Friday, June 16, 2017

நாத்திகம் பேசுபவர்களிடம் தினுசு தினுசாக கேள்விகள்

Santhosh Kumar
Via Facebook
2017-06-16

#தமாஷூ

கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு நாம் நாத்திகம் பேசுபவர் என தெரிந்துவிட்டால் கீழ் கண்ட டிசைனில் தினுசு தினுசாக கேள்வி கேட்பர்.

1. நீங்க எந்த நேரத்துல , எந்த தேதியிலிருந்து நாத்திகம் பேச ஆரம்பிச்சீங்க

ஏ அது தெரிஞ்சா அதுக்கும் ஜோசியம் பாத்து சொல்லவா

2. நீங்க வாய் கிழிய நாத்திகம் பேசரீங்க உங்கூட்ல இருக்கிறவைங்க பூரா சாமி கும்பிட்ராய்ங்க

டேய் இங்கன வா உங்கிட்டயும் தா வாய்கிழிய நாத்திகம் பேசற நீ நாத்திகனாயிட்டியா?

இல்ல

ஏ ஆவல

எனக்கு கடவுள் மேல நம்பிக்கையிருக்கா அதா நா நாத்திகனாவல

அதேதா அவங்களுக்கும்.

3 . நீங்க நாத்திகம் பேசரீங்க நீங்க திக வா?

ஆமா  இங்கலர்சால், உட்பட நாட்ல இருக்கிற 110 கோடி பேரும் திக  தான் உனக்கு டவுட்டா இருந்தா கூகுள்ள தேடிப்பாரு

இவனோ  மூளையில வசம்ப வச்சு தேக்கனும்.

4. கடவுள் இல்லன்னு சொன்ன பெரியார் ரகசியமா சாமி கும்பிட்டார் உங்களுக்கு தெரியுமா?

அப்படியா கடவுள் இல்லன்னு ஒரு பக்கம் பேசுன பெரியாரு ஒரு பக்கம் சாமி கும்பிட்டது தெரிஞ்சும் டம்மியாவே மிச்சர் தின்னுட்டு இருந்தானா உன் கடவுளு என்னயா சுத்த மானங்கெட்டவனா , ரோசமில்லாம இருந்திருக்கான் உன் கடவுளு #தூ

5. அப்படி சொல்லாதீங்க கடவுள் கருணையாளன், எல்லாம் அவன் செயல் தெரியுமா?

எல்லாம் அவன் செயல்னா சுனாமியும், பூகம்மும், கொலையும், கற்பழிப்பும் எவன் செயல்டா?

கடவுள் கருணையாளன்னா ஏண்டா  இதையெல்லா வேடிக்க பாத்துன்னே இருக்கான்.

6. பெரியார் குழந்தை வயசு இருக்கிற பொண்ணையே கல்யாணம் பண்ணிட்டாரு தெரியுமா?

அப்படியா பெரியார் கல்யாணம் பண்ணும் போது அந்த பொண்ணோட வயசு என்ன?

தெரியாது

அப்புறம் என்ன மசுருக்குடா அதசொல்ற

சரி அதனால இந்த சமூகத்துக்கு என்னடா கேடு வந்துச்சு.

............. என்ன பதிலையே காணோம்.

7. படைப்பாளன் இல்லாத படைப்பு எப்படி சாத்தியம் கடவுள்தா படைப்பாளன்.

படைப்பாளன் இல்லாத படைப்பு இல்ல அப்படின்னா , கடவுள் மட்டும் எப்படிடா எதுவுமில்லாம மொளச்சாரு

டேய் ஓடாத நில்லுடா ஓடாதடா

8. எங்க கடவுள் மட்டுந்தா ஒரிஜினல் தெரியுமா?

உன் கடவுள் மட்டும்தா அக்மார்க் நெய்யிலசுட்ட கடவுள்னா எப்படிடா இத்தன கடவுள் உருவாச்சு.

அது மனுசங்க வழிகெட்டுப்பண்ணது.

வழிகெட்டுப்போறவன நல் வழிக்கு கொண்டு வந்து திருத்தரதெல்லாம உன் கடவுள் வேலையில்லையா?

9. இப்படியே பேசிட்டு இரு எண்ணச்சட்டியில போட்டு உன்ன வருப்பாங்க மேலோகத்துல பாரு

நல்லெண்ணையா, கடலெண்ணையா பாஸ்.

10. உங்கிட்டயெல்லா பேசமுடியாது நா போறேன்.

சரி சரி வா டீ சாப்பிட்டு போலாம்.

இல்ல வேணா நா கெளம்பறேன்.

No comments:

Post a Comment