Sunday, June 17, 2018

7 ஐ விட 49+4  சின்னது ... பாவமானது

Sadhu sadhath
2018-06-17

ராஜீவ் கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்ய முடியாது  _ ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  அறிவிப்பு

7 ஐ விட 49+4  சின்னது ... பாவமானது
....................................................................,

7 ராஜீவ் கொலையாளிகளுக்கு காண்பிக்கப்படும் கருணையில் நூற்றில் ஒரு பங்கேனும் ,  4 வீரப்பன் கூட்டாளிகளாக அடையாளம் ''சொல்லப்பட்டு '' தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு பிறகு அதிலிருந்து விடுவிக்கப்பட்டு கர்னாடக சிறையில் வாடும் அப்பாவிகள் மீதும் ...,
தமிழக சிறைகளில் ''விசாரணைக்'' கைதியாக மட்டும் 20 வருடங்களாக அடைத்துவைக்கப்பட்ட 49 முசுலீம்கள் மீதும் இல்லாவிடில் அப்புறம் என்ன நீதி நியாயம் வெங்காயம் , பீப் எல்லாம்

ராஜீவ் கொலையாளிகள் மீதான குற்றம் நிருபிக்கப்பட்டு தண்டனை A முதல்  Z வரை எல்லா நீதி மன்றத்திலும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது , அதற்க்காக கோடிக் கணக்கில் பணமும்,  இந்தியாவின் புகழ் பெற்ற வக்கீல்களும் ஈடுபடுத்தப்பட்டு வாதாடியுள்ளனர் ....,

பேரரிவாளன்  கள்ளத்தோணியில் இலங்கைக்கு காதல் செய்யவா சென்று வந்தார் ...? சாதாரண எவெரெடி பேட்டரிக்கும் பிரத்தியேக பேட்டரிக்கும் வித்தியசம் தெரியாத பாலிடெக்னிக் மாணவாரா அவர் ..? இந்திய ராணுவத்திற்க்கு எதிரான சாத்தானிய படைகள் எனும் நூல்களை அச்சிட்டு விற்க்க ஏதும் அறியா பாலகனா ..? இல்லை கொலையாளிகளுடன் தங்கி இலக்கியம் படித்தவரா..?

இவ்வளவும் நிரூபிக்கப்பட்டு தூக்குத்தண்டனையும் மன்னிக்கப்பட்டு சலுகையில் உள்ளவருக்கு பரிந்து பேசும் உலகம் ...

சும்மா விசாரணைதான் என்று அழைத்துவரப்பட்ட அந்த அப்பாவிகள் .. கவனிக்க இன்னும் ''விசாரணையே '' முடியவில்லை .. 20 வருடமாக, 

இனி எப்ப விசாரணையை முடிச்சு , கோர்ட்டில் டிரையல் நடத்தி குற்றம் நிரூபிக்கப்பட்டு ..., தண்டனை உறுதி செய்யப்பட்டு , பிறகு எப்ப ஐகோர்ட் .., சுப்ரீம் கோர்ட் அப்பீலுக்கு போய் , பிறகு ரிவியுக்கு போய் .. பிறகு எழவு தூக்குத்தணடனை ஆட்டொகிராப் பிரணாப்பிடம் போய் அவர் அதை கருணை நிராகரிப்பு செய்து தண்டனை அளிப்பது ....?

அப்படியே குற்றம் நிருபிக்கப்பட்டாலும் அவர்கள் மீது அதிக பட்சமாக 7 ஆண்டு தண்டனை அல்லது ஆயுள்தான் தரப்படும் ...

நிற்க்க

நான் இங்கு பேசுவது குற்றம் நிருபிக்கப்பட்ட கோவை குண்டு வெடிப்பு குற்றம் உறுதி செய்யப்பட்டு தண்டனை அனுபவிப்பவர்களைப் பற்றி அல்ல ... விசாரணைக் கைதியாக உள்ளவர்களைப்பற்றி மட்டுமே ... ,,

வீரப்பன் கூட்டாளிகளான 4 வரைப்பற்றி அவர்களின் விடுதலைப்பற்றி எவனும் பேசுவது கிடையாது ஏன்னா அவர்கள் வசதி வாய்ப்பற்ற அன்னக்காவடிகள் . அவர்களை சாக்காக வைத்து வசூலும் செய்ய முடியாது போயேரிகளிடம்

இந்த 49 + 4 பேரைப்பற்றி பேசாமல் ராஜீவ் கொலையாளிகள் பற்றி மட்டுமே பேசுவோம் அவ்ர்கள்தான் தமிழர்கள் என்றால் இனி ஒரு பீப்புக்கும் தமிழனாக அந்த 7 பேருக்கு பரிதாபமோ கவலையோ வராது ... 49+4 ஐ விட 7 பெருசுன்னா இந்த 7ம் ம*ரு க்கு சமானம்

https://m.facebook.com/story.php?story_fbid=880291065497425&id=100005496192495

No comments:

Post a Comment