Sunday, August 13, 2017

ஆர்.எஸ்.எஸ் vs சுதந்திர போராட்டம்

Satheesh kumar
Via Facebook
2017-08-13

ஆர்.எஸ்.எஸ் vs சுதந்திர போராட்டம்

1942 ஆம் ஆண்டு காங்கிரஸ் , ‘வெள்ளையனே வெளியேறு ‘ இயக்கத்தை அறிவித்தபோது , கல்கத்தா மாகாண அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஷியாம் பிரசாத் முகர்ஜி .

ஆர்.எஸ்.எஸ் .சின் அரசியல் பிரிவாக ஜன சங்கம் கட்சி பெயர் மாற்றம் பெற்ற போது , அதன் மூத்த தலைவராக இருந்தவரும் இவர்தான் . இந்த முகர்ஜி காங்கிரஸ் கட்சி போராட்டத்தை அறிவித்தவுடன் மாகாண அமைச்சர் என்ற முறையில் பிரிட்டிஷ் அதிபராக இருந்த சர்.ஜான் ஹீர்பட்டுக்கு,அவர் கேட்காமலேயே கடிதம் எழுதினார் .

” காங்கிரசின் பிரிட்டிஷ் எதிர்ப்பு இயக்கம் , பல பகுதிகளுக்கும் பரவும் பேராபத்து இருக்கிறது . யுத்தம் நடக்கும் காலத்தில் , இப்படி மக்கள் உணர்வுகளை தூண்டிவிடுவது உள்நாட்டு பாதுகாப்பை சீர் குலைத்துவிடும். எனவே காங்கிரசார் போராட்டத்தை அடக்கியாக வேண்டும்” என்று கடிதம் எழுதியவர்தான் இந்த முகர்ஜி .

ஆதாரம் : இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் (17.8.1992 )

#RSSvsfreedomfight

------

ஆர்.எஸ்.எஸ் vs சுதந்திர போராட்டம்

அந்தமானில் சவர்க்காரின் சிறை வாழ்க்கை நிறைய சுவாரசியமானது. அவருடன் சிறையிலிருந்த 92 வயதான தினேஷ் குப்தா என்பவர் ஆக. 9, 2003 அன்று டில்லியில் அளித்த ஒரு பேட்டியில்,

"வி.டி. சவர்க்காரும் நானும் ஒன்றாக சிறையில் இருந்தவர்கள். அவர் ஒன்றும் சிறையிலேயே உயிரைவிட்டு விடவில்லை. சிறையிலேயே உயிரைப் பறிகொடுத்த 8 விடுதலை தியாகிகளுக்கு அவர்களின் நினைவைப் போற்ற போர்ட்ப்ளேயரில் வைக்கப்பட்டிருக்கும் சிலைகளுக்கு மத்தியில் சவர்க்காரின் சிலையையும் வைத்திருப்பது அந்த மற்ற விடுதலை வீரர்களையும் அவமானப்படுத்துவதாகும். மேலும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உதவுவதாகக் கூறி மன்னிப்புக் கடிதம் எழுதியனுப்பிய சவர்க்காரை விடுதலைப் போராட்டத் தியாகியாக சித்திரிப்பது மாபெரும் தவறாகும்; தாங்கமுடியாத துன்பமாகும்" என்று குறிப்பிட்டார்.

#RSSvsfreedomfight

--------

ஆர்.எஸ்.எஸ் vs சுதந்திர போராட்டம்

1911-ஆம் ஆண்டு சவார்க்கர் எழுதிய கருணை மனுவில் "1906-07 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் நிலவிய நம்பகத் தன்மையற்ற சூழலினால் நாங்கள் பாதை தவறிவிட நேரிட்டது. நாட்டின் நன்மையிலும், மனித நேயத்திலும் அக்கறை கொண்ட யாரும் தவறான பாதையில் செல்ல விரும்ப மாட்டார்கள். எனவே பெருந்தன்மை வாய்ந்த அரசு என்னை மன்னித்து விடுதலை செய்தால் நான் விசுவாசமாக இருப்பதோடு, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் தவறான பாதை செல்வோரையும் என் வழிக்கு மாற்றுவேன்... எனவே பாதை தவறிய இந்தப்  பிள்ளை பெற்றோரிடம் மன்னிப்புக் கோருவதில் தவறில்லை" என்று குறிப்பிடுகிறார். அதாவது பிரிட்டிஷார் இவருக்குப் பெற்றோராம்.

#RSSvsfreedomfight

-----

No comments:

Post a Comment