Thursday, June 1, 2017

இந்துத்துவா பாசிஷ்டுகளை கண்டுபிடிப்பது எப்படி

Karundhel Rajesh
Via Facebook
2017-06-01

அபாய அறிகுறி - யாரையெல்லாம் சோஷியல் மீடியாவில் தயவு தாட்சண்யம் பார்க்காமல் ஒதுக்க வேண்டும்?

பாஸ். மாட்டுக்கறியைப் போயி சாப்பிடுறீங்களே? அது எவ்வளவு பெரிய தப்பு தெரியுமா என்று ஒரு நபர் கேட்கிறார் என்றால், அவரை educate செய்யும் பொறுப்பு நம்முடையது என்று வைத்துக்கொள்ளலாம். எப்படியெல்லாம் எஜுகேட் செய்யலாம்?

A. மாட்டுக்கறி என்பது சிக்கன், ஆடு போல ஒரு உணவுதான். அதை உண்பதில் தவறு இல்லை.

B. மாடுகளை இறக்கும் வரை வைத்துப் பராமரிக்கும் செலவு மிக மிக அதிகம். அதனாலேயே அவை ஒரு கட்டத்துக்குப் பின் இறைச்சிக்காக விற்கப்படுகின்றன. இது ஒரு சுழற்சி. ஆரம்ப காலத்திலிருந்து நடப்பதே. இப்படிப்பட்ட ப்ராசஸ் இருந்தால்தான் மாடு, மனிதன் ஆகிய இருவருக்கும் அது நல்லது. உலகம் முழுதும் இப்படித்தான். இதில் தவறு ஏதும் இல்லை. மாடு என்பது ஒரு commodity. இதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

இதையெல்லாம் சொன்னபின்பும் மாட்டுக்கறியைத் தின்னவே கூடாது என்று ஒற்றைக்காலில் நிற்கும் ஆசாமி என்றால்?

போய் அந்த ஆசாமியின் ப்ரொஃபைலை கவனியுங்கள். ப்ரொஃபைலில் கீழ்க்கண்ட விஷயங்கள் இருந்தால் எனர்ஜி செலவுசெய்து பேசுவதே வேஸ்ட். அந்த ஆசாமி பாட்டுக்கு கத்திக்கொண்டே இருக்கட்டும். நாம் வேலையைப் பார்க்கவேண்டியதுதான்.

* உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் மாட்டைக் கும்பிட்டு ஆர்கசம் அடையும் காணொளி

* ஹெச். ராஜாவின் காணொளியை ஷேர் செய்திருக்கவேண்டும் (ப்ராக்டிகல் அறிவு உள்ள மனுசன் இதையெல்லாம் ஷேர் செய்யமாட்டான்தான். ஆனால் இவர்கள் அதைக் கட்டாயம் ஷேர் செய்திருப்பார்கள். ஏனெனில் இவர்கள் காவி அடிமைகள்).

*போர்க் சாப்பிடுவதை நியாயப்படுத்தும் ஃபார்வேர்டை ஷேர் செய்திருக்கவேண்டும் (அதாவது, இவர்கள் மாமிசமே சாப்பிடமாட்டார்களாம். ஆனால் போர்க்கை மட்டும் சாப்பிடும் ஃபார்வேர்டை ஷேர் செய்திருப்பார்கள். ஏனென்றால் முஸ்லிம்கள் மீது அவ்வளவு கொலைவெறி).

*மாட்டின் படம் போட்டு, ஒவ்வொரு உறுப்பிலும் என்னென்ன கடவுள் என்ற ஃபோட்டோ கட்டாயம் இருக்கும்

*மோதியின் இரண்டு மூன்று ஃபோட்டோக்கள். கூடவே, டிஜிட்டல் இந்தியாவில் காவி கலர் போட்ட ப்ரோஃபைல் படம் இருக்கும்.

*கொஞ்சம் எக்ஸ்ட்ரீமிஸ்ட் என்றால், மாட்டு மூத்திரம் குடித்தால் இன்னின்ன பயன்கள் என்ற செய்தியையும் ஷேர் செய்திருப்பார்கள்

*இட ஒதுக்கீடு - அதை இந்தியா முழுக்க ஒழித்தாக வேண்டும் என்ற ஆவேசமான செய்திகள் இருக்கும்.

*பெரியார் & அம்பேத்கர் இருவருமே தீவிரவாதிகள் என்று எங்காவது இருக்கும்.

இவற்றில் இரண்டு விஷயங்களுக்கு மேல் இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு ஓடிவந்துவிடவும். இவர்கள் கற்காலத்தில் வாழ்கிறார்கள் என்று பொருள். இவர்களிடம் ப்ராக்டிகலாகப் பேசிப் புரியவைக்க இயலாது.

ஒருவேளை இவை அத்தனையும் இருந்தால்? கட்டாயம், ஜுராசிக் பார்க்கில் டைரன்னோசாரஸ் ரெக்ஸிடம் இருந்து தலைதெறிக்க ஓடுவார்களே.. அப்படித் திரும்பிப்பார்க்காமல் ஓடிவிடவும். விஞ்ஞானம், லாஜிக் ஆகிய எதுவும் இல்லாமல், எப்போதோ சொல்லப்பட்ட feudal கருத்துகளைத் தற்போது பரப்பும் நியோ நாஜிக்கள் இவர்கள்தான்.

இவர்களிடம் சொல்லிப் புரியவைக்க முடியாது. இனம், சாதி ஆகியவற்றால் கண்கள் கட்டப்பட்ட அடிமைகள் இவர்கள். தங்களைத் தவிர, பிற மனிதர்களின் உரிமைக்காக ஒரு வார்த்தை கூடப் பேசியிருக்க மாட்டார்கள். உரையாடல் என்ற ப்ராசசிலேயே இவர்களுக்கு நம்பிக்கை இல்லை. இவர்கள் சொல்வதை மட்டுமே நாம் கேட்க வேண்டும். அதுதான் இவர்களின் கொள்கை. மீறீப் பேசினால், நம்மைத் தீவிரவாதி என்றும் நக்சலைட் என்றும் முத்திரை குத்த மட்டுமே தெரியும்.

‘மாடு, சாமி, கோமியம், மருந்து, மோதி, தெய்வம், முஸ்லிம், தீவிரவாதி, இட ஒதுக்கீடு, ஆபத்து’ என்பதுபோன்ற மிகச்சில வார்த்தைகள் மட்டுமே பேசும்படி ப்ரோக்ராம் செய்யப்பட்ட அடிமைகள்.

No comments:

Post a Comment