆடுறேள் ...

இரண்டு சவால் உங்களுக்கு அதை செஞ்சி காமிச்சா சத்தியமா சொல்றேன் உங்கள் வீட்டு கக்கூஸ் ஐ நான் என் ஆயுசுக்கும் கையால் கழுவுறேன் .. அது என்ன என்று கடைசியில்  சொல்றேன்... அதுக்கு முன்னாடி

போற போக்கில் எங்களவா நெம்ப ஷுத்தம் யாராச்சும் எதாச்சும் அப்படி இப்படி நடந்திண்டாளா ?? னு கேட்டிருக்கேள் பலரும் மூடிவச்ச பிரியாணியை மூணு நாள் கழிச்சு திறந்தா மாதிரி மறந்து போன எல்லா அசிங்கத்தையும் மொள்ளமாரி முடிச்சவிக்கி தனத்தையும் போட்டு தாக்குறாங்க ....

இராசேந்திர சோழன் உங்களவா 1000 பேரை கொன்று போட்டதுக்கு காரணம் உங்க ஆளுங்க சோழ வம்சத்தில் வந்த ஒரு ஆள அநியாயமாக கொன்றதால் தானே .. ??

நந்தன் ... வள்ளலார் .. அசோகன்  கொலையில் ஆரம்பித்து சமீபத்திய சங்கரராமன் வரை எல்லோரையும் எல்லோரும் சொல்லிட்டாங்க .... இது கொலை

இந்தியாவில் முதல் தீவிரவாத செயல் காந்தி கொலை கோட்சே.. அதுக்கு முன்னாடி வாஞ்சிநாதன் ... சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு 180 பேர் படுகொலை .. மாலேகான் குண்டுவெடிப்பு .. இத செஞ்சது அசீமானந்தா ... பிரக்யா முதல் பெண் தீவிரவாதி ... இது தீவிரவாதம்

இந்தியாவின் முதல் ஊழல் நீங்க தினமும் போற டிடிகே ரோடு .. இருக்கில்ல அதே டிடிகே தான் முதல் முறையாக ஊழலால் பதவி விலகிய ஆளு ...
இந்தியாவின் முதல் பாராளுமன்ற குதிரை பேர ஊழல் நடத்திய நரசிம்ம ராவ் பார்பனர் ... இது அரசியல்

இந்திய ரகசியத்தை விற்ற நாராயணன் ..  சஞ்சை காந்தி பையன் .. எச்ச ராஜா நெருங்கிய உறவினர் பாலகிருஷ்ணன் வரை

திப்பு சுல்தான் ஐ காட்டிக் கொடுத்த பூர்ணய்யா முதல் ... விடுதலைப் போராட்டத்தில் காட்டிக் கொடுத்த வாஜ்பாய் .. ஆங்கிலேயரின் துபாஷியாக இருந்து விடுதலை போராட்ட வீரர்கள காட்டிக் கொடுத்தது வரை .... இது சுதந்திர போராட்ட துரோக வரலாறு

இஸ்ரோவில் முதல் ஊழல் ஆன்டிரிக்ஸ் தேவா  எஸ் பேண்ட்  2 லட்சம் கோடி ஊழல் 🙄🙄🙄  இராதாகிருஷ்ணன், மாதவன் நாயர் இது அறிவியல் துறை ...

தமிழ்நாட்டில் முதல் முறையாக Tnpsc குரூப்  2 தேர்வு கேள்வி தாள் விற்பனைக்கு வந்தது விருமாண்டி மீசை நடராஜன் காலத்தில் தான் இப்ப அவர்  உங்க ஏரியா ச ம உ ... 😶😶

இந்தியாவில் முதல் முறையாக ஊழலால் பதவி விலகி பிறகு தண்டனை பெற்ற முதல் முதலமைச்சர் ஜெயலலிதா வரை .... 🙃🙃

கோயில் கருவறையில் பூஜை செய்ய சொன்னா மேட்டர் பூஜை செய்து அதை வீடியோ எடுத்தது யாரு தேவநாத குருக்கள் தானே ஃபர்ஸ்ட் 😱😱😱

இவ்வளவு ஏன் உங்க தண்ணியார் தான் தலைமை செயளாலர் ... சுகாதார செயலாளர் கிட்ட தட்ட பத்து வருசமா முன்னாள் ஜனாதிபதி இரத்த சம்பந்தம் இராதாகிருஷ்ணன் அவர் வீட்டில் நடந்த ரெய்டு ஐ தொடர்பாக  உண்மையான விசாரணை நடத்த சொல்லலாமா ??  முடியுமா ??

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நீக்கப்பட்டது .. சீனிவாசன் மாமா பிசிசிஐ பதவி இழந்தது .. தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் உங்கள் ஆளுங்க மட்டுமே தேர்வு ஆவது ... ... இது விளையாட்டு துறையில்

எந்த துறையை எடுத்தாலும் மொள்ளமாறித் தனத்தின் ஆரம்ப விதையும் ஆலமரமும் நீங்க தானே ஷார்வால்

எல்லாமே எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான் .....
********************************************

அதனால இத  பற்றி எல்லாம் எதுவும் நான் கேட்கபோவது இல்லை ...

99.5% எடுத்தும் சீட் கிடைக்கல னு சொன்னதைப்  பற்றி நீங்க சொன்னதால மெயின் மேட்டருக்கு வருவோம் ...

IAS IPS .. Upsc தேர்வு வருசத்துக்கு 800 பதவிக்கு நடக்குது அதுல வெயிட்டிங் லிஸ்டுனு சுளையா 110 சீட் வரை ஒதுக்கி வைத்து பிறகு வெளியிடுறாங்க அதுல எப்படி 90% ஆளுங்க உங்க ஆளா இருக்காங்க ?? ஏன்னா அது ரெகமன்டேஷன் ...

ஆடிட்டர் துறையில் எப்படி உங்கள் ஆளுங்க மெஜாரிட்டியா பாஸ் பன்றாங்க ?? ஏன்னா அதுவும் ரெகமன்டேஷன் ....

ஐகோர்ட் எப்படி ஐயர்கோர்டா இருக்கிறது ?? ஏன்னா நீதிபதி பதவிக்கு தகுதி தேர்வு இல்லை எல்லாம் ரெகமன்டேஷன் ... உச்சா நிதிபதிகள் பணி தேர்வும் இப்படி தான் .. 😷😷

ஐடியில் ஹெச் ஆர் பதவியில் ரெகமன்டேஷன் இல்லாமலா உங்க ஆளுங்க வந்தாங்க ...😕😕

பத்திரிகை துறையில் சமுக ஆர்வலர்கள் னு பொருளாதார நிபுணர் னு அரசியல் விமர்சகர் பத்ரிக்கையாளர் னு வர்றவங்க ரெகமன்டேஷன் இல்லாமலா ஃபோகஸ் ஆகுறாங்க .... ??? 😬😬😬

ஒரு 10 வருசம் ரெகமன்டேஷன் இல்லாமல் இருந்தா சத்தியமா சொல்றேன் இட ஒதுக்கீடு வேண்டும் னு பெரியார் படத்தோடு வீதியில் நிக்கிற முதல் ஆள் நீங்களாதான் இருப்பீங்க ...

********************************************

சவால் னு சொன்னேன் ல சொல்றேன் கேளுங்க ....

நீங்க மட்டும் உங்கள் பூணுலுக்கு உண்மையா இருந்தா .... இராமன் ஐ உண்மையில் கும்பிடும் ஆளா இருந்தா ..... இத செய்யுங்க

1) எங்கும் எப்போதும் எதிலும் எங்க பிராமனாளுக்கு ரெகமன்டேஷன் செய்ய மாட்டோம் னு நீங்க உங்க பிராமணர்கள் சங்கம் எல்லோரும் சேர்ந்து இராமன் மேல பூணுல் மேல சத்தியம் செஞ்சி கடைபிடித்து காட்டுங்கள் பார்ப்போம் ஒரு பத்து வருசம் ...

2) மனு ஸ்மிருதி படி .. ஆகம விதிமுறைகள் ஐ பின்பற்றி உண்மையான பார்பனராக மட்டுமே நடப்போம் னு பூணுல் மேல இராமன் மேல சத்தியம் செஞ்சி கடைபிடித்து காட்டுங்கள் இதுவும் ஒரு பத்து வருசம் தான்

இப்படி நடந்தால் நான் என் சவால் படி மட்டுமே அல்ல அதுக்கு மேல நீங்க என்ன சொன்னாலும் கூலிப்படை யா மாறி என்ன சொன்னாலும் செய்து முடிப்பேன் .. இது சத்தியம் சத்தியம் சத்தியம் ...

இப்படிக்கு ...

அக்ரஹாரத்தில் பிறந்து வளர்ந்த
ஆங்கிரி பேர்டு .... — feeling ready.

Sadhu Sadhath

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது

எழில் அரசன்
Via Facebook
2017-06-27

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என்று ஒரு நீதிபதி கேட்டிருக்கிறார்.

இதுபற்றி சற்றுமுன் டீ கடையில் இரண்டு பேர் பேசிக்கொண்டனர்:

அதிலும் எவ்வளவு விவரமாக 'அரசுப் பள்ளி ஆசிரியர்கள்' என்று கூறியிருக்கிறார். மொத்தமாக 'அரசு ஊழியர்கள்' என்று கூறியிருந்தால் தன்னுடைய பிள்ளை, பேரப்பிள்ளைகளுக்கும் அது பொருந்திவிடுமே என்று நினைத்திருப்பார் போலும்!

மேலும், இத்தோடு ஏன் விட வேண்டும்?
அரசு ஊழியர்கள் அனைவரும் கோ-ஆப்டெக்ஸில் தான் ஆடைகள் வாங்க வேண்டும், பிஎஸ்என்எல் நெட்வொர்க் தான் பயன்படுத்த வேண்டும், அரசு மருத்துவமனைகளில் தான் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும், வேற ஹோட்டலில் சாப்பிடக் கூடாது அம்மா உணவகத்தில் தான் சாப்பிட வேண்டும், இந்துசமய அறநிலையத் துறைக்கு கீழே வரும் கோயில்களில் மட்டும் தான் சாமி கும்பிட வேண்டும், பொதிகை டிவி தான் பார்க்க வேண்டும், அதையும் அரசு கேபிளில் தான் பார்க்க வேண்டும், அரசுப் பேருந்துகளில் தான் பயணம் செய்ய வேண்டும், ஆண் அரசு ஊழியர்கள் பெண் அரசு ஊழியர்களைத் தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும், அவர்கள் தனியார் நிறுவன ஊழியர்களை திருமணம் செய்யக் கூடாது உள்ளிட்ட இன்னும் நிறைய விதிகளை விதிக்கலாமே..

நாட்டின் எல்லாத் துறைகளையும் தனியாருக்கு திறந்துவிடுவார்களாம், ஆனால் அரசு ஊழியர்கள் மட்டும் தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளிலேயே சேர்க்க வேண்டுமாம்!

எனக்குத் தெரிந்து, ஒரு நீதிபதியின் பணி என்பது அரசு இயற்றும் சட்டங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தோடு ஒத்துப் போகிறதா இல்லையா என்று பார்த்து தீர்ப்பு சொல்வது தானே தவிர, தங்கள் இஷ்டத்துக்கு கேள்விகளையும் கருத்துகளையும் சொல்வதல்ல.

இவ்வாறு பேசிய அந்த இருவரும் பிறகு தலையில் அடித்துக்கொண்டவாறு கலைந்து சென்றனர்!

கஜினி முகம்மது

சூர்யா சேவியர்
Via Facebook
2017-06-27

கஜினி முகம்மது---1

இந்தப்பெயர் இந்திய அரசியலில் இன்றுவரை ஒரு வகையான அருவருப்பு அரசியலை அரங்கேற்றப் பயன்படுத்தப்படுகிறது.யார் இவர்?என்ன செய்தார்?

மன்னர்கள் என்றாலே மக்களை அடக்கியவர்கள் என்ற உண்மையை மறந்துவிடலாகாது.அதில் கஜினி மட்டும் ஏன் கொடூரமனிதராக சித்தரிக்கப்படுகிறார் என்ற அரசியல் புரிதலுக்காகவே இந்தப்பதிவு.

அந்தக்கால அரசர்கள் எந்தப் பகுதியின் மீது படையெடுத்தால் பெருத்த செல்வத்தை அள்ளிக்கொண்டு வரலாம் என்று கணக்குப்போடுவதில் மட்டுமே குறியாய்
இருப்பார்கள்.படையெடுத்து அகப்பட்டதை சுருட்டிக் கொண்டு போவது ஒரு வகை.கைப்பற்றிய பகுதியை தொடர்ந்து தன்னுடைய ஆட்சியின் கீழ் வைத்துக் கொண்டு மேலும் மேலும் கொள்ளையடிப்பது இன்னொரு வகை.

இருவகையினரின் நோக்கம் ஒரே வகையானது தான் என்றாலும்,அகப்பட்டதை சுருட்டிக்கொண்டு ஓடுபவர்கள் தங்கள் வரலாறை எழுதி வைப்பதில்லை.தொடர்ந்து ஆட்சி செய்பவர்கள் தங்களின் வீர,தீர பராக்கிரமங்களை எவ்வளவு கேவலாமானவனாய் இருந்தாலும்,சிறப்பாக எழுதிவிடுவார்கள்.அவனைப் புகழந்து பாடி பொரி,அவுல் வாங்கித்திண்ணும் புலவர் புடலங்காய்களும் புறப்பட்டுவிடுவார்கள்.அது பிறகு வரலாறு ஆகிவிடுகிறது.
(ஆயிரக்கணக்கான மக்களை கொன்ற நபரை யோக்கியர் என்று பேசி பிரதமர் ஆக்கியதைப்போல).

இத்தகைய இரு வகையினரில் முதல் வகையினர் கொள்ளைக்காரர்கள் என்றும்,இரண்டாவது வகையினர் பொய்,புரட்டு மூலம் யோக்கியவான்கள் ஆகிவிடுவார்கள்.

இதைதான் இன்று வரலாறு என்று சொல்லிக் கொடுக்கிறார்கள்.இங்கேயே இருந்து கஜினி தன் வரலாறை எழுதியிருந்தால்,அது எப்படி இருந்திருக்கும்.?அந்த வாய்ப்பு கஜினிக்கு கிடைக்காமல் போயிருக்கலாம்,இல்லையேல் அதைப்பற்றி அவன் கவலைப்படாமல் போயிருக்கலாம்.

ஆனால் 17 முறை படையெடுத்து 18 வது முறை கொள்ளையடித்து சென்றது எப்படி என்பதைத் தான் யோசிக்கவேண்டும்.அடுத்து அதுதான்.....

#தொடரும்

---------

கஜினி முகம்மது--2

பெயர் முகமதுதான்.கஜினி என்ற பகுதியை ஆண்டதால் கஜினி முகம்மது.இந்தப்பதிவில் சொல்லப்போகும் கருத்துகள் எனது கருத்தல்ல.யார் இதைச் சொன்னார்கள் என்று இறுதியாகச் சொல்கிறேன்.அப்பொழுது மிகவும் வியப்பில் ஆழ்ந்துவிடுவீர்கள்.

"இன்றைய குஜராத் அந்தக்காலத்தில் ஆறு அரசர்களால் ஆளப்பட்ட பகுதி.இங்குள்ள சோமநாதர் ஆலயம் மிகவும் பிரசித்திபெற்றது.அதற்குக் காரணம் இந்தக்கோவிலின் லிங்கம் எந்தப்பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கியதுதான்.(எப்படி என்று சொல்லாமல் பதிவு முடியாது).

இதன் சிறப்புக்காரணமாக ஏராளமான பக்தர்களை அந்தக்கோவில் ஈர்த்ததில் ஆச்சரியம் இல்லை.எனவே சொல்லமுடியாத அளவு செல்வம் கோவிலில் பக்தர்களால் குவிந்தது.குஜராத்தின் ஆறு அரசர்களும் அந்தக்கோவிலின் போஷகர்களாக இருந்தனர்.கோவிலின்
அர்ச்சகர்கள் எத்தனைபேர் தெரியுமா?11,000 பேர்.

எந்நேரமும் பரபரப்பாக இருந்த இந்தக்கோவிலில் கோடிக்கணக்கான சொத்தும் சேர்ந்து கொண்டிருந்தது.அதை எப்படியேனும் கொள்ளையடிக்கவேண்டும் என்ற திட்டமும் பலருக்கும் இருந்தது.(அரசியல் கட்சிகள் எப்படி மக்கள் சொத்தை கொள்ளையடிக்கலாம் என்று திட்டம் தீட்டுவதைப்போல).

கஜினி படையெடுத்து வந்தபோதெல்லாம் குஜராத்தின் ஆறு அரசர்களும் ஒன்றுசேர்ந்து அவனைத் தடுத்து தோற்று ஓடச்செய்தனர். கி.பி 997 முதல் 1030 வரை 33 ஆண்டுகாலம் கஜினி தன் முயற்சியை கைவிடவில்லை.
பரீட்சையில் தோற்கும் மாணவர்களுக்கு கஜினியே இன்றும் உந்துசக்தியாக இருக்கிறார்.

பதினெட்டாவது முறையாக 25,000 போர்வீரர்களுடன் சோமநாதபுரத்திலிருந்து எட்டு மைல் தூரம் முகாம்போட்டு
காத்திருந்தான் கஜினி...

நீங்களும்  காத்திருங்கள்..

#தொடரும்

--------

கஜினி முகம்மது--3

கஜினி படையெடுத்து வந்ததை ஒற்றர்கள் மூலம் அறிந்த அரசர்கள் ஆறுபேரும் கோவிலின் தலைமை அர்ச்சகரிடம்
போய் ஒரு கோரிக்கைவைத்தனர்.நம்மிடம் நாலரை லட்சம் வீரர்கள் உள்ளனர்.கஜினியிடம் 25,000 பேர் மட்டுமே உள்ளனர்.எளிதில் விரட்டிவிடலாம் என்று அனுமதி கேட்டனர்.ஆனால் தலைமை அர்ச்சகர் அதற்கு உடன்படவில்லை.

அர்ச்சகர் என்றால் சும்மாவா?அரசனுக்கும் மேலே உள்ளவன்.அர்ச்சகர் சொல்கிறார் கேளுங்கள்.மிலேச்சன் படையெடுத்து வருவதை கணேசனும்,காளியும் கனவில் வந்து தன்னிடம் சொன்னதாகவும்,ஆனால் விசேஷமாய் ஹோமங்களும்,அன்னதானம்,சுவர்ணதானம்,கன்னிகாதானம்,ஆகியவை நடத்த வேண்டுமென கூறியதாகவும் சொல்லி,அரசர்களிடம் அதைச்செய்யுங்கள் என்று கூறியுள்ளார்.ஏன் இப்படிச் செய்தார்?

இந்த அரசர்களுக்கு வரவர புராணங்களிலும், பிராமனங் களிலும்,நம்பிக்கை குறைந்து வருவதால்தான் இப்படிப் பட்ட இடையூறுகள் தொடர்ந்து வருவதாக அர்ச்சகர் அரசர்களைக் கடிந்துகொண்டார்.இனிமேலாவது பிராமணர்களின் அறிவுரை கேட்டு நடக்கும்படியும்,யுத்தத்திற்கு ஆகும் செலவை பிராமணர்களுக்கு தானம் கொடுத்துவிடுமாறுகட்டளையிட்டு,யாகசாலை நிறுவும் பணியில் ஈடுபட்டார்.

(இதிலிருந்து என்ன புரிகிறது.பார்ப்பான் அவன் புத்தியை காட்டிட்டான்னு தெரியுதா)தொடருங்கள்.

தனது ஒற்றர்கள் செய்திக்காக கஜினி காத்திருக்க, சோமநாதபுரத்திலோ 1008 யாகசாலைகள் நிறுவி,குழிகளில் நெருப்பு வளர்த்து,நெய்,கோதுமை,சந்தனம் முதலானவை எரிக்கப்பட்டுக்கொண்டிருந்தன.பல நூறுபேர் மிலேச்சனிடம் இருந்து காப்பாற்றவேண்டி கழுத்தளவு தண்ணீரில் நின்று தவம் செய்தார்கள்.போர் வீரர்கள் நமக்கு என்ன என்று தூங்கிக்கொண்டிருந்தார்கள்.

கஜினிக்கு இந்தத் தகவல் போய் சேர்ந்தது.அடுத்து என்ன?

#தொடரும்

-----

எச் ஐ வி சேகரின் கனிவான கவனத்திற்கு

கஜினி முகம்மது--4

யாகசாலைகளில் நெருப்பு எரிவதையும்,ஆயிரக்கணக்கான குழிகளில் புகைவருவதையும்,நூற்றுக்கணக்கான தலைகள் தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பதையும் பார்த்த கஜினியின் ஒற்றர்கள் பயந்து போனார்கள்.அவர்களுக்கு இது ஏன் என்று புரியவில்லை.இதை கஜினியிடம் சொன்னார்கள்.

கஜினி தனது மதகுருவான மவுல்லியிடம் ஆலோசித்தான்.
மவுல்லி உடனே இது காபரினுடைய ஜின்னுகளின் (சாத்தான்கள்)வேலை என்று சொல்லி,நான் குரான் வாசித்தால் ஜின்னுகள் ஓடிவிடும் நீங்கள் படையை நகர்த்துங்கள் என்று கட்டளையிட்டார்.

கஜினியின் படைகள் வரும்சேதி தெரிந்ததும்,11000 புரோகிதர்களில் தலைமை அர்ச்சகர் உட்பட எண்ணூறு புரோகிதர்கள் தவிர மற்ற புரோகிதர்களும்,மேலும் பலரும்
அகப்பட்டதை அள்ளிக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

தலைமை அர்ச்சகர் தமது முத்துப்பல்லக்கை நன்றாகச் சிங்காரித்து சீடர்களையும்,கோவில் தாசிகளையும் கஜினியை எதிர்கொண்டு வரவேற்று அழைத்துவர அனுப்பிவைத்தார்.

முத்துப்பல்லக்கை தனது ஒட்டகத்தின் மீது போடவைத்து, அதன் மீது ஏறி அமர்ந்து கஜினி கம்பீரமாக சோமநாதர் ஆலயத்திற்கு வந்து சேர்ந்தான்.கோவிலின் உள்ளே கஜினி அமர சிங்காதனம் போடப்பட்டிருந்தது.அந்த சிங்காதனத்தின் பெயர் வியாசபீடம் என்பதாகும்.இந்த சிங்காதனத்தின் அன்றைய மதிப்பு 50 லட்சம் ரூபாய் ஆகும்.

கஜினி கோவிலில் போடப்பட்ட வியாசபீடத்தில் கம்பீரமாய் அமர, தலைமை அர்ச்சகர் கஜினியிடம் "இங்கு போலி ராஜாக்கள் தங்களைப்பற்றி என்னென்னவோ சொன்னார்கள்.ஆனால் நான் அவர்களை எல்லாம் அடக்கி வைத்தேன்"என்று கூறிவிட்டு,விஷ்ணு அல்லாதவன் அரசனாய் இருக்கமுடியாது.(நா விஷ்ணு ப்ருத்வீ பதி) என்று வேதங்கள் சொல்கிறது.

எனவே விஷ்ணுவின் அவதாரமான தங்களின் நேர்மையான ஆட்சி எங்களை ரட்சிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துவிட்டு,எங்களுக்கு எந்த இடையூறும் செய்ய வேண்டாம் என்று கூறி 3 கோடி ரூபாய் காணிக்கை தருவதாகக் கூறினார்.

யாரையும் ரட்சிக்க நான் வரவில்லை. சொத்துக்கள் எங்கே இருக்கிறது காட்டுங்கள் என்று கஜினி கூற,அர்ச்சகர் கொண்டு வந்து கொடுக்க,அதை கணக்கிட்டுப் பார்த்தால் கேள்விபட்டதற்க்கும்,கிடைத்த சொத்திற்கும் சம்பந்தமே இல்லை.

அர்ச்சகரே என்னிடம் இந்த வேலை ஆகாது என்று கஜினி கூறிவிட்டு,அர்ச்சகரின் இரு கைகளிலும் எண்ணெய்யால் தோய்க்கப்பட்ட  துணிகளைச் சுற்றி கொளுத்துமாறு கட்டளையிட்டான். மிரண்டு போன பார்ப்பான் சொத்து இருந்த எல்லா இடத்தையும் காட்டிக் கொடுக்கிறார்.

தலைமைகுருவின் தலைமையில் கோவில் இடிக்கப் படுகிறது. இடிக்க இடிக்க செல்வங்கள் கொட்டிக்கொண்டே இருக்கிறது. கோவில் சாயத்துவங்க, அதுவரை காந்தக்கற்களின் உதவியோடு அந்தரத்தில் நின்ற லிங்கமும் விழுந்து நொறுங்குகிறது.

நொறுங்கி விழுந்த லிங்கத்தின் உள்ளிருந்தும் நவரத்தினங்கள் கொட்ட வாரிவாரி அள்ளிப்போட்டுக் கொண்டு 800 புரோகிதர்கள்,5000 ஆண்கள், 6000 பெண்களை கைதிகளாகப் பிடித்துக்கொண்டு கஜினி சென்றான்.

இன்னும் இருக்கு....

இவ்வளவு சுவாரஸ்யமாக நடந்த சம்பவங்களை சொல்லியது யார்? என்ன ஆதாரம்? அப்புடின்னு கேளுங்களேன்.

#தொடரும்.

----

எச் ஐ வி சேகரின் கனிவான கவனத்திற்கு

கஜினி முகம்மது---5

இந்த விபரங்கள் சுவையான கதைபோல தோன்றலாம்.அதீதமான கற்பனை என்றும் நினைக்கலாம்.
குஜராத்தி,உருது மொழியிலுள்ள நூல்களில் தேடி எடுத்து
நூலாக எழுதியவர் வேறு யாருமல்ல.வேதங்களை நோக்கி திரும்புமாறு இந்திய மக்களை அறைகூவி அழைத்த, ஆரிய சமாஜத்தை நிறுவிய சுவாமி தயானந்த சரஸ்வதிதான்.

சுவாமி தயானந்த சரஸ்வதி குஜராத் மாநிலம் டன்காரா எனுமிடத்தில் பார்ப்பன குடும்பத்தில் பிறந்தவர்.1875 ல் ஆரிய சமாஜத்தை தோற்றுவித்தவர்.1883 அக்டோபர் 30 இறந்தார்

அவர் இந்தியா முழுமையும் சுற்றி மதுராபுரியில் எழுதி வெளியிட்ட
"சத்தியார்த்தப் பிரகாசம்" என்ற நூலில் 11 வது அத்தியாயத்தில் கஜினி படையெடுப்பு குறித்து விலாவாரியாக எழுதியுள்ளார்.இதுவரை தெரிவித்தக் கருத்துகள் அவர் நூலின் விளக்கம்தான்.இப்போது இதிலிருந்து எளிதாக புரிந்துகொள்வது  இதுதான்.

1.ஆறு அரசர்களிடமும் இருந்து பார்ப்பனர்கள் கோவிலைக் கைப்பற்ற சதி செய்துள்ளனர்.

2.கஜினியை உள்ளே கொண்டுவந்து அரசர்களை விரட்டிவிட்டு, கஜினிக்கு தொகை கொடுத்து ஒதுக்கிவிடலாம் என்ற அவாள் பருப்பு அங்கு வேகவில்லை.

3.கோவிலை இஸ்லாமியரான கஜினி இடிக்கவில்லை.பார்ப்பனர்களே இடித்தது தெளிவாகிறது.

4.விஞ்ஞானம் சார்ந்த நுட்பத்தைப் பயன்படுத்தி,லிங்கம் அந்தரங்கத்தில் தொங்குவதாய் மக்களை ஏமாற்றியுள்ளனர்.

5.இந்துக்களை பார்ப்பனர்கள் ஏமாற்றிப் பிழைப்புநடத்துகிறார்கள் என்ற நிகழ்வு வெளிச்சத்திற்கு வருகிறது.

மேலும் நீங்கள் நிரப்பிக்கொள்ளலாம்.

சொன்னது சுவாமி தயானந்த சரஸ்வதி என்பதால் அரை டவுசர்கள் அங்கு போய் தாக்குதல் நடத்தலாம்.இஸ்லாமியர்கள் மேல் பலி போடுவது நியாயம் அல்ல.

#தொடரும்

----

கஜினி முகம்மது--6

கஜினி மற்றும் முகலாய மன்னர்கள் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்றும் இந்துக்களை வதைப்பதே அவர்கள் வேலை என்றும் RSS பிரச்சாரம் செய்கிறது.ஏன் இந்தப் பிரச்சாரம்? உண்மை என்ன?

முகலாயச்சக்கரவர்த்திகளுக்கு முன்னால் பல முஸ்லிம் ஆட்சியாளர்கள் இங்கு ஆண்டுள்ளனர்.கி.பி.1192 ல் முகமது கோரியும்,கி.பி 1206ல் குதுப்-உத்-தீனும்,கி.பி.1296 ல் அலாவுதீன் கில்ஜியும்,கி.பி.1325 ல் முகமது -பின்-துக்ளக்கும்,கி.பி.1414 முதல் கி.பி.1450 வரை டெல்லியில் சையதுகளின் ஆட்சியும்,கி.பி 1451ல் ஆப்கானிஸ்தான் வம்சத்தின் பஹ்லுல் லோடியும்,அதைத் தொடர்ந்து லோடி வம்ச ஆட்சியை பானிபட் போரில் வீழ்த்தி கி.பி 1526 ல் பாபர் முகலாய சாம்ராஜ்யத்தை நிறுவினார்,

இவ்வளவு காலப்பகுதியில் ஆட்சி புரிந்த முஸ்லிம் மன்னர்கள் இஸ்லாத்தை பரப்புவதற்கான வேலையை கடுமையாகச் செய்திருந்தால் இங்கு இஸ்லாமியர்கள் சிறுபான்மையினராக இருந்திருக்க மாட்டார்கள்.முஸ்லிம் மன்னர்கள் அதிக காலம் ஆண்டாலும்,பெரும்பாலான மக்கள் இந்துக்களாக இருந்தார்கள் என்பதை மறைக்க முடியுமா?

அவர்களின் நோக்கம் மதம் பரப்புவதல்ல.
சாதியை ஒழிப்பதல்ல
அதை வைத்து அதிகாரம் செலுத்த வேண்டும் என்பதே
ஆளும் வர்க்க அரசியலே.

மன்னர்களுக்கு அதிகாரத்தை நிலைநிறுத்த அனைவரும் தேவைப்பட்டார்கள்.RSS சும் இந்து மதத்தை வளர்ப்பதையா நோக்கமாகக் கொண்டுள்ளது. இஸ்லாமியரைப் பகைவராகக் காட்டி பார்ப்பனியத்தின் செல்வாக்கை தக்கவைப்பதே நோக்கம் என்பதை அப்பாவி இந்து மக்கள் புரியவேண்டும்.

இருப்பினும் இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்களின் பால் எத்தகைய அணுகுமுறை கொண்டிருந்தார்கள் என்பதற்கு பாபர் தன் மகன் ஹுமாயூனுக்கு 11.1.1529 ல் எழுதிவைத்த உயில் மூலம் அறிவோம்.

அடுத்து பாபரின் உயில் தான்.......

#தொடரும்

-----

கஜினி முகம்மது---7

இந்துக்கள் குறித்த அணுகுமுறை எப்படி இருக்கவேண்டும் என பாபர் தனது மகன் ஹிமாயூனுக்கு 11--1--1529 ல் எழுதிவைத்த உயில் இதுதான்.

அருமை மகனே! பல வகையான மதங்களைப் பின்பற்றும் மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் அல்லா உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி சொல்லவேண்டும்.ஆகவே.

உன் குடிமக்களின் மத சம்பந்தமான மென்மையான உணர்வுகளுக்கு எப்போதும் மதிப்பளித்து வரவேண்டும்.

மற்ற சமூகத்தின் வழிபாட்டுத்தளங்களை ஒரு போதும் இடித்து சேதப்படுத்தலாகாது.

அடக்குமுறை எனும் வாளைவிட இந்துக்களின் அன்பு மற்றும் நன்றிக்கடன் என்ற தூண் மூலம் இஸ்லாமைப் பரப்பு.

ஷியா மற்றும் சன்னிப் பிரிவினரிடையே நிலவும் உட்பூசலை அலட்சியம் செய்.

குடிமக்களிடம் காணப்படும் வேறுபாடுகளை பருவ காலங்களுக்கு இடையேயான வித்தியாசம் போல் கருதி ஒதுக்கிவிடு.

இப்படிப்பட்ட அறிவுரைகளைக் கூறிய பாபரின் பேரன் அக்பர் இன்னும் ஒருபடி மேலேபோய் மதவேறுபாடுகளற்ற ஒரு புதிய மார்க்கத்தையே "தீன் இலாஹி"என்ற பெயரில் முன் வைத்தார்.

இப்படிப்பட்ட முகலாய அரசர்கள் மீது அவதூறுப் பிரச்சாரத்தை RSS-BJP செய்வதன் நோக்கம் அவதூறுகளின் பால் உண்மையா,பொய்யா என்ற முடிவுக்கு வருவதல்ல.மாறாக..

இப்போது வாழ்ந்துவரும் இஸ்லாமியர்கள்மீது பகையை வளர்த்து,அதை வைத்து அரசியல் ஆதாயம் தேடும் அருவருப்பான  சிந்தனை தவிர வேறொன்றுமில்லை.

பார்ப்பனியமும் மனுவும் உருவாக்கிய கேடுகெட்ட கொள்கைகளுக்கு எதிராக இந்திய மண்ணில் ஏராளமான இந்து சமய சீர்திருத்த வாதிகள் உருவானார்கள்
சுவாமி தயானந்த சரஸ்வதி
சுவாமி விவேகானந்தர்
இராஜாராம் மோகன்ராய்
தேவேந்திரநாத் தாகூர்
கேசப் சந்திர சென்
லாலா ஹன்ஸ் ராஜ்
நாராயண குரு
அய்யன் காளி
குருபிரசாத்
குருநானக்
குருசாயி
ஐயா வைகுண்டர்
ராமானுஜர்
இன்னும் இன்னுமாய் பட்டியல் நீளும்.

எச் ஐ வி சேகருக்கு ஒரே கேள்வி தான்
இத்தனை இந்து சமய சீர்திருத்த வாதிகள்
போராடினார்களே எதற்கு?
பார்ப்பனியம் உருவாக்கிய சீரழிவுகளுக்கு எதிராகத் தானே?
1925 ல் சித்பவன பார்ப்பனர்களால் நாக்பூரில் தொடங்கப்பட்ட ஆர் எஸ் எஸ் இந்து சமூகத்தில் செய்த சீர்திருத்தம் என்ன என்று சொல் பார்ப்போம் கலவரம் செய்ததைத் தவிர வேறென்ன?
போடா போக்கத்த பார்ப்பனனே
நாவை அடக்கு இல்லையேல் விஜய் மல்லையா பார்ப்பான் மாதிரி நாட்டைவிட்டு ஓடிவிடு

மக்கள் ஒற்றுமை காப்போம்
மத நல்லிணக்கம் பேணுவோம்.

படித்த அனைவருக்கும் நன்றி.

#முற்றும்