Sunday, October 13, 2019

சர்வாதிகாரிகளின் பொதுப்பண்பு

சர்வாதிகாரிகளைப் பொருத்தவரை அனைவருக்குமே ஒரு பொதுவான modus-operandi உண்டு.

* வெளிப்படையான வன்முறைப் பேச்சு,

* கூச்சமின்றிப் பொய் சொல்லுதல்,

* தான் மட்டுமே யோக்கியன் என்று பேசுதல்,

* அபாயகரமான விசயங்களை எல்லாம் விளையாட்டாக சமூகத்தில் நஞ்சை விதைத்தல்,

* தன் தொண்டர்களிடையே தனிமனித வழிப்பாட்டை ஊக்கப்படுத்துதல்,

* இல்லாத ஒரு அரசியல் எதிரியை வலிந்து உருவாக்குதல்,

* அந்த எதிரியிடமிருந்து என்னால் மட்டுமே உங்களை காப்பாற்றமுடியும் என்று பரப்புரை செய்தல்,

* வன்முறைதான் அனைத்திற்கும் தீர்வு என்று தன் ஆதரவாளர்களை முழுமையாக நம்ப வைத்தல்...

இப்படி எல்லா சர்வாதிகாரிகளின் அரசியல் பயணத்திலும் சில தவிர்க்கமுடியாத ஒற்றுமைகள் இருக்கும். ஹிட்லர், முசோலினி, கிம் இல் சங், இடி அமீன் என்று இதற்கு யாரும் விதிவிலக்கு அல்ல.

-Ganesh Babu

No comments:

Post a Comment