Monday, December 6, 2021

நேபாளத்தில் உள்ள அயோத்தி

Satheesh kumar

கோவிலை இடித்து கட்டப்பட்டதா பாபர் மசூதி..?

இராமரைப் பற்றி இந்துக்கள் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் சங்பரிவா ரத்தினரின் கூற்றுக்களின் அடிப்படையில் எடுக்கக் கூடாது. இந்து மதப் புராணங்களை மேற்கோள் காட்டியே முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் மனம் போக்கில் யாரேனும் இராமரைப் பற்றி முடிவு செய்தால் அது அவரது முடிவாகத்தான் இருக்குமே தவிர இந்து மதத்தின் முடிவாக இருக்க முடியாது.

இராமரைப் பற்றி முதன் முதலில் வால்மீகி என்பவர் சமஸ்கிருத மொழியில் இராமாயணத்தை எழுதினார். இராமரைப் பற்றி அதில் கூறப்பட்ட விஷயங்கள் தான் இராமரைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாகும்.
வால்மீகி இராமாயணத்தில் இராமர் பிறந்ததைப் பற்றிக் கூறும்போது, ‘அவர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று கூறப் பட்டுள்ளது.

இந்துக்களின் கால அளவை முறையில் யுகம் என்பது காலத்தை அளக்கும் பெரிய அலகுகளில் ஒன்று. யுகங்கள் நான்கு. அவை:

கிருத யுகம் 17,28,000 (பதினேழு இலட் சத்து இருபத்து எட்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது.

திரேதா யுகம் 12,96,000 (பன்னிரெண்டு இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரம்) ஆண்டுகள் கொண்டது.

துவாபர யுகம் 8,64,000 (எட்டு இலட்சத்து அறுபத்து நான்காயிரம்) ஆண் டுகள் கொண்டது.

கலியுகம் 4,32,000 (நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது) என்பனவாகும்.

அதாவது கிருத யுகத்தில் பாதி அளவு கொண்டது திரேதா யுகம். திரேதா யுகத்தில் பாதி அளவு கொண்டது துவாபர யுகம். துவாபர யுகத்தில் பாதி அளவு கொண்டது கலியுகம்.

இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் கலியுகம். கலியுகம் கிறிஸ்து பிறப்பதற்கு 3102 வருடங்களுக்கு முன் துவங்குகிறது. இயேசுவுக்குப் பின் 2021 ஆண்டுகள் ஆகின்றன. இதன்படி கலியுகம் துவங்கி 5123ஆண்டுகள் நடக்கிறது. இந்த யுகத்தில் இராமர் பிறக்கவில்லை.

கலியுகத்துக்கு முந்திய யுகம் தூவாபர யுகம். இந்த யுகத்திலும் இராமர் பிறக்க வில்லை.

இந்த யுகத்துக்கும் முந்திய யுகம்தான் திரேதா யுகம். இந்த யுகத்தின் கடைசி வருடத்தில் இராமர் பிறந்திருந்தார் என்று வைத்துக் கொண்டால் கூட 8,64,000 + 5,123 = 8,69,124 எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரத்தி நூற்றி இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தான் இராமர் பிறந்தார் என்பது வால்மீகி இராமாயணத்தின் தீர்ப்பு.

இராமர் பிறந்த காலம் பற்றி வால்மீகி இராமாயணம் கூறுவது போலவே அவர் பிறந்த ஊர் பற்றி கூறும்போது, ‘இராமர் அயோத்தி என்னும் பட்டணத்தில் பிறந் தார்’ எனக் கூறுகிறது.

அப்படியானால் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அயோத்திப் பட்டணம் இருந்தி ருக்க வேண்டும்.

ஆனால் உ.பி.யில் உள்ள அயோத்தி எப்போது தோன்றியது என்று பல விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், மத்திய அரசாங்கத்தின் தொல் பொருள்துறை சார்பில் அயோத்தியை ஆய்வு செய்து 1976, 77ல் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் 52, 53 ஆகிய பக்கங்களில் ‘அயோத்தி என்ற ஊர் உண்டானதும், அதில் மக்கள் வசிக்கத் தொடங்கியதும் கி.மு. 700ல்தான் இருக்க முடியும்’ எனக் குறிப்பிடுகின்றார்.

அதாவது 2708 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்திருக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று அவர்களின் அறிக்கை கூறுகிறது.

இதன் பின்னர், சி.பி.லால், கே.என். தீட்சித் ஆகிய வரலாற்று வல்லுனர்கள் 1979, 80ல் இதை மறு ஆய்வு செய்தனர். தொல்பொருள் துறையினரின் மேற்கொண்ட முடிவு சரியானதே என்று அவர்கள் கண்டுபிடித்தனர்.
அயோத்தியில் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இராமர் பிறந்தார் என்று வால்மீகி கூறுகிறார். ஆனால் ராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் அந்தக் காலத்தில் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்த தில்லை என்பது தெளிவாகிறது.

இராமாயணத்தையும் மறுக்காமல், தொல்பொருள் அறிஞர்களின் கண்டுபிடிப் புகளையும் மறுக்காமல் ஒரு முடிவுக்கு வருவதாக இருந்தால் என்ன முடிவுக்கு நாம் வர வேண்டும்?

இந்த அயோத்தியின் வயது 2708 ஆண்டுகளாக இருக்கலாம். ஆனால் ராமாயணத்தில் கூறப்பட்ட அயோத்தி இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அந்த அயோத்தி இருந்திருக்கலாம். ஒரு பெயரில் பல ஊர்கள் இருப்பது சாதாரண மானதுதான் என்ற முடிவுக்குத்தான் அவர்கள் வரவேண்டும். அப்போதுதான் நடைமுறை உண்மைக்கு முரணில்லாமலும், இராமாயணத்தை மறுக்காமலும் முடிவு எடுத்ததாக அமையும்.

‘இராமர் பிறந்தது இந்த அயோத்தி அல்ல; வேறு அயோத்திதான்’ என்பதற்கு இராமாயணத்திலேயே இன்னும் பல சான்றுகள் உள்ளன.

அயோத்தியைப் பற்றி பேசும் வால்மீகி இராமாயணம் சரயூ நதியைப் பற்றியும் கூறுகிறது. சரயூ நதி அயோத்தியில் இருந்து ஒன்றரை யோஜன் தூரத்தில் உள்ளது என்று கூறுகிறது. ஒன்றரை யோஜன் என்பது இன்றைய கணக்குப்படி 23 கிலோ மீட்டர் ஆகும்.

ஆனால் இப்போது நாம் அயோத்தி சென்று பார்த்தால் சரயூ என்ற பெயரில் ஒரு நதி அங்கே ஓடினாலும், அது அயோத்திலேயே ஓடுகிறது. அயோத்தியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் அது இல்லை.

அப்படியானால் இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியும் சரயூ நதியும் இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அயோத்தி என்ற பெயரில் ஒரு ஊரும், அதிலிருந்து 23 கி.மீ தொலைவில் சரயூ என்ற பெயரில் ஒரு நதியும் இருந்திருக்க வேண்டும் என்று நம்பினால்தான் இராமா யணம் கூறுவது மெய்யாகும்.

”இந்த அயோத்திதான் அந்த அயோத்தி” என்று கூறுவது இராமாயணத்தை மறுத்து இந்து மதத்தையே மறுப்பதாக ஆகிவிடும்.

அதுபோல் சரயூநதி கங்கை எனும் பெருநதியில் சங்கமம் ஆகிறது என்று வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது. ஆனால் உ.பி.யில் உள்ள சரயூ நதி கங்கையில் சங்கமம் ஆகவில்லை. மாறாக ராப்தி எனும் நதியில் சங்கமமாகிறது. இதிலிருந்து தெரிய வருவது என்ன? இராமாயணம் குறிப்பிடுவது இந்த அயோத்தியையோ, இந்த சரயூ நதியையோ அல்ல என்பதுதான்.

மேலும் சரயூ நதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்வதாக வால்மீகி ராமாயணம் வர்ணிக்கிறது. ஆனால் உ.பி. யில் உள்ள சரயூ நதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிறது.

அதை ஆய்வு செய்த ஷேர்சிங் என்ற ஆய்வாளர் ஒரு உண்மையைக் கண்ட றிந்து வெளிப்படுத்தியுள்ளார்.
நேபாளத்தில் ஒரு அயோத்தி உள்ளது. அதிலிருந்து 20 கி.மீ தொலைவில் ஒரு நதி ஓடுகிறது. அது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்கிறது. மேலும் அது கங்கையில் சங்கமம் ஆகிறது என்று அவர் கண்டுபிடித்துள்ளார்.

எனவே இராமர் பிறந்த அயோத்தி உ.பி.யில் உள்ள அயோத்தி என்று யாராவது நம்பினால் அவர்கள் இராமாயணத்தை மறுத்தவர்களாகின்றனர்.

இராமாயணத்தில் கூறப்படும் அடையாளங்களும், தன்மைகளும் எந்த அயோத்திக்குப் பொருந்துகிறதோ அந்த அயோத்திதான் இராமர் பிறந்த அயோத்தி என்று முடிவு செய்வதுதான் இந்துமதத்தின் ஆதாரத்தால் நிரூபிக்கப்பட்ட தாகும்.

https://m.facebook.com/story.php?story_fbid=1585126445170368&id=100010190820245

Sunday, November 14, 2021

ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால்.உடனடியாக நாம் என்ன செய்ய வேண்டும்..!

தெரிந்துக்கொள்வோம்!

ஒரு நிலம் நம்மிடம் விற்பனைக்கு வந்தால்.உடனடியாக நாம் என்ன செய்ய வேண்டும்..!

1.முதன் முதலில் computerised EC 1975 முதல் போட்டு பார்க்க வேண்டும் 1975 முதல் பின்னோக்கி 1908 அல்லது 1858 வரை manual EC கட்டாயம் போட்டு பார்க்க வேண்டும்.

Zero value நிலம் EC யில் நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூமிதான நிலம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம் எனவே zero value நிலம் வாங்காதீர்.

2.Double Document நிலம்.

Power of attorney(POA) double document

அதாவது power யில் வரும் நிலத்தை வாங்காதீர் இது double டாக்குமெண்ட் க்கு இட்டு செல்லும்.

POA நிலதை வாங்கியே தீர வேண்டும் என்றால் Power கொடுத்தவர் உயிரோட சுய நினைவோட இருக்கிறாரா என்று கண்டுபிடியுங்கள் POA agreement நகல் வாங்கி அதில் குறிப்பிடப்படுள்ள அட்ரஸ் இல் power கொடுத்தவரை நேரில் சந்தித்து விசாரியுங்கள்.

அடுத்து அந்த power பத்திரம் செல்ல கூடியாதா என்று கேளுங்கள் அதாவது power பத்திரம் எழுதி கொடுத்தவர் அதை ரத்து செய்து விட்டாரா என்றும் கேளுங்கள் முகவரும் (agent )விற்கலாம், principal (power எழுதி கொடுத்தவர்) ளும் விற்கலாம் விற்றால் அது double டாக்குமெண்ட்.

3.உயில் பத்திர நில double document.

உயில் மூலம் உரிமை மாறி இருக்கா

உயில் பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வரும் நிலமெனில்.
எது இறுதி/கடைசி உயில் என்று கவனமாக பார்க்க வேண்டும் பதிவு செய்யபட்ட உயில் மூலம் விற்பனை நடந்தால் அது ஒரு நில விற்பனை பத்திரம்.

பதிவு செய்யப்பட்ட உயிலுக்கு பிறகு ஏதாவது பதிவு செய்யாத உயில் இருக்கான்னு நிலம் விற்பவரின் உறவினர்களை கேட்க வேண்டும் இந்த பதிவு செய்யப்படாத உயில் மூலம் விற்பனை செய்யப்பட்டு இருந்தால் அது double டாக்குமெண்ட்.

4.Settlement பத்திர நிலம் double document .

Settlement பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வந்தால் செட்டில்மெண்ட் ரத்து செய்ய பட்டு இருக்கிறதா என்று கவனமாக பார்க்கவும் 1990 முதல் 2015 வரை ரெஜிஸ்டர் ஆபீசில் செட்டில்மெண்ட் ரத்து செய்து நிலத்தில் மேலும் சொத்தை சிக்கல் ஆக்கிவிட்டர்கள்.

செட்டில்மெண்ட் பத்திரத்தை civil கோர்ட் மூலியமாக தான் ரத்து பண்ண முடியும் பத்திர ஆபீசில் செய்யும் ரத்து பத்திரம் சொல்லாது.

EC யில் SRO=Sub register Office)மூலம் ரத்து ஆகி இருந்தால் அந்த நிலத்தை வாங்காதீர்.

உயில் பத்திரம் தாய் பத்திரம் ஆக இருந்தால் அந்த தாய் பத்திர உயில் மூலம் கிரயம் நடைபெற்று இருந்தால் அந்த கிரய பத்திரத்துக்கு லிங்க் கவனமாக இறங்கியதா என்று பார்க்க வேண்டும்.

5. Update ஆகாத பட்டா மூலம் கிரயம்-double document.

1987-UDR, 1995-நத்தம் நிலவரி திட்டம் முன்பு நிலம் பத்திரத்தின் மூலம் வாங்கியவர் அதை revenue record எனப்படும் பட்டாவில் தான் தான் தற்போதைய உரிமையாளர் அதாவது current owner என்பதை update செய்யாமல் இருந்தால் 1987முந்தைய owner & அவரின் வாரிசுகள் பழைய பட்டா மூலம் கிரயம் செய்தால்.

அடுத்து நிலம் வாங்கி பட்டாவில் update செய்யாமல் விட்டுவிட்ட அசல் (எ ) original owner றோ இல்லை அவரின் வாரிசுகள் விற்று கிரய பத்திரம் ஆகி இருந்தால் அதுவும் double document.

6.Layout frame, வடிவம், உருவாமாற்றம் மாற்றிய நிலமா?

அடுத்து அந்த நிலம் நத்தம் நிலமா, layout பிளாட் ஆஹ் என்று பாருங்கள்.

DTCP approved or CMDA approved என்றால் DTCP & CMDA website யில் approval நம்பர் போட்டு approval ஒரிஜினல் தானா என்று உறுதி படுத்தி கொள்ளலாம். Website லே கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நேரில் LPA(local planning authority என்னும் DTCP அல்லது CMDA அலுவலகத்திற்கு சென்று நிலத்தின் approval சரிதானா என்று கேளுங்கள்.

அது பழைய approved layout ஐ திருட்டுதனமாக redraw செய்து விற்பனைக்கு வந்திருக்கும் layout ஆஹ் என்றும் விசாரியுங்கள்.

Layout ப்ளூ பிரிண்ட் இருந்தால் கொண்டு சென்று park, ஸ்கூல் க்கு இடம் விட்டுட்டு layout போட்டு இருக்கிறார்களா என்றும் கேளுங்கள் நிறைய land ப்ரோமோட்டார்ஸ் park, ஸ்கூல் இடத்தை காட்டி approval வாங்கி விட்டு layout வரை படத்தை மறுபடியும் திருட்டுதனமாக வரைந்து(எ ) redraw செய்து park, ஸ்கூல் இடத்திலும் மனை போட்டு விடுவார்கள்.

எனவே ஜாக்கிரதை.

பஞ்சாயத்து approved இடங்கள் வாங்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் வாங்கிய பின்பு நீங்கள் தான் நிலத்தை frame work scheme இன் கீழ் வரையறை செய்ய அலைய வேண்டி இருக்கும்.

நத்தம் நிலம் என்றால் VAO வை பார்க்க வேண்டும் உங்கள் சர்வே நம்பர் இன் UDR காலத்து 1987 ஆம் ஆண்டின் சிட்டா அடங்கலை, FMB நேரில் சென்று கேளுங்கள்.

இனாம் கிராமம் ஆக இருந்து இனாம் ஒழிப்பின் மூலம் நத்தம் நிலவரி திட்டத்தின் கீழ் பட்டா வழங்கபட்ட நிலமா என்றும் பார்க்க வேண்டும். அந்த பட்டா UDR காலத்து சிட்டா அடங்கல் ரெஜிஸ்டர் இல் ஏறி இருக்கா னும் பார்க்கணும்.

VAO நேரில் கேட்டும் கொடுக்கவில்லை என்றால்  RTI மனுவில் கேளுங்கள் RTI யில் கட்டாயம் கொடுக்க வேண்டும்.

4. EB, சொத்து வரி விற்பவர் பெயரில் இருக்கா என்று பாருங்கள்.இல்லை என்றால் மாற்றி, பின்னர் விற்க சொல்லுங்கள் .

5.பட்டா விற்பவர் பெயரில் இருக்கானு பார்க்கணும்.

கூட்டு பட்டா நிலம் எனில், நிலம் பங்குதாரர்கள்குள் யாருக்கு எவ்வளவு இடம் & எந்த இடம் என்று பிரித்திருக்க வேண்டும் இல்லை என்றால் வாங்கும் உங்களுக்கு சிக்கல். விற்பவருக்கு உரிமை இல்லாத நிலத்தை விற்க வாய்ப்பு இருக்கு

பட்டா வாங்குறது பெரிய process, நிறைய அலைச்சல் & கஷ்டம்.

அதனாலே விற்பவர் பெயரில் பட்டாவை மாற்ற சொல்லுங்கள் அதன் பின்பு நிலத்தை வாங்குங்கள்.

6. நிலத்தின் வகைப்பாடு கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

நஞ்சை, புஞ்சை, நத்தம், நத்தம் புறம்போக்கு, மேய்ச்சல், வாய்க்கால், ஓடை  புறம்போக்க்கா, நெல் போராடிக்கும் இடமா, park, விளையாட்டு திடல்,கோயில் க்கு ஒதுக்கப்பட்ட நிலமா,பொதுவில் மாடு கட்ட விடப்பட்ட இடமா, நிலவியல் பாதை(அரசு நிலம் ), நிலவியல் ஓடை etc.என்று பார்க்கிவேண்டும்.

7. பட்டாவின் பயனாளி யார்?.

முன்னோரு காலத்தில் அது ஜமீன் நிலமா அல்லது இனாம் நிலமா அல்லது ரயட்டுவாரி நிலமா ஆஹ்  என்று பார்க்க வேண்டும்

மேஜர் இனாம்

ராயட்டு வாரி
1802 காலத்தின் permanent settlement record காலத்தின் ஜாகிர் இனாம் , ஜமீன் நிலமாக இருந்து ராயட்டுவாரி யாக மாற்றம் பெற்றதா என்றும் பார்க்க வேண்டும்.

வெள்ளைக்காரன் காலத்துல இனாம் ஒழிப்பில் இருந்து ஜமீன் நிலமாக மாறியதா என்றும் ஆராய வேண்டும்.

இதற்கு VAO, தாலுகா & கலெக்டர் அலுவலகத்தில் record section இல் இருக்கும் B-record, OSR, RSR, SLR இன் நகல் தேவை உங்கள் நிலத்தின் சர்வே நம்பர் குறிப்பிட்டு ஒரு மனு கொடுத்து, 50 ரூபாய் கட்டி வாங்கி கொள்ளலாம்.

------------
Minor இனாம்
சுதந்திரத்திற்கு முன் பிரிட்டிஷ்காரர்கள் கொடுத்த   DC land (எ) (Depressed Class) நிலமா? என்று பார்க்க வேண்டும்

தொழில் முறை இனாம் நிலம்
----
தச்சர், கருமான், நாவிதர், காவக்காரன்,கர்ணம்,தலையாரி,
வெட்டியான், சக்கிலியர்,புதிரை வண்ணார்  இனாம் நிலமா? என்றும் பார்க்க வேண்டும்.

வெள்ளைக்காரன் காலத்தில் மணியமாக அங்கீகாரிக்க பட்ட ஊழிய மானியங்களான பூசாரி, தேவதாசி,பூ கட்டும் மானியம் நிலமா? என்று பார்க்க வேண்டும்.

சோஸ்திராம் மானியம் ஒழிக்கப்பட்ட நிலமா?என்றும் பார்க்க வேண்டும்.

ஹாஜி இனாம் ஒழிக்கப்பட்ட நிலமா? என்றும் பார்க்க வேண்டும்.

------------
DC அல்லாத பிற இனதவர்க்கு கொடுக்கப்பட்ட குறவர், கள்ளர்(குற்றபரம்பரை)
settlement etc யா என்று பார்க்க வேண்டும்.

மேற்சொன்ன வகை பாடு அனைத்தும் வெள்ளைக்காரன் காலத்தாவை.

---------
சுதந்திரத்திற்கு பின் கொடுக்கபட்ட Assigment land.

Assignment land (எ ) ஒப்படை பட்டா நிலங்கள் எனில் அதற்கு உண்டான (HSD பட்டா , D-பட்டா, நமுனா பட்டா, TKT பட்டா,F-பட்டா, B-memo பட்டா, அனுபந்த பட்டா, Assignment land என்னும் ஒப்படை நிலம் ) யா என்று பார்க்க வேண்டும்.

SC & ST பிரிவினற்கு கொடுத்த AD  assignment Land (Adi Dravidar )பட்டா உள்ள நிலமா என்றும் பார்க்க வேண்டும்.

F-பட்டா.
இது நிலசீர்திருத்த துறையால் வழங்க பட்டது.நிலசீர்திருத்த துறை வேறு revenue டிபார்ட்மென்ட் வேறு.

ஜமீன் ஒழிப்பில் இருந்த நிலங்களை பயனாளிக்கு கொடுத்தது என்பதை உறுதி படுத்தும் ஆவணமே F-பட்டா.

1970-B-Memo land =பீமா பட்டா.

B memo பட்டா நிலம் விற்பனை க்கு வந்தால் வாங்காதீர். ஏன் என்றால் B-memo என்பது நில உரிமை பட்டா அல்ல. அது நீ ஒரு அரசின் புறம்போக்கு நிலத்தின் ஆக்கிரமிப்பு செய்தவன் என்ற govt நோட்டீஸ் மட்டுமே. B-memo நிலத்தில் குடி இருப்பவர்களை எந்நேரமும் அரசு காலி செய்ய சொல்லும்.

Assignment பட்டாவில் உள்ள கண்டிஷன் பார்க்க வேண்டும். கண்டிஷன் பார்க்காமல் வாங்காதீர்.

ஒப்படை நிலங்களை அரசாங்கமே திருப்பி எடுத்து கொண்டு விட்டாதா என்றும் பார்க்க வேண்டும்.

--------

1956-பூமி தான நிலம்

Manual EC
கட்டாயம் 1950-1965 வரை manual EC போட்டு பார்க்க வேண்டும்.

manual EC யில் மட்டும் தான் பூமி தான போர்டுக்கு நிலங்களை பெரும் நில சுவாந்தார்கள் தான பத்திரம் (கிரயபத்திரம்) கொடுத்த அந்த entry  காட்டபட்டு இருக்கும்.

பூமி தான போர்டு பெயரில் பட்டா, சிட்டா ஆகியவை மாறிவிட்டு இருந்தால் VAO அலுவலகத்தின் A-Record இல் காட்டும்.

ஏர் உழவன் பட்டா=பூமி தான நிலத்திற்கு ஆன குத்தகை பட்டா.

Manual EC யில் கிடைக்காத பூமி தான நிலங்களை பற்றிய தகவல்கள் revenue record யில் தான் கண்டுபிடிக்க முடியும்.

பூமி தான நிலம் என்றால் மெட்ராஸ் சைதாப்பேட்டை யில் உள்ள பனகல் மாளிகையில் உள்ள பூமி தான board க்கு சென்று வாங்க விரும்பும் நிலத்தின் சர்வே நம்பர் பூமி தான வரையறைக்குள் வருகிறதா என்று பார்க்க வேண்டும். Master ரெஜிஸ்டர் பார்க்க வேண்டும்.

பூமி தான நிலம்  வாங்காதீர்.

பூமி தான நிலத்தை பயனாளி விற்கு அதிகாரம் இல்லை. பயனாளிக்கு குத்தகை உரிமை மட்டுமே உண்டு.

எனவே அது பூமி தான நிலம் என்று தெரியவந்தால் வாங்காதீர்.

-----------
Zero value நிலம்

-EC யில் நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூதிதானம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம்.

-----------
கோயில் நிலம் -HR&CE நிலமா

வாங்க விரும்பும் நிலம் கோயில் நிலம் ஆஹ்  என்று பார்க்க வேண்டும்.

கோயில் நிலம் என்றால் பயந்து விட கூடாது அது இறையிலி(100% கோயிலுக்கு சொந்தம்), தேவதானம், தர்மதாயம் ஆக  இருக்க கூடாது அவ்வளவே.

கோயில் நிலத்தில் கட்டளை என்று ஒரு பிரிவு உண்டு இதையும் வாங்க கூடாது. கட்டளை எப்படி உடைக்க வேண்டும் என்று தெரிந்தவர்கள் மட்டுமே வாங்கலாம்.

கோயில் மணியமாக இருந்து ரயத்துவாரி நிலமாக 1963 இல் மாறி இருந்தால் அது கண்டிஷன் பட்டாவா என்று பார்க்கனும்.

இந்த நிலம் வாங்கும் போது கவனம் தேவை. ஏன்னா HR&CE நிறைய நிலங்களை திருப்பி எடுத்து கொண்டு உள்ளது.

-----------

ஜமீன் & மானியம் முற்றாக ஒழித்தது 1950 to 1960 களில்.

land reforms act.
இதற்கு நில சீர்திருத்தம் என்று பெயர். ஜமீன் இடம் இருந்து அரசு எடுத்த உபரி நிலம் கிராம கணக்கில் B register லே இருந்து A-register க்கு மாறும் போது உபரி நிலம் , அனாதீனம், உரிமையாளர்கள் பெயர்கள் மாறி உள்ளது போன்ற சிக்கல் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.

-----

1963 minor இனாம் ஒழிப்பு சட்டம்

இனாம் ஒழிப்பு to ரயட்டுவாரி பட்டா. உழுபவனுக்கே நிலம் சொந்தம் scheme.

RSLR இல் "கிராமத்தார்" என்று பட்டா தாக்கல் செய்யப்பட்டு 1963 minor இனாம் ஒழிப்பு சட்டம்
மூலம் ரயட்டுவரி பட்டாவாக மாறி பின்பு 1987 UDR இல் மீண்டும் RSLR இல் உள்ளது போன்று "கிராமத்தார்"  என்று மாறி இருந்தால் அந்த நிலத்தை வாங்காதீர்.

அது தனி நபர் பட்டா என்று மாறி இருக்கா என்றும் பார்க்க வேண்டும்.

--------
1963 கோவில் நிலம் (இனாம் ஒழிப்பு சட்டம், ஒழிப்பு மற்றும் ரயட்டுவாரியாக மாற்றுதல்) சட்டம்

தேவதாசி மானியம் to நிபந்தனை பட்டாவாக உள்ள நிலத்தை பயன்படுத்தி கொள்ளலாமே தவிர சொந்தம் கொண்டாட முடியாது.

ஊழிய மானிய நிலங்கள் கண்டிஷன் பட்டா வா இல்லை normal ராயட்டுவாரி பட்டா நிலமா? ன்னு பார்க்கணும்.

இந்த நிலம் வாங்கும் போது மிகுந்த கவனம் தேவை. தமிழ் நாட்டின் நில நிர்வாக பற்றிய அறிவு உள்ள ஒரு சிவில் லாயர் தான் உங்களை காப்பாற்ற முடியும் m

--------
1961(center)to 1972(TN)Land ceiling act நிலம்

நில உச்சவரம்பு வரையறைகுள் மாட்டிக்கொண்ட நிலமா என்று பார்க்க வேண்டும்.

UDR லே celing இடம் என்று இருக்கானு பார்க்கணும்.

Section 37B இல் வந்த நிலாமா என்று பார்க்க வேண்டும்.

--------
1976 களின் Urban land seiling act

ULC ஆக்ட் இல் மாட்டி கொண்ட ULC நிலமா என்று பார்க்க வேண்டும். ULT என்று note இருந்தால் மெட்ராஸ் பரங்கிமலை ரயில் நிலையம் அருகில் உள்ள உச்சவரம்பு ஆபீசில் சர்வே நம்பர் கொடுத்து விசாரிக்கணும். Innocent buyer என்று சொல்லி land கமிசினர் க்கு மனு செய்யனும்.

ULC நிலம் தவறுதலாக நீங்கள் வாங்கினாலும் நிலத்திற்கு  revenue department(டாசில்தார், VAO )பட்டா மாற்றம் செய்து கொடுக்க மாட்டார்கள். எனவே ஜாக்கிரதை.

8. கோர்ட் attached property வாங்காதீர்.

9. டிவோர்சஸ் கேஸ் உள்ளவரிடம் நிலம் வாங்காதீர். அந்த நிலத்தை அவர் மனைவி maintenance (ஜீவனாம்சம்) வேண்டி மனு செய்து இருந்தால் நீங்கள் போட்ட பணம் காலி.

எனவே விற்பவர் இடம் இந்த விவரத்தை கேளுங்கள். ஒரிஜினல் பத்திரதை காட்டச்சொல்லி பத்திரத்தின் பின் புறம் கோர்ட் சீல் இருக்கா என்று பாருங்கள்.

---------------
10.அடுத்த step, அந்த நிலத்தின் சர்வே என்னை கொண்டுபோய் நிலம் அமைந்துள்ள கிராம VAO கிட்ட அந்த நிலத்தோட FMB, பட்டா, சிட்டா, A ரெகார்ட் வாங்குங்கள்.

11.அடுத்து VAO கிட்ட govt அந்த இடத்தில் ரோடு போட , டேங்க் அமைக்க .i e., பிற்காலத்தில் govt project க்கு எடுத்து கொள்ளுமான்னு கேளுங்கள்?.பாலுமாகேந்திரவின் "வீடு " படத்தை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

அவர்(VAO) டாக்குமெண்ட் தர வில்லை என்றால்,

12. மேற்கூறிய டாக்குமெண்ட் அனைத்தின் அட்டெஸ்ட் copy வேண்டும் என்று VAO office மற்றும் டாசில்தார் ஆபீஸில் RPD போஸ்ட் அல்லது நேரடி மனுவோ அல்லது RTI யில் கேட்டு டாக்குமெண்ட் நகல் வாங்கி கொள்ளுங்கள்.(கண்டிப்பாக attest copy வேண்டும் )

13..அடுத்து நிலத்தின் 1858 காலத்து OSR, RSR A-Record எடுக்க முடிந்தால் இன்னும் நல்லது.

1908,1936 ஆண்டின் SLR, RSLR A- Record, FMB ஒரு   80  to 100 வருடத்திற்கு வேண்டும்.

1987 ஆம் ஆண்டின் FMB, A-record, சிட்டா அடங்கல் கட்டாயம் எடுக்கணும்.

இதன்  நகல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேளுங்கள்.இது ஏன் கேட்க சொல்றோம் என்றால்

1.அது வெள்ளைக்காரன் காலத்தில் DC land @பஞ்சமி நிலம் ஆக இருந்தால் போட்ட பணம் எல்லாம் காலி. சுப்ரீம் கோர்ட் போனாலும் கேஸ் நிக்காது.

2. அடுத்து அது ஜமீன் ஒழிப்பு & கோயில் மானிய ஒழிப்பில் அரசால் எடுக்கப்பட்டு ஆனால் revenue record இல் அரசு நிலம் என்று பதிவேற்றம் செய்யப்படாமல் இருக்கும் நிலமா என்று பார்க்க வேண்டும்.

ஏன் என்றால் இவர்கள் revenue record இல் பதிவேற்றம் செய்யாத ஓட்டையை பயன்படுத்தி UDR சர்வே செய்ய வந்த தனியார் கம்பெனி அதிகாரிகளை கரெக்ட் செய்து UDR இல்  திரும்பவும் ஜமீன் பெயரே ரயத்துவாரி யாக மாற்றி கொண்டார்கள்.

14.அடுத்து ரெஜிஸ்டர் ஆபிசில் அந்த நிலத்தின் மீது யாராவது பத்திரம் பண்ண கூடாதுனு தடை மனு கொடுத்து இருக்காங்களா கேட்டு confirm(உறுதி )பண்ணிக்கணும்.

15..அடுத்து அந்த பத்திரம் முழுமையானா ஆவணமா அதாவது பத்திரம் முழுமையான ஸ்டாம்ப் டூட்டி கட்டி இருக்கிறதா என்று confirm பண்ணுங்க.

16.அடுத்து நிலம் இருக்கும் இடத்தை குறைந்தது 10தடவை பாருங்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் நிலத்தின் மீது ஏதாவது பிரச்சனை, வில்லங்கம், ஆக்கிரமிப்பு இருக்கிறதா என்று கேளுங்கள் இதை ஏற்கனவே யாராவது வாங்கி இருக்கிறார்களா தற்போதைய owner யார் என்றும் கேளுங்கள்

17.அடுத்துநிலம் விற்பவர் வீட்டுக்கு அருகில் இருப்பவர்களிடம் அவருக்கு எத்தனை உடன்பிறத்தோர்,மனைவி, குழந்தைகள், விற்பவருக்கு இந்த நிலம் எப்படி வந்தது . அந்த சொத்தில் விற்பவரின் உடன் பிறந்தோர் க்கு பங்கு இருக்கா?என்று கேளுங்கள்

18.அடுத்து நான் கூறிய டாக்குமெண்ட் எல்லாம் வாங்கி விட்டு உங்கள் நிலத்தின்  ரெஜிஸ்ட்டர் ஆபிஸ் ஏரியாவின் நல்ல சிவில் lawyer பாருங்கள்.

நல்ல லாயர் எப்படி கண்டு பிடிப்பது?.

உங்களுக்கு lawyer refer செய்கிறவரிடம்,

லாயர் எங்கு படித்தார் எந்த ஆண்டில் இருந்து practise செய்கிறார் எத்தனை பத்திரம் பதிந்து இருக்கிறார், எத்தனை லீகல் ஒப்பீனியன் கொடுத்து இருக்கிறார் போன்ற கேள்விகள் கேளுங்கள் புரோக்கர் சொல்லும் லாயர் இடம் செல்லாதீர்.

மேற்கூறிய கேள்விகளுக்கு உங்களால் பதில் கண்டுபிடிக்க முடியும் என்றால் நல்ல லாயாரை கண்டுபிடித்தீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம்.

கண்டுபிடிப்பது உங்கள் சமர்த்தியம்.

Lawyer க்கு பணம் கொடுக்க அழுக கூடாது. அந்த பணம் தான் நிலத்தின் முதலீடு நீங்கள் விற்பவருக்கு கொடுக்கும் பணம் அல்ல.

19. எல்லாம் சரியாக அமைந்து விட்டால் அடுத்து ஒரு govt registered surveyor பாருங்க. அவர் நிலத்தை அளந்து, encroachment, deviation எல்லாம் சொல்லுவார் பின்பு படத்தை வரைந்து தருவார்.

20. தயவு செய்து டாக்குமெண்ட் writer வைத்து பத்திரம் எழுதலாமா என்று நிதானமாக யோசிக்கவும்..பத்திரம் எழுதிற licens
e govt 1990களில் இருந்து தரவில்லை என்று கேள்வி . சந்தேகம் என்றால் லைசெஸ் நம்பர் கேளுங்கள்.

பாதி பேர் 10வது தாண்டதவர் . மீதி பேர் காலேஜ் ஹே போகாமல் 700KM தள்ளி இருக்கும் ஆந்திர, கருநாடகவில் பணம் கொடுத்து LLB டிகிரி வாங்கினவர் எல்லாம் பழைய டாக்குமென்டில் இருந்து copy paste செய்கிறார்கள் உங்களுக்கு என்று draft செய்வது குறைந்த நபர்களே.

========
காசு போனாலும் நல்ல சிவில் லாயர் வைத்து எழுதுங்கள்.சில ஆயிரம் advocate பீஸ் க்கு கஞ்ச படாதீர்கள். கொஞ்சம் மிஸ் ஆனாலும் பல லட்சம், கோடி நஷ்டம்.

திரும்பவும் சொல்றேன் நல்ல லாயர்  கண்டு பிடிப்பது உங்கள் சமர்த்தியம்.

========
நாம் டாக்குமெண்ட் வேண்டி govt ஆபிஸ் க்கு நடப்பது நமது வருங்கால நன்மைக்கே நான் சொன்ன ஆவணங்கள் இல்லாமல் நிலம் வாங்காதீர்.

அடுத்து லாயர், surveyor consulting, நிலம் விற்கும் நபரின் அண்டை வீட்டார், நிலம் இருக்கும் இடத்தின் jஅண்டை வீட்டார் இடம் பேசாமல் இல்லாமல் புதிய சொத்து வாங்காதீர்.
இதுதான் நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை...

தகவல்;

கன்சியூமர் கேர்கிளப் ஆப் இந்தியா....

Internet existed during the Mahabharata

Internet existed during the Mahabharata, says Tripura Chief Minister Biplab Kumar Deb ‘How could Dhritarashtra see through Sanjay’s eyes? This means technology was there, internet was there....😃😃😃

இந்து புராணங்களின் கால கணிப்பின்படி யுகங்கள் நான்கு வகைப்படும். அவை:கிரேதா யுகம், திரேதா யுகம், துவாபர யுகம்,கலியுகம்.இவற்றுள் சிறிய கடைசி யுகமான கலியுகம் 4,32,000 ஆண்டுகள் கொண்டதெனவும் துவாபர யுகம் கலியுகத்தைப்
போல் இரண்டு மடங்கு கால அளவு அதாவது 8,64,000 ஆண்டுகள் கொண்டதெனவும் புராணங்கள் தெரிவிக்கிறது. கலியுகத்தைப்போல் மூன்றுமடங்கு பெரியதான திரேதா யுகம் 12,96,000 ஆண்டுகள் கொண்டதாகவும். கலியுகத்தின் நான்கு மடங்கு கொண்ட கிருதா யுகம் 17,28,000 ஆண்டுகள் கொண்டதாகவும் தெரிவிக்கிறது

ராமாயணம் நடைபெற்றதென சொல்லப்படுவது இரண்டாவது யுகமான திரோதா யுகம். மகாபாரதம் நடைபெற்றதாக சொல்லப்படுவது மூன்றாவது யுகமான துவாபர யுகம்..புராணப்படி  நடந்ததாக சொல்லப்படும் இந்த இரண்டு கதைகளுக்கும் இடையே லட்சக்கணக்கான வருடங்கள் கொண்ட  மிகப்பெரிய கால இடைவெளி இருந்ததெனவும் சொல்லப்படுகிறது. இதன்படி நம் புராண அவதார புருஷர்கள் 39லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே நாகரீக மனிதர்களாக வாழ்ந்ததாகிறது...

பூமியின் வரலாறு...

சூரிய குடும்பம் தோன்றக் காரணமாக அமைந்த சோலார் நெபுலா எனும் அடர்ந்த வாயுப் படலத்திலிருந்து இயற்கையான திரள் வளர்ச்சி (acccretion) மூலம் சூரியனுடன் சேர்ந்து 4.54 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் அதாவது 454 கோடி வருடங்களுக்கு முன்னர் நம் பூமி தோன்றியதென அறிவியல் கூறுகிறது...

அதேபோல் நம் பூமியில் உயிர் வாழ்க்கை தொடங்கி 100 கோடி வருடங்களே ஆகின்றன என்பது குறிப்பிடத் தக்கது.அதில் மனித இனம் என்று எடுத்துக்கொண்டால் குரோமன்யான் மனிதனுக்குப் பின் தோன்றிய நியோ லித்திக் என்னும் புதிய கற்கால மனிதனே மனித நாகரிக இனத்தின் தொடக்கமாகக் கருதப்படுபவன். இன்றைக்கு சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன்னரே முழுமையான
இந்த நியோலித்திக் நாகரிக மனிதன் தோன்றி வாழ்ந்தான் என்று புதைபொருள் வரலாற்றறிஞர்கள் உறுதிபடக் கூறுகின்றனர்...

40,000 ஆண்டுகளாக மனித சமூகம்,இன்றைய பண்பாட்டையும், நாகரீகத்தையும் தனது கூட்டுழைப்பு மற்றும் முயற்சியால் அடைந்திருந்த போதிலும், இங்கே மதங்கள் அறிவியலின் ஒளியை தடை செய்து கொண்டு தனக்கான ஆட்சியை தடங்கலின்றி நடத்திக்கொண்டுதான் இருக்கிறது...மதங்கள் அனைத்தும் அறியாமையையும், கேள்விக்கிடமற்ற அடிமைத்தனத்தையும் வைத்து மக்களின் அறிவுத் தேடலை காலம் காலமாய் தடை செய்துகொண்டே வருகின்றன. இதன் பொருட்டே இம்மதவாதிகள் பல நூறு குதர்க்கங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இணையம் வந்த பிறகு டார்வின் பொய், ஐன்ஸ்டீன் தோல்வி சிதம்பரம் நடராஜர் பாதம் பூமியின் மையப்பகுதியில் உள்ளதென்று தமது முட்டாள்தனங்களுக்கு தைரியமாக பெருமை கொள்கிறார்கள்.அதிலும் அரசியலில் மதம் கலக்கும்போது ஓட்டு வங்கி ஆதாயத்திற்காக அரசாங்கமே முன்னின்று மக்களை வடிகட்டிய முட்டாளாக்கும் வேலையை சிறிதும் கூச்சமற்று செய்கிறது...

டார்வின் தியரியின்படி உயிர்கள் பரிணாம வளர்ச்சி பெறப்பெற அவற்றின் மூளைவளர்ச்சியும் சிந்திக்கும் ஆற்றலும் வளர்ந்துகொண்டே வந்துள்ளது..கற்பனை வளம் கொண்ட மனிதன் அந்தந்த காலத்தில் தனக்குத் தோன்றிய கற்பனை வளத்தை மற்றவர்க்கு எடுத்தியம்பதில் தவறில்லை...ஆனால் அறிவியல் வளர்ச்சியில் புதிய புதிய உண்மைகள் புலப்படும்போது பழைய பஞ்சாங்க சிந்தனைகளை விடாமல் உண்மையென எடுத்தியம்புவதும் அறிவியலை வைத்துக் கொண்டு மதங்களின் முட்டாள்தனத்தை அகற்றுவதற்கு முயலாமல் ,மாறாக ஊக்குவிக்கும் வேலையை செய்வதும் அதற்கு அரசே துணை போவதும் அறிவியலாளர்களின் உழைப்பு மற்றும் அவர்தம் தியாத்தின்மீது காறி உமிழும்
செயல்....

Friday, August 27, 2021

பேச விரும்பும் பிரச்சனையைப்பற்றிய பின்னணியைச் சுருக்கமாகச் சொல்லுங்கள்

என். சொக்கன்

நண்பர் ஒருவருடைய தம்பி முதன்முறையாக ஒரு பெரிய நிறுவனத்தில் தொலைபேசி வழி நேர்காணலுக்குச் (Telephone Interview) செல்கிறார். ‘எனக்கு என்னோட துறையில ஓரளவு அனுபவம் இருக்கு, ஆனா, பெரிய நிறுவனங்கள் எதிர்பார்க்கறமாதிரி அதை ஒழுங்கா, சுருக்கமாத் தொகுத்துச் சொல்லத் தெரியலை. எனக்கு ஒரு Structure அமைச்சுக் கொடுங்களேன், அதுல என்னோட அனுபவங்களை அழகா மாட்டிவிட்டுப் பேசிடறேன்’ என்றார். அவருக்கு எழுதிக் கொடுத்த குறிப்புகள் இவை:

1. முதலில், நீங்கள் பேச விரும்பும் பிரச்சனையைப்பற்றிய பின்னணியைச் சுருக்கமாகச் சொல்லுங்கள். அதில் அவர்களுக்கு ஏதேனும் கேள்விகள் உள்ளனவா என்று கேளுங்கள். இது மிகவும் முக்கியம். ஒருவேளை நீங்கள் இப்படிக் கேட்காமல் தொடர்ந்து அடுத்தடுத்த விஷயங்களைப் பேசிக்கொண்டே சென்றால், பின்னால் சொல்லப்படுகிற எந்த விஷயமும் அவர்களுக்குப் புரியாது.

2. அடுத்து, அந்தப் பிரச்சனையைத் தெளிவாக விவரியுங்கள். அது ஏன் பிரச்சனை என்று புள்ளிவிவரங்களுடன் விளக்குங்கள். ‘என்னுடைய மேனேஜர் இந்தப் பிரச்சனையைத் தீர்க்கச் சொன்னார், அதனால் நான் தீர்த்தேன்’ என்று சொல்லாதீர்கள், மேனேஜர் ஏன் அந்தப் பிரச்சனையைத் தீர்க்க விரும்பினார் என்று உங்களுக்குத் தெரியவேண்டும், அதாவது, அந்தப் பிரச்சனையால் யார் அவதிப்பட்டார்களோ அவர்களுடைய வலியைச் சொல்லவேண்டும், இல்லாவிட்டால் ‘உங்கள் ப்ராஜெக்ட் உங்களுக்கு உசத்திதான். ஆனால், அதனால் யாருக்கு என்ன பயன்?’ என்கிற கேள்வி வரும்.

3. மூன்றாவதாக, அந்தப் பிரச்சனையை எப்படித் தீர்த்தீர்கள் என்று சொல்லுங்கள். அதில் உங்கள் குழுவின் பங்கைச் சுருக்கமாகவும், உங்கள் பங்கை விரிவாகவும் பேசுங்கள், ஆனால் நீங்கள் செய்யாத எதற்கும் Credit எடுத்துக்கொள்ளாதீர்கள். அதற்காக, ‘எல்லாம் அவர்கள் செயல்’ என்றும் விட்டத்தைப் பார்க்காதீர்கள். உங்கள் செயலும் அதில் உண்டு. அதை உரக்கச் சொல்லுங்கள்.

4. நான்காவதாக, அந்தப் பிரச்சனை தீர்ந்தபின் என்ன மாற்றம் வந்தது, என்ன பலன் விளைந்தது என்று புள்ளிவிவரங்களுடன் சொல்லுங்கள். ‘இந்தப் பணிக்காக என் மேனேஜர் என்னைப் பாராட்டினார், எனக்குப் பிரமோஷன் வந்தது, சம்பளம் உயர்ந்தது’ என்பவற்றைவிட, ‘இதனால் 28% வாடிக்கையாளர்களுக்குத் தலா 25 ரூபாய் மிச்சமானது’ என்பது உசத்தியான புள்ளிவிவரம்.

5. இதுபற்றி அவர்களுக்கு ஏதும் கேள்விகள் உள்ளனவா, எதையாவது இன்னும் விரிவாகப் பேசவேண்டுமா என்று கேளுங்கள், அவர்களுடைய குறுக்குக் கேள்விகளுக்குத் தெரிந்த பதில்களைச் சொல்லுங்கள், தெரியாததை ஒப்புக்கொள்ளுங்கள்.

6. அடுத்த எடுத்துக்காட்டுக்குச் செல்வதற்குமுன்னால், ‘முதல் எடுத்துக்காட்டை விளக்குவதற்கு நான் எடுத்துக்கொண்ட நேரம் சரிதானா? இன்னும் சுருக்கமாகச் சொல்லவேண்டுமா, இன்னும் விரிவாகப் பேசவேண்டுமா?’ என்று கேளுங்கள். அதன்படி அடுத்தடுத்த எடுத்துக்காட்டுகளை அமையுங்கள்.

7. எதையும் சரியாக வடிகட்டிச் சொல்லுங்கள். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியும் என்பதால் அனைத்தையும் கொட்டவேண்டியதில்லை, எதைச் சொன்னால் மறுமுனையில் உள்ளவருக்கு ஆர்வம் வரும் என்பதைத் தெரிந்துகொண்டு அதைமட்டும் சொல்லவேண்டும், அது ஒரு கலை, பயிற்சியால்தான் வரும்.

8. இவை அனைத்தையும் நினைவில் வைத்துக்கொள்ள இயலாது என்றால், குறிப்பு எடுத்துக்கொள்ளுங்கள். நேர்காணலின் தொடக்கத்தில், ‘நான் குறிப்புகளைப் பார்த்துப் பேசலாமா?’ என்று கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் தாளில் உள்ளதை அப்படியே படிக்காதவரை யாரும் மறுக்கமாட்டார்கள். ஒருவேளை மறுத்தால் நினைவிலிருந்து பேசுங்கள். இது ஒன்றும் மெமரி ஒலிம்பிக்ஸ் இல்லை, தகவல்களைவிட நீங்கள் என்ன செய்தீர்கள் என்கிற (உண்மைக்) கதைதான் முக்கியம்.

9. நீங்கள் எந்த நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பம் செய்திருக்கிறீர்களோ அவர்களுடைய பணிப் பண்பாடு (Work Culture), கொள்கைகள் (Principles) போன்றவற்றைப்பற்றிப் படியுங்கள். அநேகமாகக் கேள்விகள் அதை ஒட்டிதான் இருக்கும். உங்கள் எடுத்துக்காட்டுகளை அதனுடன் பொருத்திப் பேசினால் உடனடி வரவேற்பைக் காணலாம். இதற்குக் கொஞ்சம் கூடுதல் உழைப்பு தேவைப்படும். ஆனால், உங்கள் பதிலை அவர்கள் அவர்களுடைய கொள்கைகளுக்குப் பொருத்துவதைவிட, நீங்களே அதைப் பொருத்திவிட்டால் அவர்களுக்கு வேலை மிச்சம், அவர்கள் மாற்றிப் பொருத்திவிடுகிற ஆபத்தையும் தவிர்க்கலாம்.

10. நிறைவாக, பொய் வேண்டாம். ஒரு பொய்யை மறைக்க நூறு பொய் சொல்கிற அவஸ்தை ஒருபுறமிருக்க, பலனைப்போல வழியும் தூய்மையாக இருக்கவேண்டும் என்கிறார் காந்தி. முறையற்ற வழியில் கிடைக்கும் பலன் எப்பேர்ப்பட்டதாக இருந்தாலும் நமக்கு வேண்டாத அசிங்கம்தான்.

Tuesday, June 15, 2021

புத்தகம் படிக்கும்போது மனம் அலைபாய்கிறது. ஊன்றிப் படிக்க இயலுவதில்லை. என்ன செய்யலாம்?’

என். சொக்கன்


‘புத்தகம் படிக்கும்போது மனம் அலைபாய்கிறது. ஊன்றிப் படிக்க இயலுவதில்லை. என்ன செய்யலாம்?’ என்று ஒரு நண்பர் ட்விட்டரில் கேட்டிருந்தார். அவருக்கு நான் வழங்கிய குறிப்புகள் இவை. உங்களுக்கும் பயன்படலாம்:

1. கலவையாக எல்லாத் தலைப்புகளிலும் படிக்காமல், அடுத்தடுத்து உங்களுக்குப் பிடித்த தலைப்புகளில்மட்டும் நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படியுங்கள். அந்த ஆர்வம் உங்களுடைய கவனத்தை மீட்டுத்தரலாம். படிக்கும் பழக்கத்தை ஒழுங்குபடுத்தியபின் மற்ற தலைப்புகளைப் படிக்கலாம்.

2. படிப்புக்கென்று இலக்குகள் வைத்துக்கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக, நாள்தோறும் 10 பக்கம் என்பதுபோல் உங்களுக்குக் கட்டுப்படியாகும் ஓர் இலக்கில் தொடங்கலாம். அந்த இலக்கை நீங்கள் எட்டுகிறீர்களா, இல்லையா என்பதைக் குறித்துவையுங்கள். எட்டாவிட்டாலும் பரவாயில்லை, கணக்கெடுக்கிறோம் என்கிற உணர்வே நமக்கு ஓர் ஒழுங்கைக் கொண்டுவரும்.

3. உங்கள் படிப்புப் பழக்கத்தைக் கண்காணிக்கும் நண்பர் (Accountability Buddy) ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். ‘டேய், அந்தப் புத்தகத்தைப் படிக்க ஆரம்பிச்சியே, என்ன ஆச்சு? எவ்ளோ படிச்சிருக்கே? எப்போ முடிப்பே? இன்னுமா முடிக்கலை?’ என்றெல்லாம் உங்களைத் தொடர்ந்து தொந்தரவு செய்வது அவருடைய வேலை. (பதிலுக்கு நீங்கள் அவருக்கு ஒரு சாக்லெட் கேக் வாங்கித் தரலாம்.)

4. Goodreads போன்ற வாசிப்போருக்கான இணையத் தளங்கள், ஃபேஸ்புக் குழுக்களில் சேர்ந்து உங்களுடைய படிக்கும் பழக்கத்தைப் பதிவு செய்யத் தொடங்குங்கள். அங்குள்ள மற்றவர்களுடைய படிப்பைப் பார்க்கும்போது இன்னும் ஊக்கம் வரும்.

5. ஒரு புத்தகம் ரொம்பப் போரடிக்கிறது என்றால், அதை விட்டுவிட்டு வேறு புத்தகம் படியுங்கள். காசு கொடுத்து வாங்கிவிட்டோமே என்பதற்காகக் கஷ்டப்பட்டுத் தொடர்ந்து படிக்காதீர்கள், அது உங்கள் ஒட்டுமொத்தப் படிப்பு வேகத்தைக் குறைக்கும், தன்னம்பிக்கையைப் பாதிக்கும்.

6. படிக்கும்போது வெளித் தொந்தரவுகளைக் குறைக்கப் பாருங்கள். எடுத்துக்காட்டாக, தனி அறையில், மொட்டை மாடியில், பக்கத்திலுள்ள பூங்காவில் படிக்கலாம். அப்போது அருகில் தொலைபேசி இல்லாவிட்டால் நல்லது, அது இயலாது என்றால், சைலன்ட் மோட் நல்லது.

7.படிக்கும் புத்தகங்களிலிருந்து குறிப்பெடுங்கள், முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடுங்கள், ஃபேஸ்புக், அமேசான், Goodreads போன்ற தளங்களில் சிறு விமர்சனம் எழுதுங்கள், இவை கூடுதல் ஊக்கத்தைத் தந்து படிக்கும் பழக்கத்தை வளர்க்கும்.

8. படுக்கையில் படிப்பது நல்ல பழக்கம்தான். ஆனால், சிலருக்கு அது தூக்கத்தைக் கொண்டுவரும். அப்படியென்றால், படுக்கையில் படிக்காதீர்கள். இன்னும் சரியாகச் சொல்வதென்றால், படுத்துக்கொண்டு படிக்காதீர்கள், உட்கார்ந்த நிலையில் படியுங்கள். (அதே நேரம், படிப்புக்காகத் தூக்கத்தைத் தியாகம் செய்யாதீர்கள். நாள்தோறும் உங்கள் உடலுக்குத் தேவையான தூக்கத்தைக் கண்டிப்பாகக் கொடுங்கள்.)

9. இவை அனைத்தையும் உண்மையுணர்வோடு செய்தபிறகும், ஒரு குறிப்பிட்ட நாளில் உங்களால் படிக்க இயலவில்லை என்றால், பரவாயில்லை, உலகம் இடிந்து விழுந்துவிடாது. ‘நாளைக்குப் படிப்பேன்’ என்று சொல்லிவிட்டு நிம்மதியாக இருங்கள், மன அழுத்தம் வேண்டாம்!

Sunday, June 13, 2021

I do this every weekend:

என். சொக்கன்

I do this every weekend:

1. Start with a manageable to-do list
2. Sort those items using their order of priority
3. Complete 90% of them
4. [Sunday Night] Look at the remaining 10% and question whether my original prioritization was right. Conclude that I am an idiot for not prioritizing THIS 10% which should've been on the top

Sunday, June 6, 2021

ஏன் பிரிட்டீஷ் அரசை பெரியார் விரும்பினார்

*வியக்கவைக்கும் தினமணி* *கட்டுரை -2007:*

*பிரிட்டிஷார்* 
 *Vs* 
*பிராமணர்கள்* 

*பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உள்ளவன் எனவும்,*

 *சத்திரியன் மட்டுமே நிலம் வைத்துக் கொள்ள மற்றும் அரசனாக இருக்க முடியும் எனவும்,*

 *வைசியன் மட்டுமே வியாபாரம் செய்ய உரிமை உள்ளவன் எனவும்,*

 *சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும் எனவும் இருந்த,*
*யூத பிராமணர்களின் மனுதர்மச் சட்டத்தை,*

 * பிரிட்டிஷார்கள் ஏற்றுக் கொள்ளாமல்,*

*சட்டம் என்றால் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில்,*

 *1773 ஆம் ஆண்டு முதல்  பிரிட்டிஷ் அரசு,  பல புதிய சட்டங்களை இயற்றத் தொடங்கியது.*

*சத்திரியர்கள் மட்டுமே சொத்து வைத்துக் கொள்ள உரிமை என்று இருந்ததை,*

*1795 ஆம் ஆண்டு அனைவரும் சொத்து வாங்கிக் கொள்வதற்கான உரிமை,*

 * வெள்ளையர்களால்  வழங்கப்பட்டது.*

*1804-ல் பெண் சிசு கொலை தடுப்புக்கான அரசாணை,*

* வெள்ளையரால்  வெளியிடப்பட்டது.*

*1813 ஆம் ஆண்டு கொத்தடிமைகள் ஒழிப்புச் சட்டம்,*

 * வெள்ளையரால்  கொண்டுவரப்பட்டது.*

*பிராமணப் பெண்னை கெடுத்த சூத்திரன்  கொல்லப்பட வேண்டும் என்ற* 
*(யூத பிராமணர்கள் மனுசாஸ்திர  சட்டம் VII 374, 375),*

* வெள்ளையர்களால் நீக்கப்பட்டது.*

*ஒரு பிராமணன்,  காம ஆசை தீர சூத்திரப் பெண்ணோடு உறவு கொள்ளலாம்.*

 ஆனால், 
*அதன் விளைவாக குழந்தை பிறந்து உயிரோடு இருந்து விட்டால்,*
*அது பிணம் போன்றதே ஆகும்.*
*(யூத பிராமணர்  மனுசாஸ்திர சட்டம்*
*IX 178).*
இந்த மனுசாஸ்திர சட்டத்தையும்,
 வெள்ளையர்களே நீக்கினர்.

*பிராமணன் தப்பு செய்தால் தண்டனை இல்லாமல் இருந்த நிலையில்,*

 *யூத பிராமணர்கள் குற்றம் புரிந்தவராக இருப்பின்,* 
 *அவர்களும் தண்டனை பெறுவதற்கான அரசாணை,*
*1817 ஆம் ஆண்டு  பிரிட்டிஷாரல் கொண்டுவரப்பட்டது*

*சூத்தரப் மணப் பெண் திருமணம் முடிந்த அன்றே,*
 *பிராமணருக்கு  பணிவிடைகள் அனைத்தும் செய்து கூடவே இருந்து *
*7 நாள்கள் கோவிலில்?*
 இருக்க வேண்டும் என்ற கொடுமை,
 * பிரிட்டிஷாரின் அரசாணையின் மூலம்*
*1819 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது.*

* பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க முடியும் என்ற நிலையில் இருந்த பிராமண இனவெறி மனு சாஸ்திர  சட்டத்தை,*
*1835 ஆம் ஆண்டு Lord மெக்காலேயின் சீரிய முயற்சியின் விளைவாக,*
 *சூத்தரனும் கல்வி கற்கலாம் என்ற அரசாணை வெளியிடப்பட்டது.*

*சூத்திரனுக்கு முதலில் பிறக்கின்ற ஆண் குழந்தையை கங்கா நதியில் தள்ளி விட்டுக் கொலைசெய்ய  வேண்டும் என்ற கங்காதானம் என்ற பயங்கரவாதம்,*
 *1835-ல்  பிரிட்டிஷ் அரசாணையின் மூலம் முடிவிற்கு வந்தது.*

*1835 ஆம் ஆண்டு சூத்திரர்களும் நாற்காலியில் உட்காருவதற்கான அரசாணை  வெள்ளையர்களால் கொண்டு வரப்பட்டது.*

*1868 ஆம் ஆண்டு  பிரிட்டிஷ் அரசாங்கம்,*
*யூத பிராமண மனுசாஸ்திர  சட்டத்தை முழுமையாக தடை செய்ய உத்தரவு பிறப்பித்தது.*

இந்தியாவை மட்டும் * பிரிட்டிஷார்கள் ஆளவில்லை என்றால்,*  தமிழர்களுக்கு கல்வி இல்லாமல் போயிருக்கும்.

அப்படி
போயிருந்தால்,
 எனக்கு, உங்களுக்கு கல்வி கிடைத்திருக்காது.
இந்தியாவில் கல்வி இயக்கம் நடந்திருக்காது.
நாம் மாடு மேய்த்திருப்போம்!

சூத்திர பஞ்சமனின் அடிமைச் சங்கிலியை உடைத்த * பிரிட்டிஷாரின் நவீன முன்னேற்ற நற்பணிகள் பாராட்டுதலுக்குரியதே!!!* 

*(ஆதாரம்:*

*தினமணி 25-2-2007)*

Thursday, June 3, 2021

FatherOfModernTamilnadu

மீள் பதிவாக இருந்தாலும், 
கலைஞரின் பிறந்தநாளில் பதிவிடுவது, சரியான ஒன்றாக இருக்கும் என்று எண்ணுகிறேன். 

74 ஆண்டுகால சுதந்திர இந்திய ஒன்றியத்தில் உள்ள, தமிழ்நாட்டின் முதலமைச்சராக 19 ஆண்டுகாலங்கள் மட்டுமே ஆட்சி செய்த தலைவர் கலைஞர் நவீன தமிழ்நாட்டின் தந்தை #FatherOfModernTamilnadu என்று ஏன் அழைக்கப்படுகிறார். 

மனித இனம் உயிர்வாழ தேவையானவைகளை வரிசைப் படுத்தினால், ஒவ்வொன்றிலும் தலைவர் கலைஞரின் தடம் இருக்கும். 

#காற்று, 
#தண்ணீர், 
#உணவு, 
#உடை, 
#உறைவிடம், 
#மொழி, 
#மருத்துவம், 
#கல்வி, 
#பாதுகாப்பு, 
#சாலைவசதி, 
#மின்சாரம்,
#போக்குவரத்து,
#உள்கட்டமைப்பு, 
#தொழிற்சாலை, 
#தொலைத்தொடர்பு.

#தண்ணீர்/Water

1. குடிநீர் வடிகால் வாரியம் அமைத்தது கலைஞர். 

2. காவிரி நடுவர் மன்றம் அமைத்தவர் கலைஞர். 

3. 30க்கும் மேற்பட்ட அணைகள் கட்டியது கலைஞர்.

4. இந்திய ஒன்றியத்தில் முதன் முறையாக நதிகள் இணைப்பு திட்டம் தந்தது கலைஞர்.  

5. கரூர் மாவட்டம் மாயனூரில் அணை கட்டி, காவிரி - குண்டாறு - வைகை நதி இணைப்பு திட்டம் தந்தது கலைஞர்.

6. தாமிரபரணி - கருமேனியாரு - நம்பியாரு நதி இணைப்பு திட்டம் தந்தது கலைஞர். 

7. கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் தந்தது கலைஞர்.

8. ஒக்கேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் தந்தது கலைஞர்.

9. ராமநாதபுரம் - பரமக்குடி கூட்டுகுடிநீர் திட்டம் தந்தது கலைஞர்.

10. அறந்தாங்கி கூட்டுக் குடிநீர் திட்டம தந்தது கலைஞர்.

11. திண்டுக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தந்தது கலைஞர்.

12. எல்லா வருடங்களும் ஏரி மற்றும் குளங்களை தூர் வாரி பராமரித்து வந்தவர் கலைஞர்.

#உணவுமற்றும்விவசாயம்/Food and Agriculture 

1. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் (TNCSC) அமைத்தது கலைஞர்.

2. பொது வினியோக முறையை கிராமங்கள் தோறும் கட்டமைத்து, மக்களுக்கு உணவுப் பொருட்கள் குறைந்த விலையில் எளிய வகையில் கிடைக்க செய்தவர் கலைஞர். 

3. ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டத்தின் மூலம், குடும்ப அட்டைக்கு 20 கிலோ அரிசி வழங்கியவர் கலைஞர். 

4. பொது விநியோக திட்டத்தின் மூலம் சமையல் எண்ணெய் மற்றும் வீட்டு பொருட்கள் நியாயவிலையில் தந்தவர் கலைஞர். 

5. 10 சமையல் பொருட்களை 50 ரூபாய்க்கு தந்தது கலைஞர். 

6. நில உச்சவரம்பு சட்டத்தை முறையாக செயல்படுத்தி 2 முதல் 5 ஏக்கர் நில உடமையாளர்களாக, 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளை உருவாக்கியவர் கலைஞர். 

7. இந்தியாவிலே முதன் முறையாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தந்தது கலைஞர்.

8. நேரடி நெல் கொள்முதல் மையம் தந்தது கலைஞர்.

9. நெல் கொள்முதலில் ஊக்கத்தொகை மற்றும் விலை ஏற்றம் செய்தது கலைஞர்.

10. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை நேரடியாக பயானாளிகளிடம் விற்பனை செய்ய ஏதுவாக, உழவர் சந்தை திட்டம் தந்தது கலைஞர்.

11. விவசாய கடன் ரூ.7,000 கோடி தள்ளுபடி செய்தது கலைஞர்.

12. சரியான நேரத்தில் வங்கி கடனை திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டி இல்லை என்றது கலைஞர். 

13. மேம்படுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ 1,050 ஆக உயர்த்தியது கலைஞர்.

14. வகைப்படுத்தப்பட்ட நெல் கொள்முதல் விலை ரூ. 1,100 ஆக உயர்த்தியது கலைஞர்.

15. 172 உழவர் சந்தையாக உயர்த்தியதும் கலைஞர்.

16. ஒரு டன் கரும்பின் கொள்முதல் விலை ரூ 2,000 ஆக உயர்த்தியது கலைஞர்.

 #உறைவிடம்/ Home

1. கிராமங்களில், நத்தம் பொறம்போக்கு இடங்களில் வசித்து வந்த குடியானவர்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களின், அந்த இடங்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கியவர் கலைஞர். 

2. தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்து அண்ணா நகர், ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, அடையார், கலைஞர் கருணாநிதி நகர் போன்ற இடங்களில் அடுக்குமாடி வீடுகள் கட்டிக் கொடுத்தவர் கலைஞர்.

3. கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகளை கொடுக்கும் திட்டம் வகுத்தது கலைஞர். 

4. குடியிருப்பு சட்டம் (வாடகை நிர்ணயம் போன்றவை) கொண்டுவந்தது கலைஞர்.

5. மீனவர்களுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம் தந்தது கலைஞர். 

6. கலைஞர் வீடு திட்டம் தந்தது கலைஞர்.) 

#மருத்துவம்/ Healthcare 

1. 3,000த்திற்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், 13,000த்திற்கும் மேற்பட்ட Sub Health Centres உருவாக காரணமாக இருந்தவர் கலைஞர். மேலும் மாவட்டங்களையும், தாலுக்காக்களையும் பிரித்ததால் பல மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுக்கா அரசு மருத்துவமனைகள் உருவாக காரணமாக இருந்தவர் கலைஞர். 

2. 24/7 ஆரம்ப சுகாதார நிலையங்களை தந்தது கலைஞர்.

3. முதலில் இலவச கண் சிகிச்சை முகாம் அமைத்தது கலைஞர். 

4. வருமுன் காப்போம் திட்டம் தந்தது கலைஞர். 

5. 104 கோடி ரூபாயில் சென்னை பொது மருத்துவமணை புதிய கட்டிடம் தந்தது கலைஞர்.

6. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக்கல்லூரி என்று சட்டம் இயற்றி,கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, வேலூர் மருத்துவ கல்லூரிகளை அமைத்தது கலைஞர். மருத்துவ கல்லூரிகளில் பல துறைகள் உருவாக காரணமாக இருந்தவர் கலைஞர். 

7. கலைஞர் காப்பீட்டுத் திட்டம் மூலமாக 2 லட்சம் மதிப்புள்ள இலவச மருத்துவ காப்பீடு திட்டம் தந்தது கலைஞர்.

8. இதய நோய், சர்க்கரை நோய், புற்று நோய்க்கான "நலமான தமிழகம் திட்டம்" தந்தது கலைஞர்.

9. மத்திய அரசோடு இணைந்து 108 ஆம்புலன்ஸ் தந்தது கலைஞர்.
 
#கல்வி/ Education:

1. 1996 - 2001, 2006 - 11 காலகட்டத்தில் ஏறத்தாழ 7,000க்கும் மேற்பட்ட பள்ளிகளை நிறுவியது கலைஞர். 

2. 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாயமாக்கியது கலைஞர்.

3. மிக பிற்படுத்தபபட்டோருக்கு இலவச கல்வி தந்தது கலைஞர்.

4. தாழ்த்தப்பட்டோருக்கு இலவச கல்வி தந்தது கலைஞர். 

5. பனிரெண்டாம் வகுப்பு வரை இலவச கல்வி உருவாக்கியது கலைஞர். 

6. பெண்களை படிக்க ஊக்குவிக்க, 8ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவியாக 5,000 வழங்கியது. பிறகு அதனை 10ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு திருமண உதவியாக 10,000 என்று உயர்த்தி வழங்கியது கலைஞர்.

7. பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 30% இடஒதுக்கீடு வழங்கியது கலைஞர். 

8. வருமான உச்ச வரம்புக்கு கீழ் உள்ள பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இலவச கல்வி இளங்கலை பட்டப்படிப்பு வரை தந்தது கலைஞர்.

9. விவசாய கல்லூரி (கோவை) உருவாக்கியது கலைஞர்.

10. ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் அமைத்தது கலைஞர்

11. MGR மருத்துவ பல்கலைக்கழகம் நிறுவியது கலைஞர்.

12. இந்தியாவிலே முதன் முறையாக டாக்டர். அம்பேத்கார் சட்ட கல்லூரி மற்றும் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம்  நிறுவியது கலைஞர். 

13. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர். 

14. பாவேந்தர் பாரதிதாசன் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர். 

15. பெரியார் பல்கலைகழகம் நிறுவியது கலைஞர்.

16. உலக தமிழர்களுக்கு உதவ, தமிழ் மெய்நிகர் பல்கலைகழகம் தந்தது கலைஞர்.

17. முதன்முறையாக விதவை பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இட ஒதுக்கீடு அளித்தது கலைஞர்.

18. மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு வழங்கியது கலைஞர். 

19. உருது அக்காடமி தந்தது கலைஞர்.

20. பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்தது கலைஞர்.

21. அண்ணா தொழில்நுட்ப பல்கலைகழகம் திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி, திருவாரூரில் உருவாக்கியது கலைஞர்.

22. முதல் பட்டதாரிக்கு ஆண்டுக்கு 20,000 வீதம் 4 ஆண்டுகளுக்கு 80,000 பொறியியல் கல்வி கட்டணம் வழங்கியவர் கலைஞர். 

23. தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய ஆணையம் அமைத்தது கலைஞர்.

24. சமச்சீர் கல்வி தந்தது கலைஞர்.

25. மாவட்ட, மாநில அளவில் முதல் மூன்று இடங்களில் வருவோருக்கு மேற்படிப்பு உதவி தொகை தந்தது கலைஞர்.

26. பள்ளிகளில் உணவோடு முட்டை தந்தவர் கலைஞர்.

27. இலவச பஸ் பாஸ் தந்தவர் கலைஞர்.

28. காமராஜர் பிறந்த நாளை கல்வி மேம்பாட்டு தினமாக அறிவித்தது கலைஞர்.

29. பள்ளிகள், கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கி படிக்க விடுதிகளை நிறுவியவர் கலைஞர். 

30. உலக தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகம் நிறுவியது கலைஞர்.

31. உலகதரத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு முன்மாதிரி பள்ளி வேண்டும் என்ற திட்டமிட்டு, முதலில் புதுக்கோட்டையில் ஆண்களுக்கு ஒரு பள்ளி (நான் அந்த பள்ளியின் மாணவன்), பெண்களுக்கு சென்னை சைதாப்பேட்டையில் ஒரு பள்ளி என்று ஆரம்பித்தவர் கலைஞர். 

#மொழி/ Language:

1. முதல் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தியது கலைஞர்.

2. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்று தந்தது கலைஞர்.

3. திருக்குறளை உலகிற்கு பறைசாற்றும் வகையில் வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் 133 அடியில் திருவள்ளுவர் சிலை நிறுவியது கலைஞர். 

4. பாரதிதாசன், அண்ணாவுடன் சேர்ந்து நாம் இன்று ஷ,ஸ,க்ஷ கலக்காமல் எளிய தமிழை வழங்கியவர் கலைஞர். 

5. திரு எம் ஜி ராமச்சந்திரன் அவர்களால் நிறுவப்பட்ட தமிழ் பல்கலைக்கழகத்தை மேம்படுத்தியவர் கலைஞர். 

#பாதுகாப்பு/ Police

1. இந்தியாவிலே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது கலைஞர்

2. மகளிர் காவலர்களை நியமித்தவர் கலைஞர். 

3. சிறைச்சாலை சீர்திருத்தம் செய்தவர் கலைஞர். 

4. புழல் சிறைச்சாலையை வழங்கியவர் கலைஞர். 

#சாலைவசதி/ Road and Rail

1. 1,000 நபர்கள் கொண்ட கிராமங்களுக்கும் சாலை வழித்தடம் அமைத்தது கலைஞர்.

2. கிராமங்கள் மற்றும் நகரங்களின் வீதிகள் தோறும் கான்கிரீட் சாலை அமைத்தவர் கலைஞர்.

3. மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தி 3,000 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் நான்கு வழிச்சாலை அமைய காரணமாக  இருந்தவர் கலைஞர்.

சென்னை - திருச்சி - மதுரை கன்னியாகுமரி, 
சென்னை - கிருஷ்ணகிரி - ஓசூர்,
சென்னை - தளி, 
உளுந்தூர்பேட்டை - சேலம் - கோயம்புத்தூர்,  
விழுப்புரம் - கும்பகோணம் - தஞ்சாவூர்,
தூத்துக்குடி - மதுரை - திண்டுக்கல் - நாமக்கல் - சேலம் - கிருஷ்ணகிரி, 
பாண்டிச்சேரி - திண்டிவனம் - கிருஷ்ணகிரி,  
கோயம்புத்தூர் - கரூர் - திருச்சி - தஞ்சாவூர் - திருவாரூர், 
திருச்சி - திண்டுக்கல்,
திருச்சி - புதுக்கோட்டை - சிவகங்கை - ராமநாதபுரம், 
மதுரை - ராமநாதபுரம்,
மதுரை- சிவகங்கை,
தூத்துக்குடி - திருநெல்வேலி - தென்காசி. 

இந்த நான்கு வழிச்சாலைகளை அமைத்தது கலைஞர்.

4. செங்கல்பட்டு - விழுப்புரம் - திருச்சி - மதுரை - தூத்துக்குடி இடையே இரட்டை வழி ரயில்பாதை அமைத்தது கலைஞர். 

சென்னை - மதுரை மின்மய இரட்டை வழி ரயில்பாதை அமைய காரணமாக இருந்தவர் கலைஞர். 

#போக்குவரத்து/ Transport:

1. போக்குவரத்து துறையை உருவாக்கியவர் கலைஞர்.

2. பேருந்துகளை நாட்டு உடமயமாக்கியவர் கலைஞர்.

3. கிராமங்களில் சிறிய பேருந்து சேவையை கொண்டுவந்தது கலைஞர்.

4. போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் வழங்கிய கலைஞர்.

5. பேருந்து கட்டணத்தை ஏற்றாமல் 13,000 புதிய பேருந்துகள் வழங்கியவர் கலைஞர்.

#மின்சாரம்/ Electricity:

1. மின்சாரம் அனைத்து கிராமங்களுக்கும் செல்ல வழித்தடம் அமைத்தது கலைஞர். 

2. நெய்வேலி இரண்டாம் அலகு அனல் மின்நிலையம் கொண்டுவந்தது கலைஞர்.

3. தூத்துக்குடி அனல்மின் நிலையம் அமைத்தது கலைஞர். 

4. எண்ணூர் அனல்மின் நிலையம் 3, 4வது அலகு அமைத்தது கலைஞர். 

5. காடம்பாறை நீர் மின் நிலையம் அமைத்தது கலைஞர்.

6. காற்றாலை மின்சாரம் ஆரம்பித்து வைத்தவர் கலைஞர். 

7. 1500 கோடி ரூபாயில் 350 துணை மின்நிலையம் உருவாக்கியது கலைஞர்.

8. தொழிற்சாலைகளுக்கு தேவையான மின் வழித்தடம் அமைத்தது கலைஞர். 

#தொழிற்சாலைமற்றும்வேலைவாய்ப்பு/ Industries and Job Opportunities:

1. SIPCOT உருவாக்கியது கலைஞர்.

2. SIDCO உருவாக்கியது கலைஞர்.

3. சேலம் இரும்பு தொழிற்சாலை அமைத்தது கலைஞர்.

4. பெட்ரோல் மற்றும் ரசாயன தொழிற்சாலை தூத்துகுடி கொண்டுவந்தது கலைஞர். 

5. பூம்புகார் கப்பல் நிறுவனம் தந்தது கலைஞர்.

6. தொழிற்சாலைகளுக்கு வெளிப்படை கொள்கை அமைத்தது கலைஞர்.

7. முதல் தடவை விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியவர் கலைஞர்.

8. Automobile companies, Automobile testing centres உருவாக்கியது கலைஞர். 

9. Electronic manufacturing companies, Saint Gobain கண்ணாடி தொழிற்சாலைகள் கொண்டு வந்தவர் கலைஞர். 

10. டைடல் பார்க் (Tidel Park) சென்னையில் அமைத்தது கலைஞர்.

11. புதிய டைடல் பார்க் திருச்சி கோவை மதுரை திருநெல்வேலியில்யில் உருவாக்கியது கலைஞர். 

12. புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி 37 புது நிறுவனங்களை ஈர்த்து 41,090 கோடி முதலீடை கொண்டு வந்தவர் கலைஞர்.

13. 37 நிறுவன அனுமதியால் 3 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்கியது கலைஞர்.

14. 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு தந்தது கலைஞர் .

15. 13,000 மக்கள் நல பணியாளர்கள் நியமனம் செய்தது கலைஞர்.

16. முதல் முறையாக 10,000 சாலை பணியாளர்களை நியமனம் செய்தது கலைஞர்.

17. TNPSC உருவாக்கி, அண்ணன், தம்பி, மாமன், அத்திம்பேர், மச்சான்களை வேலையில் அமர்த்தியதை தடுத்து, முறையாக எல்லோருக்கும் பணி கிடைக்க வழி செய்தவர் கலைஞர். 

#அரசுகட்டிடங்கள்/ Government Buildings:

1. மதுரை நீதிமன்றம் உட்பட 119 புதிய நீதிமன்றம் உருவாக்கியது கலைஞர்.

2. மாலை நேரம், மற்றும் விடுமுறை தின நீதிமன்றம் உருவாக்கியவர் கலைஞர்.

3. அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டம் தந்தது கலைஞர்.

4. அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளோடு 10,096 கிராம பஞ்சாயத்து உருவாக்கியது கலைஞர்.

5. 420 பேரூராட்சிகள் உருவாக்கி "அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம்" தந்தது கலைஞர்.

6. ஆசியவையே திரும்பி பார்க்க வைத்த புதிய சட்டமன்றம் நிறுவியது கலைஞர்.

7. ஜப்பான் நாட்டு வங்கி உதவியோடு மெட்ரோ ரயில் திட்டம் தந்தது கலைஞர்.

8.சென்னையில் 20 மேம்பாலங்கள் மற்றும் 200 அடி வெளிவட்ட சாலை உருவாக்கியது கலைஞர்.

9. 21 மாவட்டங்களில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், தாலுக்கா மற்றும் யூனியன் கட்டிடங்களை கொடுத்தவர் கலைஞர்.

22. ஆசியாவிலே மிக பெரிய சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அமைத்தது கலைஞர்.

23. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையங்கள் உட்பட பல புதிய பேருந்து நிலையங்களை நிறுவியவர் கலைஞர்.  

#கோவில்திருப்பணிகள்/ Temple:

1. Hydraulic வசதி செய்து கொடுத்து திருவாரூர் தேரை மீண்டும் ஓட வைத்தவர் கலைஞர். 

2. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை பெற்று தந்தது கலைஞர்.

3. கோவில்களில் குழந்தைகளுக்கான "கருணை இல்லம்" தந்தது கலைஞர்.

4. பல கோடி செலவில் 5,824 கோவில்கள் புணரமைத்து குடமுழுக்கு பணி செய்தது கலைஞர்.

5. அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கியது கலைஞர்.

6. அர்ச்சகர்களுக்கு மாத சம்பளம் வழங்கியவர் கலைஞர்.  

#சமூகபணிகள்/ Social Welfare Schemes:
 
1. பிச்சைகாரர்கள் மறுவாழ்வு மையம் அமைத்தது கலைஞர். 

2. கையில் இழுக்கும் ரிக்‌ஷா ஒழித்து இலவச சைக்கில் ரிக்‌ஷா கொடுத்தது கலைஞர்.

3. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோருக்கென வாரியம் அமைத்தது கலைஞர்.

4. அரசியலமைப்பில் பிற்படுத்தபபட்டோருக்கான அமைப்பை அமைத்தது கலைஞர். 

5. அரசியலமைப்பில் BC - 31%, SC - 18 %, ST 1% ஆக உயர்த்தியது கலைஞர்.

6. மே 1, சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறையாய் அறிவித்தது கலைஞர். 

7. வாழ்ந்த மனிதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை விடுமுறையாய் அறிவித்தது கலைஞர். 

8. அரசு ஊழியர்கள் குடும்ப நலத் திட்டம் தந்தது கலைஞர். 

9. அரசு ஊழியர்கள் மேலான ரகசிய அறிக்கை முறையை ஒழித்தது கலைஞர்.

10. நில விற்பனை வரையரை சட்டம் அமைத்தது கலைஞர்.

11. உருது பேசும் இஸ்லாமியர்களை பிற்படுத்தபபட்டோரில் தமிழ் இஸ்லாமியர்களுடன் சேர்த்தது கலைஞர். 

12. பயனற்ற நிலத்தின் மீதான வரி நீக்கம் கொண்டுவந்தது கலைஞர்.

13. மனு நீதி திட்டம் தந்தது கலைஞர். 

14.வேளாளர் (கவுண்டர், முசிறி, துளுவ, சோழிய) சமூகத்தை 
பிற்படுத்தபபட்டோர் பட்டியலில் இணைத்தது கலைஞர். 

15. மிக பிறப்படுத்தபபட்டோரில் வன்னியர், பனமலைக் கள்ளர் மற்றும் சீர் மரபினரை சேர்த்தது கலைஞர். 

16. மிகவும் பிற்படுத்தபபட்டோருக்கு (MBC) 20% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர் 

17. தாழ்த்தப்பட்டோருக்கு 18% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்

18. பழங்குடியினருக்கு 1% தனி இட ஒதுக்கீடு தந்தது கலைஞர்

19. தகப்பன் சொத்தில் பெண்களுக்கு சம உரிமையை சட்டமாக்கியது கலைஞர்.

20. கல்வி, வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு தந்தது கலைஞர்.

21. ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்.

22. விதவை பெண்கள் மறுமண நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்.

23. கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் தந்தது கலைஞர்.

24. பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது கலைஞர். 

25. உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு தேர்தல் கொண்டுவந்தது கலைஞர்.

26. உள்ளாட்சி பதவிகளில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிவர் கலைஞர். 

27. இரு பெண் மேயரில் ஒருவர் தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து வர செய்தது கலைஞர்.

28. மெட்ராஸ் என்ற பெயரை சென்னையாக்கியது கலைஞர்.

29. சமத்துவபுரம் தந்தது கலைஞர்.
சென்னை கலைஞர் கருணாநிதி நகரை சமத்துவபுரமாக நிறுவியது கலைஞர்.  

30. சிறுபான்மையினர் பொருளாதார வளர்ச்சி அமைப்பு ஏற்படுத்தியது கலைஞர்.

31. கால்நடை பாதுகாப்பு திட்டம் தந்தது கலைஞர்.

32. விவசாய கூலி வேலை செய்வோர் நல வாரியம் அமைத்தது கலைஞர்.

33. பொது கூலி வேலை செய்வோர் நல வாரியம் அமைத்தது கலைஞர்.

34. அறிஞர்களுக்கும், தியாகிகளுக்கும் மணிமண்டபம் கட்டியது கலைஞர். 

35. அண்ணா மறுமலர்ச்சி திட்டம் தந்தவர் கலைஞர்.

36. நமக்கு நாமே திட்டம் தந்தவர் கலைஞர்.

37. நலிவுற்ற குடும்பநல திட்டம் தந்தது கலைஞர்.

38. ஒப்பந்த பணியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் தந்தது கலைஞர்.

39. அருந்ததியினர் இனத்திற்க்கு 3% தனி இடஒதுக்கீடு தந்தது கலைஞர்.

40. இஸ்லாமியர்களுக்கு 3.5% தனி இட ஒதுக்கீடு வழங்கியவர் கலைஞர்.

41. இலவச வண்ண தொலைக்காட்சி வழங்கும் திட்டம் தந்தது கலைஞர்.

42. இலவச எரிவாயு உருளை வழங்கியவர் கலைஞர்.

43. பேருந்து கட்டணம், பால் விலை, மின்சார கட்டண உயர்த்தாதவர் கலைஞர்.

 தமிழகமக்களின் நலமே கலைஞரின் நலம்.!!... 

அவர்தான் கலைஞர்.

M Kandasamy 

Source: இணைய உடன்பிறப்புகள். 

#architectofmoderntamilnadu 
#FatherOfModernTamilnadu 
#HBDKalaignar98

Monday, May 3, 2021

SDPI சுயபரிசோதனை

SDPI கலந்து கொண்ட 6 தொகுதிகளில் பெற்ற வாக்குகள்:

1) ஆலந்தூர் - 1761
2) ஆம்பூர் - 1793
3) திருச்சி மேற்கு - 2545
4) மதுரை சென்ரல் - 3347
5) திருவரூர் - 6364
6) பாளையம்கோட்டை - 12241

இந்த எண்ணிக்கை நமது கூட்டணி கட்சிகளின் ஓட்டுக்களையும் சேர்த்துதான். 

இந்த 29,000 ஓட்டுகளை வைத்துக் கொண்டு நாம கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனோம். 

* திமுக எங்கள கூப்பிடல/மதிக்கல,
* தமுமுக சதி பண்ணிடாங்க,
* எங்களுக்கு போட்ட சோத்துல உப்பு போடல....

நமக்கு போதிய வாக்குவங்கி இல்லாத போது அனுசரித்துத்தான் போக வேண்டும். நமக்கு போதிய வாக்குவங்கி இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளும் தைரியமும் நேர்மையும் வேண்டும்.

இப்பவாவது நாம் திருந்தியிருக்கிறோம் என்றா நினைக்கிறீர்கள் - இல்லை. நெல்லை முபாரக்-க்கு ஓட்டு போட்ட 12,000 பேரை தவிர, மற்ற அனைவரும் சமுதாய அக்கரையற்றவர்கள், பணம் வாங்கிக் கொண்டு ஓட்டளித்து விட்டார்கள் என்று அடுத்தவர்களை பழி சொல்ல ஆரம்பித்து விட்டோம்.

சகோதரர்களே, வாக்கரசியலில் நமது உண்மையான பலம் இவ்வளவுதான். சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும்.

இப்போது நமது தேவை, நேர்மையான சுயபரிசோதனை. 

Monday, April 26, 2021

இந்தியா, மோடியின் எரியும் பிணக்காடு*

நன்றி: Rana - "Time"
தமிழில்: கை.அறிவழகன்
**இந்தியா, மோடியின் எரியும் பிணக்காடு**

டாக்டர்.ஜலீல் பார்க்கர், இந்தியாவின் தலைசிறந்த நுரையீரல் நிபுணர்களில் ஒருவர், முகத்தில் கடுமையான சோர்வு தெரிகிறது, மும்பை மாநகரத்தின் லீலாவதி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளைக் கவனித்தபடி தொலைக்காட்சிகளிலும் தோன்றி கோரமான கோவிட் இரண்டாம் அலை எப்படி ஆயிரக்கணக்கில் இந்தியர்களை தினமும் விழுங்கிக் கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்.

கடந்த ஆண்டில் அவருக்கே கொரோனா தோற்று ஏற்பட்டு ஏறத்தாழ இறப்பின் விளிம்பு வரை சென்று வந்தார், இப்போது அமைதியிழந்தவராக நாம் அறிந்திராத பல உண்மைகளை போட்டு உடைக்கிறார். 

"நம்முடைய சுகாதாரத்துறை முற்றிலுமாக செயல் இழந்து விட்டது, நாம் நமது சொந்த தேசத்தின் மக்களைக் கைகழுவி விட்டோம், நம்முடைய மருத்துவ உள்கட்டுமான அமைப்பு மிக மோசமான நிலையில் இருக்கும் போது மருத்துவர்களால் என்ன செய்ய முடியும்? படுக்கைகளும், ஆக்சிஜன் சிலிண்டர்களும் இல்லாத போது மருத்துவர்கள் என்ன செய்ய முடியும்?" 

நேற்று (23rd April), இந்தியாவில் ஒரே நாளில் 3,32,730 பேர் கொரானா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், உலகம் முழுவதும் இதுவரை பதிவான மிகப்பெரிய ஒருநாள் தொற்று இதுதான், நேற்று முன்தினத்தின் அளவை நாமே நேற்று முறியடித்திருக்கிறோம் என்பதுதான் கொடுமை. 

பெருந்தொற்றுக் காலம் துவங்கிய நாளில் இருந்து இன்றுவரை, 1 கோடியே 60 லட்சம் பேர் நோய்த்தொற்றை அடைந்திருக்கிறார்கள், 1 லட்சத்து 86 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கிறார்கள், உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாதான் மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளான நாடக இருக்கிறது, அன்றாட தொற்றின் அளவும், மரணங்களின் அளவும் அமெரிக்காவை மிஞ்சும் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. 

ஒவ்வொருநாளும் 2000 இந்தியர்கள் கொரானாவால் இறந்து கொண்டிருக்கிறார்கள், ஆனால், இது குறைத்து மதிப்பிடப்படுகிற ஒன்று என்றும், இந்தியாவின் ஒருநாள் மரணம் 10000 த்தை தாண்டிக் கொண்டிருப்பதாகப் பெயர் சொல்ல விரும்பாத சுகாதாரத்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள். 

எனது வாழ்க்கையில் நான்கு மிக நெருக்கமான மனிதர்களை நான் இழந்திருக்கிறேன், ஒரு தூரத்து உறவினர், பக்கத்து வீட்டுக்காரர் மற்றும் எனது நெருங்கிய நண்பர்கள் இருவர், அவர்கள் இருவருமே 30 முப்பது வயதுகளில் மத்தியில் இருப்பவர்கள்.

இறப்பு மிக சாதாரணமாக நிகழ்கிறது, வெள்ளிக்கிழமை டெல்லியின் கங்காராம் மருத்துவமனை ஒரு அவசர செய்திக் குறிப்பை வெளியிட்டிருக்கிறது, அதில் இன்னும் இரண்டு மணி நேரத்துக்கான ஆக்சிஜன் மட்டுமே எங்களிடம் இருக்கிறது, ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஏற்கனவே 25 பேர் இறந்து விட்டார்கள் என்று அச்சமூட்டும் அறிவிப்பாக அது இருக்கிறது, தங்கள் உறவினர்களுக்காக ஆக்சிஜன் சிலிண்டர்களைத் திருடும் காணொளிக்  காட்சிகள் மேலும் அச்சமூட்டுவதாக இருக்கிறது.

BBC யின் செய்தித் தொகுப்பொன்றில் வரும் காட்சியில் பெண்ணொருவர் இறந்து கொண்டிருக்கும் தனது தம்பியை சுயநினைவுக்குக் கொண்டுவர முயற்சி செய்கிறார், "பாலாஜி, நீ ஏன் விழித்துக் கொள்ளக்கூடாது?" என்று தனது தம்பியைத் தட்டி எழுப்ப முயற்சி செய்தபடி அழுகிறார். 

மஹாராஷ்டிராவில் ஒரு மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிவால் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளின் ஆக்சிஜன் குழாய்களில் தடை ஏற்பட்டு ஏறத்தாழ 25 பேர் இறந்து விட்டார்கள், இவர்கள் அனைவரும் கொரானா தொற்றால் தீவிர சிகிச்சை பெற்று வந்தவர்கள். பல்வேறு மருத்துவமனைகள் தங்கள் மாநில உயர்நீதிமன்றங்களில் எங்களுக்கு ஆக்சிஜன் வழங்க வேண்டும் என்று முறையீடு செய்திருக்கின்றன, கடவுளின் கரங்கள் எங்கே என்றால் அவை இந்தியாவின் மருத்துவமனைகளில் தான் இப்போது இருக்கிறது.

இத்தகைய ஒரு கொடிய சூழல் நிலவும் போது, இந்தியாவின் மற்றொரு பக்கம் கொரானா பெருந்தொற்று குறித்த எந்த அச்சமும் இல்லாமல், விழிப்புணர்வும் இல்லாமல் "மோடியின் தட்டு தட்டி, விளக்கேற்றி கோரானவை விரட்டும்" மூடத்தளைக்குள் சிக்குண்டு சீரழிகிறது, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தின் ஹரித்துவாரில் கும்பமேளா என்கிற பெயரில் கங்கை ஆற்றில் மூழ்கித் திளைக்கிறார்கள். 

குறிப்பிட்ட சில நூறு இஸ்லாமிய மனிதர்கள் கடந்த ஆண்டில் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு வந்தபோது மோடியின் தேசபக்த ஊடகங்களும், அவரைப் பின்பற்றும் மடையர்களும் அவர்களைக் குற்றவாளிகளாக்கி ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்கள். 

மார்ச் 11 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து குளியல் போட்டு வருகிற இந்த பக்தர்களில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு கொரானா தொற்று உறுதியாகி இருக்கிறது, மெல்ல மெல்ல இவர்கள் வீடுகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள், இவர்கள் மூலமாகப் பரவ இருக்கும் இந்தப் பெருந்தொற்று மிகப்பெரிய சோகங்களை ஏற்படுத்தப் போகிறது என்பதில் எந்த மாற்றுக கருத்தும் இல்லை.

மார்ச் மாதத்தில் ஏறத்தாழ கொரானாவின் இரண்டாம் அலை துவங்கி இருந்தபோது, உத்தரகாண்ட் மாநிலத்தை ஆளும் ஆளும் பாரதீய ஜனதாக கட்சியின் தலைவர்கள் செய்தித்தாள்களில் முழுப்பக்க விளம்பரங்களைக் கொடுத்திருந்தார்கள், கும்பமேளா குளியல் இடம் தூய்மையாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதாக அவர்கள் மக்களுக்கு அறிவித்தார்கள், 

இதைவிடக் கொடுமை மார்ச் 20 ஆம் நாள், உத்தரகாண்ட் மாநில முதல்வர் ஒருபடி மேலே சென்று "யாராலும் கோவிட் -19 ன் பெயரால் எங்களைத் தடுத்து விட முடியாது, நாங்கள் நம்புகிற கடவுள் கிருமிகளிடம் இருந்து எங்களைக் காப்பாற்றுவார்" என்று கொக்கரித்தார். ஏப்ரல் மாதத்தின் மத்தியப் பகுதி வரையில் இந்து ராஜ்யத்தின் தலைவரான நரேந்திர மோடி ஒரு துரும்பையும் அசைக்காமல் தேர்தல் நாடகங்களில் மும்முரமாய் இருந்தார். 

பிறகு திடீரென விழித்து பன்னாட்டு சமூகத்துக்கு அஞ்சி "மத விழாக்களில் கலந்து கொள்வதை நாம் ஒரு அடையாளமாக வைத்துக் கொள்ள வேண்டும், அப்போதுதான் நம்மால் பெருந்தொற்றை எதிர்க்க முடியும்" என்று திருவாய் மலர்ந்தார். இப்படி ஒரு பிரதமர் இருக்கும் நாட்டில் கும்பமேளாக்கள் அப்பாவி இந்தியர்களின் உயிரைக் குடிக்கும் ஒரு மரணக்குழியாக இருக்கும் என்பதில் என்ன பெரிய வியப்பு இருக்க முடியும்.

மார்ச் 2020 துவங்கி இந்தியாவின் கோவிட் - 19 குறித்து நான் தொடர்ந்து கவனித்தும், பேசியும் வருகிறேன், ஆனால், இந்த இரண்டாம் அலையின் தீவிரம் என்பது மிகப்பெரிய அச்சத்தை உருவாக்குகிறது, சுகாதாரத்துறைப் பணியாளர்கள் மிகப்பெரிய மன அழுத்தத்தில் இருக்கிறார்கள், மும்பை மாநகராட்சி மருத்துவமனைக்கு நான் கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்ற போது அங்கே மாடிப்படிகளில் அமர்ந்திருந்த ஒரு செவிலியரைப் பார்த்தேன். 

அவர் தனக்குக் குமட்டிக்கொண்டு வருவதாக என்னிடம் கூறினார், இங்கிருக்கும் கழிவறைகள் மிகுந்த அசுத்தமாக உள்ளது, ஒவ்வொரு 20 கோவிட் நோயாளிகளுக்கும் 1 கழிவறைதான் இங்கே இருக்கிறது, நானே பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு இப்போதுதான் குணமடைந்து வருகிறேன். மூன்றுமுறை நான் அளித்த விடுப்பு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டது, இப்போது நான் ராஜினாமா செய்ய விரும்புகிறேன். 

ஆனால், என் குடும்பம் என்னை நம்பி இருக்கிறது, மருத்துவப் பணியாளர்களை நாங்கள் மலர் கொண்டு ஆராதிக்கிறோம் என்று விமானங்களை வைத்து மோடியின் அரசு வித்தை காட்டியது, ஆனால், மருத்துவப் பணியாளர்களின் உண்மையான நிலை இதுதான், நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருக்கிறோம்.

இரண்டாம் அலையில் நோயாளிகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மிகுந்த துயரத்தை அடைந்து கொண்டிருக்கிறார்கள், scroll.in என்கிற ஒரு செய்தி நிறுவனம் அதிர்ச்சி தரக்கூடிய உண்மை ஒன்றை வெளியிட்டிருக்கிறது, அக்டோபர் 2020 வரை, உலகைக் காக்கும் வல்லமை பொருந்திய இந்துக்களைக் காக்கும் மாமன்னர் மோடி அரசு கண்களை மூடிக் கொண்டு ஏகாந்தத்தில் இருந்தது.

பெருந்தொற்று துவங்கி 8 மாதங்கள் வரை ஆக்சிஜன் தட்டுப்பாடு குறித்த எந்த சுய உணர்வும் இல்லாமல் வாயால் வடை சுட்டுக் கொண்டே இருந்தார்கள் பாரதீய ஜனதாவின் மக்கள் விரோதத் தலைவர்கள். அக்டோபரில் தான், அதுவும் வெறும் 150 மாவட்ட மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வேண்டும் என்று 2.7 கோடி டெண்டர் கோரி இருந்தார்கள். ஹரியானா, மஹாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் மற்றும் குஜராத்தில் தான் நிலைமை மிகமோசமாக இருக்கிறது. மருத்துவமனைகளில் யாகம் செய்வது, பசு மூத்திரம் குடிப்பது என்று குரங்காட்டிகளின் தலைவராக யோகி ஆதித்யநாத் போன்ற பாரதீய ஜனதாவின் தலைவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 

மாநிலங்களுக்கு இடையே ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கான சண்டை துவங்கி இருக்கிறது, ஹரியானாவின் அமைச்சர் திரு.அனில் விஜ், டெல்லி அரசு ஆக்சிஜன் கொண்டு வருகிற வாகனங்களைக் கடத்துவதாகவும், ஆகவே ஆக்சிஜன் கொண்டுவரும் வாகனங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டிருப்பதாகவும் Economic Times செய்தித் தாளுக்குப் பேட்டி அளித்திருக்கிறார்.
 
உத்திரப் பிரதேசத்தில் இடுகாடுகளை பெரிய டின் ஷீட்டுகளைக் கொண்டு மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் சாமியார் யோகி ஆதித்யநாத். 12 ஆவது அவதாரமான பிரதமர் மோடியின் குஜராத்தில் ஓய்வின்றி இரவு பகலாக இடுகாடுகளில் பிணங்கள் எரிந்து கொண்டிருக்கிறது. உண்மையான மரண எண்ணிக்கைகளை மறைக்கும் வேலைகளில் அமைச்சர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். 

குஜராத் உயர்நீதிமன்றம் உண்மையான கோவிட் -19 நோயாளிகள் மற்றும் இறப்பு எண்ணிக்கையைத் தருமாறு அரசைக் கேட்டிருக்கிறது, ஏனைய மாநிலங்களில் நடக்கும் போலியான எண்ணிக்கைக் கணக்குகளும் நெஞ்சைப் பதற வைப்பதாக இருக்கிறது, மத்தியப்பிரதேசத்தில் ஒருநாளில் எரியூட்டப்பட்ட பிணங்களின் எண்ணிக்கை 97 ஆக இருக்கிற போது அரசு அது வெறும் 3 என்று கணக்குக் காட்டுகிறது என்று "டைம்ஸ் நௌ" செய்தித்தாள் குறிப்பிடுகிறது. 

மிகப்பெரிய அவலம் நடந்து கொண்டிருக்கும் போது ஒன்றுமே நிகழாததைப் போல அரசுகள் நாடகமாடுகின்றன, பிரதமர் ஏதுமறியாதவரைப் போல "நாம் பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவோம், இது புதிய இந்தியா" என்று தேர்தல் மேடைகளில் புளுகிக் கொண்டு திரிகிறார்.

இந்த வாரத்தில் உலகிலேயே மிக அதிகமான கொரானா தோற்று இந்தியாவில் நிகழ்ந்திருக்கும் சூழலில், ஆளும் இந்துத்துவ அரசானது ட்விட்டரில் ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறது, அதில் உள்துறை அமைச்சரும், பிரதமரும் கூடிக்குலாவியபடி தேர்தல் ஊர்வலங்களில் கலந்து கொள்கிறார்கள், உள்துறை அமைச்சர் முறைப்படி அவசர காலமாகக் கருதி தலைநகரில் இருந்தபடி பல்வேறு மாநிலங்களின் தேவைகளைக் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். 

ஆனால், அவரோ பல லட்சக்கணக்கான தொண்டர்களை ஓரிடத்தில் கூட்டி தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாகி இருக்கிறார், இறுதியாக மீண்டும் பன்னாட்டு அழுத்தங்களுக்கு அஞ்சி நடுங்கி பிரதமர் கடைசி தேர்தல் கூட்டங்களை மட்டும் ரத்து செய்வதாக அறிவித்தார், அடிப்படையான அறிவும் இல்லாத, மக்களைப் பற்றிய எந்த சிந்தனைகளும் இல்லாத ஒரு மூடரின் கீழாக இந்த இக்கட்டான சூழலில் தவித்துக் கொண்டிருக்கிறது இந்தியா. 

ஆனால், மூட பக்தர்களோ இன்னும் திருந்திய பாடில்லை, "பாகிஸ்தான் தான் கிருமியைப் பரப்பியது, சீனாதான் கிருமியைப் பரப்பியது" என்று கிளப்பியபடி மோடியைப் புகழ்ந்து நாடு முழுவதும் ராஜஸ்தானியர்களும், குஜராத்திகளும் பாட்டுப் பாடுகிறார்கள். ஆனால், பாகிஸ்தானும், அதன் மக்களும் இந்தியாவுக்கு ஆக்சிஜன் வழங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.  

மருத்துவ நிபுணர்களும், உலகநாடுகளின் மருத்துவ அமைப்புகளும் பல்வேறு எச்சரிக்கைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தபோது இந்தியாவின் பிரதமர் சிகை அலங்காரத்தை மாற்றிக் கொள்வதில் மும்முரமாய் இருந்தார், மக்களின் மீது எந்த அக்கறையும் இல்லாத சென் நிலைக்கு அவர் மாறி இருந்தார்.

அவரது சகாக்களும், பக்தர்களும் அவர் கோவிட் -19 க்கு எதிராக ஒரு சூப்பர் மேனைப் போல அவரை சித்தரித்தார்கள், இந்தியாவில் கொரானா சோதனைகள் கூட நிறுத்தப்பட்டு விட்டது, உழைக்கும் மக்களின் பணத்தைச் சுரண்டிக் கொழுக்கும் பணக்கார, அல்லது உயர் நடுத்தர வர்க்கத்தினர் கடந்த முறை தட்டுகளை அடித்தும் உடைத்தும் மோடியின் வைரசுக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். 

விளக்கேற்றி கொரானாவை ஓட்டினார்கள், "பாக் கொரானா பாக்" (ஓடு கொரோனா, ஓடு") என்று புத்தி பேதலித்தவர்களைப் போல அவர்கள் வீதிகளில் அலைந்தார்கள். ஆனால், ஏழை கூலித் தொழிலாளிகளோ தங்கள் வேலைகளை இழந்து உணவுக்கும் வழியின்றி வாழ்ந்த நகரங்களில் இருந்து வெளியேறி நடந்தார்கள். அதுனால் அவரை தங்களிடம் வேலை பார்த்த அந்த கூலித்தொழிலாளிகள் மீது இந்துராஜ்யத்தின் நீதிமான்கள் யாருக்கும் கருணை பிறக்கவில்லை. 12 ஆவது அவதாரமான கடவுள் மோடிக்கும் கூட இந்த ஏழைத் தொழிலாளிகள் மீது சிறிதளவும் கருணை தோன்றவில்லை. 

இவர்கள் தான் கடவுள் மோடியை இந்த தேசத்தின் பிரதமராகத் தேர்தெடுக்க வாக்களித்தவர்கள், இப்போதும் அவர்கள் மோடி தங்களைக் காப்பாற்றுவார் என்று நம்புகிறார்கள், அவரது உண்மையான கோர முகத்தை அறியாதவர்களாக.....

எல்லாவற்றையும் தாண்டி இந்த தேசத்தின் 130 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு நான் வேலைக்காரன் என்று சுய விளம்பரம் செய்துகொண்ட மோடி, இந்த அவசர காலத்தை ஒரு தேர்ந்த குற்றவாளியைப் போல கை கழுவி விட்டார், அவருக்கு அம்பானியையும், அதானியையும் உலகப்பணக்காரர்கள் வரிசையில் முன்னேற வைக்கக்கூடிய மிகமுக்கியமான பணி இருக்கிறது, 

இந்தியாவின் விற்பனையை துரிதப்படுத்தும் நிர்மலா சீதாராமன் கையில் மிக நீண்ட பட்டியலோடு பிரதமரின் கண்ணசைவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். மருந்து நிறுவனங்களைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கைகளும் இல்லை, "Make in India" என்று போலிக்குரல் எழுப்பியபடி அலைந்த இஸ்லாமியர்களைக் கொன்று குவித்த கோரமுகம் கொண்ட நரேந்திர மோடி, இந்திய அரசின் மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களை ஏன் ஊக்குவிக்கவில்லை? 

இந்திய மருத்துவக் கவுன்சிலின் தற்காப்பு நடவடிக்கைகளை ஏன் துரிதப்படுத்தவில்லை என்கிற இந்தக் கேள்விக்கும் பிரதமரும் பதில் சொல்ல மாட்டார், பக்தர்களும் பதில் சொல்ல மாட்டார்கள். மேற்கு வங்கத்தில் பிரதமர் கலந்து கொண்ட பிரச்சாரக் கூட்டத்திலேயே மாநில பாரதீய ஜனதாக கட்சித் தலைவர் "கோவிட் வந்தால் நாம் பசு மூத்திரத்தை குடிக்க வேண்டும்" என்று வெட்கமே இல்லாமல் பேசினார், கேட்டுக்கொண்டு மண்டையை மண்டையை ஆட்டினார் பிரதமர். இப்படி ஒரு முட்டாள் பிரதமரை இந்தியா இதுவரை சந்திக்கவே இல்லை. 
 
உலகம் முழுவதும் பல நாடுகளின் தலைவர்கள் கொரோனா காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களை சந்திப்பதிலும், இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் சொல்வதிலும், ஊடகங்களை சந்தித்து என்ன மாதிரியான மருத்துவ நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது, நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று வெளிப்படையாகப் பேசும்போது, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின்  மோசடியான பிரதமர் இதுவரை ஒருமுறை கூட ஊடகங்களை சந்திக்கவில்லை.

உலகெங்கும் நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு நேரடியாக பணத்தை நிவாரணமாகக் கொடுத்துக் கொண்டிருக்கும் போது குரூர மனமும், மூடத்தனமும் கொண்ட ஒரு பிரதமர் இதுவரை இந்த தேசத்தின் ஏழை உழைக்கும் மக்களுக்கும் கூட நேரடியான எந்த உதவிகளையும் செய்யவில்லை என்பதுதான் முகத்தில் அறைகிற உண்மை.

நன்றி: Rana - "Time"

தமிழில்: கை.அறிவழகன்

Tuesday, March 30, 2021

அதிக சம்பளம் பெறுவது எப்படி

#19961

#Just_My_Thoughts

Long post but I'll try to keep it crisp and fast. 
Non IT ppl. Sorry, you can skip the post. 
Lots of posts and comments about CTC these days. 

Some jealous, some surprised. 

Are they real? Yes definitely. But depends on so many things. 

1. MNC/Product based - excellent pkg, but unless you have proper skill, you can't cross 45 yrs of age here.

Services /Other indian IT has comparatively better job security but even there, max 45-50 yrs. Adhukku mela la its going to cost blood and soul. 

2. Technology/Skill. Big deal seriously. 100% hike possible. Yes, I was jealous too. It happened. Happens. Someone I knew, SAP specialist, 10 yr exp, from Chennai. Got 44 from 20. No point in getting jealous. If you're in everybody-knows-technology (DB/Java/Testing etc), standard 30% hike thaan max. Specialize in new technologies, niche products, and sell your skill at the right place. 

3. Domain/Industry knowledge. This is more important than technical knowledge. You'll realise it after 10+ years where writing code won't help. A fresher will do that for quarter of the cost. 

4. IIT/IIM/Google/Microsoft. Etc. Enough said. Last day fresher package will be 15+. 50 CTC in 5 years. 

5. First 8 years. You need to jump every two years. Next 6 years, jump once every 3 years. If you didn't do that, you've lost your golden time in IT. Sentiment, team, location, project, mannangatti... If you were waiting for these, your loss. Do some company jumps now, make use of whatever comes. 

6. Very important. Don't reveal your current pkg. Don't accept for current + 30%. Dont mention expected CTC before the final round to anybody, HR or consultancy. Ask for interview shot, finish all of the 2/3/4+ rounds. And then drop your bomb. Ask 100% hike. You'll at least get 50%. If they don't accept, don't kneel down and beg for 40%. Simply reject and come out. If you're really good and did your interview well, they will come back for sure. 

7. Certifications are only fancy cards. Helps in showing off. Especially after 8-10 years. Knowledge matters. 

8. Dont expect much hike if you're attending mass recruits on a saturday. Fish for interviews separately on your own / consultancies. Mass recruitments will 99% give you standard 30% hike only. Simply because, according to company, trisha illana divya. 

Now, if you've missed all these, what to do? Depends on your experience. 

College students, freshers. Don't go into java, db, testing, etc. Wait for the right project. Don't let HR push you into dump. Argue, fight and get new tech projects only. Do RPA, AI, Machine learning, big data, data analysis, Cloud, SAP etc. 

10± exp: concentrate on gaining domain knowledge. And the next time, go for MNC/Product based companies only. 

Experienced Below 8: Simply jump 1/2 times. Preferably to MNC/Product companies. 

Sit and prepare like an exam a day before interview. If there were marks, it's like trying to score 100 instead of 70. The difference is not during the interview. When you do exceptionally good, at last round ask 100% hike, HR offers only 35%, you reject and come out, panel asks HR why they let you go, HR comes back to you, appo theriyum. 

Take leave from current work for both prev day and interview day. Or at least two half days - prev day second half and interview day whichever half you need. Don't do interview from middle of office day. 

Make sure you bargain at the last round. 
Always ask for 100% hike. With a serious face. Justify yourself reasonably. Argue for it, ask for it. Nobody will behead you. Take whatever comes at the end. 

Good luck. 
"

Saturday, March 20, 2021

CAA க்கு ஆதரவாக ஓட்டளித்தவர்கள்

புலியூர் முருகேசன்

அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு ஆதரவு தரும் இஸ்லாமிய நண்பர்களின் கவனத்திற்கு... 

*மாநிலங்களவையில் CAAவுக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள்:*

*அதிமுக எம்பிக்கள்:*
  01. SR பாலசுப்பிரமணியன்
  02. N சந்திரசேகரன்
  03. A முகமது ஜான்
  04. AK முத்துக்கருப்பன்
  05. A நவநீதகிருஷ்ணன்
  06. R சசிகலா புஷ்பா
  07. AK செல்வராஜ்
  08. R. வைத்திலிங்கம்
  09. A. விஜயகுமார்
  10. விஜிலா சத்யநாத்

*பாமக எம்பி:*
  11. அன்புமணி ராமதாஸ்

*மாநிலங்களவையில் CAAவுக்கு எதிர்த்து வாக்களித்தவர்கள்:*

*திமுக எம்பிக்கள்:*
  01. R.S. பாரதி
  02. TKS இளங்கோவன்
  03. M சண்முகம்
  04. திருச்சி சிவா
  05. P வில்சன்

*மதிமுக எம்பி:*
  06. வைகோ

*காங்கிரஸ் எம்பி:*
  07. P சிதம்பரம்

*மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி:*
  08. TK ரங்கராஜன்

ஆதரவு = 125
எதிர்ப்பு = 105

இதனால்தான் அந்த மசோதா சட்டமானது. அதிமுக, பாமக வின் -11 பேரும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தால், 

ஆதரவு = 114
எதிர்ப்பு = 116
என மாறியிருக்கும்

116-114 என்ற கணக்கில் CAA சட்டம் தோற்கடிக்கப்பட்டிருக்கும்.

ஆனால், இப்போது எடப்பாடி, இஸ்லாமிய வேடம் புனைந்து, சிறுபான்மையினக் காவலனாய்க் காட்டிக் கொள்கிறார். நம்பாதீர் மக்களே!

Friday, March 19, 2021

ஒருத்தன் கூட *தலைவா் கருணாநிதி* போல ஆட்சி செய்வேனு சொல்லல.

#Shared

*செருப்படி சிந்தனைகள்* 

MGR ஆட்சியை தருவேன் 
- ரஜினிகாந்த்

 MGR போல ஆட்சி செய்வேன் 
- கமல்ஹாசன்

நான் கருப்பு MGR 
- விஜயகாந்த்

 MGR போல ஏழைகளுக்காக பாடுபடுவேன் 
- விஜய் 

 MGR போல ஆட்சி ஆள என்னாலும் முடியும் 
- T. ராஜேந்தர்

ஒருத்தன் கூட *தலைவா் கருணாநிதி* போல ஆட்சி செய்வேனு சொல்லல...

ஏன்னா அது எவராலும் முடியாது...

* கோயம்பேடு பேருந்து நிலையம் வேண்டுமென்று எந்த சென்னை குடிமகனும் கொடி பிடிக்கவில்லை, 

* மெட்ரோ ரயில் வேண்டுமென்று யாரும் கனவு காணவில்லை, 

* வள்ளுவருக்கு கோட்டமும், சிலையும் வேண்டுமென்று எந்த தமிழ் ஆர்வலரும், குடிமகனும் குரல் கொடுக்கவில்லை,

* கணினி என்பதைக் கேள்விபடுவதற்கு முன்னதாகவே டைடல் பார்க் வேண்டுமென எந்த மாணவர் சங்கமும் கொடி பிடிக்கவில்லை.

* தங்களது கிராம சாலைகள் சிமென்ட்டில் அமைக்கப்படும் என எந்த கிராமவாசியும் கனவு கூட கண்டதில்லை,

* பள்ளியில் படிக்க தம்பிள்ளைகளை இலவசமாகவே பேருந்தில் அரசு அனுப்பும் என பெற்றோர் நினைத்துக் கூட பார்த்ததில்லை, 

* தம் நிலத்திற்கு தண்ணீர பாய்ச்ச அரசே இலவச மின்சாரம் தரும் என விவசாயி கனவு கண்டதில்லை. தம் பொருளை தானே விற்க உழவர் சந்தை வரும் என்பதையும். 

* பட்டிக்காட்டிற்கும் மினிபஸ் வரும், நாமும் படித்து அமெரிக்காவில் வேலை பார்ப்போம் என எந்த கிராம மாணவனும் கனவு காணவில்லை, 

* கிராம மாணவனுக்காக நுழைவுத் தேர்வை ரத்து செய்து தம் பிள்ளைகளும் மருத்துவராகும் என எந்த கிராம பெற்றோரும் கனவு கண்டதில்லை. 

ஆனால் இது அத்தனையும் நடந்தது, அதன் பின்னே தமிழகத்தின் வளர்ச்சி குறித்து கனவு காணும் பிதாமகன் ஒருவர் இருந்தார். சான்றோர்களும், கலைஞர்களும் அவர் பின்னே இருந்தனர்.

எந்த உயரிய தொழில்நுட்பமும் முதலில் தமிழ்நாட்டில்-தான் அறிமுகப் படுத்தப்பட்டது. 

* சென்னை ஆட்டோ மொபைல் நகரமாக மாற்றப்பட்டது. 

* சமத்துவபுரம் அமைக்கப்பட்டது. 

* குடிசை மாற்று வாரியம் அமைக்கப்பட்டது, 

* நீர்நிலைகள் தவறாமல் தூர்வாரப்பட்டது, 

* காவிரி நீர் பாசனத்திற்கு குறித்த நாளில் திறக்கப்பட்டது. 

* பெண்கள் முன்னேற்றத்திற்கு, சொத்துரிமை, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டம் முதல் மகளிர் குழுக்கள் வரை அமைக்கப்பட்டது.   

இதையெல்லாம் தாண்டி சாதிக்கக் கூடிய ஒரு கட்சி ஆட்சி தமிழகத்தில் அமையும் என சொல்லுங்கள், உங்களுடன் அந்தக் கட்சிக்காக கொடி பிடிக்கிறேன், கோஷம் போடுகிறேன்.

அதுவரை எம் தலைவர் கலைஞரின் புகழ் பாடுவதும், அவரை கொண்டாடுவதும்தான் எனக்கு வேலை. எங்கள் பிள்ளைகளுக்கு முதலில் நாங்கள்  காட்டி மகிழ்வது உதயசூரியனையும் தலைவர் கலைஞரையும்தான்.   

வாழ்க கலைஞர், 
வளர்க தமிழ் நாடு

ஏன் வேண்டும் இந்து அறநிலைத்துறை

*முட்டாள் சங்கி:* 
கோயில்களை மீட்க வேண்டும். 

*நாம்:*
யாரிடம் இருந்து? 

*முட்டாள் சங்கி:* 
அரசிடம் இருந்து. 

*நாம்:*
அரசு யாரை வைத்து கோயிலை நிர்வகிக்கிறது? 

*முட்டாள் சங்கி:* 
அறநிலையத் துறையை வைத்து. 

*நாம்:*
அறநிலையத் துறையில் யார் வேலை செய்கிறார்கள்? 

*முட்டாள் சங்கி:* 
இந்துக்கள்.

*நாம்:*
இந்துக்களில் எந்த சாதி? 

*முட்டாள் சங்கி:* 
அனைத்து சாதி இந்துக்களும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை செய்கிறார்கள். 

*நாம்:*
அப்போ, நாடார்கள்? 

*முட்டாள் சங்கி:* 
ஆமாம். வேலை செய்கிறார்கள். 

*நாம்:*
வன்னியர், தேவர், கவுண்டர்கள்? 

*முட்டாள் சங்கி:* 
ஆமாம். வேலை செய்கிறார்கள். 

*நாம்:*
பள்ளர், பறையர், அருந்ததியர்? 

*முட்டாள் சங்கி:* 
அவர்களும் வேலை செய்கிறார்கள். 

*நாம்:*
அறநிலையத் துறை வருவதற்கு முன் யார் கோயில்களை நிர்வகித்தார்கள்? 

*முட்டாள் சங்கி:*
பிராமணர்களும், ஊரில் பணக்காரர்களாக இருந்த தர்மகர்த்தாக்களும் மற்றும் ஜமீன்தார்களும். 

*நாம்:*
அறநிலையத் துறை வருவதற்கு முன் கோயில்களில் நாடார்கள் மற்றும் இன்றைய தலித் மக்களின் நிலை என்ன? 

*முட்டாள் சங்கி:*
கோபுர தரிசனம் தான். கோயிலுக்கு உள்ள விடுங்க; கோயில் இருக்கும் தெருக்களுக்குள் கூட இன்றைய தலித் மக்களுக்கு அனுமதி இல்லாமல் தானே இருந்தது. 

*நாம்:*
அப்போ, ஜக்கி வாசுதேவ் என்னும் இந்த மலைமுழுங்கி சொல்லுவதைப் போல, இந்துக்கள் நிர்வகித்த கோயில்களில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் இந்துக்களே போக முடியாத சூழல் இருந்துச்சு, அப்படித் தானே? 

*முட்டாள் சங்கி:*
ஆமாம்.. ஆமாம். 

*நாம்:*
இப்போ, எந்த இந்துக்களை கோயில்களுக்குள் அனுமதிக்காமல் தூரமா வைச்சிருந்தாங்களோ, அந்த இந்துக்களில் ஒருத்தர் நிர்வாக அதிகாரியாக இருந்து கோயிலை நிர்வகிக்கிறார், அப்படித் தானே? 

*முட்டாள் சங்கி:*
ஆமாம்.. ஆமாம்! 

*நாம்:*
இப்போ சொல்லு, அறநிலையத் துறை இந்துக்களுக்கு நன்மை செய்ஞ்சிருக்கா? இல்லையா? 

*முட்டாள் சங்கி:*
நன்மை செய்ஞ்சிருக்க மாதிரி தான் தெரியுது! 

*நாம்:*
கோயில்களை மீட்போம்னு பாஜகவும், ஜக்கி வாசுதேவ் மாதிரி திருட்டு சாமியார்களும் கதறுவது எதுக்குன்னு புரியுதா? 

*முட்டாள் சங்கி:*
புரியுறா மாதிரித் தான் தெரியுது! 

*நாம்:*
என்ன புரியுது? 

*தெளிவடைஞ்ச முன்னாள் சங்கி*:
எந்த சாதி மக்களை எல்லாம் தீண்டத்தகாதவர்கள், கோயிலுக்குள் வந்தால் கோயில் தீட்டாகிவிடும்னு ஒதுக்கி வைத்திருந்தோமோ, அதே சாதிகளில் இருந்து இடஒதுக்கீட்டின் மூலம் அறநிலையத்துறையில் தேர்வாகிப் பணியாற்றும் அதிகாரிகள் முன், உத்தரவுக்காக உயர்சாதிகளும், மிக மிக உயர்ந்த சாதிகளும் நிற்க வேண்டி இருக்கே என்கிற வயிற்றெரிச்சல் தான்னு புரியுது. 

*நாம்:*
இப்போ சொல்லு, கோயில்களை யாரிடம் இருந்து மீட்க வேண்டும்? 

*தெளிவடைஞ்ச முன்னாள் சங்கி:*
சாதிவெறி பிடிச்சு, ஆகம விதிகள்னு சொல்லிக்கிட்டு, முறையாக வேத சாத்திரங்களைப் படிச்சு தேர்வாகி இருக்கும் அனைத்து சாதிகளில் இருந்தும் அர்ச்சகராகத் தகுதி அடைந்த இந்துக்களை அர்ச்சகர் பணியில் சேர விடாமல் வழக்குப் போட்டு தடுத்து வைத்திருக்கும் அந்த கூட்டத்திடமிருந்தும், ஆகம விதிகளை நாங்கள் மதிக்கிறோம் என்று அனைத்து சாதிகளும் அர்ச்சகர்கள் ஆவதைத் தடுப்போம் என சொல்லாமல் சொல்லும் திருட்டு பாஜகவிடம் இருந்தும் மீட்க வேண்டும்.

*நாம்:*
போ, போய் அந்த திருட்டு மலைமுழுங்கி கிட்ட சொல்லு.


Thursday, March 18, 2021

The 7 Habits of Highly Effective People

The 7 Habits of Highly Effective People புக் படித்திருக்கிறீர்களா..?? One of the all time best sellers on Management. அதை அப்பிடியே இன்றைய தமிழக அரசியல் களத்தில் பொருத்தி பார்க்க முடிகிறது. அதில் சொல்லப்பட்ட வெற்றிகரமான ஆளுமைக்கான பழக்கவக்கங்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் பொருந்தி வருகிறது    

Habit 1: Be Proactive (You’re in Charge) 
Habit 2: Begin With the End in Mind (Have a Plan)
Habit 3: Put First Things First (Work First, Then Play)
Habit 4: Think Win-Win (Everyone Can Win)
Habit 5: Seek First to Understand, Then to Be Understood(Listen Before You Talk)
Habit 6: Synergize (Together Is Better)
Habit 7: Sharpen the Saw (Balance Feels Best)

H1 - தேர்தல்களமும் காலமும் எந்த நிமிடமும் வரலாம் என்பதை முன்னமே சிந்தித்து தேர்தலுக்கான அறிவிப்புகளுக்காக காத்திராமல் முதல் ஆளாக அனைவருக்கும் சிலமாதங்கள் முன்பே பரப்புரையை ஆரம்பித்தது 
H2 - தேர்தல் கூட்டணி இப்பிடி இருக்கவேண்டும், இன்னாரெல்லாம் இருக்க வேண்டும், யார் யாருக்கு எத்தனை தொகுதிகள், எந்த தொகுதிக்கு யார் வேட்பாளர் என்கிற clear picture கொண்ட தலைவராக அவர் மட்டுமே தென்படுகிறார்
H3 -  "வெற்றி என்பது எளிதாக கிடைக்காது, கிடைக்கவும் விடமாட்டார்கள்" "என் சக்திக்கு மீறி உழைக்கிறேன். உங்களிடமும் அதையே எதிர்பார்க்கிறேன்" என்று திரும்ப திரும்ப மூன்று ஆண்டுகளாக சொல்லி கட்சி அமைப்பினரை தேர்தலைதவிர வேறு எதையும் சிந்தக்கவிடாமல் பார்த்துக்கொண்டது 
H4 - தன்னுடைய கட்சி மட்டும் பயனடைந்தால் பத்தாது என்று கூட்டணி கட்சியினருக்கும் சரியான அளவிலான அதிகப்படியான வெற்றிவாய்ப்புள்ள தொகுதிகளை கொடுத்து அனைவரையும் வெற்றியாளராக மாற்றுவது 
H5 - மக்கள் சபை கூட்டங்கள் மூலம் மாநிலத்தின் அணைத்துவிதமான மக்களின் குறைகளை முதலில் கேட்டறிந்து அதற்கேற்ப தேர்தல் அறிக்கை தயாரித்து அறிவித்தது  
H6 - முரண்டுபிடித்த கூட்டணியினரையும் வாய்ப்புக்கிடைக்காமல் முறுக்கிக்கொண்ட  சொந்த கட்சியினர் சிலரையும் பக்குவமாக அரவணைத்து ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்று புரியவைத்து ஒரே தேரில் ஏற்றியது 
H7 - இது எல்லாம் பத்தாது என்று காலஓட்டத்திற்க்கேற்ப IPAC போன்றவர்களை பணியமர்த்தி, data analysis, demographic study  போன்ற நவீன யுக்திகள் மூலம் முடிவுகளை கூராக்கி கொண்டது

திமுக கூட்டணியின் தேர்தல் வெற்றி இது அத்தனைக்கும் பட்டையம் கூறும்..!

Tuesday, March 16, 2021

HAM RADIO

ஹாம் ரேடியோ குறித்து அறிந்துகொள்வோம். 

ஹாம் வானொலியை (HAM radio) அமெச்சூர் ரேடியோ (Amateur radio) என்றும் சொல்லுவார்கள். நாம் பாடல்கள் கேட்கும் FM வானொலி ஒருவழி ஒலிபரப்பு. அதாவது வானொலி நிலையம் ஒலிபரப்புவதை நாம் கேட்க மட்டுமே முடியும். அதனால் ஒலிபரப்பு செய்யுமிடம் நிலையம் என்றும் அதைக் கேட்கும் பயனாளர்களை நேயர்கள் என்றும் அழைப்பர். 

ஹாம் வானொலி என்பது இருவழி ஒலிபரப்பு. அதாவது நாம் பேசி முடித்த பிறகு அடுத்த முனையில் இருப்பவர் பேச முடியும். அதை அந்த அலைவரிசையில் இருக்கும் அனைவரும் கேட்க முடியும். செல்போன் போல அல்லாமல் ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே ஒலிபரப்ப முடியும். அதனால் ஒலிபரப்புபவரும், அதைக் கேட்டுக்கொண்டிருக்கும் அனைவரும் ஸ்டேஷன் என்றே அழைக்கப்படுவர். 

ஒவ்வொரு ஒலிபரப்பாளருக்கும் அதாவது ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் ஒரு அழைப்புக்குறி (Call Sign) உண்டு. ஒவ்வொரு முறை பேசும்போதும், பேசி முடிக்கும்போதும் தங்களது அழைப்புக்குறியையும், அடுத்த முனையில் இருக்கும் நிலையத்தாரது அழைப்புக்குறியையும் சொல்லியே பேசுவர். 

உதாரணமாக VU3WWD என்ற நிலையத்தார் VU3ZRF என்ற நிலையத்தை அழைக்கையில் This is Victor Uniform number three Whisky Whisky Delta calling Victor Uniform number three Zulu Romeo Foxtrot, and standing by என்று சொல்லிவிட்டு பத்து வினாடிகள் காத்திருந்து பதில் இல்லையெனில் மறுபடியும் அழைப்பர். மூன்று முறைக்கு மேல் பதில் இல்லையெனில் அழைப்பதை நிறுத்திக்கொள்வர். அந்த நிலையத்தார் Victor Uniform number three Whisky Whisky Delta, this is Victor Uniform number three Zulu Romeo Foxtrot. Go ahead என்று பதில் தருவார். உரையாடல் முடிந்தபின் இரு ஸ்டேஷன்களும் அதேபோல் அழைப்புகுறியைச் சொல்லி Signing Clear என்று முடித்துக்கொள்வர். 

அழைப்புக்குறியைப் பெற மத்தியத் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் Wireless Planning Coordination and Monitoring Wing நடத்தும் Amateur Station Operator Certificate (ASOC) தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். அழைப்புக்குறி இல்லாத நபர்கள் வயர்லெஸ் ரேடியோவில் பேசுவது சட்டப்படி தவறு என்பதோடு எந்த நிலையமும் அத்தகைய அந்நிய நபர்களுடன் உரையாட முன்வர மாட்டார்கள். Radio language தெரியவில்லையெனில் பெரும்பாலும் ஹாம் ஸ்டேஷன்கள் பேசிக்கொள்வது மற்றவர்களுக்குப் புரியாது. 

ASOC தேர்வில் இரண்டு வகை உண்டு. Restricted grade தேர்வில் மின்னியல், காந்தவியல், மின்னணுவியல், வானொலி அலைவரிசைகள், சட்ட திட்டங்கள் குறித்த அடிப்படை கேள்விகள் இருக்கும். இதற்கென பிரத்தியேக குறிப்புகள், மாதிரி வினா விடைகள் கொண்ட புத்தகத்தை உங்களுக்குத் தெரிந்த ஹாம் எவரிடம் கேட்டாலும் தருவார்கள். இணையத்திலும் இலவசமாகக் கிடைக்கிறது. ஒரு வார படிப்பே தேர்ச்சி பெறப் போதுமானது. 

General grade தேர்வில் restricted grade தேர்வில் வரும் பாடத்திட்டததுடன் கொஞ்சம் கூடுதலான பகுதிகள் இருப்பதோடு மோர்ஸ் குறியீடு (Morse Code) தேர்வும் உண்டு. நிமிடத்துக்கு ஆறு வார்த்தைகள் அனுப்பவும் எட்டு வார்த்தைகளைக் கேட்டு, தாளில் எழுதவும் தெரியுமளவுக்கு புலமை வேண்டும். 

மோர்ஸ் குறியீடு என்பது ஆங்கில எழுத்துகள், எண்கள், நிறுத்தற் குறியீடுகள் ஒவ்வொன்றுக்கும் பிப், பீப் என்ற ஒலியாக மாற்றி ஒலிபரப்புவதாகும். மிகக்குறைந்த சக்தியில் நீண்டதூரம் தகவல்களை அனுப்ப தந்தி சேவையில் பயன்படுத்தப்பட்ட மோர்ஸ் குறியீடு இன்னமும் பல இடங்களில் பயன்பாட்டில் உள்ளது. பழைய நோக்கியா அலைபேசிகளில் குறுந்தகவல் வந்தால் பிப்பிப்பிப் பீப்பீப் பிப்பிப்பிப் என்ற சத்தம் வருவதைக் கேட்டிருப்பீர்கள். அது SMS என்ற வார்த்தையின் மோர்ஸ் குறியீட்டு ஒலியே. 

Restricted grade தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களது அழைப்புக்குறி VU3 என்று ஆரம்பிக்கும். General grade தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களது அழைப்புக்குறி VU2 என்று ஆரம்பிக்கும். VU என்பது இந்தியாவுக்கான சர்வதேச வானொலி அடையாளக் குறி. Victoria's Union என்று அந்தக்காலத்தில் அடையாளப்படுத்தப்பட்டது இன்றும் அப்படியே உள்ளது. 

கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் பாடத்தைப் படித்தவர்களுக்கு தேர்வின் முதல் பகுதியில் விலக்கு உண்டு. யார் வேண்டுமானாலும் general grade தேர்வை நேரடியாக எழுதலாம். Restricted grade எழுதியே general grade எழுத வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால் மோர்ஸ் கோடு சரளமாக அடிக்கத் தெரிந்திருக்க வேண்டும். 

12 வயதிற்கு மேற்பட்ட சிறுவர் சிறுமிகள் பெற்றோர் ஒப்புதலுடன் ஹாம் ரேடியோ தேர்வு எழுதி அழைப்புக்குறி பெற்று வானொலியில் பேசலாம். நீச்சல், மிதிவண்டி, இருசக்கர, நான்குசக்கர வாகனம் ஓட்டுதல் போல   குழந்தைகளுக்குக் அவசியம் கற்றுத்தர வேண்டிய விசயங்களுள் வயர்லெஸ் தகவல் தொடர்பும் ஒன்று. வானொலி அலைகள், ஆன்டெனா, ரிப்பீட்டர், அயன மண்டல வானிலை, சேட்டிலைட் தகவல் தொடர்பு என கற்றுக்கொள்ள ஏகப்பட்ட விசயங்கள் இருப்பதோடு பல புதிய நபர்களை உட்கார்ந்த இடத்திலேயே அறிமுகப்படுத்திக்கொண்டு தொடர்ந்து தீவிரமாகப் பயணிக்க, கவனச்சிதறலைத் தவிர்த்து ஒரு குறிப்பிட்ட விசயத்தில் Mastery-க்கு முயற்சிக்க பதின்ம வயது மாணாக்கர்களுக்கு ஹாம் ரேடியோ ஓர் அற்புதமான கருவி. 

உங்களது மகன்/மகளுடன் சேர்ந்து மோர்ஸ் கோடு பழகுவது அதைக்  கற்றுக்கொள்ளுவதின் வேகத்தை நிச்சயமாக அதிகரிக்கும். அதற்கென ஏகப்பட்ட app-கள் உள்ளன. அதில் ஈடுபாடு இல்லையென்றாலோ, பொறுமை இல்லையென்றாலோ restricted grade தேர்வு எழுதலாம். Choose the best அடிப்படையில் ஒரு மணி நேரத் தேர்வு. இதில் தேர்ச்சிக்கு நாற்பது மதிப்பெண் எடுத்தால் போதுமானது. 

Restricted grade-க்கும் General grade-க்கும் என்ன வித்தியாசம் என்றால் ஒலிபரப்பும் கருவியில் உள்ள Watt அளவு அனுமதியில் உள்ள உச்சவரம்பு மட்டுமே. அஃது ஒரு அதரப்பழசான சட்ட நடைமுறை என்பதால் யதார்த்தத்தில் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. 

சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், ஐதராபாத் போன்ற நகரங்களில் WPC,  தேர்வுகளை அவ்வப்போது நடத்துகிறது. தேர்வுக்கட்டணம் 100 ரூபாய் மட்டுமே. தேர்ச்சி பெற்ற பின் அழைப்புக்குறி பெற one time கட்டணமாக 20 ஆண்டுகளுக்கு 1000 ரூபாய், 40 ஆண்டுகள் அல்லது உங்களது 75 வயது வரைக்கும் 2000 ரூபாய் மட்டுமே. இடையில் வேறு எந்த கட்டணமும் கிடையாது. 

விண்ணப்பித்த பின் தேர்வு எழுதி, முடிவு வெளியிடப்பட்டு, பின்னர் டெல்லிக்கு விண்ணப்பித்து அழைப்புக்குறி பெற குறைந்தது 9 - 12 மாதங்களாகும். அதனால் ஹாம் வானொலி உங்களது படிப்பையோ, அலுவலகப் பணிகளிலோ இடையூறு செய்யாது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். 

அழைப்புக்குறி பெற்ற பின் வயர்லெஸ் சாதனங்கள் வாங்கினால் போதுமானது. காவல்துறையினர் பயன்படுத்தும் வாக்கி  டாக்கி போன்ற கருவியை Handy என்றும் அவர்களது வாகனங்களில் வைக்கப்பட்டிருக்கும் சிறிய பெட்டி போன்ற தனியாக மைக் உடன் கூடிய கருவி Base என்றும் சொல்லுவார்கள். Handy  3000 ரூபாயிலிருந்தும், ஆன்டெனாவுடன் கூடிய Base 6000 ரூபாயிலிருந்தும் கிடைக்கிறது. சீனத் தயாரிப்புகள் வழக்கம்போல் ஹாம் சந்தையிலும் புதிய பாய்ச்சலை உண்டாக்கியிருக்கிறது. மகிழ்வுந்திலும் ஆன்டெனா வைத்து Base கருவியை வைத்துக்கொள்ளலாம். 

ரெட்மி, சாம்சங், ஐபோன் என்று செல்போனில் பல்வேறு range இருப்பதைப்போல விலையுயர்ந்த பிராண்டு கருவிகளும் ஹாம் வானொலிப்  பயன்பாட்டில் உண்டு. உங்களுடைய தேவை, பொருளாதார வசதி போன்றவற்றைப் பொறுத்து கருவிகளை வாங்கலாம். மற்றபடி, இது வரவேற்பறையில் வைக்கக்கூடிய பொருள் அல்ல என்பதால் விலையுயர்ந்த சமாச்சாரமாக இருக்குமோ என்று அச்சப்படத் தேவையில்லை. 

VHF (Very High Frequency, 30 - 300 MHz) அலைவரிசைக்கு Repeaters உண்டு. ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் ஒலி அலைகளைப் பெற்று amplify செய்து வேறு ஒரு அலைவரிசையில் அதிக சக்தியுடன் ஒலிபரப்பு செய்யக்கூடிய தானியங்கி கருவியை ரிப்பீட்டர் என்பார்கள்.  கோயமுத்தூர், உடுமலைப்பேட்டை, கொடைக்கானல், இராஜபாளையம், ஏற்காடு, சென்னை என பல இடங்களில் தன்னார்வலர் குழுக்களால் ரிப்பீட்டர்-கள் நிறுவப்பட்டு தினசரி காலையும் மாலையும் வருகைப்பதிவுகள் நடத்தப்படுகின்றன. 

புயல், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற பேரிடர் காலங்களில் நமது செல்போன் நெட்வொர்க்குகள் டவர் சாய்ந்தோ, வெள்ளத்தில் மூழ்கியோ, கேபிள்கள் அறுந்தோ, மின் இணைப்பு இல்லாமலோ செயல்படாமல் நின்றுவிடும். ஆனால் ஹாம் ரேடியோவில் பேசுவது நேரடியாக  ரிப்பீட்டரை அடைந்து காற்றில் பயணித்து அடுத்த ஹாம் கருவியை அடைவதால் நடுவில் எத்தகைய உபகரண உதவியும் தேவையில்லை. அதனால் பேரிடர் காலங்களில் பொதுமக்களின் தகவல் தொடர்பை மீட்டு, உதவி புரிவது ஹாம் நெட்வொர்க் மட்டுமே. 

காவல்துறை, மின்சார வாரியம், பொதுப்பணித்துறை, போக்குவரத்துக் கழகம், மாநகராட்சிகள், தீயணைப்புத் துறை போன்றவற்றின் வயர்லெஸ் நெட்வொர்க் அலைவரிசை அந்தந்தத் துறை பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதோடு பேரிடர் காலங்களில் அவர்களது துறை சார்ந்த தேவைகளுக்கே அந்த அலைவரிசை போதாது என்பதால் பொதுமக்களின் அவசரகால தகவல் தொடர்புக்கு ஹாம் ரேடியோ ஆர்வலர்களின் சேவை மிகவும் முக்கியமானது. 

ஹாம் ரேடியோ பயனாளர்களுடன் காடுகளில் ட்ரெக்கிங் செல்லும் குழுக்கள் தங்களுக்குள் தொடர்பு கொள்ள ஒரு குறிப்பிட்ட Simplex mode அலைவரிசையிலும் (3 - 10 கிமீ தொலைவுக்குள்), நகரப் பகுதிகளுக்குத் தொடர்புகொள்ள ஒரு ரிப்பீட்டருடனும் இணைந்திருப்பர். அதனால் காட்டுக்குள் காணாமல் போவதோ, உயிருக்கு ஆபத்தான சூழ்நிலையில் சிக்குவதையோ தவிர்க்கப்படும். மேலை நாடுகளில் இத்தகைய நடைமுறைகள் பரவலாக புழக்கத்தில் உண்டு. சுனாமி, கஜா, ஒக்கி புயல் காலத்தில் ஹாம் வானொலியாளர்கள் மிக முக்கிய களப்பணியாளர்களாக இருந்தனர். தேனி குரங்காணி காட்டுத்தீ விபத்தில் சிக்கிய குழுவில் வயர்லெஸ் கருவிகள் யாரிடமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் சிக்கும்போது May day, May day, May day என்று சொல்லி தங்களது பெயர், இடம், ஆபத்தின் தன்மை, என்ன மாதிரியான உதவி தேவை என்பதை சொல்லுவது ரேடியோ ஒலிபரப்பில் அனைத்து அலைவரிசைகளிலும் உள்ள நடைமுறை.  வயர்லெஸ் ரேடியோவை அருகிலுள்ள ரிப்பீட்டர் அலைவரிசையில் stand by-இல் வைத்துவிட்டு தங்களது அலுவல்களைப் பார்ப்பது ஹாம் பயனாளர்களின் பழக்கம். அதனால் ரிப்பீட்டர்களில் May day அழைப்பு வந்தால் யாரோ ஒருவர் உடனடியாக பதில் சொல்லுவதோடு உடனடியாக அடுத்தகட்ட உதவி நடவடிக்கைகளுக்கு ஆவண செய்வர். அதாவது யாரோ ஒருவர் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் நமக்காக உதவக் காத்திருப்பார். 

One world, one language என்ற வாசகத்துடன் Hobby என்றே அறியப்படும்  ஹாம் வானொலி மிகவும் இயல்பாக அன்றாடம் பயன்படுத்தப்பட்டாலும் அவசர காலங்களில் மிக முக்கியமானது. வரும் ஆண்டில் எதையாவது புதிதாகக் கற்கவேண்டும் என்று நினைத்திருந்தால் ஹாம் ரேடியோ பயன்பாட்டைக் கற்றுக்கொள்ளுங்கள். என்றாவது ஒருநாள் அஃது உங்களைப்  பெருமைப்படச் செய்யும். 

73,
பிரபு
VU3WWD