Saturday, June 9, 2018

1950 ஆம் ஆண்டு Union Public Service Commission

Vijay bashkarvijay
2018-06-10

1950 ஆம் ஆண்டு Union Public Service Commission

நடத்திய முதல் தேர்வில் அச்சுதானந்த தாஸ் என்னும் பட்டியல் இனத்தாரை சேர்ந்தவர் எழுத்துத் தேர்வில் முதல் மார்க் எடுக்கிறார்.

அதாவது 613/1050 மார்க் எழுத்துத் தேர்வில் எடுக்கிறார். அவர்தான் எழுத்துத் தேர்வில் டாப் ரேங்கில் வருகிறார்.

ஆனால் நேர்முக தேர்வில் இண்டர்வியூவில் அவர் மார்க்கை குறைக்கிறார்கள். அங்கு முன்னூறு மார்க்குக்கு 110 மார்க்கே தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முதல் ஐ.ஏ.எஸ் ஆன அச்சுதானந்த தாஸுக்கு வழங்கப்படுகிறது.

அதே சமயம் மதராஸ் மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் எழுத்துத் தேர்வில் அச்சுதானந்த தாஸை விட குறைவாக இருந்தாலும் நேர்முக தேர்வில் அதிக மதிப்பெண்ணை பெற்று  அச்சுதானந்த தாஸ் என்னும் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தவரை விட முந்த வைக்கப்படுகிறார்.

சரியா அச்சுதானந்த தாஸ் எழுத்துத் தேர்வில் நன்றாக எழுதி இருந்தாலும் எப்படி கிருஷ்ணனை நேர்முகத் தேர்வில் அதிக மார்க் எடுக்க வைத்து முன்னேற வைத்தார்கள் என்பதைப் பார்த்தோம்.

அடுத்து இவர்களுக்கு நடுவே அனிருத்த தாஸ் குப்தா என்னும் தேர்வு எழுதியவரைப் பார்ப்போம்.

இவர் எழுத்துத் தேர்வில் -  494 மார்க்தான்
ஆனால் நேர்முகத்தேர்வில் - 265 மார்க்
ஆக இவரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அச்சுதானந்த தாஸை விட மார்க் அதிகம் எடுக்க வைக்க்ப்படுகிறார்.

அச்சுதானந்ததாஸ் பொது அறிவில் இவர்கள் இருவரை விட அதிக மார்க் எடுத்திருக்கிறார். ஆங்கிலத்திலும் குறைவாக எல்லாம் எடுக்கவில்லை.

பொது அறிவில் நல்ல மதிப்பெண்கள் பெற்றவர்கள் நேர்முகத்தேர்வில் நன்றாக செய்வார்கள் என்பதுதான் உண்மை, ஆனால் இங்கே தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த அச்சுதானந்ததாஸ் எப்படி மார்க் குறைவாக எடுக்க வைப்பட்டார்?

சரி அச்சுதானந்ததாஸை விடுங்கள்.

கிருஷ்ணனுக்கும், அனிருத்த தாஸ் குப்தாவுக்கும் உள்ள கணக்குக்கு வாருங்கள். அனிருத்த தாஸ் குப்தா பொது அறிவில் வெறும் நாற்பது மார்க் பெற்றிருக்கிறார். ஆங்கிலத்தில் 75 மார்க் பெற்றிருக்கிறார்.

கிருஷ்ணனோ பொது அறிவில் 69 மார்க் ( இங்கே தாழ்த்ப்பட்ட சமூகத்தை சேர்ந்த அச்சுதானந்த தாஸ் 79 மார்க் என்பதை நினைவில் கொள்ளுங்கள்). பொது அறிவிலும் ஆங்கிலத்திலும் மிகக் குறைவாக எழுத்து தேர்வில் எழுதிய அனிருத் தாஸ் குப்தா எப்படி நேர்முகத்தேர்வில் கிருஷ்ணனை விட மார்க் அதிகம் எடுத்தார்.

மொத்ததில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அச்சுதானந்ததாஸ் ஐ.ஏ.எஸ் தேர்வில் கடைசி ரேங்குக்கு தள்ளப்படுகிறார். எப்படி எப்படி ? எழுத்துத் தேர்வில் முதல் இடம் வாங்கியவரை கடைசி ரேங்குக்கு தள்ளுகிறார்கள்.

கிருஷ்ணன் முதல் ரேங்காம்.
அனிருத்த தாஸ் குப்தா 22 ரேங்காம்.
அச்சுதானந்த தாஸ் 48 ரேங்க் ( இதுதான் லாஸ்ட் ரேங்க்)

பிராமண ஷத்திரிய சூத்திரர் என்ற படிநிலை மனுவின் விதியாம்.

இதுதான் இந்தியாவில் முதல் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் கதை.

அடுத்து  இந்தியாவில் முதல் பழங்குடியின சமூக ஐ.ஏ.எஸ் கதையைக்கு வாருங்கள்.

இவர் பெயர் நாம்பய் ஜம் சோங்கா. இவர் 1954 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்வில், எழுத்து தேர்வில் 747 மார்க் எடுக்கிறார். ரதின் திர நாத் சென்குப்தா என்பவரோ சோங்காவை விட குறைவாக எழுத்து தேர்வில் 694 மார்க் எடுக்கிறார்.

கவனியுங்கள் பழங்குடின சோங்காவை விட சென் குப்தா பொது அறிவு மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் மார்க் குறைவு. அதிலும் ஆங்கிலத்தில் சென் குப்தா 50 மார்க். அதுதான் எழுதியவர்களில் மிகக்குறைவான மார்க்.

ஆனால் நேர்முகத்தேர்வில் சென்குப்தா 240 மார்க் எடுக்கிறார். பழங்குடியின சோங்காவுக்கோ 160 மார்க்தான் கொடுக்கிறார்கள். இதிலும் மெரிட் லிஸ்டில் பழங்குடியின சோங்காவை திட்டமிட்டே கடைசி ரேங்குக்கு தள்ளிவிடுகிறார்கள்.

ஆக இந்தியாவின் முதல் பட்டியலின மற்றும் பழங்குடி ஐ.ஏ.எஸ்களை திட்டமிட்டே  கடைசி ரேங்குக்கு தள்ளி விட்டிருக்கிறார்கள்.

அதற்காக இந்திய பார்ப்பனிய அதிகார வர்க்கம் கையில் எடுத்த யுத்திதான் நேர்முக தேர்வு.

இந்த கட்டுரையை முழுமையாக படிக்க முதல் கமெண்ட் லின்க்கில் சுட்டுக. (Untold Story of Achyutananda Das and Nampui Jam Chonga – First SC and First ST IAS Officer )

I Thank my friend Pardeep Singh for running this wonderful social justice website velivada.com. Thru this website i learned lot in social Justice. Pradeep i just summarise the "untold story of first  sc/st Ias" in Tamil and it really enlight all of us.

https://m.facebook.com/story.php?story_fbid=1732584246833910&id=100002470551465

No comments:

Post a Comment