Saturday, May 16, 2020

உன் பிள்ளைக்கு இலவசமா தரேன். படிக்க மட்டும் அனுப்பு

'ஒரு வேளை சாப்பாட்டுக்கே 
பிரச்சினையா இருக்கு.
இதுல எங்க சாமி
எம்புள்ளைய படிக்க அனுப்ப?'

"உன் புள்ளைய படிக்க அனுப்பு.
அந்தப் பிள்ளைக்கு
சாப்பாட்டை நான் தரேன்" - தமிழக அரசு அரை நூற்றாண்டுக்கு முன்பு.

'என் புள்ள பள்ளிக்கூடத்துக்கு போட்டுட்டு போக நல்ல துணி இல்லைங்க'

"புள்ளைய படிக்க அனுப்பு. 
சீருடையை நான் தரேன்"

'என் புள்ள கால்ல செருப்பில்லாம 
வெயில்ல, மழையிலயும் நடக்குது'

"புள்ளைய படிக்க அனுப்பு.
செருப்பு நான் தரேன்"

'பள்ளிக்கூடத்துல
வெறும் சோறும், குழம்பும்தானாம்.
அத திண்ணுட்டு
எப்படிங்க என் புள்ள தெம்பா படிக்கும்?'

"இனி சத்துணவுல முட்டை போட சொல்றேன். சந்தோசமா?"

'புத்தகத்தை காசு கொடுத்து 
வெளியில வாங்க சொல்றாங்க சார். 
என்னால அதெல்லாம் முடியுமா?'

"புத்தகம், ஜியாமெண்டரி பாக்ஸ் எல்லாமும்
உன் பிள்ளைக்கு இலவசமா தரேன். 
படிக்க மட்டும் அனுப்பு"

'எம்புள்ள அஞ்சாப்பு வரை 
எங்கூர்லயே படிச்சிடுச்சிங்க.
அடுத்து ஆறாப்பு படிக்க பக்கத்து ஊருக்கு போனும். அது இங்கேர்ந்து 
4-5 மைல் தூரம் இருக்கும். தினமும் பஸ்ல போக காசுக்கு நான் எங்க போவேன்'

"உன் பிள்ளைக்கு இலவச பஸ் பாஸ் 
நான் தரேன். படிக்க அனுப்பு"

'பக்கத்து ஊர்ல என் புள்ள படிக்குது. 
அந்த ஊருக்கு அடிக்கடி பஸ் இல்லை. 
எப்படி அனுப்புறது?'

"கவலைப்படாதீங்க. உங்க பிள்ளைக்கு இலவசமா சைக்கிள் தரோம். படிக்க அனுப்புங்க"

'நாங்க மலைக்கிராமங்க. எங்க ஊர்லேர்ந்து தினமும் பிள்ளையை வெளியூருக்கு அனுப்பி படிக்க வைக்கிறது சாத்தியமில்லைங்க'

"உங்களை மாதிரி மக்களுக்குத்தான் 
அரசாங்கம் சார்பில்
உண்டு - உறைவிடப் பள்ளிகளை 
நாங்கள் கட்டியிருக்கோம். 
பிள்ளையை படிக்க அனுப்புங்க. 
தங்குற இடம், சாப்பாடு, படிப்பு அனைத்துக்கும் நாங்க பொறுப்பு"

'வயசுக்கு வந்த பொம்பள புள்ளைய 
எப்படி அந்த மூணு நாளுக்கு 
பள்ளிக்கூடம் அனுப்புறது?
அதான் அந்த நாட்கள்ல பள்ளிக்கூடத்துக்கு அனுப்பறதில்லை'

"தைரியமா அனுப்புங்க.
கவலைப்படாதீங்க. அந்த நாட்களுக்குத் தேவைப்படும் நாப்கின்களை கொடுக்க
தானியங்கி நாப்கின் மிஷின்களை பள்ளிக்கூடத்தில் அமைச்சிருக்கோம். 
அதுக்காக எல்லாம் புள்ளைய
லீவ் போடச் சொல்லாதீங்க"

'பத்தாவது வரை அரசாங்க பள்ளிக்கூடத்தில் படிக்க வச்சிட்டேன். 
ஏதோ கம்பியூட்டர் படிப்பு வந்துருக்காம்ல, அதுல சேர்த்து விடலாம்னு பார்க்குறேன். எங்க போயி சேர்க்குறதுன்னு தெரியலையே?!'

"எங்கக்கிட்டயே அனுப்புங்க.
Computer Science படிப்பை நாங்களே சொல்லித்தரோம். படிக்கிற புள்ளைக்கு உதவியா இருக்க 
இலவசமாக லேப்டாப்பும் தரோம்"

'என் புள்ளைதாங்க என் வம்சத்துலயே பள்ளிக்கூடம் வரை போய்ப் படிச்சவன். அவனை காலேஜ் படிப்புக்கு அனுப்ப பணத்துக்கு நான் எங்க போவேன்? 

"குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு 
கல்லூரிப் படிப்பும் இலவசம். 
தயங்காம படிக்க அனுப்பி வைங்க.
நாங்க பார்த்துக்குறோம்"

'எம் புள்ள நல்லா படிச்சி
டாக்டர் படிப்புக்கோ,
என்ஜினியர் படிப்புக்கோ போகனும்னா
எங்க போயி படிக்கனும்?'

"நம்ம பிள்ளைகள்
எங்கேயும் போக வேணாம்.
அவுங்க டாக்டராகவோ, பொறியாளராகவோ ஆகனும்னா நம்ம மாநிலத்துலயே படிக்கலாம். அதுக்கு தேவையான மருத்துவ கல்லூரிகளையும், பொறியியல் கல்லூரிகளையும்
நம்ம அரசு கட்டித்தரும்.
அதுக்கு 12வதுல நல்ல மார்க் எடுத்தாப்போதும்" 

'பொம்பளப்புள்ள 8வதுவரை படிச்சிருக்கு. அது போதும்னு பள்ளிக்கூடத்தை விட்டு நிறுத்திட்டோம்.
சட்டுப்புட்டுனு அடுத்த தை மாசத்துல 
கல்யாணத்தை முடிச்சிடுவோம்'

"பெண் பிள்ளைகளை
முழுமையா படிக்க விடுங்க.
12ம் வகுப்புவரை படித்தால் 
திருமணத்துக்கு 50,000 ரூபாய் பணமும் 
தாலிக்கு 8 கிராம் தங்கக்காசும் அரசாங்கம் சார்பா தரோம். படிக்க அனுப்புங்க"

'நீங்க நல்லாயிருக்கனும் சாமி.
என் வம்சத்துல என் புள்ள தான் முதல் பட்டதாரி. இனி குடும்பம் தழைச்சிடும்'

திடீரென ஒரு வில்லன் வரான்,
"இனி நீங்கல்லாம் எனக்குக் கட்டுப்படனும். நான் சொல்றபடிதான் நீங்கல்லாம் படிக்கனும். நீ என்ன தேர்வு எழுதனும் என நான் தான் சொல்லுவேன்.
அதே மாதிரி இந்தக் கல்லூரிகள் எல்லாம் உனக்கு சொந்தமா இருக்கலாம். ஆனா அதில் யார் யாரை படிக்க வைக்கனும்னு நான்தான் முடிவெடுப்பேன்.
ஒரே நாடு, ஒரே கொள்கை,
ஒரே உணவு என இனி இப்படித்தான். 
இதை ஏற்று நீங்க நடக்கலைனா நீங்கல்லாம் தேசத் துரோகி,
தேச விரோதின்றான்.
அடுத்து என்ன பாடம் சொல்லிக் கொடுக்கனும்னு 
நான்தான் சொல்லப் போறேன்றான்".

இதுதான் அரை நூற்றாண்டுகளாக 
தமிழக அரசுகளின் உழைப்பால் கிடைத்த கல்வி என்னும் சமூகநீதி, 
இந்த வில்லன்களான பாவிகளின் கையில் சிக்கிய வரலாறு. 
இலவசத்தால்தான் தமிழ்நாடு முன்னேறவில்லை என்று  அரைகுறை அரசியல் விமர்சகர்களும், பார்ப்பனிய ஆதிக்க சக்திகளும் கத்துறான்.

வில்லனுங்க ஒரு சைடுலே
இப்படி செய்துக்கிட்டு இருக்கும் போது
இன்னொரு சைடிலே,
"உனக்கு எதுக்குக் கல்வி? 
குலத்தொழிலை பாரு,
உன் தாய் மொழியை விட தெய்வ மொழி சமஸ்கிதம்தான் முக்கியம்ன்னு ஒரு குரூப் வெறியாக கத்துறான். நமது தெய்வீக புலவர் திருவள்ளுவரின் வெண்னிற உடையை காவி உடையாக மாற்றி நெத்தியிலும், உடம்பிலும் பட்டை அடிக்கிறான்.

பிராமணன் மூளை பலம் உள்ளவங்கன்னு சொல்றான். இவர்களின் தந்திரத்தை நீங்க புரியக்கூடாதுன்னு ராமருக்கு கோவில், துழுக்கனுக்கு வேட்டு, 
பாவாடை கிறிஸ்துவன் ரொட்டி பால் பவுடருக்கு விலை போனவங்கன்னு கலவரத்தை உருவாக்குறான்.
இந்த மதக்கலவரத்துக்கு உங்களை அடியாளாக்குறான். அப்புறம் நான் உயர்ந்தவன் தலையில் பொறந்தவன்னுட்டு,
அடுத்தவரை தாழ்த்தி மத்தவங்களை வெச்சு சாதிக்கலவரம் நடக்க அனைத்தையும் செய்யுறான்.

மதுவால் மயங்கி, ஜாதியால் அறிவிழந்து, மதத்தால் மிருகமாகி உங்கள் தலைமுறை வாழ்வை அழிக்காதீர்கள். வஞ்சகர்களை இனம் கண்டு அந்த சக்திகளின் விஷத்தினை முறியடிப்பீர்.

தங்கள் ஆதிக்கத்தை அனைத்து துறைகளி லும் பல நூற்றாண்டுகளாக செய்து வருபவர்கள், தங்கள் வல்லாதிக்கத்தை வலுப்படுத்த தற்போது கிடைத்துள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி, இன்று மிகவும் ஆக்ரோஷமான வெறியோடு உங்களுக்கெதிராக செயல்படுகின்றனர். இதையெல்லாம் வலிமையாக ஊடக சக்திகள் மூலம் கீழேயுள்ள ஒரே ரகமான இவங்களெல்லாம் நல்லாவே வரலாற்றையே மாற்றி உங்களை பேச விடாமல் கத்துறாங்க! நீங்கள் இதையெல்லாம் நல்லா புரிஞ்சிக்கனும்.

Thiyagarajan Rangaswamy

No comments:

Post a Comment