Tuesday, October 27, 2015

மகனுக்கு ஒவ்வொரு அம்மாவும் கட்டாயம் சொல்ல வேண்டிய அறிவுரை

புதிதாக திருமணம் செய்து கொண்ட தன் மகனுக்கு ஒவ்வொரு அம்மாவும் கட்டாயம் சொல்ல வேண்டிய அறிவுரை...!
*
*
இது போன்று இதுவரை இருந்த தாய்மார்கள் பின்பற்ற வில்லையென்றாலும்......
*
இனி, வருங்காலத்தில் புதிய தலைமுறைகள், தாய்மார்களாக மாறும் போது, பின்பற்றுவர்கள் என்று நம்புவோம்....
*
*
1. எந்த சமயத்திலும் மனைவியை, அம்மா கூட ஒப்பிடவே கூடாது....!!
*


மகனே... மறந்து கூட தாயை, உன் மனைவியோடு ஒப்பிட்டுப் பார்க்காதே... உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கையில், 20 ஆண்டு கால அனுபவம் இருக்கிறது. ஆனால் உன் மனைவி உன்னை மாதிரி தான். இந்த வாழ்க்கைக்கு புதிது. உன்னை நான் வளர்த்த மாதிரி தான். அவளின் அம்மாவும் அவளை பார்த்துப் பார்த்து வளர்த்து இங்கே அனுப்பி இருப்பார்கள். அவளுக்கு கொஞ்சம் ஆண்டுகள் தேவைப்படும். அதன் பிறகு, உன் குழந்தைக்கு அருமையான அம்மாவாக அவள் இருப்பாள்.
*
*
2. மனைவி உனக்கு அம்மா இல்லை, தோழி..!!
*
மகனே, உன் மனைவி உன்னுடன் வாழ்க்கையை பகிர்ந்துகொள்ள வந்துள்ள தோழி. அம்மா இல்லை. உன் அம்மாவுக்கு உன்னை கவனிப்பது மட்டும் தான் வேலை. ஆனால் உனக்கு, உன் மனைவியை கவனிப்பது முக்கியம். நீங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் கவனித்து அன்பு செலுத்துவது மிக மிக முக்கியம்.
*
*
3. மதிக்கப்படவேண்டியவள் மனைவி...!!
*
மகனே, உன் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள், நல்லது கெட்டது அனைத்திலும் உன் மனைவி உடனிருந்து பங்கு கொள்ளப் போகிறவள். அவளை மதிக்க வேண்டும். உன் ஒவ்வொரு முன்னேற்றப்படியிலும் அவள் பங்கு உள்ளது. அவள் கருத்துகளைக் கேட்டு, முன்னுரிமை கொடுத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
*
*
4. புகுந்த வீடு வந்த மனைவியை இயல்பாக உணர வைக்க உதவி செய்ய வேண்டும்...
*
பிறந்து, வளர்ந்து மகிழ்ந்திருந்த பிறந்த வீட்டை விட்டு,
நம் பொருட்டு புகுந்த வீட்டுக்கு வந்திருக்கிறாள் உன் மனைவி... அவளை இயல்பாக இருக்க வைக்க நீ தான் உதவியாக இருக்க வேண்டும்... சின்னச் சின்ன விஷயங்கள் கூட அவளுக்கு சங்கடத்தைத் தரலாம்.. அதை நீ தான் கவனித்து, அவள் பிறந்த வீட்டில் இருப்பதைப் போல உணர வைக்க வேண்டும்...!
*
*
5. எப்பொழுதும் மனைவியை காதலிக்க வேண்டும்...
*
காதலிக்க வயது ஒரு விஷயமே இல்லை... எப்பவும் உன் மனைவியை சந்தோஷமாக வைத்துக்கொள்... சின்னச்சின்ன பரிசுகள், வெளியில் அழைத்துக் கொண்டு செல்வது, அவள் உடுத்தியிருக்கும் ஆடைகளை சிறப்பாக சொல்லி, சந்தோஷமாக வாய் விட்டு சிரிப்பது மாதிரியான விஷயங்கள் உங்கள் இருவரையும்.. எப்பொழுதும் இளமையாக உணர வைக்கும்...!!
*
*
ஐந்து விஷயங்களையும் ஒன்று சேர சொல்கிறேன்....
உனது அப்பா (நல்ல அப்பா) என்னை எப்படி நடத்தினாரோ....? அது போல நீயும் உன் மனைவியை... கௌரவமாக மதித்து குடும்பம் நடத்து மகனே..!!
*
உனக்கும், மருமகளாக வந்திருக்கும் மகளுக்கும்......
என் அன்பும், வாழ்த்துக்களும்.......!!!!

No comments:

Post a Comment