Saturday, July 26, 2025

குரோமோசோமும் இடஒதுக்கீடும்

*எழுதியவர்: Jagadeesan Saivaraj*
---------------------------

உங்களுடைய shoe வை எடுத்து அதில் இருக்கும் lace ஐ பாருங்கள். அதன் முனையில் ஒரு கச்சை (Aglet) இருக்கிறதவல்லவா? அது எதற்காக கொடுக்கப்பட்டுள்ளது? Shoelaces லிருந்து நூல்கள் திரிந்து வராமல் இருக்க. 

சரி இப்போது நமது உடலில் இருக்கும் ஒரு செல்லை எடுத்துக்கொண்டால் அதில் உட்கரு இருக்கும், உட்கருவில் குரோமோசோம் இருக்கும். இந்தக் குரோமோசோமை எடுத்துக் கொள்வோம்.

* குரோமோசோம் என்பது நூல் போன்ற நீளமான DNA மற்றும் புரதங்களால் ஆனது. 
* இந்த நீளமான டி.என்.ஏ நூலைச் சுருக்கி, செல்லின் உட்கருவில் அழகாகவும் நேர்த்தியாகவும் அடைத்து வைக்கும் வேலையைத்தான் இந்த குரோமோசோம்கள் செய்கின்றன.

ஒவ்வொரு குரோமோசோமின் முடிவிலும் மேலே சொன்ன சூலேசில் இருக்கும் முனைக்கச்சை போன்று ஒரு அமைப்பு இருக்கும். அதன் பெயர் தான் Telomeres.

இது என்ன செய்யும்? 

* குரோமோசொமில் இருக்கும் நூல் போன்ற டி என் ஏ திரிந்து வராமல் பாதுகாக்கும். 
* குரோமோசோம் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொள்ளாமல் பாதுகாக்கும். 
* ஒருவேளை குரோமோசோம் உடைந்தால் உடைந்த பகுதி இன்னொரு முனைப்பகுதியோடு இணைந்திடாமல் தடுத்து, உடைந்த பகுதியோடு மட்டுமே இணைவதை உறுதி செய்யும். 

இதுபோக மிக முக்கியமான வேலையையும் இது செய்கிறது. நமது உடலில் பெரும்பாலான செல்கள் பகுக்கும் திறனுடையவை அதாவது செல் பிரிதல் (cell division).
 
இப்படி பகுக்கும் செல்களுக்கு நீ பிரிவதை நிறுத்திக்கொள் என யார் சொல்வது? அந்த முக்கியமான வேலையைத் தான் இந்த Telomeres செய்கின்றன. எப்படி?

* தனது நீளத்தை குறைத்துக் கொள்வதன் வாயிலாக. ஒவ்வொரு பகுத்தலின் போதும் Telomeres யின் நீளம் குறைந்து கொண்டே வருகிறது. 
* முற்றிலுமாக குறைந்த உடன் அந்த செல் பகுவதை நிறுத்திக் கொள்கிறது. 
* அதன் பின் அந்த செல் ஒரு ஜாம்பி செல்லாக மாறி விடுகிறது. 
* இது முக்கியமாக உடலின் நோய் தடைகாப்பு மண்டல செல்களில் நடக்கிறது. 

இந்தச் செயல்பாடு எதை நினைவுபடுத்துகிறது? வயது முதிர்தலை நினைவு படுத்துகிறதா? நமக்கு வயதாகும் போது இது தான் நமது உடலில் நடக்கிறது. 

இதையெல்லாம் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் இந்த டெலோமியர்கள் வளர்வதற்கும் தேய்வதற்கும் வேறு என்னென்ன காரணங்கள் இருக்க முடியும் என்பதையும் ஆராய்ந்தனர். 

* டெலோமியர்கள் வளர்வதற்கு டெலோமரேஸ் எனும் நொதி காரணமாய் இருக்கிறது என்பதை எலிசபெத் பிளாக்பார்ன் என்கிற ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்தார். அதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. 

டெலோமியர்கள் தேய்வதற்கு மிக முக்கியமான காரணம் என ஒன்றையும் கண்டுபிடித்தனர். எது? 

* Lower Socio- economic status. சமூகத்தில் நிலவும் சமூக - பொருளாதார வேறுபாடுகள் மிக முக்கியமான காரணம் என கண்டறிந்தனர். 

சமூகத்தில் பல தரப்புகளில் ஒடுக்கப்படும் மக்களின் டெலோமியர்கள் மற்றவர்களை காட்டிலும் வெகு விரைவில் தேய்கிறது. அதனால் அவர்கள் சீக்கிரமே வயது முதிர்வினை அடைகிறார்கள். வயது முதிர்வினால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன என்பதை எல்லோரும் அறிவோம்.

* நம்முடைய நோய் தடையாப்பு மண்டலம் சரிவர வேலை செய்யாது, 
* நம்முடைய நினைவுத்திறன் மங்கி போகும், 
* உடல் உறுப்புகள் யாவும் சரிவர வேலை செய்யாது.
* இப்படி ஆயிரக்கணக்கான பிரச்சனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஒடுக்கப்பட்ட குடும்பத்தில் பிறக்கும் ஒரு குழந்தை, நல்ல ஒரு சமூக - பொருளாதார சூழல் கொண்ட ஒரு குடும்பத்தில் பிறக்கும் குழந்தையை விட பத்து வருடம் முன்னதாகவே வயது முதிர்வை அடையும். ஒடுக்கப்பட்ட மக்களின் சுற்றுப்புறம் என்பது எப்போதும் அழுத்தங்களால் சூழப்பட்டது:

* தெருவில் வசிக்கும் பக்கத்து வீட்டுக்காரரின் குழந்தை மருத்துவ உதவி கிடைக்காமல் இறந்து போயிருக்கும்.
* வேலைக்குப் போன இடத்தில் தனது பெற்றோர் விபத்தில் சிக்கி இறந்து போயிருப்பர்.
* தன்னை மேலத்தெருவை சேர்ந்த ஒருவன் சரியான கூலி கேட்டதற்கு "போடா பறப்பயலே" என திட்டி அடித்து இருப்பான்.
* நான் உட்கார்ந்த இடத்தை தீட்டு  என சொல்லி தண்ணீர் விட்டு கழுவி விடுவான்.
* என்னை விலங்குகளுக்கும் கீழான ஒரு உயிரினமாக என்னுடைய முதலாளி நடத்தி இருப்பான்.
* அம்பேத்கர் தெரு என்பதால் எனக்கு வேலை தராமல் இழுத்து அடித்திருப்பர்.
* நான் இந்த சாதி என தெரியும்போது எனது பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தவன் பாதியிலேயே எழுந்து போயிருப்பான்.
* தண்ணீர் கேட்டால் கொட்டாங்குச்சியில் தண்ணீர் கொடுத்திருப்பர்.
* மாட்டுக்கறி வைத்திருந்ததாக சந்தேகப்பட்டு கொல்லப்பட்டிருப்பார்
* அவரது கர்ப்பிணியான மனைவி/மகள்களின் வயிறு கிழிக்கப்பட்டு குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டிருக்கும். 
* அவர்களின் சொத்துரிமை, வழிபாட்டுரிமை, ஓட்டுரிமை போன்ற அடிப்படை உரிமைகள் ஃபாசிஸ்டுகளால் தெடர்ந்து மறுக்கப்பட்டது

இதெல்லாம் தான் stress factors. இது தான் டெலோமெராஸ் நொதியை மழுங்க செய்கிறது. டெலோமெரின் நீளத்தை குறைகிறது. அதனால் சீக்கிரம் வயதானவர்களாக ஆகிறார்கள்.

உங்களுக்கு மூன்று நாட்களுக்கு மேலும் உடம்பு சரியில்லை என்றால் மருத்துவர் ரத்தப் பரிசோதனை செய்யச் சொல்வார். அதில் C-Reactive Protein என்கிற சோதனையும் அடங்கும்.

* நோய் தொற்று இருந்தால் இதன் அளவு அதிகமாக இருக்கும். 
* அது மட்டும் இல்லை அதிகப்படியான மன அழுத்தம் இருந்தாலும் அழற்சி அதிகரித்து இதையும் அதிகரிக்கும். 

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் வளரும் குழந்தைகள் அதிக மன அழுத்தத்துடனே வளர்கிறார்கள். அதனால் அவர்களது C-Reactive Protein அதிகமாகவே இருக்கிறது, மேலும் சீக்கிரமே இதயம் செயல் இழந்து மரணிக்கிறார்கள்.

இதை விட கொடுமையான விஷயம் இம்மாதிரியான விளைவுகள் எல்லாம் நமது ஜீனில் பதியப் பெற்று அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்படும். என் அம்மாவை கருவில் சுமக்கும் போது எனது பாட்டி ஏதேனும் ஒரு வகையில் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருந்தால் அது என்னுடைய தலைமுறையே பாதிக்கும். இவை எல்லாம் அறிவியல் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்பட்ட விஷயங்கள்.

வறுமையிலும் ஒடுக்கு முறையிலும் வளரும் இந்த குழந்தைகள்

* சரியான வழிகாட்டுதல் இல்லாமல், சரிவர முடிவு எடுக்க தெரியாமல் சீக்கிரமே குடி மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள். 
* வண்டியில் வேகமாய் போய் விழுந்து மரணிக்கிறார்கள். 
* ரயிலில் படியிலே தொங்கி சாகசம் செய்து மரணிக்கிறார்கள். 
* கல்வியை விடுத்து அரிவாள் கத்தியுடன் ரீல்ஸ் போடுகிறார்கள்.

*சரிவர முடிவு எடுக்க தெரியாமல் போய் சாகிறார்கள் என்றால் சாகட்டுமே என்று தானே நினைக்கிறீர்கள்?* 

நீங்கள் கண்டிப்பாக நினைப்பீர்கள். 

உண்மையில் அவனால் சரிவர முடிவு எடுக்கத் தெரியாமல் இருப்பது அவனுடைய பிரச்சனை இல்லை. சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள் தான் மிக முக்கியமான பிரச்சனை. மனித மூளையில் இருக்கும் Pre Frontal cortex எனும் பகுதி தான்

* கடினமான சூழ்நிலைகளின் போதும் சரியான விஷயங்களை செய்யவும், 
* நீண்ட கால நோக்கில் வாழ்க்கையை திட்டமிடல், முடிவெடுத்தல், 
* மனக்கிளர்ச்சியைக் கட்டுப்படுத்துதல், தாமதமான திருப்தி (Delayed Gratification) 

போன்ற சிறப்பான விஷயங்களை கட்டுப்படுத்துகிறது.

ஒரு மனிதனின் 25 வது வயதில் தான் இது முதிர்ச்சி அடைகிறது. இது நல்ல சமூகப் பொருளாதாரம் இருக்கும் குழந்தைக்கு நடக்கும் விஷயம். 

ஆனால் வறிய ஒடுக்கப்பட்ட சமூகத்தில் வளரும் குழந்தைகளுக்கு இதன் வளர்ச்சி முழுமை அடையாமல் மிகப்பெரிய பிரச்சனையை கொடுக்கிறது. இது புறச் சூழலினால் பாதிக்கப்படுவதால்தான் அந்த சூழலில் வளரும் குழந்தைகளால் சரிவர முடிவு எடுக்க முடிவதில்லை. 

Marshmallow Test என்கிற ஒரு ஆராய்ச்சி இருக்கிறது. ஆனந்த் ஸ்ரீனிவாசன் ஒரு நிகழ்ச்சியில் கூட பேசி இருப்பார். ஆனால் அவரே அதை சரிவர புரிந்து கொள்ளவில்லை. Delayed Gratification தான் ஒரு மனிதனை வெற்றியாளர் ஆக்குகிறது. உடனடியாக கிடைக்கும் இன்பத்தின் பின்னால் போகாமல் நீண்ட கால நோக்கில் கிடைக்கும் இன்பத்தை தேடி போவது தான் மனிதனுக்கு வெற்றியை கொடுக்கும் என பேசியிருப்பார். ஆனால் இந்த டெஸ்டின் நோக்கம் வேறு.

சரி இப்போது, ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து ஒரு குழந்தையையும் நல்ல சமூக பொருளாதார சூழ்நிலை கொண்ட குடும்பத்திலிருந்து ஒரு குழந்தையும் அழைத்து, இருவருக்கு முன்னும் ஆளுக்கு ஒரு லட்டை வைத்து மார்ஷ்மெல்லோ டெஸ்டில் சொல்லப்பட்ட அதே விஷயத்தை சொல்லுவோம். உடனடியாக வேண்டுமானால் இந்த லட்டை சாப்பிட்டுக் கொள்ளலாம், ஆனால் ஒரு நாள் பொறுத்திருந்தால் உங்களுக்கு 2 லட்டு கிடைக்கும் என சொல்வோம். 

* நல்ல சமூகப் பொருளாதார சூழலை கொண்ட குழந்தை நாளை வரை காத்திருந்து 2 லட்டுக்களை பெற்றுக் கொள்ளும். ஏனெனில் அவர்கள் வீட்டில் நாளைய சாப்பாடு என்பது பிரச்சனை இல்லாத விஷயம். 
* ஆனால் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வந்த குழந்தைக்கு "நாளைய உணவு என்பதும், நாளைக்கு உனக்கு எல்லாம் கிடைக்கும் என்பதும்" நிச்சயமற்ற விஷயம். அதனால் அவர்கள் உடனடியாக கிடைக்கும் ஒரு லட்டுவை தேர்ந்தெடுப்பார்கள்.

புரிகிறதா? ஏன் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் Instant pleasure ஐ நோக்கி செல்கிறார்கள் என. சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை எல்லாம் நன்றாக மூடி வைத்துவிட்டு, எல்லாம் இங்கு சமம் என்கிற மாயை மட்டும் ஏற்படுத்தி, நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் நம்மையே பொறுப்பேற்க வைத்து, Deserved-Reserved என கதை கட்டிக் கொண்டு ஒடுக்கப்பட்டவர்களை இன்னும் ஒடுக்கப்பட்டவர்களாகவே வைத்திருக்கும் இந்த அறிவு வளராத கூட்டம் அடிக்கடி இட ஒதுக்கீட்டை கேவலமாகவும், மெரிட் மெரிட் என கத்திக் கொண்டும் அடுத்தவர்களின் உழைப்பைச் சுரண்டி வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.

மேலே சொன்ன இத்தனை பிரச்சனைகளையெல்லாம் தாண்டி  நல்ல வாழ்க்கையை வாழ்வதற்கு தான் இந்த சலுகைகளும் இட ஒதுக்கீடும். 

இந்த ஐயர் வீட்டுப் பெண்

* EWS க்கு இருக்கும் இட ஒதுக்கீட்டை பேசாமல், 
* படத்திலே இருக்கும் பெண்களுக்கான் இட ஒதுக்கீட்டை பேசாமல், 
* ஊன முற்றோருக்கான இட ஒதுக்கீட்டை பேசாமல், 
* OBC இற்கு இருக்கும் இட ஒதுக்கீட்டை பேசாமல் 

நேராக SC ST இட ஒதுக்கிட்டை மட்டும் குற்றம் சொல்லி பேசுவது அறிவற்ற செயல். 

எல்லா இட ஒதுக்கீட்டிற்கும் ஒரு காரணம் இருக்கிறது. எல்லோரும் ஏதோ ஒரு வகையில் ஒடுக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள்.

ஆனால் 60,000 மாதம் சம்பாதிக்கும் ஒருவர் இந்தியாவில் ஏழை என்றால், அவர் Economically weaker Section என இட ஒதுக்கீடு பெறுகிறார் என்றால் இதை விடப் பெரிய அநீதி இந்த உலகத்தில் இருக்கவா போகிறது?

இதற்கு எதுக்கு 18% வரி என அரசாங்கத்தை கேட்கவில்லை.. நேராக SC ST இட ஒதுக்கீட்டிற்கு வந்து விட்டார்.

சரியாகச் சொன்னார்கள்,
*இந்தப் பார்ப்பனர்கள் "அறமற்றவர்கள்" என*

Sunday, July 20, 2025

SSS சிகரெட் காமராஜர்

இதுவரைக்கும் காமராஜர் எளிமையானவர், நல்வர்னு நம்பிட்டு இருந்த இளம் தலைமுறையினர் எல்லாருட்டயும்,

* ஓட்டுக்கு பணம் கொடுக்கும் முறையை இந்தியாவுக்கே அறிமுகப்படுத்தினார். 
* கீழ்வெண்மணி படுகொலையை நிகழ்த்தியவர்களை கட்சியின் பொறுப்புகளில் வைத்திருந்தார். 

* TVS iyyangar கிட்ட இனாமா வாங்குன பங்களாவுலதான் வாழ்ந்தாரு (தி. நகர், திருமலைப்பிள்ளை 60 அடி சாலையில் உள்ள பங்களா) - எதற்காக லஞ்சமாக கொடுக்கப்பட்டது என்பது காம்ராஜ்-க்குதான் வெளிச்சம். 

நேரு, சாஸ்திரி, இந்திராவின் தொடக்க காலங்களில் ஆண்டுதோறும் இந்திய அரசு கப்பல்களை வாடகைக்கு அமர்த்தி அமெரிக்கா grant ஆக கொடுக்கும் கோதுமையை கொண்டுவந்து இந்தியாவில் பசியாற்றிக்கொண்டு இருந்தன. (grant - பச்சையா சொல்லனும்னா பிச்சை). அப்போதெல்லாம் அமெரிக்காவில் சொல்வார்களாம்: பிரெட் சாப்பிடும் போது அதன் ஓரங்களை குப்பையில் போடாதீர்கள், பாவம் இந்தியாவில் பல பசித்த வயிறுகள் அதற்காக காத்திருக்கின்றன. 

(இந்த அசிங்கத்தையெல்லாம் போக்க இந்திரா காந்தி பசுமை புரட்சியை தொடங்க வைத்தார். நாம் என்னவென்றால் எம்.எஸ்.சுவாமிநாதனை வில்லனாகவும், பெரியாழ்வாரை ஹீரோவாகவும் மாற்றிவிட்டோம்).

அப்படிப்பட்ட காலத்திலேயே - 

(a) அமெரிக்க ஜெனரல் மோட்டார்ஸ் தயாரிப்பான Chevrolet கார்
(b) பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ நிறுவன தயாரிப்பான 555 சிகரெட் 
(c) டி.வி.எஸ். பங்களா 
(d) அன்றைய தமிழ் நாட்டு மக்கள் சினிமால கூட பார்த்திராத ஏ.சி.

வாழ்த்திருக்காரு மனுஷன். எளிய வாழ்க்கை! (பிராண்ட் நேம்: "எளிமை")

* லஞ்சமாகப் பெற்ற விலையுயர்ந்த செவ்ரோலேட் காரில் தான் பயணம் செய்தார். 

* அவர் ஆட்சியிலதான் ஏகப்பட்ட தமிழ்நிலங்கள மற்ற மாநிலங்களுக்கு தாரை வார்த்து குடுத்தாரு,
* அவர் ஆட்சியிலதான் அரிசி இல்லாம எலிக்கறி தின்னாங்க,
* ரேசன்ல அரிசி கிடைக்காது ஆனா ப்ளாக்ல அரிசி அநியாய விலைக்கு கிடைச்சுது
* மக்கள் பட்டினியால் செத்துக்கொண்டிருக்தும் போது விலை உயர்ந்த 555 சிகரெட்டை குடித்த செயின் சுமோக்கராக இருந்தார் 
* ஏசி வைத்த வீட்டில்தான் வாழ்ந்தார். 
* பல பார்பனர்கள் புதிய புதிய நிறுவனங்களை தொடங்க சட்டத்தை வளைத்தார். 
* இந்திக்கு எதிராக போராடிய தமிழ்நாட்டு மாணவர்களை கக்கன் சுட்டுக் கொன்ற போது அதை ஞாயப்படுத்தி கொண்டிருந்தார். 
* 1954-ல் முஸ்லீம்களுக்கு இருந்த 7% இட ஒதிக்கீட்டை ரத்து செய்தார்
* தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்தை அடியோடு மறுத்து, அதற்காக உண்ணாவிரதம் இருந்த சங்கரலிங்கனார் சாவதற்கு காரணமானவர். 
* மிராசுதாரர்களையும், பண்ணையார்களையும் கட்சி, ஆட்சிப் பொறுப்பில் வைத்துக்கொண்டு எளிய மக்களிடம் வேசம் போட்டுக் கொண்டிருந்தார். 

---

* உச்சவரம்புச்சட்டம் பட்டபாடு 

வினோபா பாவே-ன்னு ஒரு தீவிர காந்தியவாதி தலைவர் வடக்கே இருந்தார். அவர் தான் பூ-தான இயக்கம் (பூ (bhoo) என்றால் பூமி. நிலம்.) என்ற ஒன்றை தொடங்குகிறார். நிலம் உழுபவனுக்கு சொந்தம் என்று கம்யூனிஸ்டுகள் சொல்வது போல, நிலம் அரசுக்கு மட்டுமே சொந்தம் என்று சோவியத்து ரஷ்யாவில் செய்தது இங்கே எவனும் குரல் கிளப்பும் முன்பாக இவர் தொடங்கிய இயக்கம். 
குறிப்பிட்ட அளவிற்கு மேல் எந்த தனி நபருக்கும் நிலவுடைமை இருக்கக் கூடாது. excess நிலத்தை நிலமில்லாத உழவர்களுக்கு கொடுக்க வேண்டும். இது தான் பூதான இயக்கம்.
இதனை முதல் ஐந்தாண்டு திட்டத்தில் (1951-56) கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டது நேரு அரசு. அதற்காக மாநிலங்களை நில உச்சவரம்புச்சட்டம் இயற்ற தேவையான நடவடிக்கைகளை செய்யச் சொன்னார் ஐயா நேரு. 
1954-55ல் அப்போதைய மதராஸ் மாநில முதல்வர் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் (இன்றைய தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் + புதுக்கோட்டை மாவட்டத்தின் சில பகுதிகள் உள்ளடக்கிய பழைய, பெரிய தஞ்சாவூர் மாவட்டம்) சூறாவளிச்சுற்றுப்பயணம் செய்கிறார். கார்ல தான். அதுவும் imported செவ்ரோலெ கார்ல தான் (அப்போ உள்நாட்டில் வாகன உற்பத்தி கிடையாது!). கிராமம் கிராமமா போய் பண்ணையார்கள், பெரும் நிலக்கிழார்களை சந்தித்து - நில உச்சவரம்புச்சட்டம் வரப்போகுது. உஷார் ஐயா உஷாரு. ஆயிரம் ஏக்கர், ஐயாயிரம் ஏக்கர்னு வெள்ளைக்காரனையும் அவனுக்கு முன்னாடி ஆண்ட ராஜாக்களும் தாஜா பண்ணி வளைச்சு போட்ட நிலங்களை பாதுகாத்துக்கோங்கன்னு heads up கொடுக்குறாரு. அவர் யோசனைப்படியே... பண்ணையார்கள், மிராசுதாரர்கள், பெரும் நிலக்கிழார்கள், தங்கள் பண்ணை அடிமைகள் பெயர்களில் இடத்தை மாற்றி எழுதி - பத்திரங்களை பத்திரமாக வைத்துக்கொண்டு, நில அடிமைகளை மேலும் துன்புறுத்தி - நில உச்சவரம்புச்சட்டம் 1961ல் மதராஸ் மாநிலத்தில் இயற்றப்பட்ட போது அது ஒரு டம்மி சட்டமாக ஆக்கப்பட்ட வரலாறு அறியாதவர்கள் இன்று பிதற்றிக்கொண்டு இருக்கிறார்கள். 
பல decades ஆக பண்ணையார்களின் விசுவாசம் இப்பெருமத்தலைவர் மேல் தான். காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டில் பண்ணையார்களின் கட்சியாக்கிய பெருந்தகை! 
சாதிய ஒடுக்குமுறையும் அதன் காரணமாக இருந்த வர்க ஏற்றத்தாழ்வுகளும் இருந்த இந்தியாவில், உலக அளவில் அந்நாட்களில் (1940ஸ் டு 1960ஸ்) ட்ரெண்டிங் கருத்தியலாக இருந்த கம்யூனிச கருத்தியல் நாட்டிற்குள் ட்ரெண்ட் ஆக விடாமல் தடுக்க அப்போதைய காங்கிரஸ் பெருந்தலைகள் பல soft schemes கொண்டுவந்தன. அதையும் நீர்த்துப்போகச் செய்தவர் தான் நம்ம பெருந்தலை. 
இருந்தாலும் அவரை நாம் போற்றவேண்டிய கடமை ஒன்றுள்ளது. இந்தியாவின் பிற மாநிலங்களில் அரசியல் தளத்தில் பார்ப்பன தலைவர்களை நேரடியாக எதிர்க்கவோ மாற்றாக பிற சாதியினர் வரவோ யோசிக்க முடியாத காலகட்டத்தில் பார்ப்பன முதலவரை ஓடவிட்டு மிகவும் பின்தங்கிய வகுப்பில் இருந்து வந்தவர் முதல்வர் பதவியை grab செய்த guts. அத்தகைய guts அவருக்கு எப்படி வந்தது என்று சொன்னால், அதனை எப்படி தமிழ்நாட்டில் sustain செய்ய முடிந்தது என்று சொன்னால் வயிறெரிய ஒரு கோஷ்டி எப்பவுமே ரெடியா இருக்கும். தங்கள் ஆளை வீழ்த்திய இவருக்கு குடியிருக்க பங்களா தருகிறார் டி.வி.எஸ். முதலாளி என்றால், இனி இங்கே (தமிழ் நாட்டில்) அரசியல் இப்படித்தான் இருக்கப்போகிறது என்பதை அவர் (டி.வி.எஸ். முதலாளி) அன்றே கணித்துவிட்டார் என்று தானே பொருள். எதற்கு சொல்கிறேன் என்றால்.... 50-70 ஆண்டுகள் கழித்து யோசிக்கும்போது with reference to context யோசிக்க வேண்டும்.

---

இவ்வளவு மக்கள் விரோத செயல்களை செய்த மக்கள் விரோதி SSS காமராஜர், தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்.

தெய்வம் நின்றே கொல்லும். 

Wednesday, July 9, 2025

இந்து சமய அறநிலையத்துறையின் கல்லூரிகள்

ர ரக்களுக்கு மூளைத்திறன் குன்றியிருந்தாலும், அவர்களுடையக் குருதியில் தமிழ், திராவிடம், கழகங்களின் ஆட்சியால் விளைந்த சமூகநீதிப் புரட்சி என்கிற தமிழ்நாட்டின் சிறப்புகளைப் போற்றும் பண்பு கலந்திருக்கும்.  அதை ஒருபோதும் வழுவ விட்டுக் கொடுக்காதவர்கள் ! 

அதனால்தான், எம் ஜி ஆர் பொருளாதார அடிப்படையிலான ஒதுக்கீட்டைக் கொண்டு வந்த போதும், ஜெயா கடுஞ்சங்கியாகி கோயிலில் ஆடு, கோழி பலியிடக்கூடாது, மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வந்த போதும், அவர்களுக்கு ஒத்துழைக்க மறுத்தனர்.  உடனடி தோல்விகளைப் பரிசளித்தனர்.

அடிபட்ட அவர்களும் சுதாரித்து சங்கித்தனத்தை தங்களுக்குள் ஆழப்புதைத்து மீண்டும் அது வெளிப்பட்டுவிடாமல் பார்த்துக் கொண்டனர் !

அதனால் அதிமுக வீழும் போது திமுக எழுச்சி பெறும்.  திமுக வீழும் போது அதிமுக உயிர்த்தெழும்.  மாறாக தொடர்ந்து சங்கித்தனத்தை ஆதரித்திருந்தால் அதிமுகவின் பெருந்தலைகள் வீழ்ந்த வேகத்தில், அந்த இடத்திலிருந்து அதிமுகவை அகற்றிவிட்டு சங்கிக் கட்சிகள் ஆக்கிரமித்திருப்பார்கள் !

2019 முதல் அதிமுக ஏனோ சங்கிகளுடன் தொடர்ந்து அதீத நெருக்கம் காட்டி, கூட்டணி வலையில் சிக்கித் தவிக்கிறது.  2024 ல் தனித்து நிற்பது போல பாவ்லா காட்டினாலும் அதனால்தான் மக்கள் அதை நம்பவில்லை.  பழைய குருடி கதவைத் திறடி என்றபடி அடுத்த தேர்தலுக்கு மீண்டும் கட்டிப் பிடித்துக் கொண்டனர்.  அதனால்தான் ர ரக்கள் உஷாராகிவிட்டனர் என்கிறேன்.  எடப்பாடி பழனிச்சாமி எனும் கோடாரியைக் கூர்தீட்டி சங்கிகள் வெட்ட நினைப்பது திமுகவை அல்ல.  அதிமுகவை.

ர ரக்களே, கசாப்புக் கடைக்காரன் உங்களுக்கு கருணை காட்டுவது அவனுடைய அதீத கறித் தேவைக்காக.  அவனை நம்பி பின் செல்கிறீர்களே ?

உள் ஒதுக்கீட்டை வன்னியர்களுக்கு தரப்போகிறேனென கள்ளர்களை பகைத்துக் கொண்டான்.  அய்யிய்ய நம்பிட்டீங்களா அது ச்சும்மா, லுல்லுலாயிக்கு என்று நீர்த்த அந்த சட்டம் பல்லிளிக்க,  வன்னியர்களையும் பகைத்துக் கொண்டான் !

இருக்கும் ஒரே நம்பிக்கை கொங்கு.  அங்கும் அண்ணாமலை இவன் பெயரை ஏகத்துக்கும் கெடுத்து வைத்துள்ளான்.  செந்தில் பாலாஜியை வேறு தேவையில்லாமல் சீண்டி அவர் முழுவேகத்துடன் வேலை பார்ப்பது போல செய்து வைத்துவிட்டான்கள்.  கோமணமும் மிஞ்சாது என்கிற நிலைதான்.

அது போனா போகுது.  

ஆனால் அதிமுக அழிந்து அந்த இடத்தைச் சங்கிகள் ஒருபோதும் ஆக்கிரமித்துவிடக் கூடாது !

பாருங்கள்.  கோயில் செல்வத்தை வைத்து கல்லூரிகளைக் கட்டுவது சதி என்கிறான்.

அந்தந்தக் கோயில் பணத்தைக் கொண்டு கட்டப்படும் கல்வி நிறுவனங்களுக்கு அந்தந்தக் கோயில் பெயரே சூட்டப்படுகின்றன எனத் தெரியுமா உங்களுக்கு ?

சான்றுக்கு நம் பழநி முருகன் கோயில் வருவாயிலிருந்து உருவாக்கப்பட்ட கல்லூரியின் பெயர் அருள்மிகு பழனியாண்டவர் கல்லூரி.   மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வருவாயிலிருந்து உருவாக்கப்பட்ட பள்ளியின்  பெயர் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி,  நெல்லையப்பர் கோயில் வருவாயில்  உருவானது ஸ்ரீ காந்திமதி அம்பாள் மகளிர் மேல்நிலைப்பள்ளி ...

இப்படியாக இதுவரை 
5 கலைக் கல்லூரிகள், 
1 பொறியியல் கல்லூரி, 
15 மேல்நிலைப் பள்ளிகள், 
8 உயர்நிலைப் பள்ளிகள், 
2 நடுநிலைப் பள்ளிகள்,
1 துவக்கப் பள்ளி,
1 CBSE பள்ளி,

இதுபோக இசைப் பயிற்சி பள்ளிகள், தேவாரப் பயிற்சி மையம், ஓதுவார் பயிலுமிடம், மருத்துவமனைகள், முதியோர் காப்பகம் என பொதுமக்கள் அனைவரும் பயன்படும்படி பல நலத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தக் கோயில்களுக்குச் சென்று உண்டியலில் காணிக்கையிட்ட நாம் அனைவரும் இதன் உரிமையாளர்கள்.  இதனால் பயன்பெறும் எவருடைய வாழ்த்தும், ஆசியும் நமக்கேச் சேரும்.  இதுதான் நாம் செய்யும் உண்மையான தர்மம், அசலான புண்ணியம் !

மாறாக நீங்கள் அர்ச்சனை தட்டில் போடுவது, நீறு குங்குமத்திற்காக கையிலளிப்பது, சாமியின் தோளிலிருக்கும் ஓசி மாலைக்காக அடியில் திணிப்பது எதுவுமே தர்மமாகாது.  அது பிச்சையளிப்பது, லஞ்சமளிப்பது வகையில் போய்ச் சேரும்.  

நிம்மி மாமியைப் போல உண்டியலில் போடாதீங்கோ, தட்டில் நொட்டுங்கோ என்று மனச்சாட்சி இல்லாமல் சொல்லமாட்டேன்.   மாறாக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் பெரிய கோயில்களுக்குப் போனால், உண்டியலில் தாராளமாகப் போடுங்கள் !

நீங்கள் போடும் ஒரு ரூபாய் கூட நிச்சயம் ஒரு மாணவனின் ஒரு நாள் கல்விக்குப் பயனளிக்கும், உணவளிக்கும், அறிவளிக்கும்.   

மாறாக, அரசுப்பணியில் ஒன்றாம் தேதி மணியடித்தால் சம்பளம் பெறும் வேலைக்காரர்களின் தட்டுகளில், கைகளில்  சொற்பமாய் போடுங்கள் போதும் !

ஆக, அறநிலையத்துறை கோயில் சொத்துக்களின் மூலம் கோயில் பெயரிலேயே பல நல்ல கட்டமைப்புக்களை உருவாக்கி, உங்களுக்குப் புண்ணியம் தேடிக் கொடுத்தால் சங்கி டாய் எலிகளுக்கு வலிக்கட்டும்.  இந்த பல்லனுக்கு ஏன் வலிக்கிறது ? இந்தப் பாம்பாட்டிக்கு ஏன் நோகிறது ?  சாதி வாக்குகளை மட்டுமே நம்பியுள்ள இந்த கோடநாடு கொலைகாரனுக்கு / கொள்ளைக்காரனுக்கு ஏன் காந்துகிறது ?

மறுமொழிப்பெட்டியில், அறநிலையத்துறை நிர்வகிக்கும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை இணைத்துள்ளேன்.

நம் சாதி, மதம் பாராத கல்விச்சேவைகளை குலைக்க வரும் சங்கிகள் எந்த மாறுவேடங்களில் வந்தாலும் உடனடியாக அவர்களுடைய முகமூடிகள் கிழிக்கப்பட வேண்டும்.  மக்கள் முன் அந்தத் துரோகிகளை அம்பலப்படுத்த வேண்டும்.  

இதன்படி, எடப்பாடி பழனிச்சாமி என்கிற நம்பிக்கைத் துரோகியை அதிமுகவினர் துரத்தி அடிக்க வேண்டும்.  அண்ணா திராவிட என்கிற பெயருக்கேற்பச் செயல்படும் நல்ல தலைவனைக் கண்டடைந்து கட்சிக்கு அவரைத் தலைவராக்க வேண்டும்(சீரியசான பதிவு தோழர்களே, ஹாஹா ஸ்மைலி போடாதீர்கள் ப்ளீஸ்)

https://hrce.tn.gov.in/hrcehome/hrce_institutions.php