Monday, August 14, 2017

கஃபீல் கான் பத்தி சங்கிகளின் அவதூறுகள்

ஷாஜகான் R
Via Facebook
2017-08-14

கஃபீல் கான் பத்தி செய்தி வந்ததும் சங்கிகளும் பிஜேபி ஐ.டி. செல்லும் அப்படியே ஷாக் ஆயிட்டாங்க. சுயநினைவு வந்ததும் உடனே அவங்களோட வழக்கமான ஸ்டைலில் புறப்பட்டாங்க. சும்மா சொல்லக்கூடாது... எத்தினி வருசமா கிளப்பி விடறதே தொழிலா வச்சிருக்கிறவங்க... சும்மா கலக்கிட்டாங்க.

உடனே நம்ம இன்பாக்சுக்கு வதவதன்னு ஆளுக வந்துட்டாங்க. என்ன சார்... இப்படிச் சொல்றாங்களேன்னு. ஒவ்வொருத்தருக்கும் பதில் சொல்லி முடியலே. அதனாலே இங்கே போடறேன். நான் கோரக்பூர் போகலே, அங்கே உண்மை என்னன்னு தெரியாது. ஆனா, சாதாரண அறிவோட சிந்திச்சாலே சங்கிகளோட வதந்திகள் எவ்வளவு ஓட்டை இருக்குன்னு மட்டும் காட்டறேன்.

*1. கபீல் கான் சிலிண்டர்களை தன்னுடைய ஆஸ்பத்திரிக்கி எடுத்துட்டுப் போனதால்தான் குழந்தைகள் செத்துப்போச்சு*

ஆக்சிஜன் குறைபாட்டால சாகலே, மூளை அலர்ஜியாலதான் செத்தாங்கன்னு முதல்வர் யோகி மூணு நாளா சொல்லிட்டு இருந்தாரு. ஆகஸ்ட் மாசம் கொத்துக் கொத்தா சாகறது வழக்கம்தான்னு சொல்லிட்டிருந்தாரு சுகாதார அமைச்சர். அப்புறம் சிலிண்டர் இருந்தா என்ன, இல்லாட்டி என்ன?

*2. சிலிண்டரைக் கொண்டு வந்தவரில்லே, சிலிண்டரை ஆஸ்பத்திரியிலிருந்து தன்னோட ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போனவருதான் கஃபீல் கான்*

ஏதோ சின்ன ஆஸ்பத்திரியில பேஷன்ட் பக்கத்துல சிலிண்டர் வச்சிருப்பாங்களே... அதை கற்பனை செஞ்சுகிட்டானுக போலிருக்கு. இந்த மாதிரி பெரிய ஆஸ்பத்திரிகளில் எமர்ஜென்சிக்கு மட்டும்தான் அந்தந்த டிபார்ட்மென்ட்ல ஒண்ணு ரெண்டு சிலிண்டர் கைவசம் இருக்கும். மத்த்தெல்லாம் சென்டரலைஸ்டுதான். மொத்தமா வந்து இறங்குகிற சிலிண்டர்களை ஒரு இடத்தில் வச்சு, அங்கிருந்து ஆஸ்பத்திரி முழுக்கவும் பைப்லைன் மூலமா கேஸ் போகும். அது தனி டிபார்ட்மென்ட். (மாதிரிக்கு படம் பாருங்க. ஆனா, இந்த ஆஸ்பத்திரியில் லிக்விட் ஆக்சிஜன்தான் இருந்திருக்கும்னு நினைக்கிறேன். அது இப்படி சிலிண்டர்களாக இருக்காது.)

*3. ஆக்சிஜன் சப்ளை பண்ண கம்பெனிக்கு பணத்தை நிறுத்தி வச்சவன் இவன்தான்*

முந்தைய பத்தியில் படிச்சீங்க இல்லையா, அத்தோட இதையும் சேத்துக்குங்க. குழந்தை வார்டு, பிரசவ வார்டு, கேன்சர் வார்டு இப்படி பல்வேறு விதமான சிகிச்சை தர்ற டிபார்ட்மென்ட்களுக்கு சிகிச்சை விஷயமான அதிகாரம் மட்டுமே இருக்கும். டெண்டர் விடறதோ, சிலிண்டர் வாங்கறதோ, பேமென்ட் பண்றதோ எல்லாம் இவங்க பார்வைக்கு வரவே வராது, தேவையும் இல்லை. அதெல்லாம் அட்மினிஸ்டிரேஷன் – அகவுன்ட்ஸ் விவகாரம். அதனால, இந்த கபீல் கானும் சரி, அல்லது வேறு எந்த டிபார்ட்மென்ட்டுடைய ஹெட்டும் சரி, சிலிண்டர் பேமென்ட் நிறுத்தவெல்லாம் முடியாது.

*4. ஆஸ்பத்திரியின் ரூல்ஸ் பிரகாரம் பத்து லட்ச ரூபாய்க்கு மேல் கிரெடிட் வைக்க கூடாது. அப்போ 69 லட்சம் வரை கிரெடிட் ஏறி நிக்கிறதுக்கு யார் பொறுப்பு?*

அதான் நாங்களும் கேக்கறோம். அந்தக் கம்பெனி, பிப்ரவரியிலிருந்து ஆகஸ்ட் முதல் வாரம் வரைக்கும் ஏழுவாட்டி கடுமையா கடிதங்கள் எழுதியிருக்கு. ஒவ்வொரு கடிதத்தின் நகலும் லக்னோவில் இருக்கிற சுதாதார அமைச்சகத்துக்கும் போயிருக்கு. அப்போ பேமென்ட் நிறுத்தினது யார்? 

அதுபோக, 15 வருசமா சப்ளை செஞ்சுட்டிருந்த ஒரு கம்பெனியை விட்டுட்டு யோகி அண்ட் கோ ஆட்சிக்கு வந்த்தும் புதுசா ஒரு கம்பெனிக்கு ஆர்டர் கொடுத்திருக்காங்க. அந்த பழைய கம்பெனிக்கும் 20 லட்சம் ரூபாய் பாக்கி இப்பவும் இருக்கு. அந்த பழைய கம்பெனிதான் அவசரத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் 200 சிலிண்டர்களை அனுப்பியிருக்கு. ஆக, பழைய கம்பெனியை விட்டுட்டு புது கம்பெனிக்கு ஆர்டர் மாத்தினது ஏன்? யாரு கமிஷன் அடிச்சா? கம்பெனி திரும்பத் திரும்ப கடிதங்கள் அனுப்பியும் அமைச்சகம் ஏன் நடவடிக்கை எடுக்கலே?

*5. கபீல் கான் ஆஸ்பத்திரி நடத்திட்டிருந்தார். கவர்மென்ட வேலையில் இருந்துகிட்டு தனியா பிராக்டிஸ் செய்யறது சட்டவிரோதம்*

அவர் ஆஸ்பத்திரி நடத்திட்டிருந்தாரா, கிளினிக் நடத்திட்டிருந்தாரா தெரியாது. ஆனா, அரசு மருத்துவமனையில் வேலை செய்யறவங்க தனியா பிராக்டிஸ் செய்யறது சட்டவிரோதம் கிடையாது. அதுக்கு சில ஃபார்மாலிட்டீஸ் இருக்கு. அதைச் செஞ்சா போதும்.
அப்புறம், ஒருத்தர் கவர்மென்ட் ஆஸ்பத்திரியில் வேலை செய்யறார்னா அதுக்கு முக்கியமா ஒரே காரணம்தான் இருக்க முடியும். மக்கள் மீதான அக்கறை. கவர்மென்ட் ஆஸ்பத்திரியில் கிடைக்கக்கூடிய சம்பளம் 1 லட்சம் இருக்கலாம். எந்தவொரு சாதாரண டாக்டரும் சாதாரண ஒற்றை ரூம் கிளினிக் வச்சே மாசம் 2-3 லட்சம் ஈசியா சம்பாதிக்கலாம். வேலைக்குப் போகத் தேவையே இல்லை. அதையும் மீறி அவங்க வேலைக்குப் போறாங்கன்னா அவங்க மனசுல கொஞ்சம் ஈரம் இருக்குன்னு அர்த்தம்.

*6. அவர் பாஜக விரோதி. யோகிக்கும் பாஜகவுக்கும் எதிரா ட்வீட் போட்டிருக்காரு. அவர் காங்கிரஸ்காரர் / சமாஜ்வாதி.*

அவர் போட்டதா காட்டப்படுகிற ட்வீட்கள் எல்லாம் நிஜமாவே அவர் போட்டதா இல்லே சங்கிகளுடைய போட்டோஷாப் வேலைகளா தெரியாது. ஏன்னா, அரசு ஊழியரா இருக்கிற ஒருவர் இந்த மாதிரி அரசியல் சார்பு கருத்துகளை எழுத மாட்டார். அந்தளவுக்கு அவருக்குத் தெரியாமல் இருக்காது. சரி, அப்படியே அவரே எழுதினார்னு வச்சுக்குவோம். உலகத்துல இருக்கிற எல்லாரும் பாஜகவை ஆதரிச்சுத்தான் ட்வீட் போடணும்னு ஏதாச்சும் சட்டம் இருக்குதா? சமாஜ்வாதியை அல்லது இதர கட்சிகளுக்கு ஆதரவா எழுதக்கூடாதுன்னு சட்டம் போட்டாச்சா?

சங்கிகள் விஷயத்தில் ஒரே ஒரு விஷயம்தான் விட்டுப்போச்சு. இந்தியக் குழந்தைகளைக் கொல்வதற்காக பாகிஸ்தானால் அனுப்பப்பட்ட தீவிரவாதிதான் கஃபீல் கான் – இதையும் சேத்துட்டா புரட்டல்களுக்கு முழுமையான சீன் கிடைச்சுடும்.

*7. கஃபீல் கான் மேலே பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டு இருக்கு... ஒரு வருசம் ஜெயிலில் இருந்தார்.... முன்னா பாய் மாதிரி பரீட்சை எழுதினார்.* 

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான FIR/Judgements நம்பரை தர முடியுமா? 

இவ்வளவு குற்றச்சாட்டுகள் உள்ள ஒருவரை தலைமை பொறுப்பில் வைக்கும் அளவுக்கு யோகிநாத்  முட்டாளா? 

*ஆட்சி மாற்றம் -> பழைய டெண்டர் ரத்து செய்யாமலே ->புதுசா டெண்டர் ஏதும் இல்லாமலே -> புதிய கம்பெனிக்கு ஆக்சிஜன் சப்ளை ஆர்டர் -> புதிய கம்பெனிக்கு நிலுவைத் தொகை -> புதிய கம்பெனியின் ரிமைண்டர் கடிதங்கள் -> அதன்மேல் செயல்படாமை*

இதன் பின்னால் இருப்பது ஊழல், அரசியல் தொடர்புகள். அதைப்பத்திப் பேசறதைவிட்டுட்டு கஃபீல் கான் பின்னாடி அலையாதீங்க.

No comments:

Post a Comment