Saturday, August 12, 2017

அந்தணர் பாவை நீ ... நான் அரசரில் வந்தேன்" எனக் கூறி இராமன் தவிர்க்கிறான்

Maya Devar
Via Facebook
2017-08-11

ராவணன் தங்கை சூர்ப்பனகை
ராமனை கண்டு பேசுகிறாள் ..
அப்போது அவளிடம்

"நீ யார் ?" என்று ராமன் கேட்க ...

"நான் பிரம்மன் மகன் புலத்தியன் மகனாகிய விச்சிரவசுவின் மகன் ராவணனின் தங்கை" என்கிறாள் சூர்ப்பநகை.

அவள் ராமனிடம் "என்னை மணந்து கொள்வாயா?" என கேட்க...

"அந்தணர் பாவை நீ ...
நான் அரசரில் வந்தேன்" எனக் கூறி இராமன் தவிர்க்கிறான்

( கம்ப ராமாயணம் 2780)

முழுப்பாடல்

நிந்தனை அரக்கி நீதி நிலை இலாள்; வினை மற்று எண்ணி

வந்தனள் ஆகும்' என்றே வள்ளலும் மனத்துள் கொண்டான்;

'சுந்தரி! மரபிற்கு ஒத்த தொன்மையின் துணிவிற்று அன்றால்;

அந்தணர் பாவை நீ; யான் அரசரில் வந்தேன்' என்றான்.

No comments:

Post a Comment