Thursday, June 1, 2017

முட்டாத்துலுக்கன் - கவிதை

ஈசன் சித்தன்
Via Facebook
2017-05-30

முட்டாத்துலுக்கன்

அவன் குல்லாயை நீ ஏளனத்துடன் தான் பார்க்கிறாய்!
மீசையில்லாத தாடி முகம்! அவன் தீவிரவாதி தான் என்கிறாய்!

எங்கே கலவரம் நடந்தாலும் கொலைகாரன் அவனாய் இருக்கவேண்டுமென தீராத ஆசை உனக்கு!

இல்லையெனில் இஸ்மாயிலோ என்றோ இப்ரஹிம் என்றோ கையில் பச்சை குத்திக்கொண்டு நீயே களத்தில் குதிக்கிறாய்!

பாக்கிஸ்தானை பற்றி தினமும் நாலு வார்த்தை கரித்துக்கொட்டினால் தான் நீ சாப்பிட்ட சோறு செரிப்பதாய் நிம்மதியடைகிறாய்!

காஷ்மீருக்கு அனுப்பும் உன் ராணுவ வீரனுக்கு ஆயுதத்தோடு சேர்த்து ஆண்குறிகளையும்  கொடுத்தனுப்புகிறாய்!

உழுத்துப்போன மனுவை கையில்  வைத்துக்கொண்டு ஷரியத்தை கிண்டலடிக்கிறாய்!

ஊர் சேரியென பிரித்து வைத்திருக்கும் நீயேதான் ஷியா சுன்னி சண்டையை விவாதமாக்குகிறாய்!

தீக்கு பதிலாக தீராத பகையைத்தான் உன் யாக குண்டத்தில் வளர்த்திருக்கிறாய் என்பது தான் வரலாறு!

கோமாதாவோடு சேர்த்து ஒட்டகத்தையும் புனிதமென்கிறாய்! உன் திடீர் பாசத்திற்கு பரிசாக இனிமேல் ஒட்டகமும் நீ குடிக்க மூத்திரம் பெய்து தரலாம்!

என்னவோ தெரியவில்லை உன் விநாயகருக்கு எப்போதுமே ஊர்வலம் போக மூஸ்லீம் தெருவையே பிடித்திருக்கிறது!

காவி என்றால் புத்தம், வெண்மையென்றால் கிறித்துவம், பச்சை என்றால் இஸ்லாம் என தேசிய கொடியின் என் புது விளக்கத்தை நீ ஏற்க மறுக்கலாம்!

வெள்ளம் வந்தால் நீ உயிர்பிழைக்க முதலில் ஓடும் இடம் மசூதியாகவே இருக்கிறது! மறக்காமல் உன் கோயிலை பூட்டி வைத்து புனிதம் காத்துக் கொள்கிறாய்!

பர்தா போட்டு மூடியிருந்தாலும் அவள் மார்பின் அளவை மனக்கணக்கிடுகிறாய்! முஸ்லீம் பெண்கள் அனைவரும் தேவிடியாளாய் இருக்க வேண்டுமென உன் சீதையை வேண்டிக்கொள்கிறாய்!

நடுநிசியில் அவன் வீட்டில் புகுந்து அவன் கண் எதிரே அவன் அம்மாவையும் மனைவியையும் மூன்று வயது பெண் குழந்தையும் அம்மணமாக்கி காமகளியாட்டம் ஆடுகிறாய்!

உன் ஆண்குறிகளையே ஆயுதமாக்கி அவர்களின் யோனிகளை குத்திக்கிழிக்கிறாய்!
பாரத்மாதாவிற்கு ஜே! என்ற உன் முழக்கம் அவர்களின் கதறல் சத்தத்தையும் தண்டி காற்றில் கரைகிறது!

இத்தனைக்கு பின்னும் கூட வெறி அடங்காத உன் விரைத்த ஆண்குறியோடு சுடுகாட்டை நோக்கி ஒடுகிறாய்! புதைத்த முஸ்லீம் பெண்ணை தோண்டி எடுத்து வெறியோடு புணருகிறாய்! மீண்டும் அதே பாரத்மாதாகி ஜே முழக்கம்!!

இதேபோல உன் பாரதமாதாவையும் ஒருநாள் நீ புணருவாய் என எனக்கு தெரியும்!

முஸ்லீம் கற்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தை எடுக்க கையில் கத்தியுடன் பிரசவம் பார்க்க இதோ கிளம்பிவிட்டாய்! காரியம் முடிந்த கையோடு முத்தலாக் பற்றி மேடையில் முழங்குவாய்!

எத்தனை கொடுமைகளைத்தான் தாங்குவான் இந்த பாவப்பட்ட துலுக்கன்! அல்லாஹ் என்று உயிரிலிருந்து கதறி அழுகிறான்! இந்த மண்ணில் அல்லாவை விட்டால் அவனுக்கு வேறு நாதியில்லை!

இத்தனைக்கு பின்னும் உன் ரத்தவெறி அடங்காமல் அடுத்து என்ன செய்யாலாம் என யோசித்தவாறே உன் கைககளில் படிந்திருக்கும் இரத்தக்கறையை கழுவிக்கொண்டிருக்கிறாய்!

இதோ! உன் வீட்டு வாசலில் உன் பசிபோக்க பிரியாணியோடு வந்து நிற்கிறான் அந்த அப்பாவி துலுக்கன்!

அடேய் முட்டாள் துலுக்கனே! இத்தனைக்கு பிறகுமா உனக்கு புத்திவரவில்லை! உன் குடும்பத்தையே நிர்மூலமாக்கியவன்டா அவன்! என கோபத்தில் கொதித்து எழுந்து அவன் சட்டையை பிடித்து உலுக்கினேன்!

'அல்லா எல்லோரையும் நேசிக்க சொல்லியிருக்கார்' என வெள்ளந்தியாய் சிரித்துவிட்டு 'சூடு குறைவதுற்குள் ஒருவாய் சாப்பிடு என ஒரு பிடி பிரியாணியை என் முன்னே நீட்டினான்! நான் செத்தேவிட்டேன்!!!

No comments:

Post a Comment