Tuesday, October 8, 2019

ஜாதி பார்க்கும் தமிழ்தேசியம் ஹராமா?

Rajarajan RJ
2019-10-08

"இலங்கையில் தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் ஏன் தங்களை தமிழர்கள் என்று சொல்லாமல் முஸ்லிம்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்" - என்று யோசித்து இருக்கிறேன். அதற்கு அவர்கள் மதப்பற்று மட்டுமே காரணம் என நினைத்திருக்கிறேன்.

இப்போது யோசித்து பார்த்தால், "முஸ்லிம்கள் தங்களை தமிழர்கள் என்று கூறிக் கொண்டாலும், சாதி சமய வெறிகொண்ட யாழ்ப்பாணத்து தமிழர்கள், இஸ்லாமியர்களை தமிழர்கள் என்று ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" - என்றே நினைக்கிறேன்.

ஈழத்தமிழர்களுக்கு இதில் மாற்றுக்கருத்து இருந்தால் சொல்லவும்.

இப்போது நாம் தமிழர் போன்ற கட்சிகளின் "இஸ்லாமியர்களை கவனத்துடன் அணுக வேண்டும்" - என்ற பார்வையும் இலங்கையில் இருந்து இறக்குமதியானது போலத்தான் இருக்கிறது.

எப்படி இந்துத்துவவாதிகள், இஸ்லாமியர்களை "தாய் மதத்திற்கு திரும்புங்கள்" - என்று கூறுகிறார்களோ, அதேப்போல இந்த தமிழ்தேசியவாதிகளும் "இஸ்லாத்தையும்/ கிருஸ்துவ மதத்தையும் விட்டு விட்டு தமிழர் மதமான சைவத்திற்கு திரும்புங்கள்" - என்று கூறமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்?

கடைசியாக ஒன்று,

உங்கள் மதம், உங்களுக்கு படிப்பை தருகிறதா!
உங்கள் மதம், உங்களை சமமாக நடந்துகிறதா! அப்படி என்றால் உங்கள் மத அடையாளம் தமிழன் என்ற அடையாளத்தைவிட எந்த விதத்திலும் தாழ்ந்தது இல்லை.

உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்பதை கற்பிக்கும் எந்த அடையாளத்தையும் ஏற்காமல் இருப்பதே நல்லது. இஸ்லாமியன் என்றால் சாதியற்றவன் எனப்பொருள்.

"இன்னக்கிதான் அவன் இஸ்லாமியன், நேத்து அவன் அகமுடையத்தேவர்" - என்பது தமிழ் தேசியம் அல்ல. இந்து தேசியத்தின் கள்ளக் குழந்தையான சாதி தேசியம். புரிந்து கொள்ளுங்கள். கவனமாக இருங்கள்!

https://www.facebook.com/1671484748/posts/10213332361418145/

No comments:

Post a Comment