Tuesday, December 27, 2022

இந்துத்துவவாதிகள் ஏன் வால்மிகி ராமாயணத்தை ஏற்ப்பதில்லை ??

#இந்துத்துவவாதிகள் ஏன் #வால்மிகி_ராமாயனத்தை_ஏற்ப்பதில்லை ??

வால்மிகிக்கு பின் 2000 ஆண்டுகள் கழித்து cutting, fitting செய்த #ராமாயனத்தை_ஏற்கிறார்கள் ??

வால்மிகி ராமாயனத்தில் கூறப்பட்ட விசயங்கள் வருமாறு . . .

1. ராமன் ஒரு மது பிரியன்.
2 . ராமன் காட்டு விலங்குகளை வேட்டையாடி இறைச்சி உண்டான்.
3. ராமனுக்கு சீதையுடன் சேர்த்து சில மணைவிகளும், பல வைப்பு பெண்களும் இருந்தனர்.

4. ராமன் ஒரு அரசனுக்கு பிறந்து அரசனானவன் மட்டுமே ஒழிய கடவுள் அவதாரம் இல்லை.
5. ராமனின் மணைவியான சீதை அவனுக்கு தங்கை முறை.
6. ராமன் இலங்கையில் அசோக வணத்தில் சீதையை சந்தித்தபோது, மது அறுந்திக்கொண்டு 3 பெண்களின் மடியில் படுத்துக்கொண்டு ஆடினான்.

7. சீதை ராமனுடனான உறவில் திருப்தியின்றி இருந்தாள்
8. தெரிந்தே தான் ராமன் போட்ட கோட்டை தாண்டினாள்
9. ராவணனின் அழகில் மயங்கினாள்
10. விருப்பபட்டே ராவணனுடன் லங்கை சென்றாள்.
11. அனுமன் லங்கை வந்தபோது வருத்தமடைந்தாள்.

12. ராவணன் ராமனை விட பன்மடங்கு அழகானவன்.
13. அதிகம் படித்ததோடு, அமைதி குணம் கொச்டவன்.
14. சீதையை கடத்தி வர சென்ற போதிலும், காட்டில் அவள் அழகை பார்த்து காதல் கொண்டான்.
15. சீதையின் விருப்பத்தோடே அவளை லங்கை அழைத்து சென்றான்.

16. ராமன் சீதையை நடத்தியதை விட மிக கன்னியமாக ராவணன் நடத்தினான்.
17.ராவணனின் பத்து தலைகள் என்பது அவனது அறவாற்றலை உவமைப்படுத்தவே.
18. ராவணன் ஜாதி கட்டமைப்புகளை (வர்ணாசிரமத்தை) எதிர்த்த ஒரு சிவ பக்தனாக இருந்தான்.

19. ராவணன் ஆட்சியில், லங்கை அழகிலும் வளத்திலும் திலைத்திருந்ததனால், பொறாமையுடன் தீயிட்டு கொளுத்தப்பட்டது.
20. ராவணன் மீது சீதைக்கு காதல் இருந்ததால், சீதையை தீயில் இறங்கி கற்பை நிறுபிக்க சொன்னான்.

****** #கம்பராமாயனம், துளசிதாஸ் ராமாயனம், பௌத்த ராமாயனம், ஆதியாத்ம ராமாயனம், வைசித ராமாயனம், ஆணந்த ராமாயனம், அகத்திய ராமாயனம், அத்புத ராமாயனம், ரங்கநாத ராமாயனம், குமுன்டெண்டு ராமாயனம், கொத்த ராமாயனம், கிரித்திவாசி ராமாயனம், கன்னாச ராமாயனம், டன்டி ராமயனம், பவர்த்த ராமாயனம், மந்தனி ராமாயனம் . . . .

இவைகள் எல்லாம் 12 ம் நூற்றாண்டுக்கு பின் திரித்து, புதுப்பித்து எழுதப்பட்டவை !!!

original version என்பது 5 ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட #வால்மிகி_ராமாயனம்" தான் !!!

அதை படித்தால் . . .

 ராவணன் நல்லவனாகவும், ராமன் அயோக்கியனாகவும், சீதை பாவப்பட்ட பெண்ணாகவும் உணரப்படும் !!!

Sunday, November 13, 2022

பெரியார் திருமணம்

ஆறுமுகம் பேச்சியப்பன்

மகள் வயதுடைய பெண்ணை பெரியார் 70 வயதில் திருமணம் செய்து கொண்டது ஏன்? மகளாய்த் தத்தெடுக்காமல் ஏன் திருமணம்?

முதலில் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் அன்றைய இந்துத் திருமணச் சட்டப்படி ஒருவரைத் தத்தெடுக்க, தத்து எடுப்பவரும், எடுக்கப்படுபவரும் ஒரே சாதியாய் இருக்க வேண்டும். இல்லையெனில் சட்டப்படித் தத்தெடுக்க முடியாது. இது அம்பத்கரின் இந்து சட்டத் திருத்தங்கள் 1956-ல் அமலுக்கு வந்த பின்னே இந்த விதி நீக்கப்பட்டது.

பெரியாரை விமர்சிக்க ஏதும் காரணம் கிடைக்காத போது சிலர் அவரின் தனிப்பட்ட வாழ்வை/மணியம்மையார் திருமணம் குறித்தே விமர்சிப்பர். பெரியார்-மணியம்மை திருமணம் 9.7.1949 அன்று பதிவு செய்யப்பட்டது. அப்போது பெரியாருக்கு வயது 70;
(பிறப்பு:17.09.1879) 
மணியம்மையின் வயது 32
(பிறப்பு :10.03.1917) 
இத்திருமணம் மணியம்மையாரின் சொந்த விருப்பத்தின் பேரில் சுயமாய்ச் சிந்தித்து, விரும்பி எடுக்கப்பட்ட முடிவே. இதில் யாருடையக் கட்டாயமும் இருக்க வில்லை. 

பெரியாரிடம் வருவதற்கு முன்பே மணியம்மையார் தன் வீட்டில் தனக்குத் திருமணமே வேண்டாம் என்று முடிவுடன்தான் இருந்திருக்கிறார். பெரியாரிடம் வந்து சேர்ந்தப் பின்பும் அவருக்கு மணம் முடிக்க முயற்சிகள் செய்யப்பட்ட போது இயக்கப் பணியே வேண்டும் திருமணம் வேண்டாம் என்ற முடிவையே முன் வைத்தார்.

பழைய இந்துச் சட்டத்தின் படி பெண் மகள்களுக்குச் சட்டப்படிச் சொத்துரிமை இல்லை. 1956-க்கு முன் பழைய இந்து சட்டத்தின் படி பெண்ணுக்குத் தகப்பன் வீட்டில் தங்கும் உரிமை + சீதனம் மட்டுமே !. எனவே மணியம்மையை மகளாய்த் தத்தெடுத்தாலும் பெரியாரின் எண்ணம் நிறைவேற வாய்ப்பில்லை. பெரியார் 28.6.1949 அன்று திராவிடர் கழகத்தின் சொத்துக்கள் பற்றி ஒரு அறிக்கை எழுதுகிறார். 

"எனக்கும், எனது பொருளுக்கும் சட்டப்படியான  வாரிசாக ஒருவரை ஏற்படுத்தி கொள்ள வேண்டியது அவசியமும், அவசரமுமாகையால் நான் 5,6 வருஷ காலமாகப் பழகி நம்பிக்கைக் கொண்டதும், என் நலத்திலும், இயக்க நலத்திலும் பற்றும், கவலையும் கொண்டு நடந்தது வந்திருக்கிறதுமான மணியம்மையை எப்பிடியாவது வாரிசுரிமையாக ஆக்கிக் கொண்டு அந்த உரிமையையும், தனிப்பட்டத் தன்மையையும் சேர்த்து மற்றும் 4,5 பேர்களையும் சேர்த்து  இயக்க நடப்புக்கும், பொருள் பாதுக்காப்புக்  குமாகச் சேர்த்து ஒரு ட்ரஸ்ட்டு பத்திரம்  எழுத ஏற்பாடு செய்திருக்கிறேன். அப்பத்திரமும்  எழுதப்பட்டு வருகிறது." 
(28.6.1949  - விடுதலை) 
ஆக, மணியம்மையை சட்டப்படி  வாரிசாக்க மட்டுமே பெரியார் முடிவு செய்கிறார். இந்தத் திருமணம் ஒரு சட்டப் பாதுக்காப்பு மட்டுமே   என்பதைத்  தெளிவாகக் காட்டுகிறார். 
     "மணியம்மை வாரிசு என்பது, டிரஸ்ட்டு சம்பந்த உரிமை   என்பதும், மணியம்மைக்கு சுதந்திர பாத்தியமுடையதல்ல. பரம்பரை பாத்தியமுடையதுமல்ல! ஆதனால்  இந்தத் திருமணம், பொருத்தத்தை அல்லது  மணியம்மையை ஏமாற்றும் திருமணமும் அல்ல. ஏன் ? பொருந்தாதத் திருமணமும் அல்ல, மணியம்மை உள்பட யாருக்கும் எந்தவிதமான  நிர்பந்தமோ, அவருக்கு இஷ்டமில்லாத துன்பங்களைச் சகித்துக் கொண்டிருக்க வேண்டிய அதாவது வாழ்நாள் அடிமைத்தன்மைக்கு ஆளானதோ ஆனத் திருமணம் அல்ல." 
(7.7. 1949 - விடுதலை) 

இதிலிருந்து பெரியார் மணியம்மைக்கு இயக்கத்தைத் தாரை வார்க்கவில்லை என்பது நன்கு தெரிகிறது. அன்றைய/இன்றைய  விமர்சனங்கள் மணியம்மையைத் தலைவராக ஏற்கவேண்டி வரும் என்றும் பெரியார் மணியம்மையைத்  தவிர வேறு யாரையும் நம்பவில்லை என்று புகார் கூறினார். பெரியார் எந்த இடத்திலும் மணியம்மையாரை இயக்கத் தலைமைக்குக் கொண்டு வருவதாகச் சொல்லவில்லை.அத்தோடு அவர் மணியம்மை + 4/5 பேர் கொண்டு குழுவை டிரஸ்ட்டாக அமைப்பது பற்றியே சொல்கிறார். வேறு யாரையும் நம்பாதவர் எப்படி இதைச் செய்ய முடியும்? அத்தோடு பெரியார்-மணியம்மை திருமணம் என்ற தலைப்பில் 16.7.1949 அன்று குடி அரசில் எழுதிய அறிக்கையில் பெரியார் கூறுகிறார், " பெரியார் தலைமைப் பதவியை மனியம்மைக்குச் சூட்டுவதற்கு மணியம்மையை   மனைவியாகவோ, வாரிசாகவோ பெற வேண்டிய அவசியம் என்ன?" 

(16.7.1949 - குடி அரசு)

அன்று பெரியாருடன் இருந்தவர்களில் ஒருவரான 
தி.பொ.வேதாசலம் பெரியாரின் திருமணம் பற்றிக் கூறுவது இந்தக் கேள்விக்கு ஒரு நல்ல பதிலைத் தரும். 

"ஒரு மனிதன் எதற்காக மணம் செய்கிறான்?
1. தனக்கு வாழ்க்கைத் துணைவியைத் தேடிக் கொள்ளவும், மற்ற உதவிகள் புரியவும்,
2. பிள்ளைப் பேறு கருதி,
3. தன் காம இச்சைக்கு உதவியாக 

மேற்சொன்ன காரணங்கள் பெரியார் செய்து கொள்ளும் திருமனத்திற்குக் கொஞ்சமும் பொருந்தாது. மணியம்மை கடந்த 6 வருடங்களாக உணவு சமைத்தும், மற்ற பணிகள் ஆற்றியும் வருகிறார். பிள்ளைப் பேறு கருதியிருக்க முடியாது. காம இச்சைக்கு மணப் பதிவு முக்கியமல்ல. "

(9.7.1949 - விடுதலை) 

நாகம்மையார் மறைந்தது 1933-ல். அப்போது பெரியார்க்கு வயது 55. அப்போதே பெரியாரை இன்னொரு திருமணம் செய்து கொள்ளச் சொல்லி அவரின் தாயார் உட்படப் பலரும் வலியிறுத்தினர். பெரியார் அதை மறுத்துவிட்டார். தன் வாழ்நாள் முழுவதும் சமூக நீதி காணத் தொண்டு செய்ய அதுத் தடையாய் இருக்குமென எண்ணினார். பெரியார் அதைக் கேட்டு திருமணம் செய்திருந்தாலோ, மணியம்மை அப்போதே இருந்து பெரியாரை  திருமணம் செய்து இருந்தால் இத்தனை விமர்சனம் வந்திருக்காது. வேதாசலம் கூறுவது போல இது வெறும் உடல் இச்சையைத் தணிக்கச் செய்தத் திருமணமும் அல்ல. அந்நாளைய பெரிய மனிதர்கள் மத்தியில் பலதாரமணம் பெரிய விசயமே இல்லை. அத்தோடு மணியம்மையாரே பெரியாருடன் தனிப் பயணங்கள் பல சென்றிருக்கிறார். அது பற்றிய அறிக்கைகள் விடுதலையில் காணக் கிடைக்கிறது. 
எப்படிப் பார்த்தாலும் இது உடல் இச்சையைத் தீர்க்கும் திருமணம் இல்லை என்பதும், மணியம்மையார்க்கு இயக்கத்தைக் கொடுக்கவில்லை என்பதும், பெரியாரின் சொத்துக்களை, இன்னபிற விசயங்களை சட்டப்படிப் பாதுக்காக்க ஒரு வாரிசு ஏற்படுத்த மட்டுமே என்பது உறுதியாகிறது.

இதைத் தொடர்ந்து அறிஞர் அண்ணா தலைமையில் பலர் கழகத்தை விட்டு வெளியேறி தி.மு.க கண்டது வரலாறு. 

பின்னர் ஒருநாள் க.அன்பழகன் அவர்கள் மணியம்மையார் முன்னிலையில் ஒரு கூட்டத்தில் பேசும் போது,
 " நாங்கள் கட்சி அரசியலுக்கு வர விரும்பினோம். அதை பெரியார்-மணியம்மை திருமணத்தை ஒரு சாக்காகக் காட்டி வெளியேறினோம்" 
என்று உண்மையைப் போட்டு உடைத்தார். 

1967 தேர்தல்  வெற்றிக்குப் பிறகு பெரியாரைச் சந்தித்த அண்ணா மணியம்மையாரை விமர்சித்தற்கு மன்னிப்புக் கேட்டு அவரின் அருந்தொண்டை பாராட்டினார். பெரியாரின் நீண்ட ஆயுளுக்கு   
மணியம்மையாரின் தொண்டே காரணம்  என்றார்.

மணியம்மையார் குறித்து புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் குயில் இதழில் எழுதிய தலையங்கமே மணியம்மையாரின் தொண்டுக்குச் சாட்சி. 

"பெரியார் செத்துக் கொண்டிருந்தார். தமிழர் அழுது கொண்டிருந்தார்கள். ஆனால், பெரியாரின் உடம்பை விட்டுப் பிரிந்து போக மூட்டை முடிச்சுகளுடன் காத்திருந்த உயிரைப் போகாதே என்று பிடித்து இழுத்து வைத்துக் கொண்டிருந்தவை இரண்டு. ஒன்று அவரின் பெருந்தொண்டு; மக்கள் மீது அவர் வைத்திருந்த அருள் மற்றொன்று.
ஆயினும்,
காற்றிறங்கிய பொதிமாடு போல் பெருத்துத் தொங்கும் அவர் விதையின் ஒருபால் ஒட்டிய ஆண்குறியினின்று முன்னறிவிப்பு இன்றிப் பெருகும் சிறுநீரை உடனிருந்து கலன் ஏந்திக்காக்கும் ஓர் அருந்தொண்டு, அவர் பெருந்தொண்டால் முடியாது; அவர் மக்கள் மேல் வைத்துள்ள அருளால் முடியாது. பெரியார் வாழட்டும் என்று தன் துடிக்கும் இளமையைப் பெரியார்க்கு ஒப்படைத்த ஒரு பொடிப் பெண்ணை. அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழவல்லோம்?

பெரியார் மேடை மேல் வீற்றிருப்பார். ஓர் இலக்கம் தமிழர் அவரின் தொண்டுக்காக மல்லிகை முதலிய மலர்களாலும் வெட்டிவேர் முதலிய மணப் பொருளாலும் அழகு பெறக்கூடிய மாலை ஒவ்வொன்றாகச் சூட்டிப் பெரியார் எதிரில் இரண்டு வண்டியளவாகக் குவிப்பார்கள்.

அதே நேரத்தில் எல்லாம் உடைய அன்னை மணியம்மையார் ஏதுங்கெட்ட வேலைக்காரிபோல் மேடைக்கு ஏறத்தாழ அரைக்கல் தொலைவில் தனியே உட்கார்ந்து சுவடி விற்றுக் கொண்டிருப்பார்கள்.

ஒரே ஒரு மாலையை எந்துணைவியார்க்குப் போடுங்கள் என்று அந்தப் பாவியாவது சொன்னதில்லை. எம் அன்னையாவது முன்னே குவிந்துள்ள மாலைகளை மூட்டை கட்டுவதன்றி _ அம் மாலைகளில் எல்லாம் மணக்கும் பெரியார் தொண்டை முகர்ந்து முகர்ந்து மகிழ்வதன்றி ஓர் இதழைக் கிள்ளித் தலையில் வைத்தார் என்பதுமில்லை." - 
(‘குயில்’ இதழ், 10.04.1960)

அனைவரையும் சுய மரியாதைத் திருமணம் செய்யச் சொன்ன பெரியார், மணியம்மையாரை பதிவுத் திருமணம் செய்தது ஏன்?

மேலே சொன்னது போல பெரியார் - மணியம்மை திருமணமே ஒரு சட்டப் பாதுக்காப்பிற்குத்தான். 
1967-ல் தி.மு.க தேர்தலில் வெற்றி பெற்ற பின்னரே அண்ணா 
சுய மரியாதைத் திருமணங்களைச் சட்டபூர்வமாக்கினார். அதற்கு முன் வரை இந்துத் திருமணச் சட்டத்தின் படி சுய மரியாதைத் திருமணங்கள் செல்லாது. பெரியார் சட்டப்படி ஒரு வாரிசு அறிவிக்க வேண்டியதிருந்த காரணத்தால், ஞானம் அம்மையார் சாட்சிக் கையெழுத்துப் போட, பதிவாளர் முன்னிலையில் பார்ப்பனச் சடங்கு இன்றி மணியம்மையாரை பதிவுத் திருமணம் செய்து கொண்டார்.

அறைக்குறையாகச் சில புரளிகளை நம்பிப் பெரியார் வெறும் காமத்திற்காகத் தான் தன்னை விட பல வயது குறைந்த இளம் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார் என விமர்சிப்போர் ஒன்றை மட்டும் சிந்தித்துப் பார்க்கவேண்டும். காமத்துக்காக மட்டும் தான்   என்றால் எதற்காக இந்த திருமணத்தை பெரியார் செய்ய வேண்டும் ? யாருக்கும் தெரியாமல் இன்றைய சாமியார்களை போல் பகலுக்கு ஒரு வாழ்க்கை இரவிற்கு ஒரு வாழ்க்கை என வாழ்ந்து யார் விமர்சனத்துக்கும் ஆளாகாமல் இருந்துருக்கலாமே.?
சிந்தித்து தெளிவடையுங்கள்!.

நன்றி  vettri venthan  k

பெரியார்:
பிறப்பு :17.09.1879
இறப்பு :24.12.1973
திருமணம் :09.07.1949. 

மணியம்மை:
இயற்பெயர் : காந்திமதி
பிறப்பு :10.03.1917
தந்தை :கனகசபை
தாய்      :பத்மாவதி
இடம் : வேலூர் , தென்னார்காடு
பதிவுத் திருமணம் :09.07.1949
32 ஆண்டுகள் 4 மாதங்கள்
இறப்பு :16.03.1978


https://www.facebook.com/100012978276863/posts/pfbid08XzrtQMJSm7qZJmoyxiihABiAmU4KgKecDCZuXY5qrXnXFjb85jkuATydJYR311zl/

Friday, September 23, 2022

பயிற்சிபெற்ற தொழில்முறை ஓட்டுனராக இருந்தாலும்

RS பிரபு

ஒட்டன்சத்திரத்தில் இருந்து தாராபுரம் வரும் வழியில் நேற்று நம் வாகனத்துக்கு 30 மீட்டர் முன்பு சென்று கொண்டிருந்த மினிலாரியின் வலதுபுற டயர் வெடித்து, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வலதுபுறம் செல்லத் தொடங்கியது. 60 கி.மீ வேகத்தில் சீராகச்சென்ற  வண்டியை ஓட்டுனர் மிகவும் திறமையாக கையாண்டு கிட்டத்தட்ட நிறுத்திய பின்பும் அதன் தொடர் உந்தம் காரணமாக மெதுவாக கவிழ்ந்து விழுந்தது. 

அந்த ஓட்டுனருக்கு என்ன ஆனதோ என்ற பதைபதைப்பில் ஓடிச்சென்று பார்ப்பதற்குள் அவராகவே மேலே ஏறி வந்தார். எந்த காயமும் இல்லாமல் வெளியே வந்தாலும் மரணபயமும், பதட்டமும் அவரிடம் இருந்தது. குடிக்க தண்ணீர் கொடுத்து சமாதானப்படுத்தியபின் அவர் சொன்ன முதல் வாக்கியம். "நாலு நடையா இந்த ரீபில்ட்டு டயர போட்டுட்டு, கம்பெனி டயர் மாட்டச்சொல்லி அந்த தாயோலிகிட்ட சொன்னேன். கேக்க மாட்டேனுட்டான்".  

டயர் வெடித்து விபத்துக்குள்ளாகும் வாகனங்களை ஆராய்ந்தால் கண்டிப்பாக அது பாடாவதி டயராகத்தான் இருக்கும். ஒருவேளை எதிரில் ஒரு பேருந்து வந்திருந்தால் அது மிகப்பெரிய விபத்தாக இருந்திருக்கும். அங்கிருக்கும் புளியமரத்தில் மோதியிருந்தாலும் ஓட்டுனர் கடுமையாக காயமுற்றிருப்பார். 

தனியார் நிர்வாகம், efficiency, திறமை, உழைப்பு, முதலாளித்துவம், லாபம், சுரண்டல், வர்க்க சிக்கல்கள் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தினால் "நீ கம்யூனிஸ்ட்டா?" என்று அறிவாளித்தனமாக கேட்டு வைப்பார்கள். 

*அதனால் சொல்லவந்ததை சொல்லிவிடுகிறேன்:*

1) நீங்கள் எவ்வளவுதான் பயிற்சிபெற்ற தொழில்முறை ஓட்டுனராக இருந்தாலும், சாலையில் கண்டிப்பாக கவனம் தேவை. 

2) கண்டிப்பாக சீட் பெல்ட் அணியுங்கள். பலத்த காயமென்றாலும் உயிர்பிழைக்க நிறைய வாய்ப்பை அது தரும். பல அனுபவஸ்தர்கள் சொன்ன உண்மை இது.

3) வேகத்தை கட்டுபாட்டுக்குள் வையுங்கள். 80 கி.மீ. மேல் செல்லுமளவுக்கு நமது நெடுஞ்சாலைகளும் தரமானது அல்ல என்பதே உண்மை.

4) வாகனத்தை நல்ல பணிமனையில் விட்டு முறையாக பராமரியுங்கள். வாகன அலங்கார செலவுகளில் சிக்கனம் செய்யலாமே தவிர, Core maintenance என்பதில் compromise செய்யவேண்டாம்.  

5) நல்ல ஓட்டுனரின் முதல் ப்ரேக் என்பது ஆக்சிலரேட்டர்தான். சரியான கணிப்பு பயணத்தை இனிமையாக்குவதோடு எரிபொருளையும் மிச்சபடுத்தும். 

6) நீங்கள் மாதம் 3000 கிலோமீட்டருக்கு குறைவாக வாகனம் ஒட்டுபவரெனில் இரவு 10 முதல் காலை 6 வரை வாகனம் ஓட்டுவதை தவிருங்கள். பேருந்து/ரயில் பயணம் சிறப்பு. வாடகைக்கு எடுத்தாலும் கவனம் தேவை. 

7) குடித்துவிட்டு ஓட்டுவது எவ்வளவு ஆபத்தானதோ அதே அளவுக்கு அக்கம்பத்தில் உள்ள நண்டுசிண்டுகளை தற்காலிக ஓட்டுனராக அமர்த்துவதும் ஆபத்தானது.

8)  எல்லாவற்றுக்கும் மேலாக, சாலை உங்கள் திறமையை காட்டும் இடமன்று. உங்கள் குடும்பம் உங்களை எதிர்பார்ப்பதைப்போல, சாலையில் செல்லும் அனைவருக்கும் கடமைகள் இருக்கிறது. 

Tuesday, September 13, 2022

உலகில் மதங்கள் விகிதாச்சாரம்

சூரியா சேவியர்


உலகில் மதங்கள்

1. கிறித்துவர்கள் : 2.1. பில்லியன் (210 கோடி)
2. இசுலாமியர்கள்: 1.3 பில்லியன் (130 கோடி)
3. நாத்திகர்கள்: 1.1. பில்லியன் (110 கோடி)
4. இந்துக்கள்: 900 மில்லியன் (90 கோடி)
5. சீனாவின் பழைமைவாய்ந்த மதங்கள்: 394 மில்லியன் (39.4 கோடி)

6. புத்தமதம்: 376 மில்லியன் (37.6 கோடி)
7. பிரைமல் இன்டிஜினியஸ்: 300 மில்லியன் (30கோடி)
8. ஆப்பிரிக்காவின் பழைமையான மதங்கள்: 100 மில்லியன் (10 கோடி)
9. சீக்கியர்கள்: 23 மில்லியன் (2.3 கோடி)
10. ஜுக்: 19 மில்லியன் (1.9 கோடி)

11. ஸ்பிரிடிசம்: 15 மில்லியன் (1.5 கோடி)
12. ஜுடாய்சம்: 14 மில்லியன் (1.4 கோடி)
13. பஹாய்: 7 மில்லியன் (70 லட்சம்)
14. ஜைனமதம்: 4.2 மில்லியன் (42 லட்சம்)
15. ஷின்டோ: 4 மில்லியன் (40 லட்சம்)

16. கா டோய்: 4 மில்லியன் (40 லட்சம்)
17. ஜோரோஸ்டிரினிசம்: 2.6 மில்லியன் (26 லட்சம்)
18. டென்ரிக்யோ: 2 மில்லியன் (20 லட்சம்)
19. நியோ-பக்னிசம்: 1 மில்லியன் (10 லட்சம்)
20. யுனிட்ரியன்-யுனிவர்சலிசம்: 8 லட்சம் பேர்
21. ராஸ்டாஃபாரினிசம்: 6 லட்சம் பேர்
22. சயின்டாலஜி: 5 லட்சம் பேர்

இந்த ஆய்வின்படி உலகில் நாத்திகம் பேசுபவர்கள் 110கோடி பேர் உள்ளனர், உலகளவில் மூன்றாவது இடத்தையும் பெற்றுள்ளார்கள் என்பது இதன் மூலம் தெரிய வருகிறது.

நாத்திகர்கள் அனைத்து மதங்களிலும் இருக்கிறார்கள். இந்துக்களை விமர்சனம் செய்பவர்கள்தான் நாத்திகர் என்றில்லை. 
மற்ற மதங்களில் நடைபெறும் மூடநம்பிக்கைகளையும் மற்ற நாட்டினர் விமர்சித்தே வருகிறார்கள் என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.

இந்து மதத்தை மட்டுமே விமர்சிக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். எங்கு எது பெரும்பான்மை மக்களின் வாழ்வியலைத் தீர்மானிக்கிறதோ,
அங்கு அந்த மதம் விமர்சிக்கப்பட்டே வந்துள்ளது.

ஐரோப்பாவில் கிறிஸ்தவமும்,
அரேபியாவில் இஸ்லாமும்,
ஆசியாவில் பௌத்தமும்
விமர்சிக்கப்பட்டே வந்துள்ளது.

எங்கு ஒரு சமூகம், 
அரசையும், மதத்தையும் விமர்சிக்கத் தொடங்குகிறதோ, அச்சமூகம் முன்னேறத் துடிக்கிறது என்று பொருள்.

Saturday, June 4, 2022

இறைச்சி பற்றி இந்து புனித நூற்கள்

நீங்க சிறந்த இந்துவாக இருக்க விரும்பினால்....

டாக்டர் அம்பேத்கரின், ‘Did the Hindus never eat beef?’ நூலிலிருந்து சில பகுதிகள், சுருக்கமான மொழிபெயர்ப்பில்.

"இந்து வேதங்களின்படி, மாட்டிறைச்சியை உண்ணாத ஒருவன் சிறந்த இந்துவாக இருக்க முடியாது!" - விவேகானந்தர் (The Complete Works of Swami Vivekanand, vol.3, p. 536).

"பெண்களின் திருமண வைபவங்களில் பசு மாட்டையும் காளை மாட்டையும் அறுக்க வேண்டும்" - ரிக் வேதம் (10/85/13) 

"இந்திரனுக்கு பிடித்த இறைச்சி பசு, பசுவின் கன்று, குதிரை, எருமை ஆகியவனவாம்". - ரிக் வேதம் (6/17/1)

"பரோபகரம் இடம் ஷரீரம்" என்பது இந்து தர்ம சாஸ்திரத்தின் கூற்றாகும். அதாவது இவ் உடல் இறைவனால் கொடுக்கப்பட்டதே, பிறருக்கு உதவவே! அதன் அடிப்படையில்...

இறைச்சிக்குரிய மிருகங்களை மனிதர்கள் உண்ணுவது பாவமில்லை. உண்ணுபவர்களையும் உணவுகளையும் பிரம்மனே படைத்தான். - மனு ஸ்மிருதி (பாகம் 5 / வசனம் 30)

அறுத்துப் பலியிடும் இறைச்சியை உண்ணாத மனிதன், 21 ஜென்மங்களுக்கு, பலியிடும் விலங்காக உருவெடுப்பான். - மனு ஸ்மிருதி (பாகம் 5 / வசனம் 35)

ஒரு பிராமணர், வழிபாட்டின்போது தனக்குக் கொடுக்கப்பட்ட இறைச்சியை உண்ண மறுத்தால் நரகம் செல்வார்.
வசிஷ்ட முனிவர் (11/34)

விருந்தினர் வந்தால் பசு மாட்டின் இறைச்சி அளிப்போம். - அபஸ்டாம் கிரிசூத்திரம் (1/3/10)

மிக மிருதுவாகவும், சுவையாகவும் இருப்பதால் பசு மாட்டிறைச்சியை உண்கிறேன். - இராமாயணத்தின் மகரிஷி யாக்யவல்க்கியர் (சீதையின் தந்தையின் குரு) சத்பத் பிராமணம் (3/1/2/21)

[சுருக்கமான மொழிபெயர்ப்பு டாக்டர் அம்பேத்கரின், ‘Did the Hindus never eat beef?’ in The Untouchables: Who Were They and Why They Became Untouchables? in Dr. Babasaheb Ambedkar Writings and Speeches, vol. 7, (Government of Maharashtra, Bombay, 1990, first edition 1948) pp. 323-328.]

- *** -

Friday, May 20, 2022

ராஜீவ் கொலை வழக்கில் விடை தெரியாத அந்த 37 மர்மங்கள்!! திமுகவின் K.S.ராதாகிருஷ்ணனின் நெத்தியடி கேள்விகள்....

ராஜீவ் கொலை வழக்கில் விடை தெரியாத அந்த 37 மர்மங்கள்!! திமுகவின் K.S.ராதாகிருஷ்ணனின் நெத்தியடி கேள்விகள்....

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 தமிழர்களையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

இந்த வழக்கில் விடை தெரியாத ஏராளமான கேள்விகள் இருக்கின்றன. இவை தொடர்பாக மூத்த வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த வாழப்பாடி இராமமூர்த்தி அந்த இடத்தில் கூட்டம் நடத்த வேண்டாம் என சொல்லியும்; ஏன் அங்கு கூட்டம் நடத்தப்பட்டது. ஸ்ரீபெரும்புதூருக்கு ராஜீவை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா?

2. புவனேஷ்வர், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் ராஜீவ் பிரச்சாரத்திற்கு சென்றபோது அவருடன் இருந்தவர் பாதுகாப்பு அதிகாரி ஓ.பி.சாகர். ஆனால் அவர் சென்னைக்கு ராஜீவுடன் வரவில்லை ஏன்?

3. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சிப் பத்திரிகையாளர்கள் ராஜீவ் காந்தியின் சுற்றுப் பயணத்தில் உடன் வந்தார்கள். அவர்களுடைய வேலை, ராஜீவ் பிரச்சாரத்தை வீடியோவில் பதிவு செய்வது. ஒரிஸாவிலும், ஆந்திராவிலும் ராஜீவ் செய்த முதல்கட்ட சுற்றுப் பயணத்தில் கலந்துகொண்ட அவர்கள், ராஜீவ் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டங்களுக்கு செல்லவில்லை. அவர்கள் பயணம் செய்த விசேஷ விமானத்தின் பைலட்டுடன் விசாகப்பட்டினத்தில் ஒரு ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். அப்படியானால் அவர்கள் உடன் வந்த காரணம் என்ன?

4. ராஜீவ் கிளம்புகிற விமானத்தில் கோளாறு ஏற்பட்டது. உடனே விமான நிலையத்தில் இருந்த சர்க்யூட் ஹவுசுக்குத் திரும்பினார் ராஜீவ். கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்கிற தகவல் அப்போதைய ஆந்திர முதல்வர் விஜயபாஸ்கர ரெட்டி மூலமாக கிடைத்தவுடன் விமான நிலையம் திரும்பினார் ராஜீவ். இந்தக் குழப்பத்தில் இந்த இரண்டு பல்கேரிய நாட்டு பத்திரிகையாளர்கள், பாதுகாப்பு அதிகாரி சாகரை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு தாமதமாக விமான நிலையத்துக்கு வந்தார்கள். இதனால் ராஜீவுடன் விமானத்தில் பயணம் செய்ய சாகரால் முடியவில்லை. அனுபவம் மிக்க அந்தப் பாதுகாப்பு அதிகாரியை ராஜீவுடன் போகவிடாமல் செய்தது ஏன்?

5. சென்னையில் ராஜீவின் பாதுகாப்பு அதிகாரியாக செல்ல வேண்டிய பி.சி.குப்தா, சென்னை விமான நிலையத்தில் ராஜீவுக்காக காத்திருந்தார். அதே விமானத்தில் வந்திருக்க வேண்டிய சாகரிடமிருந்து கைத்துப்பாக்கியை அவர் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் சாகர் வராததால் கைத்துப்பாக்கி இல்லாமலேயே குப்தா, ராஜீவுடன் செல்ல நேர்ந்தது. இதற்கு ஏதாவது உள்நோக்கம் உண்டா?

6. ராஜீவ் மீனம்பாக்கத்திலிருந்து கிளம்பியவுடன் ராமாவரம் அருகே பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் இரண்டு பெண்கள் அவர் காரில் ஏறினார்கள். அவர்களுடைய அடையாளங்கள் சோதனைக்கு உள்ளானதா? இன்று வரை அவர்களை ஏன் விசேஷப் புலனாய்வுத் துறை விசாரிக்கவில்லை?

7. யார் அந்த பல்கேரியர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்? யார் அந்த இரண்டு அயல்நாட்டு பெண் பத்திரிகையாளர்கள்? அவர்கள் எங்கு சென்றார்கள்?

8. அந்த இரண்டு பத்திரிகையாளர்களும் ராஜீவை பேட்டி கண்டார்கள். ஆனால் தா.பாண்டியனும், மரகதம் சந்திரசேகரும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியாது என்றார்கள். இவர்கள் எதை மறைக்க முயலுகிறார்கள்? ஏன்?

9. மூன்றாவது உலக நாடுகளின் தலைவர்களை அப்புறப்படுத்துவதில் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வுக்கு அதிக அக்கறை உண்டு. அந்த எண்ணம் ராஜீவ் விஷயத்தில் இருந்ததா?

10. தான் கொலை செய்யப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, பாகிஸ்தான் ஜனாதிபதி ஜியா-உல்-ஹக்கை கொன்றது சி.ஐ.ஏ.தான் என்றார் ராஜீவ். அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? அவரை சொல்லத் தூண்டிய காரணம் என்ன? தனக்கெதிராகவும் இப்படி ஒரு திட்டம் இருக்கலாம் என்பது அவருக்கு முன்கூட்டியே தெரியுமா?

11. 1991 ஜுலை மாதம் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான், எல்.டி.டி.ஈ.யைத் தவிர வேறு சில சர்வதேச நிறுவனங்களும், பலம் வாய்ந்த வெளிநாட்டு சக்திகளும் ராஜீவ் கொலையின் பின்னணியில் இருக்கிறார்கள் என்றார். உள்துறை அமைச்சர் அப்படி சொல்லக் காரணம் என்ன என்பதை விசேஷ புலனாய்வுத்துறை ஏன் விசாரிக்கவில்லை?

12. வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?

13. பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத், ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று அன்றைய பிரதமர் சந்திரசேகரிடம் தெரிவித்தார். அவருக்கு இந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது? யார் மூலமாக ராஜீவுக்கு மிரட்டல்? என்பதை ஏன் புலனாய்வுத் துறை விசாரிக்கவில்லை? மேற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் கொலைக்கான திட்டம் தீட்டப்பட்டு இருந்தால் மட்டுமே அரபாத்திற்கு இந்தப் பின்னணி தெரிய வாய்ப்புண்டு!

14. மரகதம் சந்திரசேகர் ராஜீவ் காந்தியுடன் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். அவருடைய மகள் லதா பிரியகுமார் அரக்கோணத்திலிருந்து வந்தார். அவரது மகன் லலித் சந்திரசேகர் மனைவி வினோதினியுடன் எங்கிருந்து வந்தார் என்பதை விளக்கவே இல்லை. வினோதினி இலங்கையைச் சேர்ந்த ஜூனியஸ் ஜெயவர்த்தனாவின் மகள் என்பது தெரிந்தும் அவரை ஏன் விசாரிக்கவில்லை? சம்பவ இடத்தில் அந்தக் குடும்பத்தினர் இருந்தும் அவர்களை ஏன் விசாரிக்கவில்லை?

15. சிவராசனும், தாணுவும் இராஜீவ் வளையத்தில் செல்ல யார் உதவினார்கள் ? என்பது பற்றியும் இதுவரை தெரியவில்லை.

16. சிவராசனின் தாயாரும், வினோதினியின் தந்தையும் சிங்களவர்கள் தான். சம்பவ இடத்தில் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸாவின் தூதுவர்களாக இருக்க வாய்ப்புண்டு. இந்திய அமைதிப்படை விவகாரத்தில் பிரேமதாஸாவுக்கு ராஜீவ் மீது கோபம் உண்டு. அந்தக் கோணத்தில் ஏன் விசாரணை செய்யப்படவில்லை?

17. விடுதலைப் புலிகள், இலங்கை அரசு இரண்டுக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமை உண்டு. இந்திய அமைதிப்படை இலங்கையில் நுழையக் காரணமாக இருந்த ராஜீவ் மீது இரு தரப்பினருக்கும் கோபமுண்டு. இந்த விஷயத்தில் எதிர்தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் விசேஷப் புலனாய்வுத் துறைக்கு ஒரு சவால் விட்டார். வினோதினியின் பூர்வீகம் என்ன? அவரும், அவர் குடும்பத்தினரும் அப்பாவிகள் என்பதை நிரூபித்தால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவருமே தானாகவே தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வார்கள் என்றார். இறுதிவரை அவர் சவால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்படவும் இல்லை.

18. காமினி திசநாயகா, அத்துலத்முதலி, விக்கிரமசிங்கே இவர்கள் எல்லாம் இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள். இவர்கள் கொலை செய்யப்பட்ட போது அந்தப் பழி இலங்கை அதிபர் பிரேமதாஸாவின் மீது சுமத்தப்பட்டது. ராஜீவ் விஷயத்தில் ஏன் அந்தக் கோணத்தில் விசாரணை இல்லை?

19. புலிகளையும், அதன் தலைவர் பிரபாகரனையும் சம்பந்தப்படுத்த என்ன பலத்த ஆதாரம் புலனாய்வுத் துறையிடம் உள்ளது?

20. பொட்டுவும், சிவராசனும் ரேடியோ மூலம் பேசியதை விசேஷப் புலனாய்வுத்துறை கேட்டதாகச் சொல்லப்படுவது ஏன் ஒரு கற்பனையான ஆதாரமாக இருக்கக்கூடாது?

21. பல்வேறு நாட்டு ஆயுத வியாபாரிகள், பிரதமர் என்கிற முறையில் ராஜீவுடன் தொடர்பு வைத்திருந்தார்கள். கூலிப்படைகள் மூலமாக அவர்கள் ஏன் இந்தக் காரியத்தை செய்திருக்கக்கூடாது?

22. சிறப்பு விசாரணைக் குழு அமைத்து சந்திரா சுவாமி, சுப்பிரமணியன் சுவாமி, சந்திரசேகர், ஆயுத விற்பனையாளர் கசோகி ஆகியோரையும் ராஜீவ் கொலை வழக்கில் விசாரிக்க வேண்டும் என ஜெயின் கமிஷன் கூறியுள்ளதே? விசாரணை நடைபெற்றதா? அதன் முடிவு என்ன?

23. அரசாங்கமே ஏதும் ஒரு முடிவுக்கு வராத போது சுப்பிரமணிய சுவாமி மட்டும் விடுதலைப் புலிகள் தான் ராஜிவை கொன்றார்கள் என கூறியதன் மர்மம் என்ன? பல கோணங்களில் விசாரிக்கப்பட வேண்டிய ஒரு கொலைப் பின்னணியை விடுதலைப் புலிகள் கொன்றார்கள் என்ற ஒற்றைக் கோணத்தில் மட்டும் நடத்த வற்புறுத்திய கார்த்திகேயனின் நோக்கம் என்ன?

24. சிறப்பு விசாரணை அதிகாரி ரகோத்தமன் இந்திய புலனாய்வு துறையின் இயக்குனராக இருந்த எம்.கே. நாராயணன் ராஜீவ் கொல்லப்பட்ட அந்த இடத்தில் பிடிக்கப்பட்ட வீடியோ டேப்பை தராமல் மறைக்கிறார் என்ற பகிரங்கக் குற்றச்சாட்டுக்கு பதில் என்ன?

25. திருச்சி வேலுச்சாமி கூற்றுபடி சுப்ரமணியன் சாமி இராஜீவ் படுகொலைக்கு ஒரு சிலநிமிடங்களுக்கு முன்பே இராஜீவ் கொலை செய்யப்பட்டார் என்று கூறியதை பற்றி ஏன் இதுவரை விசாரிக்கவில்லை.

26. ராஜீவ் கொலை வழக்கில் ஜெயின் மற்றும் வர்மா கமிஷன் அரசாங்கத்துக்கு கொடுத்த முக்கியகோப்புகள் அடங்கிய (File No. 1/12014/5/91-IAS/DIII) எங்கே? சந்திரா சாமியின் நெருங்கிய நண்பரும் அன்றைய பிரதம மந்திரியுமான நரசிம்மராவ் அந்த முக்கியக் கோப்புகளை அழித்ததின் மர்மம் என்ன? எந்த முக்கிய நாடுகளையும், நபரையும் காப்பதற்காக அந்த கோப்புகள் அழிக்கப்பட்டது?

27. வாழப்பாடி ஏற்றுக் கொள்ளவில்லை. மூப்பனார் அக்கறை காட்டவில்லை. ஆனால் மரகதம் சந்திரசேகர் மட்டும் டெல்லி சென்று ஏன் ஸ்ரீ பெரும்புதூருக்கு வரவேண்டும் என்று ராஜீவை வற்புறுத்தியது உண்மையா?

28. மறுபடியும் அமைதிப்படை தங்கள் நாட்டில் நுழையலாம் என்கிற எண்ணத்தில் இந்தியாவுக்கு வலுவான தலைவர் இருக்கக் கூடாது என்று இலங்கை அரசு ஏன் நினைத்திருக்கக் கூடாது?

29. விமான நிலையத்தில் ராஜீவை சந்தித்தார் கவிஞர் காசி ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டு வந்த தகவல் என்ன? ஈழ விடுதலைக்கு ராஜீவின் உதவி தேவை” என்று பிரபாகரன் காசி ஆனந்தன் மூலமாக வேண்டுகோள் விடுத்திருந்தால் ஏன் அவரை பிரபாகரன்கொலை செய்ய வேண்டும்?

30. இந்தியா மற்றும் தமிழகத்தில்தான் தனக்கு அனுதாபமும், ஆதரவும் கிடைக்கும் என்பதுபிரபாகரனுக்கு தெரியும். அப்படியிருக்கும்போது இந்த மக்களின் வெறுப்பை சம்பாதிக்கிற தவறைச்செய்து, நாட்டைவிட்டே துரத்தப்பட்டு தடை செய்யப்படுகிற அளவுக்கான முட்டாள் தனத்தையாபிரபாகரன் செய்தார்?

31. லதா கண்ணன், ராஜீவ் காந்தியை நிறுத்தி கவிதை படித்தார். அதுவே பக்கத்திலிருந்த தனு என்கிற மனித வெடிகுண்டு வெடிக்கக் காரணமாக இருந்தது. ஏன் அவர் பெயர் குற்றவாளிப் பட்டியலில்இல்லை? லதா கண்ணனை பயன்படுத்தி தான் தனு உள்ளே வந்தார். இறந்து போன ஹரிபாபு குற்றவாளி என்றால் லதா கண்ணனை ஏன் சேர்க்கவில்லை? இது சம்பந்தப்பட்டவர்கள் மீது புலனாய்வுத் துறைக்கு ஏன் இத்தனை பரிவு?

32. தனு, சுபா, சிவராசன் மூவரையும் ஸ்ரீ பெரும்புதூருக்கு அழைத்து வந்தவர் லதா பிரியகுமார் என்று சொல்லப்பட்டது. குறிப்பாக பெண்கள் பகுதிக்கு அழைத்து வந்து லதா கண்ணனிடம் அவர்களுக்கு உதவும்படி சொன்னார். அவர் மீது ஏன் குற்றம் சுமத்தப்படவில்லை?

33. ராஜீவின் பயணத் திட்டத்தை தீட்டிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மார்கரெட் ஆல்வாவின் வேண்டுகோளுக்கு இணங்க தான் சிவராசனுக்கு பெங்களூரில் வீட்டை வாடகைக்குக் கொடுத்ததாக ரெங்கநாதன் வாக்குமூலம் அளித்தார். இதில் உண்மை உண்டா என்பதை விசாரித்தார்களா?

34. வெளிநாட்டு உளவு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சங்கேத மொழியில் சந்திராசாமி மற்றும் சுப்ரமணியன் சாமியிடம் ராஜீவ் கொலை பற்றி நடத்திய உரையாடல் என்று பதிவு செய்து வைத்திருந்த முக்கிய ஆதாரம் ஒன்று பிரதமர் அலுவலக உயர் அதிகாரி தொலைத்துவிட்டதாக கூறுவது எப்படி?

35. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அந்த இடத்தில் கூட்டம் வேண்டாம் என்று மறுத்த போதும், டெல்லி மேலிடத்தில் இருந்த மார்கிரெட் ஆல்வா அங்கு தான் நடத்தியாக வேண்டும் எனக் கூறியது உண்மையா என்று விசாரிக்கப்பட்டதா?

36. பெல்ட் பாம் (வெடிகுண்டு) தயாரிக்கப்பட்டது எங்கே, யார் தயாரித்தது, என்று இதுவரையில் விசாரிக்கவே இல்லை என சிறப்பு விசாரணை அதிகாரி ரகோத்தமன் தெரிவித்திருக்க வெடிகுண்டுக்கு பயன்படுத்தப்பட்ட பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக சொல்லி பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனை அறிவித்து 22 ஆண்டுகள் சிறையில் அடைத்திருப்பது எதனால்?

37. ராஜீவ் கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக விடை தெரியாத கேள்விகள் இது போன்று பல இருக்க காவல் துறை அதிகாரிகளின் விசாரணையில் ஒப்புக் கொண்டதாக சொல்லி ஒருவருக்கு தூக்கு தண்டனை வழங்குவது உலகில் எந்த நாடுகளின் நீதித்துறையும் பின்பற்றாத ஒரு நடைமுறையை இந்தியாவில் பின்பற்றுவது நியாயத்திற்கும், நேர்மைக்கும் உகந்ததா?

இவ்வாறு கே.எஸ். ராதாகிருஷ்ணன் பதிவு செய்துள்ளார்.

https://www.facebook.com/100004651846188/posts/2227566584075048/

Monday, March 28, 2022

அம்பேத்கர் இராமன் பற்றி..

அம்பேத்கர் இராமன் பற்றி..

அண்ணன் தங்கை உறவுடைய இராமனும் சீதையும் திருமணம் செய்து கொண்டதும் ஆரிய திருமண வழக்கத்திற்கு மாறானதுமல்ல. (ஆரியர்களிடையே அண்ணன் தங்கையை மணந்து கொள்ளும் வழக்கமிருந்தது). ஆயின் இந்தக் கதை உண்மையானால் இராமன், சீதை திருமணம் பிறர் பின்பற்றுவதற்கு தக்கது அல்ல எனலாம். 

இராமன் ஏக பத்தினி விரதன் என்பது ஒரு சிறப்பாக கூறப்படுகின்றது, இத்தகையதொரு அபிப்ராயம் எவ்வாறு பரவியது என்பது புரிந்துகொள்ள முடியாததாகவே உள்ளது, வால்மீகியே கூட தன் இராமாயணத்தில் இராமன் அநேக மனைவியரை மணந்து கொண்டதை குறிப்பிடுகிறார் (அயோத்தியா காண்டம், சருக்கம் 8, சுலோகம் 12). மனைவியர் மட்டுமல்ல வைப்பாட்டியர் பலரையும் இராமன் வைத்திருந்தான்...

இராவணனை நல்லடக்கம் செய்த பின் இராமன் செய்திருக்க வேண்டிய முதற் காரியம் ஓடோடிச் சென்று தன் மனைவி சீதையை சந்தித்திருக்க வேண்டும், அவன் அப்படிச் செய்யவில்லை, 
சீதையை சந்திப்பதைக் காட்டிலும் விபீஷணனை அரியணையிலேற்றுவதிலேயே அவன் அதிக ஆர்வம் காட்டுகிறான். விபீஷணனை ஆட்சியிலமர்த்திய பிறகும் கூட சீதையைக் காண அவனே போகவில்லை. அனுமானைத்தான் அனுப்புகிறான். 

அனுமன் மூலம் அவன் அனுப்பும் சேதிகள் தான் என்ன? 

சீதையை அழைத்து வா என்று அனுமனிடம் சொல்லவில்லை. தாமும் தம் தோழர்களும் சகல நலத்தோடிருப்பதாக சீதைக்கு சொல் என்றுதான் சேதி அனுப்புகிறான். இராமனை சந்திக்க வேண்டுமென்ற பேராவலை சீதைதான் அனுமன் மூலம் சொல்லியனுப்புகிறாள். தன்னுடைய சொந்த மனைவி சீதை. இராவணன் அவளைக் கடத்திக் கொண்டு போய் சிறைப்படுத்தி பத்து மாதங்களுக்கு மேலாகிறது. இருந்தும் தனிமையிலிருந்த சீதையைக் காண இராமன் போகவில்லை..

சீதையை இராமன் முன் கொண்டு வருகிறார்கள். 
அவளைப் பார்த்த போதாவது இராமன் சொன்னதென்ன?.

மனித மனம் படைத்த பாமர மனிதன் கூட துயரம் கவ்விய நிலையிலுள்ள மனைவியிடம் இராமன் சீதையிடம் நடந்து கொண்டதைப் போல நடந்து கொண்டி ருப்பானா என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத நிகழ்ச்சியாய்த் தோன்றுகிறது. இலங்கையில் சிறைப்பட்டிருந்த சீதையை இராமன் நடத்திய முறைமைக்கு வால்மீகி நேரடியாக ஏதும் ஆதாரம் அளிக்கவில்லை எனினும் அடியிற் காணும் பகுதியில் இராமன் தன் மனைவி சீதையிடம் சொல்கிறான்..
(யுத்த காண்டம், சருக்கம் 115, சுலோகம் 1-23) உன்னை சிறைப் பிடித்தானே அந்த எதிரியைக் கடும் போரில் தோற்கடித்து பணயப் பரிசாய் உன்னை மீட்டு வந்துள் ளேன். என் எதிரியை வீழ்த்தி என் மதிப்பைக் காப்பாற்றியுள்ளேன். என் போர்த் திறத்தை மக்கள் கண்டு மெச்சினர். என்னுடைய உழைப்பு பலனளித்திருப்பது எனக்குப் பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இராவணனைக் கொன்றிடவும் அவனால் ஏற்பட்ட அவமானத்தைத் துடைத்திடவுந் தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெருந் தொல்லையை மேற்கொள்ளவில்லை.

இராமன் சீதையிடம் இதைவிடக் கொடுஞ்செயல் வேறு என்ன செய்திருக்க முடியும்? 

இராமன் அதோடு நிற்கவில்லை, சீதையை நோக்கி மேலும் கூறுகிறான், உன் நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். இராவணன் உன்னைக் களங்கப்படுத்தி இருக்க வேண்டும். உன்னைப் பார்க்க எனக்கு பெரும் எரிச்சலூட்டுகிறது. 
ஓ, ஜனகனின் மகளே! உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்ச் சேரலாம். உன்னோடு எனக்கு எந்தத் தொடர்புமில்லை. 
போரிட்டு உன்னை மீண்டும் மீட்டு வந்தேன். 
என்னுடைய நோக்கம் அவ்வளவே! 
உன்னைப் போன்ற அழகிய பெண்ணொருத்தியை இராவணன் சும்மா விட்டிருப்பானா என்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.

இப்படிப்பட்ட இராமனை சீதை அற்பத்தனமானவன் என இகழ்ந்திடுவது இயல்பே. 

தான் கவர்ந்து சென்ற சீதையை இராவணன் களங்கப்படுத்தியிருப்பான் என்ற எண்ணத்தை, சிறைப்பட்டிருந்த வேளையில் தன்னை சந்திக்க வந்த அனுமன் மூலம் சொல்லியனுப்பி, அதன் அடிப்படையில் சீதையைக் கை கழுவி விடுகிறேன் என்று இராமன் புலப்படுத்தி இருந்தால் இவ்வளவு சிரமத்திற்கு இடமிருந்திருக்காது, நானே தற்கொலை செய்து என்னை மாய்த்துக் கொண்டிருப்பேனே என்று சீதை வெளிப்படையாக சொல்கிறாள். இப்படிப்பட்ட இராமனை சீதை அற்பத்தனமானவன் என இகழ்ந்திடுவது இயல்பே.

-புரட்சியாளர் அம்பேத்கர்..
(இராமன் கிருஷ்ணன் ஒரு புதிர் நூல்.)

Monday, March 7, 2022

திமுக-வின் மகளிர் தின வாழ்த்துகள்

மகளிர் கவனத்திற்கு... 

1.உலகத்திலே அனைத்து பெண்களுக்கான வாக்குரிமை முதன் முதல் தமிழக பெண்களுக்கே நீதிகட்சி ஆட்சியில் வழங்கப்பட்டது

2.பெண்களுக்கு சொத்தில் சம உரிமை இந்தியாவிலே முதன் முதலாக தமிழகத்தில் திமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டது.

3.இந்தியாவிலே முதன் முதல் தமிழகத்தில் அரசு பணியில் 30% பெண்களை அமர்த்தியது திமுக ஆட்சி.

4.உள்ளாட்சி துறையில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடை இந்தியாவிலே முதல்முறையாக தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

5.பெண்களுக்கான திருமண உதவி தொகை இந்தியாவிலே முதன் முதல் தமிழ் நாட்டில் திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது.

6.பெண்களுக்கான மகபேறு உதவி தொகை இந்தியாவிலே முதன் முதல் தமிழ் நாட்டில் திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது.

7.பெண்கள் காவல் துறையில் இந்தியாவிலே முதன் முதல் தமிழகத்தில் திமுக ஆட்சியில் அமர்த்தப்பட்டனர்.

8.பெண்களுக்கு இலவசமாக கேஸ் அடுப்பு இந்தியாவிலே முதன் முதல் தமிழகத்தில் திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது.

9.பெண்களுக்கான சுயஉதவி குழுக்களை அமைத்து சுழல் நிதி அளித்து இந்தியாவிலே தமிழகத்தில் திமுக ஆட்சியில் முதலிடம் வகித்தது

10.பெண்களுக்காக தாய் சேய் நலம் மையம் அமைத்தது இந்தியாவிலேயே தமிழகத்தில் திமுக ஆட்சியில் தான்

11.பெண்கள்  இந்து அறநிலைத்துறையில் இந்தியாவிலேயே முதன் முதல் தமிழகத்தில் திமுக ஆட்சியில் அமர்த்தப்பட்டனர்.

12.கைம்பெண்களுக்கு இலவச தையல் மிஷின் இந்தியாவிலேயே தமிழகத்தில் திமுக ஆட்சியில் வழங்கப்பட்டது.

13.திருமணமாகாத பெண்களுக்கு இந்தியாவிலேயே முதன் முதல் தமிழகத்தில் திமுக ஆட்சியில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

14.பெண்களுக்கான முதியோர் ஊக்கத்தொகை இந்தியாவிலேயே முதன் முதல் தமிழகத்தில் திமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டது.

15.பெண்களையும் அர்ச்சகராக நியமித்து இந்தியாவிலே முதன் முதல் தமிழகத்தில் திமுக ஆட்சியில் அரசானை பிறப்பிக்கப்பட்டது.

16.கைம்பெண்களுக்கு அரசு தேர்வில் உள்ஒதுக்கீடு வழங்கி இந்தியாவிலேயே முதன் முதல் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சலுகை அளிக்கப்பட்டது.

17. மகளிர்க்கு பேருந்துகளில் கட்டணம் இல்லா பயணம் திட்டம் கொண்டு வந்தது திமுக ஆட்சி தான்.

18. உள்ளாட்சியில் மகளிர்க்கு 50% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தி 21 நகராட்சியில் 11 நகராட்சிக்கு மகளிரை மேயராக்கியது திமுக ஆட்சி தான். 

மகளிர் தின வாழ்த்துகள்.

Tuesday, February 1, 2022

நான் ஏன் இந்து மதத்தை வெறுக்கிறேன்?

நான் ஏன் இந்து மதத்தை வெறுக்கிறேன்? 
ஏனெனில்

1) அதுதான் என்னை கீழ்ஜாதி என்றது
2) அதுதான் என்னை சூத்திரன் என்றது
3) அதுதான் என்னை வேசிமகன் என்றது
4) அதுதான் என் தாயை வேசி என்றது
5) அதுதான் என்னைப் பஞ்சமன் என்றது
6) அதுதான் என்னை தீண்டத்தகாதவன் என்றது
7) அதுதான் என்னை தொட்டால் தீட்டு என்றது
😎 அதுதான் என்னை பார்த்தால் பாவம் என்றது
9) அதுதான் என்னை நிழல் பட்டால் தோஷம் என்றது
10) அதுதான் என்னை காலில் செருப்புப்போடாதே என்றது
11) அதுதான் என்னை தோளில் துண்டுபோடாதே என்றது
12) அதுதான் என்னை வீதியிலே நடக்காதே என்றது
13) அதுதான் என்னை கோயிலுக்குள் நுழையாதே என்றது
14) அதுதான் என்னை கடவுளை வணங்காதே என்றது
15) அதுதான் என்னை கடவுளைத் தொடாதே என்றது
16) அதுதான் என்னை நான் கடவுளைத் தொட்டால் சாமி செத்துப்போகும் என்றது
17) அதுதான் என்னை நல்ல சோறு தின்னாதே என்றது
18) அதுதான் என்னை நல்ல துணி உடுத்தாதே என்றது
19) அதுதான் என்னை நல்ல வீடு கட்டிக்கொள்ளாதே என்றது
20) அதுதான் என்னை ஓடுபோட்ட வீடு கட்டிக்கொள்ளக் கூடாது என்றது
21) அதுதான் என் பாட்டனை சொத்து வைத்துக் கொள்ளாதே என்றது
22) அதுதான் என்னை முழங்காலுக்குக் கீழே வேட்டி அணியாதே என்றது
23) அதுதான் என் பாட்டியை ஜாக்கெட் அணியாதே என்றது
24) அதுதான் என் பாட்டி ஜாக்கெட் அணிந்ததற்கு வரி போட்டது
25) அதுதான் என் பாட்டனை முண்டாசு அணியாதே என்றது
26) அதுதான் என் பாட்டன் முண்டாசு அணிந்ததற்கு வரி போட்டது
27) அதுதான் என் பாட்டன் முடி வளர்க்காதே என்றது
28) அதுதான் என் பாட்டன் அணிந்த முடிக்கும் வரி போட்டது
29) அதுதான் என் பாட்டியை நகை அணியாதே என்றது
30) அதுதான் என் பாட்டியை பாட்டனை குடை பிடிக்காதே என்றது
31) அதுதான் என்னை கிணற்றிலே நீரெடுக்காதே என்றது
32) அதுதான் என்னை குளத்திலே குளிக்காதே என்றது
33) அதுதான் என்னை நான் தண்ணீர் அருந்தினால் தீட்டாகிவிடும் என்றது
34) அதுதான்; அண்ணல் அம்பேத்கர் நீர் அருந்தியதால் குளம் தீட்டாகிவிட்டது என்று தீட்டுப் போக்கியது
35) அதுதான் என் முப்பாட்டன் நந்தனாரை தீயிட்டுப் பொசுக்கியது
36) அதுதான் என் முப்பாட்டன் காத்தவராயனை கழுவிலே ஏற்றியது
37) அதுதான் என் முப்பாட்டன் மதுரை வீரனை மாறுகால் மாறு கை வாங்கியது
38) அதுதான் என் பாட்டன் இம்மானுவேலை பட்டப்பகலில் வெட்டிக் கொன்றது
39) அதுதான் என்னைப் படிக்காதே என்றது
40) அதுதான் என்னை படித்தால் நாக்கை அறுப்பேன் என்றது
41) அதுதான் என்னை படிப்பதைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்று என்றது
42) அதுதான் என்னை படிப்பதை நினைவில் வைத்திருந்தால் நெஞ்சைப் பிள என்றது
43) அதுதான் என்னை உத்தியோகத்துக்குப் போகாதே என்றது
44) அதுதான் என்னை தகுதி திறமை இல்லை என்றது
45) அதுதான் என்னை ஓட்டலிலே தனி டீ கிளாஸ் கொடுத்தது
46) அதுதான் என்னை ஓட்டலில் பெஞ்சில் அமராதே என்றது
47) அதுதான் என்னை சலூனிலே முடி வெட்டிக்கொள்ளாதே என்றது
48) அதுதான் என்னை சாக்கடை அள்ளு என்றது
49) அதுதான் என்னை செத்த மாட்டைத் தூக்கு என்றது
50) அதுதான் என்னை செருப்புத் தைத்துக்கொடு என்றது
51) அதுதான் செருப்புத் தைத்துக் கொடுத்த என்னை செருப்புப் போடாதே என்றது
52) அதுதான் என்னை விவசாயக்கூலியாய் வைத்திருந்தது
53) அதுதான் விவசாயம் பாவத் தொழில் என்றது

இன்னும் எத்தனை எத்தனையோ கொடுமைகளை இழைத்தது. அந்த இந்து மதத்தை நான் எதிர்க்க எத்தனையோ காரணங்கள் இருக்க நான் ஏன் அதனை ஆதரிக்க வேண்டும் என்பதற்கு ஒரே ஒரு காரணத்தைக் கூறுங்களேன் ஆபாசவசவுகள் வேண்டாம் பொது தளம் நாகரிகமாக பதில் அளியுங்கள்.

Wednesday, January 26, 2022

ராமனைப் போன்ற ஒரு துஷ்ட பிம்பம் எந்தக் கதைகளிலும் சொல்லப் படவுமில்லை .

ஆளுநரின் இராமர்

இராமாயணத்தின்  உருவகப்படி இராமன்
இராமனைச் சார்ந்தவர்கள் யாரும் நிம்மதியாக இருந்ததில்லை.

பெற்ற தசரதன், ராமனின் தாய், வளர்ப்புத் தாய் கூனி ,
கட்டிய மனைவி,
லட்சுமணன் முதல் கூடப் பிறந்த சகோதரர்கள் யாரும் மகிழ்வோடு இல்லை. 

நடந்த தேசத்திலெல்லாம் உறவுகளை மோத விட்டான். 
 
ஆண்ட நாட்டு மக்களையெல்லாம் அழுகையிலும் அவநம்பிக்கையிலும் வைத்தான்.

கூட்டுச் சேர்ந்த சுக்ரீவன் விபீஷ்ணன் 
அரசியல் செய்த அத்வானி 
கால் வைத்த இலங்கை
பிறந்த  உத்திரபிரதேசம் வரை 
ராமனைச் சார்ந்த எவரும் நிம்மதியாய் இருந்ததில்லை.

வாழ்நாள் எல்லாம் 
ராமனும் நிம்மதியாய் இருந்துவிடவில்லை.

பார்ப்பனியத்துக்கு பலியாளாக வாழ்நாள் எல்லாம் 
துக்கமும் துயரமும் இரத்தமும் மனச் சஞ்சலமாகவுமே. வாழ்ந்து இறந்தான் ராமன் 

கடைசி வரை கை பிடித்த சீதை நிம்மதியாய் வாழவிடவுமில்லை. துடிக்கத் துடிக்க தீக்கிறையானாள் .

தனக்காக எல்லாம் துறந்த தம்பி லட்சுமணனை 
பார்ப்பனர்களை மதிக்காமல் போனான் என்று கொலை செய்யும் படியானது.

வளர்ந்து பெரியவானனது முதல் பெற்ற தசரதன் நிம்மதியை இழந்தான் . அப்படியே இறந்தான். 

லவனும் குசனும் தந்தை பெயர் அறியாமலே காடுகளில் 
வாழவேண்டியதிருந்தது  

காதலித்த சூர்ப்பனகை அங்கம் அறுபட்டு அலையவிடப்பட்டாள் 

இராமன் பெயர் சொன்ன காந்தி ராமனின் பெயராலே இயக்கம் நடத்தியவர்களால் கொல்லப் பட்டார்

பார்ப்பனர்களைத்தவிர வேறெருவரின் நன்மைக்காக இராமன் உழைக்க அனுமதிக்கப் பட்டவனில்லை.

வேதம் படித்ததற்காக கொலை செய் என்ற போது ஓடோடி படுகொலை செய்த அடியாளாகவே இராமன் இருந்தான் .
 

ராமனைப் போன்ற ஒரு துஷ்ட பிம்பம் எந்தக் கதைகளிலும் சொல்லப் படவுமில்லை .

அதனால் தானோ என்னவோ தமிழர்கள் இராமனை விட்டு விலகியே இருந்தார்கள். இங்கே அனுமனுக்கு உள்ள மதிப்பு கூட ராமனுக்கு இல்லை. 

இராமனின் துன்பியல் நிகழ்வுகளின்  கடைசி உதாரணமாக ரஜினியாகவே  இருக்கட்டும்.