Monday, December 28, 2015

ஒரே நேரத்தில் பலபணிகளை செய்யக்கூடிய பெண்களின் மூளை

பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பலபணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது!
உதாரணாமக பெண்ணால், தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும், பிள்ளைகளுக்கு தேவையான பணிவிடையையும் செய்ய முடியும். ( உங்கள் வீடுகளிலும் பார்த்திருப்பீர்கள்.) ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஆண்களால் தொலைக்காட்ச்சியைப பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேச முடியாது! ( அவர்களின் கவனம் தொலைக்காட்சியில் இருக்கும் அல்லது தொலை பேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது! )

Thursday, December 24, 2015

ராமாயணம் எழுதப்பட்டது எப்போது


இராமயணத்தில் இராமன் பரதனுக்கு இராஜ நீதி பற்றி கூறுகிறார்:

பவுத்தர்கள், சார்வாகர்கள் முதலிய நாத்திகர்களோடு பழகாமல் இருக்கின்றாயா? சாத்திரங்களுக்கு வெகு சாமர்த்தியமாக அர்த்தங்களை உபதேசிப்பதில் இவர்கள் வெகு சாமர்த்தர்கள். தத்துவ ஞானத்திற்கு மாறாக விபரீத ஞானத்தை உடையவர்கள். ஒன்றும் தெரியாவிட்டாலும் பெரிய பண்டிதர்கள் என்று எண்ணிக் கொண்டுயிருப்பார்கள். வேத மார்க்கத்திற்கு விபரீதமான புத்தியினை உடையவர்கள். தர்மசாத்திர மிருதிகளையும், புராணங்களையும் நீக்கி மகரிசிகளால் சொல்லப்பட்டு சாதுகளால் ஒப்புக்கொள்ளப்பட்ட புராணங்களையும், தர்மசாத்திரங்களையும் பெரியோர்களுடைய சம்பிரதாய பரம்பரைப்படி அர்த்தம் சொல்லாமல் கேவல தர்க்கத்தை பிரயோகித்து அவைகள் இகத்திலும், பரத்திலும் பிரயோசனமற்றவை என்று வாதிப்பார்கள்.

-வால்மீகி ராமாயணம், அயோத்தியா காண்டம் 
சர்க்கம்109, பக்கம் 412 
எழுதியவர் சி.ஆர்.சீனிவாச அய்யங்கார்.பி.ஏ 

இராமன் சொல்லுவதைப் பார்க்கும் போது இராமனுக்கு முன்பே புத்தர் இருக்கிறாரா? பின் ஏன் புத்தமும் இந்துனு சொல்கிறார்கள். அப்போது புத்தமதத்தை இவர்களே அழித்தார்கள். புத்தரின் காலம் 2400 ஆண்டுகளுக்கு முற்பட்டது

இப்போது சொல்லுங்கள் ராமாயணம் எழுதப்பட்டது எப்போது

Sunday, December 20, 2015

ஆரியமயமாக்குதல்

சிரியா நாட்டைக் சேர்ந்த மித்தனி (Mittani) யிலிருந்து புறப்பட்ட ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழையுமுன் சில காலம் ஈரானை சேர்ந்த ஈஸ்பராயன் (Esfarayen) என்ற மாநிலத்தில் தங்கிவிட்டு வந்தார்கள். அப்போது பாரசீக நூல்களைக் கற்றார்கள் அதன்பின் இந்தியாவிற்குள் வந்தபின் பாரசீக மத நம்பிக்கையின் அடிப்படையில் ரிக்வேதத்தை உருவாக்கினார்கள். 

இராமன், ஆரியன், ராணா, ராணி, இந்திரன், வருணன், இரான், சாமி (கடவுள்), ரங்கா ராகவன், ரகு, பீஹார், (Daeva) தேவா, மணி (கடவுள்), கந்தர்வா, கயா, லஷ்கரி, ஜலம், மன்னன், மந்த்ரம், மாரி(கடவுள்), கௌ போன்ற சொற்கள் பாரசீக மொழியில் இடம்பெற்று, அதற்குரிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

பஞ்சாங்கம் என்ற ஆண்டுகாட்டியில் உள்ள அங்கம் பாரசீக சொல்லாகும். இதன் பொருள், காலம், பருவம் (Time) (Season) ஆகும். பஞ்ச என்ற சொல், அய்ந்து வகை ஆண்டு கணக்கீட்டு முறையைக் குறிக்கின்றது. பாரசீகத்தின் அன்பளிப்பு பஞ்சாங்கமாகும். இந்த பஞ்சாங்கத்தை வைத்து நாள் குறிப்பது. பூணூல் அணிந்த ஆரியர்களின் வேலை ஆகும்.

Hom (ஓம்) என்ற சொல்லுக்கு, பாரசீக மொழியில் - யாக சடங்குகளில் பயன்படுத்தும் சாறு என்பதனை குறிக்கின்றது. இது சோமபானம் போன்றது.

Jal (ஜலம்) என்ற பாரசீக சொல்லுக்கு தண்ணீர் என்று பொருள். இன்று கூட ஆரியர்கள், தமிழர் திருமணங்களில் ஜலம் விடுங்கள் என்கிறார்கள்.

பாரசீக மொழியில் ஈரான் நாட்டினைக் குறிக்கும் சொல் Airan இந்த பாரசீக சொல்லுக்குப் பொருள் ஈரான் ஆகும். இந்த நாட்டை ஆரியர்களின் தாயகமாக இந்த பாரசீக அகராதியில் கூறப்பட்டிருக்கிறது. இது ஆரியர்கள் பாரசீகம் வழியாக இந்தியாவிற்குள் வந்தார்கள் என்பதனை உறுதிப்படுத்துகின்றது.
பாரசீக மொழி அகராதியில் ஆரியர்களின் மூதாதையர் பிறந்த நாடாக துர்கிஸ்தான் (Turkistan) அய் குறிப்பிடுகின்றது. ஆரிய இனம் தோன்றிய பகுதியின் பெயர் “Airyana Vaeja” இது துர்கிஸ்தான் நாட்டில் புல்வெளிகள் நிறைந்த பகுதியில், 

பாரசீகமொழியில், இந்தியாவில் வாசிக்கப்படும, தம்புரா, வீண்(ணா), வாத்ய (வாத்யம்) என்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன. வாத்யம் என்ற சொல் அவஸ்தன் நூலில் உள்ளது.

வீர் (Vir) என்ற சொல் பாரசீக மொழியில் உள்ளது. இந்த சொல்லே வடமொழியில் வீர்பூமி, பரம் வீர் சக்ரா போன்ற சொற்களில் உருப்பெற்றுள்ளது.

முடிவுரை:
துருக்கிஸ்தான் என்று அறியப்பட்ட பகுதியில் (துர்க்மேனிஸ்தான் அருகில்) இருந்து முதல் ஆரியர் தோன்றியதை இந்த அகராதி தெரிவிக்கின்றது. இந்த நூல் பாரதீய ஜனதா கட்சியின் பாரசீகத்திலிருந்து வந்த வேதகால கடவுள்கள், இந்திரன், பிரம்மா, விஷ்ணு போன்ற கடவுள்கள் இந்தியாவில் பிராமணீயத்தை வளர்க்க உதவியதாக வரலாற்று ஆசிரியர் ஆடம் ஹார்ட் டேவிஸ் தனது நூல் “History” இல் தெரிவிக்கின்றார்.

கனிஷ்கர் காலத்தில் கல்வெட்டுகள் 1993இல் ஆப்கானிஸ்தானில் கண்டெடுக்கப்பட்டன. இதில் இராணிய மொழியை ஆரிய மொழியாகக் குறிக்கப்பட்டுள்ளது.

Helena Petroun Blavatsky தனது “Secret Doctrine” (1888) இல் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார். யூதர்கள் ஆரியன் அல்லாதவர்கள் ஆபிரஹாம்_அய் சார்ந்தவர்கள். Abraham x-brham (பிரம்மன்=பிராமணர்) கிதீக்ஷீலீணீனீ பிராமணனின் எதிர்பதம்.

பிராமணர் அல்லாத யூதர்களை அறவே அழிக்கும் கொள்கையை நாசி (NAZI) கொள்கை என்று கூறுவர். இந்த கொள்கை Aryanization ஆரியமயமாக்குதல் என்று பெயர்.

(ஆரியர் பற்றிய இன்னும் நிறைய தகவல்கள் சொல்லமுடியும். ஆந்திராவிலிருந்து ஆரியபவன் வந்ததாக நீர் கூறினாலும்கூட ஆரியபவனை நடத்துகிற 90% பேர் பிராமனர்களே. ஏன் ஆந்திர பிராமனர்கள் இல்லையா? அப்புறம் அதையும் மெனக்கிட்டு வீடியோ ஆதாரமெடுத்து என்னால் தரவியலும். அதற்கெல்லாம் நீர் அசையமாட்டீர். சொரணை இருந்தால் அசைந்து கொடுப்பீர். இருந்தால் நான் நேற்று கேட்ட கேள்விகளுக்கு பதிலளியும். இன்னும் இருபதுக்கு மேற்பட்ட கேள்விகள் இருப்பில் உள்ளன)

https://www.facebook.com/perarivalan.mura/posts/864090687043474

தாமிரபரணி ஒரு அதிசயம்.

பாபநாசம் அதற்கு மேல் காரையார் அதற்கும் மேல்???
#
ஆளை விழுங்கும் புல்வெளி காட்டுப் பயணம்
#
இயற்கை எழில் கொஞ்சும் தாமிரபரணியின் நீர்பிடிப்புப்
பகுதி (படம்) வழியில் ‘லாத்திமோட்டா’ என் றொரு இடம் வருகிறது. இங்கே யானைகள் வந்தால் பாதுகாப்புக் காக ஓடி ஒளிய சிறு குடில் இருக்கிறது. அகழி தோண்டி அதில் மனிதன் நடக்கும் வகையில் சிறு மரப்பாலம் அமைத்து, மறுபக்கம் குடிலை கட்டியிருக்கிறார்கள். தொலைவில் யானையின் பிளிறல் சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தாலும் குடிலுக்கு செல்ல வேண்டிய அவசியம் நமக்கு ஏற்படவில்லை.
காட்டு வழியில் ஆங்காங்கே மரங்கள் விழுந்து கிடந்தன. ஆண்டுக்கணக்கில் விழுந்து கிடந்த பிரம்மாண்டமான சில மரங்கள் பாறைகளைப் போல இறுகிக் கிடந்தன.
சில இடங்களில் விழுந்த மரங்களே சிற்றாறுகளுக்கு பாலங்களாக அமைந்தன. உயரமான அத்தி மரங்களில் இருந்தும், நீர்மத்தி மரங்களில் இருந்தும் சிங்கவால் குரங்குகள் (Lion tailed macaque) கொத்துக் கொத்தாக கொழுந்து இலைகளையும் பூக்களையும் பறித்து கீழே போட்டுக் கொண்டிருந்தன.
மந்திகள் பறித்துப் போடும் அந்த கொழுந்து இலைகளை மான்கள் விரும்பி சாப்பிடும். மந்திகளுக் கும் மான்களுக்குமான பந்தம் அது. அதேபோல புலிகள், சிறுத்தைகள் மான்களை வேட்டையாட பதுங்கினால் கடுமையாக குரல் எழுப்பி மான்களை உசுப்பிவிடும் இந்தக் குரங்குகள்.
பொதிகை மலையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் மட்டுமே வசிக்கும் ஓரிட வாழ்விகளான சிங்கவால் குரங்கு, நீலகிரி கருமந்தி (Nilgiri langur), செந்தேவாங்கு (Slender loris), தமிழ கத்தின் மாநில விலங்கான வரையாடு (Nilgiri thar) ஆகியவை வசிக்கின்றன. இவைத் தவிர, பழுப்பு மரநாய் (Brown palm civet), பழுப்பு மர எலி (Malabar spiny dormouse), இலிங்கன் (Nilgiri marten) ஆகியவையும் இங்குள்ளன. இவை அனைத்துமே அழியும்தருவாயில் இருக்கும் அரிய வகை உயிரினங்கள்.
தவிர மேற்குத் தொடர்ச்சி மலைக்கே உரிய 1,500 அரிய வகை தாவரங்களில் பொதிகையில் மட்டுமே 150 வகை தாவரங்கள் இருக்கின்றன. இவை மருத்துவப் பலன்கள் மிக்கவை. இந்தத் தாவரங்களை கையாள்வதில் பாரம்பரிய அறிவைப் பெற்றவர்கள் ‘காணி’கள்.
அழியும் பட்டியலில் இருக்கும் அரிய வகை ‘அமிர்தபலா’ தாவரம் (Decalepis arayalpathra) இங்கு விளைகிறது. இது முற்றிய வயிற்றுப் புண், புற்றுநோய் ஆகியவற்றைக் குணப்படுத்தும் தன்மைக் கொண்டது.
ஒரு மணி நேரம் நடந்ததும் சிற்றாறு ஒன்று குறுக்கிட்டது. கருமனை ஆறு. தொடர்ந்து வாலைபிந்தியாறு அருவியில் குளியலை முடித்துவிட்டு, நாலாறு என்ற சிற்றாற்றைக் கடந்து நடந்தோம். நாலாற்றைக் கடந்தவுடன் ஏராளமான பறவைகளின் கான கீதங்கள் மயக்கின. அரிய பறவையினமான மலபார் தீக் காக்கையை (Malabar trogon) பார்க்க முடிந்தது. அரிய வகை சாம்பல் மார்பு சிரிப்பான் (Grey breased laughing thrush) இங்கு காணக் கிடைத்தது ஆச்சர்யமே. நீட்டி, நிதானமாகவும், நல்ல சத்தமாகவும் ‘ப்ப்பீ... கோகோ... ப்ப்பீ... கோகோ...’ என்று இவை கூவுவது ஏதோ குழந்தை கொஞ்சுவதுபோல இருக்கிறது. இந்தப் பறவை முட்டையிட்டு குஞ்சு பொரித் ததும் தங்கள் கூடுகளை அழித்துவிடும். பச்சை நிறத்திலான சாம்பல் தலை சின்னானும் இங்குக் (Grey headed bulbul) காணக் கிடைத்தது.
பொதிகை மலை உச்சியில் அமைந்துள்ள அகத்தியர் சிலை.
புல்வெளி தந்த குளியல்
இங்கிருந்து 6 கி.மீ. தொலைவில் மிகப்பெரிய புல்வெளி வந்தது. ஆளை விழுங்கும் புல்வெளி அது. கண் கண்ணாடி அணிந்துக்கொண்டு முகத்தை துணியால் சுற்றிக்கொள்ளச் சொன்னார்கள். இல்லை எனில் முகத்தில் சிராய்ப்பை ஏற்படுத்திவிடும் இந்த புற்கள். புல்வெளியைக் கடப்பதற்குள் தெப்பலாக நனைந்துவிட்டோம். காலுக்கு கீழேயும் சதுப்புநிலம் போலி ருந்தது. அவ்வளவு தண்ணீரை சேமித்து வைத்திருக்கின்றன அந்தப் புற்கள். இதுவும் ஒருவகையில் தாமிரபரணி குளியல்தான். ஏனெனில் தாமிரபரணி உள்ளிட்ட தென்னிந்திய நதிகளுக்கு ஆதாரமே இதுபோன்ற புல்வெளிக் காடுகள்தான். இதனை முதன்முறையாக அனுபவரீதியாகவும் அறிந்துக்கொள்ள முடிந்தது. தொடர்ந்து முட்டு இடிச்சான் தேரி மலை, அட்டைக்காடு கடந்து வந்துதான், அத்திரிமலை பங்களாவில் ஒய்வு எடுத்துக்கொண்டிருக்கிறோம்.
வரையாடு
மறுநாள் அதிகாலை ஐந்தரை மணிக்கு எழுப்பிவிட்டார்கள். நடக்கத் தொடங்கினோம். இருளில் கண் முன் மலை பிரம்மாண்டமாகத் தெரிந்தது. வானம் புலர்ந்த பொழுதில் ஈத்தல் காட்டுக்குள் நுழைந்தோம். ஈத்தல் என்பது ஒருவகையான மூங்கில். அடுத்து கடும் ஏற்றம். உருண்டையான வழுக்குப் பாறைகளின் மீது ஏற வேண்டியிருந்தது. நடுவே சிறிய சமதளம் வந்தது. தாமரைக் குளம் என்றார்கள். காட்டாறு இது. ஆற்றில் இறங்கிக் கடக்கும் முன்பு மேகத்தை உற்று கவனித்தார்கள். மேகக்கூட்டத்தை வைத்து காட்டாற்று வெள்ளம் வருமா என்பதை கணிக்கிறார்கள்.
நண்பகல் 12 மணி வாக்கில் இன்னொரு சமதளம் வந்தது. ‘பொங் கலா பாறை’ என்றார்கள். இங்கிருந்து அரை மணி நேரம் ஏற்றம் ஏறியதும், உயர்ந்த பாறைச் சரிவில் இரும்பு ரோப் கட்டியிருந்தார்கள். நல்ல உயரம். “கீழே பார்த்தால் தலை சுற்றும். ஒரே மூச்சில் ஏறிவிடுங்கள்” என்றார்கள். ஒருவழியாக ஏறிவிட்டோம். இங்கிருந்து உரலிடிச்சான் பாறை, வழுக்குப் பாறை, இடுக்குப் பாறை ஆகிய மூன்று பகுதிகளை கடந்தோம். மீண்டும் அதேபோல ஒரு இரும்பு ரோப். இன்னும் இது உயரம். “இங்கு மட்டும் ஏறிவிட்டால் பொதிகை மலை உச்சி” என்றார்கள். மூச்சு முட்டியது. உடல் நடுங்கியது. தாமிரபரணி தாய் மீது பாரத்தை போட்டுவிட்டு, ஒரே மூச்சில் ஏறி, சமதளத்தில் சரிந்து விழுந்தோம்.
பொதிகை உச்சியில் அகத்தியர் சிலையாக காட்சியளித்தார். பக்தர்கள் பூஜைகள் செய்யத் தொடங்கினார்கள். ‘ஊ...’ என்ற சத்தத்துடன் ஆளையே அடித்துச் செல்வதுபோல காற்று வீசி யெறிந்தது. கடல் மட்டத்தில் இருந்து 6,122 அடி உயரத்தில் மலை உச்சியில் படுத்துக்கொண்டு வானத்தைப் பார்த் தோம். வானம் மெல்ல இருட்டத் தொடங்கியது.
வண்டுகளின் இடையறாத ரீங்காரம், விதவிதமான விலங்குகளின் குரல்கள் என இரவுக்காடு இன்னொரு அனுபவம் அளித்தது. தூரத்தில் ஒரு பக்கம் திருவனந்தபுரம் ஒளிர்கிறது. விண்ணில் நட்சத்திரங்கள் மின்னத் தொடங்கின. நிலா பொழிந்தது. வானம் அருகில் இருப்பதைப் போல பிரமிப்பு. மறுநாள் காலையில் தாமிரபரணி உற்பத்தியாகும் பூங்குளத்தை பார்த்து விடலாம் என்கிற நம்பிக்கை பிறந்தது!
#
பூங்குளத்தில் பிறக்கிறாள் தாமிரபரணி
#
பொதிகை மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதி களில் பல்வேறு சிற்றாறுகளாகவும் அருவிகளாகவும் வனத்துக்குள்ளும் நிலத்துக்குள்ளும் தவழ்ந்து வரும் தாமிரபரணி, தமிழகத்தின் பூங்குளம் இடத்தில் இயற்கையாக அமைந்த சிறு குளத்தில் வெளியே தெரிகிறது. குறிப்பிட்ட மாதங்களில் குளத்தைச் சுற்றிலும் கருடா மலர்கள் பூக்கின்றன. அதனால் இதனை பூங்குளம் என்று அழைக்கிறார்கள். இதுதான் தாமிரபரணியின் நதிமூலம் என்று அதிகாரபூர்வமாக தெரிவிக்கிறது தமிழக வனத்துறை.
நமது பொதிகை மலைப் பயணத்தின் நோக்கமே நதிமூலமான பூங்குளத்தைப் பார்க்க வேண்டும் என்பதுதான். தமிழகம் வழியாக தற்போது பூங்குளத்தை அடைய முடியாது. அதேசமயம் கேரளம் வழியாக பொதிகை மலைப் பயணத்திலும் பூங்குளத்தை அடைய முடியாது. பொதிகை மலைப் பயணத்தில் மலை உச்சியில் இருந்து கீழே தூரத்தில் இருக்கும் பூங்குளத்தைப் பார்க்க மட்டுமே முடியும். அதுதான் நதிக்கும் நல்லது. நமக்கும் நல்லது.
பூங்குளத்தை மறைத்த மேகங்கள்
இரவு முழுவதும் பொதிகை உச்சியில் அகத்தியர் மொட்டையில் அமர்ந்திருக்கிறோம். விடிந்தது. ஆனால், இரவில் தெளிவாக இருந்த வானம் காலையில் மேகங்களால் போர்த்திக் கொண்டது. மலை உச்சியை மேகக் கூட்டங்கள் அப்பிக்கொண்டன. காலை 10 மணியாகியும் மேகங்கள் கலையவில்லை. ஒருவழியாக நண் பகல் 12 மணிவாக்கில் மேகக்கூட்டங்கள் கலைந்து பளிச்சென்று சூரியன் வெளிச்சம் வந்தது.
கிழக்கில் கீழே அதள பாதாளத்தில் பாபநாசம் அணை தெரிந்தது. அதற்கு மேலே பூங்குளம் தெரிந்தது. சுற்றிலும் சோலைக்காடுகள் சூழ செவ்வக வடிவத்தில் இயற்கையான சிறு குளம் போல இருக்கிறது பூங்குளம். இவ்வளவு சிறிய குளத்தில் பிறக்கும் தாமிரபரணிதான் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 86,107 ஏக்கர் நிலங்களை வளமையாக்குகிறது.
தமிழகத்தில் இருந்து பாபநாசம் வழியாக காரையாறு அணை வரை மட்டுமே செல்ல முடியும். சில ஆண்டுகளுக்கு முன்பு காரையாறு அணையில் இருந்து படகு மூலமாக பாணதீர்த்தம் அருவி வரை பயணிகள் அனுமதிக்கப்பட்டார்கள். பின்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி தடைவிதிக் கப்பட்டுவிட்டது. இந்தத் தடைவிதிப்புக்கு முன்பாக எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான முத்தாலங் குறிச்சி காமராசு பலமுறை பூங்குளத்துக்குச் சென்றிருக்கிறார். அவரும் தற்போது பொதிகைக்கு நம்முடன் வந்தார். தமிழகம் வழியாக பூங்குளத்துக்கான பயணம் குறித்து அவரிடம் கேட்டோம்.
தமிழகம் வழி பூங்குளம்
“களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதி அது. காரையாறு அணை 144 அடி நிரம்பியிருந்தால் பாண தீர்த்தம் அருவி வரை படகில் செல்ல முடியும். அணையில் தண்ணீர் குறைவாக இருந்தால் ஒரு கி.மீ. தொலைவு நடந்துதான் செல்ல வேண்டும். பாணதீர்த்தத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் மலை மீது ஏறிச் சென்றால் பூங் குளத்தை அடையலாம். வழியில் பாண்டியன் கோட்டை என்கிற புராதனக் கோட்டையின் எச்சங்கள் காணப்படுகின்றன. இதனை விக்கிரபாண்டியன் ஆண்டதாக கூறப்படுகிறது. ஒருகாலத்தில் பாபநாசத்தில் இருந்து கோட்டை வரை 127 முரசு மண்டபங்கள் இருந்தன. எதிரிகள் நுழைந்தால் பாபநாசத்தில் முதல் முரசை ஒலிப்பார்கள். அடுத்தடுத்து முரசுகள் ஒலித்து கோட்டைக்கு தகவல் செல்லும்.
வழியே இஞ்சிக்குழி என்றொரு பகுதி இருக்கிறது. அங்கு சொற்ப எண்ணிக்கையில் காணிகள் வசிக்கிறார்கள். தொடர்ந்து ஏறினால் கன்னிக்கட்டி என்ற பகுதி உள்ளது. இங்கு வனத்துறையின் பங்களா உள்ளது. இங்கிருந்து மேலே சென்றால் பேயாறு ஓடும். அதனை கடந்தால் பூங்குளத்தை அடையலாம். பூங்குளம் பகுதியில் கருடா மலர்கள் அதிகம் பூத்தால் அந்த ஆண்டு தாமிரபரணியில் அதிகம் தண்ணீர் வரும் என்பது காணி மக்களின் நம்பிக்கை” என்றார்.
7 ஆறுகள் சங்கமம்
பூங்குளத்துக்கு முன்பாகவே பேயாறு, சிற்றாறு, உள்ளாறு ஆகிய 3 துணை ஆறுகள் தாமிரபரணியுடன் கலக்கின்றன. அதன் பின்பு மேற்குத் தொடர்ச்சி மலையின் வெவ்வேறு பகுதிகளில் உற்பத்தியாகும் காரையாறு, மயி லாறு, பாம்பாறு ஆகிய ஆறுகள், மேலணைக்கு வந்து தாமிரபரணியுடன் இணைகின்றன. அதன் பின்பு கிழே முண்டந்துறை வன ஓய்வு விடுதி அருகே தாமிரபரணியுடன் சேர்வலாறு சேர்ந்துக்கொள்கிறது. இப்படியாக வன பகுதியில் மட்டும் 7 ஆறுகள் தாமிரபரணியுடன் கலக்கின்றன.
இவை ஒவ்வொன்றும் பயங்கரமான காட்டு ஆறுகள். கற்பனைக்கு எட்டாத வேகத்தில் திடீரென வெள்ளம் புரண்டோடும். கடந்த 92-ம் ஆண்டு அப்படி ஒரு வெள்ளம் சேர்வலாற்றில் வந்தபோது அங்கிருந்த பெரும் பாலம் ஒன்று சுவடு தெரியாமல் அடித்துக்கொண்டு போய்விட்டது.
அதன் பின்புதான் அங்கு இரும்பு பாலம் அமைத்தார்கள். இங்கிருந்து அடர் வனத்துக்குள்ளாகவே கீழ் நோக்கி பாய்ந்து வரும் தாமிரபரணி, முதல்முறையாக ஓரிடத்தில் பாறைகளுக்கு இடையே வெளியே அருவியாக துள்ளிக் குதிக்கிறாள். அதுதான் பாண தீர்த்தம்!
பூமிக்குள் சுரங்கப் பாதை
சேர்வலாறுக்கும் அணைக்கும் காரையாறு அணைக்கும் இடையே பூமிக்குள் 3.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. காரையாறு மேலணையில் தண்ணீர் அளவு 40 அடிக்கு மேல் இருந்தால் அது தானாக சுரங்கப் பாதை வழியாக சேர்வலாறு அணைக்குச் சென்றுவிடும். அதேபோல் மேலணையில் 40 அடிக்கு குறைவாக தண்ணீர் இருந்தால் சேர்வலாறு அணையில் இருந்து தண்ணீர் தானாக மேலணைக்குச் சென்றுவிடும். மேலணையும் சேர்வலாறு அணையும்
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பராமரிப்பில் இருக்கின்றன. மேலணையில் 4 யூனிட்கள் மூலம் 32 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மின்சார உற்பத்தி தடையில்லாமல் நடக்கவே இந்த ஏற்பாடு.
இந்த அகத்திய மலைக்கு நீங்களும் போகணுமா?
அகத்தியமலை பற்றி படித்த அனைவருக்கும் அங்கே போகவீண்டும்
என்ற எண்ணம் ஊற்றெடுக்கிறது. இது இயற்கை தானே ? நம்ம தாமிரபரணி பிறப்பிடம் யாருக்குத்தான் பிடிக்காது...?
#
பூங்குளம், அகத்தியர் மலை, ஏன் பாண தீர்த்தம் அருவிக்குக்கூட நாம் இப்போது புக முடியாது. நமது பாண தீர்த்த அருவி வழியாக போய் வந்தார்கள்தான்; ஆனால் அனைத்து வழிகளையும் நம் தமிழக வனத்துறை இழந்திருக்கிறது என்பது கசப்பான உண்மை.
இரண்டு வருடங்களாக பாணதீர்த்தம் வழி அடைக்கப்பட்டுவிட்டது என்கிறார் வனத்துறை அதிகாரி ஒருவர்.
இரண்டு வருடம் முன்பு இந்தியக் காடுகளுக்கான சர்வே எடுக்கப்பட்டதாம், அப்போது அகத்தியர் மலை கேரள வனத்துறைவசம் போய்விட்டது.
##
எனவே இப்போது அகத்திய மலை போக, முதலில் திருவனந்தபுரம் போய் அங்குள்ள வனத்துறையிடம் அனுமதிச் சான்று வாங்க வேண்டும்.
அந்த அனுமதிச் சான்று போதும். 15 அல்லது 20 நண்பர்கள் இணைந்து பொதிகைமலை பயணத்தைத் தொடங்கலாம். வயதானவர்களும், நோயாளிகளும் வேண்டாம்.
திருவனந்தபுரத்திலிருந்து நெய்யாறு அணை வரை ஜீப்பில் செல்லலாம்.
அதன்பிறகு 6.2 கிலோ மீட்டர் தூரம் கடும் சரிவான மலை மீது நடந்தால் சீக்கிரமாய் அகத்தியர் மலையையும் அதைவிட அதிக ஆச்சரியமாக தாமிரபரணி புறப்படும் சிறிய குளத்தைப் பார்க்கணுமே அவ்வளவு அழகு...!
குளத்தைச் சுற்றிலும் அடர் காடுகளின் செடிகளில் பூக்க்ள் பூத்து அழகுக்கு அழகு செய்தது போல் அந்தக் குளம் தோற்றமளிக்கும் .
6 கிலோ மீட்டர் தூரம் என்பதால் ஆபத்து குறைவு.
அழகாக சென்று வாழுங்கள் தாமிரபரணியின் ஆசியோடு....!!!

https://www.facebook.com/select2india/posts/1093869907307345

Friday, December 18, 2015

யார் பார்ப்பனன் - 71 கேள்விகள்

கிழே உள்ள 71 கேள்விகளை படித்தேன் அந்த கேள்விகளில் உள்ள பல வரலாறுகளை பற்றி படித்தும் கேள்வி பட்டும் இருப்போம் இந்த கேள்விகளில் உள்ள அனைத்து கேள்விகளையும் சிந்தித்தால் அல்லது அதை தெரிந்து கொள்ள நீங்கள் தேடலில் ஆராய்ந்தால் தற்போது இந்தியாவில் யார் ? ஆட்சி செய்கிறார்கள் வருங்காலத்தில் இந்தியாவை இவர்கள் என்ன செய்ய திட்டமிடுகிறார்கள் என்று எழுதில் விளங்கி கொள்ளளலாம் . 

தற்போது வரலாறுகள் திரிக்கபடுகிறது தமிழகத்தில் இன்னும் ஒரு பெரியாவர் தேவை படுகிறார் என்று தோனுகிறது .எனக்கும் நிறைய பிராமண நண்பர்கள் உண்டு . அவர்களின் நல்ல மனிதர்களையும் பார்த்து இருக்கிறேன் 

பதிவு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்திற்காக அல்ல சிந்தனைக்கு மட்டும் கேட்டு இருக்கும் கேள்விகளை பற்றி மட்டும் தான் எது எதையோ படித்து இருப்பிர்கள் கிழே குறிப்பிட்டு இருக்கும் கேள்விகளை கண்டிப்பாக படியுங்கள் .

  1. ஆடுமாடுகளை ஓட்டிக் கொண்டு நம் நாட்டிற்குப் பிழைக்க வந்தது யார்?
  2. இராமலிங்கப் பெரியாரை வெட்டிப் பலியிட்டது யார்?
  3. நந்தனாரை நெருப்பிலிட்டுக் கொன்றது யார்?
  4. திருப்பாணாழ்வாரைத் தீயிலிட்டுக் கொன்றது யார்?
  5. யாகத்தில் ஆடு, மாடு, குதிரை, பன்றி, இவைகளைச் சுட்டுத் தின்று சுரா பானமருந்தியது யார்?
  6. வருணாச்சிரம தருமத்தை ஆதரிப்பவன் யார்?
  7. மனுதர்ம சாத்திரம் எழுதி நம்மை ஏமாற்றி வந்த கூட்டம் எது?
  8. புராண ஆபாசக்கதைகளை எழுதி நம்மை ஏய்த்து வந்தவன் யார்?
  9. திருப்பதிக்குப் போய் மொட்டையடிக்காமல் திரும்பி வருபவன் யார்?
  10. மோட்ச லோகத்துக்கு வழிகாட்டி டிக்கெட் கொடுப்பவன் யார்?
  11. திவசம், திதி, கருமாதி, கலியாணம், சடங்குகள் நடத்தி வைப்பவன் யார்?
  12. திராவிடன் கட்டிய கோவில்களில் அதிகாரம் செலுத்தபவன் யார்?
  13. திராவிடன் கட்டிய சத்திரமானிய வருமானத்தில் உண்டு களிப்பவன் யார்?
  14. கஷ்டப்பட்டுக் கோயில் கட்டியது யார்? உள்ளே புகுந்து கொள்ளையடிப்பது யார்?
  15. சத்திரம் கட்டியது யார்? மானிய சொத்தில், சாய்ந்து சாப்பிடுவது யார்?
  16. பல சாதிகளை உண்டு பண்ணியது யார்?
  17. உடன்கட்டை ஏறும்படிச் செய்து பெண்களை வஞ்சித்தது யார்?
  18. திராவிடன் ஆசாரத்துடன் பக்தி பண்ணினால் கண்ணைத் தோண்டிக் காட்டில் விட்டவன் யார்?
  19. திராவிடன் ஆரியப் பாஷையைப் பேசியதற்காக நாக்கை அறுத்தது யார்?
  20. திராவிடனை அரக்கனாகவும், சூத்திரனாகவும், குரங்காகவும் எழுதிவைத்தவன் யார்?
  21. திராவிட இனத்தவரை முன்னுக்கு வரவொட்டாமல் முட்டுக்கட்டை போடுவது யார்?
  22. திராவிட நாட்டுப் பிரிவினையைக் கூடாதென்று கொக்கரிப்பவர் யார்?
  23. உழைப்பின்றி ஊரார் உழைப்பில் உண்டுகளிப்பவன் யார்?
  24. கடவுளைத் தரிசிக்கத் தரகனாக இருப்பவன் யார்?
  25. தென்னாட்டானைச் சுரண்டுபவன் யார்?
  26. மதவெறி பிடித்து மதிகெட்டுத் தகாத காரியம் செய்தலைபவன் யார்?
  27. தர்ப்பைப் புல்லையும், பஞ்சாங்கத்தையும் காட்டி, இன்றும் ஏமாற்றுபவன் யார்?
  28. நீ சுவாமி என்று கும்பிட்டால் இடதுகையை நீட்டி உன்னை அவமதிப்பவன் யார்?
  29. பெண்களை ஆடல், பாடல் கற்பித்து சினிமாவில் சேர்த்துப் பணம் சம்பாதிப்பவன் யார்?
  30. கெஞ்சிக் கூத்தாடி லஞ்சங் கேட்கும் பஞ்சாங்கம் யார்?
  31. இந்திப் படிப்பைக் கட்டாயப் பாடமாகக் கொணர்ந்தது யார்?
  32. நான்கு சாதிகளை உண்டு பண்ணியவன் யார்?
  33. மதவெறி பிடித்தலையும், மடையனும், முட்டாளும் யார்?
  34. முதல் சாதி என்று தன்னைச் சொல்லிக் கொள்பவன் யார்?
  35. தொழிலாளி கூலி கேட்டதற்கு மலபார் போலீசை விட்டு அடித்தது யார்?
  36. வில் வித்தை கற்ற ஏகலைவன் கட்டை விரலை நறுக்கிக் கொடுக்கும்படி கேட்டவன் யார்?
  37. வேதம் ஓதிப் பாதகம் விளைவிப்பவன் யார்?
  38. நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை நம்மிடம் வரி வாங்குபவன் யார்?
  39. ஹரிஜன சகோதரரை அக்ரகாரத்துக்குள் விடாமல் தடுப்பவன் யார்?
  40. சாதி வேறு, சமயம் வேறு, கலை வேறு என்பவன் யார்?
  41. சாதியைக் கடவுள் படைத்தார் என்று சொல்லி தர்ப்பை ஏந்துங் கை வாளுமேந்தும் என்றவன் யார்?
  42. உலகம் போற்றும் உத்தமர் காந்தியாரைச் சுட்டுக் கொன்றது யார்?
  43. காந்தியார் இறந்த தினத்தன்று மிட்டாய் வழங்கியது யார்?
  44. காந்தியாருக்கு ராம் தூன் பசனை பண்ணி ஓலமிட்டழுதது யார்?
  45. காந்தியார் கொலை வழக்குகளை பிரசுரிக்கக் கூடாதென்பவன் யார்?
  46. காந்தியாரைச் சுட்டுக் கொன்றதை இருட்டடிப்பு செய்துவிட்டது யார்?
  47. காந்தியார் கொலைக்கு நியாயம் வழங்கும்படி கேட்ட கழகத்தவர்களைத் தடை உத்தரவு போட்டுச் சோதனையிட்டவன் யார்?
  48. சரித்திர ஆதாரப்படி அன்றிலிருந்து கொலை செய்து வரும் கூட்டம் எது?
  49. திராவிடனைத் தலையெடுக்கவொட்டாமல் தட்டி விட்டுக் கொண்டிருப்பவன் யார்?
  50. திராவிடச் சம்புகன் தலையை வெட்டி ஆரியப் பிள்ளையைப் பிழைக்க வைத்தது யார்?
  51. காந்தியாரைக் கொலை செய்த விநாயகக் கோட்சே கூட்டம் எது?
  52. காந்தியார் சதியாலோசனை சம்பந்தப்பட்ட ரிக்கார்டுகளைக் களவாடியவன் யார்?
  53. அடுத்துக் கெடுப்பதில் அசகாயசூரனாய், கூடியிருந்து குடி கெடுப்பவன் யார்?
  54. தஞ்சை நாயக்கர் வம்சத்தை வேற்றரசரிடம் காட்டிக் கொடுத்தவன் யார்?
  55. சமணர்களைக் கழுவேற்றியது யார்?
  56. சந்திர குப்தனுக்கு சாம்ராச்சியம் கிடைக்கும்படி செய்தது யார்?
  57. நவ நந்தர்களின் ஆட்சியை வேரறுத்தவன் யார்?
  58. சிறுத்தொண்டனைப் பிள்ளைக்கறி சமைத்துக் கேட்டது யார்?
  59. வல்லாள மகாராசாவின் மனைவியைப் பெண்டாளக் கேட்டது யார்?
  60. அசோக வம்சத்தரசரை அழித்தவன் யார்?
  61. சைவனுக்குக் கந்தபுராணமும், வைஷ்ணவனுக்கு இராம புராணமும் கட்டியது யார்?
  62. தேவடியாள் வீட்டில் தரகனாக இருப்பவன் யார்?
  63. தாசிகளுக்குப் பரதநாட்டியம் கற்றுக் கொடுப்பவன் யார்?
  64. அரிச்சந்திரனைப் பொய் சொல்லும்படி படாதபாடு படுத்தியது யார்?
  65. திராவிட மக்களை ஏமாற்றிப் பிழைக்க வந்த கூட்டம் எது?
  66. பல காமாந்தகாரக் கடவுளர்களையுண்டு பண்ணியது யார்?
  67. நம்மைப் பல சாதிகளாக்கி மொழி, கலை, நாகரீகம், வாணிபம் ஆகிய பல துறைகளிலும் வீழ்ச்சியுறச் செய்தது யார்?
  68. எண்ணத் தொலையாத கடவுளை உண்டாக்கி எழுதியது யார்?
  69. கடவுளுக்கும் மனைவி, கூத்தி, பிள்ளை குட்டிகள் இருப்பதாக எழுதியவன் யார்?
  70. எவ்விதத் தொடர்புமின்றிச் சாஸ்திர ரீதியாகப் பிரித்து வைத்தது யார்?
  71. காந்தியார் கொலைக்கு முன் திருவுளச் சீட்டுப் போட்டு ஒத்திகை நடத்திய கூட்டம் எது?

குடி அரசு’ (22-1-1949) SOURCE: VIDUTHALI.COM.

விளம்பரம்! விமர்சனம்!

சத்தமில்லாமல் நாங்களெல்லாம் சேவை செய்கின்றோம், ஆனால் குறைகுடம் கூத்தாடும் என்ற பழமொழிக்கேற்ப இஸ்லாமியர்களின் விளம்பர அலப்பறை தாங்கவில்லை என்று சில பிரிவினைவாதிகளும், ஆளுங்கட்சியின் காலை நக்கிப் பிழைக்கும் கிஷோர் போன்றவர்களும் எழுதி அதை மிகக் கடுமையாகப் பரப்பியிருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் செய்யும் களப்பணிகளை விட அதிகமாக இந்த விமர்சனம் முஸ்லிம்களின் மீது சாட்டப்படுகின்றது.

சுதந்திர போராட்ட காலத்தில் அதிகமான பணிகளையும், தியாகத்தையும் இஸ்லாமியர்கள் செய்தார்கள். கப்பல் வாங்க காசு கொடுத்தார்கள். INA இந்திய தேசிய ராணுவம் அமைக்க சுபாஷ் சந்திர போஸூக்கு தன் சொத்தையெல்லாம் எழுதிதந்தார்கள். விளம்பரங்கள் செய்யாமல் ரகசியமாக செய்த காரணத்தால் முஸ்லிம்கள் எல்லாம் இன்றைக்கு தேசதுரோகிகள் ஆகி விட்டோம். ஆனால் போஸ்ட் ஆபிஸ் வாசலில் நின்று போஸ்ட் பாக்ஸில் தீயை அள்ளிப்போடும் போது அதை பராக்கு பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் தியாகி ஆகிவிட்டார்கள் என்று நேற்று ஒரு சகோதரர் எழுதியிருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

சென்னையில் இப்போதும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தன்னுடைய முழு சக்தியையும் திரட்டி முழுவீச்சில் களப்பணியில் ஈடுபட்டு வருகிறது.

எந்த ஒரு காரியமும் சரியான திட்டமிடல் மூலமே சாத்தியமாகும் என்பதற்கு சிறந்த உதாரணம் தவ்ஹீத் ஜமாஅத். நிவாரணப் பணி திட்டமிடுதலை மிகச்சிறப்பாக அமைத்துக் கொண்டார்கள். பாதிக்கப்பட்ட மூன்று மாவட்ட நிர்வாகிகளையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி நிவாரணக் களம் துல்லியமாக திட்டமிடப்பட்டது.

முதலில் ஒரு பிரிவினர் தத்தளிக்கும் மக்களைக் காப்பாற்ற வேண்டும். அதேநேரத்தில் ஒரு பிரிவினர் அவர்களுக்கு உணவு மற்றும் தேவைகளை செய்து தரவேண்டும். இது முதல் கட்டப்பணி. இரண்டாம் கட்டப் பணி ஒரு பிரிவினர் கழிவுகளையும் குப்பைகளையும் அகற்ற வேண்டும். ஒரு பிரிவினர் மருத்துவ சேவையை மேற்கொள்ள வேண்டும். இந்த திட்டமிடலே தவ்ஹீத் ஜமாஅத்தின் களப்பணியை வெற்றிகரமாக அமைத்தது.

இதுபோல ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி களப்பணியார்களை வகைப்படுத்தி முதல் 4 நாட்கள் தங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்று களமிறங்கிய வேறு அமைப்புகளையோ, கட்சிகளையோ, இயக்கங்களையோ இந்த வசைபாடும் வசவாளர்கள் காட்டமுடியுமா?

அடுத்து, எங்கு பார்த்தாலும் முஸ்லிம்கள் போட்டோவை போட்டு விளம்பரப்படுத்துகிறார்கள். ஆனால் நாங்கள் விளம்பரம் செய்து கொள்ளவில்லை, வலது கை கொடுப்பது இடது கைக்கே தெரியாத மாதிரி இவர்கள் உதவினார்களாம். வலது கையே எதுவும் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. முதல் கட்ட நிவாரணப் பணியில் இஸ்லாமியர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து பலரை மீட்டதாக நாங்கள் சொல்லவில்லை அனைத்து பத்திரிகைகளும் படங்களோடு சொல்கின்றன. உதாரணம் சகோ.யூனுஸ் சம்பவம். அதேபோல இறந்து போன உடல்களை அவ்வளவு மோசமான வெள்ளத்தில் நீந்திச் சென்று மீட்டது யார்?

தமுமுகவைச் சேர்ந்த சகோதரர்களும், தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த சகோதரர்களும் என்று நாங்கள் சொல்லவில்லை, இந்த வார ஜூனியர் விகடன் சொல்கின்றது, தட்ஸ் தமிழ் ஒன் இந்தியா இணையதளம் சொல்கிறது, தினகரன் பத்திரிகை சொல்கிறது, பாலிமர் செய்திகள் சொல்கிறது, சத்தியம் செய்திகள், நியூஸ் 7 செய்திகள் சொல்கிறது.
முஸ்லிம்கள் போட்டோ போடுகிறார்கள், முஸ்லிம்கள் விளம்பரம் செய்து கொள்கிறார்கள் என வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறும் பிரிவினைவாதிகள் அதற்கு போட்டியாக நீங்களும் கழுத்தளவு வெள்ளத்தில் நீந்திச் சென்று மக்களை மீட்டது, இறந்து போன உடல்களை மீட்டது, தத்தளித்த மக்களுக்கு நீந்திச் சென்று உணவளித்தது, கர்ப்பினிப்பெண்களைக் காப்பாற்றியது போன்ற படங்கள் இருந்தால் நீங்களும் போடுங்களேன் நாங்களும் பார்க்கிறோம்? சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.

தண்ணீர் வற்றிய பிறகு கரண்டைக்கால் அளவு கிடக்கும் தண்ணீரில் கழுத்தில் ஸ்டெத்தை மாட்டிக் கொண்டு காளியாத்தா போல வந்து போட்டோவுக்கு தரிசனம் கொடுத்ததை நாங்கள் ஏதும் விமர்சனம் செய்தோமா? அல்லது அடைத்து வைக்கப்பட்ட அறைக்குள் அட்டைப் பெட்டியைத் தூக்கி தோளில் வைத்துக் கொண்டு கண்டெய்னரில் நிவாரணப் பொருட்கள் ஏற்றும் எங்களின் தேசிய தலைவர் என்று படம் போட்டீர்களே! அதை நாங்கள் விமர்சனம் செய்தோமா? நிவாரண முகாம்களுக்கு தமுமுகவினர் ஒப்படைத்த பொருட்களை அடுக்கி வைத்து அதன்பின்னால் சேவா பாரதி பேனரைக் கட்டி போட்டோ எடுத்து இதோ நிவாரண பொருட்கள் என்று படம் போட்டதை நாங்கள் ஏதும் விமர்சனம் செய்தோமா? 4000 ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் களத்தில் என்று ஒரு அப்பட்டமான செய்தியைப் போட்ட தினமலரை நாங்கள் ஏதும் ஏளனம் செய்தோமா? ஆந்திர வெள்ளத்தில் ஆர்.எஸ்.எஸ் வழங்கிய நிவாரண உதவிகளை சென்னை வெள்ளத்துக்கு வழங்கியது போல படம் போட்டார்களே! அதை நாங்கள் ஏதேனும் குறை சொன்னோமா? கேரள கோவில் திருவிழாவில் பக்தர்களுக்கு உணவு வழங்கிய படத்தை வைத்துக் கொண்டு சேவா பாரதியின் சென்னை சேவை என்று போட்டார்களே! அதில் கேரளப் பெண்மணி இருந்ததால் அந்தப் படமும் மண்ணைக் கவ்வியதே! அதை நாங்கள் ஏதும் கேட்டோமா?

அதிலும் சமூக ஆர்வலர் கிஷோர் சுவாமி அவர்கள் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார் பாருங்கள். ஏதாவது ஒரு பாதிப்பு வந்து விட்டால் நமது வேலை என்ன தெரியுமா? யாருக்கும் உதவி செய்து அதை போட்டோவாகப் போடக்கூடாது. அரசுக்கு உதவியை செய்து விட்டு போர்வையைப் போர்த்திக் கொண்டு வீட்டிற்குள் படுத்து விட வேண்டுமாம். இது எப்படி உள்ளதென்றால் உன் வீட்டுப் பெண்களை எவனாவது மானபங்கம் செய்ய வந்தால் நீ அவர்களைத் தடுக்கக் கூடாது, உடனே காவல் நிலையத்திற்கு சென்று அங்கே புகார் அளித்து அவர்கள் வந்து சமூக விரோதிகளை கைது செய்யும் வரை நீ உக்கார்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்வதற்கும் ஒப்பாகும். இந்த நாட்டில் குடிகாரனுக்கும் பொம்பளைப் பொறிக்கிப்பயலுக்கும் பெயர் சமூக ஆர்வலராம். தொண்டு செய்பவனுக்குப் பெயர் விளம்பர விரும்பியாம்!

எங்களின் வேலையை நாங்கள் பார்க்கின்றோம். நீங்கள் செய்யவில்லை என்று நாங்கள் குறை சொன்னால் தான் அதற்கு நீங்கள் பதில் தரவேண்டுமே தவிர, அய்யய்யோ! அய்யய்யோ! இஸ்லாமியர்கள் போட்டோ போடுகிறார்களே! அய்யய்யோ! இஸ்லாமியர்கள் தங்களை நல்லவன் என்று காட்டுகிறார்களே! என்று ஏன் அலறித்துடிக்கிறீர்கள்? இத்தனை காலமும் நீங்கள் மக்களிடம் போட்டுக் காட்டிய தவறான பிம்பத்தை அந்த மக்களே அடித்து உடைத்து விட்டார்களே இனிமேல் நம் பிரிவினைவாத அரசியல் மக்களிடத்தில் எடுபடாது என்கின்ற பயமா?

நாங்கள் போட்டோ போட்டால் நீங்களும் பதிலுக்கு போட்டோ போடுங்கள். ஆனால் போடுவதற்கு உங்களிடத்தில் போட்டோ இல்லை. இருந்தால் தானே போடுவதற்கு. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைமைக்கு தினம் தினம் மாற்றுமத சகோதரர்கள் நிறைய பேர் வந்து வாழ்த்தும் நன்றியும் சொல்லி வருகிறார்கள். அதை போட்டோ எடுத்து நாங்கள் போடுகிறோம். அதேபோல உங்கள் அலுவலகத்திற்கு வந்து உங்களின் சேவைகளுக்கு நன்றி சொன்னவர்கள் இருந்தால் அதை நீங்கள் போடுங்கள். போட்டோ இருக்கிறதா?

போட்டோ ஏன் போடுகிறீர்கள்? போட்டோ ஏன் போடுகிறீர்கள்? விளம்பரம் ஏன் செய்கிறீர்கள்? என்று கூச்சல் போடுபவர்களே! தவ்ஹீத் ஜமாஅத்தின் அசராத இடைவிடாத கூச்சப்படாத எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத சேவையைப் பாராட்டி தங்களின் பொருளாதாரத்தை அள்ளித்தந்த அமலநாதன், ராஜகுமார், ரோஸ்வினி, செந்தில் உள்ளிட்ட இன்னும் ஏராளமான மாற்றுமதச் சகோதரர்களின் பணம் சரியாக மக்களிடம் போய்ச் சேர்ந்ததா இல்லையா என்பதை வெளிப்படுத்த நாங்கள் போட்டோ போட்டுத்தான் ஆகவேண்டும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எந்த விதமான வெளிநாட்டு அரசாங்கத்திடம் நிதி உதவி வாங்கும் அமைப்பு கிடையாது. அதுபோல உள்ளூர் அரசாங்கத்திடமும் பெரிய பெரிய டிரஸ்டிகளிடமும் பணத்தை வாங்கி அதில் பொது சேவை செய்யும் அமைப்பு கிடையாது. பொதுமக்களிடம் துண்டு ஏந்தி பத்து ரூபாய் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்த காசுகள் தான் நிவாரணத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. தனியார் அமைப்புகளிடமும் வெளிநாட்டு அரசிடமும் காசுகள் வாங்கினால் ஏதோ கடமைக்கு லெட்ஜர் தயார் செய்து 10 பக்கத்துக்கு பிரிண்ட் செய்யப்பட்ட கணக்கை காட்டி விடாலாம். ஆனால் இது பொதுமக்களிடம் வசூல் செய்யப்படும் பணம். அவர்களிடம் வாங்கிய பணத்திற்கு நாங்கள் செய்யும் நிவாரண உதவிகளை படமெடுத்து போட்டால் மட்டுமே அதற்கான அத்தாட்சிகளை மக்கள் அறிந்து கொள்வார்கள்.

அதெல்லாம் போகட்டும். தூய்மை இந்தியா என்ற பெயரில் குப்பைகளை பையில் கொண்டுவந்து ஓரிடத்தில் தூவிவிட்டு தெருத்தெருவாய் கூட்டுவது பொதுநலத்தொண்டு, ஊரார் தெரிந்து கொள்ள படம் பிடிப்பார் சுயநலமுண்டு என்ற பாணியில் எல்லோரும் வந்து தூய்மை இந்தியாவை கூட்டிவிட்டு விதவிதமாய் போட்டோ எடுத்து அதை பல பக்கமும் பல நாட்கள் பரப்பினீர்களே! அந்தப் பக்கம் ஒருத்தர் எந்நேரமும் கேமிராவைப் பார்த்து விதவிதமான போட்டோக்களை எடுத்து தள்ளி வருகிறாரே! அப்போதெல்லாம் அதை கேள்வி கேட்காதவர்கள், இஸ்லாமியர்கள் உண்மையாக உயிர் கொடுத்து நிவாரணப் பணிகள் செய்து விட்டு நானும் களத்தில் இருக்கிறேன் என்று பெருமையாக புகைப்படம் எடுத்து போடும் போது மட்டும் உங்களுக்கு புகை வருகிறதே!

ஆக எங்களின் சகோதரச் சமுதாயம் எங்களைப் புரிந்து கொண்டது. நமக்கு ஒன்னுன்னா இஸ்லாமியன்தான் வருவான். நம்முடைய பாதுகாவலன் என்று சொல்லிவிட்டது பிரச்சினை வந்ததும் பாதாளக்கிட்டங்கியில் பதுங்கிக் கொண்டு ஸ்டேட்டஸ் போடுபவன் வரமாட்டான் என்பதை எங்களின் தொப்புள் கொடி உறவுகள் புரிந்து கொண்டார்கள். இதற்கு மேல் வேறேந்த பிரதிபலனும் எங்களுக்கு வேண்டாம் எங்களின் இறைவன் தருவதைத் தவிர.

https://www.facebook.com/permalink.php?story_fbid=545524115604405&id=100004404646040

Monday, December 14, 2015

அஷ்டமி, நவமி என்றால் என்ன?

ஒரு மாதத்திற்கு அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள். நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள். 

பெயர் தமிழில் வைத்திருந்தால் விளங்கும். சமஸ்கிருதம் ஆதிக்கத்தில் இருந்தபோது
தமிழ் வருடங்களின் பெயரை கூட பொருள் தெரியாத வடமொழியில் அல்லவா வைத்து விட்டார்கள்..? நாமும் அதை மாற்ற மனமின்றி வைத்துக் கொண்டு திண்டாடுகிறோம். அதே போல் தான் நாட்களின் பெயர்களும் பின்வருமாறு வடமொழியில் உள்ளன..
  1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் (பிரதமை பிரதமர் என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்)
  2. துவிதை என்றால் இரண்டாம் நாள் (தோ என்றால் இரண்டு. துவிச் சகர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்)
  3. திரிதியை என்றால் மூன்றாம் நாள் (திரி என்றால் மூன்று அல்லவா?)
  4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள் (சதுரம் நான்கு பக்கங்கள் கொண் டது)
  5. பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் (பாஞ்ச் என்றால் அய்ந்து எனப் பொருள்)
  6. சஷ்டி என்றால் ஆறாம் நாள் 
  7. சப்தமி என்றால் ஏழாம் நாள் (சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா?)
  8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள் (அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம்)
  9. நவமி என்றால் ஒன்பதாம் நாள் (நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்)
  10. தசமி என்றால் பத்தாம் நாள் (தஸ் என்றால் பத்து அல்லவா? தாரம் என்ற கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம்)
  11. ஏகாதசி என்றால் பதினொன்றாம் நாள் (ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று)
  12. துவாதசி என்றால் பன்னிரண்டாம் நாள் (தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து, எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்)
  13. திரியோதசி என்றால் பதிமூன்றாம் நாள் (திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று.
  14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் (சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்)

சதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்லது அமாவாசை ஆகி விடும். இப்படி நாட்களைக் சுட்டிக் காட்ட வைத்த பெயர்களில் என்ன வேறுபாடு இருக்கிறது?  

அமாவாசை அல்லது பவுர்ணமிக்குப் பிறகு வரும் எட்டாம் நாளும், ஒன்பதாம் நாளும் கெட்டவை என்பதற்கு ஏதேனும் அறிவியல் பூர்வமான விளக்கம் இருக்கிறதா என்றால் இல்லை.

Tuesday, December 8, 2015

மஞ்சள் காமாலையும் மஞ்சள் பத்திரிகைகளும்

மஞ்சள் காமாலையும் மஞ்சள் பத்திரிகைகளும் தவிர்க்க வேண்டிய மரணங்களும்:

உங்கள் கணினி திரையில் ஒன்றும் தெரியவில்லை என்று வைத்துக் கொள்வோம். (நோய்க்குறி). இது பல காரணங்களினால் (நோய்கள்) வரலாம்.

  1. திரையில் தவறு / கோளாறு / பிரச்சனை 
  2. திரைக்கும் கணினிக்கும் இடையில் இணைக்கும் கம்பியில் (கேபிள்) தவறு / கோளாறு / பிரச்சனை 
  3. கணினியில் தவறு / கோளாறு / பிரச்சனை