Monday, May 3, 2021

SDPI சுயபரிசோதனை

SDPI கலந்து கொண்ட 6 தொகுதிகளில் பெற்ற வாக்குகள்:

1) ஆலந்தூர் - 1761
2) ஆம்பூர் - 1793
3) திருச்சி மேற்கு - 2545
4) மதுரை சென்ரல் - 3347
5) திருவரூர் - 6364
6) பாளையம்கோட்டை - 12241

இந்த எண்ணிக்கை நமது கூட்டணி கட்சிகளின் ஓட்டுக்களையும் சேர்த்துதான். 

இந்த 29,000 ஓட்டுகளை வைத்துக் கொண்டு நாம கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனோம். 

* திமுக எங்கள கூப்பிடல/மதிக்கல,
* தமுமுக சதி பண்ணிடாங்க,
* எங்களுக்கு போட்ட சோத்துல உப்பு போடல....

நமக்கு போதிய வாக்குவங்கி இல்லாத போது அனுசரித்துத்தான் போக வேண்டும். நமக்கு போதிய வாக்குவங்கி இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளும் தைரியமும் நேர்மையும் வேண்டும்.

இப்பவாவது நாம் திருந்தியிருக்கிறோம் என்றா நினைக்கிறீர்கள் - இல்லை. நெல்லை முபாரக்-க்கு ஓட்டு போட்ட 12,000 பேரை தவிர, மற்ற அனைவரும் சமுதாய அக்கரையற்றவர்கள், பணம் வாங்கிக் கொண்டு ஓட்டளித்து விட்டார்கள் என்று அடுத்தவர்களை பழி சொல்ல ஆரம்பித்து விட்டோம்.

சகோதரர்களே, வாக்கரசியலில் நமது உண்மையான பலம் இவ்வளவுதான். சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும்.

இப்போது நமது தேவை, நேர்மையான சுயபரிசோதனை. 

No comments:

Post a Comment