Saturday, June 13, 2020

திராவிட இயக்கம் தலித்களுக்கு செய்ததென்ன?

தேவேந்திரர் குரல் தேசம்... என்ற குழுவில் பெரியாரைப் பற்றி இழிவாகவும் பட்டியல் இன மக்களுக்கு திராவிட கட்சிகள் எதுவுமே செய்யவில்லையென்றும்...

"வாட்ஸ் ஆப் தகவல்களே வரலாறு" என்று எண்ணிக் கொண்டிருக்கும் சில அதிமேதாவிகள் புலம்பிக்கொண்டிருந்தனர்.

நான் மிகவும் நாகரீகமாக எதிர்க் கருத்தைப் பதிவிட்டேன்...

அதற்கு Valuthi Venthan ,  Sandhiyar Sandy ,  என்ற தோழர்கள் பதில்வினையாற்றினர்.

அவர்களுக்கு அங்கேயே பதில் சொல்வதைவிட தனிப்பதிவில் பதில் கூறுவதே சிறப்பாக இருக்கும் என்பதால் இப்பதிவு.....

அய்யா, Ariyalur Parobakari & விஸ்வநாதன் விஸ்வநாதன், பெரியார் எங்களுக்கு "ஊ...ப" கொடுக்கவில்லை...
அவர் ஒருவர் மட்டும் இல்லையென்றால் நீங்கள் தான் இன்னமும் "அவாளை"  ஊம்....க் கொண்டு இருந்திருப்பீர்கள்.

பட்டியலின மக்களுக்கு அப்படி என்னதான் செய்துவிட்டன திராவிட இயக்கங்கள் ? 

 “பள்ளர், பறையர் என்று இழிவாக உள்ள பெயரை மாற்றி ஆதி திராவிடர் என்ற பொதுப் பெயர் மாற்றம் செய்தது நீதிக்கட்சியின் ஆட்சி.
எண் 217 சட்டம் (பொது) நாள் 25.03.1922.

ஆதி திராவிடர் பிள்ளைகளைப் பொது பள்ளிகளில் கட்டாயமாகச் சேர்க்க அரசு ஆணை. G.O.No.87 நாள் 6.1.1923.

அரசு மானியம் பெறும் பள்ளிகளில் ஆதி திராவிடர் பிள்ளைகளைச் சேர்க்க மறுத்தால் அரசு மானியம் இரத்து செய்யப்படும். அரசு ஆணை G.O.No.88. நாள் 16.1.1923.

திருச்சி மாவட்ட நிர்வாகம் ஆதி திராவிடர் பிள்ளைகளை தனி இடத்தில் தங்கிப் படிக்க அனுமதி கோரியதை அரசு ஏற்க மறுத்து, ஆதி திராவிடப் பிள்ளைகளையும், மற்ற சாதிப் பிள்ளைகளையும் ஒன்றாகத்தான் படிக்க வைக்க வேண்டும் என்று ஆணை. G.O.No.2015 dated 11.2.1924.

இந்தியாவிலேயே முதன் முதலாக ஆதி திராவிட மாணவர்கள் இலவசமாகத் தங்கி படிக்க, ஆதி திராவிடர் மாணவர் விடுதி திறக்கப்பட்டது. G.O.No.2563 dated 24.10.1923.

1931க்குள் ஆதி திராவிட மாணவர்களுக்கு மூன்று விடுதிகள் ஏற்படுத்தப்பட்டன. (T.G.Boag ICS. Madras Presidency 1881 - 1931 பக்கம் 132).

ஆதி திராவிடர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. G.O. 1243.நாள்  5.7.1922.

ஆதி திராவிட மாணவர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதத் தேர்வுக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. G.O. 1241 சட்டம் (கல்வி) நாள் 17.10.1922.

ஆதி திராவிட வகுப்பு மாணவர்களுக்கு நான்காம் வகுப்பு முதல் கல்வி உதவித்தொகை வழங்கிட அரசாணைப் பிறப்பிக்கப்பட்டது. G.O. 1568 சட்டம், 
நாள் 06.11.1923

ஆதி திராவிட மாணவர்களுக்குச் சில பள்ளிகளில் தனி வகுப்பறைகள் இருந்ததை அரசு கண்டித்தது. ஆதி திராவிட மாணவர்களை அதிக எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளும் கல்வி நிறுவனங்களுக்கு அதிக அளவில் அரசின் பண உதவி அளிக்கப்படும் என்று அரசாணைப் பிறக்கப்பட்டது.  G.O.205 நாள் 11.02.1924.

மருத்துவக் கல்லூரியில் பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பின் தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. G.O. 866 (பொது) சுகாதாரம், நாள் 17.06.1922.

இந்தியாவில் இருந்த வேறு எந்த மாகாணத்திலும் இல்லாத அளவிற்கு ஆதி திராவிடர்களுக்குப் பஞ்சமி நிலத்தைப் பிரித்து வழங்கியது. நீதிக்கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை, 1920-21 ஆதி திராவிடர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த பஞ்சமி நிலம் 19,251 ஏக்கர் மட்டுமே. ஆனால் நீதிக் கட்சி ஆட்சியில் 1931 வரை பிரித்துக் கொடுக்கப்பட்ட பஞ்சமி நிலம் 3,42,611 ஏக்கர் ஆகும். (சென்னை மாகாண அரசின் புள்ளிவிவர அதிகாரி எழுதிய Madras Presidency 1881 - 1931 என்ற நூல் பக்கம் 132.) மேலும் 1935 மார்ச் 31 வரை ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலத்தின் அளவு 4, 40, 000 ஏக்கராக உயர்ந்துள்ளதை ஜஸ்டிஸ் ஏடு, 19.7.1935 இல் சுட்டிக் காட்டியுள்ளது.

கல்வி, சுகாதாரம், பொதுப்பணி போன்ற முக்கியப் பணிகளை அப்போது உள்ளாட்சி நிர்வாகங்களே கவனித்து வந்தன. அந்த நிறுவனங்களில் ஆதி திராவிடர் ஒருவரை அரசு நியமனம் மூலம் அமர்த்தி அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்களித்தது நீதிக் கட்சியே. சென்னை மாகாணத்தில் உள்ளாட்சியில் ஆதி திராவிடர் பிரதிநிதித்துவம் பெற்றிருந்த விவரம்:

1920-21 மொத்த எண்ணிக்கை ஆதி திராவிடர் நியமனம் பெற்றவை மாவட்டக்கழகங்கள் (District Boards) 17 வட்டக்கழகங்கள் (Taluk Boards) 66 நகராட்சிகள் (Municipalities) 46 என்க.

ஆதி திராவிடர் பொது இடங்களில் புழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால், அவர்களுக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்று இரட்டை மலை சீனிவாசன் 22.08.1924 இல் சென்னை சட்ட மன்றத்தில் கொண்டு வந்த தீர்மானத்தையும், வீரய்யன் 24.02.1925 இல் கொண்டு வந்த தீர்மானத்தையும் ஏற்றுக் கொண்டு சத்திரம், சாவடி, அரசு அலுவலங்கள், பொதுச் சாலைகள், பொதுக் கிணறுகள், போன்ற பொதுவான இடங்களில் ஆதி திராவிடர்கள் வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களுக்கு ரூ 100 அபராதம் விதிக்கப்படும் என்று அரசாணையில் (Gazette Notification 08.04.1925 Part IV) தெரிவிக்கப்பட்டது. இந்த அரசாணையைத் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய மொழிகளில் வெளியிட்டதோடு தண்டோரா மூலம் சென்னை மாகாணம் முழுவதும் பொது மக்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆதி திராவிடர்களுக்கு இருந்த சமூகத் தடைகளை நீக்க வழிவகை செய்தது நீதிக் கட்சியே.

1935 அரசியல் சட்டம் நடப்புக்கு வரும்வரை தாழ்த்தப்பட்டவர் நியமனம் மூலம் மட்டுமே பதவி வகித்தனர். அப்போது டெல்லியில் இருந்த சட்டசபைக்குப் பெயர் (MLA) Member of Legislative Assembly 1928இல் சென்னை சட்டமன்றம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி சட்டசபைக்கு அனுப்பப்பட்ட முதல் தாழ்த்தப்பட்ட உறுப்பினர் எம்.சி.ராஜாதான். நீதிக் கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் சுப்பராயன் ஆட்சியில்தான் அது நிறைவேறியது. அவர் டெல்லி சென்றதால்தான் அகில இந்திய அளவில் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை ஒருங்கிணைக்க முயற்சி செய்ய முடிந்தது.

1921 - 22 இல் வகுப்புரிமை ஆணைகள் பிறப்பிக்கப்பட்ட போதிலும்,  பார்ப்பனர்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்து அதை நடைமுறைப் படுத்தாவண்ணம் இடையூறு செய்து வந்தனர். 1924 இல் அரசுப் பணிகளில் வேலைக்கு ஊழியர்களை அமர்த்துவதற்காக ஒரு ஆணையம் உருவாக்கப்பட்டது ‘Staff Selection Board ‘என்று அதற்குப் பெயர் அது தான் இப்போது T.N.P.S.C ஆக மாறியுள்ளது; 1925 முதல் அரசாங்க ஆண்டறிக்கைகளில் வகுப்பு வாரியாக அரசு ஊழியர்கள் விவரம் காலாண்டுதோறும் வெளியிடப்பட்டு வந்தது.

பனகல் அரசர் ஆட்சிக்காலத்தில் 1927-1926க்குள் ஆதி திராவிடர்கள் காவலர் பணியில் 382 பேரும், தலைமைக் காவலர் பணியில் 20 பேரும், துணை ஆய்வாளர் பணியில் ஒருவரும் அமர்த்தப்பட்டனர். 1935இல் துணைக் கண் காணிப்பாளர் வரை ஆதி திராவிடர் பதவி உயர்வு பெற்றனர்; 1927 இல் தான் ஆதி திராவிடர் ஒருவர் இன்ஸ்பெக்டராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்; (‘Staff Selection Board அறிக்கை பக் 120.) அந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஆதி திராவிடர்களைக் காவல் துறையில் காவலர்களாக கூடச் சேர்த்துக் கொண்டதில்லை என்று எம்.சி ராசா 1928 இல் மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் கூறியுள்ளார். (எம்.சி. ராசா வாழ்க்கை வரலாறும் எழுத்தும் பேச்சும் ஜெ. சிவசண்முகம் பிள்ளை, பக் 42).....

இவ்வளவு உரிமைகளையும் திராவிட இயக்கங்கள் வாங்கித் தரவில்லையென்றால் என்ன செய்துகொண்டு இருப்பீர்கள்.......என்பதை உங்கள் முடிவிற்கே விடுகிறேன்.

பெரியார் வழியில் ஆட்சி செய்த கலைஞரும், தற்போதைய திமுக வும் செய்த சாதனைகளை பதிவிட்டால் பதிவு பெரிதாகி விடும்.....எனவே அதை தனிப் பதிவாக இடுகிறேன்......

அடக்கம் உடையார் அறிவிலர்என் றெண்ணிக்

கடக்கக் கருதவும் வேண்டா – மடைத்தலையில்

ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்

வாடி இருக்குமாம் கொக்கு.....

இந்தப் பாடலின் பொருள் தெரிந்து கொண்டு நாவடக்கத்துடன் பதில் தரவேண்டும்......

என்ற எச்சரிக்கை விடும்.......

பெரியாரின் பேரன் நான்.

No comments:

Post a Comment