Saturday, September 15, 2018

இசுலாமிய சகோதரர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டு கோள்

பொறுப்புதுறப்பு:

* யாஸ்மினா கார்த்திகேயன் திருமண சர்ச்சை குறித்த தனது கருத்துக்காக எதிர்வினைக்கு விளக்கமளித்துள்ளார் ஆளூர் ஷநவாஸ்.

* இது கட்டுரையாளரின் சொந்த கருத்து, அதனால என்னிடம் வந்து யாரும் சண்டை போடாதீர்கள்

* உங்களுக்கு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தால் கீழேயுள்ள கட்டுரையாளரின் பேஸ்புக் லிங்கில் விவாதிக்கலாம். ஏற்கனவே பலர் விவாதித்து கொண்டிருக்கின்றார்கள்.

-----

Antony Fernando
2018-09-15

இசுலாமிய சகோதரர்களுக்கு ஒரு தாழ்மையான வேண்டு கோள். இனி சாதிக்கலவரங்கள் நடந்து அந்தப் பயலுக ஒருத்தனை ஒருத்தன் வெட்டிக் கொண்டு சாகிற போது உங்களை பாதுகாப்பான தொலைவில் வைத்துக் கொண்டு அமைதியாக வேடிக்கைப் பாருங்க. உள்ளே போய் பஞ்சாயத்து பண்ணி நல்ல புள்ள பேர் வாங்குவதை தவிருங்க. அதற்கப்புறம் குரு பூசையில் போய் குப்புறக் கிடப்பது, "அந்தச் சண்டியர் எங்க இசுலாமிய தாயிடம் தான் பால் குடித்தார்" என்று அவனுக்கு Massage பண்ணி விடுவது, இவன் தொப்புள் கொடி உறவாக்கும் என்று இன்னொருவனுக்கு சொறிஞ்சு விடுகிறதை எல்லாம் நிறுத்துங்க.

நீங்க எப்படி உறவை புதுப்பிக்க நினைத்தாலும்,  எப்படி யான நியாயங்களைப் பேசினாலும் அடும்த ஊர்வலத்தின் போது அவனுங்க இரண்டு பேரும் ஒன்று சேர்ந்து உங்க வீட்டுல தான் கல்லெறியப் போறானுங்க. அவனுங்க இரண்டு பேரில் எவனாவது ஒருத்தன் வெட்டிக் கொண்டு செத்தாலும் அடுத்த ஊர்வலத்தில் உங்கள் வீடுகள் மீது வீசப்படுகிற கற்களில் ஒன்றாவது குறையுமே.

இன்னொரு கேவலமான விசயம் இசுலாமிய சமூகத்தை பொது நீரோட்டத்திற்கு இழுத்து வந்து சமூக அரசியல் அதிகார மையத்தை நோக்கிய நகர்விற்கு பாடுபடும் தோழர்களை நோக்கி "ஏய் நீ ஆலிமை எதிர்த்தா பேசுகிறாய்" என்று அவர்களது குரல்வளையை நசுக்குகிற செயல் .

உங்களால் குரல்வளைகள் நசுக்கப்படுகிற அந்தத் தோழர்கள் தான் இசுலாமியர்களுக்கு எதிராக காவி வெறியர்கள் கட்டமைக்க முயலுகிற பயங்கரவாத முத்திரைகளை சகோதர சக்திகளை ஒன்றிணைத்து சுக்கு நூறாக்குபவர்கள். அவர்களது குரல்வளையை நெறித்து பொன் முட்டையிடும் வாத்தின் வயிரறுத்த அடி முட்டாளாகி விடாதீர்கள்.

அதற்கப்புறம் வருடாவருடம் இசுலாமியர்களிடம் "அந்தக் காட்டுமிராண்டிகளின் செயல்களுக்காக ஒரு இந்துவாக நாங்கள் வருத்தம் தெரிவிக்கிறோம்" என்று சொல்லிக் கொண்டு திரிகிற அல்லக்கைங்க உங்க வருத்தங்களையெல்லாம் உங்க மதப் பொந்துக்குள்ளே வைத்திருங்கள். பாய் வீட்டு பிரியாணி தான் உங்களோட இலக்கு என்பது எமக்குத் தெரியாமலில்லை.

உண்மையிலேயை வருத்தம் தெரிவிக்க விரும்பினால் வருடாவரும் பாய்ங்க வீடுகள் மீது கல்லெறிவதற்காகவே ஊர்வலத்தில் கலந்து கொள்கிற அன்னக்காவடிகளை அடையாளம் கண்டு தனித்து பிரித்து நையப் புடையுங்கள்.

https://m.facebook.com/story.php?story_fbid=1848744788543141&id=100002229137896

No comments:

Post a Comment