Saturday, July 28, 2018

வடமா தெம்மா

Devi Somasundaram
வணக்கம் தோழர் உங்க ஊரு பக்கத்துல கோட்டூர்ன்னு ஒரு ஊர் இருக்கு...!

அந்த கோட்டூரில் உள்ள பெருமாள் கோவில், தென்கலை சம்பரதாயத்தை சேர்ந்தது...

அந்தக் கோட்டூர் இல்லையே வசிக்கக்கூடிய வடகலை சம்பரதாயத்தைச் சேர்ந்த ஒரு பார்ப்பனர் அந்த தென்கலை பெருமாள் கோவிலுக்கு ஒரு யானையை பரிசாக அளித்தார்....

தானமாக பெற்ற அந்த யானைக்கு மறுநாளே குளிப்பாட்டி தென்கலை நாமத்தைப் போட்டு, ஊர்வலமாக வீதிகளில் அந்த யானையை அழைத்து வந்தார்கள்...

இதைக் கண்ட யானையை பரிசாக கோயிலுக்கு அளித்த வடகலை பார்ப்பனர், கோவில் நிர்வாகத்திடம், யானை நான் கொடுத்தது, அதற்கு வடகலை நாமம் தான் போட வேண்டும் என்று, சண்டை போட்டார்...

இந்தப் பிரச்சனை அதை மாவட்ட நீதிமன்றத்திற்கு வருகிறது இந்த வழக்கின் பெயரே கோட்டூர் வழக்கு என்றுதான் குறிப்பிடுவார்கள்,

அந்த வெள்ளைக்கார நீதிபதி பல சிக்கலான வழக்குகளை சந்தித்த அனுபவமும் முதிர்ச்சியும் பெற்றவர்...

அவரிடத்திலே வடகலை நாமம் தென்கலை நாமம், என்கின்ற பிரச்சனை வரவும் இரு தரப்பினரின் வாத பிரதிவாதங்களை கேட்டு, அப்படியும் அவருக்கு சந்தேகம் தீர்ந்தபாடில்லை,

வந்த நீதிபதி மிகப்பெரிய குழப்பத்திற்கு ஆளானார்... சரி இதை இப்போது இவர்ககள் முடிக்க மாட்டார்கள் எனவே நாம்தான் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்ற முடிவோடு ஒரு கோடை விடுமுறைக்கு இந்த நாட்டில் உள்ள சாஸ்திர சம்பிரதாயங்களை மொத்தமாக அள்ளிக்கொண்டு இங்கிலாந்திற்கு சென்றார்...

அங்கு அவர் மூன்று மாதங்கள் விடுமுறை முழுவதையும் சம்பிரதாயங்களை பிடிப்பதிலேயே செலவிட்டார்.

அனைத்தையும் படித்து மீண்டும் நாகை நீதிமன்றத்திற்கு வந்து கொடுத்த தனது தீர்ப்பில்  அவர் குறிப்பிட்டது...?

பானா வடிவ 2 பட்டை பட்டை வெள்ளை கோடும், நடுவில் சிகப்பு வண்ண நீல்  கோடும், இருந்தாள் அது தென் கலையாகும்....

சிகப்பு கலரில் யூ வடிவில் மெலிதாகவோ, பட்டையாகவோ இருந்தால் அது வடகலை ஆகும்....

தென்கலையரின் 2 வெள்ளைப் பட்டை கோடு, பெருமாளின் இரண்டு தொடைகளை குறிப்பதாகும், நடுவில் உள்ள சிகப்புக் கோடு பெருமாளின் ஆண்குறியை குறிப்பதாகும்...!

வடகலையருக்கு யு வடிவ கோடு பெருமாளின் தொடையை தான் குறிக்கின்றது ஆனால், வடகலையரின், சம்பிரதாயப்படி பெருமாளின் ஆண்குறி இட படாது....

அதுமட்டுமல்லாமல் தானமாகக் கொடுத்த பொருளை சொந்தம் கொண்டாட முடியாது என்று விரிவாக ஒரு தீர்ப்பை கொடுத்திருக்கிறார்....

இதை உங்களுக்கு சுருக்கமாக நான் கொடுத்திருக்கிறேன்

Friday, July 27, 2018

தம்பி கார்ல் மார்க்ஸ் கணபதியின் பதிவுக்கு எழுதிய  மறுப்பு.

Poppu purusothoman
2018-07-28

தம்பி கார்ல் மார்க்ஸ் கணபதியின் பதிவுக்கு எழுதிய  மறுப்பு.

பெண்ணுடலை அனைத்து விதங்களிலும் ஒரு சுரண்டல் கருவியாக்கிய பழைய வாழ்க்கை முறையிலிருந்தும், உடலுழைப்பைப் போற்றும் ஆணாதிக்கத் தளைகளிலிருந்தும் அவளை விடுவித்தே ஆக வேண்டும் தான். பிள்ளை பெறுதல் வலி மிகுந்தது என்றால் அதிலிருந்தும் அவளை விடுவித்து எந்த ஏச்சுப் பேச்சும் இல்லாமல் அப்படியே ஏற்றுக் கொள்ளும் போதுதான் சமூகம் முன்னேறிய ஒன்றாகப் பக்குவப்பட்டிருக்கிறது என்று பொருள். பிள்ளை பிறப்பிக்கும் போது ஏற்படும் வலி வேண்டாம். பிள்ளை வேண்டும். எனவே சிசேரியனே செய்து கொள்வேன் என்ற சுதந்திரத்தையும் பெண்ணுக்கு அளிப்பதே நாகரீகமான செயல்.

ஆனால் இந்த வாதங்களுக்கு அண்டக் கொடுக்க சிசேரியனே பெண் விடுதலை. உழைப்பின் வழி அவ்வுடல் பெறும் ஆரோக்கியம் பிற்போக்கானது என்ற வாதம் மறைமுகமாக அவளைப் பலவீனப்படுத்தவே செய்யும்.

நச்சுப் பிடித்த வீட்டுப் பொறுப்புகள் அனைத்தையும் பெண் தலையில் ஏற்றி வைப்பது சரி என்பதல்ல எனது வாதம். ஆனால் உடலை மேலும் மேலும் நலிவுறச் செய்யும் இன்றைய வாழ்க்கை முறையில் பெரிதும் உடல் ரீதியான பாதிப்புக்கு உள்ளாகி இருப்போர் பெண்களே.

படிக்கும் காலத்தில் இருந்தே தொடங்கும் மனவழுத்தம், பெண் என்பதால் செய்யும் புறக்கணிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக அலுவலகத்தில் தொடங்கி அக்கம் பக்க உறவினர் வரை தன்னை நிரூபிக்க கூடுதல் முனைப்புக் காட்டி தறகால பெண்கள் உடல்ரீதியாகச் சந்திக்கும் இழப்புகள் ஏராளம்.

அவள் எதிர்கொள்ளும் மன அழுத்ததால் மாதாந்திர உதிரப்போக்கு ( மாத விலக்கு எனபதிலேயே ஆணாதிக்க ஒடுக்குதல் ஒளிந்துள்ளது என்று தவிர்க்கிறேன்) மூன்று நாட்களுக்கு முன்பே பெரும் உடல், மன வலியாகத் தொடங்கி போக்கின் மூன்று நாடகளைக் கடந்தும் தொடரகிறதை எத்தனை சுகப்பிரசவ எதிர்ப்பாாளர்கள் கவனித்திருக்கிறீரகள்.

ஒரு அங்குல விட்டம் உடைய ஆணுறுப்பை ஏற்க வலி கொள்ளும் பெண் துளை குழந்தையின் ஐந்து அங்குல தோள்ப்பட்டையை வெளித் தள்ளும் அளவிற்கு எப்படி விரிந்து
தர முடியும்? என்பது மிகவும் அறிவார்த்தமான கேள்வி தான். உடலையும் அறிவியலையும் சம விகிதாச்சாரத்தில் ப்ளண்ட் செய்து தேட முயன்றால் தலை சுற்றி விடும். எனவே
பிள்ளையின் வளர்ச்சி முழுமை பெற்றதும் வயிற்றைக் கிழித்துத் தையல் போடுவது சரியான முறையாகத் தோன்றும். பிரச்சனை அத்தோடு முடிந்து விட்டால் சரிதான்.
ஆனால் முதுகுத் தண்டின் உட்புறத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் நரம்புத் தொகுதியில் குறுட்டாம் போக்கில் மரத்துப் போவத்றகாக செலுத்தப்படும் மருந்தினால் எத்தனை பெண்கள் இயல்பான நடையைக் கூட இழந்திருக்கிறாரகள் என்பதை அறிவியல் நிரூபணமாகிய நவீன மருத்துவம் உங்களுக்குச் சொல்லியிருந்தால் வயிற்றைக் கிழிக்கிற வாதை புரிபடும்.
சிசேரியனுக்குப் பின்னர் பெண் இயல்பு நிலைக்குத் திரும்புவது 20 % க்கும் குறைவு.

உடலைப. பற்றி அறிதல் வேறு. உயிரறிவியல் வேறு. உயிரறிவியல் எளிய 2+2=4 சூத்திரத்திறகுள் அடங்காத்தது.

அதிலும் நமது கலாச்சாரத்தில் ரெண்டு உசிரு என்ற பெயரில் இரட்டை அளவு உணவு போட்டு திணிக்கிற அலும்பு ரொம்ப இல்ல ரொம்ப ரொம்ப அதிகம். கர்ப்ப காலம் உடலில் நிறைய மாற்றங்கள் நடக்கும். திடீரென்று நிறைய பசிக்கும். அப்புறம் பசியே இல்லாமல் இருக்கும். இதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் நவீன மருத்துவ முறைக்கு மருந்துக்கும் இல்லை. நமது பாரம்பரியத்திலும் இல்லை. பசிக்காத போது உடலுக்கு உள்ளும் புறமும் ஓய்வு தருவதைக் காட்டிலும் மேலான சிகிச்சை ஏதும் இல்லை. பொங்கி வழியிற ஒங்க செண்டிமெண்ட கொஞ்சம் நிறுத்துங்கப்பா அக்கறை வேடதாரிகளே.

முப்பது வருடங்களுக்கு முன்னர் வரை மகப்பேறின் போது இறப்பு சதவீதம் அதிகம் என்பது உண்மையே. அதற்குக் காரணம் பாதுகாப்பற்ற வாழ்க்கைச் சூழலும், மிகை உழைப்பும், உழைப்பை ஈடு செய்வதற்கான குறைந்தபட்ச உணவு இனமையுமே ஆகும்.
சமூக வளரச்சியால் பொதுச் சுகாதாரம் மற்றும் உணவு விநியோகத்தில் ஏற்பட்ட மேம்பாட்டால் உடல் ஆரோக்கியமும் மேம்பட்டிருக்கிறது. தற்காலத்தில் மரண விகிதம் குறைந்திருப்பதறகுக் காரணம் நானே அந்த ரவுடி என்று நவீன மருத்துவம் பொறுப்பேற்க முன் வருமானால் தற்காலப் புதுப்புது நோய்களுக்கான பொறுப்பும் அதன் தலையிலேயே விழும். அந்த அடிப் பலமே இருக்குமே பர்ர்வால்லியா? எனவே சற்று ஒதுங்கி நிற்கவும்.

கர்ப்பிணிகள் உடலுழைப்பில் தான் ஈடுபட வேண்டும் எனபதில்லை. கருக் கொண்ட இரண்டாம் மாதம் தொடங்கி இடுப்பு எலும்பை வலுப்படுத்தவும், சீரான ரத்த ஓட்டத்திற்காகவும் அன்றாடம் காலை மாலை 20 நிமிட நடையும். பிறப்புறுப்பு அகலிக்கும்படியான நீட்டி மடக்கும் உடற்பயிறசியும் இருந்தால் போதும். பிள்ளைப் பேறு சுலபமாக முடிவது மட்டுமல்ல. குழந்தைக்கு இயறகையாக கிடைக்க வேண்டிய பாதுகாப்பு கவசம் கர்ப்பப்பை, கரப்பக் குழாய் மூலம் கிடைக்கும்.

மருத்துவத் துறை நவீனங்கள் அனைத்தும் மனித வாழ்வை எளிமைப்படுத்துவதற்காக ஈர மனம் கொண்ட ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டதல்ல. பெரு வணிக மருந்து நிறுவனங்களின் உத்தரவிறகுக் கட்டுப்பட்டு வலிந்து உருஙாக்கப்பட நிரூபணங்கள் என்பதையும் சேர்த்தே புரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே.

நவீனமனைத்துமே முற்போக்கானதுமல்ல. மரபு அத்தனையும் பிற்போக்கானதுமல்ல.

நம் முன்னோர் முட்டாள்களோ இல்லையோ. உயிரின் இயறகையான உந்துந்துணரவுபகுக் கட்டுப்பட்டவரகள். ஆய்வுகளையும், ஆதாரங்களையும் விட தனி மனிதர்களுக்குள் தோன்றும் இயற்கை உந்துணர்வு நம்பகமானது. பாதுகாப்பானது.

https://m.facebook.com/story.php?story_fbid=1676720459117529&id=100003387731114

தமிழ்ச்செல்வன் இறங்கற்பா

தமிழ்ச்செல்வன் இறங்கற்பா

எப்போதும் சிரித்திடும் முகம்-
எதிர்ப்புகளை எரித்திடும் நெஞ்சம்!

இளமை, இளமை, இதயமோ;
இமயத்தின் வலிமை! வலிமை!

கிழச்சிங்கம் பாலசிங்கம் வழியில்,
பழமாய்ப் பக்குவம் பெற்ற படைத்தளபதி!

உரமாய்த் தன்னையும் உரிமைப் போருக்கென உதவிய உத்தம வாலிபன்- உயிரனையான்-
உடன்பிறப்பனையான்;

தமிழர் வாழும் நிலமெலாம் அவர்தம் மனையெலாம் தன் புகழ் செதுக்கிய செல்வா; எங்கு சென்றாய்?

- கலைஞர்.

--------

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத, தீவிரவாத இயக்கங்களுக்கு கருணாநிதி மறைமுகமாக ஆதரவு தருகிறார் என பலமுறை தெரிவித்தேன்.

இதை நிரூபிக்கும் விதமாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் போர்த்தளவாடங்களை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து அவற்றை புலிகளுக்கு கள்ளத்தனமாக அனுப்பிவைத்ததை போலீஸôர் கண்டுபிடித்து அவரைக் கைது செய்தனர். ஆனால், அன்று மாலையே அவர் விடுவிக்கப்பட்டார். இது குறித்து முதல்வர் கருணாநிதி மெளனம் சாதித்தார்.

அதன் தொடர்ச்சியாகத்தான், தற்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதற்கு கவிதை வடிவில் அவர் இரங்கல் தெரிவித்து அரசு சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம். அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளி.

1991-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமாக இருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டதற்கு இந்திய அரசியல் சாசனப்படி பதவிப் பிரமாணமும், ரகசியகாப்புப் பிரமாணம் எடுத்துக் கொண்ட ஒரு முதல்வர் தடை செய்யப்பட்ட இயக்கத்தை சார்ந்தவருக்கு ஆதரவாக கவிதை எழுதி புகழ்ந்துரைப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

விடுதலைப்புலிகள் பிரமுகர் மரணத்துக்கு கவிதை எழுதும் கருணாநிதி, கடந்த 17 மாத ஆட்சியில் எந்த எந்த வகைகளில் ரகசியமாக விடுதலைப்புலிகளுக்கு உதவியுள்ளார் என்பதை கண்டறியும் பொறுப்பு மத்திய அரசுக்கு உண்டு.

இந் நிலையில் ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த ஜெயின் கமிஷன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மையக் கருத்து கூர்ந்து கவனிக்கப்பட வேண்டும் என

- ஜெயலலிதா

Thursday, July 26, 2018

ஹீலர் பாஸ்கரையும் பாரி சாலனையும் கைது செய் !

சாக்கியன்
by வினவு.

ஹீலர் பாஸ்கரையும் பாரி சாலனையும் கைது செய் !

திருப்பூர் கிருத்திகாவின் மரணம் , அறிவியலற்ற விஞ்ஞானமல்லாத ஹீலர் பாஸ்கர் - பாரி சாலன் வகை பித்தலாட்டங்களை யூ-டியூபில் ரசிக்கும் கூட்டம் மெல்ல மெல்ல அதிகரித்து வரும் அபாயத்தை முன்னறிவிக்கின்றது.

திருப்பூரை அடுத்துள்ள புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கிருத்திகா, வயது 28. தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். கணவர் கார்த்திகேயன் பனியன் கம்பெனி ஒன்றில் பணிபுரிகிறார். இவர்களுக்கு ஏற்கனவே நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் கிருத்திகா இரண்டாவது முறையாக கருவுற்றுள்ளார். தமிழகத்தில் சமீபமாக சமூக வலைத்தளங்கள் மற்றும் வாட்சப் போன்ற ஊடகங்களில் பரவி வரும் ’இயற்கை வாழ்வியல்’ குறித்து இத்தம்பதியினருக்கு அதிக ஆர்வம் இருந்துள்ளது.

திருப்பூர் கிருத்திகா மரணம்
கார்த்திகேயன் – கிருத்திகா தம்பதியினர்
இந்நிலையில் கார்த்திகேயனின் நண்பர் பிரவீன், தனது மனைவிக்கு இயற்கையான முறையில் மருத்துவ உதவி இன்றி வீட்டிலேயே சுக பிரசவம் செய்து கொண்டதாக கூறியுள்ளார். தனது மனைவிக்கு மட்டுமின்றி தனக்குத் தெரிந்த வேறு சிலருக்கும் வீட்டிலேயே இயற்கை முறையில் சுக பிரசவம் மேற்கொள்ள தான் உதவியதாகவும் தெரிவித்துள்ளார். கிருத்திகாவுக்கும் இயற்கை முறையில் வீட்டிலேயே பிரசவம் செய்து கொள்ள தான் உதவுவதாக முன்வந்துள்ளார். ஏற்கனவே ’இயற்கை’ முறைகளின் மேல் ஆர்வம் கொண்ட கார்த்திகேயனுக்கு அவரது நண்பரின் ஆலோசனைகள் ஆர்வமேற்படுத்தியுள்ளன. அதைத் தொடர்ந்து தாங்களும் வீட்டிலேயே பிரசவம் பார்த்துக் கொள்வதாக  கார்த்திகேயன் – கிருத்திகா தம்பதியினர் முடிவு செய்துள்ளனர்.

மேலும் இயற்கை முறையிலான பிரசவம் குறித்து யூ-டியூப் இணையதளத்தில் ஏராளமான வீடியோக்களைப் பார்த்து தங்களைத் ‘தயார்படுத்தி’க் கொண்டிருக்கிறார்கள். இதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதும் தங்களது முடிவில் உறுதியாக இருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 22-ம் தேதி கிருத்திகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது. அப்போது உடனடியாக கார்த்திகேயன் தனது நண்பரான பிரவீன் – லாவண்யா தம்பதியரை வீட்டுக்கு அழைத்துள்ளார். அங்கு கார்த்திகேயன், அவரின் தாயார் காந்திமதி மற்றும் பிரவீன் – லாவண்யா தம்பதி சேர்ந்து கிருத்திகாவுக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.

பிரசவத்தில் பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்த கிருத்திகாவுக்கு நஞ்சுக் கொடி வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிகளவு இரத்தப் போக்கு ஏற்பட்டு நிமிடங்களில் கிருத்திகா மயக்கமடைந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கிருத்திகாவை அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து போனார்.

இது போன்ற கோமாளித்தனங்கள் திருப்பூருக்குப் புதிதல்ல. கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ம் தேதி திருப்பூர் முத்தூர் பகுதியைச் சேர்ந்த சதீஸ் என்கிற ’இயற்கை’ ஆர்வக்கோளாறு நபர் இதே போல் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளார். தற்செயலாக அந்தப் பிரசவத்தில் தாய்க்கும் சேய்க்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. ஆனால், இவ்வாறு பிரசவம் நடந்துள்ளதை அறிந்த அரசு மருத்துவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சதீசின் வீட்டிற்குச் சென்று குழந்தைக்கு தடுப்பூசி போட முயற்சித்துள்ளனர். இதற்கு சதீஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எனினும், மருத்துவர்கள் அவரது குடும்பத்திற்கு எடுத்துச் சொல்லி தடுப்பூசி போட்டுச் சென்றுள்ளனர்.

இந்த விவகாரத்தை ஊதிப் பெரிதாக்கினர் ஹீலர் பாஸ்கரும் பாரி சாலனும். ஆங்கில மருத்துவ சதி, அமெரிக்க சதி போன்ற இத்தியாதிகளோடு இரண்டு அவுன்ஸ் இலுமினாட்டி சதியையும் போட்டுக் குலுக்கி இருவரும் வீடியோக்களை வெளியிட்டனர். நவீன அலோபதி மருத்துவமே கொடூர வில்லன் போலச் சித்தரித்த இவர்கள், குழந்தை பெற்றுக் கொள்வதும், அதை எப்படிப் பெற்றுக் கொள்வது, எப்படி வளர்ப்பது என்றெல்லாம் தீர்மானிப்பதும் தனிமனித சுதந்திரம் என வியாக்கியானம் செய்திருந்தனர்.

தற்போது அந்த ‘தனிமனித சுதந்திரம்’ கிருத்திகா என்கிற பெண்ணின் உயிரைப் பறித்துள்ளது. அறிவியலுக்கு முரணான வழியில் மக்களுக்கு வழிகாட்டியதற்கும் அதன் மூலம் ஒரு உயிரைப் பறித்ததற்கும் இவ்விரு முட்டாள்களின் மேலும் வழக்குத் தொடர்ந்து கைது செய்ய வேண்டும். ஒரு புது விதமான ’டிரெண்ட்’ தற்போது பரவி வருகிறது. சாதி அடிப்படையிலான தமிழ் தேசியம், கொஞ்சம் நம்மாழ்வார் மற்றும் இயற்கை வேளாண்மை, சிறுதானிய உணவு, பழந்தமிழர் பண்பாட்டு பகுமானங்கள், அறைகுறையான சூழலியல் புரிதல், குலப்பட்டம் மற்றும் குலதெய்வம், பழைய நிலபிரபுத்துவ குடும்ப உறவுகளைப் புனிதப்படுத்தல் (தாய்மாமன் சடங்கு இத்தியாதி), பசுமை விகடன்.. என்கிற இந்த களேபரமான கூட்டணியோடு இலுமினாட்டி சதி மற்றும் ஆங்கில மருத்துவத்தின் மீதான அவநம்பிக்கையும் கை மருத்துவத்தின் மீதான காதலும் சேர்த்து மொத்தமாக டப்பாவில் போட்டு குலுக்கி யூ-டியூப் வீடியோக்களாக இறக்குகின்றனர்.

இந்த மோஸ்தரில் ஹீலர் பாஸ்கர் முதலில் ’பிரபலமானார்’; அடுத்து பாரி சாலன். நவீன மருத்துவம் கார்ப்பரேட்மயமாகவும் ஏகபோகமாகவும் மாறி வருவது; இதன் விளைவாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு அது எட்டாக்கனி ஆகி வருவது ஒருபுறமும், நவீன சமூகத்தில் உருவாகும் புதுப்புது வியாதிகள் இன்னொரு புறமும் மக்களை அச்சுறுத்துகின்றன. இது உண்மையின் ஒரு பகுதி – இதே உண்மையின் இன்னொரு பகுதி நவீன மருத்துவமே விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது என்பதாகும். ஆனால், இலுமினாட்டி பிரச்சாரகர்கள் உண்மையின் முதற்பகுதியை மட்டும் கத்தரித்து எடுத்துக் கொண்டு அதனோடு சதிக் கோட்பாடுகளைக் கலந்து கடை விரிக்கும் போது படித்த இளைஞர்களே கூட அதற்கு பலியாகிப் போகின்றனர்.

இந்த சிக்கலுக்குத் தீர்வு அரசின் சுகாதாரத் துறையை வலுப்படுத்த வேண்டும், அரசு மருத்துவமனைக் கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும் என்கிற கோரிக்கையாகவும், அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு நவீன மருத்துவத்திலேயே இலவச சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யப் போராடுவது என்பதாகவும்தான் இருக்க வேண்டும். மாறாக, மக்களை விஞ்ஞானமல்லாத மருத்துவ முறைகளுக்குள் நெட்டித் தள்ளி சாகடிப்பது தீர்வல்ல. பாரி – ஹீலர் வகையறாக்கள் இதில் இரண்டாவதைச் செய்கிறார்கள். அப்படிச் செய்வதன் மூலம் மருத்துவத்துறை கார்ப்பரேட்மயமாவதற்கு எதிராக மக்கள் போராடுவதைத் தடுத்து மடைமாற்றி அவ்வாறு கார்ப்பரேட்மயமாகும் போக்கை நிலைநிறுத்த துணை போகின்றனர். இப்படி மக்களை சுடுகாட்டுக்கு அனுப்பும் பாதைக்கு ‘தற்சார்பு’ பொருளாதார முறை என்கிற அலட்டலான பெயரையும் சூட்டியுள்ளனர்.

அறிவியலற்ற விஞ்ஞானமல்லாத ஹீலர் – பாரி வகை பித்தலாட்டங்களை யூ-டியூபில் ரசிக்கும் கூட்டம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகின்றது. ஆனால் அவர்கள் சொல்லும் வாழ்வியல் நடைமுறையில் இறங்குவதற்கு ஒரு விதமான முரட்டு முட்டாள்தனம் தேவை. அவ்வாறானவர்கள் கொங்கு பகுதியில் கணிசமாக இருக்கிறார்கள் என்பதையே கிருத்திகாவின் மரணம் உணர்த்தியுள்ளது. ஆச்சரியம் என்னவென்றால் பாரி சாலனும் ஹீலர் பாஸ்கருமே கூட கோவையைச் சேர்ந்தவர்கள் தாம். கோவையைச் சுற்றி அனேகமாக இந்தியாவில் உள்ள அனைத்து கார்ப்பரேட் சாமியார்களுக்கும் கிளைகள் உண்டு. ஜக்கி, அமிர்தானந்தமயி, மனவளக் கலை வேதாத்ரி போன்றோரின் தலைமையகமே கோவைதான்.

திருப்பூர் கிருத்திகா மரணம்
பித்தலாட்ட ஹீலரும், பாரிசாலனும்
மூட நம்பிக்கைகளுக்கு கொங்கு பகுதியில் ஒரு கொழுத்த சந்தை உண்டு. அது அ.தி.மு.க / பா.ஜ.க ஆதரவு மனநிலையாகட்டும், ஈமு கோழி வகை ரெண்டாம் நம்பர் பிசினஸ் ஆகட்டும், கார்ப்பரேட் சாமியார்கள் ஆகட்டும், இயற்கை வாழ்வியல் ஆர்வக்கோளாறுகள் ஆகட்டும், அனைத்தையும் பரிசோதித்துப் பார்க்க தயாராக இருக்கும் மேல் நடுத்தர வர்க்கப் பிரிவினர் கோவையில் அதிகம். மிகப் பிற்போக்கான  நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தை இறுகப் பற்றிக் கொண்டிருக்கும் திடீர் பணக்காரர்கள் நிறைந்த பகுதி என்பதால் ஹீலர் வகையறாக்கள் கடை விரிக்க ஏதுவாக இருக்கிறது.

சமூக வலைத்தளங்களின் மூலம் இவ்வாறான அறிவியலுக்குப் புறம்பான மருத்துவ முறைகளையும், சதிக் கோட்பாடுகளையும் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் எடுக்காது. ஏனெனில், மக்கள் அறியாமை இருளில் மூழ்கிக் கிடப்பது ஆளும் வர்க்கத்துக்கு ஆதாயமானதுதானே. கிருத்திகாவைப் போன்ற ஓரிரு உயிர்கள் அதற்காக கொடுக்கத்தக்க விலை என்பதே ஆளும் வர்க்கத்தின் கணக்காக இருக்க முடியும். எனவே ஹீலர் வகையறாக்களை ஒரு கட்டம் வரை வளர அனுமதிப்பார்கள்; தங்களாலேயே தாங்க முடியாத நியூசென்ஸ் கேசாக மாறும்வரை விட்டு வைத்து விட்டு, தங்கள் மார்பிலேயே பாயும்போது நடவடிக்கை எடுப்பார்கள்.

இந்தியாவிலேயே குழந்தை இறப்பு தடுப்பு விகிதத்தில் கேரளத்திற்கு அடுத்து இரண்டாம் இடத்தில் தமிழகம் இருப்பதும், இங்கு குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாடு பிரச்சினை நாட்டிலேயே குறைவாக இருப்பதும் நவீன மருத்துவத்தால்தான் சாத்தியாமானதே தவிர பாட்டி வைத்தியத்தால் அல்ல. மக்கள் இதை உணர்ந்து கொண்டு அறிவியலுக்குப் புறம்பான வைத்திய முறைகளையும், அதை முன்வைக்கும் அறிவுக்குப் பொருந்தாத இலுமினாட்டி சதிக் கோட்பாடுகளையும் புறம் தள்ளுவதோடு நவீன மருத்துவம் எல்லோருக்கும் இலவசமாக கிடைப்பதை உறுதி செய்யவும் அரசு மருத்துவமனை கட்டமைப்பு மக்களுக்கானதாக நீடிக்கவும் போராட முன்வர வேண்டும்.