Friday, January 22, 2021

கலைஞருக்கு நிகர் கலைஞரே!

கலைஞருக்கு நிகர் கலைஞரே!
நிலவு மாணிக்கம்

இப்படி 19ஆண்டுதன்ஆட்சிகாலத்தில் இவரைப்போல்மக்கள் நலப்பபணி செய்த ஒருமுதல்வரைக்காட்டுங்கள் பார்க்கலாம் தான் கால்பதிதத்த அத்துணைதுறைகளிலும்  வெற்றித்தடம்பதித்தவர் #கலைஞர் இவரைப்போல் ஒருவர் இனிப்பிறப்பபது அதுவும் தமிழகத்திற்கு கிடைப்பது அரிதிலும் அரிது....
#நியூஸ்7 இணைய தளத்தில் வந்த பதிவு... 

படித்துவிட்டு கலைஞரை காரணமே இல்லாமல் ஏசிப்பேசி பிழைக்கும் ஜீவராசிகள் சிந்திக்கட்டும்..

👉பத்திரிக்கையாளர் கலைஞர்

👉கதாசிரியர் கலைஞர்

👉வசனகர்த்தா கலைஞர்

👉தயாரிப்பாளர் கலைஞர்

👉எழுத்தாளர் கலைஞர்

👉பேச்சாளர் கலைஞர்

👉அரசியல்வாதி கலைஞர்

இப்படி தான் தொட்ட துறை எல்லாவற்றிலும் உச்சத்தைத்தொட்டு யாராலும் விஞ்ச முடியாத அளவுக்கு சாதனைகளைப் படைத்தவர் #கலைஞர் முத்துவேலர் கருணாநிதி அவர்கள்.

👉1924 ஆண்டு திருக்குவளை என்ற குக்கிராமத்தில் பிறந்தவர்.

👉12 வயதில் மாணவ நேசன் கையெழுத்து பத்திரிகையை தொடங்கினார்!

👉14 வயதில் திராவிட அரசியலில் ஈடுபட்டார்!

👉17 வயதில் தமிழ்நாடு மாணவர் மன்றத்தின் தலைவர்!

👉18 வயதில் முரசொலி இதழை தொடங்கினார்!

👉20 வயதில் ஜுபிடர் சினிமா நிறுவனத்தில் வசனகர்த்தராக வேலைக்கு சேர்ந்தார்!

👉27 வயதில் பராசக்தி (கலைஞர் கருணாநிதியின் கதை வசனத்தில் என ஏவிஎம் நிறுவனம் போஸ்டர் அடித்து விளம்பரம் செய்யும் அளவுக்கு பெயரும் புகழும் பொருளும் சேர்த்துவிட்டார்)

👉32 வயதில் சட்டமன்ற உறுப்பினரானார்!

👉44 வயதில் முதலமைச்சரானார்!

இன்றைய தேதிக்கு யார் யார் என்ன வயதில் இருக்கிறீர்களோ அந்த வயதை தொடர்பு படுத்தி இச்சாதனைகளை நோக்கினால் #கலைஞர் எப்பேர்பெற்ற சாதனையாளர் என்பதை நீங்களே உணர்வீர்கள். 

👉முதல் முறை
1969–1971= 2 வருடங்கள்...

👉இரண்டாம் முறை
1971-1976 = 5 வருடங்கள்...

👉மூன்றாம் முறை
1989–1990 =2 வருடங்கள்

👉நான்காம் முறை
1996 -2001 = 5 வருடங்கள்

👉ஐந்தாம் முறை
2006–2011 = 5 வருடங்கள்

என ஏறக்குறைய 19ஆண்டுகள்  தமிழகத்தின் முதல்வராக #கலைஞர் இருந்திருக்கிறார்.

50 ஆண்டுகால திராவிட ஆட்சி என்றாலும் திமுக ஆட்சியிலிருந்த காலம் சுமார் 21 ஆண்டுகள் மட்டுமே.

*இக்காலகட்டத்தில் தான் தமிழகம் இந்திய அளவில் முன்னேற்றம் மிக்க வெற்றிப்பாதையில் பயணித்தது என்றால் மிகையாகது*..

பெரியாரின் ஆகப்பெரிய தொண்டனாக, மாணவனாக விளங்கிய கலைஞர், அவரது அத்தனை சிந்தனைகளுக்கும் கனவுகளுக்கும் சட்ட வடிவம் கொடுத்தார்.

பெரியார் என்ற மாபெரும் புரட்சியாளர் தான் வாழும் நாளிலேயே தனது எண்ணங்களும் கனவுகளும் சிந்தனைகளும் சட்ட வடிவம் பெற்று செயல்பட்டதை கண்ணாறக்கண்டார்.

உலகத்தில் எந்த புரட்சியாளருக்கும் கிட்டாத பெருமையிது.

பெரியார் கருணாநிதி மீது எத்தனை மரியாதை கொண்டிருந்தார் என்பதை பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும். 
எப்போதும் தனது எழுத்துக்களில் பேச்சுக்களில் அவரை கலைஞர் என்றே குறிப்பிடுவார். 
தன் சீடனை தன்னை விட சுமார் 45 வயது இளையாரான கலைஞரை அவர் அவ்வாறுதான் அழைத்தது கலைஞருக்கு கிட்டிய மிகப்பெரும் பெருமைகளில் ஒன்று.

ஊரெங்கும் தந்தை பெரியாருக்கு அவர் வாழும் நாளிலேயே சிலை வைத்து அதை பெரியாரை வைத்தே திறக்க வைத்து சிறப்பு செய்தார் கலைஞர்.

ஆனால் அதையும் மிஞ்சும் விதமாக பெரியார் கலைஞருக்கு சிலை வடித்ததும் அச்சிலை எம்ஜிஆர் மறைவின் போது தகர்க்கப்பட்டதும் வரலாறு.  

பெரியாரின் சுயமரியாதைத் திருமணத்தை சட்டமாக்கி அண்ணா தொடங்கிய பணியை #கலைஞர் முழுவீச்சில் முன்னெடுத்தார்.

👉பெண்களுக்கான சொத்துரிமைச்சட்டம்

👉பெண்களுக்கான இட ஒதுக்கீட்டுச் சட்டம்

👉அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டம்

👉பிற்படுத்தப்பட்டோருக்கான இந்திய அளவிலான இட ஒதுக்கீடு

👉நில உச்ச வரம்புச்சட்டம்

 👉சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு

போன்றவை தவிரவும் நாட்டின் வளர்ச்சிக்கென அவர் தீட்டிய திட்டங்களும் செயல் படுத்திய முறைகளும் இந்தியாவின் மற்ற மாநிலங்களால் அதிக அளவில் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

கலைஞர் தனது ஆட்சியில் வெற்றிகரமாக செயல் படுத்திய சட்டதிட்டங்களில் சில:

☀அர்ச்சகர்கள்,பூசாரிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கியது

☀சுமார் 623 கோடி செலவில் 5824 கோவில்கள் புனரமைத்து கும்பாபிஷேகம் செய்தது.

☀கையில் இழுக்கும் ரிக்க்ஷா ஒழித்து இலவச சைக்கிள் ரிக்க்ஷா தந்தது 

☀பிச்சைகாரர்களுக்கு மறு வாழ்வுமையம் அமைத்தது 

☀இந்தியாவிலேயே முதன் முதலில் காவல் துறை ஆணையம் அமைத்தது.

☀குடியிருப்பு சட்டம் அதாவது வாடகை நிர்ணயம் சட்டம் 

☀குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் அமைத்தது 

☀அக்காலத்தில் P.U.C வரை இலவச கல்வி அளித்தார்.

☀மெட்ராஸ் என்றிருந்த பெயரை சென்னை என மாற்றியது.

☀அரவாணிகளுக்கு திருநங்கை என்ற சொல்லை உருவாக்கி படிவ எண் 9 மாற்றியது.

☀பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை இந்திய அளவில் உறுதி செய்தது.

☀உருது பேசும் முஸ்லீம்களையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது,

☀ முஸ்லீம்களுக்கு 3.5% தனி
இட ஒதுக்கீடும் அருந்ததியினர்களுக்கு 3% இட ஒதுகீடும் வழங்கியது

☀SIDCO &SIPCOT தொழில் நிறுவனங்களை உருவாக்கியது தொழில் வளம் பெருக்கியது.

☀இந்தியாவிலேயே முதன் முறையாக விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தந்தது.

☀ஆசியாவிலே முதன் முறையாக கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைகழகம் அமைத்தது.

☀ஆசியாவிலேயெ பெரிய பேருந்து நிலையம் அமைத்தது

☀மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான பாலங்களைகட்டியெழுப்பியது.

☀ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம், 

☀விதவை பெண்கள் மறுமண நிதி உதவித்திட்டம்... 

☀கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம், 

☀பெண்கள் சுய உதவி குழுக்கள் அமைத்தது. 

☀முதல் முறையாக விதவை
பெண்களுக்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரியில் இடமளிக்க வழிவகை செய்தது,

☀முதல் முறையாக விதவை பெண்கள் தொழில் தொடங்க உதவியது.

☀இந்தியாவிலேயே முதன் முறையாக டாக்டர் அம்பேத்கார் பெயரில் சட்ட கல்லூரியை  தொடக்கியது. 

☀பெரியார் பல்கலைகழகம் ,
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,
பாவேந்தர் பாரதிதாசன்
பல்கலைகழகம். 
டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ கல்லூரியை ஆகியவற்றை நிறுவியது.

 ☀உலக தமிழர்களுக்கு உதவ தமிழ் மெய்நிகர் பல்கலைகழகத்தை உருவாக்கியது.

☀தொழில்முறை கல்வியில் கிராமபுற மாணவர்களுக்கு 15% இட ஒதுக்கீடு தந்தது.

☀ கிராமங்களில் மினி-பஸ் சேவையை கொண்டுவந்ததது. 

☀சமத்துவபுரம் அமைத்தது. உழவர் சந்தை அமைத்தது.

☀சத்துணவில் முட்டை தந்தது,

☀மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தந்தது.

☀சமச்சீர் கல்வி முறையை
கொண்டுவந்தது. 

☀பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்தது.

☀அனைத்து மாவட்ட தலைநகரங்களில் மருத்துவ கல்லூரி,

☀பொறியியல் கல்லூரி துவக்கியது

☀ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு வழங்கியது, 

☀நியாயவிலைக்டையில் 10 சமையல் பொருட்க்களை ரூ.50 க்கு தந்தது.

☀ஜப்பான் நாட்டு வங்கி உதவியோடு மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கியது. 

☀ஆசியாவிலேயே பெரிதாக அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைத்தது.

👉வள்ளுவர் கோட்டம்...

👉 பூம்புகார் செம்மொழி பூங்கா....

👉அய்யன் திருவள்ளுவருக்கு கன்னியாகுமரியில் சிலையென 
தமிழர் பெருமைகளுக்கு கலைநயத்துடன் சின்னங்கள் நிறுவியது.

👉தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத்தந்தது.

👉முதல் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்தியது.

👉இணையத்தில் இன்று நாம் நமது மொழியில் எழுத படிக்க உறுதுணையாக இருக்கும் ஒருங்குறி (Unicode) அமைப்பதற்கு தன்னார்வ தொழில் நுட்ப தமிழர்களுக்கு பலமாக நின்றது.

👉வானத்தில் விமானத்திருந்து பார்க்கையில் சென்னையின் அடையாளமாக வரவேற்க்கும் கத்திபாரா மேம்பால வடிவமைப்பை இறுதி செய்து கட்டி முடித்தது

இப்படி எத்தனையோ..

தமிழகத்தின் இன்று நாம் பார்க்கும் பெரும்பாலான உட்கட்டமைப்புகளுக்கும் தொழில் வளம் மனித வளம் பெருகியதற்கும் அடித்தளம் போடப்பட்டது #கலைஞர் ஆட்சிகாலத்தில் தான் என்று சொல்வது சற்றும் மிகையில்லை.
அதுதான் உண்மை அதுதான் வரலாறு.
குப்பைகளை அள்ளுவது தொடங்கி குமரி எல்லையில் உயர்ந்து நிற்கும் தமிழனின் பெருமை வரை தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருந்தவர் கலைஞர்.

இந்தியாவின் மற்ற மாநிலக்களில் இல்லாத ஒரு சிறப்பு தமிழகத்தில் உண்டு.
தமிழகத்தில் மட்டுமே தலை நகரைத்தவிர மற்ற எல்லா நகரங்களிலும் கூட சீரான வளர்ச்சியை காணமுடியும். தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் என ஒரு சமநிலை இருக்கும். ஒவ்வொரு 25-50 கிமீ துரத்திற்கும் ஒரு நகரம். 50-100 கிமீக்குள் ஒரு பெரு நகரம் என்ற இந்த கட்டமைப்பை இந்தியாவில் எந்த மாநிலத்திலும் பார்க்க முடியாது.

கல்வி மருத்துவம் பொருளாதரமென ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை தீர்மானிக்கும் முக்கிய காரணிகளில் வியக்கத்தக்க சாதனைகளை #கலைஞர் செய்திருக்கிறார். 
அவை கீழ் வருமாறு:

கல்வியில்:

☀பள்ளிக் கல்வியை முடித்து, உயர் கல்வியில் சேர்பவர்கள், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகம். அதாவது, தேசிய சராசரியைவிட இரு மடங்கு அதிகம். 
தமிழ்நாடு -38.2%. 
குஜராத் -17.6%; 
மபி -17.4%;
 உபி -16.8%; 
ராஜஸ்தான் -18.0%; 
தேசிய சராசரி: 20.4%. 

☀இந்தியாவின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியலை மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ளது. 
தமிழ்நாடு-37
குஜராத் -3. 
மபி, உபி, ராஜஸ்தான் போன்றவற்றில் ஒன்றுகூட இல்லை. 

☀இதேபோல, முதல் 100 சிறந்த பல்கலைக்கழகங்களில் 
தமிழ்நாடு-24; 
குஜராத் -2; 
மபி -0; 
உபி -7; 
ராஜஸ்தான் -4. 

☀கல்வி விகிதாசாரம்: 
தமிழ்நாடு -80.33%; 
குஜராத் -79% ; 
மபி -70%; 
உபி -69% ; 
ராஜஸ்தான் -67%; 
தேசிய சராசரி: 74%." 

சுகாதாரத்தில்:

☀சுகாதாரத் துறையின் வளர்ச்சிக்கான முக்கியமான குறியீடுகளில் ஒன்றாகப் பார்க்கப்படுவது சிசு மரண விகிதம் எவ்வளவு குறைவாக இருக்கிறது என்பதாகும். 

☀பிறக்கும் 1,000 சிசுக்களில் மரண எண்ணிக்கை: 
தமிழ்நாடு -21; 
குஜராத் -36; 
மபி -54; 
உபி -50; 
ராஜஸ்தான் -47. 
தேசிய சராசரி: 40. 

☀இதேபோல, ஒரு லட்சம் பிரசவத்தில் தாய் இறக்கும் விகிதம்: 

தமிழ்நாடு -79; 
குஜராத் -112; 
மபி -221 ; 
உபி -285; 
ராஜஸ்தான் -244; 
தேசிய சராசரி: 167. 

☀தடுப்பூசி அளிக்கப்படும் குழந்தைகள் சதவீதம்: 

தமிழ்நாடு -86.7% ; 
குஜராத் -55.2% ; 
மபி -48.9% ; 
உபி -29.9%; 
ராஜஸ்தான் -31.9% ;
 சத்தீஸ்கர் -54%; 
தேசிய சராசரி: 51.2%. 

☀ஆண் -பெண் விகிதாசாரம் (ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு. 
இதில் பெண் குழந்தைகள் எண்ணிக்கை குறைய குறைய பெண் சிசு கொலை அதிகம் என்று பொருள்): 

தமிழ்நாடு -943; 
குஜராத் -890; 
மபி -918; 
உபி -902; 
ராஜஸ்தான் -888; 
இந்திய சராசரி: 919. 

☀மனித வளக் குறியீடு: 

தமிழ்நாடு -0.6663; 
குஜராத் -0.6164; 
மபி -0.5567; 
உபி -0.5415; 
ராஜஸ்தான் -0.5768; 
தேசிய சராசரி : 0.6087. 

☀ஊட்டச்சத்துக் குறைபாடு-குழந்தைகளில்: 

தமிழ்நாடு -18%; 
குஜராத் -33.5% ; 
மபி -40%; 
உபி -45%; 
ராஜஸ்தான் -32%; 
சத்தீஸ்கர் -35%; 
தேசிய சராசரி : 28%. 

☀மருத்துவர்களின் எண்ணிக்கை (ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு): 

தமிழ்நாடு -149; 
குஜராத் -87; 
மபி -41; 
உபி -31; 
ராஜஸ்தான் -48; 
தேசிய சராசரி: 36. 

☀மருத்துவப் படிப்பு என்று எடுத்துக்கொண்டால், நாட்டில் முன்னிலையில் உள்ள மாநிலமாக 24 மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன.

நாடு முழுவதுமுள்ள மருத்துவப் படிப்புக்கான இடங்கள் 52,965. 
தமிழ்நாட்டில் 5,660 இடங்கள் இவற்றில் உள்ளன.

☀பொருளாதாரத்தில்:

இந்தியாவில் உள்ள 29 மாநிலங்களில், 20 மாநிலங்களின் ஒட்டுமொத்த உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்புக்கு (ஜிடிபி) இணையானதை தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மூன்று மாநிலங்களும் அளிக்கின்றன. 
இந்தப் பட்டியலில் மகாராஷ்டிரத்துக்கு அடுத்த நிலையில் இரண்டாவது இடத்தில் இருப்பது தமிழ்நாடு. 

தமிழ்நாடு -ரூ. 18.80 லட்சம் கோடி; 
குஜராத் -ரூ. 10.94 லட்சம் கோடி; 
மபி -ரூ. 7.35 லட்சம் கோடி; 
உபி -ரூ. 12.37 லட்சம் கோடி; 
ராஜஸ்தான் -ரூ. 7.67 லட்சம் கோடி. 

☀தனிநபர் வருமானம் (ஆண்டுக்கு) –

தமிழ்நாடு -ரூ. 1,28,366; 
குஜராத் -ரூ. 1,06,831;
 மபி -ரூ. 59,770 ; 
உபி -ரூ. 40,373; 
ராஜஸ்தான் -ரூ. 65,974 ; 
தேசிய சராசரி: ரூ. 93,293. 

☀ஏழ்மை சதவீதம்: 

தமிழ்நாடு -11.28%; 
குஜராத் -16.63% ; 
மபி -31.65%; 
உபி -29.43%; 
ராஜஸ்தான் -14.71% ; 
சத்தீஸ்கர் -39.93%; 
இந்திய சராசரி : 21.92%

மேற்குறிப்பிட்ட அத்தனை சாதானைகளுக்கும் காமராஜர், அண்ணா தொடங்கி எம்ஜிஆர் ஜெயலலிதா வரை அனைத்து ஆட்சியாளர்களின் பங்கிருந்தாலும் அதிக முனைப்புடன் வேகத்துடனும் பணியாற்றிய பெருமை கலைஞரையே சாரும்.

அவரது ஆட்சியிலேயே அதிக விம்ர்சனங்களுக்கு உள்ளான 2006-2011 கால கட்டத்தில் கூட தமிழகத்திற்கு தேவையான எல்லாவற்றையும் திறம் பட நிர்வகித்தார் என்பதை யாரலும் மறுக்க முடியாது.

இன்று நாம் போராட்டக்களத்தில் சந்திக்கும் பல பிரச்சனைகளை தமிழகத்தின் பக்கமாகக் கூட வராமல் பார்த்துக்கொண்டார்.

 நீட்தேர்வு, ஜல்லிக்கட்டு,காவிரி நீர் என அனைத்தையும் தனது ஆட்சிகாலத்தில் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
கலைஞர் காப்பீட்டுத்திட்டம் மாவட்டந்தோரும் மருத்துவமனை ஆகிய திட்டங்கள் 2007-2011ல் தான் வந்தன. 
தேர்தல் வாக்குறுதியான இலவச வண்ணத்தொலைக்காட்சிப்பெட்டி, 
1 ரூபாய் அரிசி, 
100 நாள் வேலைத்திட்டம் ஆகியவற்றையும் பிசிரின்றி செயல் படுத்தினார்.

பத்துவருடங்களுக்கு முன் வழங்கப்பட்ட அந்த தொலைக்காட்சிப்பெட்டிகள் இன்றும் பலர் வீடுகளில் கடைகளில் செயல் பாட்டில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

கலைஞர் ஆட்சியில் பல விமர்சனங்கள் இருந்தாலும் தற்காலத்தில் அவிழ்த்துவிடப்பட்டிருக்கும் தொடர் பொய் பரப்புரைகள் வரம்பு மீறிவிட்டன என்பதே உண்மை. 
அரசியல் ரீதியாக அது பலருக்கு அனுகூலமாக இருந்தாலும் இந்த மாநிலம் அதனால் அடைந்த பலன் என்ன என்பதை மக்கள் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள். 

தமிழக அரசியல் வரலாற்றில் கலைஞர் மட்டும்தான் செய்யாத தவறுகளுக்கு தண்டிக்கப்படுவதும் செய்த சாதனைகளுக்காக புறக்கணிக்கப்படுவதும் அதிகம் நடக்கிறது. 
அதற்கு சிலரின் சாதிய ரீதியான பார்வையும் முக்கிய காரணம் என சில அரசியல் விமர்ச்சகர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

கலைஞர் பற்றிய இந்த கொடூர பரப்புரைகள் திமுகவின் தேர்தல் வெற்றியை நிச்சயமாக பாதித்திருக்கின்றன. தமிழகத்தையும் தமிழக மக்களையும் நிரம்ப பாதித்திருக்கின்றன. 

சில நேரங்களில் சிந்திப்பதுண்டு..

ஒருவேளை கடந்த 2016 சட்டமன்றத்தேர்தலில் திமுக வென்றிருந்தால், கலைஞர் ஜெயலலிதா இருவருமே ஆரோக்கியமாக இருந்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது.

திராவிட இயக்கத்தின் தலைமகன் தந்தை பெரியாரின் உண்மை மாணவனாக இருந்து அவரது கனவுகளை நனவாக்கி சட்டமாக்கிய கலைஞர் வயதில் பெரியாரை
 வென்றுவிட்டார்...

நிலவு மாணிக்கம்


https://www.facebook.com/100006067415646/posts/2873107046234848/

No comments:

Post a Comment