Monday, September 24, 2018

முஸ்லீம்கள் பற்றி அம்பேத்கர்

தோழர் பாவெல் சக்தி
20180924

ஆர்.எஸ்.எஸ் அம்பேத்கரை விரும்புவது ஏன்? விழா எடுத்து கொண்டாடுகிறதே ஏன்? கீழேயுள்ள அம்பேத்கர் எண்ணங்களை வாசியுங்கள். உங்களுக்குப் புரிந்து விடும்.

அம்பேத்கர் எழுதுகிறார்,

“இந்திய போர்ப்படையினரில் முஸ்லீம்களின் எண்ணிக்கை 5௦% என்பது இந்துக்களை அச்சுறுத்தக்கூடிய பெரிய விகிதமாகும்...

இந்த ‘வாயில் காவலர்கள்’ இந்தியாவின் விடுதலையையும் தன்னாட்சியையும் கட்டிக்காப்பற்றுவார்களென இந்துக்கள் எந்த அளவுக்கு நம்ப முடியும்?.. படையெடுப்பு ரஷ்ய நாட்டிலிருந்து வந்தால் இவர்களை நம்பலாம்..

ஒருவேளை ஆப்கானியர்கள் தனியாகவோ, பிற முஸ்லீம் நாடுகளுடன் கூட்டுசேர்ந்துகொண்டோ இந்தியாவின் மீது படையெடுத்தால் அப்போதும் இவர்கள் உறுதியுடன் எதிர்த்து நின்று நாட்டைக் காப்பாற்றுவார்களா? அல்லது அவர்கள் தாராளமாய் உள்நாட்டில் நுழைய வழிவிட்டுப் பகைவர்களுடன் ஒத்துழைப்பார்களா? இந்தச்சிக்கலை இந்துக்கள் எவரும் புறக்கணித்து விட முடியாது.

முஸ்லீம்கள் நிறைந்த இப்படை நாட்டை காக்குமென்று இந்துக்கள் நம்பிக்கை கொள்ள முடியுமா? முடியும் என்று போலி தேசியவாதிகள்தான் பதிலளிப்பர்...

மேலும் ஐரோப்பியரை தம்மினும் மேலானவர்களாக ஏற்றுக்கொள்ளும் முஸ்லீம்கள், இந்துக்களை தம்மினும் தாழ்வானவர்களாக கருதுவதையும் மறுப்பதற்கில்லை... இத்தனை எதிர்மறை சூழல்களில் முஸ்லீம்கள் நாட்டுப்பற்றோடு போராடுவார்கள் என்று கருதும் இந்துக்கள் உண்மையாகவே மிகுந்த அசட்டு துணிச்சல் கொண்டவர்கள்தான்.

இந்துஸ்தான் மாநிலத்திலிருந்து.. பெரும்பாலும் இந்துக்களிடமிருந்து ஆண்டுதோறும் கிடைக்கும் 52 கோடி வருவாய் இந்துக்களல்லாதவர்கள் பெரிதும் நிறைந்துள்ள முஸ்லீம் படையின் செலவுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய அவலநிலை எத்தனை இந்துக்களுக்கு தெரியும்?

இதனை உடனடியாக நிறுத்தி, முஸ்லீம் மேலாதிக்கத்தை நீக்குதலை எவ்வாறு சாதிக்க இயலும்? பாகிஸ்தான் பிரிவினையை ஆதரித்தல் ஒன்றே அதற்கு உற்ற வழியாகும்... அதனால் இந்தியாவின் வலிமை பன்மடங்காகும். பிரிவினையை எதிர்ப்பது காசு கொடுத்து கொள்ளிக்கட்டை வாங்கி முதுகில் சொரிந்து கொள்வதற்கு ஒப்பாகும்."

அம்பேத்கர் பேச்சும்-எழுத்தும் தொகுதி-15 பக்கம்- 13௦ to 143 வரை இதே வன்மம்தான். (நூல்- பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை).

முஸ்லீம்களிடம் காணப்படும் இரண்டாவது விஷயம் இந்துக்களின் பலவீனங்களை தங்கள் சுயநலத்துக்கு பயன்படுத்தி கொள்ளும் போக்காகும். இந்துக்கள் எதையேனும் ஆட்சேபித்தால் அதுதான் தங்களுக்கு வேண்டும் என்று அடம்பிடிப்பது முஸ்லீம் கொள்கை. இதற்கு விலையாக வேறு ஏதேனும் சலுகைகள் அளிக்க இந்துக்கள் முன்வந்தால் அப்போது முஸ்லீம்கள் தங்கள் கோரிக்கையை கைவிட்டு விடுவார்கள்...

இந்துக்களின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் முஸ்லீம்களின் போக்குக்கு, பசுவதையை அனுமதிக்கவேண்டும், மசூதிகளின் முன்னால் வாத்திய இசை கூடாது என்ற அவர்களது கோரிக்கைகளை மற்றொரு உதாரணமாக கூறலாம். சமயவினை முறைகளை செய்வதற்கு பசுக்களை உயிர்பலி கொடுக்க வேண்டும் என்று இஸ்லாமிய சட்டம் எங்கும் வலியுறுத்தவில்லை. ஹஜ் யாத்திரை மேற்கொள்ளும் எந்த முசல்மானும் மெக்காவிலோ, மதினாவிலோ பசுக்களை பலியிடுவதில்லை. ஆனால் இந்தியாவிலோ, முசல்மான்கள் பசுக்களை பலியிடுவதை தவிர வேறு எந்தப் பிராணிகளையும் பலியிடுவதில் திருப்தியடைய மாட்டார்கள். எல்லா முஸ்லீம் நாடுகளிலும் மசூதி முன்னால் வாத்திய இசை இசைக்கலாம். அங்கெல்லாம் இதற்கு எந்த எதிர்ப்பும் இல்லை. மதச்சார்பற்ற நாடல்லாத ஆப்கானிஸ்தானில் கூட மசூதி முன் வாத்திய இசை இசைப்பதற்கு எத்தகைய ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் இந்தியாவில் மட்டும் மசூதி முன்னால் வாத்திய இசை கூடாது என்று முசல்மான்கள் பிடிவாதம் பிடிக்கின்றனர். இதற்கு வேறு எந்த காரணமும் இல்லை. இந்துக்கள் அதனை ஓர் உரிமையாக கோருவதே காரணம்.

இங்கு நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய மூன்றாவது விஷயம் குண்டர்கள் முறையை முஸ்லீம்கள் அரசியலில் கைக்கொள்வதுதான். குண்டாத்தனம் அவர்களது அரசியல் போர்த்தந்திரத்தில் ஒரு நிலையான இடத்தைப் பெற்றுவிட்டது என்பதற்கு அவர்கள் அடிக்கடி கிளர்த்திவிடும், தூண்டிவிடும் கலகங்கள் கண்கூடான சான்றாக அமைந்துள்ளன. செக்குகளுக்கு எதிராக சூடட்டன் ஜெர்மானியர்கள் கையாண்ட முறைகளை இந்திய முஸ்லீம்கள் தெரிந்தே, திட்டமிட்டே பின்பற்றுவதாக தோன்றுகிறது.

முஸ்லீம்கள் வெறிபிடித்தலையும்போது இந்துக்கள் சாத்வீகத்தை கடைப்பிடித்து வந்தனர். இந்த மோதலில் அவர்கள்தான் முஸ்லீம்களைவிட மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வந்தனர். ஆனால் இப்போது அப்படியல்ல. அடிக்கு அடி , குத்துக்கு குத்து என்று பதிலடி கொடுக்க இந்துக்கள் கற்றுக் கொண்டுவிட்டனர். இப்போதெல்லாம் ஒரு முசல்மானை கத்தியால் குத்துவதற்கு அவர்கள் எத்தகைய மனச்சான்றின் உறுத்தலோ, தயக்கமோ கொள்வதில்லை. இந்த பலி வாங்கும் போக்கும் குண்டந்தனத்துக்கு பதில் குண்டந்தனம் எனும் அருவெருக்கத்தக்க கட்சியை தோற்றுவித்திருக்கிறது.

#ஆர்எஸ்எஸ்_அம்பேத்கரை_விரும்புவது_ஏன்-3. தொகுதி-15 பக்கம்-390,392.

இந்துக்களை விட தாழ்த்தப்பட்ட இன மக்களுக்கு முஸ்லீம்கள் ஒன்றும் பெரிய நண்பர்களல்ல என்பது எனது கருத்து.” (தொகுதி 35 பக் 468)

“இந்திய இராணுவத்தில் முஸ்லீம்களின் செல்வாக்கை குறைத்து, விரோத சக்திகளை வெளியேற்றிவிட வேண்டும். நமது பூமியை நாம் காப்பாற்றுவோம். இந்தியாவில் முஸ்லிம் சாம்ராஜ்யத்தை பாகிஸ்தான் விரிவுபடுத்தி விடும் என்று தவறான கருத்துக் கொண்டிருக்க வேண்டாம். இந்துக்கள் அதை மண்ணை கவ்வச் செய்வார்கள். சாதி இந்துக்களிடம் நான் சண்டையிடுகிறேன் என்பது உண்மைதான். ஆனால் நமது பூமியைக் காப்பற்றுவதற்காக நான் எனது உயிரையும் கொடுப்பேன் என்று உங்கள் முன் சத்தியம் செய்கிறேன்” (தொகுதி 37 பக் 294).

“பாகிஸ்தானில் அவர்கள் (தாழ்த்தப்பட்ட மக்கள்) இந்தியாவிற்கு வர அனுமதிக்கபடுவதில்லை. அவர்கள் பலவந்தமாக இஸ்லாமிற்கு மாற்றப்படுகிறார்கள். ஹைதராபாத்தில் அங்குள்ள முஸ்லிம் மக்கள் தொகையை அதிகரிக்கும் நோக்கத்தோடு அவர்கள் பலவந்தமாக முஸ்லீம்களாக மாற்றப்படுகிறார்கள்.” (தொகுதி 35 பக் 473)

தொடர்ந்து அடுத்தடுத்த பக்கங்களில் (474, 475) “முஸ்லீம்கள் நண்பர்களல்ல” என்ற தலைப்பில் அம்பேத்கர் ஒரு ஆர்.எஸ்.எஸ் ஊழியர் போலவே அவ்வளவு முஸ்லீம் விரோத்ததுடன் பேசிச் செல்கிறார்.

ஏன் ஆர்.எஸ்.எஸ். அம்பேத்கரை ஆதரிக்கிறது என்று இப்போது புரிகிறதா.

நன்றி: தோழர் பாவெல் சக்தி

No comments:

Post a Comment