Wednesday, December 27, 2017

சுடு சொல் வீசி என் கண்களை நனைக்கிறாய்.


அன்பைத்தவிர உனக்குத்தர என்னிடம் வேறேதும் இல்லை,
நிராகரிப்பைத்தவிர எனக்குத்தர உன்னிடம் வேறேதும் இல்லை.

நான் தொடுகின்ற இடம் உன் மனதாக இருக்கட்டும்,
நான் மடிகின்ற இடம் உன் மடியாக இருக்கட்டும்.

முதலும்,முடிவுமான சந்திப்பு என அறிவிக்கப்பட்ட பின்பு,
முதல் சந்திப்புக்கான சந்தோஷத்தை விழுங்கி நிற்கிறது இறுதி சந்திப்புக்கான துயரம்.

என்னுடன் போர் புரியும் குரோதத்துடன் நீ தயாராக இருக்கிறாய்,
உன்னிடம் சரண் அடையும் உத்தேசத்துடன் பணிவுடன் இருக்கிறேன்.

ஓர் எழுத்தில் என் உயிர் உருகும், அது நீ!
மூன்றெழுத்தில் என் உடல் மருகும், அது நீ செலுத்தும் அன்பு.

என்னிடம் அன்பைப்பொழியும் எண்ணம் உன் மனதிடம் இல்லை,
அது தெரிந்தும் உன்னை விட்டு விலகி நிற்க எனக்கு மனோதிடம் இல்லை.

உன்னுடனான சந்திப்பில் கண்ணீர் தளும்பி கண்களில் நிரப்பிக்கொள்வதால்,
நீ எப்போதும் என் எதிரே நிற்கையில் எனக்கு மங்கலாகத் தெரிகிறாய்.

சொல்லித்தெரிவதில்லை அன்பு,
சொல்லாமல் புரிவதில்லை காதல்.

மனம் விட்டுப்பேசாதபோதே தெரிந்து கொண்டேன்,
உன்னிடம் என் மனதை விட்டு விட்டேன் என்று.

நீ என்னை எப்போதும் சந்தேகத்துடன் பார்க்கிறாய்!
என் காதல் உன் தேகத்துடன் என்றே நினைக்கிறாய்!
சுடு சொல் வீசி என் கண்களை நனைக்கிறாய்.

http://adrasaka.blogspot.com/2011/07/blog-post_6629.html

No comments:

Post a Comment