Thursday, January 29, 2015

ஆர்எஸ்எஸ் ஆள் , என்று சொன்னால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகின்றது

கேள்வி :- அடேய் கிளிமூக்கா, ஆ ஊ என்றால், குருமூர்த்தி ஒரு ஆர்எஸ்எஸ் ஆள், கிழக்கு பத்ரி ஒரு ஆர்எஸ்எஸ் ஆள், முக்குத் தெரு பிள்ளையார் கோவில் ஐயர் ஒரு ஆர்எஸ்எஸ் ஆள் என்று அடிச்சுவிடுறியே அவர்கள் எல்லாம் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் என்பதற்கு உன்னிடம் அவர்களின் அடையாள அட்டை ஆதாரமிருக்கின்றதா ?
.
பதில் :- தமிழ்நாட்டில் கலகக்காரர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பாதுகாப்புப் புகலிடம் பெரியார் திடலும் பெரியாரிய கடல் திராவிடர் கழகமும்தான். ஒரு சில மாதங்களுக்கு முன்னர், பழைய குருநாதர் மூலம், திராவிடர் கழகத்தில் எனது இந்தப் புனைப்பெயரில் உறுப்பினராக திராவிடர் கழக மேலிடத்தை அணுகினேன். உறுப்பினராக வேண்டும் என்றால் உண்மையான பெயர் விபரங்களுடன் மட்டும்தான் சேர முடியும், பேக்கு ஐடி, வழிப்போக்கு பெயர் என்பதெல்லாம் கூடாது என்று மூக்கில் குத்திவிட்டார்கள்.
.
தேசவிரோத இயக்கம் என்று வேதவிற்பன்னர்களால் ஏசப்படும் திகவில் கூட சட்டப்படி மட்டுமே உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகின்றது. ஆனால் தேசபக்தி ஆர்எஸ்எஸ் அமைப்பில் உறுப்பினர் பதிவு , உறுபினர் ஆவணம் என்று எதுவுமே கிடையாது .
.
திராவிட இயக்கங்களைப் போன்று , ஆர்எஸ்எஸ் ஆவணப்படுத்தப்பட்ட கட்டமைப்பைக் கொண்டதல்ல. அவ்வமைப்பிற்கு சட்டவிதிமுறைகளோ , உள்ளமைப்பு தேர்தல் முறைகளோ கிடையாது. ஆர்எஸ்எஸ் தலைமையைத் தவிர வேறு யாருக்கும் நேரடி ஆர்எஸ்எஸ் ஆவணப்படுத்தப்பட்ட அடையாளம் கிடையாது. ஆர்எஸ்எஸ் உளவியல் ரீதியாக உறுப்பினர்களை சேர்க்கும் ஒரு அமைப்பு. மேலும் "பார்ப்பனிய தேசிய" ஆதரவாளர்கள் பெரும்பாலானோர் அரசாங்க அதிகாரிகளாக இருப்பதால் . அவர்களால் நேரிடையாக வேறோர் அமைப்பில் , அதுவும் அன்று காந்தியைக் கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பில் உறுப்பினராக சேர முடியாது. நேரடி உறுப்பினர் பதிவு முறை இல்லாததால், "காரியம்" முடிந்தவுடன், காரியகர்த்தாக்களுக்கும் தமக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்று கழட்டிவிட்டுவிடலாம். சட்டரீதியிலும் ஒன்றும் செய்ய முடியாது. இப்படிசிலப்பல காரணங்களால் ஆர்எஸ்எஸ் அமைப்பு உறுப்பினர்களை ஆவணப்படுத்துவதில்லை.
.
வெளிப்படையாகவோ , ரகசியமாகவோ ஒருவர் ஷாகாவில் பங்கேற்றாலோ அல்லது ஆர்எஸ்எஸ் கருத்தியல்களை பதிப்பித்தோ எழுதியோ , அதை முன்னிறுத்தி பின்புலத்தில் இயங்கினாலோ அவர் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்று தாராளமாக சொல்லலாம். அது எல்லாம் இருக்கட்டும், ஆர்எஸ்எஸ் ஆள் , என்று சொன்னால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகின்றது , ஆர்எஸ்எஸ் என்ன அவ்வளவு பெரிய பயங்கரவாத அமைப்பா என்ன.....!!??.


கிளிமூக்கு அரக்கன்

No comments:

Post a Comment